குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
ஓம்நமசிவய!
திருநீற்றொளிசேர் செம்மால் இருவேறுருவ ஈசா !
உள்ளத்திருளை ஒழிப்பாய் கள்ளப் புலனைக்
கரைப்பாய் நம்பியாண்டார்க்கருள் நல்லாய்
எம்பிரானாக இசைந்தாய் போற்றி! போற்றி!
#####
சன்மார்க்கம்!
1477. புகழ்ந்து சொல்லப்படும் சன்மார்க்கம் சிவத்தின் உண்மை வடிவங்களான நாத விந்துக்க்ளாக இருக்கின்றது.. சுடரைக் கண்டு சிவத்தை விட்டு சிவயோகத்தில் நிலையான சித்தம் உடையராய் காலனை வென்ற சிவனின் உள்ளக்குறிப்பை உணந்தவர் பற்றுகின்ற நெறி. சன்மார்க்கம்.
1478. சைவ சமய்த்திற்கு பெருமைதரும் நிகர் இல்லா தலைவன் சிவன். ஆன்மாக்கள் உய்வு பெறும் வண்ணம் அமைத்த ஓளி நெறியானது என்னவென்றால் தெய்வீகச் சிவநெறி சன்மார்க்கம். அதைச் சேர்ந்து உய்வு பெறுமாறு இந்த உலகில் உள்ளவர்க்கு அமைத்தான் சிவன்.
1479. சன்மார்க்கம் தரிசிக்கவும் தியானிக்கவும் தீண்டவும் புகழவும் திருவடி நிலையை சிரசின்மீது சூடவுமான குருபத்தி செய்யும். மெய்யன்பர்க்கு முத்தியை அடையத் துணையாகும்.
1480. சிவன் அகண்ட பரந்த பொருள். இதை அறியாதவர் தெளிவு இல்லாதவர். தெளிவு இல்லாதவராதலால் சீவனின் பரவிய ஆற்றலை அடைய மாட்டார். சீவன் பரவியுள்ளமை ஆகாதபோது சிவம் ஆகமாட்டார். அதலால் தெளிவு இல்லாதார் பிறவி முடிவு பெற மாட்டாது பெருகி நிற்கும்.
1481. ஆன்மாவான தான் சிவமேயாகித் தன்னிடம் பொருந்திய ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்ற ஐந்து மலங்களை அகற்றி மெளனம் என்ற பிரணவத்தை அடைந்து முத்தான்மா ஆவதும் கு/ற்றம் இல்லாது ஞான அனுபவத்தில் இன்பம் அடைவதும் தான் சிவமாய்த் தன்னிலை கெடல் சன்மார்க்கத்தால் ஆகும்.
1482. சன்மார்க்க நெறியினர் முகமே சிவம் உறையும் இருப்பிடம். சன்மார்க்கத்தாரின் இடமே கோவில். சன்மார்க்கத்தாரின் கூட்டத்தைக் காண்பது சிவ தரிசனம்.இதை எம் மார்க்கத்தில் உள்ளவரிடம் கூறுவேன்.
1483. சன்மார்க்க சாதனம் என்பது சிவத்தை அறியும் ஞானம், இம்மார்க்கம் தவிர மற்றச் சாதனம் அறிவில்லாதவர்க்குரியது. தீமை அளிக்கும் மார்க்கத்தைவிட துரியத்தில் பொருந்திக் குற்றம் நீங்கினவரின் சன்மார்க்கந்தான் அவனாகும் நன்னெறி.
1484. சன்மார்க்கத்தை அடைய வரும் பயிற்சியாளர் ஏனைய மூன்று மார்க்கங்களும் பெறுவது இயல்பாகும். சிவத்துடன் பொருந்தும் நல்ல மார்க்கமே அவர்க்கு வேண்டுவதாகும். இதுவே பிரணவ மார்க்கம் என வேதம் சொல்கின்றது.
1485. தனக்கு மாறான பாசத்தையும் பாசத்தால் கருமத்தையும் கன்மம் காரணமாக வரும் பிறப்பு இறப்புகளாகிய அவத்தைக்ளையும் அவத்தைகளுக்கு காரணமான பிரகிருதியையும் இவற்றோடு பொருந்தி இதை அறியும் ஞானத்தையும் இவற்றின் வேறுபாடுகளையும் ஆன்மாவான தன்னையும் கண்டவர் சன்மார்க்கத்தார் ஆவார்.
1486. ஆன்மாவைப் பாசத்தினின்று பிரித்தும் பதியுடன் கூட்டிக் கனியாத மனத்தை நன்றாக கனிய வைத்து கெடாத மெய்ப் பொருள் தோற்றத்துக்குள் சேர்ந்து அசையாத வண்ணம் சமாதியில் கூடியிருத்தலே சன்மார்க்கம்.
1487. சன்மார்க்கத்தில் உள்ளவ்ர் அடைய வகுக்கும் மார்க்கம் சன்மார்க்கமான மார்க்கமே அல்லது வேறு ஒன்றும் இல்லை. சன்மார்க்கத்தைப் பொருந்தாதவர் மார்க்கம் யோக சித்திகளைத் தரும் நெறியாகும்.
#####
ஓம்நமசிவய!
உருகுவோருள்ளத் தொளியே பெருமருள் சுரக்கும்
பெருமான் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் உம்பர்
கட்கரசே ஒருவ பிள்ளையார்ப் பெயர்கொண்டுள்ளாய்
வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றி! போற்றி!
#####
ஞானம்!
1467. ஞானத்தைவிடச் சிறந்த அறநெறி இல்லை. ஞானத்தைக் கொடுக்காத சமய நெறியும் நல்லது ஆகாது. ஞானத்திற்குப் புறம்பானவை வீடு பேற்றை அளிக்காது. ஞானத்தில் மிக்கு விளங்குபவரே மக்களீல் மேலானவர்.
1468. நாதமும் நாதத்தின் வடிவான மனமும் மனம் தரும் புத்தியும் புத்தியை உணர்த்தும் அகங்காரமும் இம்மூன்றும் சிந்திக்கின்ற செயலும் அதனால் உண்டாகும் நாதமும் நாதம் கடந்த ஞானியர் அடைந்த நெறியே ஞானம்.
1469. சிவன் சித்தத்தில் அமைந்துள்ள சங்கற்ப உலகமும் புறத்தே அமைந்துள்ள உலகமும் அன்பால் எனக்கு அருளாக அமைந்தன என்பர் ஞானியர். இத்தகைய ஞானமும் அதனால் அமையும் சிவபாவனையும் சிவத்தை அறிய உதவும்.
1470. முரணபாடு இல்லாத ஜானத்தை தெளிந்து உணர்ந்தார்க்குச் சார்ந்திருக்கும் காவலான இடம் அழியாத பிரம்ம பொருள் ஆகும். அசைவன அசையாதன என இறைவனாய்க் காணப்படும் உலகம் மேலான ஞானம் இருக்கும் ஒழுக்கம் ஆகியன தரும்.
1471. அறிவு அடக்கம் அன்பு என்ற மூன்றும் என்றும் நீங்கா நகரில் கோவில் கொள்ளும் பெருமான் தான் உருக்கொண்ட நிலையையும் நல்ல குணங்களையும் எண்ணித் திருவடியை நீங்காத நெறியை உடைய ஞானியர்க்கு சிந்தனையில் நீர் அருவியினது சலசலப்பைப் போல் சிரசில் அமையும்.
1472. ஞானம் முதிர்ந்து எழுகின்ற நிலையில் சிந்தனையில் அருவியாகிய நாதம் தோன்றி முகத்தின் முன் எவ்விடத்தும் இளம்பிறை ஒளியைத் தரிசித்து உடலின் இழிதன்மையை உணர்வர் உடலைக் கடந்து ஒளிமிக்க சோதி இருக்கும்.
1473. ஞானியர்க்கு இயல்பில் பொருந்தியவை ஞானத்தில் ஞானம், ஞானத்தில் யோகம், ஞானத்தில் கிரியை ஞானத்தில் சரியை என்ற நான்கும். அனுபவத்தில் முதிர்ந்து பிரணவ சித்தியான மௌன ஞானிக்கு இவை ஏதும் தேவையிலை. மகிழ்வை அடைந்து சந்திரமண்டலம் ஒளியில் இருக்கும் சத்தி ஞானத்தை தந்துவிடும். அவர்களைப் போலால்லாது ஆதாரங்களில் பொருந்தி யோகம் செய்பவருக்கு சரியையும் கிரியையும் உரியனவாகும்.
1474. ஞானிக்கு ஞானம் முதலிய நான்கு நிலைகள். ஞானத்தில் ஜானம் என்பது நான் என்ற அகப்பற்றும் எனது என்ற புறப்பற்றும் இல்லாமையாகும். ஞானத்தில் யோகமாவது நாதாந்த்தில் பேரொளியைக் காண்பதாகும். ஞானத்தில் கிரியை என்பது நல்ல வீடு பேற்றை விரும்புதலாகும்.
1475. ஞானத்தில் ஞானம் முதலிய நான்கையும் பெற்றவன் நல்வினையினால் அடையும் நற்பயனையும் பாவத்தால் வரும் தீய பயனையும் கடந்து நிற்பான். பெருமையுடைய நேயத்தின் ஞான் வரம்பைக் கடந்தவன் மலக்குற்றங்கள் அற்றவனும் சிவமுத்தனும் சித்தனும் ஆவான்.
1476. ஞானத்தில் சமய தீட்சை என்பது மெய்ப் பொருளை விரும்பும் ஞானி மெய்ப் பொருளைப் போல் தானும் ஒளி உருவினன் என உணர்த்துவதாகும்.
#####
ஓம்நமசிவய!
மூவாச் சாவா முத்தா ஆவா எங்களுக்கு
அருள்வாய் தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய்
அமிழ்தாய் எம் அகத்தானாய் மழவிளங்களிறே மணியே
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!
#####
யோகம்!
1457. மூலாதாரம் தொடங்கி வீணாத்தண்டின் ஊடே பிரமரந்திரத்தைச் சேர்த்து உண்மைப் பொருளான சிவத்துடன் பொருந்தி தறியைப் போன்று உடலில் அசையாமல் இருக்கச் செய்து, உடலை சொறிந்தாலும் தாக்கினாலும் துணுக்கென்று உணராமல் இலட்சியப் பொருளான சிவத்தை அறிவர்க்கு அயலாய் பொருந்த முடியும்.
1458. பல காலம் யோகத்தைப் பயின்று ஞானம் பெற்றவர்க்கன்றி மற்றவர்க்குப் பலகாலமானாலும் உணரப்படாதவன். பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலும் நான்முகன் ஆகிய தேவர்க/ள் ஊழிக்காலம் முயன்றாலும் அவனை அடைய இயலாத ஓர் உயர்ந்த இடத்தில் உள்ளான்.
1459. மலரில் மணம் பொருந்தியிருப்பதுபோல் சீவனுக்கு சிவ மணம் விளையும். எழுதப்பெற்ற ஓவியம்போல் அசையாதிருந்து அறியும் வல்லமை உடையவர்க்கு பூனுகுப்பூவை சேர்ந்த நடுதறி மணத்தைப் பெறுவதுபோல் நறுமணம் உண்டாகும்.
1460. உயர்ந்தோம் எனக் கூறி யோகத்தால் உள்ளே கூறும் பொருளைக் காணமாட்டீர். சுவதிட்டானத்தில் பொருந்திய சிவத்தை சிந்தையில் பொருந்தி தெளிவுபெற்று இருளை நீங்கினால் பழமையாய் வரும் பிறவிக்கு மூலத்தை நீக்கும் மருந்து விதையாகும்.
1461. இலக்கண அறிவு இல்க்கிய அறிவு அறுபத்து நான்கு கலை அறிவு என்பனவற்றால் பழியைத்தரும் பாசத்தால் உண்டாகும் பிறவியை நீக்காது அழிவு செய்யும் சந்திரன் அக்கினி கதிரவன் ஆகியவற்றை வரிசைப்படுத்தி தலைக்குச் செல்வதால் ஒளி அமைவதை உணர்ந்தேன்.
1462. சந்திரன் சூரியன், அக்கினி ஆகியவற்றை சிரசில் சேர்க்கும் யோகத்தை உள் அன்புடன் செய்பவர் தவம் உடையவர். தத்துவமசி என்ற பெரும் வாக்கியத்தின் பொருள் இதுவே. உண்மையான தவம் இதுவே. இதுவே தேவர் ஆக்குவதும் ஆகும்.
1463. உடம்பில் அக்கினி மயமாய் இருந்து சூட்டை வெளிப்படுத்திக் கொண்டிருப்பது உத்தமனாகிய சிவம். ஆண் பென் கூட்டுறவிலிருந்து அக்கினி மண்டலத்தில் விளக்கம் அடையும் அக்கினியை காப்பாற்றி மேல் எழும்படி செய்தால் மீண்டும் பிறவிக்கு வராத ஒலி உலகைத் தரும். நாண்ம் கொண்டு இதைச் செய்யாமலிருந்தால் நரகத்தில் செலுத்தி மீண்டும் பிறவி எடுக்க் வேண்டும்.
1464. நேர்மையுடைய செங்கோல் மன்னர்கள் உண்மையான வேத நெறி விளங்கிய முனிவர்கள் எத்தனை ஆயிரம்பேர் இந்த உண்மையை உணராமல் அழிந்தார்கள். யோகத்தை அறிந்த எண்ணற்ற சித்தர்களும் தேவர்களும் நான்முகன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் பெருமையாய் பரமசிவத்தை தவிர வேறு உயிர்க்கு நன்மை செய்பவர் இல்லை என வணங்குவர்.
1465. யோகியர் யோகம் கிரியை சரியை என்ற மூன்று நெறிகளை கொண்டு மேன்மை அடைவர். பயன் தருவன கிரியையில் கிரியை, கிரியையில் சரியை என்பனவாகும். ஆசையை விட்ட சரியை ஒன்று அவ்வாறு இருக்கும் ஒளிமண்டல சிவாதித்தன் பத்தியில் அன்பு கொண்டேன்.
1466. யோக நெறியில் சமய தீட்சை என்பது பல யோக நெறிகளை பற்றி நினைத்தல். யோக நெறியில் சிறந்த தீட்சையானது அட்டாங்க யோக நெறி நிற்றல். யோகத்தில் நிர்வாண தீட்சையானது பராசத்தியின் தரிசனம் பெறுவது. யோக அபிடேகமாவது ஒளிமிக்க சித்திகளை அடைதல்.
#####
ஓம்நமசிவய!
பெருச்சாளியூரும் பிரானே நரிச்செயலார் பால்
நண்ணாய் செந்தாமரைத்தாள் தேவா நந்தா
மணியே நாயக இருள்சேர் இருவினை எறிவாய்
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி! போற்றி!
#####
சரியை!
1443. வீடுபேற்றை அடைவதர்உ முதல் அங்கமான சரியை நெறி இது என் வேத ஆகமங்களை ஆய்கின்ற காலாஞ்கி, கஞ்ச மலையமான், கந்துரு, ஆகியவர்களே கேளுங்கள். இந் நிலவுலகத்தில் சுத்த சைவர்க்கு உயிரைப் போன்ற நெறி சரியையாகும்.
1444. இறைவன் உயிர்க்கு உயிராக நிற்பதை அறிதல் சிறந்த ஞானமாகும். உயிருக்கு ஓலியை அளிக்கும் பொருளாக இறைவனைக் காண்பது மேலான யோக் பூசை. வெளியே பிராணப் பிரதிட்டையாக ஆவாகனம் செய்தல் வெளிப் பூசையாகும். வெளியே செய்யின் சிவபூசை ஞானத்தை நோக்கிய வாயில் ஆதலால் கடைப்பட்ட அன்பாகும்.
1445. நாடுகள் நகரங்கள் நல்ல கோவில்கள் என்பனவற்றைத் தேடி அங்கு சிவன் வீற்றிருக்கின்றான் எனப் பாடுங்கள். வணங்குங்கள். ஒருமைப்பட்ட நெஞ்சத்தை இறைவன் தன் கோயிலாகக் கொள்வான்.
1446. கோவில் வழிபாட்டைச் செய்யும் பக்தர் சரியை வழியில் நிற்பவர். கிரியை வழியில் நிற்பவர் திருநீறு முதலிய சிவசாதனங்களை அணிந்து சிவ வேடம் தாங்கி நிற்பவர். தூய இமயம் முதலிய அட்டாஅங்க யோக உறுப்புகளை உணர்ந்து அவ்வழியில் நிற்பவர் தூய யோகியர். சித்தர் சிவத்தை தன்னில் கண்டு தான் அதில் ஒன்றி நிற்பவர்.
1447. உண்மையான ஞானம் உடையவர் தாமே இறைவனாக ஆனவர். அட்டாங்க யோக நெறியில் நின்று சமாதி அடைந்தவர் யோகியர். கிரியை உடையவர் சிவபூசையை தவறாமல் செய்பவர். கிரியை நெறியில் நிற்பவர் பல பதிகளுக்குப் பயணம் செய்வார்.
1448. கிரியைக் கிளர்ச்சியைத் தரும். ஞானம் என்ற பூசை முறையை அறிவதற்கு அரிய சிவன் உருவத்தையும் அருவத்தையும் பொருந்தி வழிபடுபவரின் பக்குவத்திற்கு ஏற்ப தேர்ந்து கொள்ளும் பூசை உரிமையான நேசப்பொருளுக்கு உரிய உயர்ந்த பூசை.
1449. சரியை கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கினாலும் பெறும் ஞானம் நான்கும் விரிவாயுள்ள வேதாந்தச் சித்தாந்தத்தால் அடையப் பெறும் ஆறு முடிவைக் கொண்டவை. உன்மைப் பொருளான நந்தியம் பெருமான் குருமண்டலத்தில் பொன்நகர் அடைந்து மயக்க அறிவைக் கொண்ட ம்க்கள் வணங்கி அறிவைப் பெறும்படி வைத்தான்.
1450. சமய தீட்சையால் ஆன்மாவில் பதிந்துள்ள மலக் குற்றங்களை அகற்றி ஆணவ மலத்தினது சக்தியைக் குறைத்தல். சிறப்பான தீட்சையால் சிவத்தின் துணையைக் கொண்டு அமையப் பெற்ற மந்திரங்களால் ஆன்வம், கன்மம், மாயை என்ற மூன்றின் வன்மைகளைக் குறைத்தல். சமயத்தில் அமைந்திருக்கும் நிர்வாண தீட்சையான நிவிருத்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீத கலைகளில் மலக்குற்ரங்களைப் போக்கி ஆன்மாக்களின் மேல் உள்ள கலைகளுக்கு தகுதிப்படுத்தலாகும். திருமுழுக்காட்டு என்பது சத்தி நிலைபெறப் போதித்து நிலை பெறுதலே.
#####
கிரியை!
1451. ஒப்பற்ற சிவம் பத்து திசைகைளிலும் பரவியுள்ளது. எந்த திக்கில் இலை. எப்போது இல்லை. எங்கும் எப்போதும் உள்ளார். அத்தகைய மலம் அற்றவர்க்குப் பணிந்து திருவடியை அடைக்கலன் என உறுதியாய் பற்ற மென்மேலும் தாவி வரும் வினையாகிய கடல் ஆன்மாவைச் சாராது என்பதை அறிந்து கொள்க.
1452. காட்டில் நிறைந்து மணம் கமழும் சந்தனமும் வான் அளவ நிறையும் வண்ண மலர்களும் சாத்தி வணங்கினாலும் உடல் பற்றை விட்டுத் தியானிப்பவர் அன்றி தேன்போல் இன்பத்தை தரும் சகசிரதளத்தில் இருக்கும் திருவடியைச் சேரமுடியாது.
1453. பசுங்கன்றைப்போல ஒலிக்கின்ற கழலை உடைய திருவடியை வணங்குங்கள். ஞானத்தைத் தரும் சுழுமுனை நடுவே தோன்றும் தேவர் உலகக் கன்றான வானவர் வந்து உம்மை வழிபடுவர். பெருமையுடைய காளையூர்தியையுடைய பெருமான் திருவருளைத் தாங்கும் பாத்திரம் ஆவீர்.
1454. வணங்கி எட்டு திக்குகளில் உள்ள மண்டலங்களில் எல்லாம் அவன் பணியைச் செய்யும் சத்தியை ஒரு பாகத்தில் உடைய இறைவன் பெருமையை உணர்ந்து வழிபடுவதே மக்கள் பணி. வல்ல பெருமானை போற்றுவது அன்பினால் ஆகும்.
1455. பக்தன் தூய்மையான மந்திரத்தை எண்ணி அவ்வாறு நடந்து பழகி சுத்த மாயை என்ற அருள் ஆற்றலை குற்றம் இல்லத உண்மை யோகத்தில் அமைந்த நெறியில் பொருந்தி தன்னையும் பெருமானையும் உணரும் ஞானத்தினால் சித்தம் குருமண்டல பிரவேசத்தால் சிவமாய் அமையும்.
1456. சிவன்மேல் கொண்ட இடையறாத அன்பினால் உருகித் தினந்தோறும் நாத வழிபாடு செய்வேன். செம்பொன் போன்ற சகசிரதளத்தில் இருக்கும் விந்து நாதமான திருவடியை வணங்கி நின்று துதிப்பது எனக்கு அருள்வாய என்பதற்கே.இறைவன் தலையில் சோதியாய் நின்று அருள்வான்.
#####
ஓம்நமசிவய!
ஆங்காரம்முளை அறுப்பாய் பாங்கார் இன்பப்
பராபர கற்றவர் விழுங்கும் கனியே ! மற்றவர்
காணாமலையே சொல்லொடு பொருளின் தொடர்பே
கல்லும் கரைக்க வல்லோய் போற்றி! போற்றி!
#####
கடுஞ்சுத்த சைவம்!
1438. வெளி வேடங்களில் விருப்பம் இல்லாது இறைவனைச் சேர்ந்து உலகியல் ஆடம்பரம் இல்லாமல் ஆசையையும் பற்றையும் நீத்து பிறவித் துன்பத்தை அளிக்கும் பாசமும் சில போதமும் பாழாகச் செய்யும் சிவஞானம் பெற்றவரே சுத்த சைவர்.
1439. உடல் எனச் சொல்லப்படுகின்ற அன்னமயக் கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞான கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய ஐந்தையும் மூலாதாரம் முதலிய ஆதாரங்கள் ஆறையும் ஐந்து பிரிவாய் இருக்கும் சுத்த மாயை முதலிய சிவ தத்துவத்தையும் இவற்றின் சார்பானவற்றயும் நீக்கி தன் உண்மை நிலையை அறிந்து அதில் நிற்றலே சித்தாந்த நெறி.
1440. இறைவனால் அருளப்பட்ட ஆகமங்களில் சொல்லப்பட்ட பரமுத்திகளில் சாராமல் முத்தர் கண்ட பிரணவப் பதத்தால் உணர்த்தப்படுவதே மேன்மை அடைந்த பரமுத்திக்கு மூலம். அதை உணர்ந்து ஆன்மா பிரணவப் பொருளான இறைவனை அறிந்து உலக பந்தங்களை விட்டு நீங்கினால் சுத்த சிவமாகும் பேறு பெறுவர். அவரே சுத்த சைவர்.
1441. அறிபவன் நான் என்றும் அறியப்படும் பொருள் சிவம் என்றும் ஆராய்ந்து சிவத்தைச் சேரவே சிவன் சீவன் என்ற இரண்டு நிலையில்லா நற்சிவம் தானே நான் என்ற உண்மையை உணர்ந்து அதனால் அறியப்படும் பொருள் எனவும் அறிபவன் எனவும் பிரிந்து அறிதற்கு இயலாத பெருநிலையை அடைந்தேன்,
1442. இன்னதென்று கூறுவதற்கு அரிய அந்த நெறியை அடையப் பெற்றவர் பொருத்துதற்கு அரிய கண் முதலிய ஐம்பொறிகளும் செயல் அற்று அடங்கிவிடும். மேல் இருக்கும் ஞானம் விளக்கொளி போன்று ஓளிரும் பின் சாயுச்சிய நிலையில் இறைவனுடன் ஒன்றியவனாகி ஏகனாகி நிற்றல்
பொருந்தும்.
#####
ஓம்நமசிவய!
தொந்தி வயிற்றுத் தந்தி முந்திய பொருட்கும்
முந்தியோய் ஐந்துகையுடைய ஐய ஐந்தொழில்
ஆற்றும் அமர அருளாய் அருள்வாய் ஆண்டவ
தருவாய் மணமலர்த் தாராய் போற்றி! போற்றி!
#####
மார்க்க சைவம்!
1427. பொன்னால் செய்யப்பட்ட உருத்திராக்காமான சிவ சாதனம், திருநூற்றுப் பூச்சான சிவசாதனம், ஐந்தெழுத்து ஓதலான ஞான சிவ சாதனம்,, தீயவருடன் சேராமல் நல்லடியார்களுடன் செர்ந்திருத்தலான சாதனம், ஆகியவை சுத்த சைவர்குரிய சன்மார்க்க ஒழுக்கம்.
1428. குற்றம் நீங்கிய ஞான ஓலி வீசும் ஞானத்திற்கு மன்னன் ஆகி துன்பம் இல்லாத வேதாந்த சித்தாந்தங்கள் பொருந்தும் ஞானம் உடையவன். மேன்மையுடைய சுத்த சைவத்தில் பக்தி உடையவன் அழிவில்லாதவன்.
1429. காரணம், காமிகம், வீரம், சித்தம், வாதுளம், யாமளம், காலோத்தரம், சுப்பிர பேதம், மகுடம் இந்த ஒன்பது ஆகமங்களே விரிவைப் பெற்று இருபதெட்டு ஆகமங்களாக ஆகும். அவை சைவம், சௌத்திரம், ஆரிடம் என மூன்று வகையாகி வேதாந்த முடிவாகி சித்தாந்த உண்மை சுத்த சைவர்க்கு ஒன்றானது.
1430. கேவலத்தில் சாக்கிரம் செப்பனம் சுழுத்தி என்ற மூன்று சுத்தத்தில் சாக்கிர சொப்பனம் துரியம் துரியாதீதம் என்ற நானகு ஆகிய எழும் சத்தும் அசத்தும் ஆகியவனவாகி அவற்றைக் கடந்துமான பராபரை சீவர்களைச் செலுத்தும் பராபரை, சீவர்களுக்குள் பொருந்திய் உயிர்க்கு உயிரான பராபரை சிவத்திற்கு அருட் சத்தியாய் எங்கும் பரந்துள்ளாள்.
1431. சத்து அசத்து ஆகியன கடந்த ஞானியர் சத்தியே தாமாகி, அறிவு, அறியாமை நீங்கிய சிவமாய் பாலிக்கும் பாவனையில் இரண்டு அற்ற நிலையில் அதீத பாவனையில் முழுகியிருப்பவர்களிடம் அனைத்து சித்திகளும் விளங்கும்.
1432. ஆன்மாவான தன்னையும் பரமசிவத்தையும் சதாசிவனான மன்னனையும் பதிபசுபாசம் ஆன முப்பொருளையும் அநாதியாய் இருந்துவரும் பாசத்தன்மை யையும் குற்றமற்ற வீடு பேற்றையும் சுத்தசைவர் தடை நீங்கும் வழி என எண்ணுவர்.
1433. முழுமையான சிவத்தில் சித்தத்தை வைத்து ஆனம் போதம் அற்று மறை முடிவைப் பெரிது என ஆனந்தத்துடன் துவாத சாந்தத்தில் முறையாகப் பெறும் சிவபோகம் சுத்த சைவர்க்கு முதல் நிலையில் கிடைக்கப் பெறும்.
1434. தன்மையான ஞானத்தில் மதிப்பு இல்லாது சிறந்த யோகமும் பெரிது எனத் தெளிந்து கொள்ளாத சிந்தனையை தெளியச் செய்து அங்குச் சிவத்தை சிவோகம் பாவனையைச் செய்து முறையாய் நிற்றல் ஞானிக்குரிய சரியை ஆகும்.
1435. வேதாந்தத்தை உணர்ந்தவர் பிரம்ம வித்தையை அறிந்தவர், நாத தரிசனம் செய்தவர், நன்மைகளில் மகிழாமலும் தீமைகளில் சோர்வு அடையாமலும் நிற்கும் மேலான யோகியர் ஆவர். வேதாந்தக் கொள்கைக்கு வேறான சித்தாந்த அனுபவம் உடையவர் இயற்கையை அறிந்து தக்க உபாயத்தால் சிவத்தைச் சேர்வர்.
1436. வானை இடமாகக் கொண்ட மேகங்கள் வானத்தைசென்று அடையா. கண்ணால் காணப்படும் பல் காட்சிப் பொருள்கள் கண்களைத் தாமாக வந்து பொருந்தா. அவற்றைப் போன்று எண்ணத்திற்கு அப்பால் உள்ள பொருளாக எண்ணப்படும் சிவபரம் பொருளை பசுவான சீவர்களைப் ப/ற்றியுள்ள் பாசங்கள் சென்று அடையாது.
1437. பிரமம் என்பது ஒன்றே எனும் வேதாந்த இலட்சியமும் இறைவன் வேறு சிவன் வேறு எனும் துவைதமும் இல்லாததாய் பொருள் இயல்பினால் வேறாய்க் கலப்பினால் ஒன்றாய்ச் சுத்தாந்த பாவனையில் நின்று சமய நிந்தனையை விட்டு அகன்று பராபரையான நேயப் பொருளைத் திருவடி ஞானத்தால் பெற்று சிவமாதலே சித்தாந்தத்தால் பெறப்படும் சித்தி.
#####
ஓம்நமசிவய!
கயமுக அசுரனைக் காய்ந்தாய் மயலறும் இன்ப
வாழ்வே ஆனையாய்ப் புழுவாய் ஆனாய் பானை
வயிற்றுப் பரமே கடம்பொழி யானைக் கன்றே
மடம் ஒழி அறிவின்வளவனே போற்றி! போற்றி!
#####
ஐந்தாம் தந்திரம்
சுத்த சைவம்!
1419. உலகத்தையும் அதில் அடங்கும் ஊரையும் ஒருசேர படைக்கின்ற பேரறிவாளனான இறைவனின் பெருமை அளவிடமுடியாதது மேருமலையையும் மூன்று உலகங்களையும் ஆள்கின்ற இறைவனிடமிருந்து தோன்றிய மண்ணுலகையும் நான்கு வகை சைவமும் ஆகிய இவற்றின் பெருமைக்கு நிகராகும்.
1420. அழிவு இல்லாதது அழிவுடையது என்ற இரண்டு தன்மைகளும் உடையவை எவை என்று அறிந்து அறிவும் அறியாமையும் ஆகியவை சேராமல் விட்டும் சுத்தமாயை அசுத்த மாயை என்ற இரண்டிலும் பொருந்தாமல் நின்று அழிவற்ற மேலான பொருளான இறைவனை பார்த்திருப்பது சுத்த சைவத்திற்கு அழகாகும்.
1421. கற்க வேண்டியதைக் கற்று பதினாறு கலகளை உடைய சந்திர கலைகளை அறிந்து சிவயோகத்தைப் பயின்று முன்னல் இருக்கும் அ உ ம காரங்கள் விந்து நாதங்களின் அறிவை முறைப்படி அறிந்து பிரணவ பதத்தை புலப்படுத்தும் சாந்தீயாதீத கலையைப் பொருந்தி உயிரின் மாயை சார்பான குற்றத்தை விட்டு மேலான் சிவத்தில் வாழ்பவர் சைவ சிந்தாந்தர் ஆவர்.
1422. வேதாந்தம் என்பது சுத்த சைவ சித்தாந்தம். இந்நெறி நிற்பவர் நாத வடிவான சிவத்தை தரிசித்த சலனம் இல்லாதவர். தத்துவ முடிவை ஞான மயமாகப் பயன் படுத்த நாத முடிவில் நிறைவடைந்து இருக்கும் சிவம் அறியும்படி வேண்டிய பொருளாகும்.
#####
அசுத்த சைவம்!
1423. இறைவனின் இரண்டு திருவடிகளையும் புகழ்பவரின் பெருமை உடைய உடம்பில் இரண்டாகப் பொருந்திய இரண்டு காதணிகளும், திருநீறும், தலை மாலையுமான இரண்டு அடையாளங்களும் இரண்டு கண்ட மாலைகளும் சரியை கிரியை வழி நிற்பவர் அணியப்படுவதாகும்.
1424. காதில் பொன்னால் செய்யப்பட்ட இரண்டு கடுக்கண்களை அணிந்து சிவ வேடத்தில் இடையில் ஓர் ஆடையும் அதன்மேல் ஓர் ஆடையும் அணீந்தவரய் அத்துவா சோதனை செய்து உபதேசத்தைக் குருவிடம் பெற்று சைவ ஆகமங்களைச் சொல்லிக் கொண்டிருப்பவர் ஒருவகைச் சைவர்.
1425. பிரணவம், மண், நீர், தீ, காற்று, வான், சூரியன், சந்திரன், அக்கினி, விண்மீன் என்பவை உடலில் இருப்பதை அறிந்தவர் அறிய வேண்டியவற்றை அறிந்தவர். இவர் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவர், விந்து, நாதம், சத்தி, சிவன் என ஒன்பதாய் இருக்கும் அரிய பொருளான சிவத்தை அறிவர். ஒன்பது பொருளாய் உடம்பில் உள்ள சிவத்தை தம்முள் அறிந்தவர் பகுப்பை உடைய உலகங்களை எல்லாம் அறிந்தவர்.
1426. ஞானியர் என்பவர் உலக்த்தில் தோன்றும் ஞான நூல்கலுடன் மோன நிலையையும் முழுமையாக எண்ணப்பட்ட எண் பெருஞ் சித்திகளையும் மற்ற உலகங்கலின் அறிவையும் உபநிடத அறிவையும் சிவத்தையும் தன்னையும் அறிந்து நிற்கும் ஆற்றல் உடையவர் ஆவார்.
#####
ஓம்நமசிவய!
பாலொடு தேனும் பருகுவோய் மேலொடு கீழாய்
மிளிர்வாய் எய்ப்பில் வைப்பாய் இருந்தோய்
மெய்ப்பொருள் வேழமுகத்தாய் நால்லார்க்
கெட்டும் நாதா பொல்லா மணியே புராதன போற்றி!
#####
நவாக்கரி சக்கரம்!
1219. நவாக்கரி சக்கரம் புதுமையைத் தரும் ஓர் எழுத்தான அம்மையே ஒன்பது எழுத்துக்களைக் கொண்ட தேவி மந்திரமாக அதுவே எண்பத்தொரு வகையாக் நவக்கரி கிலீம் முதல் சௌம் வரை இருக்கும்.
1220. முதலில் சௌ, ஔ, ஹௌ, கிரீம், கௌ, ஐ, இரீம், கிரீம், கிலீம் என்ற இந்த ஒன்பதும் மந்திர உறுப்பாய்க் கொண்டு இவற்றுடன் கிலீம் மந்திரம் மூலமாகக் கொண்டு செம்மையாக உள்ளெழுந்த முறையில் சிவயநம என உச்சரிப்பாயக.
1221. நவாக்கரி என்பது நான் அறிந்த ஸ்ரீவித்தையாகும். இதனால் நன்மைகள் அனைத்தும் உண்டாகும். நாவில் வைத்து நினைத்தால் நவாக்கரி சத்தி நன்மைகள் அருள்வாள்.
1222. ஞானம் கல்வி முதலிய நன்மைகள் எல்லாம் உண்டாகும் கொடுமையைத் தரும் சஞ்சிதம்-பழவினைகள் அந்த உயிரை விட்டுப் போகும். இந்தப் பிறவியில் அறியாமையால் ஈட்டப்படும் ஆகாமிய வினைகளை நீக்கி வரம் தரும். சந்திர மண்டலம் விளங்குவதை அனுபவத்தால் அறியலாம்.
