ஓம்நமசிவய!
மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!
#####
சரீர சித்தி!
724. உடல் அழிந்தால் உயிர் நீங்கும். உடல் வன்மை குன்றப் பெற்றவர் உறுதியான ஞானத்தை பேணும் முறையை அறியார். உடலைப் பேணிக் காக்கும் முறையை அறிந்து உடலைக் காத்து உயிரையும் காத்தேன்.
725. உடலைக் குற்றம் உடையது என நினைத்திருந்தேன். அவ்வுடலில் சிறந்த சிவத்தைக் கண்டேன். அதில் சிவன் கோயிலாக இருப்பதை உணர்ந்து உடலைப் பாது காத்துக் கொண்டிருக்கின்றேன்.
726. உலகமாயை நோக்கி போகும் மனத்தை சிவபெருமானை நினைக்கச் செய்தாலே தூய்மையாகும். சிவ சிந்தனையால் குற்றங்களைப் போக்கி கவிழ்ந்த ஆயிரம் இதழ் தாமரையை மலர வைத்து கீ நோக்கிச் செல்லும் நோக்கை மேல் நோக்கி திருப்பினால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிறைந்த உடல் உண்டாகும்.
727. யோகத்தை மாலை வேளையில் பயின்றால் உடலின் குற்றம் ஆன கபம் அகலும். நண்பகலில் செய்தால் கொடிய வாத நோய் நீங்கும். சிறப்பான விடியர் காலையில் செய்தால் பித்த நோயுடன் நரை திரையும் அகலும்.
728. உடலின் மூன்று முடிச்சுகளும் இடைகலை, பிங்கலை நாடிகளும் பாம்பு போல் பின்னி உள்ளன. இயக்கம் உள்ள உடலுக்கு பன்னிரண்டு அங்குலத்தால் உணர்த்தப்பட்ட பிராணன் கிழ் நோக்கிச் செல்லும் சூரிய சந்திர நாடிகளை ஒன்றாக்கி கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோகுமாறு செய்தால் பிராண லயம் பெற்று உடல் அழியாது.
729. சிரசில் நூறு நாடிகள் கீழ் நோக்கியும் ஒரு நாடி மேல் நோக்கியும் இருக்க மேல் நோக்கும் நாடி சிறப்பை அடைய நூறு நாடிகளும் மாற வேண்டும். தொன்ணூற்றாறு தத்துவங்களில் உள்ள அறுபது தாத்துவிகங்களும், ஆறு அத்துவாக்களும் மாறி குற்றம் நீங்க வேண்டும். இடைகலை பிங்கலை வழி தூய்மையடைந்தால் பிராணன் தூயமையாய்விடுபவர் நூறு ஆண்டையும் மாறும்படி நீண்டநாள் வாழ்வர்.
730. சந்திர க்லையை சூரிய கலையில் பொருந்துமாறு சாதனை செய்தால் நண்பகலில் பிராணவ ஒலி கேட்கலாம். இன்பத்தைத் தரும் சிவ நடனத்தை கண்டு களிக்கலாம். இது உண்மை, இறைவன் மீது ஆணை.
731. மிகுந்த தூய்மையுடன் இருக்கும் அகரம் பொருந்தும்படி நினைவு கொண்டு சகாரத்தை ஓதுங்கள் அம்சம் என்று சொல்வதே மந்திரம். இப்படி முழுமையாய் எண்ணிப் பெற்ற நாதமே யோகியின் வழிபாட்டு மூர்த்தி யாகும்.
732. கொப்பூழ் தாமரையில் இருக்கும் உயிர்ப்பைச் சிவசிவ என்று உச்சித் தொளையான பிரமரந்திரத்தில் நிறுத்தி கீழ் நோக்கிச் செல்லும் காற்றை தடுத்து மேல் நோக்கிச் செலுத்தினால் அவர் சிவத்தின் இயலபை அடைவர்.
733. நீங்கா மலம் பொருந்திய எருவாய்க்கு இரண்டு விரல் மேல், சொல்லா இயலாத பால் உணர்வைத் தரும் குறிக்கு கீழே உள்ள மூலதாரத்தில் உடலையே வழியாகக் கொண்டு சீவர்களை வழி நடத்தும் சிவனை வழிபடுங்கள். உபதேசம் பெற்று அவனைக் காணுங்கள்.
734. நீல ஒளியுடன் இருக்கும் சக்தியுடன் முழுவதுமாகச் சேர்ந்து அவளை அடைக்கலம் என நம்பி இருப்பவர்க்கு உலகத்தில் மற்றவர்களுக்கு ஏற்படும் நரை திரை மூப்பு மாறி இளமை தோற்றம் ஏற்படும் இது சிவன் ஆணை.
735. கருவாய் செயல் படவில்லை என்றால் உயிர்களுக்கு எந்தவித இழப்பும் இல்லை. உடல் மெலிந்தால் சத்துவ குணம் தோன்றி உயிர்ப்பை வெல்லலாம். மேல் நிற்பவருக்கு உணவானது குறைவதற்கு பல வழியுண்டு. யோக நெறியில் நிற்பவர் நீலகணடன் ஆவர்.
736. உடலின் மூலாதரத்தில் உள்ள காம வாயுவைத் தலையில் உள்ள ஆயிரம் இதழ் தாமரைக்குச் செல்லும் பயிற்சியை முயற்சித்தவர் வண்டுகள் விரும்பும் நறுமணத்தைக் கொண்ட மலர்களை அணியும் பெண்கள் விரும்பும் அழகான வடிவத்தைப் பெறுவர்.
737. எப்போதும் யாவரும் அஞ்சும்படியான சினத்தோற்றத்துடன் வரும் இயமனை கண்டு வெகுண்டு, ஒளியுடன் கூடிய மூலாதாரத்தில் உள்ள சக்கரத்தில் சிவனது ஒலிக்கும் திருவடியைக் கண்டவர் அப்போதே இவ்வுலகிலும் மேல் உலகிலும் வாழ்பவர் ஆவார்.
738. நான் தரிசித்த அக்னியாகிய சிவன், திங்கள் கதிரவன் அக்கினி விண்மீன் என்ற நான்கு கலைகளிலும் ஏழு ஆதாரங்களிலும் தான் கண்ட பிராணனாய் உடலில் வெளிப்பட்ட உணர்வாய் அதோ முகச் சிவன் இன்பம் அடைந்து வளர்கின்ற முறையில் துணை ப்ரியும்.
739. ஆசனத்தில் வெளிப்படும் வேதசக்தியை ஏற்றுக் கொண்டு அன்புடன் நெல்லை விதைப் பண்டமாகவும் உணவுப் பண்டமாகவும் சேமித்து வைத்தலைப் போன்று நிறைவான பயிற்சியால் இருளுக்கும் ஒளிக்கும் இடையே நடந்த போரில் இருள் கீழாகி ஒளிச் சேமிப்பு உண்டாகி அதில் ஒடுங்குவாயாக.
#####