Print this page
செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:42

பெண்களுக்கு நன்மை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!


#^#^#^#^#

 

8.பெண்களுக்கு நன்மை!


குலப்பெண்ணுக்குத் துணை புருஷன். புருஷன் தர்மாத்மாவாக நற்குலத்திலிருந்து வந்தவனாக, நீதிமானாக, புத்திமானாக, சத்யவானாக, விநயமுள்ளவனாக, திடவிரதமுள்ளவனாக இருக்க வேண்டும். புருஷன் வசிக்கும் இடத்தில் மனைவி வசிக்க வேண்டும். சான்றோர்கள், ஒத்த கருத்துடையவர்கள் வசிக்குமிடத்தில் மூத்தவர்களின் அனுமதியுடன் வசிக்க வேண்டும் அண்டை அயலாருக்கு கஷ்டங்களைத் தரக்கூடாது.

கணவன் வெளியில் சென்றிருக்கும்போது அலங்கார அணிகலன்கள் அணிந்து கொள்ளக்கூடாது. தேவையின்றி வெளியில் செல்லக்கூடாது. சென்றாலும் விரைவில் வீடு திரும்ப வேண்டும். கணவனை மதிக்க வேண்டும்.

பெண்கள் சோம்பியிருத்தல் கூடாது. சாப்பிடக்கூடாததை சாப்பிடுவது, மயக்கம் தரும் பெருட்களை உபயோகிப்பது, பிறர் வீட்டு நிகழ்வில் தலையிடுவது, மந்திர தந்திரங்களில் ஆர்வம் கொள்ளுதல், வேண்டாதவர்களுடன் யாத்திரை செல்லுதல், சாமியார்களுடன் சகவாசம், கணவனை விட்டு நீண்ட நாள் பிரிந்து இருப்பது, கோபம் கொள்வது, பொறுமையின்மை, பயமின்மை, பொறாமை கொள்வது, கருமித்தனம் ஆகியன பெண்களுக்கு நன்மை பயக்காது.

கருச் சிதைவு செய்தல் பிரம்ம ஹத்தி தோஷமாகும்.


#^#^#^#^#

Read 350 times
Login to post comments