குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Displaying items by tag: தானம்புகழ்பெற்றது
தானம்- புகழ் பெற்றது!
தானம்- புகழ் பெற்றது!
தானம் கொடு என ஒருவன் கேட்கிறான், கொடுக்காதே என ஒருவன் ஆலோசனை சொல்கின்றான். கொடுத்தால் உயிர் போகலாம். புகழ் கிடைக்கும். கொடுக்காவிட்டால் உயிர் போகாமல் இருக்கும். இகழ்வு ஏற்படலாம். இகழ்வானது துன்பத்தைத் தரும் வல்லமை கொண்டது. தங்களுடைய இலக்குகளிருந்து விலகாதவன், இறப்பை வெல்வது இயலாத காரியம் என்பதால், தன்னுடைய அந்த இறப்பு மற்ற உயிர்களுக்கு நன்மை பயக்குமெனில் தன் உன்னத சிந்தனையிலிருந்து மாறமாட்டான்.
இந்திரன் யாசிக்க, உடல் தோல் உரிந்து வேதனைப் பட்டாலும், அதனால் உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை என கர்ணன் தன் உயிர்காக்கும் கவசகுண்டலங்களை தானம் செய்தான்.
புறாவின் உயிரைக்காக்க தன் தொடையிலிருந்து மாமிசத்தை அறிந்து கொடுத்தான் சிபி மன்னன்.
பாம்பினத்திற்காக தன் உயிரைக் கொடுக்க சித்தமான ஜீமுதவானனின் தியாகம் போற்றப்பட்டு கருடனால் திரும்ப உயிர் கிடைத்தது.
தேவர்குலம் காக்க யாசித்த இந்திரனுக்கு தன் முதுகெழும்பை தானமாக கொடுத்து உயிர் நீத்த ததீசி முனிவரின் தியாகம், தோல் கொடுத்த -கர்ணன், மாமிசம்- கொடுத்த சிபி, உயிர் கொடுத்த -ஜீமுதவானன் ஆகியவர்கள் திரும்பப் பெற்றவைகளைவிட மேலானதாக போற்றப்படுகின்றது தியாகம்.
எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை(கயாசூரன்) தீண்டியவர்கள் சொர்க்கம் செல்ல வரம் பெற்றதால் யமலோகம் காலியானதால் யமனின் வேண்டுகோளின்படி திருமால் உலக நன்மை கருதி உன் உடல் யாகத்திற்கு வேண்டும் எனக் கேட்டதும் உடன் தர ஒப்புக்கொண்டான் கயாசூரன். மேலும் யாகத்தின் போது அவன் உடல் அசையாமலிருக்க பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்களால் ஏதும் செய்யமுடியாமல் போகவே திருமால் கதை கொண்டு அந்த இதயத்தை தாக்கி அடக்க தன்னிடம் சொல்லியிருந்தால் தானே உலக நன்மைக்காக நடக்கும் இந்த யாகத்திற்காக அடங்கியிருப்பேனே என்றான். அவனது இந்த தியாகம் இன்றளவும் நினைக்கப்பட்டு அவன் உடல் கிடந்த இடத்தில் முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்ய அருள் பாலித்தார் பெருமாள்.
தானம் ஒரு ஆத்மாவிற்கு புண்ணியம் சேர்த்து மேன்மையடையச் செய்யும் சக்தி கொண்டது.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.