gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

3-5.உதவி!

Written by

உதவி!  


ஹிரோயிசம் என்பது ஓர் கவர்ச்சி. ஓர் எதிர்பார்ப்பு. துன்பப்படும் ஜீவன்களுக்கு ஆறுதல் அளித்து நல்வழிகாட்டுதல் ஒர் நல்ல பண்பு. கதைகளாயிருந்தாலும், நடைமுறை வாழ்க்கையிலும் சரி, எந்த ஆத்மா இதை செய்தாலும் பாராட்டப்படுவர். போற்றப்படுவர். வீர, தீர சாகசங்களாக புகழப்படும்.

சரித்திர சான்றுகளாக்கப்பட்ட நிகழ்வுகள் பல எடுத்துக் காட்டாக சொல்லப்படுவதுமுண்டு. அவைகளை முன்னுதாரனமாக ஏற்று வெற்றி பெற்றவரும் உண்டு. துவண்டு போனவர்களும் உண்டு.
நாம் ஓர் செயல் செய்கின்றோம். அது நாம் எதிர்பார்த்த விளைவு கொடுக்காமல் மாறான பயன் ஏற்படுத்தினால் அதன் தாக்கம் நம் மனதைப் பாதிக்கின்றது. அப்போது நாம் இவ்வாறு செய்து இது போன்று தவறு நடந்து விட்டதே என வருத்தப் படுவதோடு அல்லாமல் வேறுவிதமாக செய்திருந்தால் இந்த பாதிப்பு நமக்கு ஏற்பட்டிருக்காது என மனம் நினைக்கும்.  
அல்லது நமக்கு இந்த செயலில் ஹீரோ போன்று யாராவது உதவி செய்திருந்தால் ஆதரவு, பாதுகாப்பு அளித்திருந்தால் இவ்வாறு நேர்ந்திருக்காது என அங்கலாய்ப்பு கொள்ளும்.
அந்த உதவி நண்பர்கள், உறவினர் மூலமாகவோ  கிடைத்தால் மிகமகிழ்வு. எதிர்பாராமல் முன்பின் தெரியாத ஒருவரிடமிருந்து கிடைத்தால், புளங்காதிதம் அடைந்து,  தெய்வம்போல் வந்து உதவி என அகமகிழ்கின்றான். முகம் தெரியாத ஆன்மாக்களுக்குச் செய்யும் உதவியானது இறைவனுக்கு செய்யும் அரும்பணி போன்றது.
பிறரின் உதவி என்றால் அதற்கு நம் உற்றார், உறவினர், சொந்தபந்தங்கள், நண்பர்கள் அனைவரிடமும் நாம் பழகும் தன்மையைப் பொருத்தே, அதுவும் நல்ல சகஜமான நேர்மையான தூய உறவுகளாக இருந்தால் மட்டுமே, நமக்கு வேண்டும்போது கிடைக்கும். நாம் உதவி கேட்கு முன்பேகூட கிடைக்கும். அதற்காக மற்ற ஆன்மாக்களோடு உறவாடு!  அவர்களுக்கு பயன் உள்ளவனாக உன்னை மாற்றிக்கொள்! இதுவே உன்னால் உனக்கு முடிந்த உதவி.
நம் கர்மவினைகள் பொறுத்து உதவிகளின் தன்மைகள் குறையலாம், அதிகமும் ஆகலாம். ஆனாலும் கர்மவினைகளின் பாதிப்பு இருந்தாலும், கிடைக்கும் சின்ன சின்ன உதவிகள்கூட மிகப்பெரிய பலத்தைக் கொடுத்து நமக்கு நல்செயல்வழி கிடைக்கும்.  
ஆகவே பின்னால் நினைத்து பயனில்லை. எல்லோரையும் சினேக பாவத்துடன் பாருங்கள், பேசுங்கள். உங்களால் முடிந்த ஆலோசனைகளை வழங்குங்கள். உதவிகளைச் செய்யுங்கள்.
நீங்கள் பலன் கருதாமல் செய்த உதவி, ஆலோசனைகள் நீங்கள் எதிர்பாரா சமயத்தில் எவர் மூலமாகவாவது உங்களுக்கு தேவைப்படும்போது தானாக உதவிக்கரமாக வந்துசேரும். மனிதநேய மனத்துடன் கடுஞ் சொற்களில்லாமல் கனிவுடன் பேசி, செயல் பட்டால், உங்கள் மதிப்பு உயர்ந்து, எல்லோருக்கும் நீங்கள் சிறந்த வழிகாட்டியாய் உதவுவீர்கள்.
உங்கள்மேல் உங்களுக்கும் தன்னம்பிக்கையும், மற்றவர்களுக்கு ஓர் நம்பிக்கையும் மலரும். மலரும் மலர்ச்சிகள் எல்லாம் சந்தோஷம் தருபவையாக அமையும். வாழ்வில் சதோஷம்தான் சந்தோஷிக்கத்தான்.
ஒரு பையன் படிக்கும் பள்ளியில் உலகை மாற்ற விரும்பும் திட்டம் ஒன்றினை தயாரித்து விளக்க அவர்தம் ஆசிரியர் கூறுகிறார். எல்லோரும் அவரவர் கற்பனைக்கேற்ப கூறுகின்றனர். ஒருவன், நாம் முகம் தெரியாத மூன்று பேருக்கு நம்மால் முடிந்த அளவு உதவ வேண்டும். அந்த மூவர் தனக்குத் தெரிந்த மூன்று பேருக்கு உதவும்படியாகச் சொல்லவேண்டும்.
அப்படி அவர்கள் இதையே தொடர்ந்து செய்ய ஆரம்பித்தால், இரண்டு வாரங்களில் 47லட்சத்து, 82ஆயிரத்து, 969 பேருக்கு உதவிகள் கிடைத்திருக்கும். இது ஒரு சங்கிலித் தொடர். என்பதாகும். இந்த திட்டத்தை மாணவர்கள் கேலி செய்ய, ஆசிரியர் பாராட்டுகின்றார்.
அந்த மாணவன் இதை செயல்படுத்த முயற்சிக்கின்றான். உதவும் கரங்களின் சங்கிலி உருவாகின்றது. அம்மாவிற்கு இந்த செயல்கள் பிடிக்காததால் வீட்டைவிட்டு வெளியேறி பல துன்பங்களுக்கு ஆளாகின்றான்.
ஆனால் இந்த சங்கிலி அமைப்பினால் பலனடைந்த பத்திரிக்கையாளன் ஒருவன் எளிமையான இந்த திட்டத்தை புகழ்ந்து எழுதத் தொடங்க, திட்டம் வெற்றிபெற ஆரம்பிக்கின்றது. ஓர் ஆள் தன்னால் முடிந்த உதவியை மூன்று பேருக்குச் செய்தால் போதும். உலகம் மாறிவிடும் என்பதே என்பதே இதன் கருத்து. இந்தமுறையில் உதவிகள் அனைவருக்கும் கிடைத்தால் அதன் செயலாக்கம் சிறப்பல்லவா!
நீங்களும் முடிந்தால் ஒரு 3பேருக்காவது ஏதாவது உபயோகரமான உதவியைச் செய்திடுங்கள். உங்களின் உதவிபெற்றவர்களையும், நண்பர்களையும், உங்கள் சொந்தங்களையும், அவர்களால் முடிந்தளவிற்கு உதவிதனைச் செய்யச் செயலாக்கம் கொள்வீர்.
உள்ளூர் பேருந்தில் பயனித்துக் கொண்டிருந்தேன். நடத்துனர் அனைவருக்கும் சீட்டு வழங்கிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த சிறுவன் ஒருவன் தன் சட்டையின் மேல் பகுதியிலும், கீழ் ஆடையிலும் தேடினான். ஏதும் கிடைக்காத நிலையில் பதட்டமடைந்தான்.
அழுது விடும் நிலைக்கு வந்து விட்டான். அவனை தினமும் அதே ஊர்தியில் பார்த்து பழகிய நடத்துனர் அவனிடம் அவன் போகவேண்டிய இடத்திற்கானச் சீட்டைப் பத்திரமாக வைக்கச் சொல்லிக் கொடுத்தார்.
தினமும் மீதி பணம் பெற்று அதை தனக்கு வேண்டிய திண்பண்டம் வாங்கி பழக்கப்பட்ட அவனுக்கு, சட்டென்று அதே நினைவில் மீதியைக் கேட்டான் நடத்துனரிடம்.  
சீட்டு வாங்கப் பணமில்லாததால், இறக்கிவிடுவதற்குப் பதிலாக, தினமும் வருபவன் எனக் கருணைக் கொண்டதற்கு, பலன் இதுவா என்ற குழப்பத்தில் இருந்தான். இனி இது போன்ற உதவி செய்ய மனம் வருமா நடத்துனருக்கு! உதவி செய்தவர் மனம் வருந்தும்படி நம் சொல்லும் செயலும் இருக்கக்கூடாது-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26935991
All
26935991
Your IP: 54.210.83.20
2024-03-29 06:39

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg