Print this page
செவ்வாய்க்கிழமை, 17 December 2019 19:01

மயேசுர நிந்தை! பொறையுடைமை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#####

மயேசுர நிந்தை!

537 சிவனடியார்கள் உலக இயல்பிற்கு மாறுபட்டவர்கள் பசி வந்தபோது இரந்து உண்டு வழ்வர். அந்த அடியார்களை வெறுக்கத்தக்க பேசியவர்கள் மிகவும் தாழ்ந்த நரகத்தை அடைய வழி செய்து கொண்டவர் ஆவார்.

538. ஞானியரை நிந்திப்பவனும் நல்லவர் எனப் போற்றுபவனும் முறையே தீவினையையும்   நல்வினையையும்  நீங்கிடுவர்.. அச்சிவ ஞானியரை அடைந்தார்க்கு சிவபோகம் கைகூடும்.

\#####

பொறையுடைமை!

539. மெய்யான நெறியைப் பற்றி வழுவாமல் நிற்கும் யோகியர் நெஞ்சில் மெய்ப் பொருளுடன் கூட வேண்டும் என்ற அவா ஆன எண்ணமாகிய பல்லி இருக்கின்றது. அது மூக்கு, நாக்கு ஆகியவற்றின் செயலை நீக்கும். அப்பொது சிதைகின்ற சிந்தையில் மன மண்டலத்தில் உலராது அமுதத்தைப் பொழியும். அது பொறுமையாகும்.

540. பால் நிறத்தை ஒத்த சிவனின் திருவடியை வணங்கி அவனிருகும் மண்டபத்தை சூழ்ந்த அழிவற்ற தேவர்களிடம் பொறுமயையுடைய இந்த ஞானி திருமாலுக்கும், பிரமனுக்கும் தலைவன். உலக உயிர்களில் சிறப்புடையவன் என்று சிவபெருமான் கூறி அருளினான்.

541. மெய் ஞானம் கைகூடப் பெற்றவரை தம்முடைய படைசூழ சென்று அவர்க்கு ஏவல் செய்வார் மன்னன். அவரின் உடலை மாற்றி அமைக்கும் தேவ தேவனை மற்ற வழிகளை நீக்கி ஞானத்தால் அணுகி அருள் கூட முடியும்.

542. உயிர்களின் பக்குவத்திற்கேற்ப அவர் உடலிலும் உள்ளத்திலும் பலவகையான இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்து பக்குவம் செய்பவன் சிவன். மூலாதாத்திலிருந்து எல்லா ஆதார நிராதாரங்களில் கூத்து ஆடும் பிரானுக்கு அதன் பயனாக எல்லையில்லாத ஒருமைப்பாடு ஏற்படும்.

#####

Read 1768 times Last modified on சனிக்கிழமை, 17 October 2020 10:49
Login to post comments