Print this page
செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:44

கலைநிலை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

#####

கலைநிலை!

712. காமத்திற்கு காரணமாகிய சுவாதிட்டானத்திலிருந்து செயல் நடக்கச் செய்து கொண்டிருக்கும் நெற்றிக்கண்னையுடைய சிவன் மேல் அன்பு கொண்டு கண்கள் இரண்டினால் சேர்ந்தவண்ணம் மேல் நோக்கினால் அன்பின் வழியாக கங்கை வெள்ள்ம் பெருகும். இந்த அன்பு செய்யும் முறை உடலின் உயிரை அழியாது காக்கும்.

713. மனம், புத்தி, அகங்கரம், சித்தம் என்ற அந்த காரணங்கள் நான்கையும் பாசவழியின்ரி பதிவழியில் செலுத்தினால் காக்கமுடியும். அந்தகாரணங்கள் நன்மை செய்வதால் சந்திர கலை பதினாறும் நிலைத்து நிற்குமாறு காக்கலாம். பாசம் கொண்ட மனம் சிவ ஒளியைப் பற்றி நின்றால் பிராணனும் அதனுடன் கலந்து வானத்தில் கருத்தூன்றி நிற்கலாம்.

714. சுழுமுனையில் சென்ற காற்று, காற்றில்லாத இடத்தில் வைக்கப்பட்ட விளக்கைப் போன்றும் அசைவற்ற மலையைப் போன்றும் அசைவின்றி நிற்கும். சந்திர கலையில் பதினாறில் சிவசக்தி இருப்பதை அறிந்தால் மனமும் அசையாமல் நிற்கும்.

715. எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் பூத நாயகன் பிராணன் மற்ற சிறு நாடிகளில் மாறிச் செல்லாமல் நடுநாடியில் ஒன்றி நிற்கும் நிலை அடைந்தால் கதிர்களாகிய சடையுடன் கூடிய சங்கரன் விந்து மண்டல காளையில் ஏறி அமர்ந்திருப்பான்.

716. சமாதியில் நின்றால் காலங்கள் ஏதும் அறியா நிலை ஏற்ப்டும். வரும் காலத்தின் பெருமைதனை எதிர் நோக்கி சுழுமுனையில் ஒன்றி, ஆயிரம் இதழ் தாமரையில் பொருந்தி செருக்கு இல்லாது இருந்தால் சாதகன் ஆவான்.

717. சாதகமான அத்தன்மையை நோக்கி ஆராய்ந்து வழிபடுங்கள். அவ்வாறு செய்து மூச்சுக்காற்றை ஆயிர இதழ் தாமரையில் உள் புகும்படி செய்வது, இரசவாதம் செய்யும் வாத குளிகையினைப்போல் உடலில் ஏற்படும் குறைகளை நீக்க உதவும்.

718. அப்படி அடைந்த பயன் இம்மையின்பம், மறுமையின்பம், வீடு என்ற மூன்றாம். உள நாடியான சுழுமுனை நோக்கிச் சென்ற ஜீவன் ஆயிரம் இதழ் தாமரையில் பொருந்த அந்த சோதி மூலமான சிவத்துடன் பெருந்தும்.

719. தனக்கு என எந்த ஆதாரமும் இல்லமல் தான் மற்றவற்றிற்கு ஆதாரமாய் இருக்கும் பராசக்தி உடலில் வழி செய்து எனக்குள்ளே இருப்பாள். தேவர் உலகிற்கும் தாயான சக்தி விருப்பமுடன் இன்பம் தரும் ஒளியில் ஆழ்ந்து திளைக்கும் சிவயோகியின் உடல் சிவாலயம் ஆகும்.

720. நிறைந்து இருக்கும் பிராண வாயு ஒடுங்கும் தன்மையை யாரும் அறிவதில்லை. அது ஒடுங்கும் நிலையை அறிந்த பின்பு காற்று கலந்த வான் மண்டலத்தில் இருந்து சிவபேரொளியில் கலந்து ஒன்றாகலாம்.

721. உயிர் ஒட்டமுள்ள காற்று என்ற சிவன் குண்டலினியை விட்டுப் பிரிந்து மேற் சென்றால் சிவ யோக சமாதி உண்டாகும் என்பதை சோதனை செய்து உண்மையை மாசு இன்றி தெரிந்து கொள்ளலாம்,. சிவகுருநாதனை வணங்கிப் பெரும் செல்வத்தை அடைந்ததைப் போல் பாது காப்பீர்,

722. இடைகலை, பிங்கலை என்ற இருநாடிகள் வழி மேலெழுந்த பிராணனை உச்சியில் அசையாது நிறுத்தி அமுதத்தை புசித்தால், நீரிலும் ஐலத்திலும் தலா ஆயிரம் ஆண்டுகள் சமாதியில் இருந்தாலும் உடலுக்கு அழிவு இல்லை.. இது சிவபெருமானின் மீது ஆணை.

723. சுழுமுனையில் பொருந்தியவர்க்கு பேரொளியான சிவன் குண்டலினியும் பிராணனும் தன்னை விட்டுப் பிரியும் காலத்தில் ஓசை என்ற வான் பூத தன்மாத்திரையில் வெளிப்படும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், எரித்தல், சேர்த்தல் என்ற ஏழும், ஒளியில் ஏற்படும் சுவை, ஒளி, நாற்றம், வெம்மை, எரித்தல் என்ற ஐந்தையும், மூக்கிடம் பொருந்திய நாற்றம், உயிர்ப்பு, உணர்தல் ஆகிய மூன்றையும் நாவில் பொருந்திய உணவை எடுத்தல், சுவைத்தல் என்ற இரண்டையும் ஒடுக்கி சுவை உண்டாகாமல் செய்வான்.

#####

Read 1543 times Last modified on செவ்வாய்க்கிழமை, 21 April 2020 10:14
Login to post comments