1223. சக்கரத்தை வெள்ளி பொன் தகடுகளில் அமைக்க வேண்டும். மனதில் தியானித்தால் அமையவுள்ள வினைகளை வெல்லலாம்.. நீங்கள் வாழ்கின்ற பூமி உங்களுக்கு வெற்றியை அளிக்கும். உங்கள் தியான் நிலைக்கு ஏற்ப நிலைத்திருக்கும்.
1224. ஸ்ரீம் முதல் கிலீம் வரை தியானிக்கவும். அப்படி தியானிக்கும்போது முதலாக உள்ளது இறுதியாக அமையும். நெல்லும் அறுகம்புல்லும் கொண்டு தியானித்து வணங்குங்கள். உங்கள் வழிபாட்டை விரும்பி வெளிப்பட்டு அருள்வாள்.
1225. வெளிப்பட்டு அருள் செய்யும் சத்தி எத்தகைய நிறம் கொண்டவள் என்பதை உணர அழகிய காயம் பூவைப்போல் கரிய வண்ணம் ஆகும். அப்படி கருதி தொழுதால் எண்ணியவை யாவும் கைகூடும். அவள் விரும்பும்படி நடந்து கொள்வாயாக.
1226. இவ்வுலகில் எல்லா நன்மைகளும் உண்டாகும். காலன் உனக்குரிய ஆயுளாக எண்ணிய நாள்களும் கடக்கும். எங்கும் பரவும் சூரியனின் கதிரைப் போல் புக்ழானது பரவும். பராச்த்தி உன்னிடம் பொருந்துமாறு நடந்து கொள்க.
1227. . பொன்னும் மணியும் வெள்ளியும் தானே வந்தடையும். பராசத்தியின் அருளூம் ஞானமும் வரும். தேவர் வாழ்வு கை கூடப்பெறும். அவற்றை அடையும் வகையைத் தெரிக.
1228. நவாக்கரியை தேவர்கள் ஆவதற்கு மக்கள் அறிவார்கள். அவளை அறிந்த தேவர்களூக்கு தேவர்களீன் தலைவன் சிவபெருமான் அருள் செய்வான். பாயும் தீ கங்கையை சூடி அதன் வேகத்தை மாற்றியருளிய சிவபெருமானை அடைய முயல்வாயாக.
1229. வணங்குதற்குரிய சக்கரத்தில் பொருந்திய் எழுத்துக்கள் உலகம் புகழ்கின்ற ஹிரீம் முதலான் ஸ்ரீம் இறுதியாக் உள்ளவையாகும்.. இதனை வழிபட்டு மாலையை அணிந்து புகழுடன் கூடிய பராசத்தியை மேகம் போன்ற மண்டலத்தில் கண்டு கொள்வீர்.
1230. தனக்கு நிகரில்லா தலைவி சத்தியை தரிசனம் செய்யுங்கள். அள்ளிக் குடிப்பதைப் போல்முகப் பொலிவு உண்டாகும். மென்மையான பரமசிவத்தை மஞ்சமாகத் தாங்கும் நிலையான சத்தியை போற்றி உள்ளத்தே கொள்ளுங்கள்.
1231. அடையும் பேறாக உள்ள பெருமையை எண்ணினால் நாட்டை ஆளும் மன்னரும் வசமாவர். பகைவர் வாழ்வதுமில்லை இறைவனை ஒரு பகுதியிலே கொண்டவளைத் துதியுங்கள்.
1232. எட்டுத் திசைகளுக்கும் தலைவி சத்தியை வழிபடுங்கள். தேவர்கள் வாழ்வு எத்தகையது என்பதை எண்ணி அதில் கொண்ட ஆசையை அறுங்கள். மீண்டும் பிறந்து இப்பூமியில் வரும் வழியை மற்றுங்கள். நாயகியின் திருவடி துணையை பற்றித் தெளிவு அடையுங்கள்.
1333. சத்தியின் திருவடிகளை இடைவிடாது நினைத்திருந்தவர் நா அசையாமல் உள்ளே செபிப்பர். தங்களது அகப் பார்வையை செலுத்தி இருக்க பெருமையுடைய திருவடியைக் காண்பவர் ஆவர்.
1334. ஐம் முதலெழுத்து வலர்ந்து தோன்றும் சக்கரம் ஐம் முதலான பீசங்களோடு ஹிரீம் இறுதியாகும். அகர வாக்கியப் பொருளான சிவனுக்குரிய சத்தியை மாயைக்குத் தலைவியாய் போற்றுக.
1335. வாகீசுவரியான சத்தியை வேதங்கள் பகுத்து ஓதும். அவை அனைத்தையும் சேர்த்து நாவால் பயில அதற்கு அருள் செய்ய வல்லவளை அண்ணாக்கின் உள்ளே முன் எழக் கண்டு கொள்வீர்.
1336. இந்த இயல்புடைய சக்கரத்தை நாவில் எழுதினால் இது கூத்தப் பெருமானின் வடிவமாகும் பொன் மன்றில் இருக்கும் சபா வித்தையும் உயிர்கள் கையதாகும். மெல்லியலான நவாக்கரி அருள் பொருந்துவதால் உலகத்தை வெல்லலாம்.
1337. மென்மையான இய்ல்புடைய உண்மைப் பொருளானவளைக் குருவின் உபதேசப்படி விடாது பற்றுங்கள். தியானியுங்கள். இன்ப துன்ப கலப்புடைய நாள்கள் பலவும் நல்ல இன்ப நாள்களாகவே அமைந்திடும்.
1338. நன்மைகள் யாவும் சொல்லியபடி நடக்கும். சொல்லிய வண்ணம் சொல்லிய பயனும் தொடர்ந்து விடும். வாக்கீசுவரியே நாவில் பொருந்தி இருப்பதால் எல்லாக் கலையும் பொருந்தி நாவரசனாக இருப்பான். பரந்த உலகில் பகையும் இராது.
1339. பகைக் கெடுக்கும் கௌம் முதல் ஐம் இறுதியாய் உள்ள சக்கரத்தை நன்றாய் அறிந்தவரை பிறர் பழித்திட மாட்டார். பற்பல வடிவங்களாய் உள்ளவை யாவும் இவருக்கு வேறான்வை அல்ல. வேறுவகையின்மையாக எல்லாம் இவரை வணங்குபவனாம்.
1340 தத்துவ நாயகியை எல்லாரும் வணங்குவர். அந்நல்லவர் எல்லாம் அவளிடம் பொருந்தியிருப்பர். காமம், வெகுளி, மய்க்கம் என்ற மூன்று குற்றங்களும் அகலும், எண்ணிய செயல் கைகூடப்பெறும்.
1341. தனக்குமேல் பிறர் இல்லாமல் தானே பேசி அடங்குவன் ஆவான். தான் ஒருவனே எண்ணிய வண்ணம் ஒளிக்காமல் பேசுபவனாவான். தானே பேருழிக் காலத்தில் சிவபெருமானின் சங்காரத் தாண்டவத்தைக் காண்பவன் ஆவான். தானே வணங்கப்படக்கூடிய தலைவனும் ஆவான்.
1342. எல்லா உயிர்களும் ஆகியவள் சத்தியே எல்லாவற்றையும் பெற்றெடுத்த அழகுடைய அன்னை அவள் திருவடியை வணங்கினால் வினைகள் நீங்கிப் புண்ணியன் ஆகலாம்.
1343. உலகம் எங்கும் பொருந்திப் புண்ணியன் ஆகி மதிக்கத் தக்கவராய் அனைவருடன் கலந்து விளங்குவான். அருள் நிறைந்தவனாக உலகம் முழுவதும் இனிமையாக அமர்ந்திருப்பான்.
1344. சக்கரத்தின் பீசம் கிரீம் முதல் சௌம் வரை அது தானாக உள்ள சக்கரம் என்று அறிபவர்க்கு அஞ்ஞானமயமான காட்டில் இருள் மயமாகக் கலந்திருந்த அழியாத பராசத்தி உ”றவாகி அறிவு நிலையில் ஒளீயாக எல்லா உயிர்களிடத்தும் விளங்குவாள்.
1345. ஒளி செய்யும் பராசத்தி உள்ளத்தில் எழுந்தருளினாள் களிக்கும் மனத்தில் உண்மைப் பொருளை விளக்கித் தெளிவு தரும் மழையுடனே செல்வத்தையும் உண்டாக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கு அருள் செய்வாள்.
1346. நவாக்கரி சக்கரத்தை பூசை செய்து அறிவாய். உலகத் துன்பம் யாவும் விலகும். பகையை தடுத்து நிறுத்தும். மன்னனும் வணங்கும்படி செய்யும், மனத்தை கலங்கச் செய்யும் துன்பங்கள் ஏற்படாது.
1347. சக்கர வழிபாட்டைச் செய்பவர்க்கு துன்பங்கள் உண்டாவதில்லை. உள் உடல் பொன் ஒளியுடன் விளங்கும். பிற உயிரைக் கொல்லாதவர் என்பதால் பிறவியை அடைய மாட்டார்கள். வாழ எண்ணமுடைய உயிர்களுக்கு இதைவிடச் சிறந்த வழியில்லை முடிவும் இல்லை.
1348. தியானம் செய்தவர் ஒளி பெற்றுத் திகழ்வர். சினத்துடன் எழும் ஆகாமய வினைகளைக் காணாதவர் ஆவார். பரந்து எழும் உள்ளொளி அவர் வாழும் பகுதியில் படரும். அப்பகுதியில் பரவிய இருள் மயமான அஞ்ஞானம் கெட்டு ஒளியைப் பெற்று ஞான மயமாய் இருக்கும்.
1349. ஹௌம் முதல் கிரீம் வரை உள்ள மகிழ்ச்சியைத் தரும் சக்கரத்தை கண்டறிவார்க்கு தெளிவான ஞானமும் மனமும் உண்டாகும். அவர் வணங்கி வழிபடுவது ஐந்தெழுத்துடன் கூடிய நவாக்கரியாகும்.
1350. சதாசிவ மூர்த்திக்கு அருள் சத்தியாய் விளங்குபவள். இவள் கீழ் நோக்கும் சத்தியாக உயிர்களைச் செலுத்துபவள். சுவை, ஒளி, ஊறு, ஓசை, இவற்றை அறியும் அறிவாய்த் துணை இருப்பாள். அருவ நிலையில் எல்லா உயிர்களையும் தன்னுடன் அடக்கிக் கொண்டவள்.
1351. எல்லா உயிர்களையும் தன்னுள் கொண்ட ஈசான மூர்த்தி வடிவில் என்னுள்ளே இடம் பெற்று இருப்பவள். அவளை மண்ணிலும் நீரிலும் ஒளியிலும் காற்றிலும் வானிலும் கண்ணின் கருமணிப் பார்வையிலும் உடலிலும் காணலாம்.
1352. சத்தி உயிருடன் கலந்து நின்று உயிர்களுக்குச் செய்யும் உதவியை காணலாம். அவளை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடி இருப்பவரிடம் கண்பது சிவபேதமின்மையால் காணக்கூடும். உயிர்க்கு உயிராய் இருக்கும் அவள் வழியே உயிர்கள் செயல்படுவதைக் காணமுடியும். அவளிடம் என்றும் பிரியாத வண்ணம் கருத்துப் பொருந்தி நிற்பாய்.
1353. பயிற்சி செய்பவருக்கு ஏழு உலகங்களும் ஒன்றாக கலந்து நிற்கும். எல்லா உயிர்களிடமும் கலந்து பொருந்தி தானாக கண்பர். நிலத்தின் எல்லா இயல்புகளையும் உள்ளவாறு அறிவார். உயிர்கள் வலிய எய்திய வினைகளை விலக்கும் உண்மைப் பொருளாய் விளங்குவர்.
1354. மெய்ப் பொருளான ஒளம் முதம் ஹௌம் வரை உள்ள சக்கரத்தில் சிவம் விளங்க வீற்றிருக்கின்ற அமுதேசுவரி நன்மையைத் தரும் பொருளாக உடல் நடுவில் இருப்பார்.
1355. மூலாதாரம் முதல் பிரம்ரந்திரம் வரை பேரொளியாக இருக்கும் அமுதேசுவரியுடன் மூல வயுவை மெலே கொண்டு வந்து பொருந்தச் செய்தால் நள்தோறும் புதுமைகளை பார்த்தபின் நாடு முதலிய வேறுபாடுகள் இல்லை. நாள் தோறும் புதுமைகளைக் கண்டபின் அவர் உடலுக்கு கேடு ஏதுமில்லை.
1356. மூலாதாரத்தினின்று மேல் நோக்கி எழும் ஒளியை அறிந்தபின் கேடு வந்து சேராது. பேரொளியைக் கண்டபின் நாடு முதலிய வேறுபாடுகள் இல்லை. அமுதேசுவரியின் அருள் வரும் வழியைக் கண்ட பின்னர் உலக துக்க காடும் இல்லை.
1357. நாவ வந்தடைந்த உலகம் தோன்றாதபடி பாழ் செய்து அந்த உலகத்தில் கண்டறிந்த யாவும் வெட்ட வெளியாயிற்று. தானே எங்கும் நிறைந்திருப்பதால் வேறு இடம் இல்லை. உலவுவதற்கு வேறு வழி இல்லை. தான் என்ற பொருளே இல்லை. சலிப்பிற்குரிய இடம் ஏதுமில்லையாதலால் அசையாமல் அனுபவத்தில் நிலை பெறுக.
1358. பயிற்சி செய்பவர்க்கு ஏழு கடலும் முன் நிற்கும். உள்ளத்தில் நினைத்தவை யாவும் முன்னே நிற்கும். சத்தி தன்னிடம் நிலை பெறக் காண்பவர்க்கு தலையின்மீது ஒளிகள் அமைந்து இருக்கும்.
1359. விளங்குகின்ற ஒளியாய் திகழும் ஸௌம் முதல் ஒளம் வரை பீசங்களை உடைய நவாக்கரி சக்கரம் உண்மைப் பொருளாகும். அதில் இருக்கும் மின்னல் கொடி போன்றவளை ஞானத்தை உடையவளாய் அறிந்து இருப்பாயாக.
1360. தெரிய வரும் உண்மைப் பொருளைச் சொன்னால் எங்கும் இருக்கும் சத்தியே அவள். இந்த உண்மையான ஞானப் பொருளை உணர்ந்தவரே சத்தியை உணர்ந்தவர் ஆவார்.
1361. அந்த சத்தி தானே வானம் போல் உருவு இல்லாமல் எங்கும் பரந்து காணப்படுப்வள். தானே அனைத்துப் பொருளுமாகி எல்லாவற்றையும் த்ன்னுள் அடக்கிக் கொண்டவள். எல்லா அண்டங்களும் தானாகத் திகழ்பவள்.
1362. அண்டங்கள் யாவற்றிலும் அளத்தற்கு இயலாதவளாய் இருக்கின்றாள். பிண்டமான உடலில் ஞானம் இருக்கும் பெருவெளியைத் தன்க்குரிய இடமாக கொண்டவள். ஓமம் செய்கின்ற ஓம குண்டத்தில் பல நன்மைகளைப் பெற்றாலும் கண்டத்திற்கு மேல் இருக்கும் நிலையான கலப்பை அறியாதவாராய் சிலர் உள்ளனர்.
1363. சத்தி கடல் சூழ்ந்த உலகம் எல்லாம் கலந்திருப்பதை அறியார்கள். உடலுடன் கூடிய உயிர் உடலை விட்டு ஒருநாள் பிரிந்துவிடும் என்பதை அறியார்கள். சிறு தெய்வத்தை நாடியதால் நாதத்தை அறியர்கள். இதற்கு அவர்கள் தலையெழுத்தே காரணம்.
1364. சுயம்புவாகத் தோன்றிய அந்தசக்கரத்தைப் பற்றிச் சொல்லின் கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக பத்து வரைக. இரேகைக்கு உட்பட்ட அறைகள் ஒன்பதாகக் குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் அறைகள் எண்பத்தொன்?றாய் அமைக்க.
1365. சக்கரத்தில் கட்டங்களுக்கு வெளியான மதி மண்டலம் பொன் நிறம் உடையது. கட்டங்களில் அமைந்துள்ள கோடுகள் சிவப்பு நிறமாக இருக்கும். சத்தியினது எழுத்துக்கள் அடைக்கும் கட்டங்கள் பச்சை நிறமாகும்
1366. பொருந்திய் மரப் பட்டையில் எழுதிய சத்தி பீசங்கள் எண்பத்தோர் அறைகளில் அடைக்க வேண்டும். பின்பு அவிசை நெய்யுடன் கலந்து ஓமம் செய்துபின் உயிர் ஆகுதி செய்ய வேண்டும்.
1367 .இயந்திரத்தில் அமைந்த சத்தி பொன்போன்றவள் பரபரப்பு இல்லாது சிக்கெனப் பிடித்துக் கொள்வாயாக. தியானிக்கத் தொடங்கிய நாளிலே இன்பம் உண்டாகும். வேள்வியின் தலைவனான நான்முகன் சேர்த்தபின் நேயப் பொருளை சிவத்துடன் நன்கு சேர்தலுமாகும்.
1368. அரைக்கப்பட்ட குங்குமச் சாந்து, குங்குமப்பூ, கத்தூரி மணம் எங்கும் பரவும் பல நறுமணங்களின் கூட்டு சவ்வாது புனுகு நெய் பச்சைக் கர்பூரம் பசுவின் கோரோசன்ம் பனிநீர் என்ற ஒன்பது பொருள்களையும் சேர்த்து சக்கரத்திற்குச் சார்த்துவயாக.
1369. சத்தியுடன் உள்ளத்தை வைக்கும் தவத்தை செய்தால் உள்ளே எழும் முதிராத இளங் கொங்கைகளை உடைய வாலைப் பெண்ணைப் பொருந்தி நவாக்கரியாக இருக்கும் இம்மந்திரத்தை ஆயிரக்கணக்கில் உருவகம் செய்க.
1370. உள்ளத்தே இருக்கும் ஒளிவடிவான் தாயும் தந்தையுமான நவாக்கரி தேவிக்கு கைகள் ஆறு. மழு, சூலம், தோட்டி, பாசம், வில், அம்பும், என்பவைகளுடன் கிலீம் பீசத்தை உடைய் தேவி வழிபடுபவர் முன்னாள் வெளிப்படுவாள்.
1371. அம்மையைச் சூழ யோகினி சத்திக/ள் அறுபத்து நால்வர் இருப்பர்.. வாமை, சேட்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரதமனி, சர்வபூததமனி எனும் எட்டு பேரின் இருகைகளிலும் வில்லும் அம்பும் கொண்டு இருப்பர். யோகினி சத்திகள் சக்கரத்தை நோக்கியபடி சுற்”றிலும் இருப்பர்.
1372. பொன்னால் ஆன காதணி, முடி ஆடை முதலானவற்றுடன் காணப்படுவது திருவுருவம். இம்மூர்த்தம் அக்கினியை மேனியாய் கொ?ண்டது. பழமையாகவே தன் பேரொளியை இருப்பிடமாகக் கொண்டு இருப்பவள்.
1373. இதை அறிந்து மனதுள் ஒப்பில்லாத சத்தியை தரிசித்தால் நீக்கமில்லாமல் நிறைந்து அருள்வாள். பின் எங்கும் கலந்துள்ள நாதமும் ஒளியும் ஆன பிரணவம் தோன்றும். உடம்பைத் தாண்டி கீழ் நோக்கி சகசிரத்தளம் இருக்க அருள்வாள்.
1374. பேரொளிவடிவான சத்தி உண்மையை அளிக்கும் தத்துவ ஞானத்தை அடியவரின் குரு மண்டத்திலிருந்து விளங்கச் செய்வாள். அவரிடம் இறைமைக் குணங்கள் இருக்குமாறு இருந்து கருவின் வழி பிறக்கும் செயலைப் போக்கி பெரிய வீட்டு நெறியை அருள்வாள்.
1375. பேரொளி பெருஞ்சுடராய் மேலான ஒளியாகி இருக்கும் தலைவி சூரிய ஓளி போன்ற கன்னியாய் பொன் நிறத்துடன்பூமி தத்துவத்தில் ஒளீயாய் எங்கும் பரந்து நின்றாள்.
1376. சத்தி மேலே தூக்கிய கைகளீல் தாமரை மலரும் குமுத மலரும் கொண்டு இருப்பாள். அபய வரதமான இரண்டு கைகளும் கொய்யும் தளிர்போன்ற அழகுடனும் தனங்கள் முத்தும் பவள்மும் நிறையப் பெற்று நல்ல மணி பொதிந்த ஆடையுடன் இருப்பாள்.
1377. சத்தி மாணிக்கம் பதித்த முடி தலையிலும் சிவப்பு என்ற அணி பாதத்திலும் அணீந்து அருள் வழங்குபவளும் அவளே. புலன்களீன் வழி போகாது அடக்கியவர் மனத்தில் அருள்மயமாய் அவள் எழுந்தருளியிருப்பாள்.
1378. நவாக்கரி சக்கரத்தை சூழ்ந்து பரந்து உள்முகமாய் பரவியுள்ள அறுபது சத்திகளும் எட்டுக் கன்னியரும் சூழ்ந்து நிற்க இரண்டு கைகளிலும் பூக்களைத் தாங்கிச் சிறந்தவர்கள் வணங்கும் ஸ்ரீம் பீசத்திற்குகுரிய செல்லமாக இருப்பாள்.
1379. செல்வமான சத்தியை தியானித்து உள்ளம் வெலியே ஓடாமல் அடங்கி நிற்குமாயின் ஓராண்டில் ஆசைப் பளுவான சுமை நீங்கி திருவருளால் எண்ணியவை கைகூடும். சிவசூரியனிடம் பொருந்தும் செய்ல் நடக்கும்.
1380. பொருந்திய மூலாதாரத்தில் எழுந்த முழு மலராகிய நான்கு இதழ் தாமரையிலிருந்து மேலே பேரொளி பிழம்பான சகசிர தளத்தில் முன் கூறிய சத்தி பரவியுள்ள முழுமைப் பொருளாய் இருந்தபின் மூலம் முதல் துவாத சாந்தம் வரை ஒளிமண்டலம் ஆகிடும்.
1381. இந்த சோதி மண்டலத்துள் சத்தி விரும்பி எழுந்தருளியிருப்பாள். உயிரும் மெய்யும் ஆகிய ஐம்பத்தோர் எழுத்தும் விந்து எழுத்து ஐந்தும் ஆகிய ஐம்பத்தாறு எழுத்துக்களையும் இயக்கும் திறம் உடைய்வ்ள். ஐம்பத்தாறு எழுத்துக்களை இயக்கும் ஐம்பத்தைந்து இயக்கிகள் சூழ நடுவே வீற்றிருப்பாள்.
1382. அம்மையை அருட்கண்ணால் பார்ப்பவர்க்கு முடியிலிருந்து அடிவரை பேரொளி பிழம்பாய் இருப்பாள். அவள் திருமேனி முத்துப் போன்ற வெண்மையாய் இருக்கும். அழகிய கைகள் நான்கில் மஞ்சள் வரையுடைய பைங்கிளியும் ஞான முத்திரையுமாக மேல் ஏந்திய கைகளில் பாசமும் அங்குசமும் கொண்டு இருப்பாள்.
1383. நாதமான ஞான முத்திரையை உணர்ந்து பாசமாகிய வேரை அறுத்து அன்புடன் மனத்தில் சத்தியைத் துதித்தபடி இருந்தால் ஐந்து ஆண்டில் கேடு தருவன எல்லாம் அகன்று மண்ணுலகத்திற்கு மேல் அமர்ந்துள்ள சிவமாகலாம்.
1384. நெற்றிக் கண்ணையுடைய சத்தியின் அருளைப் பெறும் வழியாகி தடையில்லாத நாத தரிசனம் தனக்குள் அமையுமானால் வான் மண்டலத்தில் உள்ள பேரொளி விளங்க ஹிரிங்காரப் பீசத்திற்குரிய சத்தி மண்டலம் அமையும்.
1385. ஹிரீங்க மண்டலத்துள் எழும் பேரொளியைக் கண்டு மனத்தில் நினைத்தால் அது கீழிருந்து மேலே பிளந்து கொண்டு உள்ளே எழும். வீணாத் தண்டில் பொருந்திய யாவற்றையும் தாங்க முடியும்.
1386. கொப்பூழ் தாமரையினுள் ஓங்கி மேலே எழும் பிரணவத்திற்கு உண்ர்வாய் இருப்பவள். வருத்தமுற வரும் பிறவியை எண்ணி நீக்கிட அடங்கியிருந்த நாதம் வலிமையுடன் மேல் ஓங்கி எழுந்து இருக்கும்.
1387. நல்ல மணிகளை அணியாக உடைய வாகீசுவரியும் பொன் முடியும் பொன் ஆடையும் பூண்ட திருமகளும் ஆற்றலை அளித்தருளும் வெண்ணிற ஒளியில் இருக்கும் கலைமகளும் உயிர்களின் தலைவியான மனோன்மணி சகசிர தளத்தில் எழுந்தருளியுள்ளாள்.
1388. சத்தியை வழிபடும் முன்பாக இடைகலை பிங்கலையால் வெளியே போய் பொருளை அளந்த வகையில் சத்தியை வழிபட்டபின் வெண்ணிற அமுத கலசங்களாகப் பொன்னம்பலத்தைத் தரிசிக்க வழியாதலை அறிந்து அங்கு இருந்தவர் தத்துவங்களை இய்க்கிக் கொண்டிருக்கும் சத்தியை காண் வல்லவர் ஆவார்.
1389. காரணிகளான எழுத்து சத்திகள் ஐம்பத்திரண்டு காரணியாக அவற்றை இயக்கும் கன்னிகள் ஐம்பத்து இருவர். காரணி இருக்கும் பொன்னம்பலத்தில் வெளிப்பட்டும் மற்ற தத்துவங்களில் மறைந்தும் இருந்து தன் அறிளால் வழிபடுவோர்க்கு வெளிப்பட்டு அருள்வாள்.
1390. எல்லாவற்றிற்கும் காரணியாய் இருக்கும் இச்சத்தி சகசிர தளத்தில் நிலை பெற்றிருக்க கண்டு ஓராண்டு பயிற்சி செய்தால் உன்னை விட்டு அகலாமல் இருப்பாள். மேற்கொள்ளும் விரதம் குறையாமல் இரும்பின் பரமாகாயத்தில் இருக்கும் சிவகதிரவனைக் காண்லாம்.
1391. அன்பர்களீன் சித்தம் உலகப் பொருளுடன் இருந்தால் சத்தி இதயத் தாமரையிலிருப்பாள். உலகப் பொருளுடன் இல்லாது உலகக் காரணமான விந்து நாத சித்தம் ஆனபோது சிவனையும் உடம்பையும் பிறவியில் பொருந்தியிருக்கும் வாயுவின் கட்டினை நீக்கி உள்ளத்தில் இன்பம் பெருக்குவாள்.
1392. சத்தி தன் எட்டு கரங்களிலும் மலர்ந்த பூ, கிளி, பாசம், மழு, வாள், கேடயம், வில், அம்பு ,ஆகியவற்றைத் தாங்கி ஆரவாரத்துடன் கூத்தையும் விரும்பி நடித்தனள்.
1393. சத்தி பொன் முடியையும் முத்து மாலையையும் விரும்புவள். பவழ மாலையையும் செம்பட்டு உடையையும் உடுத்துபவள். அண்ணாந்து ஏந்திய அழகிய முலையில் கச்சினை அணிந்தவள். அரிய உயிர் இன்பம் அடைந்து உய்ய மலர்ந்த முகத்துடன் இருப்பவள்.அவள் மேனி பரிய நிறமானது.
1394. ப்ச்சை நிறம் கொண்ட இவள் சத்திகள் நாற்பத்தெட்டு. மழலை பேசும் தோழியர் எட்டு எப்போதும் உடன் இருப்பவர்கள் ஆவர். கச்சு அணிந்த கொங்கைகளுடன் இரண்டு பக்கமும் காவல் உடையவளாக மெலிந்த இடையை உடையவளாய் இனிது வீற்றியிருப்பாள்.
1395. மூலத்தில் தாங்கிய பேரொளி வடிவான சத்தியை சுழுமுனை வழி கலந்து கொள் என விருப்பம் ஆக மூலாதார வாயுவை மேலே செலுத்தி தீ காதலனைக் கூடப்போகும் காதலியைப் போல் வான் வெளிக்குச் செல்லுக.
1396. கொப்பூழுக்கும் இதய்த்திற்கும் இடையில் உள்ள சூரியன் க்ண்ணில் இருக்கும் சந்திரனுடன் சேர்வதால் நத சத்தி இருக்கும் ஞானச் சூரியன் ஆனது. அத்வே சந்திர மண்டலத்தின் விரிவாகும்.
1397. விழிக்கு மேல் இருக்கும் சத்திக்கு பத்து திசைகளும் பத்து முகங்கள் ஆகும். தாபத்தை உண்டாக்கும் சூரியன் தன் நிலையை விட்டு சந்திர மண்டலத்தில் மெல்ல அடங்கி வருவதால் ஆபத்தைச் செய்யும் பத்து நாடிக”ள் கீழும் மேலும் செல்வதை விட்டு அடங்கும். .வழிபடுவர்களின் பாசத்தை அறுக்க சூலத்தை பயன் படுத்தினாள்.
1398. சூலப்படை, தண்டு, வாள், பறை, ஒளி தரவல்ல ஞான வடிவான வேல், அம்பு, உடுக்கை, கிளி, வில்தாங்கி, காலம், பூ, பாசம். மழு, கத்தி ஆகியவற்றைக் கைகளில் தாங்கி அழகிய சங்கு அபயம் வரதங்களுடன் இருக்கும் கைகளை நினைத்து துதிப்பாயாக.
1399. வழி பட்டோர் எண்ணத்தில் விரும்பி அமரும் சத்திகள் நாற்பத்து நால்வருடன் உள்ளத்தில் அமர்கின்ற தோழியர் நாற்பத்து நால்வர். எண்ணம் உருப்பெரும் சகசிரதளத்தில் இருந்தவள் உலக எண்ணங்களைக் கடந்தபோது அவள் நின்றாள்.
1400 கடந்து நின்றவள் பொன் முடியுடன் மணி முத்து பவளம் சேர்ந்து செய்யப் பட்ட கச்சினை அணிந்து ப்ரந்த இடுப்பில் பட்டாடை உடுத்தி சிலம்பை அணிந்து வாலை வடிவில் வீற்றிருப்பாள்.
1401. சத்தி த்டையேதுமில்லா மேருவாகவும் அணீமா முதலிய சத்தியாகி பழைய சாத்திர அறிவை அகற்றி பேரொளியைப் பொருந்தி உணர்ந்தார்க்கு உண்மை அறிவு ஊண்டாகும்.
1402. கீழ் நோக்கிய சகசிரதளத்தில் காணப்படுபவளே சதாசிவ நாயகியான மனோன்மணி. அவள் சதாசிவரைப் போலவே முகம் ஐந்தும் கைக்ள் பத்தும் உடையவள்.
1403. நல்ல மணி சூலம், கபாலம், கிளி பல மணிகளையுடைய பாம்பு, மழு, கத்தி ஆகியவற்றுடன் இருப்பாள். மாணிக்கம் போன்ற தாமரை, உடுக்கையும் உண்டு. பொன்னாலும் மணியாலும் அவள் அலங்கரிக்கப் பட்டவள்.
1404. தன்னை வழிபடுகின்ற் சத்திகள் நாற்பதின்மர் சூழ நேசத்தையுடைய பராசத்தி நாற்பது கன்னியர்க்கு நேராக உடம்பில் உள்ள சகசிர தளத்தில் கலந்தவள். குற்றம் ஏதும் வராதபடி மகிழ்வுடன் இருந்தாள்.
1405. பிரண்வத்துள் இருக்கும் பேரொளியைச் சுமையான உடலில் இருந்து உடலில் கடந்து எழுந்திட அதையே தனக்கு ஆதாரம் என உணர்ந்து அதை எண்ணி மனோலயம் பெறுபவர்க்கு ம்ண்ணின்று நீரைப் பருகி எழுகின்ற மேகம்போல் பராசத்தி தலையில் வெளிப்படுவாள்.
1406. சுவதிட்டான சக்கரத்தில் நிலை கொண்ட அ கார உ காரங்கள் சகசிர தளத்தில் சிவயநம என அகக் கண்ணுக்கு புலனாகும்படி விந்து நாதங்களாய் வெளிப்படும். காண அரியது அன்று. நாதம் எழுந்தது பயிற்சியாளருக்கு காட்சி தந்து திருவடியில் வைத்துக் கொள்வதற்கே ஆகும்.
1407. சந்திரக்கலையிடை விளங்கிய அமுதத்தை ஏந்திய கொங்கையையுடைய பராசத்தி அக்கினிக் கண்டத்தில் இடைகலை பிங்கலையால் சுவாதிட்டானத்தில் செய்ல்படும் சுக்கில சுரோணிதத்தைக் கொண்டு அமுதமயமாக மேலே இருந்தாள்.
1408. நீல மலரும் முத்தும் கலந்த குளிர்ச்சியுடைய ஒளியில் ஆனந்தமயமாக இருக்கும் அழிவில்லாத சத்தி அமுதம் போன்ற அழகான மேனியுடன் வெண்ணிற ஒளியாக வெளிப்படு அருள்வாள்.
1409. அழிவு இல்லாத முப்பத்தாறு சத்திகளும் நாடுதற்கு அரிய முப்பத்தாறு தோழியாரும் சக்கரத்தை இல்லமாகக் கொண்டவர்கள் சக்கரத்தின் இதழ்களில் குடியிருந்து இவர்கள் காலவரையைக் கடந்து நின்ற அம்மையைச் சூழ நின்றனர்.
1410. புத்தி தத்துவத்தில் சிவம் நாதமாக நிறைந்து நின்றது. அதன் ஒளியான சோதி உள்ளத்தினின்று நீங்காது இருக்கும். ஓராண்டு சாதனை கூடிவரும்போது முன்பு கூறிய ஒள் காரம் விளங்கியது.
1411. வானில் நிலைபெற்ற அண்டங்களுள் வாழும் உயிர்கள் யாவும் மண் உலகில் வாழ்கின்ற உயிர்களைப் போல் பயிற்சியாளரை வணங்கும். திருமாலைப் போன்று பெறும் இன்பங்களைப் பற்றித் துனபம் தரும் நோய் நிறைந்ததை இங்கிருந்து சொல்ல முடியாது..
1412. மூலாதாரத்தில் கீழ் நோக்கும் முகமாய் இருந்த குண்டலினி சத்தி உ காரத்தை பொருத்தி இடை நாடியில் இருந்து எழும் ஒளியாய் சகசிரதளத்தில் நிலைபெற்று எண்ணங்களை எல்லாம் நிறைவு செய்யும் கற்பக மரம் போல் ஆனாள். அவளே எல்லா சித்திகளையும் அளிக்கும் இலக்குமி ஆவாள்.
1413. பொற் கொடி போன்ற பராசத்தியை வழிபட்டால் செருக்கைத் தரும் அகங்காரம் நீங்கி நிலையான பெருவெளியில் பரமகாயத்தில் பின்னிய கொடி போல இருக்கும் சத்தியைக் காணலாம்.
1414. பராசத்திக்கு எல்லா உயிர்களையும் பேணும் பெண்மையே அழகாகும். சிவமே தந்தையாகும். மாதரசியானவளுக்கு மண்ணுலகம் சிறிய திலகமாய் பல சத்திகள் சூழ மேலே குவிந்த இடத்தில் இருப்பாள்.
1415. சத்திகள் முப்பதிருவர் இருந்தனர். கன்னியான முப்பத்திருவரும் சூழப்பரவிய இதழ்களை உடைய சகசிர தளத்தில் கண்கின்ற பல் இடங்களையும் தனக்கு இடமாக்கிக் கொண்டு எழுந்தருளியிருந்தாள்.
1416. நவக்கரி சக்கரத்தில் உள்ள சத்திகள் கூத்தப் பெருமானின் ஒளியைக் கண்டு ஊர்த்துவ சகசிரதளத்தில் இருப்பர். பெருமானும் சத்திக்ளும் உலகத்திற்கு கரணமாவார்கள். இவர்களை பழைமையான வேதம் அறிந்து கொள்ளத் தேடும். சிவசத்தி என் உடலிலும் மனத்திலும் பொருந்தி என்னை ஆட்கொண்டாள்.
1417. சிவ ச்த்திகள் தாமே வீடாய் அமைந்து ஆளப் பெற்றால் அவர்களுக்கு இல்லாதது ஏதுமில்லை. இந்த தனமையுடையவர் அயலாரிடம் சென்று இருப்பதில்லை. அவர்களுக்கு தேவர்களும் நிகராக மாட்டார். சிவசி=க்தி இவர்களின் ஆன்மாவை இடமாகக் கொண்டுள்ளதால் இவர்கள் இல்லாத இடமே இல்லை.
1418. தத்துவங்களுக்கு மன்னான ஆன்மா அறுபத்து நானகு தறிகளால் கட்டப்பட்டது. ஆன்மாவான பிரணவம் அறுபத்து நான்கு ஒளிக்கதிர்கலால் ஆனது. ஆன்மா அறுபத்து நான்கு கலைகளில் இருக்கும். பிரண்வத்தின் விந்து நாதமான சீவனும் சிவனும் உள்ளனர்.
#####
ஓம்நமசிவய!
அறிவின் வரம்பை அகன்றாய் குறிகுணங் கடந்த
குன்றே எட்டு வான் குணத்தெந்தாய் கட்டறு
களிற்று முகத்தோய் மலரில் மணமாய்
வளர்ந்தாய் அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!
#####
புவனாபதி சக்கரம்!
1307. க கரம் முதலிய ஐந்தெழுத்துக்களும் பொன் நிறமுடையவை. ஹ முதலிய ஆறு எழுத்துக்களும் செந்நிறம். ச காரம் நான்கு எழுத்துக்களும் வெண்ணிறம். சு காரத்தை ஆதியாக மூன்று பகுதியாக் உடைய் இம்மந்திரம் இம்மை மறுமைப் பய்ன் இரண்டையும் அளிக்கும்.
1308. ஆராய்ந்து நான் சொல்லுவது இம்மந்திர வடிவான புவனையைத் தவிர வேறு தெய்வம் இல்லை. ஒன்று சொல்வேன் கேட்பாயா. மேகம் போன்ற முக்கோணத்தில் மனம் நித்தியானந்த்தையும் அண்டத்தையும் அகண்டத்தையும் விரும்பின் அது சிவன் வடிவம் என்பதை அறிக.
1309. பராசத்தியே இறைவனுக்கு திருமேனி. அந்த திருமேனி வித்தையாகும். சித்தியையும் முத்தியையும் அளிப்பது. பராசத்தி. ஒருத்தியாய் இருந்தபோது சிவகுருவோடு பொருந்தி நிற்பதில் எட்டு சத்தியாய் திகழ்வாள்.
1310. எட்டு சத்திகளும் எட்டு அங்கங்களையுடைய யோகத்திற்கு அங்கமாகும்.. நாதாந்தம் கூடப்பெற்றவர்க்கு இந்த எட்டும் கலபித்தில் அமையும். விருப்பை விளைவித்து போகத்தில் செலுத்தும் வீரியமும் அற்று நீங்கியது பெண் இன்பத்தில் நாட்டம் உடைய கீழான உயிர்களுக்கு அடைய முடியாததாயிற்று.
1311. பயன் எல்லாம் தருவது இயந்திரத் தலைவன் புவனாபதி சக்கரத்தின் திருவடியாகும். அதை அறிந்து குருவிடமிருந்து மந்திரத்தை பெற்று உடம்பில் நிறுத்தி பயின்றால் ஆன்மா உடலின் மந்திர தத்துவமக நிலைக்க உறுப்புக்கள் சிவனின் அங்கங்களாக கருதி பிறவி வேர் நீங்குமாறு செப்புத் தகட்டில் அறுகோணம் அமைக்கவும்.
1312. அறுகோணத்தில் ஸ்ரீம் ஹரீம் என்ற பீஜங்களை எழுது. அந்தக் கோணம் ஆறின் உச்சியில் ஹிரீங்காரம் இட்டு எல்லாக் கோணங்களையும் சூழ அழகிய வட்டம் எழுதி பின்னர் அதன்மேல் பதினாறு உயிர் எழுத்துக்களை அ முதற் கொண்டு எழுது.
1313. செல்லப்பட்டபடி எழுதப்பட்ட இதழ்களில் நடுவில் உள்ள வெளியில் எட்டு ஹ எனும் எழுத்தையும் உ எனும் எழுத்தையும் சேர்த்து ஸ்ரீ எழுதுக. இதழ்களின் மேலே கிரோம் சிரோம் என்பவன வற்றை எழுதி அதன் இடப்பக்கத்தில் ஆம் கிரோம் என எழுதுக.
1314. சக்கரத்தின் மீது வலப்பக்கத்தின் மீது மாலையைப்போல் கிரோம் சிரோம் என எழுதி. குற்றம் இல்லாத ஹிரீம் என்ற பீசத்தை சக்கரத்தைச் சூழ்ந்து புவனாபதி சத்தியை பூசை செய்க.
1315. வழிபடும்போது புவனாபதியைக் காமம் முதலான குற்றங்கள் நீங்கிய உள்ளத்துடன் இருக்க வேண்டும். என வேண்டி அதற்குரிய மந்திரங்களை சிந்தித்து உயிர் கொடுத்து அங்கு நிறுத்தி ஒளி விளங்குமாறு தியானம் செய்யவும்.
1216. சிவந்த மேனியை உடைய செந்நிறப் பட்டிடை உடுத்தி கையில் அங்குசம் பாசம் அபய வரதத்தையும் கொண்டு திருமேனியில் அணிகலன்களையும் மணி அணிகளையும் அணிந்து தூய முடியுடைய வடிவுடன் இருப்பாள்.
1217. உடம்பைக் கடந்து ஓளி மண்டலத்தில் நின்று துதித்து முறைப்படி பூசை செய்து பால் சோற்றை மந்திரத்தால் செபித்து நான்கு திசைகளிலும் நாரதாய சுவாகா எனச் சொல்லி நிவேதித்து பிரசாதத்தை உண்க.
1218. படைக்கப்பட்ட படையலை உண்பதற்கு முன் தேவி உன்னுள் கலந்திருப்பதாகக் கண்டு இதய் கமலத்தில் பொருத்தி யாவராலும் கண்டறிய முடியாத புவனாபதியை மனத்துள் கொண்டு வழிபடுக. அவள் நீ நினைத்ததை அளிப்பாள்.
#####
More...
ஓம்நமசிவய!
தொந்தி வயிற்றுத் தந்தி முந்திய பொருட்கும்
முந்தியோய் ஐந்துகையுடைய ஐய ஐந்தொழில்
ஆற்றும் அமர அருளாய் அருள்வாய் ஆண்டவ
தருவாய் மணமலர்த் தாராய் போற்றி! போற்றி!
#####
சாம்பவி மண்டலச் சக்கரம்!
1297. சாம்பவி ச்க்கரம் பற்றி சொல்வதனால் எட்டு இதழ் தாமரையின் சிறந்த பகுதியாய் இருப்பவை விந்து நாதம் சத்தி சிவன் என்ற நான்காகும்.. இவற்றில் கண்ணாகக் காண்ப்படுவது விந்து. இதை உணர்ந்து நடப்பவர்களை உலகதார் அறிந்து வழிபடும் நிலை உண்டாகும்.
1298. உலகறிந்த மண்டலமான இச்சக்கரத்தில் கோணல் அகல இரண்டு பக்கங்களிலும் வீதிகளை அமைக்க வேண்டும். சிறந்த எட்டு இதழ் தாமரை நடுவில் உள்ள பதினாறு வீதிகளில் இதழ்கள் அகல் நான்கு பக்க மூலைகளும் அவற்றில் இடை இடம் நான்கும் நடு இடமும் ஆகும்.
1299. இச்சக்கரம் இருபது அறைகளை கொண்டது நடுவில் லிங்க வடிவம் நான்கு நாற்கோணங்களில் நான்கு நான்கு இலிங்கம் இடைவெளி. நான்கில் நான்கு பூக்கள் நடுவிலும் பூ என அமைய வேண்டும்.
1300. நடுவீதியில் க் காரம் முதம் ஷ் காரம் வரையுள்ள் முப்பத்தைந்து எழுத்துக்களையும் சிவய்நம் என்ற ஐந்து எழுத்தையும் மாறுபட்ட நிறத்தில் வல்மாக எழுத்வும். இதுவே தூய்மையான சிவயநம என்றாகும். தெ/ளிந்தபின் பயிற்சியாளருக்கு குறை ஏதுமில்லை.
1301. சொல்லியவாறு சொல்லில் குறையேதும் எற்படாமல் ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த திருவடியை அடையலாம். வேதத்தின் கூற்றில் பிரணவத்து ஒலியே என்று உணர்வார்க்கு இறப்பு உண்டாகது. என உரைத்தனர்.
1302. வெளியில் காண்ப்படும் பொருளும் உள்ளே மனத்தில் காணும் தெய்வமும் போற்றப்படும் ஊரும் நன்மைக்ள் பெருகும் புண்ணிய தீர்த்தமும் உண்வும் உணர்வும் உரக்கமும் முய்ற்சிக்காமலே வந்தடையும் பொன்னும் ஆகிய்ன இச்சாம்பவியால் உண்டாவன.
1303. ஐந்தெழுத்து தோன்ற இடமான நாதமாகிய் ஒசையின் வழி போகும் இடமான உச்சித்துளை வழி சென்றால் தாம் எண்ணிய செயல்கள் எல்லாம் செய்ய முடியும். உலகத்தில் பகைஎன யாரும் இருக்க மாட்டார்.
1304. சாம்பவி மண்டலச் சக்கரத்தை வணங்குபவரிடம் பகை இல்லை. நகைப்புக்குரிய நிகழ்ச்சிகளும் இடம்பெறா. நாள்தோறும் நன்மைகள் உண்டாகும். தீவினைகளும் அவற்றால் உண்டாகும் பிறவியும் இல்லாமற் போகும்.. தடை ஏற்படாது. நீர் போல் குளிர்ந்த குணம் உடையவராக இருப்பர்.
1305. சாம்பவியை ஐந்தெழுத்தால் வணங்கலாம். எவரும் அறியாத ஆனந்த வடிவம் உண்டாகும். நிலம், முதல் வானம் வரை சூரிய சந்திர மண்டல்ம் ஆகவும் மேலான உடலில் உயிராகவும் உயிரில் உணர்வாகவும் விளங்கும்.
1306. சிவாயநம என சிந்திப்பவ்ர்களுக்கு உள்ளே உந்தியினின்று தலைமுடிய பிரணவம் தோன்றி எழும். அந்த பிரணவமே ஐந்தெழுத்து வடிவான முதல் நிலையாகும். சிவனும் சத்தியும் நாத விந்து தத்துவங்களின்று உடலைக் கொண்டு வரும். திரும்பவும் சத்தி சிவத்தை எண்ணியபோது தத்துவங்கள் விந்துவிலும் விந்து நாதத்திலும் இலயம் அடையும்.
#####
ஓம்நமசிவய!
கயமுக அசுரனைக் காய்ந்தாய் மயலறும் இன்ப
வாழ்வே ஆனையாய்ப் புழுவாய் ஆனாய் பானை
வயிற்றுப் பரமே கடம்பொழி யானைக் கன்றே
மடம் ஒழி அறிவின்வளவனே போற்றி! போற்றி!
#####
வயிரவச் சக்கரம்!
1291. வளர்பிறை ஒன்று முதல் ஆறு வரை ஆறு ஆதாரங்களிலும் காணப்படும். திதிகள் ஆகும். இதை அறிந்து மேலே எழாம்பிறை முதல் பொருந்தும் பிறைகளை ஒன்றுவிட்டு ஒன்றாய் எண்ணி எழு என்பதை விட்டு எட்டும் ஒன்பதை விட்டு பத்தும் பதினொன்றைவிட்டு பன்னிரண்டும் பதிமூன்றைவிட்டுப் பதனான்கும் ஆகிய நான்கும் முதலில் சொல்லப்பட்ட ஆறும் மொத்தம் பத்து ஆகும். பகை வெல்வார் புறப்பட்டுச் செல்கின்?ற புலத்தை தம் வலப்பக்கம் அமையும்படி தியானம் செய்தால் பலன்.
1292. வயிரவரைத் தியானம் செய்பவரின் மனத்தில் தோன்றுவார். அவர் சூலத்தையும் கபாலத்தையும் ஏந்தியவராக் இருப்பார். பகைவனை வென்று அவன்மீது அருள் காட்டாது உயிரை தோண்டி எடுக்கும்போது அப்பகைவரது உடலைப் பந்தாடலாம்.
1293. உயிர்களின் பக்தியை மேற்கொண்டு அவை விரும்பும் வண்ணம் திருவருள் செய்பவர் பைரவர். இரண்டு கைகளில் கபாலமும் சூலமும் ஏந்தி தமருகத்தையும் பாசத்தையும் மற்ற இரண்டு கைகளில் தண்டிப்பதற்காக கொண்டிருப்பவர். ஐந்து ஆறாம் கைகளில் தலையும் வாளும் உடையவர்ரய் இருப்பார்.
1294. ஆறு கைகளயும் அவற்றில் பொருந்திய ஆயுதங்களையும் மனம் பொருந்தி தியானிக்க பெருமான் செந்நிறமாக காட்சி தருவார். தூயவர் மனத்தில் விளங்குவார். ஒளியைப் பொருந்தி நிற்கும் அவரை உடலைக் கடந்து பூஜை செய்க.
1295. பெருமானை ஆயிரம் உரு செய்து வழிபடுக. பூசைக்கு நல்ல தேனை விரும்பி படைக்க பூசைக்கு சாந்து புனுகு சாத்தி பகை நீக்கம் செய்க.
1296. விரும்பும் வண்ணம் பகைவர்களுக்குள் கலகம் உண்டாகும். விரும்பிய அறு செயல் கலையை உண்மையாய் பெற்ற பின்பு விரும்பியபடி நடக்கலாம். வேண்டிய எல்லாம் கிடைக்கும்.
#####
ஓம்நமசிவய!
பாலொடு தேனும் பருகுவோய் மேலொடு கீழாய்
மிளிர்வாய் எய்ப்பில் வைப்பாய் இருந்தோய்
மெய்ப்பொருள் வேழமுகத்தாய் நால்லார்க்
கெட்டும் நாதா பொல்லா மணியே புராதன போற்றி!
#####
ஏரொளிச் சக்கரம்!
1255. மூலாதாரத்தில் எழும் நான்கு இதழ்களையுடைய் தாமரை மிக்க ஒளிவுடையது. தூல விந்து மாற்றி அமைக்கப் படுவதால் எழும் ஓளி தலையில் நாதமாக அமையும். எழும் அக்கலை எங்கும் நிறைந்தபின் அதன் மையத்தில் தீ மயமான சிவம் நிற்கும்.
1256. மூலாதாரத்தில் உள்ள வ ச ஷ ஸ ஆகியன பெருவ்ல்லமை கொண்ட எழுத்துக்கள். மண் முதல் எழுந்து வான் வரை வளரும். அவை பெருமையுள்ள சக்கரமாய் அமைந்ததால் அது அமைக்கின்ற விதத்தை சொல்வோம்.
1257. வீரியமாய் கீழே இருந்ததை மாற்றி அமைக்கப்பட்டு பன்னிரு கலைகளையுடைய சூரியன் சிரசில் இருக்கும்.. அக்கினியாகிய வ ச ஷ ஸ என்பவை இங்கு ஒலிகளாகப் பொருந்தும். மூலாதாரம் முதல் இடைகலை பிங்கலை சுழுமுனை ஆகிய நாடிகளில் பொருந்தி மேலேறும். ஆதனால் நூற்று நாற்பத்தி நான்கு கலையாற்றலாக சிரசில் வட்டமாக தோன்றும்.
1258. அம் என்பதை விளக்க சந்திரமண்டலம் மேலே அமைந்து அந்த ஒளியுடன் நாதமும் ஓங்கி நிற்கும். சிரசில் சந்திரமண்ட்லம் சிறப்புடன் இருந்தால் பூமி தத்துவம் நுட்பமாய் அங்கு அமையும்.
1259 மேலே இருக்கும் மண்டலம் உலகமாய் விரிய அங்கிருக்கும் நாதங்கள் உலகமாய் விரியும். அதற்குள் இருக்கும் இறைவன் சங்கற்பமே உலகமாய் விரியும். சந்திரன் சூரியன் மண்டலங்களில் உள்ள நுட்பமான ஒளியே பருவுலகமாய் விரியும்.
1260. அகரக் கலை விரிந்து விந்துவும் நாதமாய் விரிந்து அதில் சக்கரம் விரிந்து இருக்கும். முதலில் காணப்படுவது பூமி தத்துவம். மேலும் விரிந்தால் நீர்மண்டலம் அமையும்.
1261. சக்கரம் நீராய் விரிந்து அதில் தீ தத்துவம் இருந்தது. நீருக்குப்பின் காற்றுத் தத்துவம் அமைந்து அதன்பின் வான் தத்துவம் தோன்றியது.
1262. ஆகாசத்திற்குரிய அடையாள எழுத்தை சொன்னால் வான் பீச எழுத்தானது. அ கரமான கலையாகி அதனால் சிவானந்தம் உண்டாகும் என்பதை உணர்க.
1263. சக்கரம் பத்து ஒளிவட்டத்தால் ஆன இச்சக்கரத்தை நாதம் முதலாகக் கொண்டு அறியலாம். அந்தந்த மண்டலத்திற்குரிய தலைவர்கள் அங்கே உள்ளனர். இறுதியில் சிவசூரியன் உள்ளது என்பதை அறிவாய்.
1264. ஆறு சக்கரங்களில் உள்ளது பிரணவமான ஆதி எழுத்தாகும். மேல் உள்ள நான்கு சக்கரங்களிலும் சூரியன் சந்திரன் சேர்க்கையால் ஆத்ம சோதி மண்டலத்திலிருந்து எழுத்து வடிவம் தோன்றும்.
1265. மூலாதாரம் முதலாக உள்ள சக்கரங்கள் நூற்று நாற்பத்து நான்கு கலைகளாக விரியும் ஆறு ஆதாரங்களுக்கும் நடுவில் தோன்றி எழுவது தீ இருக்கும் அக்னி நாடியாகும். வன்னி எழுத்துக்கள் ஆறு ஆதாரங்களுடன் சேர்ந்து முதலாகவும் முடிவாகவும் திகழும்.
1266. அந்தமான எழுத்துக்கள் முடிவாகிய சூக்குமம் முதலிய தூலமும் நீங்க விசுத்தி அஞ்ஞை சக்கரங்களும் முடிகின்றன. பதி மூன்றாம் எழுத்தான ஓ கரத்தில் அமைந்தபின் அதன் மேல் உள்ள மண்டலத்தில் ஏறிக் கடப்பதே முடிவு.
1267. அத்தகைய காலம் முந்நூற்று அறுபது நாள்கள். பதினைந்து நாட்கள் பட்சமாகும். ருது ஆறு. மாதம் பன்னிர/ண்டு.இவை சிவ சூரியன் இயக்கத்தால் வந்தவை.
1268. பகல் இரவு காலங்கள் ஆறு ஆறு நாழிகைகளாக இருக்கும். இராசியும் முப்பது கலைகளாக வரும். ஆண்டுக்கு முந்நூற்றறுபது கலைகள். இதை வகுத்துப் பார்த்தால் சூரியன் செல்லும் பன்னிரண்டு ஓரைகள் இருக்கும்.
1269. அந்த இனம் மூன்றும் மேடவிதி. மேல் ஓங்கிய மூன்றும் இடப வீதி. மற்ற இன்மான மூன்றும் த்ழைக்கின்ற தண்டுடன் கூடிய மிதுன வீதி. ஒரைகள் எல்லாம் இம்மூன்று வகையாகும்.
1270. சூரியன் வீதியாய் இருக்கும் சகசிரதளம் நிறைந்து விரிந்த பின் அது விந்துவாகி ஒளிமயமானது. நாத இயக்கம் ஒத்து அமைந்தபோது அதுவே சகசிரதளம் நிற்கும் இடம்.
1271. தீ சூரியன், சந்திரன் கண்டத்தில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் அவை அவை தன்மைக்கேற்ப அசைவை கீழே தூலத்தில் அமைத்து சூக்குமத்திலும் அமையும். இதுபோன்று சிரசில் அமையும் சந்திர சூரிய அக்கினி மண்டலங்கள் ஒப்ப வளர்ந்த பின் ஆன்மா என்ற தாரகை முழுவடிவமாம்.
1272. சகசிரதளம் நாள்மீன்களின் ஒளிகளால் ஆனது. நாள்மீன் ஒளிகளுக்கு மேல் பேரொளியின் பிழம்பாய் சிவம் இருக்கும். நாள்மீன் ஒளியில் சந்திரன் அறிவும் சூரியன் அறிவும் சேர்ந்து இருக்கும் .இது தாரகையின் சமஷ்டி அறிவு ஆன்மா ஆகும்.
1273. சக்கரம் இவ்வாறு ஒளி வளர்ந்து ஆனது ஆகும். ஒளிக்குப் புற எல்லையில் நாதம் தோன்றும். தீக் கொழுந்து தீபத்தைப்போல் ஒன்றாகி இருக்கும் பின் கருமையான ஒளியாய் மாறும்.
1274. எல்லா உயிரிலும் சூழ்ந்த அண்டமே பிரபஞ்சத்தில் கலந்துள்ளது. ஊழி முடிய இவை நிலையாக இருப்பதைக் கண்டால் இந்த அண்டகோசமே சீவர்களின் மூலம் போன்றது. அண்டம் ஒளிமயமாய் ஆவதால் அதற்கு வலிமை கிட்டும்.
1275. எல்லா உயிர் பொருளிலும் சூழ்ந்திருக்கும் அண்டமே உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது. ஊழி முடிய நிலையாக உள்ளத்தைக் காணும்போது இந்த அண்டகோசமே உயிர்களின் மூலம் போன்றது. இந்த அண்டம் ஒளிமயமாக ஆவது அதற்கு வலிமை சேர்ப்பதாகும்.
1276. விந்துவும் நாதமும் ஒத்து இருந்தால் வான் கூற்றான அண்ட கோசத்திற்கு விதையைப் போல் இருக்கும் ஒளி குறைந்து நாதம் மட்டும் எழுந்து நின்றால் ஒளியைவிட ஒலி எட்டு மடங்கு கூடுதலாகும்.
1277. ஒளி அணுக்கள் இரண்டு வகை. ஒன்று மேலே போய் அண்ட கோசத்தில் விந்து நாத மண்டலங்களை அமைக்கும். இந்த ஒளி அணுக்களும் நாத அணுக்களும் ஒன்றான பின்பு அண்ட கோசமானது விரிவாகி விந்து மண்டலங்கள் ஆகும்.
1278. விந்து விரிந்தால் வீசம் அளவு ஒளி அணுக்கள் மறையும். விந்து விரியும் தன்மைக்கு ஏற்ப நாதமும் அமையும். விந்துவைக் கட்டுப்படுத்தினால் எட்டும் எட்டுமான சந்திரக்கலை அமையும். ஒளி மண்டலத்தில் விரிந்து ஒளி பீஜங்களாய் இருக்கும்.
1279. தோன்றும் எல்லாம் ஒளியைக் கார்ணமாய்க் கொண்டவை. விந்துவால் விளைந்த உயிர் இந்த உலகம் எல்லாம் விந்துவைக் காரண்மாய்க் கொண்டே உண்டாயின. விந்துவின் காரண்மாகவே சிவத்தின் திருவடி இருக்கும்.
1280. எல்லா எழுத்துக்களுக்கும் மூலமான பிரணவம் விந்து நாதத்தால் ஆனது.. சிரசில் சக்கரமாக அமைந்து பிரணவம் உடம்பினுள் நிற்கும். எல்லா எழுத்துக்களும் சேர்ந்த மந்திரமாகும்.
1281. மந்திரம் சக்கரம் ஆகியவைப்பற்றி சொன்னால் உள்ளே காணப்படும் பிரணவ ஒளிவட்டமே உபாயங்களாகும். கண்டத்தில் வைகரியாய் நிறுத்தி எண்ணுவதிலும் தகடுகளில் ரேகை கீறி காண்பதிலும் பயன் இல்லை.அசைவாக் இருக்கும் பிரணவத்த்டை முதன்மையாகக் கொண்டு தியானம் செய்யவும்.
1282. அகவழிபாடாகச் செய்யப்படும் பிரண்வ வட்டத்தில் பொருந்தி விளங்கும் மந்திரம் பிறகு இடப்பட்ட சக்கர கோடுகளை விட்டுத் தவறுவது இல்லை. தன் பொருட்டு உண்டான தடைகளான அஞ்ஞானம் சேர்ந்திடச் சொல்லப்பட்ட மந்திரத்தை ஆராய்தல் ஆகும்.
1283. பிறப்பு இறப்பு பகையை அறுக்கும் தன்மை கொண்ட சக்கரத்தை பார்க்ககூடும் உள்ளத்தில் எங்கும் காக்கவும் கூடும். நுட்பமானவற்றுக்கெல்லாம் நுட்பமான சிவத்தை அன்புடனே பார்த்து உள்ளபடி உணர்பவர்க்கு அதை அடையவும் முடியும்.
1284. சொன்ன ஏரொளிச்சக்கரத்திற்கு முதல் எழுத்து அ காரமாகும். அதன் மேல் எழுத்துக்கள் அம்மை எழுத்து உ காரம் ஆகும். இந்தச் சக்கரத்தில் மாயா செயலான நிலம், நீர், நெருப்பு, காற்று எனும் நான்கு பூதங்களும் பொருந்தும். எல்லாம் கூடி நிற்கும் சக்கரத்தை பற்றி சொல்ல முடியுமோ.
1285. ஐந்தெழுத்துடன் கூடியது மாரணம். மாறுபட்ட இயல்புடையதாய் மதிப்பவருக்கு சொல்லப்பட்ட சக்கரத்துடன் எழும் மந்திரமனது ஆறு செயல்க்ளை செய்து விரியும்.
1286. எல்லா உயிர்களுக்கும் அருள் செய்பவள் எனப்படும் அம்மை குறித்த சக்கரத்தின் முதன்மையானவள். பயிற்சி செய்பவருக்கு பகையை வெல்லத் துணை செய்ய அன்னை ஒத்து வருவாள். அம்மை காரணமாக உடன் வரும் ஐம்[பூதங்களும் தொழில் செய்யும். அவளது ஆணையின்றி அவை எதுவும் செய்யாது.
1287.தேடித் தெளிவு கொண்ட அடியார்க்கு உண்டான தம்பனம், மாரணம், வசியம் ஆகியன இயல்பாகவே வந்து பொருந்தும். அவர்கள் இருப்பிடத்தில் பகைவரும் வந்து இருக்க மாட்டார்.
1288. மூலாதாரத்தில் இருக்கும் சக்கரத்தை தெளிந்தி அறிந்து கொண்டால் கனிந்த குழைவான அ காரத்தை அந்நடுவில் குளிர்ந்த குண்டலினியின் சுற்று வட்டத்தில் வைத்து மூலவாயுவை அங்கிருந்து சுழுமுனை வழியாக உயர்த்தி கொணரலாம்.
1289. கால் அரை முக்கால் முழு என்னும் பிரணவம் சுழுமுனை மார்க்கமாய் பொருந்தி எழுவதாய் பரந்து விரிந்து காமம் முதலான ஆறு பகைகளும் கெடும்படி நிலைத்தபின் விருப்பைத் தரும் இம்மந்திரம் மாறிக் கொள்வார்க்கு ஆகும்.
1290. கூத்தனின் எழுத்தான பிரண்வ மந்திரம் முன்பு வெளிப்படாது நின்று உள் நாக்குப் பகுதியிலிருந்து அதன் பகைவர்களை மாற்றி வெளிப்பட்டுத் தலையை நோக்கிச் சென்று சகசிரதளம் விரியுமாறு ஒளியுடன் இருக்கும். அவ்விடத்தில் இருப்பது சிவன் என்பதை உணர்க.
#####
ஓம்நமசிவய!
அறிவின் வரம்பை அகன்றாய் குறிகுணங் கடந்த
குன்றே எட்டு வான் குணத்தெந்தாய் கட்டறு
களிற்று முகத்தோய் மலரில் மணமாய்
வளர்ந்தாய் அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!
#####
ஆதார வாதேயம்!
1155. நான்கு இதழ்களைய்டைய மூலாதாரத்திலிருந்து ஆறாம் ஆதாரமான ஆஞ்ஞைக்கும் இடையே தொண்ணூறு உணர்வு சத்தி நரம்புகள் உள்ளன். இடையில் உள்ள சுவதிட்டானம்-6 மணிபூரகம்-10 அநாகம்-12, விசுக்தி-16 ஆக நாற்பத்தி நான்கு இதழ்கள் உள்ளன. ஆணாகவும் பெண்னாகவும் திகழும் ஆஞ்ஞை சக்கரத்தில் அருளம்மை மற்ற ஆதாரங்களில் இருந்தும் தாங்கியும் உள்ளாள். சிவன் ஆஞ்ஞையில் இருக்கும்போது ஒன்று செயலைச் செய்வது மற்றது அச்செயலை அறிவது என செய்லபடுவதால் நான்கு வகை ஆதாரங்களின் தொகுதி88+ஆஞ்ஞாஇயில் இரண்டு=90.
1156. தன்கீழ் உள்ள ஆதாரங்களின் அறிவை அறிய சக்தி தன் திருமேனியில் ஆறு ஆதாரங்களையிம் கொண்டிருக்கின்றாள். தன் அறிவைச் செலுத்த மூலாதாரம் வரை நரம்புத் தொகுதிகளை விரித்திருந்தாள். அவள் கண்டத்திற்கு கீழ் உள்ள ஐந்து சக்கரங்கள் இயக்கத்தை கவனித்தபடி இருக்கின்றாள். மேல் நோக்கு உடையார்க்கு இவை செயல்படாமல் தடுத்து இருப்பாள்.
1157. அறிவானது கண்டத்திற்கு கீழேயுள்ளவற்றை அறிய்வேண்டும் என்ற விருப்பம் சிவத்திற்கு இல்லாதபோது சத்தியும் சிவனுடன் அறியும் சிற்சத்தியாய் சம்மாய் திகழ்வாள். இப்படி சம்மான நிலையில் உள்ளபோது ஒளி வடிவான அந்த அன்னையைத் தியானித்தாள் செயல்வழியான சத்தி நிலை கெட்டு துன்பம் விலகும். உடலைத் தாண்டி வெளியில் வந்து விளங்குவீர்.
1158. வெளி வானத்தில் நிகழும் சிவத்திடன் பொருந்தியவன் இரண்டு பிரபைகளீனால் சசிகரதளத்தில் ஏற்படும் இன்பம் பொருந்த மண்முடைய மலர்களை அணிந்த மங்கையர் உள்ளத்தில் இடம் பெறாதவன படடைப்புச் செயல் முடிந்தபின் இறைவனுடன் சமமான சத்தியை விரும்பியபோது அவளைப் போன்றே பெண் தன்மையை அடைவான்.
1159. ஒரு பெண் மற்றொறு பெண்ணை விரும்பி ஆசையினால் சேர்வது அறியாமை. பராசக்தியான பெண்ணுக்கு ஆண்மையும் உண்டு. பெண்ணும் ஆணுமாய் இருப்பவளே பிறவியின் இஅயலபை அறிந்து பெண்ணுடன் ஆணும் கூடியபோது பேச்சின்றி நிற்பர்.
1160. சொல்லைக் கடந்த குற்றமற்ற ஒளி வடிவான பொருள் மனோன்மணி மங்கையான சினம் இல்லாத ஒளியுடன் கூடி என் மனத்துள் தானே ப்குந்து மகிழ்ச்சியை தந்தது.
1161.மூலாதாரத்திலிருந்து சீவன்களுக்கு மகிழ்வைத்தரும் வாலை சிவத்திற்கு வேறாக இருந்து உலகத்தை விளக்கும். பார்வதி மனோன்மணி சத்தியானபோது எல்லா உயிர்களையும் காத்து உலகில் எங்கும் பரந்த பெண் வடிவமாய் ஐந்தொழில் தலைவியும் பிராணவ வடிவுமான சத்தியை மகிழ்வூட்ட்ச் சிவன் மகிழ்ந்து நின்றான்.
1162. சிவன் நெற்றிக்கண்ணுடன் மகிழ்ச்சியுடன் இருந்தான். ஆன்மாக்களாகிய நம்மிடம் எழுந்தருள விரும்பி இருந்ததால் உலகங்களில் விரும்பி இருந்தான். சத்தியின் தோளைத் தழுவி போகியாய் நின்றான்.
1163. பெருத்த கொங்கைகளையும் மென்மையான இடையையும் புள்ளிகள் பரவிய தேமலையும் உடையவள். தூய மொழி பேசுபவள் மயில் தோகை போன்ற அழகிய திருவடியை உடையவள் பாலை போன்ற பராசத்தீயை அடைந்தமையால் ஏற்பட்ட சிறப்பை சொல்லமுடியாது.
1164. தீ மண்டலமாய் இருக்கும் காமபீடத்தின் வல்லபத்தை எவராலும் அளவிடமுடியாது. அளந்து அறிய முடியாமலேயேமக்கள் திகைப்புடன் இருக்கின்றனர். வினை போகத்தை வெல்ல அரிதாகும்படி ஒப்பற்றவளாய் விளங்கும் ஆற்றல் வாய்ந்த சத்தியான் மனோன்மனியைப் செயல்படாது நிறுத்த இயலது.
1165. மனோன்மணியே பெரிய பூதங்களைத் தாங்கி வானமாய் நிற்பவள். அவளே சந்திரனாகவும் சூரியனாகவும் கடும் தீயாகவும் இருக்கின்றாள். அவளே அருள் பொழியும் சத்தி கயிலாயம் என்ற சிரசில் வடபாகமாவும் குளிர்ந்த கடல்நடுவே உள்ள வடவைத்தீயான காம்மாகவும் இருக்கின்றாள்.
1166. நெற்றியில் கண் உடைய சத்தியை கூடி மதி மண்டலத்திற்கு அளீத்த ஞானியர் பூ உலகத்தவர் ஆனாலும் தெய்வ குணம் பொருந்தியவர். தெய்வத் தன்மை பொர்நுதியவர் ஆவர்.பதைப்பு ஏதுமின்றி அவர்கள் வான்மண்டலத்தவரை சூக்குமப் படைப்பினால் கண்டு இருப்பர்.
1167. வாலை என்ற பெயருடன் குண்டலின் எல்லா திசைகளிலும் பரந்து நிற்பவள். உடல் உற்பத்திக்கு முன் எல்லா திசைகளிலும் இருக்கும் பராசக்தி ஆவாள். கிழேயிருந்து குண்டலினி மேலே சென்ற போது உயிரைப் பிரித்து சசிகரதளத்தை இடமாகக் கொண்டு எல்லாத் திசைகளிலும் உள்ளவர்கள் தொழும்படி செய்தாள்.
1168. கன்னி ஒளி போன்று விளங்கிய சந்திரன் பொருந்தியுள்ள இடம் செந்நிறம் வாயந்த சுவதிட்டானம். சந்திர பதினாறு கலைகள் நிரம்பிய போது இருக்கும் இடம் சிரசாகும் பராசக்தி போற்றியிருக்கும் இடம் இதுவே.
1169. சத்தி எல்லாவகையிலும் எல்லாவற்றையும் தாங்கி நிற்பவள். முதன்மை அளவாய் இருப்பவள் இரவில் இருக்கும் சத்தியாய் உருத்திர ஆகமத்தால் தெரிவிக்கப் படுபவள். குருவாய் வரும் அவள் வடிவங்கள் எல்லாம் உணர்ந்தேன்.
1170. ஏழு ஆதாரங்களிலும் யோகினி சக்திகளை உணர்ந்து உயிர்களுக்கு உணர்த்துபவர். மனத்தில் உள்ள ஈசன் இவர்களைக் கூடி பெண் போகம் உலக போகம் வித்தியா போகம் பொருந்திப் பரம் என்ற பெயரை உடையதாய் இருக்கும்.இந்த சக்திகளின் தொகுப்பே பராசக்தி.
1171. சத்தியும் சிவபெருமனும் வான்கலப்பில் சேருவதால் அதனால் விளையும் யோகமும் போல் இருந்தனர். இன்பம் பொருந்திய சுழுமுனையில் இருக்கின்/ற மங்கையே அக்கலவியும் யோகமும் ஆகும்.
1172. யோகத்தை விளக்கும் நல்ல சத்தி ஒளியை பீடமாகக் கொண்டு திகழ்வாள். யோகசக்தி பெற்ற முகம் தென்பகுதி என்ற வலக்கண் ஆகும். யோக நற்சத்தி சந்திரனாக இருப்பது வடக்கான இடக்கண் என்க.
1173. தேர்ந்து எழும் மேலான சிவாக்கினியைத் தூண்டி ஒளி பீடத்திற்குச் சென்றால் ஒழுகும் இயல்புடைய மாயை முடிவு பெறும். அறியப்படும் விந்து நாதங்கள் பெருகச் சுழுமுனை நாடியில் வளைந்து செல்லும் குண்டலினியும் முளைத்து எழுவாள்.
1174. ஆறு ஆதாரங்களிலும் பராசக்தியே அகரக்கலை பதினாறையும் பொருத்தி இருப்பவள். ஆறு ஆதாரங்களும் அவளாய் இருந்தாலும் ஒன்பதாம் கலை வரையில் அதிக விரிவு பெற்று விளங்காத நிலை. கலை வடிவாய் அமைத்து விரிந்த உலகத்திலும் பரத்திலும் கலந்திருக்கும் நிலையே பரவாதனை எனச் சொல்லப்படும்.
1175. திருவருளின் கலையைப் பயில்வதர்கு பராசக்தியே இருபத்தேழு விண்மீன்களாய் விளங்குவதை அறிந்து அதற்கேற்றவாறு சிரசில் அசைவு வடிவாய் இருக்கும். சிறிது சிறிதாக அசைவானது மிகுந்து எட்டு வகைச் சக்திகளும் பராசக்தியிடம் வெளிப்படும். அவளே பழமையான முதல் நிலையை உடையவள்.
1176. தீக்கண்டம், சூரியன் கண்டம், சந்திரன் கண்டம் அகியவை முடிந்து இருப்பதில் பராசக்தி விளங்குவாள். தத்துவமாயு,ம் தத்துவங்கள் இல்லாதவளாயும் சிறந்து நிற்பவள். பராபரனை தன்னிடம் உடைய பராபரை. சக்தி பேரானந்தத்தை அளிப்பவள் சிற்றின்பத்தையும் அளிப்பவள்.
1177. தேன் போன்று விருப்பத்தை தரும் வீணாத்தண்டின் அடியில் புற்றாஞ் சோற்றைப் போல் சக்திகளை கொண்டவள். குங்கும நிறத்தை உடையவள். அங்குசமாகவும் பாசமாகவும் உள்ள நிலமானது அவள் விரும்பித் தங்கும் இடம்.
1178 .உயிர்களின் மூச்சினையும் மனத்தையும் கடந்து இருக்கும் மனோன்மணி பேய்களையும் பூதங்களையும் தமக்குப் படையாக ஏவலாக உடையவள். அறிவைக் கடந்த சிவனுக்கு அவள் தாய், மகள், மனைவி.
1179. சிவனின் மனைவி ம்னோன்மணி. சக்தி தத்துவமாய் நின்று நாத விந்துக்களை தோற்றுவிக்கச் செய்வாள் சிவத்துடன் கூடிய நிலையில் அனைத்திற்கும் காரணியாகவும் படைப்பை எண்ணிப் பிரிந்த போது சிவத்தின் காரியமாகவும் ஆவாள். இத்தகைய புண்ர்ப்பை உடையவள் விந்து சத்தி பெருந்தியுள்ள பழமைக்கெல்லாம் பழமையானவள். அண்டங்களின் அளவாகப் பிரிந்திருக்கும் பத்து திசைகளுக்கும் அதிபதி.
1180. சத்தி பத்து முகங்களை உடையவள் ஆறு இதழ்கள் பொருந்திய சுவதிட்டானாத்தை அங்கமாகவும் நாலு இதழ்களை உடைய மூலாதாரத்தை வேதமாக அமைத்தவள். சகசிரத் தளத்தில் சிவத்துடன் பொருந்தும் போது சமமாய் நிற்பாள். நிலையான பொருள ஆவாள்.
1181. குண்டலியான ச்க்தி சக்தி கூட்டங்களுடன் புருவத்திடை இருப்பாள். மேலான அவள் சூரியன் சந்திரன் கொங்கைகளை உடையவள். நான்முகனை ஆள்பவள். நான்முகனுக்கு அன்னியனாய் இருப்பாள்.
1182. சிவனுடன் பிரிதல் இல்லாமல் இருக்கும் பெரு மங்கை. தியானத்தில் புருவ நடுவுக்கு மேல் பொருந்தி விளங்கும் அழகிய கொம்பு போன்றவள். அறிவுக்கு அறிவாய் பொருந்தி அரிய உயிர்க்கு அறிவாய் கலந்து நின்றாள்.
1183. கொடைக்குணம் உல்ல பராசக்தி மனத்தில் இருந்து ஐம்பொறிகள் செய்யும் கள்ளத்தனத்தை ஒழித்து உயிருடனே ஒன்றி நவநெறி மேற்கொள்ளக் கூடிய இன்பத்தில் என்னை மயக்கி விரும்பச் செய்தாள்.
1184. விரும்பி உயிர்களுக்கு அருளைச் செய்யும் போக சக்தி மனதில் இன்பம் அளிக்கின்றாள் என்பதை யாரும் அறியார். அந்த புதல்வி சக்தி மலரும் மணமும் போல் சிவத்துடன் பொருந்தி இனிமையாய் இருப்பாள்.
1185. சக்தி என் உள்ளத்தை விரும்பி இருந்தாள். திருத்தமான புணர்ச்சியில் நெளிந்து அறிந்து தியானித்து இடையீடு இல்லாத வியப்பில்லாத நிலையில் பொருந்தி இருக்கத் தடையானவற்றை எல்லாம் விலக்கி இருந்தாள். அதுவே சுத்த கலப்பு எனப்படும்.
1186. அது இது தேவை என ஆசையை விட்டு அவளைப் புகழ்ச்சி செய்து பிரமரந்திரத்தில் தியானைத்தால் விதிக்கப்பட்ட வினைகளையும் வெற்றி கொள்ளலாம். சந்திர மண்டலத்து வழ்பவளான அவள் சொன்ன மண்டலங்கள் மூன்று.
1187. மோகினியான்வள் சேரும் மண்ட்லங்கள் அக்கினி, சூரியன், சந்திரன். பன்னிரு கலைகளை உடைய சூரிய மண்டலத்தின் உச்சியில் இருக்கும் நோக்கில் பொருந்துதல் சுத்த மாயையாகும். நன்மை அளிக்கும் பராசக்தி சந்திர மண்டலத்தில் இருப்பாள்.
1188. சந்திர மண்டலத்தில் தோன்றும் நாதம் மலை போன்று ஓங்கும். பின்நாக்கு ஆகிய சிறு மூளை பகுதியில் படரும். கண்டத்தினின்று மேல் எழும். சோதியாக அநாகத்தில் உள்ள இதயத் துடிப்பு ஒலி சந்திர கலைமேல் போய் இறுதியை சேறும்.
1189. சந்திர கலை பதினாறின் முடிவே படைபிற்கு முதலாவது. ஆயிரக்கணக்கான் மாற்றங்கள் இல்லாது மனம் சம்நிலையைப் பெற்று எழிழ் மிகுந்து இருக்கும் நறுமணமுடைய இடமாகத் திகழும். அதை தனக்கு ஒரு பேறாக் கருதி சக்தி விளங்குவாள்.
1190. சக்தி மங்கை சந்திர கலையில் இறுதியாக இருப்பாள். நுட்ப வாக்குகளாலான அயல் உடலில் வீற்றிருக்கின்றனள். மேலான ஆனந்தத்தைப் பெறுவதற்கான நன்னெறியை அடைந்து உலகங்களில் உள்ளவர் அவளது புகழைச் சொல்லி வழிபட்டு இருக்க அவள் நன்மையை அளிக்கும் சத்தியாய் இருக்கின்றாள்.
1191. சிவனும் சத்தியும் பொருந்தி நின்று யானையின் துதிக்கை போன்ற பிரணவத்தின் உச்சியிலிருந்து படைக்க சீவர்களுக்கு உடம்பிற்கும் உயிருக்கும் வேண்டியதை மதிப்பிடுவர். சந்திர சூரிய கொங்கைகளையுடைய பார்வதி ஐந்து மக்களுடன் தம் சக்தியும் சேர்த்து உலகத்திற்குரிய படைத்தல் தொழிலைச் செய்தனள்.
1192. வெளிச் செயல்கள் செய்து தவம் செய்யும் உயிர்கள் உள்ளத்தில் உள்ள சிவசக்தியைத் தியானம் செய்தால் மூலாதாரத்திலிருந்து மூண்டு எழும் மூலாக்கினி ஆறு ஆதாரங்கள் வழி பிரமப் புழையில் உயர்ந்து அன்புடன் சக்தியிடம் அடங்கும்.
1193. சந்திரக்கலை ஆறு ஆதாரங்களிலும் பொருந்தி தன் சக்தியை வெளிப்படுத்தும். அவற்றுள் அது பொருந்திக் களிப்பூட்டும். அதனது இயலபை மற்ற ஒளி பெற்று மூலாதாரத்தினின்?று மேலே தோன்ற பிரணவம் உதவும். முத்துப்போன்ற நிறத்தை உடையது வீரியமாம்.
1194. முத்துப்போன்ற சுக்கில நாடியில் முகத்தைக் கொண்டு தீ, சூரியன், சந்திரன் என மூன்று கண்களுடன் பத்து முகத்தினையும் உடையவள் ஆற்றலும் திறமையும் வாய்ந்தவள். பத்து நாடிகளில் செயல் செய்பவள். சிவத்தின் தேவி பைரவி. இத்தன்மையுடன் என் மனத்தில் உள்ளாள்.
1195. மூன்று மண்டலங்களுள் தீ மண்டலத்தில் திருவடி பொருந்தி நிற்பவள். சந்திர மணடலத்தை முகமாகவும் சூரிய மண்டலத்தை உடலாகவும் கொண்டு மூன்று மண்ட்லத் தலவியானாள். உயிர்கள் விலகினும் மனத்தை விட்டு விலகாத ஒளியாய் பொருந்துவர்.
1196. உள்ளொளியான குண்டலினி ஆறு ஆதாரங்களில் வெண்மை ஒளியாகச் சிவத்துடன் கூடி எல்லா ஆதார தெய்வங்களுடன் சத்தி கலந்து மேலே போவாள். அநாதகச் சக்கரம் அடங்க விசுத்திச் சக்கரத்திற்குமேல் அமுத மண்டலம் தொடங்கும் நிலையாகும்.
1197. விசுத்திக்கு மேல் நெற்றியின் நடு முதல் பிரமரந்திரம் முடிய இருக்கும் சகசிரதளத்தின் இருக்கும் சதாசிவமென்ற பரமகுரு வெளிப்படுத்துவது ஆனந்த கள் ஆகும். அந்த ஆனந்தமே இறைவனது திருவடிக?ள். அவன் வடிவம் ஆனந்தம். மூலாதாரம் முதல் ஆறு ஆதாரங்களையும் அங்கமாக உடைய சத்தி ஆனந்தத்தை அளிப்பாள்.
1198. குண்டலினி நான்முகன் முதலிய தேவர்கள் அஞ்ஞானக் காடான ஆறு ஆதாராங்களையும் சந்திரக் கலை பதினாறும் சதாசிவ பத்தினியும் மந்திர இறைவனான ஈசானவரும் சேர்ந்து பற்றிட பராசத்தி எழுந்தருளினாள்.
1199. பயிற்சியாளருக்கு வாலை வடிவில் சத்தி இருப்பாள். அந்த இயல்பை அறிந்து மேல் எழச் செய்தால் அவள் வீடு பேற்றைத் தருவாள். உண்மை அறியாமல் வீண் பக்தியை செலுத்தியவர்கள் ஆரவாரம் செய்யும் நாய் போன்று கதறுவார்கள்.
1200. திருவான பராசக்தியின் திருவடியைக் காண்பவர் யார். ஒளியில் பார்த்து தியானம் செய்பவர்க்கு கரிய நிறமுள்ள சுழுமுனையின் அடிப்பகுதியில் சிவந்த தாமரைபோன்ற பெருமை வாய்ந்த திருவடியை அருளும்படி செய்வாள்.
1201. சிந்தனையில் சத்தி பற்றிய கருத்தை நீங்காமல் வைத்திருந்து சிரத்தில் ஆதியான புருவ நடுவில் ஆரம்பித்து ஒளிமுகமாக முன்னே சென்று ஆருமஞ்சனம் கூர்மாசனம் ஆகியவற்றால் குண்டலினியின் முகத்தை மாற்றி மேல் எழும்படி செய்து உலக நடப்புகளை நினைக்காமல் அவளை நினைத்து ஐம்பொ/றிகள் கூடும் இடமான நாத ஒலியில் பொருந்தி சமாதியில் இருங்கள்.
1202. சமாதியை மேற்கொண்டால் சத்தி தானே முதலாய் இருந்து சிவனை முதலாக் கொண்டு இருக்கும் மந்திரத்தால் அனுபவிக்கப்படும் அவளை நன்மை தரும் பேதமாய் உள்ள நிலையை எண்ணிச் சிந்திக்கும்போது சந்திர கலையின் உச்சியே அவளுக்கு உறைவிடம்..
1203. சக்தி இருக்கும் மூலாதாரம் முதலான இடங்களை முறையாய் அடைந்து இன்பத்தை அளிக்கும் மங்கையை நாள்தோறும் விரும்பியபடி இருந்தால் மூலாதாரத்துள் உடன் உள்ள சுவாதிட்டானம் மணிபூரகம் அநாதகம், விசுக்தி என்ற நான்கு சக்கரங்களும் சிறு நேரத்திற்குள் இறையை அடைவர்.
1204. மேலான பயனை அடைய இளைய தளிர் பொன்ற மேனியையும் கூட்டத்தையும் உடைய குண்டலினியையும் குவளை போன்ற கண்ணை உடைய பராசத்தியையும் இன்பமான முறையில் வஞ்சமில்லாது வழிபடும் மு?றையாகும்
1205. இன்பம் உண்டாகும் நேரத்தில் மனதால் வழிபடு. மூலாதாரத்தில் இருக்குமவளை சுவாதிட்டானம் வழி போகாமல் பிரம்ரந்திரம் நோக்கிய உள்ளத்துடன் சக்தியை உணர்வாய். நிலத்தில் நீண்டநாள் வாழச் செய்வாள். தன்வயத்தனாதல் ஆகிய எட்டு குணங்களும் கிட்டும்.
1206. ஆமை தன் ஐந்து உறுப்புகளை அடக்கிக் கொள்வதைப்போல் ஐம்பொறிகளை அடக்கி செருக்கு இல்லாதவன் என பிரண்வ மந்திரத்தில் உள்ள சுரமான ம காரத்தை தொண்டைக்குமேல் நினைத்தால் மூலாதாரத்தில் சோதி விளங்கும். சக்தியைக் கண்டபின் சந்திர மண்டலத்தில் நிக்ழ்வதைக் காணலாம்.
1207. மூலாதரம் முதல் பிரமரந்திரம் வரை செல்லும் சித்திரணி என்ற நாடியில் தோட்டியையும் பாசத்தையும் கையில் கொண்டிருப்பாள். அதில் பெரிய சங்கமும் அமுத கலசமும் பொருந்தும். இரு பதங்களான சிவ என நீண்டு உச்சரிக்கப்படும் மந்திரத்தை விரும்பும் பொன் அம்பலத்துள் ஆடுவாள்.
1208. நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகியோர் சத்தியின் திருவடியைச் சூடி தன் பதவியினைப் பெற்றனர். காமனும் அவனுடைய தம்பியான சாமனும் சூரியனும் சந்திரனும் அக்கினியுடன் திருவடியில் பொருந்தும்படி மூலாதாரம் முதல் ஒரே பேரொளியாய் இருப்பாள்.
1209. சத்தி சுவதிட்டானத்தில் இன்பத்தைப் பெருக்கும் பிறைச்சந்திரனை சிரசில் சூடியவள். சுழுமுனை நாடியும் அதன் மீது இருக்கும் சந்திரன் சூரியன் அக்கினி என்ற சூலத்தை தன் வடிவாய் கொண்டவள். சிரசில் இருக்கும் சந்திர மண்டலத்தை உடையவள். மூலாதாரம் முதல் பிரரந்திரம் வரை கொடிபோல் சிதிரணி நாடியில் செல்பவள். மலம் அற்றவள். இத்தகைய இயல்புடன் நடுநாடி வழி ஞானம் கொண்டு நடனம் ஆடுவதால் அண்டத்தின் தலைவி என அழைக்கப்படுவாள்.
1210. வான் கூறான அண்டம் முஹ்டல் பூமிவரை பொன் காதணியை உடைய பராசத்தியைவிட நிலையான இடம் பெற்றவர் யாரும் இல்லை. சிவனும் சத்தியும் ஆகிய காரணம் ஆணும் பெண்னுமாகப் படைப்பதன் பொருட்டே ஆகும்.
1211 .நஞ்சுண்டனுக்கு பராசக்தி அமுதம் ஆவாள். தவத்தால் பொருந்தி உண்டாகும் இன்பமாகத் தானே வருவாள். அந்த சத்தி ஆதாரங்கள் தோறும் எல்லாம் அடையும் குவிந்த வ்ழியான சுழுமுனையுடன் பொருந்த செறிவுடன் உச்சியில் திகழ்வாள்.
1212. சிறப்பான அருந்தவம் மென்மேலும் சிறக்கும் என்பதை உயிர்வளியின் இயக்கத்தால் அழிகின்ற மக்கள் அறிவதில்லை.. விரைவில் கெடுவர். அன்னமயமான உடலில் உள்ள நான்கு இதழ் தாமரையின்று வழிபட்டு உச்சி நடுவில் சிறப்பான பிரணவமாய் அம்மை விளங்குவாள்.
1213. அன்னமய கோசத்திற்கு உண்ணும் உணவைச் சத்தி வழங்குபவளாய் இருப்பாள். யோனியான குண்டத்தில் தன்னை சிவார்ப்பணம் செய்பவர்க்கு பேரொளியாய் விளங்குவாள். சிவத்திற்கு வடிவம் என்று இருப்பவர்க்கு வேரிடம் –மூலாதாரத்திடமே பொருந்தி இருப்பாள்.
1214. சந்திரனைப்போன்ற வெண்பளிங்கில் முத்துபோன்று சிலைமயமாய் இருப்பாள் சத்தி. சுருண்ட குழல்போன்ற சுழுமுனையில் இருந்து ஒளிரும் தன்மையுடையவள். மூலாதாரச் சத்தியால் மாற்றப்பட்டபோது நிவிருத்தி எனப்படும் நீக்கல், நிலை பெறுதல், நுகரச் செய்தல், அமைதியாக்கல் அப்பாலாக்கல் முதலிய ஐந்து கலைகளாக இருப்பாள்.
1215. மூலாதாரத்து உருத்திரனுடன் பொருந்தி நின்றாள். உள்ளத்தின் கற்பனைகளுக்கு அவளே காரணம். பாச அறிவுகளில அவளே இருப்பாள். பாச அறிவு அழியும் உடம்புடன் தொடர்புடையவை ஆதலால் குண்டலினியுடன் கால தத்துவத்துடன் கலந்துவிடுவாள்
1216. சத்தி உயிர்களுக்கு கால தத்துவமாய் இருப்பவள். எண்ணங்களை நிறைவு செய்யும் அனுகூலம் உடையவள். பிரிவு அற்ற கலப்பைச் செய்தவள். மூலாதாரச் சத்தியான குண்டலினி சண்டிகை மந்திரத்தில் இருப்பவள். காப்பவளாய் சிவத்திற்கு ஒரு பாகமாக்வும் இருப்பவள்..
1217. பசும் பொன் மயமான கதிர்களை முடியாய் உடையவள். உடம்பு ஒன்று பத்து தின்மையான தோள்கள் ஐந்து முகங்கள். ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள். அஞ்ஞான மயமான இருட்டைப் பிளந்து செல்லும் பிரணவத்தில் இருக்கும் சிவனுக்கு பாகமாய் இருப்பவள்.
1218. ஆன்மாவுடன் முப்பத்தாறு தத்துவங்களும் பொருந்தி செயல்படும் கொத்துக்கள் ஐந்து ஐந்தாக இருக்கின்றன். அவற்றுள் வேதனும் பதினென் கணத்தவரும் பொருந்த முதலாகவும் முடிவாகவும் தேவி இருப்பாள்.
1219. படைக்கும்போது ஆதாரச் சக்கரங்களில் உள்ள ஐம்பத்தோர் எழுத்துக்களும் அவளுடையை சத்தியை பொருந்தியுள்ளன. அவைகளுக்கு பராசக்தி உயிராய் இருப்பாள். அவளுடன் சிவன் பொருந்த எல்லாவற்றிலும் கலந்து நின்றாள்
1220. சக்தியுடன் சிவத்திற்கு இடமான சக்கரம் தலையின் மேல் உள்ள எட்டு இதழ் தாமரை. உள்ளம் பற்றி நிற்கும் குறிப்பிற்கு ஏற்ப அந்த ஆதாரங்களீல் போய் பொருந்தி சத்தி அருள் கொண்டு இருப்பாள்.
1221. அம்மை என்னுள்ளே சுழுமுனையில் மேல் நோக்கியபடி இருந்தாள். ஏழு ஆதாரச் சக்கரங்களிலும் உயிர்வழி உந்தப் பெற்று சகசிர தளாம் இருக்கும். உயிர்வழி ஒன்பது வாயுக்களுடன் மேல் சென்று உயர்வு என அறிவித்து தானும் அதில் நிற்பாள்.
1222. உயிர்வளி மேல் நோக்கிய முகமாக உணர்வாக எழும்போது மந்திரமான பிரணவத்துள் சேர்த்து எழுகின்றது. மேலான வீடுபேறு நெறியாகும். சத்தி சிவத்தை நோக்க் அகண்டத்தில் செல்ல விரும்பிச் சீவனுடன் கலந்து எழும். இது சிவத்தின்பால் விரும்பிப்போகும் காதலி நிலையாகும்.
1223. மேல் நோக்கிய சகசிரதளம் அக்கினியாயும் ஆதிசத்தியாயும் உள்ளது. மகேசுவரன் இருக்கும் மண்டலமாகவும் வாயு முதலான மேலுள்ள வானம் சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவையும் அங்கு இருக்கும். கவசமாய் உயிர்க்குள்ள சிகை மந்திரம் உடம்பறிவு கடந்து செயலாற்ற பராச்த்த் அரசன் வாழும் வீணாத்தண்டில் இருப்பாள்.
1224. மனோன்மணி நடுநாடியில் இருந்து ஐம்பத்தோர் எழுத்துகளுள் அடங்குவாள். பேரறிவு பேராற்றலுடன் பெரும் பொருளாய் இருப்பாள். படைத்தல், காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்தொழிலையும் செய்பவள்.
1225. தானே நிகழ்வதான மோகினியும் அதை சேர்ந்த யோகினியும் இவற்றைக் கடந்து சென்று சத்தி மயமுடையவராய் திருவடியைப் போற்றுவர். உயிரில் இருக்கும் சிவன் மேலான பரமசிவம்.
1226. சிரசில் இருக்கும் சகசிரதளத்தில் மோகினிபான பராசத்தி பொனொளியில் இருக்கும் சிவத்துடன் மேன் நிலையில் இருந்து கூறுவது அ கார உ கார ம கார நாதங்களாகிய உயிர் சேரும் பிரணவ வழிபாடாகும்.
1227. உலகத்தார் உய்யும் பொருட்டு சமய் நெறிகளை வகுத்தவள் மனோன்மணி. தன் பதியுடன் பிரிவு இல்லாது வீற்றிருக்கின்றாள் எல்லோரும் அறிவதற்கு அரியவள். வாக்கும் மனமும் ஒன்றானபோது அந்த நுட்பமான அறிவில் இருக்கும் பெருமை பெற்றவள்.
1228. கூர்மையான புலன்களைக் கொண்டு அறியும் அறிவானது சிவம் அக்கருவிகளுடன் பொருந்தியிருப்பதால் உண்டானது.. இது பின்னறிவாகும். அக்கருவிகள் இல்லாது பதியுடன் ஒன்றி அறியும் அறிவைப் பெறுவது செந்நெறி. சிவத்துடன் கூடி அடையப்படுவதே ஆன்மா அடைய வேண்டிய வழியாகும். இது சன்மார்க்க நெறி.
1229. சன்மார்க்கமாகப் பொருந்திய நெறி தூய்மை அற்ற நெறிகள் யாவற்றையும் விலக்கிடும்.. நல்ல நெறியால் நல்லொழுக்கம் வரும். அந்த நல்ல நெறியைக் காட்டிய தேவியும் பராசத்தியாவாள்
1230. சத்தியும் ஆன்மாவும் இவற்றை உடைய சிவமும் இல்லாமல் வீடு பேற்றின் முடிவை அறிபவர் எவரும் இல்லை. பிரணவத்திற்கு மேல் அர்த்த மாத்திரை சுரமான ம கரத்தை இட்டுப் பிரண்வம் பக்குவமானால் சிவ சக்தியின் நடுவில் இருக்க வழி உண்டாகும்.
1231. நெறி ஒன்றில் நில்லாது அது சிறந்தது இது சிறந்தது என்று வாழ்நாளை வீணாகக் கழிக்காமல் இன்பம் மிகும் சித்ரணி நாடியில் இருக்கும் குண்டலினியை அவளுடைய கண்வனுடன் பொருந்தி சந்திர மண்டல அமுதத்தைப் பருகி வழிபட தகுதி உடையவர் ஊழ் வழி செல்லாமல் அருள் வழியில் ஊழினை வெல்லும் ஆற்றலை அடைவர்.
1232. வெற்றியுடன் இருக்கும் பராசத்தியை உண்மையாய் உணர வல்லவர்க்கு ஊழை வெல்ல முடியும். வினைக் கூட்டங்களை எல்லாம் வெல்லலாம். சுவை ஒளி, ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தையும் வெல்லலாம்.
1233. ஐம்பத்தோர் எழுத்துக்களுடன் கலப்புற்று இருக்கும் மரபின் வழி வந்த பரம் பொருளாகும். விருப்பத்தைத் தரும் அ காரப் பொருளான சிவமும் முதலாய் சேரும் இடம் இதுவே. இத்வே உண்மையாகும்.
1234. சத்தியுடன் சிவன் சேர்ந்து மூலப்பொருள் இல்லாமலே சங்கல்பத்தால் எல்லாம் தோன்றின. இந்த இயல்பு கொண்டஅ ஐம்பத்தோர் எழுத்துக்களாகிய சத்திகளும் சீவர்களின் அறிவில் பொருந்தி அவர்களது கருத்துக்கு ஏற்பப் பிரபஞ்சம் அமையும்.
1235. ஆஞ்ஞையின்மேல் இருக்கும் சத்தியும் சிவனும் தேவர்கள் வந்து வழிபட அருந்திட அரிய அமுதமாகப் பிறைச்சந்திரன் போன்று அவள் இருந்தாள்.
1236. மூலாதாரத்திலிருந்து எழுகின்ற எழுச்சியை உடையவர் குழலில் இருக்கும் சத்தியின் தன்மையை அடைவர். இடை நாடியில் இருக்கும் சந்திர மண்டல்த்தில் பொருந்திய தவம் உடையவர் ஆன்ம ஒலியாகவும் இருப்பாள்..
1237. பராசத்தியுடன் பொருந்திய சந்திரமண்டல ஒலியால் உணர்ந்து அதில் பொருந்திய உயிர்களின் சிந்தையில் அவரவர்க்கு வேண்டிய உள்ளத்தில் மறைந்திருந்த ஞானங்கள் தோன்றும்.
1238. விரும்பும் உருவை அடைவதற்கு தூய வழி பராசத்தி அடைவதற்கேற்ற பல கலை ஞானங்களை அளிப்பாள். மான் விழி போன்ற கண்களையுடைய பராச்த்தி காமனைப் போன்ற சிவனும் எதிரில் தோன்றி ஆன்மாவிடம் போதமின்றி நிற்பதை உணர்த்த சான்றாக வெளிப்படுவர்.
1239. ஆராயப்படும் அறிவின் எல்லையையும் கடந்து பரவாக்கு வடிவான பிரண்வ வடிவான சத்தியாகவும் மயக்கத்தை உடையதாகி மிக்க ஆனந்தம் உடையவள் சிவந்த ஒளியில் இருப்பவள். சிவத்தால் விரும்பப்படும் அழகி . அறியப்படும் பொருளாகவும் அறிகின்ற வழியாகவும் அவள் இருப்பாள்.
1240. நெறியாய் நின்ற பராசத்தியை ஒரு கணமும் பிரியாது பரவாக்கு வடிவன சிவத்துடன் அவளது கு/றியைக் கொண்டு வழிபடுபவர் அறிவு குன்றாது பொருந்தியிருப்பர்.
1241. நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், ஆகியோர் மயக்கத்தை உண்டாக்கும் நிலையில் உள்ளனர். பிரணவ வடிவான சிவத்தில் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன், சூரியன், சந்திரன், அக்கினி, விண்மீண் ஆகிய ஒன்பதும் ஒடுங்கிடத் தேனை அருந்திக் களித்த் வண்டைப்போல் சிவசக்தி உருவமாய் திகழும் நிலையை அடையலாம்.
1242. சகசிர தளத்தில் இருக்கும் பராச்த்தியுடன் கூடிய சிவத்தை வணங்கும் நெறியை உலகத்தவரே அறிந்து கொள்ளுங்கள். இந்திரன் முதலாக உள்ள எண் திக்குக் காவலர்களும் மற்றத் தேவரும் அசுரரும் வந்து உங்கள் அடிகளை வணங்குவர்.
1243. இடைவிடாமல் கூறப்படும் மந்திரமும் நறுமணப் பூவும், தூபமும் கவர்ச்சியைத் தரும் நறுமணப் பொருளும் இருளைப் போக்கும் தீபமும் கொண்டு சத்தியை வழிபடும் பூசை வேள்வியில் இடும் அவியை ஏற்கும் இறைவனுக்குரிய அருச்சனையாக அமையும்.
1244. சத்தியை ஒரு பக்கத்தில் கொண்டு உலகத்தை தாங்கிய சிவன் அவளாள் உண்டான ஆக்கத்தால் உலகத்தில் நிலை பெற்று நிகர் இல்லாதவனாகவும் அழிவு அற்றவனாகவும் இருக்கின்றான். அழகிய கிளியை ஏந்திய சுருண்ட கூந்தலையுடைய பார்வதி பரமனை ஒரு பக்கம் கொண்ட பராசத்தி ஆனதால் அவளை வழிபடுக.
1245. கரிய கொடி போன்ற மாதான உமையும் அன்பர்க்கு உதவும் தலைவியாய் ந்ல்ல கொடி போன்ற மாதும் மூச்சுடர்களை மூன்று கண்களாய் கொண்டு ஆஞ்ஞை சக்கரத்தில் இருப்பவளும் ஆன சத்தியை வழிபடுக. பொற்கொடி போன்ற பெண்கள் உன்னை போற்றித் துதிப்பர்
1246. பராசத்தியின் விரிந்த சுடர் மாலை போன்ற ஆதாரச் சக்கரங்களின் அசைவு கீழ் நோக்கிச் செல்லாது இருக்க பத்தினியுடன் கூடி மூலாதாரத்தில் ஏற்படும் நாதத்தை கண்டத்தின் வழியாக உண்ணாக்கிற்கு செல்லுமாறு கீழ் நோக்கும் அசைவை மேல் முகமாக ஆக்குக.
1247. ஒளிமயமான இறைவன் எனக்குள் அடங்கியிருப்பது என் அன்பின் பெருமையாகும். நஞ்சாகிய காமக்கழிவுகளைச் செய்யாமல் மேலே கொண்டு தலையில் மேல் உள்ள ஒளிமண்டலத்தில் அடக்கிச் சத்தியுடன்ரிவு இன்றி ஒன்றாக அமையும்.
1248. ஆண்டவன் எல்லா உயிர்களையும் வடிவாக கொண்டு இருக்கின்றான். இதை ஆராய்ந்தால் ஒலிக்கின்ற வளையலை அணிந்த பொன் ஒளியில் திகழும் மங்கையை இறைவன் மகிழ்வுடன் பொருந்தி உலகைப் படைத்தான் என்பது கற்பனையாகும்.
1249. மாயையுடன் சேர்த்து வைக்கும் சடையுடைய சிவன் தன் பொற்பாதத்துடன் தொடர்பு ஏற்படுத்தும் ஒளி மண்டலத்தில் இருக்கும் சிவனை தன் களவியால் நுண்மை மண்டலத்தில் திருமேனியைச் செய்வான். உடம்பான கலவியுள் பொருந்தி மகா சத்தி கூட்டத்துடன் சேர்ந்து அந்தந்த உடலாக இருப்பான்.
1250. சிவன் வேறு நான் வேறு அன்று என்பதை நான் அறிந்தேன். உலக்த்தின் தலைவன் ஈசனை என் தனித்தன்மையை விட்டு ஒன்றியபோது பரந்த நிலையை அடைந்தேன். சிவனை உணர்ந்தபோது கீழ் உலகங்களின் தொடர்பை நீக்கினேன். ஆதி சத்தியின் அடியைப் பற்றி அதன் பிரிவான விருப்பு ஞானக் கிரியைகளை விட்டு நீங்கி அருளை அடைந்தேன்.
1251. மனோன்மணி ஒன்பது சத்திகளுள் மேலானவள். அவளைத் துணையாய் கொண்டவர் இறைவனின் அடிகளையே அழிவற்ற நல்ல பயன் உடையது என்பர். கற்ற கல்வியின் பயனை அறிவார்க்கு அவள் திருவடியான பொன்னொளி திகழும் மண்டலத்தை அடைவது பெறும் பேறாகும்.
1252. ஒப்பில்லா தலைவனுடன் என் உள்ளத்தை விரும்பி உறையும் சத்தியின் இனிய இருப்பிடம் ஏழு உலகங்கள் என சொல்லுவர். பணி மண்டலத்தைப்போல் திகழும் சகசிர தளத்தின் உச்சியில் கனிவுடன் என்னை நினைப்பது என்ன காரணமோ அவளே கூறுவாள்.
1253. ஏழாம் உலகு என்ற சகசிரதள நாயகியான மனோன்மணி நல்ல வீட்டுலகைச் செய்து ஞானச் செல்வியாய் இருப்பவள். எடுத்த உடலைப் பக்குவப்படுத்திய குண்டலினியும் அந்த வீட்டில் ஒன்றாய் இருந்தாள்.
1254. உடம்பின் தோற்றத்திற்குக் காரண்மான தாயும் தந்தையும் காதலால் ஒருவருக்கு ஒருவர் உறவு கொண்டதே தவிர அன்னை அவர்கள் அறியமாட்டார்கள்.. சிவனும் சத்தியும் ஆன்மாவும் ஒன்றுபட இருந்ததில் என்னை எப்போதும் பிரியத அம்மையும் அத்தனையும் வணங்கி உய்வு அடையுங்கள்.
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.