Print this page
திங்கட்கிழமை, 20 April 2020 16:12

பிராணாயாமம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

#####

பிராணாயாமம்!

564. உடலுக்கும் ஐம்பொறிகளுக்கும் தலைவனான ஆன்மா உய்வு அடைந்து மேன்நிலையடைய பிராணன் என்ற குதிரை உள்ளது. அது உடலை விட்டகன்று அண்டத்தைப் பற்றி நின்றவருக்கு வயப்படும். மெய் உணர்வு இல்லாமல் கண்டத்தைப் பற்றி இருப்பவர்க்கு அப்பிராணன் வயப்படாது.

565. நல்லவனான ஆரியன் என்ற மனதில் ஒடுகின்ற அபானன் பிராணன் என்ற இரண்டு குதிரைகளையும் வெளியில்விட்டு உள்ளே நிறுத்துகின்ற திறமை வுடையவரில்லை. குருநாதரின் அருள் கிட்டினால் பிராண செயம் பெற்று பிராணன் அபானன் ஆகியவற்றைச் சேர்த்து பிடிக்கலாம்.

566. பறவைவிட வேகமாகச் செல்லும் பிராணன் வழி சிரசை நோக்கிச் செல்லும்போது கள் உண்ணாமலேயே அதைச் செய்பவனுக்கு மகிழ்வு உண்டாகும். உடலில் சேம்பல் நீங்கி சுறு சுறுப்பு ஏற்படும். பிராணனும் மனமும் சிரசில் பாயும் மனம் உடையவர்க்கு இது உரித்ததாகும்.

567. உலக நினைவுகளை எண்ணாதவனுக்கு பிராணனும் மனமும் அடங்கி ஒடுங்கும்போது பிறப்பும் இறப்பும் இல்லை. பிராணான் நிலைதடுமாறி பேச்சு அறிவித்தால் பிராணன் ஒடுங்காது பிறப்பு இறப்பில் உழல்வர்.

568. இடப்பக்கத்தில் காற்றை உள்ளுக்கிழுக்கும் பூரகம் 16 மாத்திரை அளவும். இழுத்த காற்றை 64 மாத்திரை அளவு உள்ளே நிறுத்துதல் கும்பகம் பின் அக்காற்றை 32 மாத்திரை அளவு மெல்ல வலப்பக்கம் வெளியே விடுதல் ரேசகம் என்றாகும். இம்முறைக்குமாறாக வலப்பக்கம் காற்றை இழுத்து கும்பித்து மெல்ல இடப்பக்கம் வெளியே விடுதல் வஞ்சனை.

569. காற்றை இழுத்து தன்வசப்படுத்தி அடக்கி பிராணாயப் பயிற்சி செய்பவன் உடல் பளிங்கைப்போல் மாசு இல்லாத தூய்மையுடையதாய் முதுமை அடைந்தாலும் இளமைத் தோற்றத்துடன் இருப்பர். இதனுடன் குருவின் அருளையும் பெற்றுவிட்டால் காற்றைவிட மென்மை உடையவனாகி எங்கும் செல்லும் ஆற்றலைப் பெற்று மேன்மை அடைவான்.

570. எங்கே இருந்தாலும் இடப்பக்க நாசி இடகலை வழியாக பூர்கம் செய்தால் அப்படி பூரித்த உடலுக்கு அழிவு என்பது உண்டாகாது. அங்கு கும்பகம் செய்து அந்தப் பிராணான் செல்லும் அளவு மேற்செல்லச் சங்கநாதம் ஏற்பட்டு மேன்மை கிட்டும்.

571. இடகலையில் ஏற்றி பிங்கலையில் இறக்கி கும்பகம் செய்து காற்றை இழுத்துப் பிடிக்கும் முறையை அறிந்தவர் இல்லை. அங்ஙனம் அறிந்தவர் இயமனைக் கடக்கும் குறிக்கோள் உடையவராவர்.

572. காற்றை தொண்டை மூலாதாரம் விலா ஆகியவற்றில் நிரம்பும் வண்ணம் பூரகம் செய்து விருப்புடன் வயிற்றில் கும்பகம் செய்து இரேசகத்தினால் உறுப்புகளை சுருங்க வைத்து இருப்பின் பெருமானின திருவருளைப் பெறமுடியும்.

573. இடைகலை வழியாக 16 மாத்திரை பூரகம் செய்து பிங்கலையில் 32 மாத்திரை அளவு இரேசித்து செய்கின்ற வேள்வியில் 64 மாத்திரை அளவு கும்பகம் செய்ய உண்மை விளங்கும்.

574. கட்டப்பட இவ்வுடல் தளர்ச்சி இல்லாமல் இரேசகம் செய்து 10 நாடிகளும் விம்மும்படி காற்றை உள்ளே இழுத்து பூரித்து நிரப்பிய பிராணன் அபானன் ஒன்று சேரப்பெற்று நேராய் நிமிர்ந்திருந்தால் இயமனால் உண்டாகும் பயம் இருக்காது.

575. உயிர்பாய் திரியும் காற்றை முறையான கும்பகத்தால் உள்ளே தூய்மை செய்வதால் உடல் உறுப்புகளில் குருதி ஓட்டம் நன்கு பாய்ந்து சிவந்து நிற்கும். தலைமுடி, மயிர் கறுத்து தோன்றும். ஒளிக் கதிர்களால் சூழப்பெற்ற ஆத்மா உடலில் நிலையாய் இருக்கும்.

576 உடம்பை இடமாகக் கொண்ட பிராணசக்தி குழந்தையாய் இருக்கும்போது 12 விரல் அளவு நீளம் சென்றும் புகுந்தும் இருக்கும். வயது முதிர்ந்தபோது நான்கு விரல் அளவை விட்டு விட்டு எட்டு விரல் அளவு மட்டும் செயல்படுகின்றது. விடுபட்ட அந்த நான்கு விரல் அளவையும் செயல்படுமாரு செய்பவர் ஐந்தெழுத்து வடிவத்தை பெறுவார்.

577. பன்னிரண்டு விரல் அள்வு செயல்படும் பிராணான கதிரவனுக்கு பகல் இரவு என்றுண்டு. மூக்கிலிருந்து தொண்டைவழி கீழ் நோக்கிச் சுவாசப்பைக்கு காற்று செல்லுவதை ஆன்மா அறியாது. கீழ்முகமாகச் செல்லாமல் மேல்நோக்கிச் செல்லும் பிராணானை ஆன்மா அறிந்தால் பிராணன் என்ற கதிரவன் இரவு பகல் என்றில்லாமல் எப்போதும் ஒளிவீசும்.

#####

Read 1664 times Last modified on செவ்வாய்க்கிழமை, 21 April 2020 10:08
Login to post comments