Print this page
புதன்கிழமை, 15 March 2023 16:35

ஒன்பதின் பகுப்பு- சிறப்பானது!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!


திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!


#*#*#*#*#

 

58.ஒன்பதின் பகுப்பு- சிறப்பானது!

 

ஒன்பது என்பதன் பகுப்பு பல பொருள்களுக்கு அமைந்துள்ளது. உடலை ஒன்பது வாசல் கொண்ட ஆலயம் என்பர். 1லிருந்து 9வரை அனைத்து எண்களையும் கூட்டினால் வருவது 45 அதையும் கூட்டினால் வருவது 9. இந்த 9 ஐ 1+8 என எடுத்துக் கொள்ளல் வேண்டும். அதாவது முதலில் இருக்கும் ஒன்று நம்மிடம் உள்ள நிறை. அடுத்து வரும் 8 என்பது நம்முள் இருக்கும் குறைகள். படிப்படியாக நம்மில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்துவர குறை குறைந்து கொண்டுவர வர நிறை அதிகரித்துக் கொண்டு வந்து இறுதியில் முழு நிறையான 9 ஆகிவிடும்.

உலகத்தின் கண்டங்கள், சிறப்பான மேகங்கள், நவநிதிகள், தாரணை யோகம், தர்மங்கள், நவஉலோகங்கள், நவமணிகள், நவரத்தின புலவர்கள் என வாழ்க்கையில் வெற்றிபெற 9 எண்ணின் தொடர்பை முன்னோர்கள் அடிப்படையாக வைத்துள்ளனர்.

நீங்களும் வாழ்வில் சிறப்படைய 9 எண்ணின் உயர் நிலையை அடைய சுய நிலை இழக்காமல் படிப்படியாக குற்றங்களைக் குறைத்துக் கொண்டு நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒன்பது வாசல்களை அடக்கி ஒடுக்கி செயலாற்றும் திறன் கொண்டால் ஒருவன் பிரம்ம நிலையில் இருப்பவன் ஆகின்றான்.

#*#*#*#*#

Read 1035 times
Login to post comments