gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வியாழக்கிழமை, 30 April 2020 10:26

அசபை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

#####

நான்காம் தந்திரம்!

அசபை!

884. புகழ்ந்து பேசப்படும் ஞானத்தைப் போற்றுகின்றேன். உள்ளத்தில் உலகத் தலைவன் சிவன் திருவடியே துணையாகும் எனத் தெளிகின்றேன். அத் திருவடியை அடையும் சிவ யோக நெறியையும் ஓர் எழுத்து மந்திரமான பிரணவத்தையும் கூறுகின்றேன்.

885. ஓம் என்பதில் உள்ள முதல் எழுத்தான அ என்ற எழுத்தால் உலகம் எங்கும் பரவி பல் உயிர்களாக விளங்கி, இரண்டாம் எழுத்தான உ என்பதால் உடலில் பரவி சிவசத்தியாய், மூன்றாம் எழுத்தான ம என்பதால் தோன்றும் ஒளிப் பொருளை மாயையால் மயக்கத்தால் பொருந்தியது ஆகும்.

886. தேவர்கள் உறைகின்ற சிரசின் வலப்பக்கமே தேவர்கள் இருக்கும் சிற்றம்பலம். தேவர்கள உறைகின்ற சிதம்பரம் என்றும் தேவர்கள் உறையும் அம்பலம் என்றும் கூறுவர்.

887. சொல்லப்பட்ட பொன்னம்பலத்தில் அற்புதத் தாண்டவமும் ஆனந்தத் தாண்டவமும் நிகழும். அங்கேயே அனவரதத் தாண்டவமும் நிகழும். அங்குப் பிரளாய தாண்டவமும் நிகழும். சங்காரத் தாண்டவமும் நிகழும்.

888. திருக்கூத்தான பிரணவம் ஒப்பற்ற எழுத்து. அது அருளுவதையே குறியாகாக் கொண்டு நிகழும். அக்கூத்து எல்லாவற்றிலும் மேலான தற்பர சிவநிலையாகும். அக்கூத்து பொன்னம்பலத்தில் நிகழும்.

889. தானே ஒப்பில்லாத பேரொளிப் பிழம்பாகும் எக்காலத்தும் அழிவு இன்றி ஒன்றிபோல் எங்கும் பரந்து நிற்கும் பெய்ப்பொருளும் தானே ஆகும். தானே அகர உகர பிரணவத்தின் உறுப்புகளாகும் த்த்துவங்களை இயக்குவதற்கு தானே ஒளியை தருவது ஆகும். பிற ஆதாரமின்றி தனக்குத் தானே ஆதாரமாய் திகழும்.

890. ஆதாரமான மூலாதாரத்தில் எழுந்தருளியுள்ள சிவம் அக்னி மண்டலத்தில் நமசிவய (நான்முகன், திருமால், தேவர்கள்) என விளங்கி மேல் ஆதாரமாகத் திகழும் ஒளிமண்டலத்தில் வசிய (சிவ, சக்தி) எனப் பொருந்தி அதற்குமேல் விளங்கும் சகசிர தளத்தில் யவசி (ஆன்மாவான ய) எனத்திகழும்

891. நான்முகனும், திருமா.லும் உயிர்களின் அறிவுக்கும் உணர்வுக்கும் ஏற்றபடி பாசத்தையும் பாச நீக்கத்தையும் அமைப்பர். ‘ ய ‘ என்ற உயிர் தத்துவங்களை உணராது சிவத்தை அடைந்தபோது தத்துவங்களை உணராது திருக்கூத்தை இயற்றுபவன் கூத்தை விட்டு மேலான அறிவுடையவனாய் விளங்குவதால் சித்தி பெற்ற இன்பம் உண்டாகும்.

892. அ, உ, ம என்ற ஆனந்தம் மூன்றும் அறிவாகிய விந்து நாதம் இரண்டும் சேர்ந்தால் பிரணவம் ஆகும். சி காரத்தை நம என்பதுடன் சேர்க்காமல் ஆன்மாவுடன் பொருந்தும் வகையில் அதன் சக்தியை மாற்றினால் சிவாய என்றால் சிவானந்தம் உண்டாகும் என்பதை அறீயவில்லை.. இதை அறியவல்லார்க்கு கூத்தனாக சிவன் இருப்பதும் அவர் நிகழ்த்தும் ஆனந்தக் கூத்தும் புலப்படும்.

893. நூல்களைக் கற்ருணர்ந்தவர் விந்து நாதம் ஆகியவற்றைப் பெறுவர்.பிரணவம் அல்லது ஐந்தெழுத்து என்பதால் விந்து நாதம் இருக்கும் குரு மண்டலத்தை அடையலாம் என்பதை விளக்குவதே சங்காரத் தாண்டவம். விந்து திரிகோணம் என்ற சகசிர தளத்தில் விரிந்து விளங்கும்.

894 .சதா சிவத்தினால் அருளப்பட்ட வேத நெறி சைவ நெறிக்கு மாறுபடாத ஆகமம். வளமைமிக்க இதை அடைந்தால் பாச நீக்கம் ஏற்படும் என்று சைவ ஆகமங்களால் சொல்லப்பட்ட உண்மை ஆகும். இது எல்லோரும் அடையும் பொதுச் சபையாகவும் அங்கு விளங்கும் குற்றமில்லாத சிவமாகவும் இருக்கும்.

895. மலம் அற்ற சிவமே பதி பாசங்களுக்கு ஆதாரம், அச்சிவமே மறைப்பிற்கும் ஆனந்தத்திற்கும் அடிப்படை. நின்மல சிவமே கூறப்பட்ட ஆணவம் கன்மம் மாயைக்கு ஆதாரம். அச்சிவம் விளங்கும் இடம் சங்காரத் தாண்டவம் விளங்கும் இடம்.

896. சிவமே சிவசக்தி பிரியாது இருப்பதால் சக்திக்குத் தலைவன் ஆவான். தான் இருக்கும் மலையாய் அப்பெருமான் விளங்குவான். மற்றவற்றினுள் கலந்திருப்பினும் தன் இயல்பில் குறையாமல் இருப்பான். தன்னை ஏவுவார் இல்லாமல் தானே தலைவாய் விளங்குவான்.

897. உயிர்களுக்குத் தலைவனாய் விளங்குவது நின்மல சிவம். உயிர்களைத் தாங்குபவனாகவும் தவைகளுக்குத் தலைவனாகவும் இருப்பது அச்சிவமே. ஞானத்தை தருவதற்கு கதிரவன் சந்திரன் ஆகியோருக்கும் அப்பெருமானே தலைவன்.

898. பெருமானின் திருவடிகளே அகரமாகிய பொருளாகும். அப்பெருமான ‘ய’ ஆன் ஆன்மாக்களில் விளங்கும். ஐம்பத்தொரு எழுத்துக்களுக்கும் அனைத்து மந்திரங்களுக்கும் தலமையாய் இருபதும் அத்வே.

899. ஏழாயிரம் எனக் கூறப்பட்ட மந்திரங்கள் இருபது முப்பது என்ற எழுத்துக்களின் சேர்க்கையில் ஆனவை. ஏழாயிரம் மந்திரங்களும் ஏழு முடிவை உடையவை. ஏழாயிரம் பிரிவில் எண்ணமுடியாத பிரிவுகளாகப் பிரிந்து ஏழு முடிவுகளைக் கொண்ட மந்திரங்கள் இரண்டான நாதம் விந்துவில் முடிவடையும்.

900. அசபை என்று கூறப்படும் பிரணவ மந்திரமே ஏழாயிரம் ஆகும். அசபை என்ற மந்திரம் பலவகையாய் உள்ளன. அசபை மந்திரமே சிவவடிவமாக உள்ளது. அதனால் அசபை மந்திரமே எல்லாவுமாய் இருக்கின்றது.

901. சிவன் யாரும் சொல்லாமலே தகுந்த கூத்தை நடத்துபவன். தானே தன்னிடமிருந்து சக்தியைப் பிறப்பு செய்வான். மகாமயையினால் நடைபெறும் ரீங்காரக் கூத்திற்கும் தானே கூத்தை மேற்கொள்வான்.

902. இரண்டு கூத்தில் சங்காரக்கூத்து அருள் பற்றி நடப்பது. எனவே அது நன்மையத் தருவதாகும், மற்றது அற்புதக்கூத்து உயிர்களைப் பிறவியில் செலுத்துவது என்பதால் இயமனுக்கு வேலை கொடுக்கும் கூத்தாகும். சங்காரக் கூத்தே உயிர்களின் பழிப்பிற்கு காரணமாகாத பிரணவ மந்திரம். இக்கூத்தினால் பயன் அடைந்த உடம்பு செம்பு பொன் ஆவதைப்போல் சிவமயமாய் விளங்கும்.

903. சிவயநம என ஐந்தெழுத்தைச் சொன்னால் செம்பின் குற்றம் நீங்கி பொன்னிறமாவது போல் உயிர்களின் மலக் குற்றங்கள் நீங்கி தூய்மை அடைந்து உயிரின் அறிவுமயமான பரம் பொருந்தும். ஸ்ரீம் க்ரீம் எனச் சொன்னாலும் உடம்பு பொன்னாகும் செம்பு பொன்னாவது போல் திருவம்பலம் பொருந்தினால் உயிர்களின் குற்றம் நீங்கி சிவமாய் திகழ்வர்.

904. திருவம்பலச் சக்கரம் அமைக்க ஆறு கோடுகள் குறுக்கும் நெடுக்கும் வரைக. அங்கு இருபத்தைந்து அறைகள் இருக்குமம் இவ்விருபத்தைந்து அறைகளிலும் திரு ஐந்தெழுத்தை முறையாக அமைத்து உச்சரித்தல் நலம்.

