gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

நான்காம் தந்திரம்! (13)

ஞாயிற்றுக்கிழமை, 10 May 2020 10:21

நவாக்கரி சக்கரம்!

Written by

ஓம்நமசிவய!

பாலொடு தேனும் பருகுவோய் மேலொடு கீழாய்
மிளிர்வாய் எய்ப்பில் வைப்பாய் இருந்தோய்
மெய்ப்பொருள் வேழமுகத்தாய் நால்லார்க்
கெட்டும் நாதா பொல்லா மணியே புராதன போற்றி!

#####

நவாக்கரி சக்கரம்!

1219. நவாக்கரி சக்கரம் புதுமையைத் தரும் ஓர் எழுத்தான அம்மையே ஒன்பது எழுத்துக்களைக் கொண்ட தேவி மந்திரமாக அதுவே எண்பத்தொரு வகையாக் நவக்கரி கிலீம் முதல் சௌம் வரை இருக்கும்.

1220. முதலில் சௌ, ஔ, ஹௌ, கிரீம், கௌ, ஐ, இரீம், கிரீம், கிலீம் என்ற இந்த ஒன்பதும் மந்திர உறுப்பாய்க் கொண்டு இவற்றுடன் கிலீம் மந்திரம் மூலமாகக் கொண்டு செம்மையாக உள்ளெழுந்த முறையில் சிவயநம என உச்சரிப்பாயக.

1221. நவாக்கரி என்பது நான் அறிந்த ஸ்ரீவித்தையாகும். இதனால் நன்மைகள் அனைத்தும் உண்டாகும். நாவில் வைத்து நினைத்தால் நவாக்கரி சத்தி நன்மைகள் அருள்வாள்.

1222. ஞானம் கல்வி முதலிய நன்மைகள் எல்லாம் உண்டாகும் கொடுமையைத் தரும் சஞ்சிதம்-பழவினைகள் அந்த உயிரை விட்டுப் போகும். இந்தப் பிறவியில் அறியாமையால் ஈட்டப்படும் ஆகாமிய வினைகளை நீக்கி வரம் தரும். சந்திர மண்டலம் விளங்குவதை அனுபவத்தால் அறியலாம்.

1223. சக்கரத்தை வெள்ளி பொன் தகடுகளில் அமைக்க வேண்டும். மனதில் தியானித்தால் அமையவுள்ள வினைகளை வெல்லலாம்.. நீங்கள் வாழ்கின்ற பூமி உங்களுக்கு வெற்றியை அளிக்கும். உங்கள் தியான் நிலைக்கு ஏற்ப நிலைத்திருக்கும்.

1224. ஸ்ரீம் முதல் கிலீம் வரை தியானிக்கவும். அப்படி தியானிக்கும்போது முதலாக உள்ளது இறுதியாக அமையும். நெல்லும் அறுகம்புல்லும் கொண்டு தியானித்து வணங்குங்கள். உங்கள் வழிபாட்டை விரும்பி வெளிப்பட்டு அருள்வாள்.

1225. வெளிப்பட்டு அருள் செய்யும் சத்தி எத்தகைய நிறம் கொண்டவள் என்பதை உணர அழகிய காயம் பூவைப்போல் கரிய வண்ணம் ஆகும். அப்படி கருதி தொழுதால் எண்ணியவை யாவும் கைகூடும். அவள் விரும்பும்படி நடந்து கொள்வாயாக.

1226. இவ்வுலகில் எல்லா நன்மைகளும் உண்டாகும். காலன் உனக்குரிய ஆயுளாக எண்ணிய நாள்களும் கடக்கும். எங்கும் பரவும் சூரியனின் கதிரைப் போல் புக்ழானது பரவும். பராச்த்தி உன்னிடம் பொருந்துமாறு நடந்து கொள்க.

1227. . பொன்னும் மணியும் வெள்ளியும் தானே வந்தடையும். பராசத்தியின் அருளூம் ஞானமும் வரும். தேவர் வாழ்வு கை கூடப்பெறும். அவற்றை அடையும் வகையைத் தெரிக.

1228. நவாக்கரியை தேவர்கள் ஆவதற்கு மக்கள் அறிவார்கள். அவளை அறிந்த தேவர்களூக்கு தேவர்களீன் தலைவன் சிவபெருமான் அருள் செய்வான். பாயும் தீ கங்கையை சூடி அதன் வேகத்தை மாற்றியருளிய சிவபெருமானை அடைய முயல்வாயாக.

1229. வணங்குதற்குரிய சக்கரத்தில் பொருந்திய் எழுத்துக்கள் உலகம் புகழ்கின்ற ஹிரீம் முதலான் ஸ்ரீம் இறுதியாக் உள்ளவையாகும்.. இதனை வழிபட்டு மாலையை அணிந்து புகழுடன் கூடிய பராசத்தியை மேகம் போன்ற மண்டலத்தில் கண்டு கொள்வீர்.

1230. தனக்கு நிகரில்லா தலைவி சத்தியை தரிசனம் செய்யுங்கள். அள்ளிக் குடிப்பதைப் போல்முகப் பொலிவு உண்டாகும். மென்மையான பரமசிவத்தை மஞ்சமாகத் தாங்கும் நிலையான சத்தியை போற்றி உள்ளத்தே கொள்ளுங்கள்.

1231. அடையும் பேறாக உள்ள பெருமையை எண்ணினால் நாட்டை ஆளும் மன்னரும் வசமாவர். பகைவர் வாழ்வதுமில்லை இறைவனை ஒரு பகுதியிலே கொண்டவளைத் துதியுங்கள்.

1232. எட்டுத் திசைகளுக்கும் தலைவி சத்தியை வழிபடுங்கள். தேவர்கள் வாழ்வு எத்தகையது என்பதை எண்ணி அதில் கொண்ட ஆசையை அறுங்கள். மீண்டும் பிறந்து இப்பூமியில் வரும் வழியை மற்றுங்கள். நாயகியின் திருவடி துணையை பற்றித் தெளிவு அடையுங்கள்.

1333. சத்தியின் திருவடிகளை இடைவிடாது நினைத்திருந்தவர் நா அசையாமல் உள்ளே செபிப்பர். தங்களது அகப் பார்வையை செலுத்தி இருக்க பெருமையுடைய திருவடியைக் காண்பவர் ஆவர்.

1334. ஐம் முதலெழுத்து வலர்ந்து தோன்றும் சக்கரம் ஐம் முதலான பீசங்களோடு ஹிரீம் இறுதியாகும். அகர வாக்கியப் பொருளான சிவனுக்குரிய சத்தியை மாயைக்குத் தலைவியாய் போற்றுக.

1335. வாகீசுவரியான சத்தியை வேதங்கள் பகுத்து ஓதும். அவை அனைத்தையும் சேர்த்து நாவால் பயில அதற்கு அருள் செய்ய வல்லவளை அண்ணாக்கின் உள்ளே முன் எழக் கண்டு கொள்வீர்.

1336. இந்த இயல்புடைய சக்கரத்தை நாவில் எழுதினால் இது கூத்தப் பெருமானின் வடிவமாகும் பொன் மன்றில் இருக்கும் சபா வித்தையும் உயிர்கள் கையதாகும். மெல்லியலான நவாக்கரி அருள் பொருந்துவதால் உலகத்தை வெல்லலாம்.

1337. மென்மையான இய்ல்புடைய உண்மைப் பொருளானவளைக் குருவின் உபதேசப்படி விடாது பற்றுங்கள். தியானியுங்கள். இன்ப துன்ப கலப்புடைய நாள்கள் பலவும் நல்ல இன்ப நாள்களாகவே அமைந்திடும்.

1338. நன்மைகள் யாவும் சொல்லியபடி நடக்கும். சொல்லிய வண்ணம் சொல்லிய பயனும் தொடர்ந்து விடும். வாக்கீசுவரியே நாவில் பொருந்தி இருப்பதால் எல்லாக் கலையும் பொருந்தி நாவரசனாக இருப்பான். பரந்த உலகில் பகையும் இராது.

1339. பகைக் கெடுக்கும் கௌம் முதல் ஐம் இறுதியாய் உள்ள சக்கரத்தை நன்றாய் அறிந்தவரை பிறர் பழித்திட மாட்டார். பற்பல வடிவங்களாய் உள்ளவை யாவும் இவருக்கு வேறான்வை அல்ல. வேறுவகையின்மையாக எல்லாம் இவரை வணங்குபவனாம்.

1340 தத்துவ நாயகியை எல்லாரும் வணங்குவர். அந்நல்லவர் எல்லாம் அவளிடம் பொருந்தியிருப்பர். காமம், வெகுளி, மய்க்கம் என்ற மூன்று குற்றங்களும் அகலும், எண்ணிய செயல் கைகூடப்பெறும்.

1341. தனக்குமேல் பிறர் இல்லாமல் தானே பேசி அடங்குவன் ஆவான். தான் ஒருவனே எண்ணிய வண்ணம் ஒளிக்காமல் பேசுபவனாவான். தானே பேருழிக் காலத்தில் சிவபெருமானின் சங்காரத் தாண்டவத்தைக் காண்பவன் ஆவான். தானே வணங்கப்படக்கூடிய தலைவனும் ஆவான்.

1342. எல்லா உயிர்களும் ஆகியவள் சத்தியே எல்லாவற்றையும் பெற்றெடுத்த அழகுடைய அன்னை அவள் திருவடியை வணங்கினால் வினைகள் நீங்கிப் புண்ணியன் ஆகலாம்.

1343. உலகம் எங்கும் பொருந்திப் புண்ணியன் ஆகி மதிக்கத் தக்கவராய் அனைவருடன் கலந்து விளங்குவான். அருள் நிறைந்தவனாக உலகம் முழுவதும் இனிமையாக அமர்ந்திருப்பான்.

1344. சக்கரத்தின் பீசம் கிரீம் முதல் சௌம் வரை அது தானாக உள்ள சக்கரம் என்று அறிபவர்க்கு அஞ்ஞானமயமான காட்டில் இருள் மயமாகக் கலந்திருந்த அழியாத பராசத்தி உ”றவாகி அறிவு நிலையில் ஒளீயாக எல்லா உயிர்களிடத்தும் விளங்குவாள்.

1345. ஒளி செய்யும் பராசத்தி உள்ளத்தில் எழுந்தருளினாள் களிக்கும் மனத்தில் உண்மைப் பொருளை விளக்கித் தெளிவு தரும் மழையுடனே செல்வத்தையும் உண்டாக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கு அருள் செய்வாள்.

1346. நவாக்கரி சக்கரத்தை பூசை செய்து அறிவாய். உலகத் துன்பம் யாவும் விலகும். பகையை தடுத்து நிறுத்தும். மன்னனும் வணங்கும்படி செய்யும், மனத்தை கலங்கச் செய்யும் துன்பங்கள் ஏற்படாது.

1347. சக்கர வழிபாட்டைச் செய்பவர்க்கு துன்பங்கள் உண்டாவதில்லை. உள் உடல் பொன் ஒளியுடன் விளங்கும். பிற உயிரைக் கொல்லாதவர் என்பதால் பிறவியை அடைய மாட்டார்கள். வாழ எண்ணமுடைய உயிர்களுக்கு இதைவிடச் சிறந்த வழியில்லை முடிவும் இல்லை.

1348. தியானம் செய்தவர் ஒளி பெற்றுத் திகழ்வர். சினத்துடன் எழும் ஆகாமய வினைகளைக் காணாதவர் ஆவார். பரந்து எழும் உள்ளொளி அவர் வாழும் பகுதியில் படரும். அப்பகுதியில் பரவிய இருள் மயமான அஞ்ஞானம் கெட்டு ஒளியைப் பெற்று ஞான மயமாய் இருக்கும்.

1349. ஹௌம் முதல் கிரீம் வரை உள்ள மகிழ்ச்சியைத் தரும் சக்கரத்தை கண்டறிவார்க்கு தெளிவான ஞானமும் மனமும் உண்டாகும். அவர் வணங்கி வழிபடுவது ஐந்தெழுத்துடன் கூடிய நவாக்கரியாகும்.

1350. சதாசிவ மூர்த்திக்கு அருள் சத்தியாய் விளங்குபவள். இவள் கீழ் நோக்கும் சத்தியாக உயிர்களைச் செலுத்துபவள். சுவை, ஒளி, ஊறு, ஓசை, இவற்றை அறியும் அறிவாய்த் துணை இருப்பாள். அருவ நிலையில் எல்லா உயிர்களையும் தன்னுடன் அடக்கிக் கொண்டவள்.

1351. எல்லா உயிர்களையும் தன்னுள் கொண்ட ஈசான மூர்த்தி வடிவில் என்னுள்ளே இடம் பெற்று இருப்பவள். அவளை மண்ணிலும் நீரிலும் ஒளியிலும் காற்றிலும் வானிலும் கண்ணின் கருமணிப் பார்வையிலும் உடலிலும் காணலாம்.

1352. சத்தி உயிருடன் கலந்து நின்று உயிர்களுக்குச் செய்யும் உதவியை காணலாம். அவளை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடி இருப்பவரிடம் கண்பது சிவபேதமின்மையால் காணக்கூடும். உயிர்க்கு உயிராய் இருக்கும் அவள் வழியே உயிர்கள் செயல்படுவதைக் காணமுடியும். அவளிடம் என்றும் பிரியாத வண்ணம் கருத்துப் பொருந்தி நிற்பாய்.

1353. பயிற்சி செய்பவருக்கு ஏழு உலகங்களும் ஒன்றாக கலந்து நிற்கும். எல்லா உயிர்களிடமும் கலந்து பொருந்தி தானாக கண்பர். நிலத்தின் எல்லா இயல்புகளையும் உள்ளவாறு அறிவார். உயிர்கள் வலிய எய்திய வினைகளை விலக்கும் உண்மைப் பொருளாய் விளங்குவர்.

1354. மெய்ப் பொருளான ஒளம் முதம் ஹௌம் வரை உள்ள சக்கரத்தில் சிவம் விளங்க வீற்றிருக்கின்ற அமுதேசுவரி நன்மையைத் தரும் பொருளாக உடல் நடுவில் இருப்பார்.

1355. மூலாதாரம் முதல் பிரம்ரந்திரம் வரை பேரொளியாக இருக்கும் அமுதேசுவரியுடன் மூல வயுவை மெலே கொண்டு வந்து பொருந்தச் செய்தால் நள்தோறும் புதுமைகளை பார்த்தபின் நாடு முதலிய வேறுபாடுகள் இல்லை. நாள் தோறும் புதுமைகளைக் கண்டபின் அவர் உடலுக்கு கேடு ஏதுமில்லை.

1356. மூலாதாரத்தினின்று மேல் நோக்கி எழும் ஒளியை அறிந்தபின் கேடு வந்து சேராது. பேரொளியைக் கண்டபின் நாடு முதலிய வேறுபாடுகள் இல்லை. அமுதேசுவரியின் அருள் வரும் வழியைக் கண்ட பின்னர் உலக துக்க காடும் இல்லை.

1357. நாவ வந்தடைந்த உலகம் தோன்றாதபடி பாழ் செய்து அந்த உலகத்தில் கண்டறிந்த யாவும் வெட்ட வெளியாயிற்று. தானே எங்கும் நிறைந்திருப்பதால் வேறு இடம் இல்லை. உலவுவதற்கு வேறு வழி இல்லை. தான் என்ற பொருளே இல்லை. சலிப்பிற்குரிய இடம் ஏதுமில்லையாதலால் அசையாமல் அனுபவத்தில் நிலை பெறுக.

1358. பயிற்சி செய்பவர்க்கு ஏழு கடலும் முன் நிற்கும். உள்ளத்தில் நினைத்தவை யாவும் முன்னே நிற்கும். சத்தி தன்னிடம் நிலை பெறக் காண்பவர்க்கு தலையின்மீது ஒளிகள் அமைந்து இருக்கும்.

1359. விளங்குகின்ற ஒளியாய் திகழும் ஸௌம் முதல் ஒளம் வரை பீசங்களை உடைய நவாக்கரி சக்கரம் உண்மைப் பொருளாகும். அதில் இருக்கும் மின்னல் கொடி போன்றவளை ஞானத்தை உடையவளாய் அறிந்து இருப்பாயாக.

1360. தெரிய வரும் உண்மைப் பொருளைச் சொன்னால் எங்கும் இருக்கும் சத்தியே அவள். இந்த உண்மையான ஞானப் பொருளை உணர்ந்தவரே சத்தியை உணர்ந்தவர் ஆவார்.

1361. அந்த சத்தி தானே வானம் போல் உருவு இல்லாமல் எங்கும் பரந்து காணப்படுப்வள். தானே அனைத்துப் பொருளுமாகி எல்லாவற்றையும் த்ன்னுள் அடக்கிக் கொண்டவள். எல்லா அண்டங்களும் தானாகத் திகழ்பவள்.

1362. அண்டங்கள் யாவற்றிலும் அளத்தற்கு இயலாதவளாய் இருக்கின்றாள். பிண்டமான உடலில் ஞானம் இருக்கும் பெருவெளியைத் தன்க்குரிய இடமாக கொண்டவள். ஓமம் செய்கின்ற ஓம குண்டத்தில் பல நன்மைகளைப் பெற்றாலும் கண்டத்திற்கு மேல் இருக்கும் நிலையான கலப்பை அறியாதவாராய் சிலர் உள்ளனர்.

1363. சத்தி கடல் சூழ்ந்த உலகம் எல்லாம் கலந்திருப்பதை அறியார்கள். உடலுடன் கூடிய உயிர் உடலை விட்டு ஒருநாள் பிரிந்துவிடும் என்பதை அறியார்கள். சிறு தெய்வத்தை நாடியதால் நாதத்தை அறியர்கள். இதற்கு அவர்கள் தலையெழுத்தே காரணம்.

1364. சுயம்புவாகத் தோன்றிய அந்தசக்கரத்தைப் பற்றிச் சொல்லின் கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக பத்து வரைக. இரேகைக்கு உட்பட்ட அறைகள் ஒன்பதாகக் குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் அறைகள் எண்பத்தொன்?றாய் அமைக்க.

1365. சக்கரத்தில் கட்டங்களுக்கு வெளியான மதி மண்டலம் பொன் நிறம் உடையது. கட்டங்களில் அமைந்துள்ள கோடுகள் சிவப்பு நிறமாக இருக்கும். சத்தியினது எழுத்துக்கள் அடைக்கும் கட்டங்கள் பச்சை நிறமாகும்

1366. பொருந்திய் மரப் பட்டையில் எழுதிய சத்தி பீசங்கள் எண்பத்தோர் அறைகளில் அடைக்க வேண்டும். பின்பு அவிசை நெய்யுடன் கலந்து ஓமம் செய்துபின் உயிர் ஆகுதி செய்ய வேண்டும்.

1367 .இயந்திரத்தில் அமைந்த சத்தி பொன்போன்றவள் பரபரப்பு இல்லாது சிக்கெனப் பிடித்துக் கொள்வாயாக. தியானிக்கத் தொடங்கிய நாளிலே இன்பம் உண்டாகும். வேள்வியின் தலைவனான நான்முகன் சேர்த்தபின் நேயப் பொருளை சிவத்துடன் நன்கு சேர்தலுமாகும்.

1368. அரைக்கப்பட்ட குங்குமச் சாந்து, குங்குமப்பூ, கத்தூரி மணம் எங்கும் பரவும் பல நறுமணங்களின் கூட்டு சவ்வாது புனுகு நெய் பச்சைக் கர்பூரம் பசுவின் கோரோசன்ம் பனிநீர் என்ற ஒன்பது பொருள்களையும் சேர்த்து சக்கரத்திற்குச் சார்த்துவயாக.

1369. சத்தியுடன் உள்ளத்தை வைக்கும் தவத்தை செய்தால் உள்ளே எழும் முதிராத இளங் கொங்கைகளை உடைய வாலைப் பெண்ணைப் பொருந்தி நவாக்கரியாக இருக்கும் இம்மந்திரத்தை ஆயிரக்கணக்கில் உருவகம் செய்க.

1370. உள்ளத்தே இருக்கும் ஒளிவடிவான் தாயும் தந்தையுமான நவாக்கரி தேவிக்கு கைகள் ஆறு. மழு, சூலம், தோட்டி, பாசம், வில், அம்பும், என்பவைகளுடன் கிலீம் பீசத்தை உடைய் தேவி வழிபடுபவர் முன்னாள் வெளிப்படுவாள்.

1371. அம்மையைச் சூழ யோகினி சத்திக/ள் அறுபத்து நால்வர் இருப்பர்.. வாமை, சேட்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரதமனி, சர்வபூததமனி எனும் எட்டு பேரின் இருகைகளிலும் வில்லும் அம்பும் கொண்டு இருப்பர். யோகினி சத்திகள் சக்கரத்தை நோக்கியபடி சுற்”றிலும் இருப்பர்.

1372. பொன்னால் ஆன காதணி, முடி ஆடை முதலானவற்றுடன் காணப்படுவது திருவுருவம். இம்மூர்த்தம் அக்கினியை மேனியாய் கொ?ண்டது. பழமையாகவே தன் பேரொளியை இருப்பிடமாகக் கொண்டு இருப்பவள்.

1373. இதை அறிந்து மனதுள் ஒப்பில்லாத சத்தியை தரிசித்தால் நீக்கமில்லாமல் நிறைந்து அருள்வாள். பின் எங்கும் கலந்துள்ள நாதமும் ஒளியும் ஆன பிரணவம் தோன்றும். உடம்பைத் தாண்டி கீழ் நோக்கி சகசிரத்தளம் இருக்க அருள்வாள்.

1374. பேரொளிவடிவான சத்தி உண்மையை அளிக்கும் தத்துவ ஞானத்தை அடியவரின் குரு மண்டத்திலிருந்து விளங்கச் செய்வாள். அவரிடம் இறைமைக் குணங்கள் இருக்குமாறு இருந்து கருவின் வழி பிறக்கும் செயலைப் போக்கி பெரிய வீட்டு நெறியை அருள்வாள்.

1375. பேரொளி பெருஞ்சுடராய் மேலான ஒளியாகி இருக்கும் தலைவி சூரிய ஓளி போன்ற கன்னியாய் பொன் நிறத்துடன்பூமி தத்துவத்தில் ஒளீயாய் எங்கும் பரந்து நின்றாள்.

1376. சத்தி மேலே தூக்கிய கைகளீல் தாமரை மலரும் குமுத மலரும் கொண்டு இருப்பாள். அபய வரதமான இரண்டு கைகளும் கொய்யும் தளிர்போன்ற அழகுடனும் தனங்கள் முத்தும் பவள்மும் நிறையப் பெற்று நல்ல மணி பொதிந்த ஆடையுடன் இருப்பாள்.

1377. சத்தி மாணிக்கம் பதித்த முடி தலையிலும் சிவப்பு என்ற அணி பாதத்திலும் அணீந்து அருள் வழங்குபவளும் அவளே. புலன்களீன் வழி போகாது அடக்கியவர் மனத்தில் அருள்மயமாய் அவள் எழுந்தருளியிருப்பாள்.

1378. நவாக்கரி சக்கரத்தை சூழ்ந்து பரந்து உள்முகமாய் பரவியுள்ள அறுபது சத்திகளும் எட்டுக் கன்னியரும் சூழ்ந்து நிற்க இரண்டு கைகளிலும் பூக்களைத் தாங்கிச் சிறந்தவர்கள் வணங்கும் ஸ்ரீம் பீசத்திற்குகுரிய செல்லமாக இருப்பாள்.

1379. செல்வமான சத்தியை தியானித்து உள்ளம் வெலியே ஓடாமல் அடங்கி நிற்குமாயின் ஓராண்டில் ஆசைப் பளுவான சுமை நீங்கி திருவருளால் எண்ணியவை கைகூடும். சிவசூரியனிடம் பொருந்தும் செய்ல் நடக்கும்.

1380. பொருந்திய மூலாதாரத்தில் எழுந்த முழு மலராகிய நான்கு இதழ் தாமரையிலிருந்து மேலே பேரொளி பிழம்பான சகசிர தளத்தில் முன் கூறிய சத்தி பரவியுள்ள முழுமைப் பொருளாய் இருந்தபின் மூலம் முதல் துவாத சாந்தம் வரை ஒளிமண்டலம் ஆகிடும்.

1381. இந்த சோதி மண்டலத்துள் சத்தி விரும்பி எழுந்தருளியிருப்பாள். உயிரும் மெய்யும் ஆகிய ஐம்பத்தோர் எழுத்தும் விந்து எழுத்து ஐந்தும் ஆகிய ஐம்பத்தாறு எழுத்துக்களையும் இயக்கும் திறம் உடைய்வ்ள். ஐம்பத்தாறு எழுத்துக்களை இயக்கும் ஐம்பத்தைந்து இயக்கிகள் சூழ நடுவே வீற்றிருப்பாள்.

1382. அம்மையை அருட்கண்ணால் பார்ப்பவர்க்கு முடியிலிருந்து அடிவரை பேரொளி பிழம்பாய் இருப்பாள். அவள் திருமேனி முத்துப் போன்ற வெண்மையாய் இருக்கும். அழகிய கைகள் நான்கில் மஞ்சள் வரையுடைய பைங்கிளியும் ஞான முத்திரையுமாக மேல் ஏந்திய கைகளில் பாசமும் அங்குசமும் கொண்டு இருப்பாள்.

1383. நாதமான ஞான முத்திரையை உணர்ந்து பாசமாகிய வேரை அறுத்து அன்புடன் மனத்தில் சத்தியைத் துதித்தபடி இருந்தால் ஐந்து ஆண்டில் கேடு தருவன எல்லாம் அகன்று மண்ணுலகத்திற்கு மேல் அமர்ந்துள்ள சிவமாகலாம்.

1384. நெற்றிக் கண்ணையுடைய சத்தியின் அருளைப் பெறும் வழியாகி தடையில்லாத நாத தரிசனம் தனக்குள் அமையுமானால் வான் மண்டலத்தில் உள்ள பேரொளி விளங்க ஹிரிங்காரப் பீசத்திற்குரிய சத்தி மண்டலம் அமையும்.

1385. ஹிரீங்க மண்டலத்துள் எழும் பேரொளியைக் கண்டு மனத்தில் நினைத்தால் அது கீழிருந்து மேலே பிளந்து கொண்டு உள்ளே எழும். வீணாத் தண்டில் பொருந்திய யாவற்றையும் தாங்க முடியும்.

1386. கொப்பூழ் தாமரையினுள் ஓங்கி மேலே எழும் பிரணவத்திற்கு உண்ர்வாய் இருப்பவள். வருத்தமுற வரும் பிறவியை எண்ணி நீக்கிட அடங்கியிருந்த நாதம் வலிமையுடன் மேல் ஓங்கி எழுந்து இருக்கும்.

1387. நல்ல மணிகளை அணியாக உடைய வாகீசுவரியும் பொன் முடியும் பொன் ஆடையும் பூண்ட திருமகளும் ஆற்றலை அளித்தருளும் வெண்ணிற ஒளியில் இருக்கும் கலைமகளும் உயிர்களின் தலைவியான மனோன்மணி சகசிர தளத்தில் எழுந்தருளியுள்ளாள்.

1388. சத்தியை வழிபடும் முன்பாக இடைகலை பிங்கலையால் வெளியே போய் பொருளை அளந்த வகையில் சத்தியை வழிபட்டபின் வெண்ணிற அமுத கலசங்களாகப் பொன்னம்பலத்தைத் தரிசிக்க வழியாதலை அறிந்து அங்கு இருந்தவர் தத்துவங்களை இய்க்கிக் கொண்டிருக்கும் சத்தியை காண் வல்லவர் ஆவார்.

1389. காரணிகளான எழுத்து சத்திகள் ஐம்பத்திரண்டு காரணியாக அவற்றை இயக்கும் கன்னிகள் ஐம்பத்து இருவர். காரணி இருக்கும் பொன்னம்பலத்தில் வெளிப்பட்டும் மற்ற தத்துவங்களில் மறைந்தும் இருந்து தன் அறிளால் வழிபடுவோர்க்கு வெளிப்பட்டு அருள்வாள்.

1390. எல்லாவற்றிற்கும் காரணியாய் இருக்கும் இச்சத்தி சகசிர தளத்தில் நிலை பெற்றிருக்க கண்டு ஓராண்டு பயிற்சி செய்தால் உன்னை விட்டு அகலாமல் இருப்பாள். மேற்கொள்ளும் விரதம் குறையாமல் இரும்பின் பரமாகாயத்தில் இருக்கும் சிவகதிரவனைக் காண்லாம்.

1391. அன்பர்களீன் சித்தம் உலகப் பொருளுடன் இருந்தால் சத்தி இதயத் தாமரையிலிருப்பாள். உலகப் பொருளுடன் இல்லாது உலகக் காரணமான விந்து நாத சித்தம் ஆனபோது சிவனையும் உடம்பையும் பிறவியில் பொருந்தியிருக்கும் வாயுவின் கட்டினை நீக்கி உள்ளத்தில் இன்பம் பெருக்குவாள்.

1392. சத்தி தன் எட்டு கரங்களிலும் மலர்ந்த பூ, கிளி, பாசம், மழு, வாள், கேடயம், வில், அம்பு ,ஆகியவற்றைத் தாங்கி ஆரவாரத்துடன் கூத்தையும் விரும்பி நடித்தனள்.

1393. சத்தி பொன் முடியையும் முத்து மாலையையும் விரும்புவள். பவழ மாலையையும் செம்பட்டு உடையையும் உடுத்துபவள். அண்ணாந்து ஏந்திய அழகிய முலையில் கச்சினை அணிந்தவள். அரிய உயிர் இன்பம் அடைந்து உய்ய மலர்ந்த முகத்துடன் இருப்பவள்.அவள் மேனி பரிய நிறமானது.

1394. ப்ச்சை நிறம் கொண்ட இவள் சத்திகள் நாற்பத்தெட்டு. மழலை பேசும் தோழியர் எட்டு எப்போதும் உடன் இருப்பவர்கள் ஆவர். கச்சு அணிந்த கொங்கைகளுடன் இரண்டு பக்கமும் காவல் உடையவளாக மெலிந்த இடையை உடையவளாய் இனிது வீற்றியிருப்பாள்.

1395. மூலத்தில் தாங்கிய பேரொளி வடிவான சத்தியை சுழுமுனை வழி கலந்து கொள் என விருப்பம் ஆக மூலாதார வாயுவை மேலே செலுத்தி தீ காதலனைக் கூடப்போகும் காதலியைப் போல் வான் வெளிக்குச் செல்லுக.

1396. கொப்பூழுக்கும் இதய்த்திற்கும் இடையில் உள்ள சூரியன் க்ண்ணில் இருக்கும் சந்திரனுடன் சேர்வதால் நத சத்தி இருக்கும் ஞானச் சூரியன் ஆனது. அத்வே சந்திர மண்டலத்தின் விரிவாகும்.

1397. விழிக்கு மேல் இருக்கும் சத்திக்கு பத்து திசைகளும் பத்து முகங்கள் ஆகும். தாபத்தை உண்டாக்கும் சூரியன் தன் நிலையை விட்டு சந்திர மண்டலத்தில் மெல்ல அடங்கி வருவதால் ஆபத்தைச் செய்யும் பத்து நாடிக”ள் கீழும் மேலும் செல்வதை விட்டு அடங்கும். .வழிபடுவர்களின் பாசத்தை அறுக்க சூலத்தை பயன் படுத்தினாள்.

1398. சூலப்படை, தண்டு, வாள், பறை, ஒளி தரவல்ல ஞான வடிவான வேல், அம்பு, உடுக்கை, கிளி, வில்தாங்கி, காலம், பூ, பாசம். மழு, கத்தி ஆகியவற்றைக் கைகளில் தாங்கி அழகிய சங்கு அபயம் வரதங்களுடன் இருக்கும் கைகளை நினைத்து துதிப்பாயாக.

1399. வழி பட்டோர் எண்ணத்தில் விரும்பி அமரும் சத்திகள் நாற்பத்து நால்வருடன் உள்ளத்தில் அமர்கின்ற தோழியர் நாற்பத்து நால்வர். எண்ணம் உருப்பெரும் சகசிரதளத்தில் இருந்தவள் உலக எண்ணங்களைக் கடந்தபோது அவள் நின்றாள்.

1400 கடந்து நின்றவள் பொன் முடியுடன் மணி முத்து பவளம் சேர்ந்து செய்யப் பட்ட கச்சினை அணிந்து ப்ரந்த இடுப்பில் பட்டாடை உடுத்தி சிலம்பை அணிந்து வாலை வடிவில் வீற்றிருப்பாள்.

1401. சத்தி த்டையேதுமில்லா மேருவாகவும் அணீமா முதலிய சத்தியாகி பழைய சாத்திர அறிவை அகற்றி பேரொளியைப் பொருந்தி உணர்ந்தார்க்கு உண்மை அறிவு ஊண்டாகும்.

1402. கீழ் நோக்கிய சகசிரதளத்தில் காணப்படுபவளே சதாசிவ நாயகியான மனோன்மணி. அவள் சதாசிவரைப் போலவே முகம் ஐந்தும் கைக்ள் பத்தும் உடையவள்.

1403. நல்ல மணி சூலம், கபாலம், கிளி பல மணிகளையுடைய பாம்பு, மழு, கத்தி ஆகியவற்றுடன் இருப்பாள். மாணிக்கம் போன்ற தாமரை, உடுக்கையும் உண்டு. பொன்னாலும் மணியாலும் அவள் அலங்கரிக்கப் பட்டவள்.

1404. தன்னை வழிபடுகின்ற் சத்திகள் நாற்பதின்மர் சூழ நேசத்தையுடைய பராசத்தி நாற்பது கன்னியர்க்கு நேராக உடம்பில் உள்ள சகசிர தளத்தில் கலந்தவள். குற்றம் ஏதும் வராதபடி மகிழ்வுடன் இருந்தாள்.

1405. பிரண்வத்துள் இருக்கும் பேரொளியைச் சுமையான உடலில் இருந்து உடலில் கடந்து எழுந்திட அதையே தனக்கு ஆதாரம் என உணர்ந்து அதை எண்ணி மனோலயம் பெறுபவர்க்கு ம்ண்ணின்று நீரைப் பருகி எழுகின்ற மேகம்போல் பராசத்தி தலையில் வெளிப்படுவாள்.

1406. சுவதிட்டான சக்கரத்தில் நிலை கொண்ட அ கார உ காரங்கள் சகசிர தளத்தில் சிவயநம என அகக் கண்ணுக்கு புலனாகும்படி விந்து நாதங்களாய் வெளிப்படும். காண அரியது அன்று. நாதம் எழுந்தது பயிற்சியாளருக்கு காட்சி தந்து திருவடியில் வைத்துக் கொள்வதற்கே ஆகும்.

1407. சந்திரக்கலையிடை விளங்கிய அமுதத்தை ஏந்திய கொங்கையையுடைய பராசத்தி அக்கினிக் கண்டத்தில் இடைகலை பிங்கலையால் சுவாதிட்டானத்தில் செய்ல்படும் சுக்கில சுரோணிதத்தைக் கொண்டு அமுதமயமாக மேலே இருந்தாள்.

1408. நீல மலரும் முத்தும் கலந்த குளிர்ச்சியுடைய ஒளியில் ஆனந்தமயமாக இருக்கும் அழிவில்லாத சத்தி அமுதம் போன்ற அழகான மேனியுடன் வெண்ணிற ஒளியாக வெளிப்படு அருள்வாள்.

1409. அழிவு இல்லாத முப்பத்தாறு சத்திகளும் நாடுதற்கு அரிய முப்பத்தாறு தோழியாரும் சக்கரத்தை இல்லமாகக் கொண்டவர்கள் சக்கரத்தின் இதழ்களில் குடியிருந்து இவர்கள் காலவரையைக் கடந்து நின்ற அம்மையைச் சூழ நின்றனர்.

1410. புத்தி தத்துவத்தில் சிவம் நாதமாக நிறைந்து நின்றது. அதன் ஒளியான சோதி உள்ளத்தினின்று நீங்காது இருக்கும். ஓராண்டு சாதனை கூடிவரும்போது முன்பு கூறிய ஒள் காரம் விளங்கியது.

1411. வானில் நிலைபெற்ற அண்டங்களுள் வாழும் உயிர்கள் யாவும் மண் உலகில் வாழ்கின்ற உயிர்களைப் போல் பயிற்சியாளரை வணங்கும். திருமாலைப் போன்று பெறும் இன்பங்களைப் பற்றித் துனபம் தரும் நோய் நிறைந்ததை இங்கிருந்து சொல்ல முடியாது..

1412. மூலாதாரத்தில் கீழ் நோக்கும் முகமாய் இருந்த குண்டலினி சத்தி உ காரத்தை பொருத்தி இடை நாடியில் இருந்து எழும் ஒளியாய் சகசிரதளத்தில் நிலைபெற்று எண்ணங்களை எல்லாம் நிறைவு செய்யும் கற்பக மரம் போல் ஆனாள். அவளே எல்லா சித்திகளையும் அளிக்கும் இலக்குமி ஆவாள்.

1413. பொற் கொடி போன்ற பராசத்தியை வழிபட்டால் செருக்கைத் தரும் அகங்காரம் நீங்கி நிலையான பெருவெளியில் பரமகாயத்தில் பின்னிய கொடி போல இருக்கும் சத்தியைக் காணலாம்.

1414. பராசத்திக்கு எல்லா உயிர்களையும் பேணும் பெண்மையே அழகாகும். சிவமே தந்தையாகும். மாதரசியானவளுக்கு மண்ணுலகம் சிறிய திலகமாய் பல சத்திகள் சூழ மேலே குவிந்த இடத்தில் இருப்பாள்.

1415. சத்திகள் முப்பதிருவர் இருந்தனர். கன்னியான முப்பத்திருவரும் சூழப்பரவிய இதழ்களை உடைய சகசிர தளத்தில் கண்கின்ற பல் இடங்களையும் தனக்கு இடமாக்கிக் கொண்டு எழுந்தருளியிருந்தாள்.

1416. நவக்கரி சக்கரத்தில் உள்ள சத்திகள் கூத்தப் பெருமானின் ஒளியைக் கண்டு ஊர்த்துவ சகசிரதளத்தில் இருப்பர். பெருமானும் சத்திக்ளும் உலகத்திற்கு கரணமாவார்கள். இவர்களை பழைமையான வேதம் அறிந்து கொள்ளத் தேடும். சிவசத்தி என் உடலிலும் மனத்திலும் பொருந்தி என்னை ஆட்கொண்டாள்.

1417. சிவ ச்த்திகள் தாமே வீடாய் அமைந்து ஆளப் பெற்றால் அவர்களுக்கு இல்லாதது ஏதுமில்லை. இந்த தனமையுடையவர் அயலாரிடம் சென்று இருப்பதில்லை. அவர்களுக்கு தேவர்களும் நிகராக மாட்டார். சிவசி=க்தி இவர்களின் ஆன்மாவை இடமாகக் கொண்டுள்ளதால் இவர்கள் இல்லாத இடமே இல்லை.

1418. தத்துவங்களுக்கு மன்னான ஆன்மா அறுபத்து நானகு தறிகளால் கட்டப்பட்டது. ஆன்மாவான பிரணவம் அறுபத்து நான்கு ஒளிக்கதிர்கலால் ஆனது. ஆன்மா அறுபத்து நான்கு கலைகளில் இருக்கும். பிரண்வத்தின் விந்து நாதமான சீவனும் சிவனும் உள்ளனர்.

#####

வெள்ளிக்கிழமை, 08 May 2020 09:45

புவனாபதி சக்கரம்!

Written by

ஓம்நமசிவய!

அறிவின் வரம்பை அகன்றாய் குறிகுணங் கடந்த
குன்றே எட்டு வான் குணத்தெந்தாய் கட்டறு
களிற்று முகத்தோய் மலரில் மணமாய்
வளர்ந்தாய் அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!

#####

புவனாபதி சக்கரம்!

1307. க கரம் முதலிய ஐந்தெழுத்துக்களும் பொன் நிறமுடையவை. ஹ முதலிய ஆறு எழுத்துக்களும் செந்நிறம். ச காரம் நான்கு எழுத்துக்களும் வெண்ணிறம். சு காரத்தை ஆதியாக மூன்று பகுதியாக் உடைய் இம்மந்திரம் இம்மை மறுமைப் பய்ன் இரண்டையும் அளிக்கும்.

1308. ஆராய்ந்து நான் சொல்லுவது இம்மந்திர வடிவான புவனையைத் தவிர வேறு தெய்வம் இல்லை. ஒன்று சொல்வேன் கேட்பாயா. மேகம் போன்ற முக்கோணத்தில் மனம் நித்தியானந்த்தையும் அண்டத்தையும் அகண்டத்தையும் விரும்பின் அது சிவன் வடிவம் என்பதை அறிக.

1309. பராசத்தியே இறைவனுக்கு திருமேனி. அந்த திருமேனி வித்தையாகும். சித்தியையும் முத்தியையும் அளிப்பது. பராசத்தி. ஒருத்தியாய் இருந்தபோது சிவகுருவோடு பொருந்தி நிற்பதில் எட்டு சத்தியாய் திகழ்வாள்.

1310. எட்டு சத்திகளும் எட்டு அங்கங்களையுடைய யோகத்திற்கு அங்கமாகும்.. நாதாந்தம் கூடப்பெற்றவர்க்கு இந்த எட்டும் கலபித்தில் அமையும். விருப்பை விளைவித்து போகத்தில் செலுத்தும் வீரியமும் அற்று நீங்கியது பெண் இன்பத்தில் நாட்டம் உடைய கீழான உயிர்களுக்கு அடைய முடியாததாயிற்று.

1311. பயன் எல்லாம் தருவது இயந்திரத் தலைவன் புவனாபதி சக்கரத்தின் திருவடியாகும். அதை அறிந்து குருவிடமிருந்து மந்திரத்தை பெற்று உடம்பில் நிறுத்தி பயின்றால் ஆன்மா உடலின் மந்திர தத்துவமக நிலைக்க உறுப்புக்கள் சிவனின் அங்கங்களாக கருதி பிறவி வேர் நீங்குமாறு செப்புத் தகட்டில் அறுகோணம் அமைக்கவும்.

1312. அறுகோணத்தில் ஸ்ரீம் ஹரீம் என்ற பீஜங்களை எழுது. அந்தக் கோணம் ஆறின் உச்சியில் ஹிரீங்காரம் இட்டு எல்லாக் கோணங்களையும் சூழ அழகிய வட்டம் எழுதி பின்னர் அதன்மேல் பதினாறு உயிர் எழுத்துக்களை அ முதற் கொண்டு எழுது.

1313. செல்லப்பட்டபடி எழுதப்பட்ட இதழ்களில் நடுவில் உள்ள வெளியில் எட்டு ஹ எனும் எழுத்தையும் உ எனும் எழுத்தையும் சேர்த்து ஸ்ரீ எழுதுக. இதழ்களின் மேலே கிரோம் சிரோம் என்பவன வற்றை எழுதி அதன் இடப்பக்கத்தில் ஆம் கிரோம் என எழுதுக.

1314. சக்கரத்தின் மீது வலப்பக்கத்தின் மீது மாலையைப்போல் கிரோம் சிரோம் என எழுதி. குற்றம் இல்லாத ஹிரீம் என்ற பீசத்தை சக்கரத்தைச் சூழ்ந்து புவனாபதி சத்தியை பூசை செய்க.

1315. வழிபடும்போது புவனாபதியைக் காமம் முதலான குற்றங்கள் நீங்கிய உள்ளத்துடன் இருக்க வேண்டும். என வேண்டி அதற்குரிய மந்திரங்களை சிந்தித்து உயிர் கொடுத்து அங்கு நிறுத்தி ஒளி விளங்குமாறு தியானம் செய்யவும்.

1216. சிவந்த மேனியை உடைய செந்நிறப் பட்டிடை உடுத்தி கையில் அங்குசம் பாசம் அபய வரதத்தையும் கொண்டு திருமேனியில் அணிகலன்களையும் மணி அணிகளையும் அணிந்து தூய முடியுடைய வடிவுடன் இருப்பாள்.

1217. உடம்பைக் கடந்து ஓளி மண்டலத்தில் நின்று துதித்து முறைப்படி பூசை செய்து பால் சோற்றை மந்திரத்தால் செபித்து நான்கு திசைகளிலும் நாரதாய சுவாகா எனச் சொல்லி நிவேதித்து பிரசாதத்தை உண்க.

1218. படைக்கப்பட்ட படையலை உண்பதற்கு முன் தேவி உன்னுள் கலந்திருப்பதாகக் கண்டு இதய் கமலத்தில் பொருத்தி யாவராலும் கண்டறிய முடியாத புவனாபதியை மனத்துள் கொண்டு வழிபடுக. அவள் நீ நினைத்ததை அளிப்பாள்.

#####

ஓம்நமசிவய!

தொந்தி வயிற்றுத் தந்தி முந்திய பொருட்கும்
முந்தியோய் ஐந்துகையுடைய ஐய ஐந்தொழில்
ஆற்றும் அமர அருளாய் அருள்வாய் ஆண்டவ
தருவாய் மணமலர்த் தாராய் போற்றி! போற்றி!

#####


சாம்பவி மண்டலச் சக்கரம்!

1297. சாம்பவி ச்க்கரம் பற்றி சொல்வதனால் எட்டு இதழ் தாமரையின் சிறந்த பகுதியாய் இருப்பவை விந்து நாதம் சத்தி சிவன் என்ற நான்காகும்.. இவற்றில் கண்ணாகக் காண்ப்படுவது விந்து. இதை உணர்ந்து நடப்பவர்களை உலகதார் அறிந்து வழிபடும் நிலை உண்டாகும்.

1298. உலகறிந்த மண்டலமான இச்சக்கரத்தில் கோணல் அகல இரண்டு பக்கங்களிலும் வீதிகளை அமைக்க வேண்டும். சிறந்த எட்டு இதழ் தாமரை நடுவில் உள்ள பதினாறு வீதிகளில் இதழ்கள் அகல் நான்கு பக்க மூலைகளும் அவற்றில் இடை இடம் நான்கும் நடு இடமும் ஆகும்.

1299. இச்சக்கரம் இருபது அறைகளை கொண்டது நடுவில் லிங்க வடிவம் நான்கு நாற்கோணங்களில் நான்கு நான்கு இலிங்கம் இடைவெளி. நான்கில் நான்கு பூக்கள் நடுவிலும் பூ என அமைய வேண்டும்.

1300. நடுவீதியில் க் காரம் முதம் ஷ் காரம் வரையுள்ள் முப்பத்தைந்து எழுத்துக்களையும் சிவய்நம் என்ற ஐந்து எழுத்தையும் மாறுபட்ட நிறத்தில் வல்மாக எழுத்வும். இதுவே தூய்மையான சிவயநம என்றாகும். தெ/ளிந்தபின் பயிற்சியாளருக்கு குறை ஏதுமில்லை.

1301. சொல்லியவாறு சொல்லில் குறையேதும் எற்படாமல் ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த திருவடியை அடையலாம். வேதத்தின் கூற்றில் பிரணவத்து ஒலியே என்று உணர்வார்க்கு இறப்பு உண்டாகது. என உரைத்தனர்.

1302. வெளியில் காண்ப்படும் பொருளும் உள்ளே மனத்தில் காணும் தெய்வமும் போற்றப்படும் ஊரும் நன்மைக்ள் பெருகும் புண்ணிய தீர்த்தமும் உண்வும் உணர்வும் உரக்கமும் முய்ற்சிக்காமலே வந்தடையும் பொன்னும் ஆகிய்ன இச்சாம்பவியால் உண்டாவன.

1303. ஐந்தெழுத்து தோன்ற இடமான நாதமாகிய் ஒசையின் வழி போகும் இடமான உச்சித்துளை வழி சென்றால் தாம் எண்ணிய செயல்கள் எல்லாம் செய்ய முடியும். உலகத்தில் பகைஎன யாரும் இருக்க மாட்டார்.

1304. சாம்பவி மண்டலச் சக்கரத்தை வணங்குபவரிடம் பகை இல்லை. நகைப்புக்குரிய நிகழ்ச்சிகளும் இடம்பெறா. நாள்தோறும் நன்மைகள் உண்டாகும். தீவினைகளும் அவற்றால் உண்டாகும் பிறவியும் இல்லாமற் போகும்.. தடை ஏற்படாது. நீர் போல் குளிர்ந்த குணம் உடையவராக இருப்பர்.

1305. சாம்பவியை ஐந்தெழுத்தால் வணங்கலாம். எவரும் அறியாத ஆனந்த வடிவம் உண்டாகும். நிலம், முதல் வானம் வரை சூரிய சந்திர மண்டல்ம் ஆகவும் மேலான உடலில் உயிராகவும் உயிரில் உணர்வாகவும் விளங்கும்.

1306. சிவாயநம என சிந்திப்பவ்ர்களுக்கு உள்ளே உந்தியினின்று தலைமுடிய பிரணவம் தோன்றி எழும். அந்த பிரணவமே ஐந்தெழுத்து வடிவான முதல் நிலையாகும். சிவனும் சத்தியும் நாத விந்து தத்துவங்களின்று உடலைக் கொண்டு வரும். திரும்பவும் சத்தி சிவத்தை எண்ணியபோது தத்துவங்கள் விந்துவிலும் விந்து நாதத்திலும் இலயம் அடையும்.

#####

வியாழக்கிழமை, 07 May 2020 11:25

வயிரவச் சக்கரம்!

Written by

ஓம்நமசிவய!

கயமுக அசுரனைக் காய்ந்தாய் மயலறும் இன்ப
வாழ்வே ஆனையாய்ப் புழுவாய் ஆனாய் பானை
வயிற்றுப் பரமே கடம்பொழி யானைக் கன்றே
மடம் ஒழி அறிவின்வளவனே போற்றி! போற்றி!

#####


வயிரவச் சக்கரம்!

1291. வளர்பிறை ஒன்று முதல் ஆறு வரை ஆறு ஆதாரங்களிலும் காணப்படும். திதிகள் ஆகும். இதை அறிந்து மேலே எழாம்பிறை முதல் பொருந்தும் பிறைகளை ஒன்றுவிட்டு ஒன்றாய் எண்ணி எழு என்பதை விட்டு எட்டும் ஒன்பதை விட்டு பத்தும் பதினொன்றைவிட்டு பன்னிரண்டும் பதிமூன்றைவிட்டுப் பதனான்கும் ஆகிய நான்கும் முதலில் சொல்லப்பட்ட ஆறும் மொத்தம் பத்து ஆகும். பகை வெல்வார் புறப்பட்டுச் செல்கின்?ற புலத்தை தம் வலப்பக்கம் அமையும்படி தியானம் செய்தால் பலன்.

1292. வயிரவரைத் தியானம் செய்பவரின் மனத்தில் தோன்றுவார். அவர் சூலத்தையும் கபாலத்தையும் ஏந்தியவராக் இருப்பார். பகைவனை வென்று அவன்மீது அருள் காட்டாது உயிரை தோண்டி எடுக்கும்போது அப்பகைவரது உடலைப் பந்தாடலாம்.

1293. உயிர்களின் பக்தியை மேற்கொண்டு அவை விரும்பும் வண்ணம் திருவருள் செய்பவர் பைரவர். இரண்டு கைகளில் கபாலமும் சூலமும் ஏந்தி தமருகத்தையும் பாசத்தையும் மற்ற இரண்டு கைகளில் தண்டிப்பதற்காக கொண்டிருப்பவர். ஐந்து ஆறாம் கைகளில் தலையும் வாளும் உடையவர்ரய் இருப்பார்.

1294. ஆறு கைகளயும் அவற்றில் பொருந்திய ஆயுதங்களையும் மனம் பொருந்தி தியானிக்க பெருமான் செந்நிறமாக காட்சி தருவார். தூயவர் மனத்தில் விளங்குவார். ஒளியைப் பொருந்தி நிற்கும் அவரை உடலைக் கடந்து பூஜை செய்க.

1295. பெருமானை ஆயிரம் உரு செய்து வழிபடுக. பூசைக்கு நல்ல தேனை விரும்பி படைக்க பூசைக்கு சாந்து புனுகு சாத்தி பகை நீக்கம் செய்க.

1296. விரும்பும் வண்ணம் பகைவர்களுக்குள் கலகம் உண்டாகும். விரும்பிய அறு செயல் கலையை உண்மையாய் பெற்ற பின்பு விரும்பியபடி நடக்கலாம். வேண்டிய எல்லாம் கிடைக்கும்.

#####

வியாழக்கிழமை, 07 May 2020 11:24

ஏரொளிச் சக்கரம்!

Written by

ஓம்நமசிவய!

பாலொடு தேனும் பருகுவோய் மேலொடு கீழாய்
மிளிர்வாய் எய்ப்பில் வைப்பாய் இருந்தோய்
மெய்ப்பொருள் வேழமுகத்தாய் நால்லார்க்
கெட்டும் நாதா பொல்லா மணியே புராதன போற்றி!

#####

ஏரொளிச் சக்கரம்!

1255. மூலாதாரத்தில் எழும் நான்கு இதழ்களையுடைய் தாமரை மிக்க ஒளிவுடையது. தூல விந்து மாற்றி அமைக்கப் படுவதால் எழும் ஓளி தலையில் நாதமாக அமையும். எழும் அக்கலை எங்கும் நிறைந்தபின் அதன் மையத்தில் தீ மயமான சிவம் நிற்கும்.

1256. மூலாதாரத்தில் உள்ள வ ச ஷ ஸ ஆகியன பெருவ்ல்லமை கொண்ட எழுத்துக்கள். மண் முதல் எழுந்து வான் வரை வளரும். அவை பெருமையுள்ள சக்கரமாய் அமைந்ததால் அது அமைக்கின்ற விதத்தை சொல்வோம்.

1257. வீரியமாய் கீழே இருந்ததை மாற்றி அமைக்கப்பட்டு பன்னிரு கலைகளையுடைய சூரியன் சிரசில் இருக்கும்.. அக்கினியாகிய வ ச ஷ ஸ என்பவை இங்கு ஒலிகளாகப் பொருந்தும். மூலாதாரம் முதல் இடைகலை பிங்கலை சுழுமுனை ஆகிய நாடிகளில் பொருந்தி மேலேறும். ஆதனால் நூற்று நாற்பத்தி நான்கு கலையாற்றலாக சிரசில் வட்டமாக தோன்றும்.

1258. அம் என்பதை விளக்க சந்திரமண்டலம் மேலே அமைந்து அந்த ஒளியுடன் நாதமும் ஓங்கி நிற்கும். சிரசில் சந்திரமண்ட்லம் சிறப்புடன் இருந்தால் பூமி தத்துவம் நுட்பமாய் அங்கு அமையும்.

1259 மேலே இருக்கும் மண்டலம் உலகமாய் விரிய அங்கிருக்கும் நாதங்கள் உலகமாய் விரியும். அதற்குள் இருக்கும் இறைவன் சங்கற்பமே உலகமாய் விரியும். சந்திரன் சூரியன் மண்டலங்களில் உள்ள நுட்பமான ஒளியே பருவுலகமாய் விரியும்.

1260. அகரக் கலை விரிந்து விந்துவும் நாதமாய் விரிந்து அதில் சக்கரம் விரிந்து இருக்கும். முதலில் காணப்படுவது பூமி தத்துவம். மேலும் விரிந்தால் நீர்மண்டலம் அமையும்.

1261. சக்கரம் நீராய் விரிந்து அதில் தீ தத்துவம் இருந்தது. நீருக்குப்பின் காற்றுத் தத்துவம் அமைந்து அதன்பின் வான் தத்துவம் தோன்றியது.

1262. ஆகாசத்திற்குரிய அடையாள எழுத்தை சொன்னால் வான் பீச எழுத்தானது. அ கரமான கலையாகி அதனால் சிவானந்தம் உண்டாகும் என்பதை உணர்க.

1263. சக்கரம் பத்து ஒளிவட்டத்தால் ஆன இச்சக்கரத்தை நாதம் முதலாகக் கொண்டு அறியலாம். அந்தந்த மண்டலத்திற்குரிய தலைவர்கள் அங்கே உள்ளனர். இறுதியில் சிவசூரியன் உள்ளது என்பதை அறிவாய்.

1264. ஆறு சக்கரங்களில் உள்ளது பிரணவமான ஆதி எழுத்தாகும். மேல் உள்ள நான்கு சக்கரங்களிலும் சூரியன் சந்திரன் சேர்க்கையால் ஆத்ம சோதி மண்டலத்திலிருந்து எழுத்து வடிவம் தோன்றும்.

1265. மூலாதாரம் முதலாக உள்ள சக்கரங்கள் நூற்று நாற்பத்து நான்கு கலைகளாக விரியும் ஆறு ஆதாரங்களுக்கும் நடுவில் தோன்றி எழுவது தீ இருக்கும் அக்னி நாடியாகும். வன்னி எழுத்துக்கள் ஆறு ஆதாரங்களுடன் சேர்ந்து முதலாகவும் முடிவாகவும் திகழும்.

1266. அந்தமான எழுத்துக்கள் முடிவாகிய சூக்குமம் முதலிய தூலமும் நீங்க விசுத்தி அஞ்ஞை சக்கரங்களும் முடிகின்றன. பதி மூன்றாம் எழுத்தான ஓ கரத்தில் அமைந்தபின் அதன் மேல் உள்ள மண்டலத்தில் ஏறிக் கடப்பதே முடிவு.

1267. அத்தகைய காலம் முந்நூற்று அறுபது நாள்கள். பதினைந்து நாட்கள் பட்சமாகும். ருது ஆறு. மாதம் பன்னிர/ண்டு.இவை சிவ சூரியன் இயக்கத்தால் வந்தவை.

1268. பகல் இரவு காலங்கள் ஆறு ஆறு நாழிகைகளாக இருக்கும். இராசியும் முப்பது கலைகளாக வரும். ஆண்டுக்கு முந்நூற்றறுபது கலைகள். இதை வகுத்துப் பார்த்தால் சூரியன் செல்லும் பன்னிரண்டு ஓரைகள் இருக்கும்.

1269. அந்த இனம் மூன்றும் மேடவிதி. மேல் ஓங்கிய மூன்றும் இடப வீதி. மற்ற இன்மான மூன்றும் த்ழைக்கின்ற தண்டுடன் கூடிய மிதுன வீதி. ஒரைகள் எல்லாம் இம்மூன்று வகையாகும்.

1270. சூரியன் வீதியாய் இருக்கும் சகசிரதளம் நிறைந்து விரிந்த பின் அது விந்துவாகி ஒளிமயமானது. நாத இயக்கம் ஒத்து அமைந்தபோது அதுவே சகசிரதளம் நிற்கும் இடம்.

1271. தீ சூரியன், சந்திரன் கண்டத்தில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் அவை அவை தன்மைக்கேற்ப அசைவை கீழே தூலத்தில் அமைத்து சூக்குமத்திலும் அமையும். இதுபோன்று சிரசில் அமையும் சந்திர சூரிய அக்கினி மண்டலங்கள் ஒப்ப வளர்ந்த பின் ஆன்மா என்ற தாரகை முழுவடிவமாம்.

1272. சகசிரதளம் நாள்மீன்களின் ஒளிகளால் ஆனது. நாள்மீன் ஒளிகளுக்கு மேல் பேரொளியின் பிழம்பாய் சிவம் இருக்கும். நாள்மீன் ஒளியில் சந்திரன் அறிவும் சூரியன் அறிவும் சேர்ந்து இருக்கும் .இது தாரகையின் சமஷ்டி அறிவு ஆன்மா ஆகும்.

1273. சக்கரம் இவ்வாறு ஒளி வளர்ந்து ஆனது ஆகும். ஒளிக்குப் புற எல்லையில் நாதம் தோன்றும். தீக் கொழுந்து தீபத்தைப்போல் ஒன்றாகி இருக்கும் பின் கருமையான ஒளியாய் மாறும்.

1274. எல்லா உயிரிலும் சூழ்ந்த அண்டமே பிரபஞ்சத்தில் கலந்துள்ளது. ஊழி முடிய இவை நிலையாக இருப்பதைக் கண்டால் இந்த அண்டகோசமே சீவர்களின் மூலம் போன்றது. அண்டம் ஒளிமயமாய் ஆவதால் அதற்கு வலிமை கிட்டும்.

1275. எல்லா உயிர் பொருளிலும் சூழ்ந்திருக்கும் அண்டமே உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது. ஊழி முடிய நிலையாக உள்ளத்தைக் காணும்போது இந்த அண்டகோசமே உயிர்களின் மூலம் போன்றது. இந்த அண்டம் ஒளிமயமாக ஆவது அதற்கு வலிமை சேர்ப்பதாகும்.

1276. விந்துவும் நாதமும் ஒத்து இருந்தால் வான் கூற்றான அண்ட கோசத்திற்கு விதையைப் போல் இருக்கும் ஒளி குறைந்து நாதம் மட்டும் எழுந்து நின்றால் ஒளியைவிட ஒலி எட்டு மடங்கு கூடுதலாகும்.

1277. ஒளி அணுக்கள் இரண்டு வகை. ஒன்று மேலே போய் அண்ட கோசத்தில் விந்து நாத மண்டலங்களை அமைக்கும். இந்த ஒளி அணுக்களும் நாத அணுக்களும் ஒன்றான பின்பு அண்ட கோசமானது விரிவாகி விந்து மண்டலங்கள் ஆகும்.

1278. விந்து விரிந்தால் வீசம் அளவு ஒளி அணுக்கள் மறையும். விந்து விரியும் தன்மைக்கு ஏற்ப நாதமும் அமையும். விந்துவைக் கட்டுப்படுத்தினால் எட்டும் எட்டுமான சந்திரக்கலை அமையும். ஒளி மண்டலத்தில் விரிந்து ஒளி பீஜங்களாய் இருக்கும்.

1279. தோன்றும் எல்லாம் ஒளியைக் கார்ணமாய்க் கொண்டவை. விந்துவால் விளைந்த உயிர் இந்த உலகம் எல்லாம் விந்துவைக் காரண்மாய்க் கொண்டே உண்டாயின. விந்துவின் காரண்மாகவே சிவத்தின் திருவடி இருக்கும்.

1280. எல்லா எழுத்துக்களுக்கும் மூலமான பிரணவம் விந்து நாதத்தால் ஆனது.. சிரசில் சக்கரமாக அமைந்து பிரணவம் உடம்பினுள் நிற்கும். எல்லா எழுத்துக்களும் சேர்ந்த மந்திரமாகும்.

1281. மந்திரம் சக்கரம் ஆகியவைப்பற்றி சொன்னால் உள்ளே காணப்படும் பிரணவ ஒளிவட்டமே உபாயங்களாகும். கண்டத்தில் வைகரியாய் நிறுத்தி எண்ணுவதிலும் தகடுகளில் ரேகை கீறி காண்பதிலும் பயன் இல்லை.அசைவாக் இருக்கும் பிரணவத்த்டை முதன்மையாகக் கொண்டு தியானம் செய்யவும்.

1282. அகவழிபாடாகச் செய்யப்படும் பிரண்வ வட்டத்தில் பொருந்தி விளங்கும் மந்திரம் பிறகு இடப்பட்ட சக்கர கோடுகளை விட்டுத் தவறுவது இல்லை. தன் பொருட்டு உண்டான தடைகளான அஞ்ஞானம் சேர்ந்திடச் சொல்லப்பட்ட மந்திரத்தை ஆராய்தல் ஆகும்.

1283. பிறப்பு இறப்பு பகையை அறுக்கும் தன்மை கொண்ட சக்கரத்தை பார்க்ககூடும் உள்ளத்தில் எங்கும் காக்கவும் கூடும். நுட்பமானவற்றுக்கெல்லாம் நுட்பமான சிவத்தை அன்புடனே பார்த்து உள்ளபடி உணர்பவர்க்கு அதை அடையவும் முடியும்.

1284. சொன்ன ஏரொளிச்சக்கரத்திற்கு முதல் எழுத்து அ காரமாகும். அதன் மேல் எழுத்துக்கள் அம்மை எழுத்து உ காரம் ஆகும். இந்தச் சக்கரத்தில் மாயா செயலான நிலம், நீர், நெருப்பு, காற்று எனும் நான்கு பூதங்களும் பொருந்தும். எல்லாம் கூடி நிற்கும் சக்கரத்தை பற்றி சொல்ல முடியுமோ.

1285. ஐந்தெழுத்துடன் கூடியது மாரணம். மாறுபட்ட இயல்புடையதாய் மதிப்பவருக்கு சொல்லப்பட்ட சக்கரத்துடன் எழும் மந்திரமனது ஆறு செயல்க்ளை செய்து விரியும்.

1286. எல்லா உயிர்களுக்கும் அருள் செய்பவள் எனப்படும் அம்மை குறித்த சக்கரத்தின் முதன்மையானவள். பயிற்சி செய்பவருக்கு பகையை வெல்லத் துணை செய்ய அன்னை ஒத்து வருவாள். அம்மை காரணமாக உடன் வரும் ஐம்[பூதங்களும் தொழில் செய்யும். அவளது ஆணையின்றி அவை எதுவும் செய்யாது.

1287.தேடித் தெளிவு கொண்ட அடியார்க்கு உண்டான தம்பனம், மாரணம், வசியம் ஆகியன இயல்பாகவே வந்து பொருந்தும். அவர்கள் இருப்பிடத்தில் பகைவரும் வந்து இருக்க மாட்டார்.

1288. மூலாதாரத்தில் இருக்கும் சக்கரத்தை தெளிந்தி அறிந்து கொண்டால் கனிந்த குழைவான அ காரத்தை அந்நடுவில் குளிர்ந்த குண்டலினியின் சுற்று வட்டத்தில் வைத்து மூலவாயுவை அங்கிருந்து சுழுமுனை வழியாக உயர்த்தி கொணரலாம்.

1289. கால் அரை முக்கால் முழு என்னும் பிரணவம் சுழுமுனை மார்க்கமாய் பொருந்தி எழுவதாய் பரந்து விரிந்து காமம் முதலான ஆறு பகைகளும் கெடும்படி நிலைத்தபின் விருப்பைத் தரும் இம்மந்திரம் மாறிக் கொள்வார்க்கு ஆகும்.

1290. கூத்தனின் எழுத்தான பிரண்வ மந்திரம் முன்பு வெளிப்படாது நின்று உள் நாக்குப் பகுதியிலிருந்து அதன் பகைவர்களை மாற்றி வெளிப்பட்டுத் தலையை நோக்கிச் சென்று சகசிரதளம் விரியுமாறு ஒளியுடன் இருக்கும். அவ்விடத்தில் இருப்பது சிவன் என்பதை உணர்க.

#####

புதன்கிழமை, 06 May 2020 16:51

ஆதார வாதேயம்!

Written by

ஓம்நமசிவய!

அறிவின் வரம்பை அகன்றாய் குறிகுணங் கடந்த
குன்றே எட்டு வான் குணத்தெந்தாய் கட்டறு
களிற்று முகத்தோய் மலரில் மணமாய்
வளர்ந்தாய் அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!

#####


ஆதார வாதேயம்!

1155. நான்கு இதழ்களைய்டைய மூலாதாரத்திலிருந்து ஆறாம் ஆதாரமான ஆஞ்ஞைக்கும் இடையே தொண்ணூறு உணர்வு சத்தி நரம்புகள் உள்ளன். இடையில் உள்ள சுவதிட்டானம்-6 மணிபூரகம்-10 அநாகம்-12, விசுக்தி-16 ஆக நாற்பத்தி நான்கு இதழ்கள் உள்ளன. ஆணாகவும் பெண்னாகவும் திகழும் ஆஞ்ஞை சக்கரத்தில் அருளம்மை மற்ற ஆதாரங்களில் இருந்தும் தாங்கியும் உள்ளாள். சிவன் ஆஞ்ஞையில் இருக்கும்போது ஒன்று செயலைச் செய்வது மற்றது அச்செயலை அறிவது என செய்லபடுவதால் நான்கு வகை ஆதாரங்களின் தொகுதி88+ஆஞ்ஞாஇயில் இரண்டு=90.

1156. தன்கீழ் உள்ள ஆதாரங்களின் அறிவை அறிய சக்தி தன் திருமேனியில் ஆறு ஆதாரங்களையிம் கொண்டிருக்கின்றாள். தன் அறிவைச் செலுத்த மூலாதாரம் வரை நரம்புத் தொகுதிகளை விரித்திருந்தாள். அவள் கண்டத்திற்கு கீழ் உள்ள ஐந்து சக்கரங்கள் இயக்கத்தை கவனித்தபடி இருக்கின்றாள். மேல் நோக்கு உடையார்க்கு இவை செயல்படாமல் தடுத்து இருப்பாள்.

1157. அறிவானது கண்டத்திற்கு கீழேயுள்ளவற்றை அறிய்வேண்டும் என்ற விருப்பம் சிவத்திற்கு இல்லாதபோது சத்தியும் சிவனுடன் அறியும் சிற்சத்தியாய் சம்மாய் திகழ்வாள். இப்படி சம்மான நிலையில் உள்ளபோது ஒளி வடிவான அந்த அன்னையைத் தியானித்தாள் செயல்வழியான சத்தி நிலை கெட்டு துன்பம் விலகும். உடலைத் தாண்டி வெளியில் வந்து விளங்குவீர்.

1158. வெளி வானத்தில் நிகழும் சிவத்திடன் பொருந்தியவன் இரண்டு பிரபைகளீனால் சசிகரதளத்தில் ஏற்படும் இன்பம் பொருந்த மண்முடைய மலர்களை அணிந்த மங்கையர் உள்ளத்தில் இடம் பெறாதவன படடைப்புச் செயல் முடிந்தபின் இறைவனுடன் சமமான சத்தியை விரும்பியபோது அவளைப் போன்றே பெண் தன்மையை அடைவான்.

1159. ஒரு பெண் மற்றொறு பெண்ணை விரும்பி ஆசையினால் சேர்வது அறியாமை. பராசக்தியான பெண்ணுக்கு ஆண்மையும் உண்டு. பெண்ணும் ஆணுமாய் இருப்பவளே பிறவியின் இஅயலபை அறிந்து பெண்ணுடன் ஆணும் கூடியபோது பேச்சின்றி நிற்பர்.

1160. சொல்லைக் கடந்த குற்றமற்ற ஒளி வடிவான பொருள் மனோன்மணி மங்கையான சினம் இல்லாத ஒளியுடன் கூடி என் மனத்துள் தானே ப்குந்து மகிழ்ச்சியை தந்தது.

1161.மூலாதாரத்திலிருந்து சீவன்களுக்கு மகிழ்வைத்தரும் வாலை சிவத்திற்கு வேறாக இருந்து உலகத்தை விளக்கும். பார்வதி மனோன்மணி சத்தியானபோது எல்லா உயிர்களையும் காத்து உலகில் எங்கும் பரந்த பெண் வடிவமாய் ஐந்தொழில் தலைவியும் பிராணவ வடிவுமான சத்தியை மகிழ்வூட்ட்ச் சிவன் மகிழ்ந்து நின்றான்.

1162. சிவன் நெற்றிக்கண்ணுடன் மகிழ்ச்சியுடன் இருந்தான். ஆன்மாக்களாகிய நம்மிடம் எழுந்தருள விரும்பி இருந்ததால் உலகங்களில் விரும்பி இருந்தான். சத்தியின் தோளைத் தழுவி போகியாய் நின்றான்.

1163. பெருத்த கொங்கைகளையும் மென்மையான இடையையும் புள்ளிகள் பரவிய தேமலையும் உடையவள். தூய மொழி பேசுபவள் மயில் தோகை போன்ற அழகிய திருவடியை உடையவள் பாலை போன்ற பராசத்தீயை அடைந்தமையால் ஏற்பட்ட சிறப்பை சொல்லமுடியாது.

1164. தீ மண்டலமாய் இருக்கும் காமபீடத்தின் வல்லபத்தை எவராலும் அளவிடமுடியாது. அளந்து அறிய முடியாமலேயேமக்கள் திகைப்புடன் இருக்கின்றனர். வினை போகத்தை வெல்ல அரிதாகும்படி ஒப்பற்றவளாய் விளங்கும் ஆற்றல் வாய்ந்த சத்தியான் மனோன்மனியைப் செயல்படாது நிறுத்த இயலது.

1165. மனோன்மணியே பெரிய பூதங்களைத் தாங்கி வானமாய் நிற்பவள். அவளே சந்திரனாகவும் சூரியனாகவும் கடும் தீயாகவும் இருக்கின்றாள். அவளே அருள் பொழியும் சத்தி கயிலாயம் என்ற சிரசில் வடபாகமாவும் குளிர்ந்த கடல்நடுவே உள்ள வடவைத்தீயான காம்மாகவும் இருக்கின்றாள்.

1166. நெற்றியில் கண் உடைய சத்தியை கூடி மதி மண்டலத்திற்கு அளீத்த ஞானியர் பூ உலகத்தவர் ஆனாலும் தெய்வ குணம் பொருந்தியவர். தெய்வத் தன்மை பொர்நுதியவர் ஆவர்.பதைப்பு ஏதுமின்றி அவர்கள் வான்மண்டலத்தவரை சூக்குமப் படைப்பினால் கண்டு இருப்பர்.

1167. வாலை என்ற பெயருடன் குண்டலின் எல்லா திசைகளிலும் பரந்து நிற்பவள். உடல் உற்பத்திக்கு முன் எல்லா திசைகளிலும் இருக்கும் பராசக்தி ஆவாள். கிழேயிருந்து குண்டலினி மேலே சென்ற போது உயிரைப் பிரித்து சசிகரதளத்தை இடமாகக் கொண்டு எல்லாத் திசைகளிலும் உள்ளவர்கள் தொழும்படி செய்தாள்.

1168. கன்னி ஒளி போன்று விளங்கிய சந்திரன் பொருந்தியுள்ள இடம் செந்நிறம் வாயந்த சுவதிட்டானம். சந்திர பதினாறு கலைகள் நிரம்பிய போது இருக்கும் இடம் சிரசாகும் பராசக்தி போற்றியிருக்கும் இடம் இதுவே.

1169. சத்தி எல்லாவகையிலும் எல்லாவற்றையும் தாங்கி நிற்பவள். முதன்மை அளவாய் இருப்பவள் இரவில் இருக்கும் சத்தியாய் உருத்திர ஆகமத்தால் தெரிவிக்கப் படுபவள். குருவாய் வரும் அவள் வடிவங்கள் எல்லாம் உணர்ந்தேன்.

1170. ஏழு ஆதாரங்களிலும் யோகினி சக்திகளை உணர்ந்து உயிர்களுக்கு உணர்த்துபவர். மனத்தில் உள்ள ஈசன் இவர்களைக் கூடி பெண் போகம் உலக போகம் வித்தியா போகம் பொருந்திப் பரம் என்ற பெயரை உடையதாய் இருக்கும்.இந்த சக்திகளின் தொகுப்பே பராசக்தி.

1171. சத்தியும் சிவபெருமனும் வான்கலப்பில் சேருவதால் அதனால் விளையும் யோகமும் போல் இருந்தனர். இன்பம் பொருந்திய சுழுமுனையில் இருக்கின்/ற மங்கையே அக்கலவியும் யோகமும் ஆகும்.

1172. யோகத்தை விளக்கும் நல்ல சத்தி ஒளியை பீடமாகக் கொண்டு திகழ்வாள். யோகசக்தி பெற்ற முகம் தென்பகுதி என்ற வலக்கண் ஆகும். யோக நற்சத்தி சந்திரனாக இருப்பது வடக்கான இடக்கண் என்க.

1173. தேர்ந்து எழும் மேலான சிவாக்கினியைத் தூண்டி ஒளி பீடத்திற்குச் சென்றால் ஒழுகும் இயல்புடைய மாயை முடிவு பெறும். அறியப்படும் விந்து நாதங்கள் பெருகச் சுழுமுனை நாடியில் வளைந்து செல்லும் குண்டலினியும் முளைத்து எழுவாள்.

1174. ஆறு ஆதாரங்களிலும் பராசக்தியே அகரக்கலை பதினாறையும் பொருத்தி இருப்பவள். ஆறு ஆதாரங்களும் அவளாய் இருந்தாலும் ஒன்பதாம் கலை வரையில் அதிக விரிவு பெற்று விளங்காத நிலை. கலை வடிவாய் அமைத்து விரிந்த உலகத்திலும் பரத்திலும் கலந்திருக்கும் நிலையே பரவாதனை எனச் சொல்லப்படும்.

1175. திருவருளின் கலையைப் பயில்வதர்கு பராசக்தியே இருபத்தேழு விண்மீன்களாய் விளங்குவதை அறிந்து அதற்கேற்றவாறு சிரசில் அசைவு வடிவாய் இருக்கும். சிறிது சிறிதாக அசைவானது மிகுந்து எட்டு வகைச் சக்திகளும் பராசக்தியிடம் வெளிப்படும். அவளே பழமையான முதல் நிலையை உடையவள்.

1176. தீக்கண்டம், சூரியன் கண்டம், சந்திரன் கண்டம் அகியவை முடிந்து இருப்பதில் பராசக்தி விளங்குவாள். தத்துவமாயு,ம் தத்துவங்கள் இல்லாதவளாயும் சிறந்து நிற்பவள். பராபரனை தன்னிடம் உடைய பராபரை. சக்தி பேரானந்தத்தை அளிப்பவள் சிற்றின்பத்தையும் அளிப்பவள்.

1177. தேன் போன்று விருப்பத்தை தரும் வீணாத்தண்டின் அடியில் புற்றாஞ் சோற்றைப் போல் சக்திகளை கொண்டவள். குங்கும நிறத்தை உடையவள். அங்குசமாகவும் பாசமாகவும் உள்ள நிலமானது அவள் விரும்பித் தங்கும் இடம்.

1178 .உயிர்களின் மூச்சினையும் மனத்தையும் கடந்து இருக்கும் மனோன்மணி பேய்களையும் பூதங்களையும் தமக்குப் படையாக ஏவலாக உடையவள். அறிவைக் கடந்த சிவனுக்கு அவள் தாய், மகள், மனைவி.

1179. சிவனின் மனைவி ம்னோன்மணி. சக்தி தத்துவமாய் நின்று நாத விந்துக்களை தோற்றுவிக்கச் செய்வாள் சிவத்துடன் கூடிய நிலையில் அனைத்திற்கும் காரணியாகவும் படைப்பை எண்ணிப் பிரிந்த போது சிவத்தின் காரியமாகவும் ஆவாள். இத்தகைய புண்ர்ப்பை உடையவள் விந்து சத்தி பெருந்தியுள்ள பழமைக்கெல்லாம் பழமையானவள். அண்டங்களின் அளவாகப் பிரிந்திருக்கும் பத்து திசைகளுக்கும் அதிபதி.

1180. சத்தி பத்து முகங்களை உடையவள் ஆறு இதழ்கள் பொருந்திய சுவதிட்டானாத்தை அங்கமாகவும் நாலு இதழ்களை உடைய மூலாதாரத்தை வேதமாக அமைத்தவள். சகசிரத் தளத்தில் சிவத்துடன் பொருந்தும் போது சமமாய் நிற்பாள். நிலையான பொருள ஆவாள்.

1181. குண்டலியான ச்க்தி சக்தி கூட்டங்களுடன் புருவத்திடை இருப்பாள். மேலான அவள் சூரியன் சந்திரன் கொங்கைகளை உடையவள். நான்முகனை ஆள்பவள். நான்முகனுக்கு அன்னியனாய் இருப்பாள்.

1182. சிவனுடன் பிரிதல் இல்லாமல் இருக்கும் பெரு மங்கை. தியானத்தில் புருவ நடுவுக்கு மேல் பொருந்தி விளங்கும் அழகிய கொம்பு போன்றவள். அறிவுக்கு அறிவாய் பொருந்தி அரிய உயிர்க்கு அறிவாய் கலந்து நின்றாள்.

1183. கொடைக்குணம் உல்ல பராசக்தி மனத்தில் இருந்து ஐம்பொறிகள் செய்யும் கள்ளத்தனத்தை ஒழித்து உயிருடனே ஒன்றி நவநெறி மேற்கொள்ளக் கூடிய இன்பத்தில் என்னை மயக்கி விரும்பச் செய்தாள்.

1184. விரும்பி உயிர்களுக்கு அருளைச் செய்யும் போக சக்தி மனதில் இன்பம் அளிக்கின்றாள் என்பதை யாரும் அறியார். அந்த புதல்வி சக்தி மலரும் மணமும் போல் சிவத்துடன் பொருந்தி இனிமையாய் இருப்பாள்.

1185. சக்தி என் உள்ளத்தை விரும்பி இருந்தாள். திருத்தமான புணர்ச்சியில் நெளிந்து அறிந்து தியானித்து இடையீடு இல்லாத வியப்பில்லாத நிலையில் பொருந்தி இருக்கத் தடையானவற்றை எல்லாம் விலக்கி இருந்தாள். அதுவே சுத்த கலப்பு எனப்படும்.

1186. அது இது தேவை என ஆசையை விட்டு அவளைப் புகழ்ச்சி செய்து பிரமரந்திரத்தில் தியானைத்தால் விதிக்கப்பட்ட வினைகளையும் வெற்றி கொள்ளலாம். சந்திர மண்டலத்து வழ்பவளான அவள் சொன்ன மண்டலங்கள் மூன்று.

1187. மோகினியான்வள் சேரும் மண்ட்லங்கள் அக்கினி, சூரியன், சந்திரன். பன்னிரு கலைகளை உடைய சூரிய மண்டலத்தின் உச்சியில் இருக்கும் நோக்கில் பொருந்துதல் சுத்த மாயையாகும். நன்மை அளிக்கும் பராசக்தி சந்திர மண்டலத்தில் இருப்பாள்.

1188. சந்திர மண்டலத்தில் தோன்றும் நாதம் மலை போன்று ஓங்கும். பின்நாக்கு ஆகிய சிறு மூளை பகுதியில் படரும். கண்டத்தினின்று மேல் எழும். சோதியாக அநாகத்தில் உள்ள இதயத் துடிப்பு ஒலி சந்திர கலைமேல் போய் இறுதியை சேறும்.

1189. சந்திர கலை பதினாறின் முடிவே படைபிற்கு முதலாவது. ஆயிரக்கணக்கான் மாற்றங்கள் இல்லாது மனம் சம்நிலையைப் பெற்று எழிழ் மிகுந்து இருக்கும் நறுமணமுடைய இடமாகத் திகழும். அதை தனக்கு ஒரு பேறாக் கருதி சக்தி விளங்குவாள்.

1190. சக்தி மங்கை சந்திர கலையில் இறுதியாக இருப்பாள். நுட்ப வாக்குகளாலான அயல் உடலில் வீற்றிருக்கின்றனள். மேலான ஆனந்தத்தைப் பெறுவதற்கான நன்னெறியை அடைந்து உலகங்களில் உள்ளவர் அவளது புகழைச் சொல்லி வழிபட்டு இருக்க அவள் நன்மையை அளிக்கும் சத்தியாய் இருக்கின்றாள்.

1191. சிவனும் சத்தியும் பொருந்தி நின்று யானையின் துதிக்கை போன்ற பிரணவத்தின் உச்சியிலிருந்து படைக்க சீவர்களுக்கு உடம்பிற்கும் உயிருக்கும் வேண்டியதை மதிப்பிடுவர். சந்திர சூரிய கொங்கைகளையுடைய பார்வதி ஐந்து மக்களுடன் தம் சக்தியும் சேர்த்து உலகத்திற்குரிய படைத்தல் தொழிலைச் செய்தனள்.

1192. வெளிச் செயல்கள் செய்து தவம் செய்யும் உயிர்கள் உள்ளத்தில் உள்ள சிவசக்தியைத் தியானம் செய்தால் மூலாதாரத்திலிருந்து மூண்டு எழும் மூலாக்கினி ஆறு ஆதாரங்கள் வழி பிரமப் புழையில் உயர்ந்து அன்புடன் சக்தியிடம் அடங்கும்.

1193. சந்திரக்கலை ஆறு ஆதாரங்களிலும் பொருந்தி தன் சக்தியை வெளிப்படுத்தும். அவற்றுள் அது பொருந்திக் களிப்பூட்டும். அதனது இயலபை மற்ற ஒளி பெற்று மூலாதாரத்தினின்?று மேலே தோன்ற பிரணவம் உதவும். முத்துப்போன்ற நிறத்தை உடையது வீரியமாம்.

1194. முத்துப்போன்ற சுக்கில நாடியில் முகத்தைக் கொண்டு தீ, சூரியன், சந்திரன் என மூன்று கண்களுடன் பத்து முகத்தினையும் உடையவள் ஆற்றலும் திறமையும் வாய்ந்தவள். பத்து நாடிகளில் செயல் செய்பவள். சிவத்தின் தேவி பைரவி. இத்தன்மையுடன் என் மனத்தில் உள்ளாள்.

1195. மூன்று மண்டலங்களுள் தீ மண்டலத்தில் திருவடி பொருந்தி நிற்பவள். சந்திர மணடலத்தை முகமாகவும் சூரிய மண்டலத்தை உடலாகவும் கொண்டு மூன்று மண்ட்லத் தலவியானாள். உயிர்கள் விலகினும் மனத்தை விட்டு விலகாத ஒளியாய் பொருந்துவர்.

1196. உள்ளொளியான குண்டலினி ஆறு ஆதாரங்களில் வெண்மை ஒளியாகச் சிவத்துடன் கூடி எல்லா ஆதார தெய்வங்களுடன் சத்தி கலந்து மேலே போவாள். அநாதகச் சக்கரம் அடங்க விசுத்திச் சக்கரத்திற்குமேல் அமுத மண்டலம் தொடங்கும் நிலையாகும்.

1197. விசுத்திக்கு மேல் நெற்றியின் நடு முதல் பிரமரந்திரம் முடிய இருக்கும் சகசிரதளத்தின் இருக்கும் சதாசிவமென்ற பரமகுரு வெளிப்படுத்துவது ஆனந்த கள் ஆகும். அந்த ஆனந்தமே இறைவனது திருவடிக?ள். அவன் வடிவம் ஆனந்தம். மூலாதாரம் முதல் ஆறு ஆதாரங்களையும் அங்கமாக உடைய சத்தி ஆனந்தத்தை அளிப்பாள்.

1198. குண்டலினி நான்முகன் முதலிய தேவர்கள் அஞ்ஞானக் காடான ஆறு ஆதாராங்களையும் சந்திரக் கலை பதினாறும் சதாசிவ பத்தினியும் மந்திர இறைவனான ஈசானவரும் சேர்ந்து பற்றிட பராசத்தி எழுந்தருளினாள்.

1199. பயிற்சியாளருக்கு வாலை வடிவில் சத்தி இருப்பாள். அந்த இயல்பை அறிந்து மேல் எழச் செய்தால் அவள் வீடு பேற்றைத் தருவாள். உண்மை அறியாமல் வீண் பக்தியை செலுத்தியவர்கள் ஆரவாரம் செய்யும் நாய் போன்று கதறுவார்கள்.

1200. திருவான பராசக்தியின் திருவடியைக் காண்பவர் யார். ஒளியில் பார்த்து தியானம் செய்பவர்க்கு கரிய நிறமுள்ள சுழுமுனையின் அடிப்பகுதியில் சிவந்த தாமரைபோன்ற பெருமை வாய்ந்த திருவடியை அருளும்படி செய்வாள்.

1201. சிந்தனையில் சத்தி பற்றிய கருத்தை நீங்காமல் வைத்திருந்து சிரத்தில் ஆதியான புருவ நடுவில் ஆரம்பித்து ஒளிமுகமாக முன்னே சென்று ஆருமஞ்சனம் கூர்மாசனம் ஆகியவற்றால் குண்டலினியின் முகத்தை மாற்றி மேல் எழும்படி செய்து உலக நடப்புகளை நினைக்காமல் அவளை நினைத்து ஐம்பொ/றிகள் கூடும் இடமான நாத ஒலியில் பொருந்தி சமாதியில் இருங்கள்.

1202. சமாதியை மேற்கொண்டால் சத்தி தானே முதலாய் இருந்து சிவனை முதலாக் கொண்டு இருக்கும் மந்திரத்தால் அனுபவிக்கப்படும் அவளை நன்மை தரும் பேதமாய் உள்ள நிலையை எண்ணிச் சிந்திக்கும்போது சந்திர கலையின் உச்சியே அவளுக்கு உறைவிடம்..

1203. சக்தி இருக்கும் மூலாதாரம் முதலான இடங்களை முறையாய் அடைந்து இன்பத்தை அளிக்கும் மங்கையை நாள்தோறும் விரும்பியபடி இருந்தால் மூலாதாரத்துள் உடன் உள்ள சுவாதிட்டானம் மணிபூரகம் அநாதகம், விசுக்தி என்ற நான்கு சக்கரங்களும் சிறு நேரத்திற்குள் இறையை அடைவர்.

1204. மேலான பயனை அடைய இளைய தளிர் பொன்ற மேனியையும் கூட்டத்தையும் உடைய குண்டலினியையும் குவளை போன்ற கண்ணை உடைய பராசத்தியையும் இன்பமான முறையில் வஞ்சமில்லாது வழிபடும் மு?றையாகும்

1205. இன்பம் உண்டாகும் நேரத்தில் மனதால் வழிபடு. மூலாதாரத்தில் இருக்குமவளை சுவாதிட்டானம் வழி போகாமல் பிரம்ரந்திரம் நோக்கிய உள்ளத்துடன் சக்தியை உணர்வாய். நிலத்தில் நீண்டநாள் வாழச் செய்வாள். தன்வயத்தனாதல் ஆகிய எட்டு குணங்களும் கிட்டும்.

1206. ஆமை தன் ஐந்து உறுப்புகளை அடக்கிக் கொள்வதைப்போல் ஐம்பொறிகளை அடக்கி செருக்கு இல்லாதவன் என பிரண்வ மந்திரத்தில் உள்ள சுரமான ம காரத்தை தொண்டைக்குமேல் நினைத்தால் மூலாதாரத்தில் சோதி விளங்கும். சக்தியைக் கண்டபின் சந்திர மண்டலத்தில் நிக்ழ்வதைக் காணலாம்.

1207. மூலாதரம் முதல் பிரமரந்திரம் வரை செல்லும் சித்திரணி என்ற நாடியில் தோட்டியையும் பாசத்தையும் கையில் கொண்டிருப்பாள். அதில் பெரிய சங்கமும் அமுத கலசமும் பொருந்தும். இரு பதங்களான சிவ என நீண்டு உச்சரிக்கப்படும் மந்திரத்தை விரும்பும் பொன் அம்பலத்துள் ஆடுவாள்.

1208. நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகியோர் சத்தியின் திருவடியைச் சூடி தன் பதவியினைப் பெற்றனர். காமனும் அவனுடைய தம்பியான சாமனும் சூரியனும் சந்திரனும் அக்கினியுடன் திருவடியில் பொருந்தும்படி மூலாதாரம் முதல் ஒரே பேரொளியாய் இருப்பாள்.

1209. சத்தி சுவதிட்டானத்தில் இன்பத்தைப் பெருக்கும் பிறைச்சந்திரனை சிரசில் சூடியவள். சுழுமுனை நாடியும் அதன் மீது இருக்கும் சந்திரன் சூரியன் அக்கினி என்ற சூலத்தை தன் வடிவாய் கொண்டவள். சிரசில் இருக்கும் சந்திர மண்டலத்தை உடையவள். மூலாதாரம் முதல் பிரரந்திரம் வரை கொடிபோல் சிதிரணி நாடியில் செல்பவள். மலம் அற்றவள். இத்தகைய இயல்புடன் நடுநாடி வழி ஞானம் கொண்டு நடனம் ஆடுவதால் அண்டத்தின் தலைவி என அழைக்கப்படுவாள்.

1210. வான் கூறான அண்டம் முஹ்டல் பூமிவரை பொன் காதணியை உடைய பராசத்தியைவிட நிலையான இடம் பெற்றவர் யாரும் இல்லை. சிவனும் சத்தியும் ஆகிய காரணம் ஆணும் பெண்னுமாகப் படைப்பதன் பொருட்டே ஆகும்.

1211 .நஞ்சுண்டனுக்கு பராசக்தி அமுதம் ஆவாள். தவத்தால் பொருந்தி உண்டாகும் இன்பமாகத் தானே வருவாள். அந்த சத்தி ஆதாரங்கள் தோறும் எல்லாம் அடையும் குவிந்த வ்ழியான சுழுமுனையுடன் பொருந்த செறிவுடன் உச்சியில் திகழ்வாள்.

1212. சிறப்பான அருந்தவம் மென்மேலும் சிறக்கும் என்பதை உயிர்வளியின் இயக்கத்தால் அழிகின்ற மக்கள் அறிவதில்லை.. விரைவில் கெடுவர். அன்னமயமான உடலில் உள்ள நான்கு இதழ் தாமரையின்று வழிபட்டு உச்சி நடுவில் சிறப்பான பிரணவமாய் அம்மை விளங்குவாள்.

1213. அன்னமய கோசத்திற்கு உண்ணும் உணவைச் சத்தி வழங்குபவளாய் இருப்பாள். யோனியான குண்டத்தில் தன்னை சிவார்ப்பணம் செய்பவர்க்கு பேரொளியாய் விளங்குவாள். சிவத்திற்கு வடிவம் என்று இருப்பவர்க்கு வேரிடம் –மூலாதாரத்திடமே பொருந்தி இருப்பாள்.

1214. சந்திரனைப்போன்ற வெண்பளிங்கில் முத்துபோன்று சிலைமயமாய் இருப்பாள் சத்தி. சுருண்ட குழல்போன்ற சுழுமுனையில் இருந்து ஒளிரும் தன்மையுடையவள். மூலாதாரச் சத்தியால் மாற்றப்பட்டபோது நிவிருத்தி எனப்படும் நீக்கல், நிலை பெறுதல், நுகரச் செய்தல், அமைதியாக்கல் அப்பாலாக்கல் முதலிய ஐந்து கலைகளாக இருப்பாள்.

1215. மூலாதாரத்து உருத்திரனுடன் பொருந்தி நின்றாள். உள்ளத்தின் கற்பனைகளுக்கு அவளே காரணம். பாச அறிவுகளில அவளே இருப்பாள். பாச அறிவு அழியும் உடம்புடன் தொடர்புடையவை ஆதலால் குண்டலினியுடன் கால தத்துவத்துடன் கலந்துவிடுவாள்

1216. சத்தி உயிர்களுக்கு கால தத்துவமாய் இருப்பவள். எண்ணங்களை நிறைவு செய்யும் அனுகூலம் உடையவள். பிரிவு அற்ற கலப்பைச் செய்தவள். மூலாதாரச் சத்தியான குண்டலினி சண்டிகை மந்திரத்தில் இருப்பவள். காப்பவளாய் சிவத்திற்கு ஒரு பாகமாக்வும் இருப்பவள்..

1217. பசும் பொன் மயமான கதிர்களை முடியாய் உடையவள். உடம்பு ஒன்று பத்து தின்மையான தோள்கள் ஐந்து முகங்கள். ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள். அஞ்ஞான மயமான இருட்டைப் பிளந்து செல்லும் பிரணவத்தில் இருக்கும் சிவனுக்கு பாகமாய் இருப்பவள்.

1218. ஆன்மாவுடன் முப்பத்தாறு தத்துவங்களும் பொருந்தி செயல்படும் கொத்துக்கள் ஐந்து ஐந்தாக இருக்கின்றன். அவற்றுள் வேதனும் பதினென் கணத்தவரும் பொருந்த முதலாகவும் முடிவாகவும் தேவி இருப்பாள்.

1219. படைக்கும்போது ஆதாரச் சக்கரங்களில் உள்ள ஐம்பத்தோர் எழுத்துக்களும் அவளுடையை சத்தியை பொருந்தியுள்ளன. அவைகளுக்கு பராசக்தி உயிராய் இருப்பாள். அவளுடன் சிவன் பொருந்த எல்லாவற்றிலும் கலந்து நின்றாள்

1220. சக்தியுடன் சிவத்திற்கு இடமான சக்கரம் தலையின் மேல் உள்ள எட்டு இதழ் தாமரை. உள்ளம் பற்றி நிற்கும் குறிப்பிற்கு ஏற்ப அந்த ஆதாரங்களீல் போய் பொருந்தி சத்தி அருள் கொண்டு இருப்பாள்.

1221. அம்மை என்னுள்ளே சுழுமுனையில் மேல் நோக்கியபடி இருந்தாள். ஏழு ஆதாரச் சக்கரங்களிலும் உயிர்வழி உந்தப் பெற்று சகசிர தளாம் இருக்கும். உயிர்வழி ஒன்பது வாயுக்களுடன் மேல் சென்று உயர்வு என அறிவித்து தானும் அதில் நிற்பாள்.

1222. உயிர்வளி மேல் நோக்கிய முகமாக உணர்வாக எழும்போது மந்திரமான பிரணவத்துள் சேர்த்து எழுகின்றது. மேலான வீடுபேறு நெறியாகும். சத்தி சிவத்தை நோக்க் அகண்டத்தில் செல்ல விரும்பிச் சீவனுடன் கலந்து எழும். இது சிவத்தின்பால் விரும்பிப்போகும் காதலி நிலையாகும்.

1223. மேல் நோக்கிய சகசிரதளம் அக்கினியாயும் ஆதிசத்தியாயும் உள்ளது. மகேசுவரன் இருக்கும் மண்டலமாகவும் வாயு முதலான மேலுள்ள வானம் சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவையும் அங்கு இருக்கும். கவசமாய் உயிர்க்குள்ள சிகை மந்திரம் உடம்பறிவு கடந்து செயலாற்ற பராச்த்த் அரசன் வாழும் வீணாத்தண்டில் இருப்பாள்.

1224. மனோன்மணி நடுநாடியில் இருந்து ஐம்பத்தோர் எழுத்துகளுள் அடங்குவாள். பேரறிவு பேராற்றலுடன் பெரும் பொருளாய் இருப்பாள். படைத்தல், காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்தொழிலையும் செய்பவள்.

1225. தானே நிகழ்வதான மோகினியும் அதை சேர்ந்த யோகினியும் இவற்றைக் கடந்து சென்று சத்தி மயமுடையவராய் திருவடியைப் போற்றுவர். உயிரில் இருக்கும் சிவன் மேலான பரமசிவம்.

1226. சிரசில் இருக்கும் சகசிரதளத்தில் மோகினிபான பராசத்தி பொனொளியில் இருக்கும் சிவத்துடன் மேன் நிலையில் இருந்து கூறுவது அ கார உ கார ம கார நாதங்களாகிய உயிர் சேரும் பிரணவ வழிபாடாகும்.

1227. உலகத்தார் உய்யும் பொருட்டு சமய் நெறிகளை வகுத்தவள் மனோன்மணி. தன் பதியுடன் பிரிவு இல்லாது வீற்றிருக்கின்றாள் எல்லோரும் அறிவதற்கு அரியவள். வாக்கும் மனமும் ஒன்றானபோது அந்த நுட்பமான அறிவில் இருக்கும் பெருமை பெற்றவள்.

1228. கூர்மையான புலன்களைக் கொண்டு அறியும் அறிவானது சிவம் அக்கருவிகளுடன் பொருந்தியிருப்பதால் உண்டானது.. இது பின்னறிவாகும். அக்கருவிகள் இல்லாது பதியுடன் ஒன்றி அறியும் அறிவைப் பெறுவது செந்நெறி. சிவத்துடன் கூடி அடையப்படுவதே ஆன்மா அடைய வேண்டிய வழியாகும். இது சன்மார்க்க நெறி.

1229. சன்மார்க்கமாகப் பொருந்திய நெறி தூய்மை அற்ற நெறிகள் யாவற்றையும் விலக்கிடும்.. நல்ல நெறியால் நல்லொழுக்கம் வரும். அந்த நல்ல நெறியைக் காட்டிய தேவியும் பராசத்தியாவாள்

1230. சத்தியும் ஆன்மாவும் இவற்றை உடைய சிவமும் இல்லாமல் வீடு பேற்றின் முடிவை அறிபவர் எவரும் இல்லை. பிரணவத்திற்கு மேல் அர்த்த மாத்திரை சுரமான ம கரத்தை இட்டுப் பிரண்வம் பக்குவமானால் சிவ சக்தியின் நடுவில் இருக்க வழி உண்டாகும்.

1231. நெறி ஒன்றில் நில்லாது அது சிறந்தது இது சிறந்தது என்று வாழ்நாளை வீணாகக் கழிக்காமல் இன்பம் மிகும் சித்ரணி நாடியில் இருக்கும் குண்டலினியை அவளுடைய கண்வனுடன் பொருந்தி சந்திர மண்டல அமுதத்தைப் பருகி வழிபட தகுதி உடையவர் ஊழ் வழி செல்லாமல் அருள் வழியில் ஊழினை வெல்லும் ஆற்றலை அடைவர்.

1232. வெற்றியுடன் இருக்கும் பராசத்தியை உண்மையாய் உணர வல்லவர்க்கு ஊழை வெல்ல முடியும். வினைக் கூட்டங்களை எல்லாம் வெல்லலாம். சுவை ஒளி, ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தையும் வெல்லலாம்.

1233. ஐம்பத்தோர் எழுத்துக்களுடன் கலப்புற்று இருக்கும் மரபின் வழி வந்த பரம் பொருளாகும். விருப்பத்தைத் தரும் அ காரப் பொருளான சிவமும் முதலாய் சேரும் இடம் இதுவே. இத்வே உண்மையாகும்.

1234. சத்தியுடன் சிவன் சேர்ந்து மூலப்பொருள் இல்லாமலே சங்கல்பத்தால் எல்லாம் தோன்றின. இந்த இயல்பு கொண்டஅ ஐம்பத்தோர் எழுத்துக்களாகிய சத்திகளும் சீவர்களின் அறிவில் பொருந்தி அவர்களது கருத்துக்கு ஏற்பப் பிரபஞ்சம் அமையும்.

1235. ஆஞ்ஞையின்மேல் இருக்கும் சத்தியும் சிவனும் தேவர்கள் வந்து வழிபட அருந்திட அரிய அமுதமாகப் பிறைச்சந்திரன் போன்று அவள் இருந்தாள்.

1236. மூலாதாரத்திலிருந்து எழுகின்ற எழுச்சியை உடையவர் குழலில் இருக்கும் சத்தியின் தன்மையை அடைவர். இடை நாடியில் இருக்கும் சந்திர மண்டல்த்தில் பொருந்திய தவம் உடையவர் ஆன்ம ஒலியாகவும் இருப்பாள்..

1237. பராசத்தியுடன் பொருந்திய சந்திரமண்டல ஒலியால் உணர்ந்து அதில் பொருந்திய உயிர்களின் சிந்தையில் அவரவர்க்கு வேண்டிய உள்ளத்தில் மறைந்திருந்த ஞானங்கள் தோன்றும்.

1238. விரும்பும் உருவை அடைவதற்கு தூய வழி பராசத்தி அடைவதற்கேற்ற பல கலை ஞானங்களை அளிப்பாள். மான் விழி போன்ற கண்களையுடைய பராச்த்தி காமனைப் போன்ற சிவனும் எதிரில் தோன்றி ஆன்மாவிடம் போதமின்றி நிற்பதை உணர்த்த சான்றாக வெளிப்படுவர்.

1239. ஆராயப்படும் அறிவின் எல்லையையும் கடந்து பரவாக்கு வடிவான பிரண்வ வடிவான சத்தியாகவும் மயக்கத்தை உடையதாகி மிக்க ஆனந்தம் உடையவள் சிவந்த ஒளியில் இருப்பவள். சிவத்தால் விரும்பப்படும் அழகி . அறியப்படும் பொருளாகவும் அறிகின்ற வழியாகவும் அவள் இருப்பாள்.

1240. நெறியாய் நின்ற பராசத்தியை ஒரு கணமும் பிரியாது பரவாக்கு வடிவன சிவத்துடன் அவளது கு/றியைக் கொண்டு வழிபடுபவர் அறிவு குன்றாது பொருந்தியிருப்பர்.

1241. நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், ஆகியோர் மயக்கத்தை உண்டாக்கும் நிலையில் உள்ளனர். பிரணவ வடிவான சிவத்தில் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன், சூரியன், சந்திரன், அக்கினி, விண்மீண் ஆகிய ஒன்பதும் ஒடுங்கிடத் தேனை அருந்திக் களித்த் வண்டைப்போல் சிவசக்தி உருவமாய் திகழும் நிலையை அடையலாம்.

1242. சகசிர தளத்தில் இருக்கும் பராச்த்தியுடன் கூடிய சிவத்தை வணங்கும் நெறியை உலகத்தவரே அறிந்து கொள்ளுங்கள். இந்திரன் முதலாக உள்ள எண் திக்குக் காவலர்களும் மற்றத் தேவரும் அசுரரும் வந்து உங்கள் அடிகளை வணங்குவர்.

1243. இடைவிடாமல் கூறப்படும் மந்திரமும் நறுமணப் பூவும், தூபமும் கவர்ச்சியைத் தரும் நறுமணப் பொருளும் இருளைப் போக்கும் தீபமும் கொண்டு சத்தியை வழிபடும் பூசை வேள்வியில் இடும் அவியை ஏற்கும் இறைவனுக்குரிய அருச்சனையாக அமையும்.

1244. சத்தியை ஒரு பக்கத்தில் கொண்டு உலகத்தை தாங்கிய சிவன் அவளாள் உண்டான ஆக்கத்தால் உலகத்தில் நிலை பெற்று நிகர் இல்லாதவனாகவும் அழிவு அற்றவனாகவும் இருக்கின்றான். அழகிய கிளியை ஏந்திய சுருண்ட கூந்தலையுடைய பார்வதி பரமனை ஒரு பக்கம் கொண்ட பராசத்தி ஆனதால் அவளை வழிபடுக.

1245. கரிய கொடி போன்ற மாதான உமையும் அன்பர்க்கு உதவும் தலைவியாய் ந்ல்ல கொடி போன்ற மாதும் மூச்சுடர்களை மூன்று கண்களாய் கொண்டு ஆஞ்ஞை சக்கரத்தில் இருப்பவளும் ஆன சத்தியை வழிபடுக. பொற்கொடி போன்ற பெண்கள் உன்னை போற்றித் துதிப்பர்

1246. பராசத்தியின் விரிந்த சுடர் மாலை போன்ற ஆதாரச் சக்கரங்களின் அசைவு கீழ் நோக்கிச் செல்லாது இருக்க பத்தினியுடன் கூடி மூலாதாரத்தில் ஏற்படும் நாதத்தை கண்டத்தின் வழியாக உண்ணாக்கிற்கு செல்லுமாறு கீழ் நோக்கும் அசைவை மேல் முகமாக ஆக்குக.

1247. ஒளிமயமான இறைவன் எனக்குள் அடங்கியிருப்பது என் அன்பின் பெருமையாகும். நஞ்சாகிய காமக்கழிவுகளைச் செய்யாமல் மேலே கொண்டு தலையில் மேல் உள்ள ஒளிமண்டலத்தில் அடக்கிச் சத்தியுடன்ரிவு இன்றி ஒன்றாக அமையும்.

1248. ஆண்டவன் எல்லா உயிர்களையும் வடிவாக கொண்டு இருக்கின்றான். இதை ஆராய்ந்தால் ஒலிக்கின்ற வளையலை அணிந்த பொன் ஒளியில் திகழும் மங்கையை இறைவன் மகிழ்வுடன் பொருந்தி உலகைப் படைத்தான் என்பது கற்பனையாகும்.

1249. மாயையுடன் சேர்த்து வைக்கும் சடையுடைய சிவன் தன் பொற்பாதத்துடன் தொடர்பு ஏற்படுத்தும் ஒளி மண்டலத்தில் இருக்கும் சிவனை தன் களவியால் நுண்மை மண்டலத்தில் திருமேனியைச் செய்வான். உடம்பான கலவியுள் பொருந்தி மகா சத்தி கூட்டத்துடன் சேர்ந்து அந்தந்த உடலாக இருப்பான்.

1250. சிவன் வேறு நான் வேறு அன்று என்பதை நான் அறிந்தேன். உலக்த்தின் தலைவன் ஈசனை என் தனித்தன்மையை விட்டு ஒன்றியபோது பரந்த நிலையை அடைந்தேன். சிவனை உணர்ந்தபோது கீழ் உலகங்களின் தொடர்பை நீக்கினேன். ஆதி சத்தியின் அடியைப் பற்றி அதன் பிரிவான விருப்பு ஞானக் கிரியைகளை விட்டு நீங்கி அருளை அடைந்தேன்.

1251. மனோன்மணி ஒன்பது சத்திகளுள் மேலானவள். அவளைத் துணையாய் கொண்டவர் இறைவனின் அடிகளையே அழிவற்ற நல்ல பயன் உடையது என்பர். கற்ற கல்வியின் பயனை அறிவார்க்கு அவள் திருவடியான பொன்னொளி திகழும் மண்டலத்தை அடைவது பெறும் பேறாகும்.

1252. ஒப்பில்லா தலைவனுடன் என் உள்ளத்தை விரும்பி உறையும் சத்தியின் இனிய இருப்பிடம் ஏழு உலகங்கள் என சொல்லுவர். பணி மண்டலத்தைப்போல் திகழும் சகசிர தளத்தின் உச்சியில் கனிவுடன் என்னை நினைப்பது என்ன காரணமோ அவளே கூறுவாள்.

1253. ஏழாம் உலகு என்ற சகசிரதள நாயகியான மனோன்மணி நல்ல வீட்டுலகைச் செய்து ஞானச் செல்வியாய் இருப்பவள். எடுத்த உடலைப் பக்குவப்படுத்திய குண்டலினியும் அந்த வீட்டில் ஒன்றாய் இருந்தாள்.

1254. உடம்பின் தோற்றத்திற்குக் காரண்மான தாயும் தந்தையும் காதலால் ஒருவருக்கு ஒருவர் உறவு கொண்டதே தவிர அன்னை அவர்கள் அறியமாட்டார்கள்.. சிவனும் சத்தியும் ஆன்மாவும் ஒன்றுபட இருந்ததில் என்னை எப்போதும் பிரியத அம்மையும் அத்தனையும் வணங்கி உய்வு அடையுங்கள்.

#####

திங்கட்கிழமை, 04 May 2020 11:24

பூரணசக்தி!

Written by

ஓம்நமசிவய!

ஓங்கார முகத்தொருத்தல் ஏங்கா துயிர்க்கருள்
இயற்கை எண்ணும் எழுத்துமாய் இசைந்தாய்
பண்ணூம் எழுத்துமாய் பரந்தாய் அருவே உருவே
அருவுருவே பொருளே பொருளின் புணர்ப்பே போற்றி!

#####

பூரணசக்தி!

1125. உலகங்களின் முடிவையும் அனைத்தும் முடியும் இடத்தையும் ஆராய்ந்து அறிந்தேன். அகில உலகங்களும் ஆதிப் பெருமான் சிவத்திடம் இலயம் அடைகின்றன. ஆணாகவும் பெண்ணாகவும் உள்ள பால் உணர்ச்சி முடியும் இடத்தையும் அறீந்தேன். சிவசத்தி எந்தெந்த இடத்தில் தொழிற்படுத்துகிறது என்பதையும் ஆராய்ந்து அறிந்தேன்.

1126. ஈசனை முடிவடையச் செய்யும் பராசக்தியை உயிர்கள் உணரவில்லை. குண்டலினி சக்தி பராசக்தியுடன் கூடி முழுமை பெற்றது. புண்ணியர்களின் கூட்டங்களைத் தன்னருளில் இருக்கச் செய்யும் கன்னி. உலகத்திற்கு கொண்டு வந்த முறைப்படி இலயம் அடையச் செய்பவள்.

4427. குண்டலினி சக்தி தலையைக் கடந்து நிராதன்க் கலைக்கு சென்ரால் மதம் உடைய ஐந்து ஆண் யானைகளாகிய புலன்களும் அவற்றைச் செலுத்தும் மனமும் உலக இயல்புடன் திருமாலும் பெண்ணுடன் கூடிய புணர்ச்சியில் விருப்புற்று விளங்கி பிரம்ம சக்தியான வாகீசுவரியும் அன்பால் பொருந்தும் கலவியுள் ஒன்றுபட்டு வேறுபாட்டை விடுவர்.

1028. இன்பக் கலவியில் எழும் ஆனந்தத்தில் நுழைய வல்லான் தந்தையான சிவனும் துன்பமயமான சுக்கில சுரோணிதச் சேர்க்கையில் விருப்பம் கொண்டு பந்தத்தை விளைவிக்கும் வீணாத்தண்டில் அம்மை பராசக்தியும் இருக்கின்றாள்.

1029. உடல் உறவினால் வந்த தாயும் தந்தைய்ம் உற்பத்திக்குக் காரணம் என்ற மயக்கம் நீங்கி இருப்பாயாக. சுத்த வித்யா மண்டலத்தில் சுத்த மாயையில் அம்மையும் உருத்திரரும் இருக்கின்றனர். அம்மை என்றும் நிலைபெற்று உன்னைப் பொருந்தி நாதத்தைத் தந்தருள்வாள். அவள் இருக்கும் ஒளிமண்டலமே நந்தி என்ற பெயரை உடையது.

1030. ஆதாரங்கள் மாலைபோல் இருக்கின்றன,. சுவதிட்டானத்தில் இருக்கும் நான்முகன் படைப்பாகிய உலகில் மக்கள் வாழும் ஆண்டுகள் நூறு. நான்முகனுடன் இருக்கும் கலைமகள் ஞானவாணியாக வாக்கீசுவரியாய் மேலே எழுந்தருளியுள்ளாள். படைப்பை விட்டு மேலே வரச் செய்தது பராசக்தியே ஆகும்.

1031. இறைவனின் நம்பிக்கை கொண்டு கவலைகள் நீங்கி ஒளிமண்டலத்தில் நிலைபெற்றவர் ஐயத்தை உடைய மனத்தை அடக்கி நாதத்தின் நுட்பமாக இருக்கும் பரத்தை அறிந்த பின்பு இறைவன் நீங்காமல் இருக்க ஆசனம் ஆவார்.

1032. அருளின் காரணமாக தானே மூலாதாரத்திலிருந்து எழுந்த சத்தி வான் மண்டலத்தில் புலப்படும்படியாக இருந்து சந்திர மண்டலத்தில் ஒளி பெறும் படியாக அமைத்தாள். செந்தேனைப் போல் இடைவிடாது எழும் ஒளியில் பராசக்தி நடனம் ஆடும் இடம் பொன்னம்பலம் என்பதை அறிவீர்.

1033. தன் மாத்திரைகளை அறியும் ஞானேந்திரியம் ஐந்தும் ஐம்பொறிகள் இல்லாது அறியும் அருள்சத்தியைச் சேர்ந்தால் நீங்காத அறிவை புரிவர். அருட்சத்தியை விடாமல் பற்றி நிற்பவரிடம் அவளும் பொருந்தி அவர் விருப்பத்தை நிறைவு படுத்துவாள்.

1034. சந்திரன் சூரியன் இயங்காத இடத்தில் மகிழ்ச்ச்சியைச் செய்யும் நாத சத்தியை விரும்பி ஆரவாரமின்றி அருளுடன் சேர்ந்திருந்தாள் பருவ வேறுபாடு இல்லாத இளைஞர் ஆவார்.

1035. வாலை பராசக்தியுடன் மேல் அணுகா விந்து நாதங்களைக் கடந்து முதல்நிலை அடைவதால் வீடு பேற்றுக்கு அமைந்த பாதையில் பராசக்தி இருப்பாள்.

1036. நாதாந்தத்தில் நிலைபெற்ற பராசத்தி சிவத்துடன் ஒன்றியபோது அவளே சீவர்களுடன் பொருந்திய இச்சையாகவும் விருப்பத்துடன் ஞானமாக விளங்குவாள். கீழ் நோக்குடன் கூடியிருந்த கிரியா சக்தி நல்லவற்றை உணர்ந்து நின்றபோது மூவரும் பொருந்திய சபையில் சிவமும் பொருந்திவிடும்.

1037. மணமும் மலரும் போல் சக்தியும் சிவனும் ஆன்மாவிலும் மற்றத் தத்துவங்களிலும் ஒத்துப் பொருந்தியதை உயிர்கள் உணரவில்லை. சத்தியும் சிவனும் சம்மான நிலையில் கலந்தபோது சத்தியுடன் ஒத்துள்ள சிந்தையை என்னிடம் வைத்து இறைவன் விளங்கினான்.

1038. சிந்தைக்குள் உலவும் சத்தி விந்து நாதங்களாக விரிவு அடைந்து சந்திர மண்டலத்திற்கு உரியவள். ஆறு ஆதாரங்களையும் கொண்டு விளங்குபவள். சத்துவ குணம் உடையவள். அ கரம் முதல் க்ஷ் கரம் வரை ஐம்பத்தோர் எழுத்துக்களிலும் உறைபவள்.

1039. சந்திர மண்டலத்தில் சிறந்து இருக்கும் சத்தி தன் வேகத்தைக் காட்டாமல் அமுதம் சுரக்கும் கொங்கைகளுக்கு கீழே இருப்பாள். இத்தகைய இரண்டு நிலைகளை அறிபவர் இல்லை. மனத் தெளிவு பெற்று புருவ நடுவில் இருக்கும் தீப ஒளியை உள்ளே காண்பவரின் சிந்தையில் ஊற்றைப் போல் இருப்பாள்.

1040. என்னை அடிமையாய் ஏற்றுக் கொண்டவள். தீ வடிவான உருத்திரன் மூலாதாரத்தில் இருக்கும் உருத்திர சோதி விந்து மண்டலத்தில் ஏறிச் சிறப்புர வீற்றிருப்பவள். இதை அறியாதவர் சென்று விடுங்கள். அறிந்தவர் அடயோகப்பயிற்சியாளர் ஆவர்.

1041. எல்லாவற்றிற்கும் மேலாக சத்தி உறையும் இடம் ஆறு இதழ் உடைய சுவாதிட்டானம். பூமிக்குமேல் இருநூற்றுப் பதினெட்டு உலகங்கள் இருக்கின்றன. சசிகரதளத்தில் புண்ணியத்தால் வந்து பூமி தத்துவத்தில் நாத சக்தியாக விளங்குகின்றாள்.

1042. பரமன் இருந்தபடி இருக்கும்போது நாதசத்தி மட்டும் செயலாற்றும். வல்லமை மிகுந்த சித்சத்தியாக இருக்கும் சோதி. அவள் வான் கூற்றில் உள்ள சமூகமாக இருப்பதால் உலகு சக்தியால் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.

1043. சுவதிட்டானத்தை இடமாகக் உடைய குண்டலி சத்தி மூலாதாரமான நான்கு இதழ்களுடன் மேல் உள்ள மணிபூர்கம் அனாகதம், விசிக்தி, ஆக்ஞை சசிகரதளம் ஆகிய ஐந்தையும் பொருந்தி ஒன்பது சத்தியாய் இருக்கும். தன் வழியாய் சுவாதிட்டானத்திலிருந்து படர்ந்து உள்வழி வீணாத்தண்டினுள் பேரொளியாய் செல்லும்.

1044. ஆதி சத்தியின் இருப்பிடம் சசிகரதளம். இந்த ஆற்றல் மற்றர சக்கரங்களில் உல்லது. உடலையும் சிதகாயாத்தையும் ஒன்றுபட இணைக்கும் சகசிரதளமான உச்சியை அடைய மேல் உந்தி தொழிற்படுவது நாற்கோணமும் முக்கோணமும் பொருந்திய மூலாதாரம்.

1045. சதுர வடிவான மூலாதாரத்தில் எழுந்த மூன்?று முளைபோல் விளங்கும் சத்தி ஆதாரச் சக்கரங்கள் எல்லாவற்ரிலும் பரவ சுழுமுனை நாடியின்மீது இருக்கும் பிரமரந்திரத்தை கடந்து உள்ளம் ஒளியை அடைய எல்லாச் சக்கரங்களிலும் பரவியிருந்தாள்.

1046. பூரண சத்தி பத்து திசைகளில் பத்து முகங்கலோடு எழுந்தருளியிருந்ததால் எல்லா திசைகளிலும் பரவியது. தலையை நோக்கிக் குவிந்து முத்துப் போல் சசிகர தளத்தில் திகழும் ஒளியை நோக்கித் தேன் போன்ற இனிமையை அளிக்கும் காம வாயு அதோ முகத்திலிருந்து நீர்போல் சசிகரதளத்தை அடைந்தது.

1047. அம்பை போன்ற கண்ணையும் கொம்பு போன்ற நுண்மையான இடையையும் மற்ற அழகுகளையும் உடைய சத்தி நறுமணம் கமழ்கின்ற செம்பொன் திருமேனியுடன் சிவத்தை நோக்கி அரிய உயிர்கட்கு இன்ப மொழியை நாள்தோறும் மொழிகின்றாள்

1048. பெருங்கடவுள் தன்மை பொருந்திய பிரண்வத்தில் இருக்கும் இன்பத்தை தருபவள் சத்தி. பவளம் போன்ற செந்நிற ஒளி அவள் உடுக்கும் ஆடையாகும். நிலத்திற்கு கீழ் கடந்துள்ள திருவடிகளை உடையவள். அகில அண்டங்களையும் கடந்து பரந்து செல்லக்கூடிய மூன்று சுடர்களையும் தன்னிடம் கொண்டவள்.

1049. உலகத் தலைவனாகிய இறைவனை தன் மேனியில் ஒருபக்கத்தில் புனைய வல்லவள். அண்ட கோடிகளை சங்கற்ப மாத்திரத்தில் உளேயே மாற்றம் செய்பவள். அனைத்து மண்டல ஒளியையும் தன்னிடம் கொண்டு அனைத்தையும் சுமக்கும் அவளை வாழ்த்துகின்றேன்.

1050. அன்பிற்கு இலக்கான புவனாபதி அம்மையே போற்றி. அடியேனின் அருந்தவத்து ஆற்றலினுள் நிற்பவள். என் சினத் தன்மையை மாற்றிச் சிற்றம்பலத்துள் இருக்கும் சிவந்த நிற ஒளிமயமானவ/ள். இயமனை விரட்டும் வலிமையுடையவள்.

1051. சுழுமுனையில் நாதமாக இருக்கும் இன்பத்தை தரும் சுந்தரி. அழகுடன் கூடிய திரிபுரை மங்கை. கங்கை ஆற்றினைப் போல் பெருகிவரும் துன்பங்களைப் போக்கி மலையாகிய சிகரத்தை அடைய அருள் செய்து அடியாரின் வினைகளைப் போக்கி விளங்கும் ஆதியான பரம் பொருள்.

1052. மெல்லிய நுட்பமான நாதத்தில் விளங்குபவள் சத்தி. பரகாயத்தில் பரந்துள்ள மெல்லிய துணுக்களால் ஆனவள், அனைவராலும் புகழப்படுபவள். வணங்குபவரின் பக்குவத்திற்கு ஏற்ப பயனை அளிப்பவள். பச்சை கொடியைப் போன்றவள். அற்பமான புகழில் விருப்பம் கொள்ளும் உடல் வலிமையைத் தந்து வலிமை மிக்க நாதமயமான பராசக்தி என் மனத்திலே புகுந்து அருளினாள்.

1053. அவ்வருளம்மையை ஸ்தாபித்தவன் என் இறைவன். சங்கற்பத்தால் உலகைப் படைக்கும்போது தானே மேலும் கீழுமாய் பரவி அப்பொருளாகவே இருந்து அந்தப் பொருளுக்கும் உயிரை அளித்தருள்பவள் அவளே.

1054. சிவத்தின் பெருமையை உணர்ந்து கொள்ளாதவர் அது இது எனப் பல தெய்வங்களை வழிபடுவர். முத்திப் பேறு அடைவதற்கு மூலகாரணமான பொருள் இது என அறியமாட்டார். குழலைப் போன்ற சித்ரணி என்ற நாடியில் இருக்கும் திருவருளம்மையின் அருளால் நிலையாய் ஆவது இதுவாகும் என அறியமாட்டார். இவர்கள் தெளிவு அடையாதவர்கள் ஆவர்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 03 May 2020 11:33

வயிரவி மந்திரம்!

Written by

ஓம்நமசிவய!

புகர்முகக் களிற்றுப் புண்ணிய அகலிடம் நிறைய
அமர்ந்தோய் செல்வம் அருள்க தேவா நல்லன
எமக்கருள் நாயக ஆக்கமும் ஊக்கமும்
அருள்வாய் காக்க எங்களை உன் கழலிணை போற்றி! !

#####

வயிரவி மந்திரம்!

1075. உயிர் எழுத்தான் பன்னிரண்டாம் எழுத்தான் ஐ என்பதால் உணர்த்தப்படுபவள் ஆதி பைரவி. பைரவி பீசத்தில் அ கரமாகிய பிரணவத்தையும் மாயையான ம என்பதையும் சேர்த்து ஓம் ஐம் என்று பதினான்கும் சொல் நிலையாய் விளங்கும் பதினாறு கலை முடிவு என செபித்தல் நலம்.

1076.. பதினான்கு எழுத்தாக உள்ள வயிர்வியே ஞானேந்திரிய அந்தகாரணங்கள் பதினான்கையும் சிவர்களுடன் பொருந்தி படைத்து காத்து துடைத்தல் முதலான செய்து சிந்தையான கமலத்தில் எழும் பெரிய சத்தி ஆகி முதலும் முடிவுமாக விளங்குபவள்.

1077. வயிரவியை வழிபடுவது நான்முகன், திருமால் உருத்திரன் ஆகிய மூவர் அழிகின்ற இயல்புடைய ஐம்பூதத்தால் ஆன உடலைப் பெற்ற அநாதியான ஆன்மாக்கள் அடையும் இன்பத்தை அடையாதரில்லை. ஆற்றல் பொருந்தியுள்ள திரிபுரையை வழிபட்ட நல்வினையை உடையவர் ஆவார்.

1078. புண்ணியனும் நந்தியும் தூய்மையானவனும் நாதத்திற்குத் தலைவனும் ஆன சிவன் விளாங்கும் முடியின் மீது வானராசி மண்டலச் சந்திரன் சுற்றும் வட்டத்தில் சூரியனும் சந்திடனும் சுற்றி வரும் வட்டம் முழுமையானால் அங்கு அக்கினி விளங்குவது அக்கினிகலை ஆகும், அக்கினி கலையை அறிந்து தியானிப்பவர் முழுமையான சிந்தையரான சிவம் ஆவர்.

1079. சிவபெருமானின் திருநந்தி சேவகனுடன் கயிலைமலையில் அனைத்துலகும் காப்பாற்றும் பெண் யானையைப்போல அம்மை வீற்றிருக்கின்றாள்.. திருவடிப் பேறு கருதி திருமுறைகளை நாளும் தொடர்ந்து சொல்பவர்க்கு அந்தம் ஆகிய இறைவனுடன் உறைந்து திரிபுரை அருள் செய்வாள்.

1080. குருமண்டலத்தில் நந்தி தியானித்திருப்பை அறிந்த பராசத்தி நாத வழியில் நேர்மையாக உயிர்களுக்கு உபதேசம் செய்து அருள்வாள். உபதேசிக்கப் பட்டவருக்கு சந்திர வட்டமான சோடச கலை பொருந்தி பேரொளி வடிவான் வயிரவியின் சூலம் வந்து உடம்பில் தோன்றி சோதியாய் மாறிடும்.

1081. துர்க்கை சூலத்தையும் மண்டை ஓட்டையும் கையிலே தாங்கியுள்ளாள். அவளுக்கு நான்கு கைகள். இரண்டு கைகளில் நாகபாசத்தையும் அங்குசத்தையும் தாங்கியிருப்பாள். திருமாலும் நான்முகனும் அறியாத வடிவுடைய சிவனுக்கு மேலான அங்கமாய் நிற்கும் மென்மையுடையவள் சூலினி துர்க்கை ஆவாள்.

1082. துர்க்கை மென்மையானவள். சிந்திற்கொடி போல் மேல் நோக்கியும் கிழ் நோக்கியும் படரும் தன்மையுள்ளவள். நெறி தவறுபவரை தண்டிப்பவள். கலைகளில் விளங்கும் அறிவை ஒன்றாகப் பெற்றவள். முருக்கம்பூ போன்ற சிவந்த நிறம் உடையவள். மணியின் ஒளி பொன்ற ஒளியை உடையவள். அவளது திருமேனி பலவகை மணிகளால் ஆன ஆடையை உடுப்பவள்.

1083. சந்திக்கும் பல கலைகள் இருக்கும் சந்திர மண்டலம் பல மணிகளால் இழைக்கப்பட்ட திருமுடியாகும். சொல்லப்படிகின்ற வானத்தை காதாக உடையவள். தோழியாய் இருப்பாள். ஒளியுடைய சூரியனையும் சந்திரனையும் விழிகளாய் உடையவள். பொன் போன்று ஒளிரும் ஒளியில் நிறைந்து விளங்குபவள்.

1084. சிரசில் விரிந்துள்ள எட்டு இதழ் தாமரையின் நடுவில் தெய்வத் தன்மையுடன் மனோன்மணியாக இருக்கின்றாள். அவளைச் சூழ்ந்து எட்டு கன்னியர் இருக்கின்றனர். ஒவ்வொரு சத்திக்கும் எட்டு எட்டு சத்திகள். அவர்கள் சத்தியைச் சூழ்ந்து தரிசித்து இருப்பர்.

1085. ஆராய்ந்து எடுத்த சிவப்பு வளை சங்கு சக்கரம் அணிகளை அணிந்து எட்டு திசைகளிலும் நிறைந்திருப்பவள். அண்டங்களையும் திசைகளையும் தாங்கி நிற்கும் திருவருட் செல்வி. தலையில் உள்ள சசிகர தளத்தில் பூசிக்க உரியவள்.

1086. வழிபாட்டிற்கு தேவையான நறுமணப் பொருள்களும் அழகிய மணமுள்ள மலர்களும் புதிய ஆடைகளும் நீண்ட தொலவிற்கு கேட்கும் இசை முழக்கமும் அரிய தலைவனின் திருவைந்தெழுத்தால் ஆன மந்திரமும் கூடிச் செய்யும் பூசையை ஏற்பவள் திரிபுரை ஆவாள்.

1087. காணும் பல தெய்வங்கள் அணியும் அணிகலன்கள் வெவ்வேறு அணிகளாய் இருக்கும் பொன்போல தேவியின் பேதமாய் தோன்றும் பல தெய்வங்கள் ஆகும். பெருமையாய் போற்றப்படும் சிவனும் நன்முகனும் திருமாலும் மற்ற தெய்வங்களாய் இருப்பது உஅலகத்திற்கு காரண்மான தேவியால்தான்

1088. எல்லா மந்திரங்களுக்கும் பொருப்பான சூட்சும ஓங்காரியை தியானிக்கும் சசிகரதளத்தில் வாயுவை வெளிப்படுத்துவதால் ஏற்படும் பூரண கும்பகத்தில் உள்ள காற்றை வெளியேற்றுவதால் அந்த பூரண கும்பகத்தில் இருக்கும் நாராயணி குருவானவர் நடுவே இருந்து சொல்லிய வேத உபநிடத்தின் முடிவாக இருக்கின்றாள்.

1089. மந்திரத்தைச் சொல்லுபவர் நடுவிரல் கீழ் உள்ள இறை இர்ண்டும் சிறு விரலில் உள்ள இறை நான்கும் சுட்டுவிரலில் உள்ள இறை நான்கும் ஆகியவற்றை சுற்றி பத்து எண்ணுவதை விட்டு மறையை மாற்றி நடுவிரலிருந்து சுட்டு விரல் எண்ணிப் பிறகு சிறுவிரல் இறை முடிய பத்து எண்ணுவது செந்தமிழ் முறையில் தேவியை வணங்குவதாகும் இது நந்தி எனக்கு உரைத்தது.

1090. சொல்லிய நவசத்திகளில் ஒன்றான மனோன்மணி முடியின்மேலும் மற்ற சத்திகளைத் தலையைச் சுற்றி பொருந்தும்படி எண்ணிப் உடலில் விளங்கும் எட்டு கலைகளை நந்தி மற்ற எட்டு கலைகளும் நிரம்பியதாய் உயிரில் விளங்கும்படி செய்தான்.

1091. உடலில் குழல் போல் இருக்கும் சுழுமுனையில் இருப்பவள் சத்தி. கருணைக் கண்ணுடன் உயிரில் மயக்கத்தைச் செய்யும் இருளை முற்றிலும் அகற்றும் குண்டலினியாக இருக்கின்றாள். மூலாதாரத்தின் மூலக்கனலில் ஏற்படும் மூல வாயுவுடன் சேர்ந்து ஒளி மண்டலத்தை உருவாக்கி திரும்புவளை நீ கண்டு கொள்வாய்.

1092. சொல்லப்படும் மந்திரத்தின் பொருளை உணர்ந்து சிரசின் மீது வீற்றிருக்கும் சத்திக்கு வணக்கம். மூங்கில் குழய் போன்றுள்ள சுழுமுனை வழி உச்சியில் பொருந்தி உயிர் அளிக்கும் ஆகுதியை ஏற்பாள். உச்சியின் நடுவே இருப்பது சிகா என்ற மந்திரம் என அறிவாய்.

1093. சிகையால் உணர்த்தப்பட்ட சசிகர தளத்தில் நிகழும் ஒளியை எல்ல இடத்திலும் பரவுவதாகக் கண்டு காமம் முதலிய எண்வகை இருள் பொருந்திய அங்கத்தை மாறும்படி செய்து மொத்தமாய் நின்ற சந்திரன் சூரியன் அக்கினி மண்டல் ஒளியாய் யோனி முதல் கபாலம் வரை இருப்பாள் என்பதை உணர்க.

1094. மனம் ஒளியைப் பெறுவதற்கு சிறுவிரலையும் அடுத்துள்ள மோதிர விரலையும் எதிர் வரிசையாய் மாற்றி மோதிர விரல் பொருந்தும்படி கட்டிப்பிடித்து கண்களை அமுக்கி நெரிப்பதில் நீண்ட நடுவிரல் பொருத்தத்தில் பார்வையைச் செலுத்தினால் ஒளியுண்டாகும் அதில் புகுவதற்கு முயல்க…

1095. பிராணன் வசப்படுவதற்கு சொல்லப்பட்ட மந்திரம் சொல்லவதற்கு அரிய ச காரத்தை முன்னிருத்தி அத்துடன் இ காரத்தைப் பிரித்துச் சேர்த்து மாத்திரையில் குறைந்த ம காரத்தை கூட்டிச் சொல்க.

1096. செபித்த சிவன் பிராணன்மேல் எழ சக்கரத்தால் சொன்ன சிவத்துடன் ய் ஆகிய ஆன்மாவும் உடன் உறையும்.. சுத்தமாயை இருக்கும்போது சங்கோசை தோன்றி விரிய அவ்வோசை நடுவில் திரிபுரை ஒளியுடன் விளங்குவாள்.

1097. நீல நிறம் உடையவள் வயிரவி. இரவில் இயங்கி இராசத, தாமத, சாத்வீகம் என்ற மூன்று குணங்கள் கொண்ட மனத்துள் வலியச் சென்று அருள் செய்பவள். தேவன் சிவபெருமானின் ஏவல் வழி நன்மை அருள்பவள் என்பதால் அவளை விரும்பி புகழுங்கள்.

1098. சிவன் அருளிய வேதம், இயங்குவன் நிற்பன ஆகிய உலகமிவற்றிற்கு முதலாகிய ஐம்பூதங்கள் நான்கு திசைகள் ஆலியன முன்று கண்களையுடைய தேவியின் வடிவமே. விரும்பும் இருள் வெளி தோன்றும் ஆன்மா ஆகிய ஒளிபிழம்பாய் இருந்து இவைகளுக்கு ஆற்றலை அளிப்பவள்.

1099 .குண்டலினி மூலாதாரத்தில் பொருந்தி அவளை சசிகர தளத்திற்கு கொண்டு வந்து ஞான சாத்திரங்களில் சொன்னவற்றை அனுபவமாய் பெற்றால் உடல் உயிர் சிவத் தன்மையை பெறும். அறியாமையுடைய உலகத்தில் பிறவிகள் ஏற்படா. சொற்களால் சொல்லமுடியா அழகுடைவளாகச் செய்வாள்.

1100 அழகான முடிமேல் இருப்பவள், விளங்கும் புருவத்தை உடையவள். கருங்குவளை ஒத்த கண்களை உடையவள். கண்களில் மகிழ்ச்சி ததும்ப ஒளியையுடைய ஆனந்த சுந்தரி. இவள மேன்மையான சிவத்தை வெளிப்படுத்தினாள்.

1101. சிவத்தை வெளிப்படச் செய்ததனால் உண்டாகும் பயனை உணர்த்த தெளிவை அளித்து மனத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்தி கதிர்களுடன் கூடிய பேரொளிகொண்ட பெருமானை ஒளிமிகச் செய்து என்னை ஆட்கொண்டாள்

1102. சந்திர மண்டலத்தில் தலையின் உச்சியில் இருக்கும் திரிபுரையே பலகோடி சீவர்களிடம் பொருந்தி பலகோடி உயிர்களையும் தாங்கியவளே. பதினாறு கலைகளையும் தன்னிடம் வரிசையாக பொருந்தியவள் வானத்து சந்திரன், சூரியன் அக்கினி என மூன்றையும் படைத்தனள்.

1103. தையல் நாயகி சசிகர தளத்தில் துறவியர்க்கு அருள்பவள். அருள் பார்வையால் உலகத்தின் மயக்கத்தை அகற்றும் மனோன்மணி. அவளை செபித்து பணிந்து வழிபடுங்கள் உங்கள் பிறவிப்பிணி உங்களிவிட்டு நீங்கும்.

1104. சத்தியின் தோல்கள் மூங்கிலைப் போன்றவை. தேலுக்குமேல் இருக்கும் சந்திர மண்டலத்தில் பொருந்திய குழலைப் போன்ற சித்ரணி நாடியில் விளங்குபவள். இளம்பிறை என்ற காமக் கலையைத் தாஞ்கி இருப்பவள். தூய்மையான கதிர்களை சடைமுடிபோல் தந்த சூலினி என் உள்ளத்தின் இடப்பக்கம் இருக்கின்றாள்.

1105. இன்பத்தை அளிக்கும் மூலாதாரத்தில் வீற்றிருக்கும் வாலைப் பெண். ஒப்பில்லாத தலைவி. தன்னை இயக்குபவர் இல்லாதவள். என் மலச்சார்புகளை அகற்றி தனியன் ஆக்கினாள். மனம் அவள் மடியில் நன்றாக பாடும்படி செய்து என்னை விரும்பி நின்றாள்.

1106. இடைகலை பிங்களை சுழுமுனை என்ற மூன்றும் நடுவில் உள்ள நாளம் போன்ற சித்ரணி நாடியில் பொருந்திய வாலையான சத்தி பல சத்திகளுடன் விளங்குபவள். அவள் காலணியுடன் கூடிய திருவடி அசைவினால் உண்டாகும் ஒலியுடன் உள்ளத்தில் பொருந்தி அமைதியுடன் இருக்கின்றாள்.

1107. அவளுடன் உறங்கும் போது மனோன்மணி எழுந்துவந்து ஒலிக்கும் வளையலை அணிந்த கையால் என் கழுத்தை தழுவினாள். அவள் சத்தியை என் வாயில் இட்டாள். உறங்க வேண்டா என்ற உபாயத்தைச் சோல்லியருளினாள்.

1108. இப்படி உபாயத்தை எனக்கு அருளிய மனோன்மணி உள்ளத்தில் உண்டாகும் காமம் முதலிய பகைவர்களால் ஏற்படும் கேடுகளை நீக்கி இறைவனிடம் நீங்காத அனபு ஏற்படும்படி செய்தாள். நாய் போன்று அசையும் உள்ளத்தை நீக்கி சுழுமுனை நடுவில் ஆசையை அடக்கி வைத்து அஞ்சாதே என்று எனக்கு அபயம் உரைத்தாள்.

1109. அம் எனும் பிரண்வ ஒலியை எழச் செய்பவள். அரிய தவத்தால் அடையத் தக்கவள். செம்மையான் சொற்களைச் சொல்பவள். சிவந்த ஒளியில் விளங்குபவள். அவளை அடைக்கலமாக வழிபட்டவர்க்கு அஞ்சாதே எனும் பிரணவ நாதத்தை அளிக்கும் இறைவி மனோன்மணியே என்று இறைவன் உரைப்பார்.

1110. நல்விணை ஆற்றியவர்களால் ஆராயப் பெறும் பெண்மணி. கரிய நிறம் உடையவள். ஐந்தொழிலுக்கும் காரணமானவள், நாராயணின் தங்கை. உடல் உயிர் உலகு என்பனவற்றை ஒடுக்கும் கோரமானவள். மகிழ்வுடன் உள்ளத்தில் வீற்றிருக்கின்றாள்.

1111. அவள் நாதத்தை வெளிப்படுத்துவாள். என் மனத்தில் விளங்கியிருந்து நீண்டநாள் பொருந்தியிருந்தும் உச்சியிலே உலாவி உணர்ந்து கலந்து இருக்கும் சந்திர கலைகளைத் தலையில் உடையவள் ஆவாள்.

1112. நெற்றிகண் உள்ள அர்த்தசந்திர ஒளியில் சிறப்படையும் மதி மண்டலத்தில் இரு கொங்கைப் பகுதிக்குமேல் மங்கை தழுவியபடி இருப்பாள். மேருமலையில் உச்சியில் சிவத்துடன்கூட அசைந்தாடிக் கொண்டு படர்கின்ற கொடிபோல் அங்கு இருப்பாள்.

1113. சத்தி மனதில் இழை போன்ற வடிவினளாய் இருக்கின்றாள். உள்நாக்குப் பகுதிக்கு மேல் நான்கு விரல் அளவு பாதையில் புகுந்தால் அறிவான சிவத்துடன் கூடி ஒன்றாய் அருந்தக் கூத்தின் பயனை ஆதிசத்தி அடைந்தாள்.

1114. எல்லாவற்றிற்கும் காரணமான அவளுக்கு முறபட்டது இல்லை. அவளுக்கு என ஒரு காரணம் இல்லை. ஆனால் அவள் எல்லாவற்றிற்கும் காராணமானவள். சோதியாகவும் சோதியற்றும் உள்ள அவள் சுகம் பொருந்திய மேலான அழகுடையவள். இன்பத்தை அளிக்கும் மாது அவ/ள். சமாதியை அளிப்பவளும் அவள். அவளே மனோன்மணி. மங்கலத்தை அளித்து என் மனத்தில் பிரிவின்றி உள்ளாள்.

1115. பராசத்தி மனதில் பிரிவின்றி என்னை விரும்பி இருந்தாள். சிவ வடிவான தேவிக்கு வணக்கத்தைச் செலுத்தினேன். நான்முகன் படைப்பை ஆராய்ந்து உணரும் வல்லமை அளிக்கும் நிலை அதுவே. பற்றுகளை நீக்கி அருள்வாள் நூல் வாயிலாகப் பெற்ற அறிவால் சொல்லப்படும் பிதற்றல்களைப் போக்கினாள்.

1116. பேதை மனிதர்கள் உண்மையை அறிந்து கொள்ளாமல் வாதம் செய்து காலத்தை வீணாக்குகின்றனர். அவள் முயற்சியால் வீடு பே/ற்றைத் தரும் முழு முதல் தலைவி. மீன் போன்று இமையாது நாட்டம் உடைய அவள் ஒலியை உண்டாக்கும் செவ்வொளி. அருள்வழி நி/ற்கும் திருமுகம் உடையவள். மனத்துள் விளங்குபவள்.

1117. உள்ளம் இதயம் நெஞ்சம் என்ற முன்றினுள் அண்ணாக்குப் பகுதி தொடங்கி உச்சித் துளைக்குச் செல்லும் சிற்ய வழியில் நாதத்துடன் இருக்கும். எல்லாம் அளிக்க வல்ல அறிவான சிவத்தின் கருத்தின்படி தொழில் ஆற்றும் சுத்த மாயை மூலாதாரத்தில் அடங்கிய ஒளியாய் இருந்து படைத்தலில் கருத்துடன் இருக்கும் கன்னி ஆவாள்.

1118. சத்தி கன்னித்தன்மை கெடாதவள். காதலியாய் சிவத்துடன் பொருந்தி ஐவரைப் பெற்றாள். தூய சொல்லாகிய நாத வடிவுடையவள். வேதங்களால் புகழ்ந்து பேசப்படும் சிவனும் அங்கே உ:ள்ளான். இந்த மாயை இருளாகவும் இருந்தது வியப்பானதே.

1119. சத்தி இருள் மயமாய் இருப்பது ஞானவெளியில் இருப்பது சிவம். புண்ணியர்களுக்குப் பொருளாவது சிவத்துடன் கலந்த சிவபோகத்தில் விளையும் இன்பம். தெளிந்த சிந்தையால் நாதத்தை வணங்கினால் சிவம் நாதத்தை இடமாய் கொண்டு அருள் செய்யும்.

1120. பராசத்தி ஆதியாயும் அனாதியாயும் இருப்பவள். பாதி திருமேனியைக் கொண்டவள். எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக இருக்கின்ற நாத சத்தி அனைத்தையும் தன்னிடத்தே நிலைக்கச் செய்பவள், மனோன்மணி நித்திய சுமங்கலி. அவளை நினைக்கும் மனத்தில் நிறைந்து விரிந்து இருப்பாள்.

1121. சொல்லிய் வண்ணம் உயர்வான கலை பிரண்வமே என அறியாது மக்கள் உள்ளனர். சத்தி சாதியும் அவற்றால் விளையும் பேதமும் தத்துவங்களுமய் நிற்பவள்.. இதை ஆத்ம தலைவி எனக்கு கூறினாள்.

1122. உயிர்களின் தலைவி நல்ல முறையில் உயிர்களைப் பக்குவம் செய்யும் வீணாத் தண்டில் விருக்கும் வாகீசுவரி. நன்மைகளை அளீப்பவள் என அவளைத் தேவர்கள் புக்ழ்ந்து பேசும் தலைவி. சிவத்திற்குரிய சிவமங்கை. விரும்பி வழிபாடு செய்தால் வினைகள் போக்குபவள்.

1123. வினைப் பய்னைக் கொடுத்தவரது உள்ளத்தில் ஒளியாக எழுந்தருளி தன்னை அடைக்கலமாக அடைந்த வாக்கு உண்மைப் பொருளாக இருப்பவள். வழி வழியாக என்னை அடிமை ஆக்கியவள். ஈசனும் அவளுக்கு கணவணுமான சிவத்தை பார்க்கும்போது அநாதி ஆவான்.

1124. தனக்கு தேவி முதலாயும் பழமையாயும் ஒரு காரணம் இல்லாதவளாயும் எல்லாவற்றிற்கும் காரணமாயும் இருப்பவள். வாக்குக் கடவுளாய் இருந்து வேதியர்க்கு ஆரய்ச்சியைத் தந்தாள். நிலைத்து நின்ற பேரொளியாய் சிவத்திற்கு வடிவமாய் நிற்பவள். பாதிமேனியை அடைந்தவள். பன்னிரண்டு இராசிகளை உடைய சூரிய்ன்போல் ஒளியை உடையவள்.

#####

வெள்ளிக்கிழமை, 01 May 2020 10:13

சத்திபேதம்!

Written by

ஓம்நமசிவய!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

#####

சத்திபேதம்!

1045. திரிபுரை சுத்த மாயையாக, அசுத்த மாயையாக, விந்துவாக, வைகரி வாக்காக, ஓம் என்ற பிரணவமாக, உள் ஒளியாக, ஓர் ஆறு நிலையில் மந்திரமாக, சத்தியினது மூர்த்தியாகவும் அவற்றை கடந்தும் விளங்குவாள்.

1046. திரிபுரை அக்கினி, சூரியன், சந்திரன் என்ற மூன்றாய் விளங்குபவள். பேரழகுடன் வான் வடிவினள். உலகை காக்கும் செவ்வொளியாக உள்ளவள். நாராயணி பலநிறங்களை உடையவள். மகேசன் சத்தியாக கருநிறத்தில் இருப்பவன். நினைப்பவர் மனத்தில் உறைபவன். திரிபுரையே இப்படி பல சத்திகளாக இருக்கின்றாள்.

1047. சுயமாய் அமைந்த முப்புரங்களில் தானே மூன்று வடிவம் ஓர் உருவம் என்ற தனமை உடையவள். தானே செம்மை வெண்மை நிறம் கொண்டவள். இன்பத்தையும் வீடுபேற்றையும் கல்வியையும் அளிப்பவளாய் இருப்பவள்.

1048. திரிபுரை நாதத்தையும் நாதம் கடந்த நாதாந்த நிலையையும் அருள்பவள். பரவிந்துவாக இருந்து பெரிகிய உலகம் முதலான அண்டங்களை அளிப்பாள். பரையும், அபிராமியும், அகோசரியும் ஆன அன்னை அன்புகொண்டு தழுவி அறிவை வழங்குவாள்.

1049.. அழகான காலணிச் சிலம்பு ச்வந்த பட்டுடை கச்சணியும் கொங்கை, மலர் அம்பு, கரும்பு வில், எழுச்சி தரும் அங்குசபாசம் அழகியமுடி கரிய நீலநிறக் குண்டலம் ஆகியவற்றிற்கு உரியவள்.

1050. குண்டலத்தைக் காதில் அணிந்தவள், கொல்லும் தன்மையுடைய வில்போல் வளைந்த புருவத்தை உடையவள். செந்நிறத் திருமேனி கொண்டிருப்பவள். தோளணி, கழுத்தணி ஒளிவிடும் முடி சந்திரன் ஆகியவற்றை உடைய சண்டிகை. நான்கு திசைகளை உடைய உலகைக் காப்பவள்.

1051. உயிர்கள் உய்யும் பொருட்டு உயிர்களுடன் கலந்து நிற்கும் அன்னை திரிபுரையாவாள்.. மிகவும் பழமையானவள். குறைவற்ற அழகு உள்ளவள். சீவர்களின் தலைமேல் உள்ள சிகையில் விளங்குபவள். அறியும் கண்களை உடைய்வள். நான்கு திசை பொருள்களை தன்பால் இழுக்கும் தன்மை உடையவள். தூய சகசிரதளத் தாமரையில் இருக்கும் சுத்த வித்யா தேவி அவள்.

1052. தூய்மையான கச்சினையும் மாலையையும் கூடிய மார்பை உடையவள். இன்பத்தின் உற்றாகும் இயல்பை உடையவள். சீவர்களை ஆட்கொள்ளும் பெரிய சத்தி, பராபரி, மனமான காட்டில் வாழ்பவள்.. தானே படைத்துக் கொண்ட வடிவம் உடைய ஞான வடிவானவள். தானே சந்திர மண்டலமாக திகழ்பவள்.

1053. சந்திரமண்டலத்தில் இருக்கும் அச்சத்தியை ஒளி மண்டலத்தில் வாழும் தேவர்கள் உணராமல் இல்லை. ஒளி மண்டலமான தேவியை அறியாது செய்யக்கூடிய தவம் வேறு ஒன்று இல்லை. சந்திரமண்டலத்திலிருந்து நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஐவரும் சீவர்களை தொழிற்படுத்துகின்றனர். அவளை அறியாது செய்யும் வீடு பேறு நெறியை நான் அ/ற்றியேன்.

1054. ஞானியர் பராசத்தி ஆனந்த வடிவுடையவள் என்பர். அறிவு வடிவினள் என்பர். உயிர்கள் செய்யும் செயல் அனைத்தும் அவள் விருப்பின் வழி நடப்பது என்பர். சிவனும் அவளிடம் வீற்றிருப்பவரே என்பர்.

1055. சிவம் எங்கு உள்ளாரோ அங்கு இருப்பவள் தையலான நாயகி. உடல் எங்கு உள்ளதோ அங்கு உயிருக்கு உயிராய் காவலாய் இருப்பவள். வான் எங்கு உள்ளதோ அங்கும் அதற்கு அப்பாலா பரவெளியிலும் விளங்கும் தேவி இருப்பாள். இவைகளை ஆராய்ந்து அறிக.

1056. பலவகையாலும் பராசத்தி,யே மேன்மையானவள். எல்லாவற்றையும் தாங்கும் ஆதார சத்தியாய் நிற்பவள். அவள் தன்மையை உணர்க. எல்லா ஊழிகளிலும் உயிர்களைக் காக்கும் ஆற்றல் பெற்றவளும் அவளே. புண்ணியத்தின் பயனைத் தருபவளும் அவளே.

1057. உயிர்களுக்கு இன்பத்தை ஊட்டி குண்டலி சத்தியுடன் பொருந்தி சீவர்களுக்கு பரிபாகத்தை செய்யும் பராசக்தி அவள். அவள் அடியார்களுக்கு நாளும் ஒளியுடலை அளித்து பரிபக்குவம் ஏற்படச் செய்யும் கொழு கொம்பானவள்.

1058. உயிர்களுக்கு கொழு கொம்பாய் இருப்பவளை குவிந்த முலையை உடைய மங்கையை தேன் சிந்தும் மலர்களை அணிந்த முடியை உடைய திரிபுரையை வானோர் விரும்பும் அவளை சிவந்த பவளம் போன்ற திருமேனி உடையவளை நான் நம்பி எனது மனதில் விருப்பத்துடன் வ்ளர்த்துக் கொண்டேன்.

1059. .உல்கில் வைத்த பொருளும். அவற்றுடன் பொருந்திய உயிர்க் கூட்டமும் பத்து திசைகளில் நிறையுடன் காக்கும். பத்து முகங்களை உடையவளும் நடப்பாற்றலான பரையும், வளப்பாற்றலான பராபரையும் அந்தக் காரணம் நான்கையும் செயல்படச் செய்பவள் ஆகிய அவள் ஸ்ரீவித்தைக்கு தலைவி ஆவாள்.

1060. தூய வித்தைக்குத் தலைவி அகன்ற மார்பிடத்திற்குமேல்சூழ இருக்கும் சந்திரமண்டலத்தில் இருப்பவள். அழியாத தவத்தைச் செய்யும் தூய நெறிகளை அருளிய தோகைமயில் போன்றவள். எல்லா கலைகளையும் வென்ற இளமை குன்ராத கன்னி என் மனத்தினுள் முழுமையாய் நிற்பாள்.

1061. இப்படி இருக்கும் பராசக்தி முழுக்கலையுடன் என் உள்ளத்தில் பொருந்தி ஏழு உலகத்தினரும் தொழச் சகசிரதளத்தில் ஒன்றுபட்டு மனோன்மணியாக மங்க பொருளாய் நான் வேறு அவள் வேறாய் பிரித்து அறியதபடி நின்றாள்.

1062. ஒத்து அடங்கியிருக்கும் சசிகரதளத்தில் இருக்கும் பராசத்தி, பெருந்தலைவனான சிவனை மகிழ்ந்து சேரும் மனோன்மணியாக மங்களமாய் திகழும் சிவசத்தியை உள்ளத்தில் நிறத்தும் வழியை தெளிவுபெற்று சிலர் அறியாமல் இருக்கின்றனர்.

1063. சிவ ஒளியில் பொருந்தி எல்லாவற்றையும் உணர்ந்து உடனாய் நிற்கும் இயல்பாகவே மணம் பொருந்திய மலருடன் கூடிய கூந்தலை உடைய சத்தியும் தானுமாகக் கூடி நிற்கும் அந்நிலையில் எழுந்தருளியிருக்கும்போது நினைப்பவர்க்கு நல்ல நிலைதனை அளிப்பவள்.

1064. எல்லோரிடமும் ஏற்புடையவளாய் விளங்கும் பராசத்தி ஆனந்த வடிவான அழகி. ஓட்டுடன் பொருந்திய புளியம் பழத்தைப் போல் விளங்கும் எனது இயலபை பக்குவம் உண்டாக்கிச் சிவகதியை காட்டினாள். தன் ஒளியில் என்னை ஒன்றாக்கிக் கொண்டாள்.

1065. உலகினர் உண்டு எனவும் இல்லை எனவும் சொன்ன சத்தியே நுண்ணுடலைப் பருவுடலாய் செய்தாள். வளமையான தில்லையம்பலம் என்ப்படும் சசிகரதளத்தில் நிலை பெற்று நிறபாள். ஆன்மாவின் பந்த மோட்சங்களுக்கு காரணம் அறிவு வடிவான சிவத்திடமும் அதைச் செயலுக்கு விடுவது சத்தி என்பதையும் உலகத்தார் உணர்வதில்லை. ஆன்மாவின் அக்கினி, சூரிய், சந்திர என்ற மூன்றிலும் பராசத்தி நிலையாக இருக்கின்றாள்.

1066. சத்தி சீவர்களின் உயிரும் உடலுமாய் இருப்பவள். சிவகதியில் உயிரைச் சேர்க்க விரும்பிய பராசத்தி சந்திரமண்டலத்தை நோக்க ஊர்த்துவ முகம் கொண்டு இருந்தாள். உடலில் அவள் இருந்தபோது என் உணர்வில் புகுந்து ஒன்றி நிற்பாள். வேதமான வாக்கை ஏந்தி நிற்கும் ஒளியாவாள்.

1067. சொல் வடிவில் இய்க்கம் கொள்பவள் இறைவி. அவள் மூன்று கண்களை உடையவள். படிகம் போன்ற தூய வெண்ணிறமுடையவள். வெண் தாமரையான சசிகரதளத்தில் விரும்பி இருப்பவள். நாதமயமானவள். உங்களது தலையில் அவளின் திருவடிகளை சூடி வாயினால் துதி செய்யுங்கள்.

1068. அவளைத் துதித்து அவளது இரு திருவடிகளான சூரியன் சந்திரர்களை ஒன்று சேர்த்துக் வணங்கி ஒலியும் ஒளியும் அமையும்படி இருங்கள். உள்ளத்து தியானத்தில் அங்குசம் பாசம் கரும்பு ஆகியவற்றுடன் பொருந்திய மெல்லியலை ஆதித் தலைவியாக போற்றுங்கள்.

1069 .படைப்பு நிக்ழ்வு பெருகச் செய்த குளிர்சியான் நீர்- பாற்கடலில் இருக்கும் திருமாலின் தங்கை நாராயணி, சசிகரத்தளத்தில் வீற்றிருப்பவளும் ஆன இறைவியின் மந்திரத்தை சிவசத்தியாய் எண்ணிப் பல்முறை செபித்தால் நுண்மையான் உடல் ஒளிமயமாக மாறி இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற முக்காலமும் தோன்றும்.

1070. சத்தி அ கார முதல் உன்மனி வரை உள்ள பதினாறு கலைகளையும் உருவமாய்க் கொண்டவள். வேதங்களில் பரமாகவும் அபரமாகவும் துதித்துப் பாடப்படுபவள். உயிர்களின் இருப்பிற்கு ஆதாரம்.. நாதம் நாதாந்தத்தில் இருக்கும் சிவத்திற்கு அருட் சத்தி ஆவாள்.

1071. உண்மைப் பொருளைத் தனக்கு உரிமையாய் பெற்று அருள் வழங்கும் தன்மையுடைய எல்ல புவனத்திற்கும் தலைவியான திரிபுரை மய்க்கம் தரும் பிரபஞ்சத்தை பற்றி சீவர்களின் சித்தத்தை மாற்றி நிலையான பந்தம் இல்லாத உலகங்களைப் பொருந்திய திருவடியை நான் வணங்குவேன். அனுபவத்தில் கண்ட இவ்வுண்மையை மற்றவர்க்கு எடுத்துச் சொவீர்களாக.

1072. தேவியைச் சுற்றியுள்ள ஏழு மங்கையரில் ஒருத்தியான வராஹி பன்றி முகத்துடன் கூடிய அடையாளமாக இருப்பவள், இழிவான உடம்பை இடித்துத் துன்புறுத்தும் உலக்கையுடன் கலப்பையும் உடையவள் குற்றம் இல்லாத ஊன் உடலை கடந்து தியானிப்பவர் மனத்தில் சிறப்புடன் இருப்பாள்.

1073. ஓம் என்ற பிரணவ வடிவான தேவியே ஐந்தொழில் நிலைக்கு வரும்போது ஐந்தொழிலுக்கும் அவள் தலைவி. பச்சை நிறம் உடையவள். அகங்காரத் தத்துவத்துடன் பொருந்தி இருக்கும்போது சதாசிவம், மகேசுவரர், உருத்திரன், திருமால், நான்முகன் ஆகியவர்களைத் தன் அம்சமாக உருவாக்கினாள். ஹரீம் என்ற மந்திர பீஜத்துள் இருக்கின்றாள்.

1074. எல்லாவற்றிற்கும் பரசத்தியே தலைவி. தானே வாக்கு வடிவமாக விளங்கி பதினாறு வித்தைகளுக்கும் தேவ உலகங்களுக்கும் மன மண்டலத்திற்கும் நுண்ணறிவைக் கடந்த நாதாந்தமும் ஆகி தானே சிவகதியை அளிப்பவள் ஆவாள்.

#####

வியாழக்கிழமை, 30 April 2020 10:33

நவகுண்டம்!

Written by

ஓம்நமசிவய!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா

####


நவகுண்டம்!

1015. நவகுண்டம் பற்றி சொல்லின் அந்த குண்டங்களுள் பேரொளி எழுந்து நிற்கும். அத்தகைய நவகுண்ட சோதி எல்லா நன்மைகளையும் தரும். அதுபற்றி சொல்லப்போகின்றேன்.

1016. சொல்லும் அக்குண்டத்தில் எப்போதும் சிவக்காதலால் பிருதுவி மயமான நாற்கோணம் மகிழ்ச்சியைத் தரும்.. படைப்பு முதலிய ஐந்தொழில்களும் நன்மையாகும். ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களும் கெடும். மூலாதாரத்து அக்னி மேல்முகமாகி மண்டலங்களைக் கடந்து நிற்பதைத் தவிர அதன் பயன் சொல்ல அறியேன்.

1017. மேல்நிலையை அறிந்து உள்ளே வான்மயமாகிய அப்பொருள் அதைப் பற்றாகக் கொண்டபோது எண்ணத்தில் பொருந்திய செம்மையான சுடர் பிருதுவி முதலான புவனங்களையும் அண்டப் புறங்களையும் கடந்து நிற்பதை நான் அறிந்தேன் அஃது எழுவதை உணர்ந்தேன்.

1018. அகத்தே பொருந்திய குண்டத்தில் தோன்றும் ஒளிவடிவாய் திகழ்வர். ஈரேழு மண்டலங்காளையும் படைத்து துடைக்கலாம். பழைய வேதம் குண்டத்தின் பெருமையாகச் சொன்னவை எல்லாம் இந்நூலில் சொல்கின்றேன்.

1019. எடுக்கப்பட்ட அக்குண்டத்தில் சோடச கலைகள் விளங்கும். மூலாக்கினி காம செயத்துடன் சுழுமுனை நாடி வழியாய் மேல் எழுவதைக் கண்டு கொள்ளலாம். அவ்வாறு கண்டு கொள்பவர்க்கு வெம்மையை அளிக்கும் வலிய வினைகள் பொருந்தாது.

1020. முக்கோண வடிவமாக மூலாதாரமான குண்டத்தில் விளங்கும் நான்முகன், திருமால், முதலிய ஐவரும் சத்தியோசதம், வாமதேவம், தத்புருடம், அகோரம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்களைக் கொண்ட சிவமாக உடலின் உள்ளேயும் வெளியேயும் விளங்குவர். தலையின்மீது சூரிய வட்டம் முழுமையடைந்து பன்னிரண்டு இராசிகளும் அமையும்படி தியானத்தில் உறுதி உடையவர்க்கு சிரசில் சிவசூரியன் விளங்குவான்.

1021. நவகுண்ட வழிபாடு செய்தால் தலையும் முகமும் நல்ல ஒளியைப் பெறும். இடைகலை, பிங்கலை ஆகிய இரு கலைகளின் சுழுமுனை ஒளியாய் விளங்கும். அன்னத்தால் ஆன அன்னமய கோசத்தில் வேகத்துடன் கூடிய இலிங்கம் ஒளியுடன் உள்ளேயும் வெளியேயும் தோன்றும். இதுவே நனமை அளிப்பது என அம்மை சக்தி உரைத்தாள்.

1022. திவ்விய இலிங்கம் நன்மையை அளிக்கும் என்ற பராசக்தியே ஆன்மாக்கள் கடைத்தேறுவதற்கு உரிய சொல் பிரணவம் என்றாள். முடிமுதல் அடிவரை ஒளியாக எல்லாவற்றையும் ஆக்கி நிற்கும் சக்தியை நல்ல குருவிடம் சென்று கேட்டறியாதவர் கற்ற கல்வி கல்வியாகாது.

1023. இளம்பிறை பொருந்திய ஒளியுடைய சுவாதிட்டானத்தில் இடைகலை பிங்கலை என்ற இரண்டு ஒளிகள் பாம்பைப் போன்று எல்லா திசைகளுக்கும் செல்லும். நான்கு இதழ்களையுடைய பாம்பு வடிவான வானக் கூற்றில் முன்னர் பரவும் மேலான பேரொளி என் உள்ளத்துள்ளே இடம்கொண்டு விளங்கும்.

1024. மூலாதாரத்தை இடமாகக் கொண்ட சிவாக்கினி ஊன்றிய கால் சூரியன் என்ற பிங்கலை ஆகும். நீர்ப்பகுதியான் மணிப்பூரகத்தை நோக்கித் தூக்கி ஆடும் கால் இடைகலை ஆகும். ஊடல் என்ர மண்டலத்தை இடைகலை பிங்கலை என்ற இரண்டு கலைகளால் ஆறு ஆதாரங்களையும் செழிப்படையச் செய்து முகத்தின்முன் சிவாக்கினி வந்து தோன்றும்.

1025. சந்திரன், சூரியன் அக்கினி ஆகியவற்றைக் கண்களாக கொண்ட சிவனே முழுச்சுடராக விளங்கியது. அந்தச் சிவனே எல்லாத் தத்துவங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டான். சிவனே திசையெல்லாம் கணகளாக்கித் தன்னை சுற்றியுள்ள எட்டுத் திசைகளையும் கண்டான். எல்லா கணங்களுக்கும் பெருமானே தலைவன்.

1026. தலைவனான சிவனிடத்து ஆறு சுடர்கள் ஆறு வட்டங்களாக தந்தையின் முன் ஆறுமுகம் தோன்றி. அதில் கூத்தனாகச் சிவன் கலந்திருந்ததால் கந்தன் சிவனுக்கு மகன் முறையாக ஆயினான் என்பதை தெரிந்து கொள்வீர்.

1027. மூலாதார குண்டமாக பொருந்திய நான்கு இதழ் சக்கரத்தில் இருக்கும் சுழுமுனை நாடி இடைகலை நாடி பிங்கலை நாடியின் இயலபை விரியச் செய்யும். இரு நாடிகளும் பக்குவம் பெற்றுச் சுழுமுனையில் இருக்கும் அக்கினிக்கலை விரைவாக எழுவதால் இத்தன்மையுடையோர் தேவர் ஆவார்.

1028. ஒளி உடல் பெற்றவர் நம் ஒளியுடலில் உலகம் முழுவதும் உலவியும் நிலையான ஒளி பெற்று திகழ்வர். பிரவத்ட்தை அடைய முற்படுபவர் எல்லார்க்கும் நிலையான் ஒளியை வழங்கும் அருட்கண் உடையவராக விளங்க அவர் கண்களில் சக்தி இருப்பாள்.

1029. ஒளிக்கு இருப்பிடமான பிரண்வ குண்டம் தான் இருந்த ஆறு ஆதாரங்களிலும் இச்சக்கரங்கள் பற்றிய முப்பத்தாறு தத்துவங்களையும் தன்னுடன் இருத்திக் கொண்டதாகும். பிரணவம் உள்ளும் வெளியேயும் உள்ளது. வியோம ரூபினி வியாபினி முதலிய கலைகளில் தொடர்பு கொண்டு பூத உடலை எங்கும் எடுத்துச் செல்லலாம்.

1030. எல்லையில்லாத பிரணவத்திற்கு எடுக்கும் பாதங்கள் மூன்று. கூரிய முகங்கள் இரண்டு. ஆறு கண்களும் கற்று எண்ணும் நாக்குகள் ஏழும் கொம்புகள் நான்குமாக இக்குண்டம் பொருந்தி விளங்கும் இடம் ஆகும்.

1031. எல்லை இல்லாத ஆன்மாவான பிரணவத்திற்உ இருப்பிடம் இல்லை. அதை ஆள்ந்து வரயரை செய்பவரும் இல்லை. அதைச் சொல்லும் சொல்லும் இல்லை.ஆன்மாவை பத்து என்ற எண்ணின் வடிவமான ய கர்மாக அறியலாம்.

1032. இரு கண்களில் இருக்கும் அ கர உ கரங்களை புருவத்தின் நடுவில் ஒன்றாக்கி அவ்விடம் எட்டான அ கரமான சந்திரக்கலையைக் கொண்டு தொடங்கி சுவாதிட்டமான ஆறு இதழ்களும் மூலாதார நான்கு இதழ்களும் மாற்றம் பெற தேன்போன்ற சுவாதிட்டான சக்கரம் மலர விந்து வேற்றியடைந்து உண்ர்வாகக் கலந்த ஆறு ஆதாரங்களும் ஒன்றுபட்டு மேல் நோக்கி சக்தியான பார்வதியிடம் சேர்ந்து நிற்கும்.

1033. பார்வதியின் கணவனான சதாசிவமூர்த்திக்கு மூலாதரச்சக்கரத்தில் உள்ள வ,ஷ,ய,ஸ, கலைகள் நான்கு, பஞ்சப்பிராணனுக்கு தலைவர் ஐம்பூதங்களில் சிவமும் சக்தியாய் விளங்குவதில் பத்துமுகங்களும் அவற்றில் ஒளிமயமாய் உள்ளதை அறீயும் பத்துக் கண்களும் சுவாதிட்டானத்தில் இருக்கும் கால்கள் இடைகலை பிங்களை இரண்டு ஒளிமயமான முடி ஒன்று இடைகலை பிங்கலையாகியவை பூதங்களில் உண்டாக்கும் நாதம் பத்து ஆகத் தத்துவங்கள் இருபத்தைந்து.

1034. ஆன்மாவிற்கு அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம், என ஐந்து கோசங்கள். மற்றவரால் அளவிட்டுச் சொல்லக்கூடிய தத்துவங்கள் இருபத்தைந்து கொண்டது உடல். பனிப்படலம் போன்ற சகசிரதளம் குண்டம் விரிவடைந்து விளங்கும்போது பஞ்சு பறப்பது போன்ற கதிர்களையுடைய ஒளி பொருந்த மேலான சுடரும் நாதமும் ஆன அக்னியைக் கூடுதல் முக்தி அடைவதாகும்.

1035. மல முத்தரான சுடராய் விளங்கும் பரம்பொருள், கற்று அவற்றில் மயங்காது நிற்பவர் கருத்தில் எழும் அப்பொருளை உலகப்பற்று நீங்கி பரந்துள்ள குண்டலியான ஒளியின் துணையால் கடந்து சென்று பகை நீக்கி அசையாதிருந்தவர்கள் அந்தப் பொருளுடன் இனைந்திருப்பர்.

1036. சேர்ந்த ஐந்து கலைகளும் பொருந்தும் பிரணவம் இருக்கும் குண்டத்தில் நிலைபெறும்படி அதன் திசைகளும் பொருந்தும். கீழ் நோக்க்குவதுடன் பாய்ந்து போகும் பூதங்களை இயக்கும் மூலத்தீயை வெறுத்தவர் என்றும் பிரணவத்துடன் கலந்தவர் ஆவார்.

1037. கடலால் சூழப்பட்ட ஏழு உலகங்களையும் நிலைபெறும்படி செய்த ஒப்பற்றவனை நினைந்து சேருங்கள். பலனை எதிர்பார்த்துச் செய்த யாகத்தைக் கைவிட்டு பலனை எதிர்பாராது இறைவனை அடைவதே முடிவு என்ற ஞானம் பெற்ற தேவர்கள் மெய்யான சிவத்துடன் பிரிவில்லாமல் இருப்பவர்கள் ஆவார்கள்.

1038. தாமரைப் போன்ற மலர்ந்துள்ள சகசிரதளாத்தில் இருக்கும் இறைவனுக்கு இடைகலை, பிங்கலை நாடிகளே இரு திருவடிகள். சுழுமுனையோ மூக்கு. மலர்ந்து எழும் சிவந்த ஒளியே முகம். சந்திரன் சூரியன் ஆகியவற்றுடன் இருக்கும் அக்னியே நெற்றிக்கண். குடுமிக்குமேல் உள்ள இடத்தில் இதை உணர்ந்திருக்க.

1039. உத்தம சிவன் மூலாதாரத்தில் இருக்கும்போது ஒரு பாலன். நடுத்தர வயது என்ற இளமைப் பருவம்பெறும் போது சக்சிர தளத்தில் ஈசான் மூர்த்தி, அப்போது தலையின் பின்பக்கத்தில் உள்ள சிறு மூளையின் ஆற்றல் பெருகி உச்சிக் குழியை அடையும். ஆறு ஆதாரங்களையும் தாண்டிச் சென்ற அக்கினி கலை ஆன்மாவைத் த்ழைக்கச் செய்யும்.

1040. சித்திரணி என்ற நாடி வழி சென்று விளங்கும் பிரணவம் என்ற குண்டம் மூலாதாரம் முதல் சகசிரதளம் வரை ஒன்றாய் விளங்கி முறையாக ஏழு ஆதாரங்களிலும் விரிந்த ஒளியைச் சோம்பல் இல்லாது கண்டல் மிகுந்த செல்வம் பெற்றவர் ஆவார்.

1041. செல்வமாய் வளர்கின்ற மூலாக்கினியை கற்கும் சாதனமாய்க் கொண்ட குரு எப்போதும் உபதேசம் செய்யும் ஆற்றல் பெறுவர். உலகை நடத்தும் அருட்செல்வராக திகழ்ந்து அந்த தீயை அன்பு கொண்டு விரும்புவர்.

1042. எல்லா இடத்திலும் பரவியுள்ள சோதியான சிவனை அன்புடன் ஆய்ந்து அறிபவர் இல்லை. அந்தப் பேரொளியை உடலான ஓம குண்டத்திலே காத்து உள்ளே தியானம் செய்பவர் அறிவால் முதிர்ந்தவராய் கோடி யுகங்கள் காண்பர்.

1043. பழைய ஒன்பது குண்டங்களையும் ஒருசேர அகத்தில் கண்ட யோகி ஒளிமயமாய் எழும்படி செய்வான். யோனி குண்டத்தைக் கண்டு பாயும் கருவைப்போல உலகைத் த்னக்குள்ளே காண்பதே சிறந்த சாதனம்.

1044. நாற்கோணம், முக்கோணம், அர்ந்த்த சந்திரன், வட்டம், அறுகோணம், எண்கோணம், பதுமம், யோனி, நீள்வட்டம் ஆகிய ஒன்பதும் குண்டங்களாகும்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26951709
All
26951709
Your IP: 18.206.76.160
2024-03-29 18:37

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg