ஓம்நமசிவய!
பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!
#####
நல்குரவு-வறுமை!
209. உடுத்திக் கொண்டிருக்கும் ஆடை கிழிந்து பயன்படுத்த முடியாமல் போவதுபோல் வறியவர் வாழ்வும் பயன் இல்லாதது. அவர்களைச் சேர்ந்த உறவுகளும் அன்பு இல்லாது அகல்வர். கொடுத்தல் இல்லாமல். வரவு இல்லாமல் மிகிழ்ச்சி இல்லாமல் நாட்டில் திரிந்து கொண்டிருந்தாலும் நிமிர்ந்த நடையில்லாமல் இயங்குபவராயினர்.
210. பொழுது புலர்ந்தால் வயிற்றுக்கு உணவிட வேண்டும் என அதற்கான உணவான அரிசி முதலியவற்றைத் தேடும் உயிர்களே! எந்தக் குழியை நிரப்பினாலும் இறைவன் அருள் பொருந்திய புகழைத் தேடிப் பிறவிக்கு காராணமான வினை நீங்கப் பெறின் வயிறும் நிரம்பிவிடும்.
211. வயிற்றை நிரப்ப பொன்னைத் தேடும் உயிர்களின் வயிற்றைக் குறையாமல் நிரப்புதல் அனைவருக்கும் அரிதானது. அக்குழியை நிரப்பும் திருவடி ஞானம் பெற்றால் பிறவிக்கு காரணமான வினை நீங்கி வயிற்றுப் பிணியும் நீங்கும்.
212. ஒவ்வொரு பிறவியிலும் தொடரும் உறவுகள் வினைகளை விடக் கொடியவை. உயிரானது வாழ்நாளை முடித்து உடலை விட்டு நீங்குவதற்கு முன்பே உலகப் பொருளை விட்டு மாறி உண்மைப் பொருளை நாடிப் பிறவிக் குழியைத் தூர்த்து பசிப்பிணியையும் போக்கலாம்.
213. வினைகளுக்கு காரணமான ஆறு அத்வாவின் வழி வினைகளை ஈட்டி, உடம்பு முதலிய ஐம்பொறிகளும் புலன்களும் மேல் நின்று உயிருக்கு எண்ணற்ற துன்பங்களைத் தந்ததினால் கொடிய வினைகள் வாழ்வை வேதனைப் படுத்தின. அதனால் வாழ்க்கையை வெறுத்தவன் வறுமை நீங்க ஈசனை வேண்டி நின்றான்.
திருச்சிற்றம்பலம்
#####