ஓம்நமசிவய!
வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு
#####
வான் சிறப்பு!
248. அமுதத்தைபோன்ற வளமை தரும் மழை பெருகினால் இனிமையான அமுதூறும் பல மரங்கள் உலகத்தில் உருவாகும். பாக்கு, தென்னை, கரும்பு, வாழை மற்றும் சமாதி நிலைக்கான காஞ்சிரை முதலியவை தோன்றும்
249. சிரசுபோன்ற இமயமலையிலிருந்து பெருகிவரும் ஒளிமயமான வான் கங்கையைப் பற்றி உரைக்கச் சொல் இல்லை. உள்ளத்தில் உள்ள மனத்திலிருந்து உறும் நீரைப்போல் அதற்கு பிருத்வி கலப்பின்மையால் நுரை இல்லை. அழுக்கு இல்லை, தெளிவான தூய நீர், எல்லாப் பாவங்களையும் போக்கும் ஆறு என்பதால் அதற்கு கரையும் இல்லை.
திருச்சிற்றம்பலம்
#####
தானச் சிறப்பு!
250. அவர் உயர்ந்தோர் இவர் தழ்ந்தோர் என்று எண்ணாமல் எவரோயாயினும் அவர்க்குக் கொடுங்கள். வரும் விருந்தை எதிர்பார்த்து அவருடன் கூடி உண்ணுங்கள். பழம் பொருளை போற்றி காவல் காவாதீர். இம்மை மறுமையில் வேட்கை உடையவரே விரைவாக உண்ண வேண்டாம். காக்கைகள் மற்ற காக்கைகளை கரைந்து அழைத்து உண்பதை அறிந்து கொள்ளுங்கள்!
திருச்சிற்றம்பலம்
#####