ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#*#*#*#*#
43.செவ்வாய்க்கு செவ்வாய் தோஷம்- ஏன்!
ஓர் ஆணின் இரத்தம் Rh+ ஆக இருந்து அவர் மனைவியின் இரத்தம் Rh- ஆக இருந்தால் அவர்களின் குழந்தைக்கு அப்பா இரத்தத்துடன் ஒன்றி Rh+ ஆக இருக்கும் அல்லது அம்மாவுடன் ஒன்றி Rh- ஆக இருக்கும். குழந்தை அம்மா வயிற்றில் வளர்வதால் அம்மாவின் இரத்தத்தைப்போல் Rh- ஆக இருந்தால் தவறு ஒன்றுமில்லை. ஆனால் Rh+ ஆக அப்பாவினுடையது போலிருந்தால் அது அம்மாவின் Rh- இரத்தத்துடன் கலக்கும்போது இரத்தத்தில் எதிர்ப்பு அணுக்கள் உற்பத்தியாகி குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அப்பாவின் இரத்தமும் அம்மாவின் இரத்தமும் ஒன்றாக இருந்துவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை.
சரி இதை ஏன் இந்தப் பகுதியில் சொல்லியிருக்கின்றேன் என்றால் நமது முன்னோர்கள் செவ்வாய் தோஷக்காரர்களுக்கு செவ்வாய் தோஷமுடைய பெண்தான் வேண்டுமென்று கண்டிப்புடன் சொல்லிவைத்தனர். பொதுவாக செவ்வாய் தோஷமுள்ளவர்கள் ஆணாக இருந்தாலும்/ பெண்ணாக இருந்தாலும் அவர்ளில் 90% பேர் Rh- இரத்தம் உடையவர்களே என தற்போது ஆராச்சியில் கண்டு பிடித்துள்ளார்கள்.. எனவே மேலே சொன்னது போல் ஆணின் இரத்தமும் பெண்ணின் இரத்தமும் Rh- ஆக இருந்து இணைவது அவர்களின் குழந்தைக்கும் குடும்ப வாழ்விற்கும் உகந்தது என அறிந்து அதை நடைமுறைப் படுத்திவைத்துள்ளது விஞ்ஞான வியப்பாகும்.
#*#*#*#*#