ஓம்நமசிவய!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
#*#*#*#*#
17.ஆடிச்சீர் ஏன்!
ஒரு பெண் ஆடி மாதம் கருத்தரித்தால் அப்பெண்னிற்கு குழந்தை சித்திரையில் பிறக்கும். அது சித்திரை அக்னி நட்சத்திர காலம் என்பதால் வெயிலின் தாக்கம், பிறக்கும் குழந்தையை பாதித்து, வெப்ப சம்பந்தமான நோய்கள் அப்பெண்ணையும் பாதிக்கும் என்பதாலேயே பெண்கள் ஆடியில் கரு தரிப்பதை தவிர்க்க ஆடி சீர் என்று நம் முன்னோர்கள் ஏற்படுத்தி பெண்ணை பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைக்க செய்தனர்.
எனவே சித்திரையில் சீமந்தம் செய்தல், பெண் பார்த்து பேசி வைத்தல், நிச்சயதார்த்தம், உபநயனம் செய்தல், திருமண ஏற்பாடுகளைச் செய்தல், பேச்சு வார்த்தை நடத்துதல் பொன்றவற்றைச் செய்யலாம்.
#*#*#*#*#