குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
ஓம்நமசிவய!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
#####
ஓளி!
2681. ஆன்ம ஒளியை அறிந்து நின்றால் உருவமான உடல் நினைவு மறைந்து போகும். மறைந்து போகும் உடல் நினைவு இருக்குமானால் மீண்டும் பிறப்பு வரும். ஆனம ஒளியில் உள்ளம் உணரின் ஒளிமயமாகத் தோன்றும். ஒளியில் தோய்ந்து நிற்க அந்த ஒளி உருகிச் சீவன் விளங்குவான்.
2682. ஆன்மப் பேரொளியை அறிந்து அதில் நிலைபெறும் ஆற்றல் உள்ளவர்க்கு உலகத்தில் உள்ள எட்டுத்திசைகளிலும் தங்கு தடை இல்லாமல் போகும் ஆற்றால் கைவரப்பெறும். அன்னாரின் உள்ளத்தில் அகண்ட ஒளி பரவும். அந்த ஒளி வெளி இருளையும் மாற்ற வல்லது. அது சகசிரதளத் தாமரையில் விளங்கிக் கதிரவன் போன்ற ஒளியைச் செய்யும். மாறான மல இருளைப் போக்கி ஒளியைத் தந்து எம் பெருமான் அவ்விடத்தே பொருந்தி நின்றான்.
2683. பேரொளி மயமான சிவன் ஆனமாவில் விளாங்க ஒளிமயமான அக்கினியும் விரிந்த கதிர்களையுடைய சூரியனும் சந்திரனும் வளம் உடைய ஒளிகளாய் ஆன்மாவில் ஒளிர்ந்தன. வளமை உடைய ஒளிமயமான ஆன்மா அடைந்தது என்ன என்றால் பேரொளியான சிவன் ஆன்மாவை இடமாய்க் கொண்டு கலந்து விளங்கியதே காரணம்.
2684. விளங்கும் ஒளியையே திருமேனியாகக் உடைய சிவன் ஒரு போதும் பிறவி எடுக்காதவன். விளங்கும் ஒளியையுடைய சூரியனும் சந்திரனும் அவனுடைய க்ண்கள். வளம் மிக்க ஞான ஒளியை வீசுவதான அக்கினியும் அவனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண் ஆகும். இப்படி விளக்கமான ஒளியைத் தரும் மூன்றும் ஞானியர் உடலில் அமையும்.
2685. தலையின்மேல் உள்ள வானம் ஒளிமயமானது. அதன் கீழ் உள்ள காற்று ஒளிமயமானது. பால் உணர்ச்சியை தரும் மூலாக்கினி கீழே இருக்கின்ற வானத்தில் பரந்த ஒளியாக உள்ளது. நீரை முகமாக உடைய அபானனை நீண்டு உணர்ந்து போகும் வீணாத்தண்டின் ஊடே சுழுமுனைக்குச் செலுத்தினால் மேலான நிலஒளி நீர் ஒளி நெருப்பொளி தீயான காற்றொளி வான் ஒளி என்னும் ஐந்தும் ஒரே ஒளிமயமாய்த் திகழும்.
2686. மின்னலைப் போன்ற தூய ஒளி மாட்சிமையுடைய செந்நிற ஒளி வேதங்களால் புகழ்ந்து பேசப்படும் ஆன்மாவின் ஒளி ஆறு ஆதாரங்களில் பொருந்திய ஒளி என்னும் இவற்றை தூய மொழியான சிற்சத்தி நாள்தோறும் சீவனின் விருப்பத்துக்கு ஏற்றவாறு ஒரே பேரொளியாய் அமைத்துத்தருவாள்.
2687. விளங்கும் ஒளி மின்னல் ஒளிபோல் ஆன்மாவில் மறைந்து ஒளிர்கின்ற ஒளியான ஈசனை இடைவிடாமல் சிந்தியுங்கள் அப்போது உள்ளத்தை இடமாகக் கொண்டவன் உடலில் விளங்கிப் பிராண சத்தியாய் வளத்தைத் தருபவனாய் எங்கும் பொருந்தி நின்று அருள் செய்வான்.
2688. விளங்கும் ஒளியான ஆன்மா தன் உண்மை அறியாது அறியாமையான இருளில் அழுந்தும், பிரகாசமான ஒளியுடைய சிவன் வழிபடுபவர்க்கு ஒளியைப் பெருக்கி விளங்குவான். உப்பு நீர் பாயும் வழியில் வெளிப்படுத்தும் நஞ்சை அமுதமாய் ஏற்றுப் பொருந்தும் சுழுத்தை இடமாகக் கொண்ட இறைவனின் இயல்பு அப்படி மாறச் செய்வதேயாகும்.
2689. இயல்பாய் பேரொளியாய் விளங்கியது எதுவோ அதுவே சிவம் ஆகும். சிவத்தின் சத்தியும் அங்ஙனமே ஒளிமயமாய்ச் சிவத்தின் விருப்பத்துக்கு ஏற்பச் செயலை செய்து முடிப்பாள். சத்தி ஆற்றலில் விளங்கும் நீங்கள் சூரியன் சந்திரன் அக்கினி என்ற மூன்றும் விரிந்த சுடராக விளங்கி மனத்தில் அவை ஒன்றாகி அந்த ஒளியில் சிவனும் உடன் நின்று அருள் செய்தான்.
2690. உள்ள மண்டலத்தில் விளங்கும் ஒளி எனது நுண்னுடலில் உள்ள சீவனேயாகும். அந்த ஒளிக்குள் ஒளியாய் விளங்கும் சீவனை விட்டு விலகாத மாணிக்கம் போன்ற பேரொளி மின்னல் ஒளிபோல் மின்னி வானத்தை அடைந்து அங்கு வளம் செய்யும் ஒளியாம் சீவ ஒளிக்கிரணச் சமூகத்துடன் கலந்து நின்றான்.
2691. விளங்கும் ஒளியுடைய விகிர்தனான சிவன் முன்பு மிக்க ஒளியுடன் கூடிய மாயையுள் வலிய இருள் பொருந்தாதபடி களங்கத்துடன் கூடிய இருளில் சிவன் நடிக்க விளங்கும் ஒளியிலே மன மண்டலத்தில் விளங்கி நின்றான்.
2692. ஞானப் பயிற்சியால் ஆதியான பரம் பொருளைத் தேவர் தலைவனான உருத்திர சோதியுடனும் தலையின் உச்சியில் விளங்கும் சகசிரதள மலரில் போய் அடைந்தவர் ஆன்மப் பேரொளியும் அண்டத்தில் அப்பால் உள்ள பேரொளி பிழம்பும் ஆவர். இம்முறையில் ஆதியான பரம் பொருள் சீவர்களை மாயையினின்று கடக்கச் செய்யும்.
2693. உலகுக்குக் காரணமானவன் ஒருவன் உண்டு என்றும் இல்லை என்றும் சொல்லும் கொளகை உடையவர் உலகத்தில் உண்டு. ஆன்மாவுக்கு மேலான ஒன்று பழமையில் இல்லை. எனக் கூறுபவர்க்கு மேலான சிவகதி இருக்கக் கூடுமோ. அங்ஙனம் இருப்பதைக் கண்டதில்லை என்று கூறுபவருங்கூட அறிய வேண்டும் என்று எண்ணம் ஏற்படின் வான்மயமான தில்லையான மனமண்டலத்தில் விளக்கமான ஒளியாய் இறைவன் விளங்குவதைக் காணலாம்.
2694. சுடர் பொருந்துமாறு உயர்வான் ஒண்மையான ஒளிவடிவாய்ப் பயிற்சியாளனின் அக நோக்கத்தில் படர்ந்து விரிந்து சூரியன் போல் இறைவன் காட்சி தருவான். அந்த ஒளியால் அடர்ந்துள்ள மாயையின் இருளை வேறுபடுத்தினால் உடலுடன் கூடியிருந்து ஞானத்தால் பயிற்சியாளன் உலகைத் துறந்தவன் ஆவான்.
2695. ஒளியைத் தரும் பவளம் போன்ற மேனியை உடையவனும் அதன்மேல் வெண்னிற ஒளி படிந்தவனும் புவனம் போன்ற செம்பொன் நிறமுடைய ஆதிப் பிரானும் ஆன சிவன் மூலாதாரத்திலிருந்து க்ளிப்பைத்தரும் பவள நிறத்தவனாக விளங்கிக் கரிய பாச இருளை அகன்று ஒளி பெற்ற பவள நிறம் உடையவனாய் என்னுடன் இருந்தான்.
2696 வான் மண்டலத்தில் இறைவன் இருந்தான். அங்கேயே தேவரும் இருந்தனர். அப்படியிருப்பினும் அவர்கள் ஒளியின்றி மக்களைப் பூமியை நோக்கிச் செலுத்துபவராய் இருக்கின்றனர். இருவினை ஒப்பு வரவே இறைவன் அருளால் பழைய வினையுடன் புதுவினையும் அடியோடு நீங்க மலர் பக்குவமானபோது வெளிப்படும் நறுமணம் போன்று சிவன் வியாபகம் அடைவான்.
2697. தேவர்கள் மக்களை உலக்த்தில் செலுத்துபவர் ஆயினும் தேவர்களுக்கும் தலைவனாய்ச் சிவன் உள்ளான். சீவர்களுக்கு முத்தியை அளித்துத் தன்னுடன் பொருந்துமாறு செய்பவன் அவன். அல்லாமல் வேறு எவரும் இல்லை. இந்தப் பெரிய உலகத்தில் அச்சிவமே வான் வடிவில் நிலைபெற்றுள்ளது. அப்போது சீவன் பரவாய் இருக்க எங்கும் பரவுதலும் கூடும்.
#####
ஓம்நமசிவய!
அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!
#####
பிரணவ சமாதி!
2675. அ, உ, ம என்ற மூன்றால் ஆகியது ஓம். இது தூலப் பிரணவம். இது பருவுடலுக்கு இன்பத்தைத் தரும். மறைகளால் பாதுகாக்கப்பட்ட விந்து நாதமான நுண்மைப் பிரணவம் மேலான பராசத்தியின் வடிவம். களிப்பைத் தரும் நேரத்தில் செய்யப்படும் செயலே நுண்பிரணவத்துக்குக் காரணமாகும். இந்தச் சூக்கும பிரணவத்தை அறிவதே வேதாந்த நெறியாகும்.
2676. ஓம் என்ற பிரணவ மொழிக்குள்ளேயே உபதேசத்துக்குரிய ஒரு மொழி தோன்றும். அஃது உருவையும் அருளையும் தனக்குள் கொண்டது. அதில் பல வேறுபாடுகள் உள்ளன. இத்தகைய ஓம் என்னும் பிரணவத்தை அறிவதில் மேலான சித்தியும் முத்தியும் உண்டாகும்.
2677. அகண்டமான பிரணவத்துள் மண் முதலிய ஐந்து பூதங்கள் உண்டாயின. இதனின்றும் ஐந்து பூத மாற்றத்தால் அசையும் உயிர்களும் அசையாத உயிர்களும் உண்டாயின. பிரணவத்தைக் கடந்த அதிதீதத்தில் சகலர், பிரளயகலர், விஞ்ஜானகலர் என்னும் மூவகை உயிர் இனமும் உள்ளன. அதனால் பிரணவம் உயிர் வாழ்பவையான சீவர்களுக்கும் மற்ற ஆன்மாவின் தொகுதிக்கும் சிவனுக்கும் உரிய நிலையாகும்.
2678. அ, உ, ம, என்ற எழுத்துட்ன் கூடிய ஓங்கார இறுதியில் உள்ள நாதப் பிரமம் இன்ப வடிவனதும் வியாபகமானதுமாகும். அதனுடைய சுருங்கிய நிலையே சரமாகவும் அசரமாகவும் உலகில் உள்ளன. பெரியதான் உலகம் எல்லாம் நாதப் பிரமத்தின் படிவம் ஆகும். இந்த உண்மையை ஞானம் கைவரப்பெற்றவர் ஆறிவர்.
2679. மயக்கத்தையுடைய உள்ளத்தால் பிராணன் இயக்கம் நடைபெற்று உள்ளம் அலைவதாகும். மயக்கம் தெளிந்த நிலையில் ஞான குருவால் உணர்த்தப் பெறுவது ஒளி நெறியாகும். இதற்கு இடமும் கூட்டமும் தவமும் சீவர்களது சித்தம் ஆகும். இவ்வாறு சன்மார்க்க உபதேசத்தால் நன்மை ஏற்படும்.
2680. பதினாறு கலை பிராசாத நெறி கூறும் சன்மார்க்கத்தில் உள்ளவர்களுக்குத் தலையின் மேல் விளங்கும் துவாத சாந்தவெளியின் இறுதியும் பதினாறு கலைகளின் இறுதியுமான உன்மனையின் முடிவும் பிரணவமான வில்லையும் கடந்து மேல் சென்று ஞானநிலையில் நேயப் பொருள் முடிவில் இருக்க முடியும்.
#####
ஓம்நமசிவய!
வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.
#####
ஞான குரு தரிசனம்!
2656. முப்பத்தாறு தத்துவங்களும் ஆன்மாவில் ஒடுங்கினால் சிவன் வெளிப்பட்டு ஆன்மாவைத் தன்னுள் அடக்கிக் கொள்ளும். அந்நிலை அமைந்த பின்பு மேலான சிவப்பேறு கிட்டப்பெறும். இதன் பயனாய் ஆன்மா உலக இன்பத்தை விட்டுச் சிவானந்தத்தில் நிளைத்துச் சிவபோகத்தை அடையும்.
2657. சீவ துரியம் பரதுரியம் சிவ துரியம் என்னும் மூன்றும் கடந்து விளங்கும் அறிவுப் பேரொளியான அரிய பரசிவம் யாவுமாய்ப் போக்கும் வரவும் இல்லாத இடத்தில் இருக்கும் பெருமை மிக்க குருபதத்தின் இயல்பைப் பேச முடியாது.
2658. தாய் போன்ற அருளை யுடைய நந்தியை என் மீது பெற்றேன். வாய் போன்ற கோபுர வாயிலில் விளங்கும் நந்தியை வாழ்வதற்கு வாயைப் பெற்றேன். உலகத்துக்கே பீசமாய் விளங்குகின்ற சிவத்தை ஞான சாதனையால் காண்பதற்குப் போதுமான அறிவைப் பெற்றேன். என்வுணர்வுக்கும் அப்பாற்பட்ட நந்தியை உணர என்னுடைய சிந்தையைப் பெற்றேன்.
2659. கருட மந்திர உபாசனை செய்பவன் தன் ஆத்ம ஆற்றலால் கருட மந்திரத்துக்குரிய கருடனை நினைத்தவுடனே நாகத்தால் கடியுண்டவன் மிக்க நஞ்சு தீர்ந்து மரணப்பயம் நீங்கி எழுவான். அதைப் போன்று ஞானப் பயிற்சியாளன் பேரொளிப் பிழம்பான ஞான குருவைத் தியனித்தவுடனே மும்மலங்களும் நீங்கிடப் பேரொளிப் பிழம்பாய் விளங்குவான்.
2660. சிவபெருமான் நிலையாய் உள்ள இருப்பிடம் எது என்பதை உலகத்தவர் எவரும் அறிந்து கொள்ளவில்லை. அவனது இருப்பிடம் சீவனிடந்தான் என்பதை ஞான விசாரனையால் அறிந்து கொண்டவர்க்கு அவனும் நிலையாக அவர்களது உள்ளத்தில் அமர்ந்து விடுவான். அவ்வாறு தம்மிடம் சிவகுருநாதனைப் பார்ப்பவர் சிவமாய் விளங்குவர்.
2661. முகத்தின் முன் தோன்றிய ஒளியை அறிவதும் அறிந்தும் அறியாதிருப்பதும் ஆன மயக்க அறிவு மாறிவரும் நனவு கனவு சுழுத்தியால் ஆகும். சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் என்ற மூன்றையும் கடந்தபோது நனவு முதலிய மூன்று நிலைகளும் நீங்கும். அப்போது திருவடியைப் பதிப்பித்த நந்தியான குருநாதன் பிரணவ உடலில் மாணவனை விளங்குமாறு அருள் செய்வான்.
2662. சந்திர மண்டலம் விளங்கும் இரண்டு புருவங்களுக்கும் இடையில் மணத்தை அறியும் நாசியின் மேல் பாகத்தில் இரண்டு இதழ்த் தாமரையில் உள்ள சத்தி பந்தம் ஒன்றும் இல்லாத பளிங்கு போன்ற உருவத்தை உடையவள். இவளே பந்தங்களை அறுக்கும் குருவடிவுடையவள். ஆதலால் இவளைப் பற்றித் தியானத்தை தொடங்குக.
2663. புருவ நடு தியனத்தினால் உடம்பில் உள்ள மூலாதரம் முதலான ஏழு இடங்களும் வளர்ச்சி பெற உள்ளத்தில் பரமகுரு எழுந்தருள்வான். அவன் வானமயனாய்த் தலையிடை விளங்கிப் பிருதுவியைச் செலுத்திபவனாகச் சுவாதிட்டானமான நிலத்தை அடைந்தான். பின்பு அவன் தலையைச் சூழவுள்ள அட்டதிக்குப் பாலர்கள் குறுப்பு நீங்கும்படி அருள் செய்தான். அங்ஙனம் அஞ்ஞானமான தத்துவங்களைக் கடந்து மேல் சென்றவனது ஊர் வடக்கு ஆகும்.
2664. சீவன் அன்னமய கோசம் முதலிய ஐந்து கோசங்களையே தான் என்று எண்ணி இருந்தது. அவை சீவனாகிய பறவை தங்குவதற்குரிய காடு என்று கூறத்தக்கவையாம். ஆனால் இவை தானல்ல தான் வேறு என்று சோடசகலை மார்க்கத்தினால் தன் உண்மை நிலை உணரலாம். இஃது அன்றி இந்தவுண்மை உணர்வதற்குத் தசகாரியம் விளக்குகின்ற வேறு நெறியும் உள்ளது.
2665. சீவர்களின் பக்குவத்தைக் கண்டு கலந்த பின்பு பிரியாத எம் தலைவனான சிவபெருமானது தன்மையினை நினைப்பவருக்குச் சிவபேதம் கெடும். அவனது பேரொளியில் கலந்து உள்ளத்தில் உணர வல்லவர்க்கு இங்கு அவரைச் சுற்றியுள்ள அரிய வினைகள் கெட்டொழியும். இவ்வினைகளுக்கு ஈடான மாயையும் அழியும்.
2666. சிவஞானத்தை உணர்த்தும் சிவபெருமானை வாழ்க்கையில் உணரலாம். அதனால் பலமாய்ப் பற்றியுள்ள பாசத்தைத் தளிர்க்க விடாதபடி அறுத்துப் பாச வழியில் செல்லாது சிவத்தை இடைவிடாமல் சிந்தித்து நிலைபெறச் செய்தால் சிவநெறியில் போய்ப் பேணுதல் முடியும்.
2667. குருவானவர் காட்டிய வழியில் சிவனை நினைத்திருப்பாரானால் சிவபெருமானும் அவனை நினைத்தருள்வான். அப்படி அருள்புரியும் பொருட்டுப் புருவ நடுவில் விளங்கும் ஒளிப் பொருளைச் சாதியாலும் அறிவாலும் தினையைப் போன்ற சிறியவராய் இருந்தாலும் இடைவிடாது சிந்திக்கும் மனத்துடன் அடைந்தால் அவர் பெருமையுடையவர் ஆவார்.
2668. சிவபெருமானை வணங்குதற்குரிய சாதனை செய்யும் காலத்தில் அவ்வழிபாடு தடைபட்டால் அது தீய வினையினால் உண்டானது என்று அறிக. எனினும் எல்லாவற்றுக்கும் காரணமாயுள்ள ஆதியான சிவத்தை தளர்ச்சியில்லாமல் சிந்தித்திருப்பவர் அவனது அன்பைத்தேடிக் கொள்வர்.
2669. சிவபெருமானை இடைவிடாமல் நினைந்து மெய்யுணர்வு பொருந்தப் பெற்றவர் அப்பெருமானுடன் பிரியாதிருபார். அவர்கள் எம் தலைவனுடன் பொருந்தி உலகியலில் எடுபடாமல் இருப்பர். உலகியலைப் பற்றாதபடியால் உலகச் சிறப்பை விரும்பாதவர் ஆனார். அங்ஙனம் அவர்களுக்குப் புகழத் தக்க மெய் உணர்வைத் தந்து பெருமான் அவருடன் ஒன்றாக விளங்கினான்.
2670. பசைக் கல்லின்மீது சிகப்புக் கல்லைப் பொருந்தினல் மற்றோர் ஒளி வரும். அதுபோல் தக்க குருவால் உபதேசிக்கப்பட்ட சன்மார்க்கத்தில் மாணவனிடம் வேறோர் தகுதி வந்து சேரும். இப்படிச் சேர்வதில் உண்டாகும் ஒளி நெற்றியின் அடிப்பகுதியான புருவ நடிவில் அழகிய சீவ ஒளிக்குள் விளங்கும் ஒளியாகும்.
2671. ஞான குருவிடம் சிவம் உண்ணும் வாயாகவும் உடலாகவும் உயிராகவும் பார்வையாகவும் விளங்கும். மண் நீர் தீ வாயு வானமாகவும் வானமற்ற அறிவு உருவாகவும் உடல் இயல்பை விட்டு நிற்கும் ஞான குருவின் நிலை உள்ளது.
2672. உலகம் முழுவதும் தலைவன் என்று போற்றிப் புகழும் சிவபெருமானின் ஆணை வழிச் சிவசக்தியாய் இவ்வுலகம் நடைபெறும். அவன் பெரிய வானத்தில் விளங்கித் தன்னை வணங்கும் அடியார்க்கு தகுதியான வான் வண்ணத்தையும் இவ்வுலகத்தில் அளித்து விளங்கினான்.
2673. விரிந்தும் உயர்ந்தும் உலகங்கள் எல்லாம் ஞானத்தில் விளங்கும் சிவபெருமானின் அருளால் நடைபெறுகின்றன். அங்ஙனமின்றித் தாம் வெறொன்றும் அறியவில்லை என்று அறிஞர் சொல்வர். இனி வான் மண்டலத்தில் வாழ்பவரான தேவரும் அசுரரும் இத்தன்மையைக் கண்டவர் அல்லர். ஆனால் எம்பெருமானின் அருளைப் பெற்றவரே அவனைக் கண்டவர் ஆவார்.
2674. பசுத்தண்மை உடைய ஆன்மாக்களை மற்றவர் வணங்கும்படியான தலைவர் ஆக்கி பின் மற்றவர் நாவால் துதித்து வணங்குமாறு குருநாதன் அருள் செய்தான். ஆதலால் நாம் இனிமேல் மற்றத்தெய்வத்தை வணங்கமாட்டோம். சிவம் ஒன்றாலேயே மற்றத் தெய்வங்கள் அதிகாரம் பெற்றுள்ளன. என்பதை தெளிந்தோம். இனி நாமே மக்களால் வணங்கும் கடவுள் ஆனோம்.
#####
ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#####
ஒன்பதாம் தந்திரம்
குருமட தரிசனம்!
2649. படைக்கப்பட்டவையும் தீயில் இடும் ஆகுதியும் பரந்த ஓமத்தீயினின்று கிளம்பும் புகையும் வேத ஒலியும் என்னும் இவை எல்லாம் எம் சிவபெருமானைக் கருதிச் செய்வனவே என் எண்ணிக் குவிந்த மனத்துடன் குருவடிவாய் விளங்கும் ஒளியைத் தரிசித்தவர் இறைவனின் திருவடியைப் பொருந்த்தி நின்று உலகியல் வெம்மையை விட்டு நின்றவர்.
2650 அடியவனின் உள்ளத்தை விட்டு உறைவதற்கு வேறு இடம் இல்லை. உண்மையை ஆராயின் சீவனுக்கு வேறு இடம் உண்டோ. அங்ஙனம் அவனுக்கு இவன் உள்ளம் ஆகும் என்பதை நன்றாக அறிந்திருந்தும் அவன் சிவன் வேறாக இருக்கின்றான் எனக் கூறுகின்றனரே. என்னே அறியாமை.
2651. அறிஞரால் விரும்பபடும் சகசிரதளத்தை நான் அறிந்து கொண்டேன். பின்பு ஆராய்ந்து அறியப்பட்ட சிவபெருமானின் ஒளி ஒலியான திருவடிகளை என்னுள் கண்டு கொண்டேன். தேடிக் காண ஒண்ணாதவனும் மனமண்டலத்தைக் கோயிலாகக் கொண்டவனும் ஆகிய என் இறைவன் எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் உலகமாகவும் உயிராகவும் இருப்பதை உணர்ந்தேன்.
2652. இறைவன் எழுந்தருளி இருக்கும் இடம் எது மலை எது என்று கூறுவேன். சித்தமாகிய குகையும் குகையுள்ள இடமும் எனச் சொல்வோர் ஆறு ஆதாரங்களுடன் அஞ்ஞானமான காடு எது எனச் சொல்வேன். இவற்றைப் பதினான்கு உலகத்தில் உள்ளவர்க்கும் சொல்வேன்.
2653. ஞானியர் பொருந்தியிருக்கும் இடம் முகம் ஆகும் பெருமையுடைய மடம் முன் உள்ள ஒளியாகும். உள்ளத்தில் உண்ட்டாகும் நல்ல எண்ணங்களே அடியார் கூட்டமாகும். பிறர்க்கு நன்மை செய்வதை எண்ணியிருப்பதே நல்ல காட்சியாகும். நுண்ணுடம்பே மேலான ஆசனம் ஆகும். அருவுருவான ஈசனின் திருப்பெயரைக் கணித்தல் செயலாகும். அறிவு வானமே அவர் பொருந்தியிருக்கும் குகையாகும் இவையே அவரைத் தாங்கி நிற்பனவாகும்.
2654. அகநோக்குட்ன் ஆராயும் ஞானியர்க்கு அகமுகத்தில் விளங்கும் ஆன்மாவான பீடமே எல்லாத் தத்துவங்களுக்கும் ஆதாரம். உலக சொருபமான சத்தியே எல்லாவற்றிற்கும் இருக்கை. உலக காரணமாகிய தெய்வமே அனைத்தையும் இயக்கும் சிவம்.
2655. தூமாயை துவா மாயை என்னும் இரண்டும் ஆன்மாவை மறைக்க அதன் அறிவு விளங்காது நிற்கும். அன்னமய கோசம் பிராணமய கோசம் மனோமய கோசம் விஞ்ஞானமய கோசம் ஆனந்தமய கோசம் என்ற ஐந்து திசைகளும் நீங்கிட அந்த ஆன்ம ஒளியில் நிலைபெற்று ஆராயும் ஞானியர் காண்பான் காணப்படுவான் காண்கின்றான் என்ற மூன்றையும் கடந்து மேலான பிரணவ யோகத்தை அறிவர்.
#####
ஒன்பதாம் தந்திரம்
#####
குருமட தரிசனம்!
ஞான குரு தரிசனம்!
பிரணவ சமாதி!
ஓளி!
தூல பஞ்சாக்கரம்!
சூக்கும பஞ்சாக்கரம்! அதி சூக்கும பஞ்சாக்கரம்!
திருக்கூத்து தரிசனம்!
ஆகாயப்பேறு!
ஞானோதயம்!
சத்திய ஞானானந்தம்!
சொரூப உதயம்!
ஊழ்! சிவதரிசனம்!
சிவசொரூப தரிசனம்! முத்திபேதம் கரும நிருவாணம்!
சூனிய சம்பாஷணை!
மோன சமாதி!
வரையுரை மாட்சி.! அணைந் தோர் தன்மை!
தோத்திரம்!
சர்வ வியாபி!
ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
#####
முத்தியுடைமை!
2633. முத்தி நிலையில் சிவபெருமானின் முழு அருளையும் உயிர் பெற்று முப்பத்தாறு தத்துவங்களும் வேறு எனக்கண்டு நீங்கி உண்மையுணர்ந்து தன் கடமை இறைவனை எண்ணியிருத்தலே என்று தவமாகும் என்று வினைகளின் நீங்கிய உண்மையான பத்தியில் ஈடுபட்டவர் மேன்மையுடைய சிவானந்தத்தைப் பெற்ற மெய்யறிவுடையவர் ஆவார்.
2634. சிவம் என்னும் கனியை நாடிய வன்மை மிக்க தாளையுடைய சீவன் என்ற பறவை உள்ள மண்டலத்தில் விளங்கும் சிவம் கனியை விரும்பிச் சித்தித்திருக்கும் போது கண்டத்துக்கு மேல் விளங்கும் அக்கினியில் சுழுமுனையாகிய விளக்கை பற்றி அந்தக்கரணங்கலான நால்வரும் உட;ல் அற்ற இடத்தில் இன்பத்தை நாடுபவர் ஆயினர்.
#####
சோதனை!
2635. பெருமையுடைய சிவபெருமானை உறையற்று விளங்கும் நிலையில் அப்பெரியோன் அடி ஞானத்தால் அருள் கடலில் முழுகினோம். எல்லா விதமான மாயா தொடர்புகளையும் கடக்கச் செய்து அவற்றினின்றும் வேறுபடுத்திச் செயல் அற்று இருக்கும்படி செய்வதே சோதனை.
2636. அகண்ட அறிவுடைய அரிய வேதத்தால் புகழ்ந்து பேசப்படுபவன் தேவர்களூக்குத் தலைவன், ஐம்ம்புல அறிவுகளையும் விட்டு அகன்அ அறிவை அறியும் பொறியை உடையவன். இத்தன்மையுடைய அடையாளங்கலையுடைய குருநாதனை நான் பொருந்தி யிருப்பேன்.
2637 உலகத்தவர் அறிவு அறிவு என்று ஓயாமல் கூறுகின்றனர். அவர்கள் சொல்லும் அறிவு பாச அறிவாகிய அறியாமை என்பதை எவரும் அறியவில்லை. பாச அறிவைக் கடந்து சிவஞானமாகில் உயிர்களிடமுள்ள பாச அறிவு என்ன இலக்கணம் உடையது என்பது புலனாகும்.
2638. சோதனைக்குப்பின் சுட்டறிவு இல்லாமல் யாவற்றையும் ஒரு சேர அறியும் அறிவில் கீழான மலங்கள் போய் அடையாத சேர்க்கையில், அவனது அறிவே கண்ணாகக் கொண்டு தம் அறிவு கெட்டு ஏகாக்கிரச் சித்தத்துடன் நெறியாக உள்ள மேலான நந்தியின் அருளுடன் ஒன்றுபட்டுத் தான் என்ற ஒன்று இல்லாமல் இருத்தலே சிவமாம் தன்மை அடைதல் ஆகும்.
2639. எம் தலைவன் காற்றில் பிரிக்க முடியாத் பரிசமும் கரும்பில் பொருந்திய இனிமையும். பாலுள் மறைந்துள்ள நெய்யும் இனிய பழத்துள் பொருந்திய சாறும், மலருள் பொருந்திய நறுமணமும் போல் சீவனுடன் உடனாய் இருக்கின்றான். அவனே யாவற்றிலும் கலந்து விளங்குகின்றான்.
2640. விருப்பத்துடனே சிவபெருமானை நாடி இமயத்தைச் சாரும் உமையம்மையைப் போல் விருப்புடன் இருப்பவர் மனத்தில் எம் இறைவன் ஒளிவமாய் விளங்கிடுவான்.
2641. தம்=லைவனான சிவபெருமான தலயின்மீது விளங்கும் பெருவெளியில் வந்து எனது மன மண்டலத்தையே கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருந்தான். அங்ஙனம் அப்பெருமான் எழுந்தருள என் உயிர் தந்தை வந்து விட்டான் என்று என் உயிர் அறிவு கெட்டு நின்றேன். அங்ஙனம் நின்றதும் எம் மனத்துள் சிவன் சிறந்து விளங்கியிருப்பதைப் பார்த்தேன்.
2642. சத்து சித்து ஆனந்தம் என்ற பண்புகளை உடையவனும் தவத்தின் பயனாக இருப்பவனும் தவம் செய்வார்க்கு நன்மை செய்பவனும் உள்ளமான நடுவில் வீற்றியிருப்பவனும் அழியும் இயல்புடையவற்றைக் கடந்து நிற்பவனும் ஆன இறைவனை நாடுங்கள். அவ்வாறு நாடினால் எண்ணில்லாத சீவ கோடிகளில் உம்மை மேலானவனாக அவன் ஆக்குவான்.
2643. சிவகுருவாய் எழுந்தருளி வந்து அத்துவா சோதனை செய்த போது நல்ல நாதனான சிவபெருமான் உடனாய் இருக்கின்றான். பரமாகவும் அபாரமாகவும் உள்ள அப்பெருமான் எல்லாவற்றிலும் கலந்து உள்ளான். மேலும் அவன் யாவற்றையும் கடந்து நின்று கலை முதலிய அத்துவாக்களைக் கடப்பதற்குத் துணையாகின்றான்.
2644. தேவராலும் அறிய இயலாத அப்பரம்பொருள் மேலே சொன்னபடி நல்ல நெறியில் செலுத்தும். இந்த வாழ்வில் தந்தையும் தாயும் தோழனும் போல் இனியவனாய் எனக்குத் துணை செய்யும். எனக்கு வழிகாட்டியாய் இருந்து சிவவுலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைக்கும். இந்த வகையாக நந்தி உதவி செய்வான்.
2645. சோதனைக்குப்பின்பு ஞானமாகிய வாளை உறையினின்றும் எடுத்து அஞ்ஞனமான இருளைப் போக்குவதாகும். அவ்வாறு அருளிய பெருமையுடையவன் இருப்பதை அறியவும் கூடும். அறிவதோடு தேவதேவனான அவனை நெருங்கிப் பொருந்தவும் கூடும். அப்போது அஞ்ஞான இருளில் செலுத்தும் பல கூட்டத்தை நீங்கக்கூடும்.
2646. சிவகுருவால் உணர்த்தப்பட்ட ஞானமென்ற வாளை மனம் என்னும் கையில் எடுத்தவுடன் என்னை வேறுபடுத்தி தன்னெறியினின்றும் நீக்க வல்லார் எவரும் இல்லை. சிவம் அல்லாதவை நிலைபெறாதபடி ஞான விசாரணையால் என் மனத்தைச் சோதனை செய்வேன். அப்போது ஆதி மூர்த்தியாகிய சிவத்தைப் பொருந்த்திச் சிவமாக இவன் ஆகின்றான்.
2647. குருவானவர் பிறவிக்குக் காரணாமான பாசத்தையும் அருவமான மாயையும் கன்மங்கள் உருவாக்கும் பந்தத்தையும் அங்ஙனம் செய்யும்போது உண்டாக்கும் அச்சத்தையும் அச்சத்தினால் தீய நெறியில் போகும் சிந்தையைத் திருத்தலுமாணவர் நன்னெறியைச் சேர்ந்தார். அங்ஙனம் சோதனை செய்யப்படும் திறமை உடையவர்க்கே சிவத்தைச் சார்ந்து சிவமாக முடியும்.
2648. சொல்லால் சொல்ல முடியாத ஒன்றை பிரணவ உப்தேசத்தை என் அக உணர்வில் குருநாதன் உபதேசம் செய்தான். எல்லை கடந்த நூல் ஆராய்ச்சியில் விருப்பத்தை ஒழித்து அலைபோல் வந்து அழியும் இயல்பு கொண்ட உடம்பை அழியாமல் இருக்கச் செய்து குற்றம் நீங்கப் பெற்ற என்னிடத்தில் பரன் வந்து பொருந்துவான்.
#####
ஓம்நமசிவய!
தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
#####
பத்தியுடைமை!
2623. இறைவன் உயிர்களுக்கு வீடுபேற்றை அளிக்கும் ஞான வடிவாகவும் மந்திர வடிவாகவும் உள்ள தலைவன். அழியாத தேவர்களை நடத்துபவன். தூய்மையானவன். தூய நெறியாக விளங்குபவன். இத்தகைய இறைவன் அடியார்களால் போற்றப்படும் உயிர்களின் தலைவனும் ஆவான்.
2624. சிவபெருமானின் சந்தான ப்ரம்பரையில் வ்ந்த அடியாரிடம் அடிமைக்கு அடியவனாகி அவரிடம் அடிமைப் பட்டேன். அப்படி அடியார் அருளால் சிவஞானம் பெற என்னையும் அவன் அடையார்களுள் ஒருவனாய் ஏற்றுக் கொண்டான்.
2625. இறைவன் தன்னைச் சார்ந்தவ்ர்க்கு நீரை விடக் குளிர்ச்சியுடையவன். உலகத்தைச் சார்ந்தர்க்குத் தீயை விட வெம்மையைத் தருபவன். அவனது இப்படிச் செய்யும் இச்செய்கையை அறிபவர் யார். ஆனால் உலகத்தின் பயன் அளிப்பவரைக் காட்டிலும் நேர்மையானவன். அத்தகையவன் நினைப்பவர் உள்ள்ச்த்தில் உமையம்மையுடன் எழுந்தருளியிருப்பவன் ஆவான்.
2626. ஏழு உலகங்களில் உள்ளவர் ஒன்றாய்க் கூடி ஆராய்ந்தாலும் ஆராய முடியாத ஒப்பற்றவன் ஆன என் தலைவன் எழுந்தருளியிருக்கும் இடத்தை யார் அறிய வல்லார். சிவத்திடம் பத்தி கொண்டூ ஊர்த்துவ சகசிரதளம் விழிப்படைந்த குருவை அடைந்து அவரது உதவியைப் பெற்றவர்க்கே அல்லாமல் முத்தைப் போன்ற வெண்மையான ஒளியில் விளங்கும் அவளைக் (குண்டலினியை) காணலாம் எனக் கூறுவர் யவருமிலர்.
2327. கன்று தாயை நாடிக் கதறி அழைப்பதைப் போன்று நான் கன்றின் தன்மையில் இருந்து என் தாயான சிவத்தைப் பக்தியிப்னால் கதறி அழைத்தேன். வான் உலகு வாழ்பவர்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கும் மறைப் பொருள் ஊனில் கட்டப்பட்டிருக்கும் என்னை விரும்பி என் மனத்தில் எழுந்தருளியுள்ளான்.
2328. மலத்தால் கட்டப்பட்டிருக்கும் சீவர்கள் பிறக்கும் நியதியைக் கடவாதவர். ஆதலால் அவர்களாகச் செய்து கொள்ளும் பயிற்சி பலனை அளிக்காது. போகும் முதற் நிலையில் உள்ளவர் இவனைத் தவிர வேறு எதனையும் நினையாதவராதலால் அவர்களின் முயற்சியில்லாமலேயே வேண்டியவை எல்லாம் அவர்களுக்குப் பொருந்தும். தலைவனான சிவத்துக்கு மலக்கட்டு உடையவர்க்குப் பிறவிப் பிணிப்பும் மலம் அற்றவர்க்குக் காட்டும் அருட் பிணிப்பும் ஆகிய அருட் செயல்களால் இறைவனைப் ப்ற்றிக் கொண்டு விளங்குபவர்க்குச் செயல் ஏதும் இல்லை.
2329. உடல் கற்பமாகக் குண்டலினி சத்தி உடம்பில் விளங்கவும் நாத ஒலி கேட்கத் தலையின் உச்சியில் விளங்கும் ஒளி மண்டலத்தில் ஏறித் தேன் சிந்தும் சகசிரதள மலரைக் கொண்டு சிவபெருமானை வழி படுவதல்லாது பிற கடவுளைத் தெய்வம் என்று எண்ணி வழிபடுவதற்கு என் மனம் இடம் அளிக்காது.
2330. அடியார்க்கு எப்போதும் தக்க துணையான நந்தியும் தேவர்க்குத் தலைவனும் ஆகிய இறைவனைத் துணைவனாகப் பெற்றுக் கொண்டு பிறப்பை ஒழித்துக் கடைத்தேறுங்கள். அவனை நெருக்கமான துணைவனாய்க் கொண்டு அவனது திருவடியைச் சிந்தித்திருக்கத் துணைவனாய் ஒளி வடிவினனாய் நின்று அருளுவான்,.
2331. ஒளி மண்டலத்து வாழ்பவர்களான தேவர்களை அடக்கியிருகின்ற இருள் மண்டலத்தில் வாழ்பவர்களான அசுரர்களது முப்புரத்தை எரித்த தலைவனை நாதமயமானவன் என்றும் வீரிய கோசத்தில் விளங்குபவன் என்றும் ஊன் பொதிந்த உடலுள் விளங்குபவன் என்றும் அறிந்து ஞானியர் வழிபட்டனர்.
2332. குண்டலினி சத்தியை மூலாதாரத்தினின்று எழுப்பிச் சகசிர தளத்தில் சேர்க்கும் முறையை அறிந்து நிலைபெறுக. அல்லது அறியாது கேடு செய்க என்று கருவி கரணங்களைப் படைத்துக் கொடுத்தவன் சிவன். அப்பொருமானினை நாடி என் மனம் ஒளி பெற்று விளங்கும். சிரமான மலையிலும் நெற்றி நடுவான வானத்துள்ளும் விரிந்த சகசிரமான புறத்திலும் மூலாதாரமான உலையிலும் மன மண்டலம் என்ற உள்ளத்திலும் தியானித்து ஆழ்ந்து இருந்தேன்.
#####
ஓம்நமசிவய!
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
#####
ஞானி செயல்!
2610. தனமையை அளிக்காத ஐம்புலன்களின் தன்மையை ஆராய்ந்தால் தன்மையைத் தரும் தன் இயல்பை உணர்ந்த தத்துவ ஞானியர் முன் பிறப்பில் செய்த பழவினைகள் வந்து சேருமாயின் அவற்றை அனுபவித்துக் கழிப்பர். அதன் பின்பு இப்பிறவியில் செய்யும் வினைகளைக் கருதிச் செய்யாமல் அவற்றினின்ரும் நீங்க முயற்சி செய்பவர் ஆவார்.
2611. தன் உண்மையை உணர்ந்த ஞானியர் பழ வினையில் பந்தத்தைச் சிவ சிந்தனையால் விலக்கி விடுவார்கள். தலையின் மீது விளங்கும் சிவனின் திருவருளால் பின் வர இருக்கும் வினையயைத் தோற்றம் எடுக்காமலே அழித்து விடுவர்.
2611. சீவர்களின் மனம் மொழி செயல்களால் வலிய வினை வந்து சேரும். சீவர்களின் முக் கரணங்களும் உலகியலைப் பற்றாமல் சிவனைப் பற்றியதாகில் வலிய வினை வந்து பற்றும்படி இல்லை. சாதனையால் மனம் சொல் செயல் கெட்டு மௌனமாய் இருப்பவர் தன்னை வினை பற்றாமல் மாறி அமைத்துக் கொள்ளும் ஞானியாவர்.
#####
அவாவறுத்தல்!
2613. பிராணனையும் சுழுமுனையையும் பற்றிப் பேசியும் பேசுவதுடன் அவற்றை நெறிப்படுத்தும் முறையை அறிந்து மற்றவர்க்கு எடுத்துச் சொல்லும் ஒரு பயனையும் அடைய முடியாது. பொருளின் மீது செல்லும் ஆசையையும் மக்கள் மீது செல்லும் ஆசையையும் அகற்றுங்கள். அங்ஙனம் நீங்கியபின்பு இறைவன் இருக்கும் இடம் எளிதாய் உணரப்படும்.
2614. சிவபெருமான் வீட்டுச் சுவரின் மாடங்களில் இருப்பவன் அல்லன். தனியான் மண்டபத்தில் இருப்பவன் அல்லன். வீட்டுக் கூடங்களில் இருப்பவன் ஆவான். ஆலயங்களில் இருப்பவன் அல்லன். ஆனால் மனத்தில் ஆசையை விட்டவரின் மனத்தில் உள்ளிருந்தபடியே அவரை இயக்கி முத்தி அருளுபவன்.
2615. எவ்வகைப்பட்ட ஆசைகளையும் அறவே விட்டு விடுங்கள். இறைவனோடு கூட ஆசையை செலுத்தாமல் கைவிடுங்கள் ஆசை உண்டாக ஆசை உண்டாக அவற்றால் உயிர்க்குத் துன்பம் வரும். ஆசையை அறவே விட்டால் ஆனந்தம் உண்டாகும்.
2616. நுண்மையான பூதங்கள் சத்தம் பரிசம் ரூபம் இரசம் கந்தம் என்பன. அவை சீவர்களை உலகமுகமாய்த் தூண்டி துன்பப் படுத்துகின்றன. அவை உடனிருந்து தீய வழியில் செலுத்துவன ஆதலால் உண்டாகும் பற்றுகளை விட்டு அழித்து ஆசையை விட்டு உண்மையான் ஞானத்தை எட்டுவது சீவர்கள் தமது உண்மை நிலையை அறிமுகப் படுத்துவதாகும்.
2617. நிறைமதியில் பொங்கும் கடல்போல் அளவு இல்லாது அளவின்றிப் பொங்கி உலகை அழிக்கின்ற பல ஊழிகள் சென்றன. இன்ப துன்பமான கடலில் ஆழ்ந்து தேவர் முதலியவர் இறந்தனர். உலகத்தவர் ஆசைக கடலுள் பட்டுப் பிறவியை விடாதவர் ஆயினர். ஆனால் ஈசன் ஆனந்தக் கடலில் நிலையாய் நின்று அருளுகின்றான்.
2618. நெடுங்காலம் நீங்கமல் நின்று இருவினைகளையும் மூன்று மலங்களையும் அகற்றாமல் ஆன செயலும் பொருந்தும் இயக்கம் அற்றுத் தூயமை பெறுதலும் பின்பு படைப்பு முதலிய ஐந்து தொழில்களையும் நீக்கி அருள் மயமாக்கி ஆழ்ந்து நிற்கச் செய்தலே ஞானியரின் தூய்மையான நிலைகளாகும்.
2619. சீவன் தன் உண்மை வடிவம் ஒளி மயம் என்று உணர்ந்து நிற்கில் அறிவுடன் கூடிய சித்தியும் முத்தியும் உண்டாகும். பெண்மீது கொள்ளும் ஆசையை விட்டு நின்றால் எண்பெருஞ்சித்திகள் கிட்டும். உறுதியான சிவப் பற்றுடைய ஞானி தன் தேகத்தை நழுவ விடடால் சிவத்தின் அருள் நின்று பின் சிவத்தைச் சார்ந்துவிடுவர்.
2620. சீவன் சிவமாக ஆக வேண்டும் என்று இறைவனை அன்புடன் நாடி சிவனாகவே இவன் மாறிப் பதி நிலையை அடைகின்றான். என்ற உண்மையை உலகத்தவர் உணரமாட்டார். ஆயின் இச்சீவன் பலவகையான பிறவிகளை எடுத்துப் பல உலகங்களுக்குச் செல்வது உண்மையை உணராமல் பொய்ப் பொருளில் பற்றுக் கொண்டிருப்பதே ஆகும்.
2621. இவ்வுலகம் முழுவதும் துன்பம் தரும் பருவுடலில் விழுவதும் அது நீங்குமாறு செய்வதும் மீண்டும் பிற்வியில் சேர்ப்பதும் ஆகியவற்றைச் செய்யும் நான்முகன் முதலிய ஐவரை அறிவுடையோர் விரும்ப மாட்டார். வெறுப்பைச் செய்கின்ற பருவுடலில் நுண்ணுடலுக்குச் செல்லும் சுழுமுனை நாடியை அவர்கள் பொருந்தியிருப்பதால்.
2622. மேல் வரும் பிறவியை மாற்றி அமைக்கும் ஞானத்தை பெற்றுள்ளோம் என்பீர். அத்தகைய ஞானத்துகு அடிப்படை எது என்பதை அறிய மாட்டீர். மூலாதாரத்தில் வீரிய சத்தியாகக் கலந்துள்ள உருத்திர மூர்த்தியைச் சிந்தனையால் கீழ் உள்ள அக்கினியை மேலே எழும்படி செய்து ஒளிமயமாய்க் கண்டால் முன் நோக்கியுள்ள பிறவியைப் போக்குதற்கு மூலகாரணமாய்ப் பொருந்தும்.
#####
ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#####
வாய்மை!
2595. அருள் உபதேசங்களால் மலம் நீங்கிய இயல்பைக் கூறின் அது தீயிலிட்டுக் குற்றத்தைப் போக்கிய பொன்னைப் போன்றது. மலம் நீங்குமாறு இறைவனை மாறுபாடின்றி உள்ளத்தில் வைத்துத் தியானித்தால் இருளை நீக்கிய செழுமையான சுடராகத் திகழும்.
2596. யாவற்றையும் அறியும் சிவமான பேர் அறிவுப் பொருளை விட்டுப் பிற உலகியல் பொருள் எல்லாவற்றையும் அறிவதால் பயன் ஒன்றும் இல்லை. அங்ஙனம் எல்லாவற்றையும் அறியும் பேரறிவுப் பொருளை நான் என்று பாவனைப் பயனால் உலகில் உணரில் எல்லாவற்றையும் அறியும் சிவமாக சீவன் விளங்குவான்.
2597. தலையில் பொருந்தியுள்ள மேருவின் மீது நின்று இடைவிடாது தியானம் செய்து அருள் சுரக்கும் பார்வதியம்மையை ஒரு பாகத்துக் கொண்ட இறைவனை யானும் ஊன் பொருந்திய உடல் இயல்பைக் கடந்து சந்திர கலையில் மறைத்து விளங்கும் பெருமானை கண்டு கொண்டேன்.
2598. நிராதாரத்தில் விளங்கும் சிவத்தை அறிந்து ஒன்றுபட்டவர் உலகினை நடத்திச் செல்லும் தன்மையுடையவர் ஆவர். அத்தகையோர் சிவதத்துவத்தை அருளும் மூர்த்தியும் ஆவர். அவர்களால் உலகில் மழைவளம் உள்ளதாகும் என்/று வேதங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. அவர் ஊனும் உருகும் உள்ளம் உடையவரிடம் நிலைபெற்று விளங்குவர்.
2599. சிவத்தின் திருவருள் உயிர்கட்குக் கிட்டிய காரணத்தை வினவில் பிரபஞ்ச போரில் மயக்கம் தெளிந்து சிவ ஞானத்தில் திளைக்கும் சிந்தை இறைவனை நாடி உலகியல் மயக்கத்தில் ஈடுபட்ட அச்சிந்தையை மாற்றி அரிய மெய்ப்பொருளான சிவத்தின் திருவடிகளைப் போற்றி வழிபடுவதாகும்.
2600. இறைவன் மெய்ப் பொருளுடன் கலந்திருப்பவரின் உடம்பிலும் உயிரிலும் பிரிவு இல்லாமல் நிற்பவன். உலகப் பற்று உள்ளவரிடம் போய் அடையாதவன். உய்யும் வகையறிந்து நாடுபவரிடன் பற்றுகளை அழிப்பவனாய் நின்று அவ்ர்தம் உடலிலும் உயிரிலும் பொருந்தி இன்பத்தை விளைவிப்பவனாகவும் உள்ளான்.
2601. இறைவன் மெய்ப் பொருளாம் சிவத்துடன் பிரிவின்றி நிற்பவரிடம் கலந்திருப்பவன். உலகப்பற்று உள்ளவரிடம் போய்ச் சேராதவன். இத்தகையவனைச் சுழுமுனை நாடியில் பொருந்தி மேல் எழும்போது சிவபெருமானை சுழுமுனையில் எண்ணியிருப்பவர்க்கே மனத்தில் பெற முடியும்.
2602. தலையில் பிராணன் மோதுதலை அடைந்து பகலிலும் இரவிலும் சிவத்தை உடம்பில் பொருந்தும்படி எண்ணியிருப்பின் அப்பெருமான் தலையின் மேல் சிறந்து விளங்குவான், பொய்யான உலக நோக்கில் செல்வதையும் புலன்வழிச் செல்வதையும் விட்டு நிற்கில் தலைவனும் முன் சொன்ன கபால வழியில் எதிர்ப்பட்டுத் தோன்றுவான்.
2603. பிராண வெற்றி பெருவதும் இறைவன் திருவருளைப் பொறுத்ததே ஆகும். ஆனால் இந்நெறி உத்தமமான நந்தியெம்பெருமான் சீவன் உய்யும் பொருட்டு அருளிச் செய்ததாகும். பொய்யானவற்றுக்கு விளை நிலமான ஒன்பது துவாரங்களையும் அடைத்து நின்றால் மெய்யான வான் புரவியைக் கொண்டு சிவப்பயணம் செய்யலாம்.
2604. சிவன் சுழுமுனை நாடியில் கலந்திருப்பவன். நினைப்பவர் உள்ளத்துள் விளங்குபவன். மனத்தோடு உடம்பிலும் பொருந்தியிருப்பவன். மூலாதாரத்தில் நிலைபெற்றவன். உலகப் பற்றை விடாதவரிடம் வெளிப்பட்டு அருளாதவன். மலம் அற்றவன். இவ்வியல்பு வாய்ந்த இறைவன் உடல் பற்றையும் உலகப் பற்றையும் விட்டவர்க்குத் தஞ்சம் அளிப்பவனாய் உள்ளான்.
2605. உண்மையான திருவடிகள் மனத்தில் பொருந்தும்படி வைக்கின்ற நந்தியைச் சுழுமுனையான தாழ்பாளை திறந்து கொண்டு அறிபவர் எவரும் இலர். பொய்யின் மூலம் வைக்கப்பட்ட உலகப் பற்றை நீ விட்டு அங்குச் சுழுமுனையைத் திறந்து கொண்டால் அதுவே கிடைத்தற்கரிய பேறாகும்.
2606. உய்வு பெற வேண்டுமானால் சீவர்களாகிய நீங்கள் உணர்வால் போற்றி வழிபடுங்கள். அப்போது மெய்யான அமைத்துக் கொடுத்த சன்மார்க்க நெறி விளையும். உறுதியுடன் பொய்யான உடலைக் கடந்து விளங்குபவரின் சகசிர தளத்தில் எம் தலைவன் அங்குச் சீவனுடன் வேறுபாடும் இல்லாது விளங்குவான்.
2607. நறுமணம் விளங்கும் சகசிரதளமான மலரில் சிவமான கனி ஒன்று உண்டு. அந்தக் கனி விஷய வாசனையான பறவைகள் கொத்தி தின்பதற்கு எட்டாததாகும். அந்த விஷய வாசனைகளான பறவைகளச் சீவசத்தியை மேல் நோக்கச் செய்கின்ற அம்பினால் எய்து அகலத் துரத்தினால் செம்பொன் ஒளியுடைய சிவகதியைப் போய் அடையலாகும்.
2608. மயக்கத்தை தருகின்ற ஐம்புல ஆசைகளை அறுத்துக் கலக்கத்தைப் போக்கிய சிவத்தை தொடருங்கள். வேறு இறைவன் உண்டு என்று மயங்காமல் சிவனே என் இறைவன் என்று எண்ணித் தொடரின் உய்ந்து போவாயாக என்று என் மலத்தை அவனுடன் சேர்த்துக் கொண்டான்.
2609. உள்ளத்தால் உலகத்தைப் பற்றாமல் சிவத்தைப் பற்றி எண்ணவல்லார்க்குச் சிவம் பதியும் மேலான நுண்ணுடல் இன்பமாய்ப் பொருந்தும் என்பர். உலகத்தைப் பற்றிய எண்ணம் இல்லாமல் தகுந்தபடி தியானம் செய்தால் ஞான பூமியில் தூய சிவாத்தின் அருள் உண்டாகும்.
#####
ஓம்நமசிவய!
அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
#####
விசுவக் கிராசம்!
2587. வானில் தோன்றும் நிழல் வடிவம் வானிலேயே மறைவது போன்றும் ஓடும் நீரில் உண்டாகும் நீர்க்குமிழி அதிலேயே சிறிது நேரம் இருப்பது போல் இருந்து மறைந்து விடுவது போன்றும் உள்ள தன்மையைக் கண்டால் சுடர்விட்டு எழுகின்ற அக்கினியின் முன்னம் கர்ப்பூரத்தைப் போல் பருமையாகக் காணப்படும் இவ்வுடம்பு காணப்படாதாய் புறத்தில் கரைந்து ஒடுங்குவது புலனகும்..
2588. பருவுடன் ஒளிமயமான உயிரோடு பிரிவின்றி ஒன்று பட்டால் அப்போது அது பர நிலையை எய்திச் சிவசத்தியுடன் ஒன்று படும். உடலாகிய சிறை நீக்கப்பட்ட பின்பு உடலில் இருந்த உயிர் சிவம் எங்கும் விளங்குவது போன்று விளங்கிப் பரு பூதத்திலும் நுண்பூதத்திலும் கலந்து சிவப் பரப்பில் விளங்கும்.
2589. செவி, மெய், வாய், கண் மூக்கு ஆகிய அறிவு கருவிகளும் பக்குவப்படாத மனம் முதலிய உட்கருவிகள் புருடன் ஆகிய ஐந்தும் பொருந்தி நிலை பெறாமல் உலக முகமாக விரிந்தும் குவிந்தும் உள்ளமையால் உலகமான அசைவனவும் அசையாதனவும் தவிர்க்க முடியாதவை ஆகும்.
2590. முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டு விட்ட ஆன்மா பரனின் நிலையை அடைந்து எங்கும் பொருந்தும்படி பரந்ததாய் விளங்கும். சிவச் சார்பினால் எங்கும் நிறைந்த பொருளாய் விலங்கும் எங்கெங்கும் எது எதையும் செய்யும் குற்றம் கொண்டதாய் உலகத்தை அழிக்கவும் ஆக்கவும் வல்லதாகும். இத்தகைய சிவன்ருள் பெற்று யான் வாழ்பவன் ஆனேன்.
2591. தத்துவ ஆராய்ச்சியில் அளந்தறிந்து சிவப்பரப்பான அகண்ட அறிவு பொருந்தும் துரிய நிலையைப் பற்றி உள்ளம் நிலை பெறுவதனால் பரம் சகமுகமாய்ப்போய் உண்ட போகங்களை ஒழித்துத் தெளிந்த பரம் சிவத்தை பொருந்துகின்ற வகையினால் அணையின் நிலைபெற்று விளங்கும் சிதாகாய வடிவினன் ஆவான்.
2592. தீயிடை காய்ந்த இரும்பு தன் மீது படும் நீரை உள்ளே இழுத்துக் கொள்வதைப் போன்று என்னை உள்ளே கொண்டு மிக மேன்மையான பரமானது கீழ்முகமாக நோக்குவதை விட்டு வன்மையுடைய் மூன்று பாழ் வெளியையும் விழுங்கி விளங்கிய என் நந்தியெம்பெருமன் என் இதயத்தில் இருக்கின்றான்.
2593. யானை நோய உண்ட விளாம்பழம் போல் சீவனும் அதன்மேல் நிலையான பரமும் சிவன் முன் ஆகும். சீவன் துரிய நிலையில் அடையுமானால் சீவனின் இயல்பான தன்மை எல்லாம் சிவபெருமான் மாறும் வண்ணம் செய்து தன்வயப்படுத்திக் கொள்வான்.
2594. எல்லாத் தத்துவங்களுக்கும் முதலாகவும் முடிவாகவும் உள்ள பரனான சிவபெருமான் அவரவரின் மேலான பரம் என்ற நிலையில் பொருந்தியுள்ளான். அப்பொருமானிடம் நெருங்கியவ்ர்குப் பரத்தின் கீழான தத்துவங்களை உண்டு காண்பான். காட்சி பொருள் என்பனவற்றின் முடிவில் சிவபெருமான் வீற்றிருக்கும் உண்மையை நம்மால் அறிய முடியாது.
#####
More...
ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#####
தத்துவமசி வாக்கியம்!
2568. உயிர் சீவ துரியத்தில் பொருந்தித் தத்துவங்களை விட்ட நிலை தொம்பதம். அதன் மேலான பரதுரியத்தில் பரத்தொடு பொருந்திய நிலை தத்பதமாகும். இது சிவதுரியத்தில் பொருந்தியிருப்பது அசிபதமான உண்மை நிலையாகும். உயிர் இதில் எல்லாத் தத்துவங்களும் நீங்கித் தத்துவமசியால் பெறும் உண்மையான பேற்றை அடையும்.
2569. முப்பத்தாறு தத்துவங்களையும் நீங்கிய ஆன்மா பொருந்தும் தொம்பதம் தூய நிலையாகும். அஃது உபாசாந்த நிலையில் மேலுள்ள தற்பத நிலையை அடையும். பேற்றுக்குரிய சீவன் இந்த நிலையைக் கடந்து அசிபதமான சிவகதி இறுதியான தொந்தத்தசி தத்துவமசிப் பொருளாகும்.
2570. அவனே இவன் என்று தேவதத்தனிடத்துச் சொல்லப்பெறுவதான விட்டு விடாத இலக்கணை தொந்தத்தசி என்ற மூன்று பதங்களிலும் உண்மையான சாந்தம் பெற்ற சீவனுக்கும் ஆகும். அங்ஙனமாகிய சீவன் பரனாய்ச் சிவனாக ஆகும்.
2571. துவம் தத் அசி என்பதே தொந்தத்தசி ஆகும் அவை இரண்டும் இயைல்பு காரணமாகப் பொருந்தி ஒன்றேயாம். தவப்பயனான தத்துவமசி வேதாந்த மரபாகும். வேத முடிவாம் சித்தாந்தம் நீ சிவம் ஆகிறாய் என்பதே ஆகும்.
2572. சிவ துரியத்தில் அடங்கிய சொல்வதற்கு இயலாத சீவப்பாழை மேலான பரம் எனப் புகல்வர். அதன் உண்மை இய்ல்பை அறியாதவர் இது பர நிலை அன்று என்பததை உணர மாட்டாதார். பரத்துக்கு மேலான பரமாகிய சிவம் உதிக்கின்றது அஃது அரிய இடம் என்பதை யாரோ அறியவல்லார்.
2573. தொம்பதம் தற்பதம் அசிபதம் ஆகிய மூன்றும் பொருந்திய முத்துரியத்திற்கு மேல் சீவன் சிவத்தை விரும்பிவதில் உம்முடைய பதமான தொம்பதம் பக்குவம் ஆகும். அப்போது சீவன் பரனாக விளங்கிச் சிவம் ஆகும்.
2574. உயிருக்கு அமைந்த துரியத்தில் பொருந்தும் ஆனந்தத்தில் நாதத்தை தோன்றச் செய்த பிரணவ உப்தேசத்தை உண்மையான இதயத்தில் எண்ணியிருங்கள். இருந்தால் அந்த மெய்யுணர்வு பொருந்தியிருக்கும் போது சிவன் தோன்றுவான்.
2575. நனவு, கனவு, உறக்கம், பேர் உறக்கம், உயிர்படக்கம் என்ற ஐந்தையும் முன் வைத்து அதனின் பின்னமான மலத்தை வைத்து உயர்ந்து சென்றால்பின் தூய தான் சொல்லும் சிவகதியில் சத்தை ஆதியாகவுடைய உபசாந்தம் உண்டாகும். அங்கு மனத்தையும் சொல்லையும் கடந்து விளங்கும் மன்னனான சிவத்தை நாடுவாய்.
2576. இறைவனின் எல்லையைக் கடந்து வேறு ஒரு பொருள் இல்லை. ஆதலால் அஃது அகண்டமாய் என்றும் ஒரு தன்மையாய் உள்ளது. அது வாக்கு கடந்து குணம் குறி ஒன்றும் இல்லையாதலால் பெயர் இல்லாதது. அதற்கு ஒரு செயலும் இல்லை. ஆதலால் கருத்தாலும் நெருங்க முடியாதது. உலகத்துக் காட்சிக்கு வேண்டப்படும் காரணம் இல்லாமலே தன்னை விளக்கும் இயல்பு வாய்ந்தது.
2577. நீ அது ஆவாய் என்று குரு உபதேசப்படி அமைந்த பெருவாக்கியம் நாடிய அது நான் ஆனேன் என்று மாணவன் பாவிக்கின், பாசம் முதலியவை நீங்கும். நீங்கிச் சிறப்புடைய நந்தியின் அருளால் சேய்மையாய் எண்ணப்பட்ட சிவமாக ஆக்கும். அப்படியாகி அதுவாய் அழிவை அடையாத ஆனந்த வடிவாகும்.
2578. உயிர் பரமாகவும் உயர்வுடைய பர நிலையை அடைந்து சீவன் அறிவதற்கு அரிய சிவமான அந்தச் சிவன் மூன்று வேதங்களிலும் புகழ்ந்து பேசப்பட்ட பராபரனாகச் சீவர்களுக்கு உரியவாய் வரத்தினால் உணர்த்த முடியாத பிரணவ வடிவம் ஆகும்.
2579. பிரணவம் வாய் நாசி புருவ நடு உச்சி என்பனவற்றில் ஆகி நாசி முதல் உச்சி வரை விளங்கும். தாய் நாடியான சுழுமுனையில் விளங்கும் நாதம் முதலாகச் சகல நிலையில் விளங்கும் தத்துவங்களும் சீவன் நாடும் ஒளியாய் முன் சொன்ன ஐந்து இடங்களிலும் பாய்ந்து சிவகதி அடையும்.
2580. சுட்டி அறியும் அறிவும் அறியாமை ஆகிய இரண்டையும் அகற்றி அறிவு வடிவாய் எங்கும் நிறைந்து விளங்கும் சிவனை அவனை விட்டு நீங்காது எம் தலைவன் என்று விரும்பிப் போற்றும் குறியை அறியாதார் சிவனைத் தம்மிடம் பொருத்திக் கொள்ள அறியாதவர் ஆவர்.
2581. உலகியல் அறிவு வாய்க்கப் பெற்றவர் காண்பன சுக நிலையைத் தரும் அப்புத் தத்துவம் அக்கினித் தத்துவம் என்னும் இரண்டையுமாகும். ஆனால் தத்துவ ஞானியர் சுகத்தை தரும் அப்புத் தத்துவம் எங்ஙனம் உடலில் உள்ளது என்பதை அறிவர். எல்லாவற்றையும் அறியும் சிவன் அங்குக் கலந்திருந்து புலப்படுத்தினால் அல்லது சீவரின் சிற்றறிவால் பேர் அறிவுப் பொருளை அறிய இயலாது.
2582. நந்திய்ம் பெருமான் யாவற்றையும் சுட்டி அறியும் அறிவைக் கடந்து எல்லாவற்றையும் ஒரு சேர அறியும் ஆற்றல் உடையவன். சுட்டியறியும் கருவிகளை இழந்தபோது ஒன்றையும் அறிய மாட்டாத அஞ்ஞான நிலையில் உள்ளவன் ஆன்மா. நிராதாரத்தில் உள்ள சந்திர மண்டலம் விளங்கப் பெற்று அ?ஞ்ஞான இருளை விட்ட பெருமை பெற்ற உயிர் இறைவனுடன் ஒன்றாம் சிவநிலையில் அமையும். அவ்வளவில் அந்த உயிர் பரம் என்று பெயரை பெற்று விளங்கும்.
2583. சிவபெருமானின் திருவடியைத் தொழ வேண்டி அவனது திரு முன்பு நின்று தலையால் வணங்க அப்பெருமானும் என் முன்பு வெளிப்பட்டருளினான். என் அடியை முறையாய்த் தொழ வேண்டி நீ பழமையில் நான் அது ஆனேன் என்று நீ எண்ணியது எல்லாம் சிறப்பாக இப்போது அமைவதை நீ பார்ப்பாயாக என்று அருளினான். நெற்றிக் கண்ணையுடையவன். அவன் கருணை இருந்தவாறு என்னே.
2584. இறைவன் ஒளியே மேனியாக உடையவ்ன். இய்ல்பாகவே பாசங்களின்று நீங்கியவன். பிறப்பில்லாதவன். இத்தகையவனான அவன் என் மனத்தகத்தே வீற்றிருந்து என்னைத் தன் அடியவனாக்கிக் கொண்டான். பொன் ஒளி வண்ணமுடைய புகழ் உடைய பெருமான் என்னை நோக்கி நீ மலமற்று விளங்குவாய் என்று கூ”றி என் மலங்களை நீக்கியருள் செய்தான்.
2585. இறைவன் எனக்கு அருளிய பின்பு நான் எனது பாசக் கூட்டமான தத்துவங்களை விட்டேன். ஒண்மையான சோதியைக் கண்டேன். என் உள்ளமானது உடலை விட்டு வேறாக எங்கும் செல்லும் ஆற்றல் பெற்றதாய் ஆயிற்று. எனினும் பணிவுடன் அவனை மறவாதிருந்த என்னை அவன் நிலவுலகத்திலேயே மரணம் இல்லாமல் நீண்ட காலம் வாழ வைத்தான்.
2586. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் உடலில் பொருந்திய ஞானேந்திரியங்க்ள ஐந்தும் அவற்றின் வழியாக அந்தக் கராணம் நான்கும் மற்றத் தத்துவங்களும் எல்லாவகைப்பட்ட உயிர் இனமும் இறைவனின் அருளால் இயங்குவன். ஆதலால் அவன் இவற்றை இயகுவதற்குரிய கையும் சொல்வதற்குரிய வாயும் இன்றி எங்கும் உடலாகவும் அறிவாகவும் நிறைந்த பூரணப் பொருள் என்பதுபட விள்க்குகிறான்.
#####
ஓம்நமசிவய!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
#####
மோட்ச நிந்தை!
2558. வீடுபேறு உண்டு என்பதை இல்லை என்று மறுப்பவர்கள் நரகத்தை அடைவதை உலகவர் அறிவர். மேலும் அவர் வீடுதோறும் போய் இரப்பர். நாள்தோறும் உணவுக்காக அவர் குதிரைபோல் தாவிப் போய் அலையத் தொடங்குவர்.
2559. குருவானவர் காட்டிய நெறியில் நின்று இறைவனுடன் கூடமட்டார். இறைவனிடம் விருப்பம் இல்லாதவராய் நூல்களில் உள்ள நயத்தை அலங்காரமாகப் பேசிக் கொண்டிருப்பர் இறைவன் உயிர்களுக்குச் செய்யும் உதவியை எண்ணிப் பாடவும் மாட்டார். அவ்வாறு பாடிஆடுபவர் எய்தும் பேறு இப்படி ஆகாது.
2560. என் உள்ளத்திலிருந்து எண்ணமானது வெளியே செல்லும் உள்ளே தோன்றுவதுமாய் உள்ளது. அங்ஙனம் செல்லாது தடுத்து நிறுத்திச் செம்மையுற்ற சித்தத்தையே இறைவன் என எண்ணி மனம் அற்ற இடத்தில் உள்ளவனை என் தலைவன் என்று அழைத்தேன். எனது உயிர் அறிவு கெட்டு ஒழியும்படி இறைவனைப் பற்றி நின்றபோது இஃது என்ன என்று கேட்கின்றனன்.
2561. மேடான இடத்தில் தங்கியிராத நீரைப் போல உடம்புள் பொருந்தி நிற்காமல் ஓடும் உள்ளத்தில் அருளைச் சேர்த்து வைத்துக் கடலில் நில்லாமல் கடந்து செல்லும் மரக்கலம் கரை சேர்வதைப் போன்று பிறவிக் கடலில் நில்லாமல் உயிர்களைக் கரை சேர்ப்பதற்குத் தீ வண்ணனான சிவன் வெளிப்பட்டு நிற்பான்.
2562. தாமரைக் கொடியானது அந்நீர் நிலையைக் கடப்பவரைத் தடுப்பது போல் பரகதி இல்லை என்பவர் தடுப்பர். அன்னார் சிவத்தை அடைய வேண்டிய வழி வெளியே உள்ளது என்று திரிவர். அடைவதற்கான வழியைக் காட்டினாலும் அதைக்காணாத மூடர் ஆவார். அவர்கள் நன்னெறியை நாடாமல் தீய நெறியை நாடித் தேடுகின்றனர் என்னே அறியாமை.
2563. அஞ்ஞானத்தால் மூடப்படாத ஞானியர் சிவபெருமானைத் தம் சிந்தையுள் நாடிச் சிந்தித்திருப்பர். ஆனால் அஞ்ஞானியர் காட்டிலும் மலையிலும் மருத நிலத்திலும் ஊடுருவி நிற்கும் ஒப்பில்லாதவனை நினையாமல் கெடுகின்றனர்.
2564. செத்தபின்பு உயிர் பயணம் தொடங்குவது தெற்கு நோக்கி நரகத்துக்கும் வடக்கு நோக்கிச் சொர்க்கத்துக்கும் ஆம் ஆயின் அழியாத அமரத் தன்மை பெற்றவர் இலட்சியத்தை அடையாக் கிழக்கு நோக்கி நெற்றிக் கண்ணுக்கும் மேற்கு நோக்கிப் பிடரி கண்ணுக்கும் போவார். இந்த இரண்டுக்கும் இடையே நாவினுக்கு மேல் மந்திரப் பொருள் இருக்கின்?றது என்று நடுவில் உள்ள அக்கினிக் கலையை ஒளிபெறச் செய்து பொருந்தி விளங்குவர்.
2565. காம மயக்கம் ஏற்பட மங்கையர் பார்த்தாலும் அரிய தவம் செய்கின்ற ஞானியர் தம்மைப் பொருந்துமாறு சொன்ன வற்றை மனத்தில் வைத்துக் கொள்ளார். இஞ்ஞானியரைச் சினம் உண்டாகப் பேசிய தீவினையுடையவர் தமக்கு வல்வினைகள் பொருந்துமாறு தாங்கிக் கொண்டிருப்பர்.
#####
இலக்கணாத் திரயம்!
2566. விட்ட இலக்கணை ஆன்மா வானத்தில் செல்லும் என்பதாம். விடாத இலக்கணை ஆன்மா உபாசாந்தத்தில் அமைகிறது என்பதாம். விட்டும் விடாத இலக்கணை ஆன்மா சாந்தம் முதலியவற்றைக் கேட்டல் முதலியன செய்யும் என்பதாம். இவை மூன்றும் ஆன்மாவில் பொருந்தும் இலக்கணம். அவற்றில் உண்மை இலக்கணம் இம்மூன்று இலக்கணைக்கும் அப்பாற்பட்ட இலக்கணமாய்ச் பொருந்தும்.
2567. பிரணவ வில்லைக் கொண்டு புருவ நடுவையும் பிடரிக் கண்ணையும் சேர்க்கும் நாணின் விசையால் மேலே ந்ழும் அம்பு போன்ற சிவனைப் பிரமம் என்ற இலட்சியத்தில் செலுத்தத் தம்மைக் கொல்வதற்காக காத்திருக்கும் ஞானேந்திரியம் என்ற யானைகள் ஐந்தும் சீவன் கவிழ்ந்த சகசிரதளாத்தைக் கடந்தபோது விழுந்துவிட்டன. பிரணவமான வில்லில் இருந்து உயர்ந்து சென்றவர்க்குப் பிரகாசமான நவமணி ஒளி போன்று சிவம் வெளிப்பட்டு விளங்கும்.
#####
ஓம்நமசிவய!
ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!
#####
சுத்தா சுத்தம்!
2546. புருவ நடுவில் இருந்து பன்னிரண்டு விரற்கிடை உயரத்தில் உள்ள சகசிரதளத்தில் உயிரின் காரண சரீர விருப்பினனான இறைவன் உள்ளான் என்பதை யரும் அறியவில்லை. சிவத்தைப் பற்றிப் பேசி இருப்பது வேதம் எனினும் அவ்வியக்த வடிவத்தைப் பற்ரி அறுதியிட்டுச் சொல்ல முடியாததாய்ச் சுருக்கி கொண்டுள்ளது அதன் இயல்பாகும்.
2547. உயிர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் செய்பவனின் கருத்தையும் உரிமையையும் செய்வதையும் பொறுத்து அமைவதாய் விளங்குகின்றது. இவ்வாறு செய்வதால் பிறவிக்குக் காரணமான வினையாய் அமைவதை அறிந்து உரிமை கொண்டாடாமல் அகன்று அன்பால் செய்பவை உயிர்களுக்குரிய கன்மத்தை அழிப்பதாகும்.
2548. மயையான திரை சீவர்களை மறைக்க மறைந்துள்ள ஈசுவரன் அம்மாயையான திரை அகன்றபோது அப்பொருளான ஈசுவரன் வெளிப்படும். மாயை நீங்குமாறு அப்பொருளில் மறையவல்ல உத்தம அதிகாரிகளுக்கு உடம்பும் இல்லை மனமும் இல்லை.
2549. தியானத்தினால் புருவ நடுவை அடைந்து கபால வழியைத் திறந்து அதற்குள் புகுந்து கோழை வந்து அடைக்கும் இடத்தில் அண்ணல் ஒளி காட்டும் குறிப்பில் கீழே போகாமல் அடைத்து அங்கு உண்டாகும் அக்கினிக் கலையை ஒளிப்படுத்தும் முறையில் உள்ளம் தாழ்வான மாயை வழிச் செல்லாமல் நிறுத்துவதே தன் சாதனையால் உண்டாகும் பலமாகும்.
2550. உடம்பில் இருந்து கொண்டு நுண்ணிய உடலுடன் உறவு வைத்திருப்பவன் உடலில் அக்கினி கலை விளங்கும். சிவத்தை நாட்டில் போய்ப் புறத்தே வழிபாடு செய்யும் அவர் உடலில் சிவம் விளங்குவதை அறியாதவரே ஆவார்.
2551. அறிவற்றவர் மற்றவரைத் தீண்டுவதால் தீட்டு ஏற்படுகின்றது என்பர். தீட்டு எவ்விடத்தில் இருக்கின்றது என்பதை எவரும் அறியவில்லை. தீட்டு எங்கு உள்ளது என்பதை அறிந்தபின்பு மனித உடலே தீட்டாக உள்ளது என்பதை அறிவர்.
2552 தத்துவ ஞானத்தால் தம்மை உணர்ந்தவர்க்குத் தூய்மையின்மை என்பது இல்லை. எல்லாத் தத்துவங்களையும் அழிக்கும் அரனை வணங்குபவர்க்குத் தூய்மை இன்மை இல்லை. மூலாதாரத்தில் உள்ள கனலைத் தூண்டி ஒளிபெறச் செய்யும் அக்கினி காரியம் செய்பவர்க்கும் தூய்மை இன்மை இல்லை. மேலான் மறையை உணர்ந்த ஞானிக்குத் தூய்மை இன்மை என்பதே இல்லை.
2553. சிவத்தை வழிபட்டு வணங்குபவர்க்கு உச்சிக்குழிக்குமேல் இருக்கும் சகசிரதளம் சிறப்பாய் அமைந்து ஒளிபெருகி நிற்பதில் உள்ளத் தூய்மை தொடங்கும். குழுயில் விழுந்து விந்து நீக்கம் செய்பவர் ஆதார நிராதார யோகங்களால் உணர்த்தும் குறிகளைப் பொருந்தார். வீணாத்தண்டினைப் பொருந்தியுள்ள கீழ் நோக்கிய முகத்தை மேல் நோக்கிய முகமாக ஆக்கியவர்க்கு அன்றிச் சிவம் தோன்றாதாகும்.
2554. தூய பிடரியின் கண் உள்ள தூய அக்கினி தூய ஒளியுடன் விளங்கும். இத்தகைய இடத்தில் விளங்கும் அக்கினிக்கு ஆதாரம் எங்கே இருக்கின்றது என்பதை அறிபவர் இலர். இம்மணியில் விளங்கும் அக்கினியின் ஆதாரத்தை அறிபவர்க்குத் தூய்மையான பிடரிக் கண்ணில் விளங்கும் அக்கினி தூய்மையைச் செய்யும்.
2555. சொல்லப்பட்ட தூயமணியில் விளங்கும் சிவன் வைத்த தூய நெறி கரும் நிவாரணம் செய்யும் பொருட்டு அமைத்ததாகும். அத்தகைய மணியைச் செழிப்படையச் செய்ய இறைவன் திருநாமமான ஒளி தேவை. அம்மணி கருவிகளை ஓயச் செய்து எட்டுப் பெருஞ் சித்திகளை அளிக்கும் தூய மணி மேல் எழுத்தின் பீடமகும்..
2556. தலைவனான சிவபெருமான் விரும்பிப் பெறுகின்ற சிறந்த பொருளாகவும் புண்ணிய வடிவாகவும் இருப்பவன். அவனது அருளைப் பெறப் போற்றி நிற்கும் அடியவர் அல்லாதவர் சொர்க்கம் நரகம் புவி என்று சுழன்று வருகின்ற பிறவித் தளையில் மயங்கிய உள்ளம் உடையவராய்த் தூய்மையின்மை உடையவர் ஆவார்.
2557. மயக்கத்தில் உள்ள உயிர்கள் வினையான அசத்தான மாயை வலிவடைந்து அதன் பயனாக விளையும் துன்பச் சுழற்சியை அறியா. ஞானத்தை உணர்ந்து அதன் வழி நிற்பதில் கொடிய வினை நீங்குவதனையும் தெளிந்து அறியா. வினைகள் உயிர்களைப் பற்றாது நிற்பதில் முத்தி நிலை உள்ளது என்று வேதம் சொல்லும் உண்மையை அறியா. தீவினையில் பதிக்கப்பட்ட உயிர்கள் அதன் காரணத்தையும் அதனால் விளையும் பயனையும் அறியா.
#####
ஓம்நமசிவய!
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!
#####
நவாவத்தை நவாபிமானி!
2537. சீவன் ஒன்பது நிலைகளில் உள்ளவனாகக் கூறப்பெறுவது உண்டு. சீவன் துவம்பத நிலையில் விசுவன், சைசதன், பிராஞ்ஞன், எனவும் நல்ல பதமாகிய தற்பத நிலையில் விராட்டன், இரணிய கருப்பன், அவ்யாகிர்தன் எனவும் பிற்பதமான அசிபத நிலையில் இதயன் பிரசாபத்தியன் சாந்தன் எனவும் அழைக்கப் பெறுவான்.
2538. சீவ பரத்துக்குரிய நனவு-சாக்கிரம் முதலிய நிலைகள் ஒன்பது வகைப்படுவதால் பிறவிக்குக் காரணமான் மலம் குணம் ஆகியவற்ரின் பற்றை அறுத்துப் பற்றுதற்கு அரிய தவத்தால் அடையும் மாறுதல் அற்ற அறிவு மயமான வானில் சீவ சிவ வேறுபாடு இல்லாமல் துரியம் பொருந்தினால் அதுவே சீவனின் நிலையாகும்.
2539. சீவன் சிவனையே நினைத்திருப்பதால் சீவனின் தனித்தன்மை கெட்டுப் பிறப்புக்குக் காரணமான ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் போய் ஒழிய ஒன்பதாய்க் குறிப்பிட்ட வகையின் இறுதியில் நல்ல சிவஞானம் தவத்தினால் அடையும் பயன் கொண்டதாய்த் தான் என்பது இல்லாமல் சிவமாய் விளங்கும்..
2540. ஒன்பது நிலையில் பொருந்தும் தத்துவம் தன் சொல்லில் அமையாத வேறு ஒன்பது உள்ளன. இப்படி முன்னே சொன்னதும் பின்னால்(2545-ல்) கூறப்போவதுமான பதினெட்டு நிலைகளையும் ஒழித்துவிட்டு உயிர்களைத் தானாகச் செய்யும் சிவன் தனித்து சிறந்து விளங்கும்.
2541. விருப்பப்படுவனவான் பதினான்கு வித்தைகளும் உயர்ந்தவர் பொருட்டு உணர்த்தியவன் சிவபெருமான் என்றும் அவனது உண்மை நிலையை விரும்பி இரவும் பகலும் மனத்தில் எம்பெருமான் என்று உணர்ந்து நிற்பேன். இதனால் அவன் வலிய வினைகளுடன் மூலத்தையும் அழித்திட்டான்.
2542. நெடுங்காலமாக நன்மை அடையத் தொகுத்துச் சொன்னவை பல. அவற்றிற்குரிய தெய்வமும் பலவகை. அவ்வாறு கூடுதலால் பெறும் பயனும் பல. கூறப்படும் பகலிலும் இரவிலும் எண்ணி வழிபடுங்கள். அங்ஙனம் அங்கங்கு நின்று அருள் செய்யும் அருளாளன் சிவன்.
2543. ஆதியான சிவபெருமான், பராபரை, சோதியுடைய பரம், உயிர், நல்ல தத்துவங்கள், சொல்லப்படும் கலை, சுத்தமாயை, அசுத்தமாயை, என்ற இரண்டு நிகர் இல்லாத வீடு பேறு என்று எண்ணப்படும் ஒன்பது பேதமாக ஆதிசத்தி எனவும் நிற்பாள்.
2544. உயிர்கள் ஆராய்ச்சி அறிவால் அடையமுடியாத உண்மைப் பொருளை அனுபவத்தில் அடையுமாறு செய்து வேறாக நரகமும் சொர்க்கமும் உலகத்தில் பிறப்பும் உயிர்க்ளுக்கு அருள் காரண்மாக அமைந்து வைத்தான். இவ்வுண்மையை அறியாதவர் வினையால் பிறவியை அடையும் உயிராகவே விளங்குவர்.
2545. ஒன்பது வகையான் நிலைகளில் சீவன் விரும்பி அந்த ஒன்பது நிலைகளிலும் பொருந்தி நிற்கும். இந்த ஒன்பதைக் கடந்த சீவதுரியம் பரதுரியம் சிவதுரியங்களில் சிவத்தைப் பொருந்தச் செம்பொருளான சிவமாதல் சித்தாந்தத்தால் அடையும் பயன் ஆகும்
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.