ஓம்நமசிவய!
ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!
#*#*#*#*#
18.முன்னோர்களின் பெயரும், மூன்று உருண்டை சாதம் வைப்பதும் ஏன்!
கரு தோன்ற மூலகாரணம் ஆணிடமுள்ள தாது-சுக்கிலம் எனும் இந்த தாதுவில் 84 அம்சங்கள் உள. எனவே ஒரு மனிதனின் கர்மத்தினை 84 பகுதிகளாய் பகுந்திருக்கின்றனர் முன்னோர்கள். ஒரு கரு உருவாக அதில் 1/3=28 தந்தையின் அம்சங்கள் மற்றும் ஆண் அருந்தும் நீர், உணவு ஆகியவற்றால் தோன்றுகிறது. மீதி 56 கூறுகளில், பாட்டனாரின் 21 கூறுகளும், முப்பாட்டனாரின் 15 கூறுகளும், 4ம் வழி தந்தையின் 10 கூறுகளும், 5ம் வழி தந்தையின் 6 கூறுகளும், 6ம் வழி தந்தையின் 3 கூறுகளும், 7ம் வழி தந்தையின் 1 கூறும் இருப்பதாக கொள்கின்றனர். ஒருவரது கர்மம் தனது ஏழாவது வாரிசுக்கு செல்லும்போது தான் முற்றிலும் தீர்க்கப்படுகின்றது.
இந்த கூறுகளே ஓர் ஆன்மாவின் உடலுக்கும், அமைகின்றது. அவர்களின் செயல்கள், எண்ணங்கள், குணங்கள், நடவடிக்கைகளின் சாயல்கள் சில, பல அதற்குள்ளே இருக்கின்றது. எனவேதான் நாம் இவர், இன்னார் சாயல், இன்னார் குணம், இன்னார் செயல் கொண்டிருக்கின்றது எனக் குறிப்பிட்டு சொல்கின்றோம். நம் முன்னோர்களின் நடை, பாவணைகள், செயல்கள், நம் உடம்பில் உள்ளத்தில் தோன்றி நம்மை அவ்வாறே இயங்க வைக்கும்போது, அவர்கள் செய்த கர்மவினைகள் நம்மை ஏன் தொடராது என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். நம்மை மீறிய செயல்கள் நடக்கும் போது, கர்மவினை! என் விதி! என நம்மில் பலர் புலம்புவதை காண்கின்றோம். முன்னோர்களிடமிருந்து அவர்களின் மகன், மகனின் மகன் என வழி வழியாய் பழக்கங்கள் நம் தாய் தந்தைவழி நம்மிடம் வருகின்றது.
எனவேதான் எல்லா முக்கிய மான காரியங்களுக்கும் நாம் நம் உடம்பில் அதிக பங்களித்த முன்னோர்கள் மூவரை நினைத்தும் சாட்சியாகவும் கொண்டு செயல் படுகின்றோம். அதிக அளவில் தந்தை-28+பாட்டனார்-21+முப்பாட்டனார்-15=64 அம்சங்கள் தருவதால் அவர்கள் நினைவாக பிண்டம் கொடுக்கிறோம். அதாவது முப்பாட்டனார்(15), பாட்டனார்(21), தந்தை(28) மூவரின் பெயரையும் பயன்படுத்துகின்றோம்.
#*#*#*#*#