gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
திங்கட்கிழமை, 20 April 2020 16:20

சமாதி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.

#####

சமாதி!

618. இமயம் முதலியவற்றைக் கடைபிடித்து சமாதிவரை செல்லும் முறையைக் கேட்டால் இமயம் முதல் சமாதிக்கு முன் உள்ள சங்கங்கள் கடைபிடிக்கப்பட்டால் எட்டாவதான சமாதி கைகூடும்.. எட்டு உறுப்புகளையும் முறையாய் செய்பவர்க்கு அட்டாங்க் அயோகத்தின் கடைசி அங்கமான சமாதியும் கைகூடும்.

619. விந்துவும் நாதமும் தலையில் உள்ள ஆயிரம் இதழ் தாமரையில் சிறப்பாக விளங்கினால் யோகமான சமதியில் சிவன் பொருந்தி ஞானவடிவான சிவன் பேரொளியாய் புலப்படுவார்.

620. நினைவை கொண்டிருக்கும் மனம் இருக்குமிடத்தில் பிராண வாயுவும் இருக்கும். மனம் நினைக்க வில்லையாயின் பிராணவாயு அசையாது. அம்மனம் நினைப்பதை விட்டு மகிழ்ந்திருக்கும். எண்ணும் மனம் எண்ணாத மனமாகி விடும்.

621. பிளந்து வெளிப்பட்ட ஒளி நீர் ஊற்றையும் அறிவுக் காட்டையும் கண்டு உணர்வு மயமாய் இருப்பவர் செழுமையான சிரசில் பிராணான் என்ற குதிரையைச் செலுத்தி மனம் என்ற கயிற்றால் கட்டுவார்,

622. சிவனை நாடி சிரசின் உச்சியுள் உள்ள சகசர தளத்தில் கண்ணறீவு, காதறிவு, மூக்கறிவு, நாக்கறிவு ஆகியவற்றை பொருத்தி இருப்பவர் பரந்த சகசர தளத்தில்மேல் அகண்டத்தை கண்டதால் யமன் என்ற சொல் கனவிலும் இல்லை.

623. பிருத்வி முதல் உள்ள ஐந்து மண்டலங்களும் அகரம் முதல் உன்மனி இறுதியாக உள்ள பன்னிரண்டு கலைகளும் ஆதாரச் சக்கரங்களில் உள்ள அட்சரங்களை இடமாகக் கொண்ட தேவதைகள் நாற்பத்தெட்டு ஆகியவற்றை நிராதரத்தில் கண்டு சிவயோகி எங்கும் பரந்துள்ள திருவடியைப் பொருந்தி யிருப்பர்.

624. கிணற்றுச் சகடை உதயால் கயிறு மீழும் மேலும் செல்வது போல் செல்லும் வாயுவை பிரமரந்திரத்தால் பொருத்தி தேடி அலைவதை விட்டு விழித்த நிலையில் இருந்தால் சிவக்கனியுடன் அசைவற்று இருக்கலாம்.

625. ஆன்ம வடிவத்தை அறிந்து கொள்ளும் சிறப்பான முறையில் பயன் உண்டு. தேவர்கள் கடலைக் கடைந்து அமுதம் உண்டனர். அதனால் சிரசின் உச்சியில் அமுத பானம் செய்யாதவர் ஆகினர். மனம் அடங்க சிரசின் மேலிடத்தில் பொருந்துவதே சொரூபத்தை அறிவதாகும்.

626. நம்பிக்கைக்கு உரியவனும், முதற் பொருளாக விளங்குபவரும், நான்கு வேதங்களை ஓதியவனும், செம்பொன்னாக விளங்கும் சோதியை போன்றவனும் ஆன சிவபெருமான்மேல் அன்பு கொண்டு ஆசையை அடக்கிச் சகசரதளாத்தில் கலந்து நிட்டையில் இருப்பர்.

627. குண்டலி நான்கு இதகளுடன் கூடிய மூலாதரத்தில் உள்ள முக்கோண் வடிவுடன் அபானன் சக்தி கெட்டு குண்டலினியோடு மேல் எழும்பி உயிருடன் பொருந்தி மூக்குத் துளையின் வழி புகுந்து பிரமரந்திரத்தை நோக்கிச் சென்றால் பெருமை மிக்க அர்த்த சந்திரனில் நெற்றியின் நடுவே உள்ள வடிவில் அர்த்த சந்திரன் முதல் உன்மனி வரை உள்ள கலைகளாய் விளங்கும்.

628. வீணான கற்பனையான எண்ணங்ளையெல்லாம் விட்டு மூல்க்கனலுடன் மேலே போய் சிற்பத்திறனுடைய இப்புவனங்களையெல்லாம் படைத்துக் கொடுத்தருளிய பேரொளி அழகனான சிவத்தைத் நாடி மதி மண்டலத்துடன் பொருந்தி தான் என்றும் சிவன் என்றும் பேதம் இன்றி சாந்தம் பொருந்தியது சமாதி.

629. வாழ்க்கையை மாற்றியவரிடம் ஆன்மா நன்கு விளங்கும். ஆன்மா சிவத்தை சார்ந்திருப்பதால் அதன் சக்தியால் அங்கு கூடியிருக்கும் காமக் குரோதங்கள் அகன்று சமாதி நிலை சேர்ந்தவர்க்கு நடு நிலையானது தானே வந்து சேரும்.

630. ஒளியுடன் ஒப்பிலா சுடராய் விளங்கும் சிவனும் சக்தியும் உள்ளே இருக்கும் மலம் அற்ற ஆன்மாவும் சமாதியில் ஒன்றே. படைப்பிற்கு முதல்வனான நான்முகனும் திருமாலும் ஆதியான சிவத்திடம் அடிபணிந்து என்றும் நீங்கா அன்பைக் காட்டுவர்.

631. சமாதியில் இருப்பவர்க்கு பல் யோகங்கள் கைகூடும். எப்போதும் இறைவனிடம் கூடியிருக்கின்ற சமாதி வேண்டியதில்லை. ஆன்மாவே சிவம் ஆனால் சமாதி வேண்டியதில்லை. சமாதியினால் அறுபத்திநான்கு கலைகளும் வந்து சேரப்பெறுவர்.

#####

Read 1527 times Last modified on செவ்வாய்க்கிழமை, 21 April 2020 10:12
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26932033
All
26932033
Your IP: 100.26.35.111
2024-03-29 01:00

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg