ஓம்நமசிவய!
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!
#*#*#*#*#
57.ஏழுகோடி மந்திரங்கள்!
7கோடி மந்திரங்கள் எனப் பொருள் கொள்ளாமல் ஏழு வகையான முடிவுகளைக் கொண்ட மந்திரங்கள்- எனப் பொருள் கொள்ள வேண்டும். கோடி-கடைசியில் உள்ளவை என அர்த்தம். அவை 1.நமஹா-ஐஸ்வர்யம் அளிப்பது, 2.சுவாஹா-தைரியம் கொடுப்பது, 3.சுவாதா-வசீகரம் தருவது, 4.பட்-விக்னங்களைத் துரத்துவது, 5.உம்பட்-காமாதிகளை போக்குவது, 6.வௌஷட்-தேவதைகளை இழுப்பது, 7.வஷட்-தேவதைகளை வசம் செய்வது என்பனவாகும். இந்தச் சொற்களும் சொற்களைக் கொண்டு முடியும் வரிகள் எல்லாம் மந்திரங்கள் ஆகும். மந்- நினைப்பவரை என்றும், திர-காப்பது என்றும் பொருள். எனவே மந்திரம் என்பது அதை நினைப்பவரைக் காப்பது எனப் பொருள் கொள்ளவேண்டும்.
முப்பத்து முக்கோடி தேவர்கள்!
ஆதித்தியர்-12 பேர், உருத்திரர்-11 பேர், வசுக்கள்-8 பேர், அஸ்வினி தேவர்கள்-2 பேர் ஆக மொத்தம் 33 பேர்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி பரிவார தேவதைகள் உண்டு. எனவே தேவர்கள் 33 பேரை சொல்லும்போது அவர்களின் பரிவார தேவதைகளையும் சேர்த்து சொல்வதனால் 33முக்கோடி தேவர்கள் என்றானது. ஒரு கோவிலில் மூலக் கடவுளை வழிபடும்போது அங்குள்ள பரிவாரதேவதைகளை வழிபடுதல் போன்றேதே இது.
மந்திரம் கால், மதி முக்கால்!
சூரியகலை நடக்கும்போது சுவாசம் பிடரி வழிச் செல்லும். சந்திரகலை நடக்கும்போது 3/2 பாகமாகிய மச்சை(எலும்பினுள் இருக்கும் சாரம்) வழி செல்லும். இதைத்தான் மந்திரம் கால் மதி முக்கால் என்பர் பெரியோர். மந்திரம் என்பது சூரியன்- கால், மதி-சந்திரன்- முக்கால் என்பதாகும். வாசி யோகத்தை கற்றவர் ஓர் அங்குலமுள்ள நேத்திர ஸ்தானமிருந்து பகிர்முக நோக்கில் எண் சாண்(அரைமுழம்) உடலின்கண் உள்ளதை நடப்பதைப் பார்க்கலாம்.
நூறில் ஒன்று!
நூறில் ஒன்று கூடவா தேறாது என சொல்லப்படுவதைக் கேட்டிருப்பீர்கள். அப்படி பார்த்தால் கௌரவர்களின் 100 பேரில் ஒருவன் கூடவா நல்லவர் இல்லை எனக் கேட்கலாம். ஆம் நல்லவர் இருந்தனர். சூதில் தருமன் தோற்றபின் மனைவி திரௌபதியை பணயம் வைக்குமாறு சகுனி கூற தர்மன் சம்மதித்து தோற்றான். இது அனைவரும் அறிந்ததே! ஆனால் அப்போது சூதில் இதை பயணம் வை என்று எதிராளிக்குச் சொல்லக்கூடாது என்பதே தர்மம். அப்படியிருக்க சகுனி சொல்லி துரியோதனன் கேட்க தர்மன் திரௌபதியை பயணம் வைத்தது சரியாகாது. திரௌபதி பயணப் பொருளாக மாட்டாள் இது தர்மம் அல்ல என எதிர்த்தவன் விகர்ணன் என்ற துரியோதணைன் தம்பி. இந்த செயலைக் கண்டு வெட்கி தலை குனிந்து நின்றவன் இன்னொரு தம்பி யுயுத்ஸு. அன்று அரசவையிலிருந்து இவர்களை வெளியேற்றினான் துரியோதனன். யுயுத்ஸூவே சக்ரவியூகத்தில் நிராயுதபாணியான அபிமன்யு கொல்லப்பட்ட விதம் அதர்மம் எனக்கூறி போர்க்களத்திலிருந்து அப்போது வெளியேறியவன்.
#*#*#*#*#