Print this page
புதன்கிழமை, 15 March 2023 16:30

ஓம்சாந்தி 3முறை ஏன்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

 

#*#*#*#*#

 

56.ஓம்சாந்தி 3முறை ஏன்!

 

மனித வாழ்வில் சந்திக்கும் இடர் துன்பங்களுக்கு மூலகாரணங்கள்

1.ஆதிதெய்வீக- நம் கட்டுப்பாட்டில் இல்லாத தெய்வீக சக்திகளால் ஏற்படும் புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகள்,

2.ஆதி பௌதிக-மனிதருக்குள் ஏற்படும் துன்பம், போராட்டம், கலவரங்கள், ஆசை காரணமாக ஏற்படும் ஆபத்துகள்,

3.ஆத்யாத்மிக- மனித உடல், மனம் சார்ந்த நோய்கள், பிரச்சனைகள். ஆகிய இம்மூன்றினாலும் தடைகள் இடற்பாடுகள் ஏற்படக்கூடாது என்பதால் மூன்றுமுறை ஓம் சாந்தி சொல்லப்படுகின்றது.


#*#*#*#*#

Read 1034 times
Login to post comments