905. சிவயநம! சிவயநம! என்ற முறையில் உறுதியுடன் செபித்தால் பிறப்பு இல்லை. மேலும் வளர்ச்சியைத் தருகின்ற கூத்தைக் காணலாம். ஆன்மா மலம் நீங்கப்பெற்று பொன்போல் விளங்கும்.

906. சிவாயநம என்ற பொன்னான மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லக்கூடாது. பொன்னான மந்திரத்தை உதட்டளவில் ஒலியில்லாமல் உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை தியானிக்கும்போது சிரசில் அக்கினி திக்கிலிருந்து ஈசான திசைப்பக்கம் பாய்ந்து பெருகி உடம்பு பொன்னாகும். திருவடிப் பேறு கிட்டும்.

907. திருஐந்தெழுத்தை எண்ணிலால் திருவடிக் காட்சியைக் கண்டு சிறந்த ஆசிரியனாக உருவாவர். பலர் மணவராக அமைவர் சிவனருளால் மாணவனின் குற்றம் நீங்கப் பெறும். பொன்னடியைக் காணத்தக்க உடலாக அமையும். திருவடிக் கூத்தை சிந்தனை செய்யுங்கள்.

908 திருஐந்தெழுத்தை கணிக்கும் செயலால் மற்ற உடலில் புகுந்து அங்குள்ள இன்பத்தை அடையலாம். அவர்கள் கவர்ச்சி தோற்றம் கொண்டவராக இருப்பதால் பெண்கள் அவரை விரும்பித் தொடர்வர். அவர்கள் சொல்வதால் உலகத்தவருக்கு பற்று பாசம் நீங்கும். இது திருக்கூத்தின் பயனாகும்.

909. அமைதியுடன் திருஐந்தெழுத்தை ஆயிரம்முறை உரு செய்தால் மேலே உள்ள சகசிர தளத்தை காணலாம். சஞ்சித, ஆகாமிய வினைகள் அழிந்து நுண்மையான சிவானந்தம் உண்டாகும்.

910. சீவன் சகசிரதளத்தை அடைந்து சிவத்துடன் ஒன்றிய நிலையைச் சொல்வது ஆனந்தம் பேரானந்தம், ஆ ஈ ஊ ஏ ஓம் என்ற இறையின் சமத்தன்மையும் சிவனாரின் அயல் தன்மையும் பிரித்தறிய முடியாதபடி இருக்கும் இடத்தை அடைவது அதைவிட ஆனந்தம். இந்த ஐந்தும் ஒன்றிய நாதாந்தம் அமைந்தால் ஆனந்தம். அம், ஹரீம், ஹம் க்ஷ்ம் ஆம் என்ற ஐந்து வித்து எழுத்துக்களும் சிறந்த ஆனந்தத்தைத் தரும்.

911. பருவுடல் நுண்ணுடல் ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தடையாகம்ல் அவை மிகையாகி ஒளி பொருந்தி விகாரமாகாமல் நின்றால் பருவுடல் நுண்ணுடல் ஆகிய இரண்டும் ஊ ஆ ஈ ஏ ஓ என நிற்கும். பின் அவை இரண்டும் ஈ ஓ ஊ ஆ ஏ என விளங்கி நிற்பது திருக்கூத்தாகும். (நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகியோர் உயிர் குற்றெழுத்துக்களாகவும் அவர்களுடைய சக்திகள் உயிர் நெடிலாகவும் கொள்ளவும்)

912. கூத்தே சிவயநம, மசிவயநம, நமசிவய, யநமசிவ, வயநமசி என்றாகும். இந்த உண்மையை கடைபிடித்தால் சந்திரயோகம் சிவயநம விளங்கி ஈ, ஊ, ஆ, ஏ, ஓம் பொருந்தும். சுரியன் யோகமான சிவயநம விளங்கி ஈ, ஊ, ஆ, ஏ, ஓம் பொருந்தும். நமசிவய கிரியை நெறி விளங்கி ஈ ஊ ஆ ஏ ஓம் ஆகி ஒளி பொருந்தும் விதம் ஆகும்.

913. ஒன்றான வான், இரண்டான காற்று, மூன்றான தீ ஆகிய மூன்றும் இறைவன் கூத்தினால் இயங்குவதால் வானில் இம்மூன்று ஒளிகளும் விளங்கி மண், நீர், தீ காற்று விந்து, நாத அணுக்கள் ஆக ஏழும் இந்த மூன்று ஒளிகளுடன் கலந்து ஆட சிவன் தனித்து ஆட சிவம், சக்தி, நாதம், விந்து , சதாக்கியம், மகேசுவரம், உருத்திரன், திருமால், நான்முகன் என்ற தத்துவங்களும் ஆட சிற்றம்பலத்தில் சிவந்த ஒளியில் சிவன் ஆடினான்.

#####

Read 2324 times Last modified on வெள்ளிக்கிழமை, 08 May 2020 09:52
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26952701
All
26952701
Your IP: 54.166.141.52
2024-03-29 20:38

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg