gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

சாஸ்திசம்பி! (60)

ஓம்நமசிவய!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!


#^#^#^#^#

 

3.பிறப்பு சம்பந்தமான தோஷங்கள் நீங்க!

கிரகங்களில் (வீடுகளில்) கிரகப்பிரவேசம், உபநயணம் (பூணூல் அணிவித்தல்) திருமணம், சீமந்தம், அன்னப்ராசனம் (குழந்தைகளுக்கு முதல் பிரசாதம் அளித்தல்) போன்ற கைக்காரியங்கள் நிகழும்போது மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த தந்தை, தாய் வழியினருக்கு “நாந்தீச்ராத்தம்” எனும் சிரார்த்தத்தை (ஆண்டுதோறும் செய்வதைப் போன்றே) வஸ்திரம் அளித்து போஜனம் செய்வித்து, தட்சணை கொடுத்து அவர்களை வணங்கி அனுக்கிரகத்தைப் பெறவேண்டும். அப்போது நம் கிரகங்களில் நடைபெறும் ஒவ்வொரு சுபகாரியத்திற்கும் நம் முன்னோர்கள் மனமுவந்து எழுந்தருளி சுபகாரியங்களை நடத்திக் கொடுத்து பரமானுக்ரகம் செய்கின்றனர் என்கிறது வேதங்கள்.

ஜாதகர்மா- தொப்புள்கொடி அறுபட்ட பிறகு முதன் முதலாக வேத மந்திரங்களைச் சொல்லி பிறந்த ஆத்மாவின் உடல்- குழந்தைக்கு பொன் நகையால் தேன் பால் கலவையை தொட்டு நாக்கில் தடவ வேண்டும்.

பெயர் சூட்டல்- பிறந்த 10 வது நாள் / 12 வது நாள் / 18 வது நாள் / ஒருமாதம் / மூன்றாவது மாதம் குழந்தையின் நட்சத்திரத்தன்று பெயர் சூட்ட வேண்டும். பெயர் மங்களகரமாக உச்சரிக்க இனிமையானதாய் இருக்க வேண்டும் கஷ்டமானதாக கண்டிப்பாய் இருக்கக்கூடாது. பெண்களின் பெயர்களின் முடிவில் ‘ஆ’ / ‘இ’ ஒலி வரும்படி ரம்யமாக வைக்க வேண்டும். பெண்களுக்கு நட்சத்திரம், மரம், நதி, பர்வதம், பட்சி, பாம்பு போன்றவற்றின் பெயர்களை சூட்டாமலிருப்பது நல்லது.

அன்னப்ராசனம்- ஆறாம் மாதம் முதன் முதல் அரிசி சாதம் ஊட்ட வேண்டும்.

முடி இறக்குதல்- மூன்றாம் வருடம் முடியிறக்கி காதணி செய்ய வேண்டும். தற்போது அவசரம் கருதி 11 வது மாதத்திலேயே எல்லாம் செய்து விடுகின்றனர்.

உபநயனம்- உபநயனம் செய்ய விரும்புவர் ஆறு (பிரம்ம தேஜஸ்) / எட்டு (தனத்தைப் பெற) வயதில் செய்யலாம்.

#^#^#^#^#

செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:23

வாழ்க்கை தர்மம்!

Written by

ஓம்நமசிவய!

#^#^#^#^#


வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!


#^#^#^#^#

 

2.வாழ்க்கை தர்மம்!


எல்லா ஜீவராசிகளுக்கும் பிறப்பு என ஒன்றிருந்தால் இறப்பு நிச்சயம் என்பதை உணர்ந்து இயமனுக்குப் பயந்து நல்ல தர்மங்களைச் செய்திடல் வேண்டும். நாளை நாளை என தள்ளிப் போடாமல் யோகமும் போகமும் பெற்று நலமுடன் வாழ்ந்து இறுதியில் சொர்க்க போகத்தைப் பெற்றுவாழ முயற்சிக்க வேண்டும்.

அனைத்து உற்பத்திகளுக்கும் பசி-உணவு, உறக்கம்-விழிப்பு, அச்சம்-பயம், புணர்ச்சி ஆகிய உணர்வுகள் இருந்தாலும் மனிதனுக்கு மட்டும்தான் ஞானம் உண்டு. அதனால் கல்வி வித்தை எல்லாம் கற்று ஞானம் அடைந்து தெளிய வேண்டும். உடல் தேகம் பெற்ற ஜீவர்கள் சுவர்க்கம், மோட்சம் அடைய உள்ளத் தூய்மை, பக்தியுடன் பிரார்த்தனை செய்தும் தானதர்மங்களைச் செய்தும் தர்ம மார்க்கத்தைப் பின்பற்றி முக்திக்கு முயலவேண்டும்.

பிராணிகளைக் கொல்லாமை, உண்மையே பேசுவது, எளியோரிடம் இரக்கப் படுதல், பிராணிகளிடம் அன்பு, இறைவனிடம் பக்தி, மறையோர், மூத்தோர் முதலியவர்களிடம் பணிவாக நடத்தல், பெற்றவர்களை ஆதரித்தல், அனைவரிடமும் நட்பு பூணுதல், மூதாதையர்களை வணங்குதல், ராஜபக்தி, கஷ்டங்களில் மனம் தளராமை, கற்க வேண்டிய விஷயங்களை தெளிவாக நுட்பமாகக் கற்றல், இறையிடம் தளராத நம்பிக்கை வைத்தல் ஆகிய விதி முறைகளைக் கடைப்பிடிப்பதுடன் புல், பூண்டு, செடி, கொடிகள் போன்றவைகளை தெரிந்தோ தெரியாமலோ பிடுங்கி அல்லது வெட்டி எறிதல் உயிர்க் கொலை பாவத்திற்கு ஒப்பானவை என்பதையும் அரிய வேண்டும்.

அடுத்தவரைப் பார்த்து பொறாமை படாதிருத்தல், மன்னித்தல், சிரமமில்லாமல் இருத்தல், மங்களமாக இருத்தல், தீயச்சொற்களை உபயோகிக்காதிருத்தல், நல்ல வார்த்தைகளை பேசுதல், இருப்பதைக் கொண்டு திருப்தியடைதல், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாமல் இருத்தல் ஆகியவற்றை அறிந்து தர்மம் தவறாமல் அற வழியில் வாழ்க்கை நடத்துபவன் எந்த இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுக்கு பிரம்மத்துவ பதவி கிட்டும்.

மாத்ரு தேவோ பவ! பித்ரு தேவோ பவ!
ஆசார்ய தேவோ பவ! அதிதி தேவோ பவ!

என்கிறது தைத்திரிய உபநிடதம். அதாவது தாய், தந்தை ஆசிரியர், விருந்தினர் ஆகியோரைத் தெய்வமாகப் போற்றி வாழ வேண்டும் என்கிறது உபநிடதம்.

#^#^#^#^#

 

செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:16

புண்ணிய பூமி!

Written by

ஓம்நமசிவய!

#^#^#^#^#


தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!


#^#^#^#^#


1.புண்ணிய பூமி!

தேவர்களில் தவறு செய்து சாபம் அடைந்தவர்கள், பிரமஹத்தி தோஷம் அடைந்தவர்கள், தெய்வங்களாக கருதப்பட்டவர்கள் அனைவரும் மண்ணில் பிறந்து இறை வழிபாட்டில் ஈடுபாடு கொண்டு, இறையின் அருள் பெற்றதாக புராணங்கள் மூலம் தெரிகின்றது. இதிலிருந்து இப்புவியில் தேவர்களும், தெய்வங்களும் தோன்றியுள்ளார்கள். அவர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக மண்ணில் மலர்ந்து வாசம் புரிந்துள்ளார்கள். அந்த முறையில் அவர்கள் பிறவி எடுத்த இப்பூமி சிறப்பை அடைகின்றது. உண்மை என்னவென்றால் தவறு செய்தவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் இடம் இந்த புவிதான் என உணர்த்துகின்றார்கள். அதுவே இந்த புவிக்கு இம்மண்ணுக்கு பெருமை. ஆன்மாக்களே “அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்பதன் முழுமையும் புரிந்து கொள்ளுங்கள். அரிதான மனிடப் பிறவியில் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைபிடித்து வாழ்கையை வளமாக்கி ஆனந்த சந்தோசத்தை உயிர்கள் அனுபவிக்க வேண்டும் என ஆசி கூறும் அடியேன் -குருஸ்ரீபகோரா

உயிர்களின் உடம்பின் சகவாசம் அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை தீர்மானிக்கும் சக்தி கொண்டது. உயிர்கள் தாங்கள் நீண்ட நாள் பழகிய நண்பர் / உறவினரின் பழக்க வழக்கங்கள் தங்களுக்கும் தொற்றியிருப்பதை அறியலாம். அது இயல்பான ஒன்று. இதற்கு முக்கிய காரணம் இரு உடம்பிற்கு இடையில் பிராணம் பரிமாறப்படுகின்றது. அது மனிதராகவோ அல்லது மற்ற உயிரினங்களாகவோ இருக்கலாம். ஒவ்வொரு உயிர் பரிமானத்தைச் சுற்றி இருக்கும் ‘ஆரா’ என்ற ஒளிவட்டமே இதற்குக் காரணம். கண்ணுக்கு புலப்படாத இது ஒவ்வொருவருக்கும் தனக்கென்று ஓர் நிறத்தோடு இருக்கும். இந்த ஆராவின் நிறம் அந்த உடலின் உயிரின் குணத்தைக் குறிக்கும். ஒரு ஆரா மற்றொரு ஆராவுடன் தொடர்பு கொள்ளும்போது அது மாற்றம் பெறும். இந்த மாற்றம் அந்த உயிர்கள் பழகும் உடம்பினால் உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை சொல்வதாகும். இதைக் காரணமாகக் கொண்டுதான் நம் முன்னோர்கள் ஒருவருடன் பழகும்முன் அவரைப் பற்றி நன்கு அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஒருவரைபற்றி அறிய அவரின் நண்பனை அறிந்தால் போதும் என்றும் கூறினர்.

#^#^#^#^#

 

செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:00

சாஸ்தி சம்பி!

Written by

ஓம் நமசிவய ஓம்


முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#^#^#^#^#^

சாஸ்திர சம்பிரதாயங்கள்!


அறியாமை என்னும் இருளை நீக்குவதற்காக சாஸ்திரங்கள் தோன்றியுள்ளன. அந்த சாஸ்திரங்கள் ஆத்மாக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த என்னென்ன சொல்கின்றது என்பதே இதன் கருத்து. படித்தபின் சந்தேகங்கள் தோன்றினால் சாஸ்திரங்கள் கற்ற பெரியோர், மிகவும் மூத்தோர் ஆகியோரை கேட்டு சந்தேகங்களை அழித்து கொள்ளுங்கள்.

#^#^#^#^#^

நன்மை தீமைகளை உணர்ந்து கொள்ளப் பழக வில்லையென்றால் அதை அனுபவம் காட்டிக் கொடுக்கும். அது துன்பம் தருவதாய் இருக்கக்கூடாது. முட்செடிகள் ஒட்டகத்திற்கு விருப்பமான உணவு. அதை உண்ணும்போது முட்கள் குத்தி வாயில் இரத்தம் வரும். இருந்தாலும் ஒட்டகம் முட்களையே விரும்பும்.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டபின் சில செயல்களால் ஏற்படும் துன்பங்களும் கஷ்டங்களும் நிறைய உள்ளன. சில நாட்களில் அவைகளை மறந்து விடும் மனித மனம். மீண்டும் அதே செயல்களை செய்ய விழைகின்றது. பாம்பு எலியை விழுங்க முயல்கின்றது. விழுங்க முடியவில்லை. ஆனால் துப்பவும் மனமில்லை. இந்நிலையே மனித வாழ்க்கையில் ஆத்மாக்களின் நிலையாகின்றது.

ஓர் ஆன்மா பிறப்பெடுத்ததிலிருந்து என்னென்ன செய்தால் அதன் வளமான வாழ்க்கைக்கு துணைபுரியும் என்ற ஆராய்வில் முன்னோர்கள் சொல்லி வைத்த சாஸ்திர சம்பிரதாயங்களைப் பின்பற்றி தர்ம நெறியில் வாழ்வை அமைத்து வாழ்க்கையை வெற்றிப் பயணமாக்குங்கள்.

வாழ்வில் உயிர்கள் பின்பற்றி செயலாக்கம் கொள்ள வேண்டியவைகள் பற்றி சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் என்ன சொல்கின்றது என்பதை அறிய முயற்சியே இந்த பகுதி. முடிந்தவரையில் உயிர்கள் பின்பற்றி வாழ்வில் மேன்மை அடைய ஆசிகளுடன்-குருஸ்ரீ.

சாஸ்திர சம்பிரதாயங்கள்!

பொதுவாக நல்ல சிந்தனையுடன் தர்ம நியாயங்கள், விரதங்கள், வேண்டுதல்கள், தலயாத்திரை, தவம், தானம், ஆகியன மேற்கொண்டால் அதற்குரிய பலன்கள் நிச்சயம் கிடைக்கும். ஆண், பெண் எல்லா ஆத்மாக்களுக்கும் ஒன்று சொல்வேன். நமது பாரத தேசத்தை நம்புங்கள். பாரத தர்மத்தை நம்புங்கள். நமது ஆத்ம பக்தியின் பலத்தையும் ஆன்மீக நம்பிக்கையையும் வைத்துக்கொண்டு நாம் மற்றவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது கொஞ்சம் என்பதையும் நாம் பிறருக்கு கற்பித்துக் கொடுக்க வேண்டியது அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சாஸ்திர சம்பிரதாயங்களின்மேல் நம்பிக்கையும் பக்தியுமே வழ்க்கையின் ஒப்பில்லா ஆதாரங்கள்! குருஸ்ரீ பகோரா.

1.புண்ணிய பூமி!
2.வாழ்க்கை தர்மம்!
3.பிறப்பு சம்பந்தமான தோஷங்கள் நீங்க!
4.அங்க லட்சணங்கள்!
5.பிரமச்சர்ய காலம்- நடந்து கொள்ள வேண்டிய முறை!
6.உத்தமப் பெண்கள்!
7.ஸ்திரி- புருஷ லட்சணங்கள் எவை!
8.பெண்களுக்கு நன்மை!
9.சாமுத்ரிகா ராஜலட்சணம்!
10.உத்தமர்கள் யார்! நற்குணங்கள்! ஒழுக்கம்!
11.பெண்களிடம் நிலைப்பாடு!
12.ஆசாரியர்,உபாத்தியாயர்,குரு/ரிஷி,மகாகுரு/மகரிஷி!
13.உயிரினங்கள்மீது!
14.திருமணம்-அறுபதாம் கல்யாணம்!
15.திருமண இணைப்பு!
16.அக்னி நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை!
17.ஆடிச்சீர் ஏன்!
18.முன்னோர்களின் பெயரும், மூன்று உருண்டை சாதம் வைப்பதும் ஏன்!
19.பித்ருக்கள் வழிபாடு!
20.உணவு: எவற்றை உண்ணக்கூடாது!
21.வாழை இலையில் சாப்பாடு ஏன்!
22.வெற்றிலை பாக்கு!
23.யாகத்தின் பலன்!
24.நீராடல் எப்படி!
25.குற்றங்கள்-தண்டனை-அரச தர்மங்கள்!
26.கோவில்- எப்படி நடந்து கொள்ள வேண்டும்!
27.கருவறை சிறியது ஏன்!
28.திருமுழுக்கு- அபிஷேகம்!
29.பூஜை எப்படி செய்ய வேண்டும்!
30.பூஜையில் வாழைப்பழம் தேங்காய் ஏன்!
31.அர்ச்சனைக்கு ஏற்றது எது!
32.தெய்வ படங்கள்!
33.விரதங்கள்!
34.கர்மங்கள்-பாவங்கள்!
35.பக்தி- (5வகை)-நம்முள் நிலைக்க பரிசுத்தமான மனத்துடன் பக்தியில் ஆழ்ந்திரு.
36.வழிபாடு எப்படி செய்ய வேண்டும்!
37.யாத்திரை எதற்கு!
38.அன்றாடக் கடமைகளாக செய்ய வேண்டியவை!
39.நோய்கள் வராமலிருக்க!
40.மூச்சுகள்!
41.தேக நலம் தரும் கோடைகால வழிபாடுகள்!
42.எந்த மாதத்தில் என்ன செய்யலாம்!
43.செவ்வாய்க்கு செவ்வாய் தோஷம்- ஏன்!
44.வணங்கும்முறை!
45.தானம் ஏன் செய்ய வேண்டும்!
46.கிரகங்கள் பாதிப்பிலிருந்து விடுபட!
47.தவறுக்கான தண்டனைகள்!
48.பிராயச்சித்தம்!
49. வர்ணாசிர தர்மம்!
50.நிமித்தக் குறி சாத்திரங்கள்(8) !
51.உற்பாதங்கள்-இடைஞ்சல்கள்!
52.கனவுகளின் நன்மை தீமை பலன்கள்!
53.சகுனங்கள்!
54.நிலத்தின் தன்மையை அறிவது எப்படி!
55.மரம் ஏன் வளர்க்க வேண்டும்!
56.ஓம்சாந்தி 3முறை ஏன்!
57.ஏழுகோடி மந்திரங்கள்!
58.ஒன்பதின் பகுப்பு- சிறப்பானது!
59.தோஷங்கள்!

#^#^#^#^#^

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27068939
All
27068939
Your IP: 3.142.197.212
2024-04-24 08:01

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg