குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#####
அருள் ஒளி!
1814. திருவருளே ஏற்ற துணையாகும் என்று அதில் அழுந்தித் தன் செயல் நீக்கப் பெறாதவர் திருவருள் இயக்கத்தில் பொருந்த மாட்டார். அத்தகையவர் ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதாயி என்ற ஐந்து மலங்களையும் நீங்குவதில்லை. அருளின் பெருமையை அறியாதவர் அதில் அழுந்தார். திருவருளால் தோன்றி அருளே கண்ணாக அறிபவரே அறிந்தவர்.
1815. குருநாதனான சிவன் மீண்டும் பிறவிக்கு வராத நெறியை அருளியவன். தெவிட்டாத இன்ப அமுதத்தை அருள் செய்தான். ஆயிரம் திருப்பெயரையுடைய பொருமானின் பயர்களில் ஒன்றான சிவ என்பதால் தெவிட்டாத இன்பத் திருவருட் கடலில் முழுகி ஆடுக என்று அருள் செய்தான்..
1816. உண்டாகின்ற ஆனந்தத்தால் ஆடியும் பாடியும் கண்ணீர் மல்கியும் அலறியும் சிவனின் பேரியல்பைத் தேடி நான் கண்டு கொண்டேன். கண்டு பொருந்திய அப்போதே வடிவம் அற்ற ஒளியை அளித்துத் தன் அருளால் எனக்குள் மேல் கீழ் உள் என்ற பாகுபாடு இல்லாது விளங்கினான்.
1817 .குருநாதன் ஆணவ மலத்தால் உண்டான பிறப்பும் அப்பிறப்பினால் உண்டான மாயா கரியங்களும் இடையில் வந்து பற்றிய பொய்க்கூட்டம் என்று தெளிந்து நீ இவற்றை நீங்கினாய் என்று திருவடி ஞானமளித்தான். அதலால் இதுகாறும் கற்றவற்றை விட்டு விட்டேன். அவனருளால் கிட்டிய நாதத்தை நான் பணிந்து அதன் வழியிலே சென்றேன்.
1818. ஞானம் என்னும் விளக்கை ஏற்றி எல்லை அற்ற பரம் பொருளை அறிந்து கொள்ளுங்கள். அப்பரம் பொருளின் முன்னம் மல மயா கன்மங்களாகிய உடலின் துன்பங்கள் யாவும் அகலும். மிக்க ஒளியை வெளிப்படுத்தும் ஒளி உடையவர் சிவ ஒளியும் தம் ஒளியும் கூடிக் கலந்து நிற்கத் திகழ்வர்.
1819. ஒளியும் இருளும் எக்காலத்தும் கெட ஒளியில் கலந்திருப்பவர்க்கு அருள் ஒளி நீங்காது. புறக்கண் எதையும் இருளில் அறியாமல் ஒளியில் அறிவது உலகியல் அது போன்று புறக் கண்ணுக்கு வேறான அகக்கண் விளங்கும்.. அண்டகோச அறிவில் இருள் நீங்கி உயிர் ஒளியைப் பெற்றால் சிவமாகும்.
1820. ஆணவத்தால் வெளியே திரிந்திரிந்த எனக்கு உன் பொன் ஒளியில் விளங்கும் நாதத்தை அளித்தாய். என் அண்டகோச ஒளியில் புகுந்து என்னை மலம் நீங்கப் பெற்றாவனாகச் செய்தாய். என் அறவாழ்வில் புகுந்து எனக்குக் கிட்டுவதற்குரிய அரிய அமுதத்தை அளித்தாய். நின் இத்திறம்தான் என்னே என்று மயங்கினேன்.
1821. அருள் எனப்படும் பரவெளி ஒன்றும் பெய்ப்பொருள் எனப்படும் புகும் இடம் ஒன்றும் வேறு வேறு என்ற மயக்கம் நீங்க என் மனத்தகத்தே புகுந்த பேரொளியைச் சிவம் என்று தெளிவீராக பின்னர் சிவசத்தி உண்டாகும்..
1822. இவ்வுலகில் சிவமானது பிறந்து இறாந்த கதை உண்டு என்றால் கூறுங்கள். செத்துப் பிற்க்கும் மற்றத் தெய்வகளை மெய்ப்பொருள் என் எண்ணுவதைக் கை விட்டு விடுங்கள். பருந்து வட்டமிடும் உடலை கீழே வீழ்த்தி அரிய உயிரைத் தெளிவடையச் செய்வோம். இந்த உண்மையை பிறர்க்கும் சொல்லுங்கள்.
#####
ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
#####
திருவருள் வைப்பு!
1792. அறிய வேண்டிய நெறி கதிரவ நெறி, திங்கள் நெறி என இரண்டாகும். இத்தகைய கதிரவன் கலை, திங்கள் கலை விளங்கவே உயிருக்கு உருவமான உடல் அமைந்தது. அருள் என்னும் தெய்வ சத்தியைப் பெறத் திங்கள் நெறி பற்றியவர்க்கு அறமும் கதிரவ நெறி பற்றியவர்க்குத் த்வமும் ஆக உள்ளன. இந்த இரு நெறியிலும் மனத்தின் பண்புக்கு ஏற்பப் போகப் பொருள்கள் உடலுக்கு அமையும்.
1793. ஊனக் கண்ணால் காண்பதற்கு அரியவன் மனத்தில் பாவித்து அறியவும் அரியவன், குரு மண்டலத்தில் விளங்கும் நந்தியும் தொடுவதற்கும் அணுகுவதற்கும் தொலைவில் இருப்பவனாய் தோன்றுவான். அவனையே வேண்டிக் கிடப்பவர்க்கு அகநோக்கில் விளக்கொளியாவான். அப்போது அவனையே செறிந்திருத்தலால் உள்ளத்தில் இருந்த அஞ்ஞானம் விலகும்.
1794. விளக்கொளியைப் பார்த்து நின்றபோது அகக் காட்சியில் உலகத்தில் உள்ள எல்லா உயிர்ப் பொருள்களும் கருவாய்த் தோன்றும். வெறுக்கத்தக்க ஆணவ இருள் நீங்கின் உயிர்க்குயிராய் இருக்கும் பரமன் உண்மையைக் காணலாம். அவ்வாறு அவனிடம் செறிந்த சிந்தையை ஆராயின் ஞானமே வடிவான காட்சி தோன்றித் தேவ வடிவு உண்டாகும்.
1795. ஞானத்தின் திருவடிவைத் தெளிந்து அறியாமையால் காலங்கள் வீணாய் கழிந்தன. எம் சிவனான தலைவன் தன் சொருப நிலையினின்றும் பெயர்ந்து குருவாய் வந்து காட்டிக் காண்பான் அங்ஙனம் உண்மை அறிவே துணையாய்ப் பொருந்தி உணர்பவரிடம் பொருந்தி விளங்கும் தன்மை உடையவன் சிவன்.
1796. உயிர்களைப் பிணித்திருக்கும் வினைகள் அழிந்தபின்பு ஒளிமயமான சிவன் தானே அறிவான். தான் அறியாது இருந்தும் என் பக்குவத்தை என் குருநாதனான அவன் அறிவான். ஆனால் ஊனே உருகி உணர்வு மயமான பொருளை அறிந்தபின் இறைவன் தேனைப் போல் நோயைப் போக்கி இன்பத்தை வழங்குவான்.
1797. இவ்வுடம்பு தோன்றியபோதே ஒளியாயும் உயிர்ப்பாயும் இருக்கின்ற இறைவனை நான் அறிந்தே இருந்தேன். வான் மண்டலத்தில் வாழ்பவர்கள் இந்த உண்மையை அறியாமல் மயங்கி இருந்தனர். உடலின் உள்ளே உயிர்ப்பின் இய்க்கத்தை நடத்தும் ஒளிமிக்க கொழுந்தான் இறைவன் தான் அறியவில்லை என்றால் பின்பு யார் அறிந்து உதவ முடியும்.
1798. உல்கத்தார் அருளே எங்குமாக இருக்கின்றாது என்பதை அறியார். இறையருள் அறிபவர்க்கு அஃது அமுதம் போல் இனிமையைத் தரும் என்பதையும் உலகத்தார் எண்ணித் தெளியார். சத்தியே மிக நுட்பமாய்ப் படைப்புத் தொழில் முதலிய ஐந்தொழிலுக்கும் காரணமானது என்பதை நினைத்துப் பார்பதில்லை. அருட்சத்தியானது கண்ணாய் இருந்து எல்லாவற்றையும் ஒரு சேர கண்பதையும் உணரார்.
1799. அறிவின் உருவமான சிவத்திடம் பொருந்துவதற்கு ஏற்ற அறிவைத் தந்து கருவிகள் வழிப் புலன்களைப் பற்றும் ஆசையை உண்டாக்கி ஆன்ம அறிவுடனே திருவருளும் கலந்து கருவிகளுடன் பொருந்தாமல் கூடிப் புலனறிவு பெறும் தன்மையான் அறிவை அளித்து அடியவர் நடுவுள் இருக்கும் அருளை அளிக்கும் தன்மையுடையவர் சிவம் ஆயினர்.
1800. அருட் சத்தியால் பிறந்து வளர்ந்து அருளால் அழிந்து இளைப்பு நீங்கி மறைந்துள்ள அவனை ஒளிமயமான ஆனந்தம் அடையும்படி செய்து பின்பு அவன் தானே எழுந்தருளிக் குருமண்டலத்தை விளங்கச் செய்தான்.
1801. என் குருநாதன் தன் அருட்சத்தியால் இறப்பைக் தவிர்க்கும் ஒளி மண்டலத்தில் இட்டுத் திருவருட் சத்தியைப் பதிப்பித்து என்றும் ஒரேவிதமான அனபையும் அளித்து சிவபோகமாகிய அழுதையும் உண்ணச் செய்து அருளால் என் மனத்தில் எழுந்தருளினான்.
1802. அருள் என்னைப் பாசத்தில் பொருந்த்தி அனுபவிக்கச் செய்தது. அந்தப் பாசத்தினால் பற்றாகக் கொண்டுள்ள என்னை அதிலிருந்து வேறுபடுத்தியது, அந்த பாசத்தில் பற்று விட்டதும் அன்புப்பொருளான சிவத்துடன் கூடிய கூட்டத்தில் காட்சிப் பொருளுடன் பிரிவின்றி நிலைபெறச் செய்தது.
1803. பிறவிக்குக் காரணமான இருளைப் போக்கி ஒளியைத் தந்த பெருங்கருணை உடையவன், சிவனை இன்பத்துள் ஆழ்த்தி மறைக்காதபடி சத்தியை பதிப்பித்து மாதவன் உதவுவதால் குறையாத இயல்புடைய கடல் போன்ற கருணையாளன் மேலான பொருள்களுக்கு எல்லாம் மேலானவன். இத்தகைய இய்ல்புடை இறைவனை விரும்பினேன். இதனால் அவன் உறவாய் வந்து என் மனத்துள் புகுந்தான்.
1804. இறைவன் தன் அருளால் என் மனத்துள் புகுந்தான். அருள் இல்லாமல் இருளில் அழுந்தியிருப்பவர்க்கு மனம் புகுந்தாலும் அவரால் அறியப்படான். என் மனத்துள் புகுந்து ஆனந்த மயமாக்கிச் சிவமாகச் செய்தான். மனத்துள் புகுந்த காரணத்தால் நானும் ஆனந்த வடிவு பெற்றவன் ஆனேன்.
1805. ஆராயும் அறிவு மயமான ஆன்மாவுடன் அறியப்படாத மாமாயையும் மாயையின் காரியமான அந்தக் காரணங்களையும் ஐம்பூதங்களையும் இந்திரியக் கூட்டங்களையும் அவற்றுடன் பராசத்தி ஆதிசத்தி இச்சாசத்தி ஞானசத்தி கிரியாசத்தி ஆகிய ஐந்து சத்திகளையும் பொருந்தியது இறைவனின் திருவருட் செயல் ஆகும்.
1806. பூத காரியம் அனைத்தும் அருளால் நிகழ்வன. அவை மலக் குற்றத்தால் அசைவனவாகவும் அசையாதனவாகவு,ம் அருளில் நிலை பெற்றுள்ளன. இருள் எனவும் ஒளி எனவும் கூறுமாறு எங்கும் உள்ள இறைவன் தன் அருட்சத்தியே திருமேனியாகக் கொண்டு விளங்குவான். திருவருள் அன்றிச் சிவம் வேறாக இல்லை.
1807. சிவம் சத்தி மேலான விந்து நாதம், மேலான சதாசிவம் மகேசுவரன் உருத்திரன் பிறவியில் படும் திருமால், நான்முகன் ஈறாக ஒன்பது வேறுபட்ட வடிவங்களாய்ப் பிரிந்து ஏகனாய் ஒன்றியும் நடிப்பவன் சிவனே ஆவான்.
1808. குருட்டுத் தன்மையுடைய கண் உடையவர்க்குக் கதிரவன் முதலியவை விளங்க மாட்டா. தெளிந்த கண் உடையவர்க்குக் கதிரவன் ஒளியால் எங்கும் ஒளியாய்த் திகழும். அவை போன்று அருட்கண் என்ற பெயரையுடைய அரும் பொருளான சிவம் சத்தி விந்து நாதம் ஆகியவை தோன்றா. நெற்றிச் சக்கரம் திறந்தவர்க்குச் சிவன் தன் நான்கு அருவத் திருமேனிகளையும் உணர்ந்த்த முகத்தின் முன்பு தோன்றியருளுவான்.
1809. சிவத்தின் சத்தியே தனுகரண புவன போகங்களைப் படைக்கும். படைத்தவற்றைச் சத்தியே காக்கும். காத்தவற்றை அதுவே அழிக்கும். அழித்தவற்றை ஓய்வு தந்து அதுவே மறைக்கும். இவற்றுடன் கூடியவனே பரந்துள்ள பொருள்கள் யாவற்றுக்கும் மேலான தலைவனாக உள்ளான்.
1810. மேன்மையுடைய சிவம் சத்தி நாதம் விந்து என்னும் நான்கும் சிவத்துக்குரிய அருள் நிலையாகும். நீங்காத அருவுருவம் சதாசிவம் நிலை பெறுவதற்குரிய மகேசுவரம், அரன், அரி, நான்முகன், ஆகிய நான்கும் நீடிய உருநிலைகளாகும். அழியாத் இந்த ஒன்பதாயும் இவற்றைக் கடந்து நின்று இவை யாவற்றையும் இயக்குவதாயும் உள்ள பரமசிவம் ஒன்றேயாகும்.
1811. ஒப்பில்லாத தன்மையால் கேடற்ற சிவம் தானேயாக நிற்கின்றது. அதுபோல அவற்றின் உயிராக உயிர்களுடன் பொருந்தி அவற்றின் மனத்தே நேயப் பொருளான சிவம் துணை என்று கூறும்படி உடன் நின்று செலுத்தியது விளையாட்டே ஆகும்.
1812. அன்பினால் நிலை பெற்றுள்ள மலமற்ற சிவன் சத்தியுடன் கூடி அதனைத் தொழில்படச் செய்தான். அதனால் நாதம் தோன்றிய்து. விரிந்து நிவிருத்தி முதலாய் ஐந்து கலைகளைக் கூடி அழிவற்ற விந்துவாக விளயும்.
1813. எல்லாமாகப் பரவிப் பரவிந்து வடிவில் நிலைத்துள்ள சத்தியே அனைத்துத் தத்துவங்களிலும் நிறைந்து விளங்குகின்றாள் அவளிடமிருந்தே அசுத்த மாயையும் மேலான சுத்தமாயையும் விளைகின்றன. இந்த இரண்டு வகையான மாயையிலே தேவரும் விரிவாகக் கூறப்பட்ட பிரணவமும் அதன் வெவ்வேறான மந்திரங்களும் நான்கு வேதங்களும் எண்ணில்லாத அண்ட கோடிகளும் தோன்றும்.
#####
ஓம்நமசிவய!
தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
#####
சம்பிரதாயம்!
1778. குருவானவர் மாணவரின் உடல், பொருள், ஆவி மூன்றையும் நீருடன் சுத்தம் செய்ய ஏற்றுக்கொண்டு படர்ந்த வினையால் வரும் பற்றை அறுமாறு விழியால் பார்த்து மாணவனின் தலையில் கையை வைத்து திருவடி ஞானத்தை விளக்கி விரையக் கட்டினையுடைய பிறவியைப் போக்கியருளினான்.
1779. உயிரும் உடலும் ஒளிப்பொருளான வியப்புப் பொருந்திய பரமும் பொருந்திய பிராணனும் இவற்றை இயக்குகின்ற சிவமும் சத்தி முதலியவற்றை அறிந்து உய்யும்படி குருநாதன் ஆட்கொண்டனன்.
1780. மேற்குத் திக்கை ஒளிரச் செய்த குருநாதன் நாள்தோறும் என்னை இங்கு நினைப்பாயாக என்று உணர்த்திய அப்பொருள் உச்சிக்கு கீழேயும் உள்நாக்குக்கு மேலேயும் உள்ளது. இதுதான் மேலான பதமாகும். இதனை கையால் சொல்ல முடியாது.
1781. தான் விரும்பியபடியே எங்கும் அனுபவம் இல்லாது பிதற்றித் திரிந்து கொண்டிருந்த என்னை என்னிடம் உள்ள குற்றங்களை எல்லாம் அகற்றி பின் குருவான தன்னையும் மாணவனான என்னையும் சமமாகச் செய்தான். நாணயமாற்று வணிகம் முடிந்தது.
1782. இவ்வுலகத்தில் வாழும் பல உயிர்கட்கு எல்லாம் தலைவனான சிவன் உடனாய் இருக்கும் இயலபை இவ்வுலகத்தவர் சற்றும் அறியார். சுத்த மாயையின் மாறுபாட்டைப் போக்கி எல்லாவற்றையும் கருவாகக் கொண்ட சிவத்தை அறிந்து கொண்டேன்.
1783. வினைக்கு ஈடாய் உலகத்தை உய்விக்க வேண்டும் என்ற நினைவு கொண்டு தன் ஞான சத்தியால் விந்து நாதங்களான திருவடியை விரும்பிப் பதிப்பித்தும் பெருமை அற்ற உடலில் பற்றை ஒழித்து சிவம் சீவனில் கலந்து மறைந்து அவனே தானாய் விளங்கும்.
1784. எனக்கு பக்குவம் வந்தபோது அடிமையாய் ஏற்றுக்கொள்ள எண்ணியவன் எனது உயிர் பொருள் உடம்பின் கருவிக் கூட்டம் ஆகியவற்றை அவனுடையதாக்க் கொண்டான். வல்லமை யாவற்றையும் த்ந்தவனே எடுத்துக் கொள்வதால் என்னிடம் உள்ளவற்றை எடுத்துக் கொண்டான் எனச் சொல்வதற்கில்லை.
1785. குறியாக கொள்கின்ற உடலும் உடலை உடைய உயிரும் குடி நெறிப்பட இயங்கும் பிராணன் நிலைபெற்ற சிவன் இயமனால் நீக்கப்படும் உடம்பை எடுத்துக் கொண்டு இயல்பை உடம்புடன் கூடியிருக்கும்போதே அறிந்து பிரிக்க அறிந்து கொள்ளாதவர் பேயைப் போல அலைவர்,.
1786. சிவன் என்ற ஒளியை உணரும் இய்ல்பு உடையவர்க்கு எல்லா நுண்ணிய உலகங்களும் விளங்கும். அத்தகைய உணர்வு உடையவர் இந்த உலகத்தை அனுபவப் பொருளாய்க் காணாது சாட்சியாகக் காண்பதால் எத்தகைய துன்பமும் அவர்க்கு இல்லை. இவ்வாறு உணர்வு உடையவர்கள் தம்மையும் தலைவனையும் உணர்ந்தவர் ஆவார்.
1787. உடலது பரப்பில் அலந்து துரிய நிலையில் ஒளி மண்டலத்தில் மிக விரிந்து சிவத்துடன் பொருந்திக் குவிந்து சகல நிலையில் முப்பத்தாறு தத்துவங்களுடன் கூடியிருந்த அன்பர்க்கு தூய்மையான அருள் சத்தியை பதிப்பித்த சிவபெருமானை என்ன் சொல்லி வாழ்த்த முடியும்.
1788. நான் என்றும் நீ என்றும் நீ வந்து அடைதல் என்?றும் வேறாகப் பிரிந்து உணரக்கூடிய நிலை இல்லை. உடலும் உடலில் உள்ள உயிரும் போல் நாம் உடனிருக்கு வானத்தில் இறைவன் வேறாக இருப்பதாக எண்ணில் வான் மண்டலத்துள் வந்து பொருந்தி நின்று மனிதர் அனுபவிக்கின்ற இனபங்களைத் தேன்பொல் சுவைத்து அழுந்தியிருப்பர்.
1789. சிவனைத் துவைத பாவனையில் வணங்கும் சரியை கிரியை வழிநிற்பவர் அவ் இறைவனை அறிய மாட்டார். காணப்படுபவனைக் காண்பவன் அறிந்தால் அது இரு பொருளாக இல்லாமல் ஒரே பொருளாகக் காண்பவனும் காட்சியும் ஒன்றாக ஓடும். இவ்வாறு சரியை வழியில் நிற்பவனும் ஒன்றாய் உணரின் காணப்படும் பொருளான சிவனும் காண்பவ்னும் ஒன்றாகச் சீவன் சிவமாய் விடும்.
1790. தான் இந்தச் சிவனே என்று எண்ணுபவனான சீவன் உடலால் இதனைத் தான் எனவே எப்போதும் நினைக்கும் உயிர்போல் உளன். அவன் வானில் பரவும் பெரிய மேகத்தைப் போல் அருள் காட்டுபவ்னாக இருக்கின்றான். அதனால் நான் வான் தலைவனாக ஆனேன்.
1791. பெருந்தனமை உடைய தான் என்ற சிவனும் யான் என்ற சீவனும் வேறாக ஒரு சமயத்தில் இருக்கவில்லை. அத்தன்மையை இறைவன் இயல்பாகவே அறிகின்றான். உண்மையாகவே உயிர்களைத் திருத்தம் எய்தச் செய்யும் சிவன் தம்மை உடல் உயிர்போல் பிரிவில்லாமல் பொருந்தியிருப்பான்.
#####
ஓம்நமசிவய!
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
#####
சிவலிங்கம்!
1773. ஒலிக்கும் கடலால் சூழப்பட்ட உலகம், நீர், வீசும் காற்று, காற்றினிறு தோன்றும் தீ என்னும் இந்த நான்கும் தத்தம் நிலையும் முறையே மாறாமல், ஒழுங்கு பெற நிலைத்திருப்பதற்குரிய வானமும் ஆகப் பரந்து விரிந்து விளங்குபவன் சிவன். அவனை ஒரு குறியில் வைத்து வணங்கும் முறையை யான் அறியேன்.
1774. எவ்விடத்தும் பரவி விளங்கும் இறைவனை ஓர் எல்லைக்குட்படுத்தி வணங்கும் ஓரு முறை உண்டு. பொங்கி வருகின்ற உணர்வான நீரையுடைய சுவதிட்டானமான மலரை ஏத்தி அவனது திருப்பெயரை நினைந்து உணர்பவர்களுக்கு சிவன் எங்கும் துளை செய்து கொண்டு போகமாட்டான்.
1775. எம் இறைவனை உலக முதல்வனாய் நான் கண்டேன். நான் அப்பெருமானின் திருவடிகளை நன்மை தருவன என்று அறிந்து தொழ ஐம்பொறிகளின் வழி அறிவு செல்லாமல் அவற்றைக் கடந்து சிவத்துடன் பொருந்தி இன்பம் அடைய அப்போது ஆதிப்பிரானான சிவன் தனது திருவருள் சத்தியைப் பதிப்பிப்பான்.
1776. நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன், பலத்தை அளிக்கும் சதாசிவன், பரநாதம், நன்மையைத் தருகின்ற சத்தி சிவன் என்ற வடிவமாய் பயன்களைத் தருகின்ற இலிங்கமே மேலான சிவமாகும்.
1777. மூலாதாரத்தினின்று நடு நாடி வழியாய் போகின்ற செவ்வொளியுடன் கூடி ஆவி எழுகின்றவரை உடலில் உள்ள ஆதார கலைகளிலும் உடலை விட்டு நீங்கிய நிராதாரக் கலைகளிலும் பொருந்துவதும் நீங்குவதுமாய் உள்ளத்தை நிறுத்திப் பழகுவதில் மேன்மையான சிவசக்தியானது உண்டாகும்.
#####
ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#####
ஞானலிங்கம்!
1763. சிவன் உருவம் அருவம் அருவுருவம் என மூன்று வகையான திருமேனியைக் கொண்டவன். நிலைபெற்ற பல உயிர்க்குக் குருவாகும் தன்மையுடையவன். அவனே சதாசிவமாய்க் கற்பக மரம் போல் வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை அளிப்பவன் ஆவான்.
1764 சதாசிவத்திற்குக் கீழ் உள்ள நானமுகன், திருமல், உருத்திரன், மகேசுவரன் ஆகிய நால்வரும் உருவம் உடையவர்கள். மெலே உள்ள நாதம் விந்து சத்தி சிவம் ஆகிய நால்வரும் அருவம் உடையவர்கள். நான்கில் நடுவே உள்ள சதாசிவம் அருவுருவமாய் உள்ளதால் இவ்வொன்பது வகையும் பரமசிவமே ஆகும்..
1765. தேவர் எல்லோர்க்கும் நாதனும் நான்கு திசைகளிலும் முகமுடையவனும் உருவ மூர்த்திகள் நால்வரையும் செலுத்துபவனும் உருவுக்கும் அருவத்துக்கும் இடையே உள்ள அருவுருவமான சதாசிவத்தை யார் பெருமான் என்று வணங்குகின்றாரோ அங்குப் பிரளயமாகிய சதாசிவம் தோன்றுவார். அப்படி அவரது திருவடியை அடையவும் கூடும்.
1766. ஆண்டு, திங்கள், நாள் என்ப்னவற்றைச் செய்கின்ற சிவக்கதிரவனான சதாசிவத்துடன் சத்தியை வழிபடினும், இருவரையும் வெவ்வேறாக எண்ணிடாது ஒருவராய் எண்ணித் தியானித்தாலும் பயன் ஒன்றேதான். ஆதலால் வினை நீங்க இவ்வாறு வணங்கினேன்.
1767. ஆதி பரம் பொருளான சதாசிவமே அவரவர் மண்டலத்தில் விளங்குவர்.. அவர் சோதியாக அடியவர் வணங்கும் பெருந் தெய்வமாகும். ஒவ்வொருவரின் அண்டா காயத்தில் நீதி வடிவாய் விளங்கும் பெருமை கொண்ட இறைவனாகும். அவர் எவரது உடலை இடமாகக் கொள்ளினும் மலம் அற்றவர் இத்தகைய என் இறையின் ஒரு பாதியில் பராசத்தி திகழ்கிறாள்.
1768. சத்திக்கு மேலே விளங்கும் பராசத்தி அண்ட கோச வெளியில் விளங்கும் வகையில் தூய்மையான சிவபதம் இங்கு ஏனைய தத்துவங்களில் தோய்வின்றி விளங்கும் வெளி உள்ளது அத்தன்மையுடையதாய் இறைவன் திருவடி விளங்கும். இவ்வெளிக்கு அப்பாலுக்கு அப்பாலாயும் ஒத்ததாயும் இருக்கும் சிவத்தின் உண்மையான நிலை.
1769. ஞானலிங்கம் என்ற ஒளி மயமான சதாசிவனை அறிந்தால் உலகம் எல்லாம் அங்கு நுண்மையாய் விளா\ங்குவது தெரியும். வல்லமை இருக்குமாயின் அழியாமல் இவ்வுலகில் இருத்தலும் கைகூடும். தத்துவங்களை விட்ட ஆன்மாவை உறுதியாய் பற்றின் சத்தி வடிவில் அமைந்த சிவம் சிந்தையிலே விளங்கும்.
1770. எம் தந்தையான சதாசிவத்தையும் என் அம்மையாகிய பிரணவ சத்திகளின் கூட்டத்தையும் முதன்மையாய்க் கருதி முறையாய் உணர்தலே ஞானமாகும். அவை பொருந்தியிருந்த புருவ நடுவில் விளங்குகின்ற விசாலாட்சியை இறைவன் உயர்ந்த இடத்தில் வைத்து விருப்புடன் விளங்கினன்.
1771. சத்தி சிவத்துடன் விளங்கும் தகுதிக்கு ஏற்ப உயிரின் நிலை விளங்கச் செய்து அதற்கேற்பச் சுத்தமாயை அசுத்த மாயை என்னும் கூட்டத்தில் சேர்ந்து உயிர் பக்குவம் ஆனபோது சுத்த மாயையில் விளங்கும் ஒளி மண்டலத்தை உணர்த்தி அதைக் கடக்கும்படி செய்து சீவனின் சித்தத்திலே சிவம் தங்கிச் சீவனை சிவம் உறையும் கோயிலாக ஆக்கும்.
1772. இவ்வுலகம் சிவசத்தியின் விளையாட்டாகும். வடிவம் உடைய அறிவான சிவமாகும். அறிவான சிவன் வடிவான சத்தியும் ஆகும். சத்தி சிவம் இல்லாமல் உடலுடைய உயிர்கள் ஒன்றும் நிலையில்லை. சத்தியே தேவைபட்டபோது சமைத்து எக்காலத்தும் வடிவம் பெறும்.
#####
ஓம்நமசிவய!
அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
#####
ஆத்துமலிங்கம்!
1753. அகாரமாகிய சிவம் எல்லாவற்றுக்கும் முதலாய் எல்லாவற்றுடன் கலந்தும் விளங்கும். உகாரமாகிய சத்தி யாவற்றுக்கும் முதலாய் அவை உயிர் பெற்று நிற்க உதவும். இங்ஙனம் அகரம் சிவம் என்றும் உகரம் சத்தி என்றும் அறிந்தால் அகர உகரங்களே சிவலிங்கம் என்பது தெரிய வரும்.
1754. அண்ட கோளத்தில் வடிவமான படைப்புக் காரணமாயும் அதனுள் நிலைத்ததாயும் உள்ள விந்துவும் மேதை முதலிய சோடச கலைகள் ஆகிய நாதமும் அடுக்கு அடுக்காக விரிந்தன. ஆதாரமான விந்து உயர்ந்த இடமாகக் கொண்டு நிலை பெற்றுள்ளது. இவ்வகையாக உயர்ந்து செல்வதில் விந்து நாதங்களின் புணர்ச்சி உள்ளது.
1755. இயங்க இயலாத மலை, நிலம், செடி, முதலியவை சத்திசிவ சேர்க்கையாம். அசையும் இயல்புடைய உயிர்ப் பொருள்களும் சத்தி சிவ சேர்க்கையாம். அறிவான வான மண்டல நாதனான சதாசிவமும் சத்தி சிவப் புணர்ச்சியாம். திருக்கோவிலில் உள்ள தாவரங்களும் சத்தி சிவப் புணர்ச்சியாம்.
1756. சிவசத்தி வடிவான ஆத்தும லிங்கத்தில் அழகான பேரொளியைக் காணலாம். வான் கூற்றில் ஐம்பது எழுத்துக்களும் தோன்றும் இடம் அதுவே ஆகும். சகசிர தளத்தில் பொருந்தி விளங்கும் பேரொளியில் சத்தியுடன் அகர வாச்சியப் பொருளான சிவமும் அழகோடு கலந்து விளங்கும்.
1757. ஆத்மாவிடம் பொருந்திய விந்துவும் நாதமும் ஆன்மலிங்கம் ஆகும், இந்த விந்துவே நாதத்துக்கு இடமாய் இவ்விரண்டும் பொருந்தி ஆன்ம லிங்கமாகும். இந்த இரண்டையும் ஆதாராமாய்க் கொண்டே நான்முகன் முதலிய மூவரும் படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் செய்கின்றனர்.
1758. நல்ல ஆன்ம தத்துவமே சத்திக்குப் பீடம். வித்தியாதத்துவம் சத்திக்கு நல்ல கண்டம் பொருந்தும் சிவதத்துவம். சத்திக்கு நல்ல இலிங்கமாக விளங்கும். வானக் கூறான சதாசிவம் தத்துவமே நல்ல சத்தி மண்டலம்.
1759. சிவன் என் உள்ளத்துள் புகுந்து எனது உயிர் நிலை பெறும் வாழ்வில் மனத்துள் பேரின்பம் சுரக்கும் காலத்து நன்மை பெருக நான் என்னையும் நாதனையும் நாடும்போது என் தலையின் உச்சியில் விளங்கி அவன் ஆட்கொள்வான்.
1760. மேலானவற்றுள் மேலானவனும் என் தந்தை போன்றவனும் குளிர்ந்தபிறை சூடியவனும் அடியார் மனதில் கோவில் கொண்டு விளங்குபவனும் தேவர்கள் தலையினுள் ஒளீமயமாக விளங்கும் குண்டலியான தலைவனும் ஆன சிவம் என் உள்ளத்துள் நீங்காமல் எழுந்தருள்வான்.
1761. பசுவின் தன்மை கொண்ட் என் உள்ளத்தை கோயிலாய்க் கொண்டவன் பாம்பு அணிந்த சடையை உடையவன் அக்கினி நீர் பொருந்தப் பெற்றவன் செய்யும் புண்ணியம் அனைத்துமானவன் இத்தகைய இயல்புடைய இறைவன் தலைவன் அல்லன். நானே தலைவன் எனக் கூறுபவர் அறியாமை உடையவர்.
1762. தேவர்கள் சிவபெருமான் அங்கு நின்றான். இங்கு கிடந்தான் என்று எட்டு திக்குகளிலும் சென்று வணங்குவார்கள். அவன் என் உயிர்க்கு உயிராய் என் மனத்தில் பொருந்தி நின்றான். அத்தகைய எம் தலைவன் என்றும் வணங்கிக் கொண்டிருப்பேன்.
#####
ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#####
சதாசிவ லிங்கம்!
1730. திருவருளுடன் கூடிய இரு திருவடிகள் பூமிக்கு மேலாக புகழ்ந்து பேசப்படும் பத்துக் கைகள் திசைகள் எல்லாம் பரவி எழுவதாக எங்கும் பார்க்கும் முகங்கள் ஐந்தாக சிவந்த கண்கள் பதினைந்தாக நல்ல ஒளியையுடைய் முத்தின் நி’றத்துடன் குடிய சதாசிவத்தைத் துதிப்பீராக.
1731. நான்முகன் திருமால் உருத்திரன் இவர்கட்கு மேலான மகேசன் இவர்களுக்கு மேலான ஐந்து முகங்களையுடைய சதாசிவம் விந்து நாதம் ஆதார சத்தியான குண்டலினி முடிவாக உள்ள சிவன் என்னும் யாவும் பொதுவாக சதாசிவம் எனப்படும்.
1732. சதாசிவம் என்னும் சத்தியிடம் நிவிருத்தி பிரட்டை,, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை ஆகிய கலைகள் இடம் பெறும். இந்த ஐந்து கலைகள் சார்பாக சிவசூரியன் எழும். அதன் ஒளிக்கதிர் உள்ளும் புறமும் சூழ அண்ட கோசம் நிறைந்து விளங்கும். அந்த ஓளியில் எட்டுத் திக்குகளும் மேல் கீழ் என்ற இரு திசைகளும் பொருந்தி ஒரே ஒளிமயமாய் விளங்கும்.
1733. பத்துத் திக்குகளுடன் கூடியது அண்ட கோசம். அதில் சிட்சை, கற்பகம், வியாகரணம், சந்தோபிசிதம், நிருத்தம், சோதிடம் என்னும் ஆறு சாத்திர அறிவும் உளது. அங்கு இருக்கும் யசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களீன் அறிவும் உண்டு. அங்குப் பொருந்திய சரியை முதலிய மார்க்கங்களுடன் சமய அறிவும் உண்டு.
1734. சமய்த்தில் கீழ் அவத்தைகள் ஐந்து மேல் அவத்தைகள் ஐந்து உண்டு. சமயத்தில் கதிரவனின் பன்னிரண்டு இராசிகளும் உண்டு. சமய்த்தில் பெருமை உடைய சந்திரகலை பதினாறும் சொல்லப்பட்டிருக்கின்றது. அதில் காண்ப்படும் உருவத்துக்கும் காண்ப்படாத அருவத்துக்கும் இடையே சதாசிவ நிலை இருக்கும்.
1735. சதாசிவப் பெருமானுக்கு உச்சி, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்குப் பக்கம் உள்ள முகங்கள், உச்சிமுதல் முறையே வெண்பளிங்கு போன்றும் செவ்வரத்த மலரைப் போன்றும் பால் போன்றும் உள்ள இவ்வைந்து முகங்களும் எனக்கு அருள் செய்தன.
1736. சதாசிவத்திற்கு ஈசானம் முதலிய் ஐந்து முகங்கள். கண்கள் பதினைந்து, கைகள் பத்து. அவற்றில் பத்து வகைப் படைகள். இத்தகைய சதாசிவம் என் மனத்துள் புகுந்து நிறைந்து விளங்குகின்றான்.
1737. சிவசத்தி பூமியாகும். சதாசிவம் வானக் கூறாய்ப் பூமிக்கு மேலும் கீழும் பரவியுள்ள அண்ட கோள்களாகும். சத்தியும் சிவமும் மிக்குள்ள நிலைப் பெருளும் இயங்கும் பொருள் யாவும் சத்தி வடிவம். சதாசிவம் அருவம் ஆகும். இவ்வா/று சத்தியும் சிவமும் பொருந்திய தத்துவங்கள் முப்பத்தாறு ஆகும்.
1738. தத்துவம் என்பது அருவம் ஆகும். அது சரம் அசரமாய் விரிந்து நிற்கும் போது உருவம் ஆகும். உருவமாய் விரிந்தபோது சுகத்தின் விளக்கம் ஆகும். இவை அனைத்தும் எல்லாமாக விளங்கும் தத்துவம் எனப்படுவது சதாசிவமே.
1739. உள்ளத்தில் பொருந்திய சதாசிவமானவனைத் துதியுங்கள். வேறு வகையாகக் கூறும் நூல்களால் அறியப்படாமல் கடந்து விளங்குவான். தாம் மேல் ஏறுவதற்காகப் புகழும் தேவருடன் மாறுபட்டு நிற்பான். அத்தகைய இயல்புடையவன் என் மனத்தில் புகுந்து விள்ங்கினான்.
1740. கரிய நிறக் கழுத்தும், வலக்கையில் கொண்ட மழு என்ற ஆயுதமும் சுருண்ட சடையில் ஒளிரும் பிறைச்சந்திரனும் அருள் பொழியும் சிந்தையுடைய எம் ஆதியாகிய சதாசிவத்தை தெளிவுடைய என் உள்ளத்தில் தெளிந்திருந்தேன்.
1741. சீவர்களுக்கு அருள் செய்வதற்காகச் சத்தி நிற்கும் ஐந்து முகங்களைப் பற்றிக் கூறினால் வடதிசை நோக்கிய வாமதேவ முகம் சிறந்தது. இது சொல் இல்லாதது. மௌனமாக விளங்கும். கிழக்கு நோக்கிய தத்புருடமுகம் உடலில் உள்ள தத்துவங்களை இயக்குவது. சிரத்தைப் போன்றது. தெற்கு நோக்கிய அகோரம் தலையின் முடியில் வடகீழ்த்திசை நோக்கி விளங்குவது ஈசான முகம்.
1742. நாண் போனற ஈசானத்தைத் தலையின் நடுவில் சுட்ட வேண்டும். நாணுவின் தற்புருடத்தை முகத்தில் சுட்ட வேண்டும். காணும் அகோரத்தை இதயத்தில் சுட்ட வேண்டும். மாட்சிமையுடைய வாமத்தைக் குறியில் பொருந்த்த வேண்டும். சத்தியோசத்தை நல்ல அடிகளில் பதிக்க வேண்டும்.
1743. இதயம். தலை, முடி, கவசம், கண் ஆகியவை அங்கங்களாகும். இவற்றைக் குறிக்கின்ற மந்திரங்கள் வஞ்சனையற்ற சீவர்களுக்கு அறிவு விளக்கம் தரும். சுத்த மாயை, இவற்றின் நிறம் பச்சை, உடல் எல்லாம் ஒளி மயமானபோது சிவந்த ஒளியில் குண்டலினி சத்தி மின் ஒளிபோன்று விளங்குவாள். சதாசிவத்திடம் உள்ள பத்துப் படைக்கருவிகளும் உதய் சூரியனைப் போன்று ஒளி மயமாய் விளங்கும்.,
1744. இருதய மந்திரம் இறைவனுக்கு ஞான சத்தியாகும். சிரசு மந்திரம் வானத்தில் விளங்கும் பராசக்தி யாகும்.. சிகா மந்திரம் ஆதி சத்தியாம். அழகுடைய கவச மந்திரம் பல நிறங்களையுடைய இச்சா சத்தியாகும். நேத்திரம் கிரியா சத்தியாம்.
1745. குண்டலினி சக்தி நாற்கோண்மான மூலாதாரத்தில் உள்ளபோது சலதாரையை நோக்கியதாக உள்ளது. குண்டலினி கழுத்தை அடைந்தபோது உறக்க நிலை ஏற்படும். அது நெற்றியை அடைந்தபோது நீரோட்டம் போன்ற உணர்வாய் விளங்கும். இப்படி ஓலி வடிவாய் விளங்கும் சத்தி வடிவே சதாசிவம்.
1746. பெருமையுடைய சதாசிவத்தை எவ்வ்வளவு நேரம் தொழுதாலும் அவர் பஞசப் பிரம்மாகவே விளங்குவார். அவர் மூலவாயுவாய் எழுந்து ஆதாரங்கலை எல்லாம் கடந்து ஊர்த்துவ சக்கர தளத்தின் மீது சென்றபோது ஒன்பது நிலைக்ளிலும் பொருந்தி விளங்குவார்.
1747. உடம்பின் உள்ளும் அதைக் கடந்தும் உயிருடன் உடனாய்ப் பொருந்தியிருப்பது எப்போதும் எம் இறைவனுக்கு இயல்பு ஆகும். அந்த உணர்வு உண்டான போது சிவனின் திருவடியான சூரிய சந்திர கலையில் திருந்தித் தலைக்குமேல் செல்ல என் உள்ளத்துள் தியானித்து நின்று தொழுதேன்.
1748. உலகு முழுவதும் ஒளிப் பொருளானாய் விளங்கும் பரசிவத்தை அவன் அருளால் உணர்ந்தேன். அப்பொருமானைச் சீவர்களாகிய நாம் உய்யும் படி பூமி தத்துவத்திற்கும் கொண்டு வந்தேன். எனது மனம் என்ற கோவிலில் புனிதனான இறைவனைக் கூடினேன். அத்தூயமையே உருவாய் உள்ளவன் நாத வடிவாய்க் காட்சி தந்தான். சிவக்கதிரவனைப் பாட்டால் நான் பணிய அவன் ஒளியால் என்னுடன் கூடியிருந்தான்.
1749. அக்கினி மண்டலம் கதிரவன் மண்டலம் திங்கள் மண்டலம் என்பனவற்றுள் அக்கினி ஒளியுண்டாக ஒன்பது பேதத்தில் நடுவில் உள்ள சதாசிவம் பதினான்கு உலகங்களையும் தாங்கி நிற்கும். அந்தச் சதாசிவமே ஆதியாகவும் அந்தமாகவும் உடலில் சந்திர மண்டலம் விளங்க உதவும்.
1750. இயங்கும் ஒளியின் உடம்பு சிவலிங்கமாய்த் திகழும். அந்த உடம்பே சதாசிவமாய் அமையும். அந்த உடம்பே சதாசிவம் பொருந்திய சிவானந்த நிலையாகும். அந்த உடம்பே எல்லாவற்றுக்கும் மேலான சிவமாகும்.
1751. மேதா கலையான அகரத்தை சிவம் என்று எவரும் அறியமாட்டார்.. உகாரத்தால் குறிக்கப்படும் சத்தி எல்லாப் பொருளிடத்தும் கலந்து நிற்கும். இத்தகைய சிவமும் சத்தியும் பொருந்தி உலகமாய் இச்சிவசத்தி தலையைத் தாண்டியபோது நாத ஒலி ஏற்படுமாறு செய்தது.
1752. சதாசிவ லிங்கத்துக்கு பீடம் ஓங்காரம். இலிங்கத்தின் நல்ல கண்டம் மகாரம்.. இலிங்கத்தின் வட்டமாகிய பகுதி உகாரம். சிவலிங்கத்தின் மேற்பகுதி அகாரம். விந்து, நாதம் ஆகும்.
#####
ஓம்நமசிவய!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
#####
அண்டலிங்கம்!
1712. உலகத்திற்கு காரணமான இலிங்கம் என்னும் பெயரை உடைய சிவத்தை யாரும் அறியார். எட்டுத்திக்கிலும் பரவியிருப்பது உலக லிங்கமே ஆகும். அறுபத்து நான்கு கலைகளையுடைய பிரண்வமும் இலிங்கமாகும். உலகம் முழுவதும் காரண நிலையில் சிவத்திடம் உள்ளதால் அதுவே சிவஇலிங்கம் என்ற வடிவம் ஆகும்.
1713. உலகத்தை படைக்க எண்ணிய சதாசிவம் தன்னை விட்டு நீங்காத சத்தியின் துணைக் கொண்டு இவ்வுலகத்தை தோற்றுவித்தான். குண்டலினி சத்தியின் ஆற்றலால் உலகு வடிவாய்க் காட்சி தருகின்றது. சிவசக்தியால் அவை உலகில் வேறு வேறு அறிவு பொருந்தியவாய் விளங்கும்.
1714. போகத்தையும் வீடு பேற்றையும் அதற்உரிய ஞானத்தையும் அதன் பயனான இன்பத்தையும் உடலையும் நிலம் முதலிய முப்பதாறு தத்துவங்களையும் கடந்து ஒன்றாக நிற்கும் நிலையையும் அருள்பவன் சதாசிவன். ஆகமங்க?ளால் உணர்த்தப் பெற்ற ஆறு அத்துவா மூர்த்தி சிவமே ஆகும்.
1715. எண்ணில்லாத தேவர்கள் என் இறைவனை வழிபட்டனர். நறுமணத்தை தாங்கி வரும் தென்றலைப் போன்ற வள்ளல் என்று வாழ்த்தினர். மகிழ்வுடன் ஆரவாரம் செய்தனர். ஆயினும் அவன் அண்டங்களைக் கடந்து நின்று காக்கின்/றான் என்ற உண்மையை அவர் அறியார்.
1716. ஒளிமிக்க சுடரான தீயும் நான்முகனும் திருமாலும் தேவகுருவும் ஒளிவடிவான கதிரவனுடன் இந்திரனும் ஆகிய இவர்களிடம் கண்ணின் ஒளிபோல் கலந்து நின்றும் மற்றத் தேவர்களிடம் உணர்வைப் பெருக்கும் சந்திர ஒளிபோலும் எல்லா இடங்களிலும் சிவம் நீக்கம் இல்லாது நிறைந்து விளங்கும்.
1717. சிவபெருமான் ஸ்தாபித்த இலிங்கத்துள் நின்றும் அருள் வல்லவன். அப்பெருமான் மேன்மையுடைய ஞானாகாயத்துடன் உள்ளவன் என்று எண்ணி வழிபடுபவர் இலர். ஞானாகாயத்துள் இருக்கின்றான் என்பதை அறிந்து வழிபடுபவர்க்கு ஆறு ஆதாரத்திலும் விளங்கும் குண்டலினியாய் அவன் விளங்குவான்.
1718. மிகவும் சிறந்த சிவாலாயத்தைப் பற்றி அறிந்து கொள்பவர்க்கு கருவறையின் மேல் விளங்கும் விமானமே பருலிங்கம். அதனுள் உள்ள சிவலிங்கம் நுண்மையுடைய லிங்கமாகும். இலிங்கத்திற்கு முன் உள்ள பலிபீடமே பத்திரலிங்கம்.
1719. முத்துடன், மாணிக்கமும், பவளமும் செதுக்கப்பட்ட மரக்கொம்பு கல் திருநீறு, மரகதம், சிவாகமம், சாதம், அரிசி என்பன்வையும், மலர், மணல் என்பவையும் சிவலிங்கம் அமைத்தற்குரியவையாகும்.
1720. இறுகிய தயிர், தூய நெய், பால், பசுஞ்சாணம், விளக்கிய செம்பு, அக்கினி, பாதரசம், சலம், நன்கு வெந்த செங்கல், அழகிய இலவம், பொன் என்பனவற்றால் அழகு விளங்கும் சிவலிங்கமாகக் கொள்க.
1721. வளமையுடைய படிகலிங்கம் அந்தணர் பூசை செய்யத் தக்கது. பொன்னால் ஆன் லிங்கம் மன்னர் பூசிக்கத் தக்கது. மரகதலிங்கம் குறைவற்ற வருவாயை உடைய வாணிகர் வழிபடுதற்குரியது. தொண்டு நெறியையுடைய வேளான் தொழில் உடையவர் வழிபடற்கு வாணலிங்கம் உரியது.
1722. சிவனை இலங்கத் திருமேனியில் உணர்ந்தவன் அப்பெருமானின் எங்கும் கலந்துள்ள தன்மையை ஆராய்ந்து எவ்வகையாலும் உணரமுடியாது நின்ற இறைவன், உண்மை அறிவால் மண், நீர், தீ, காற்று, வான், கதிரவன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டிலும் கலந்திருப்பதை உணர்ந்தபோது என் உடலைக் கோயிலாக கொண்டு விளங்கினான்.
1723. முன்பு ஈட்டிய பாவங்களை நீக்குபவன் அனைத்தும் ஒடுங்குவதற்கு இடமாய் நின்ற புண்னியன். இத்தகைய சிவமே அகன்ற பிரபஞ்சமாய் அவற்றுள் மற்றவர் அறியாமல் கலந்திருக்கும் அவனை நாடியவர்க்கு அழியும் உடலுள் ஒளி செய்யும் பொருட்டு இடமாக கொண்டிருப்பவன் ஆவான்.
1724. ஆறு ஆதாரமாலையை அணிந்திருக்கும் திருவடி நிலம் ஆகும். ஒளியுடைய கங்கையாற்றை அணிந்த திருமுடி வானம் ஆகும், இவன் யாவற்றுள்ளும் கலந்திருக்கும் முறையில் அவனது உடம்பு வானமானது. இதுதான் ஆதிபகவானான சிவம். அண்டத்தை திருமேனியாகக் கொண்டு விளங்கும் தன்மையாகும்.
1725. நிலமாய் உள்ள சத்தி பீடத்தின் மீது விளங்கும் இலிங்கம் வானை அலாவி நிற்கும். அலை வீசும் கடலே திருமஞ்சன சாலையாகும். மலைமீது விளங்கும் மேகமே திருமஞ்சன நீராகும். வானத்தின் சிறு ஒளியாய் ஒளிரும் விண்மீன்களே அண்டலிங்கத்துக்குரிய மாலையாகும். அளவிடுதற்கு அரிய சிவத்துக்கு ஆடை எட்டுத் திசைகள் ஆகும்.
####
பிண்டலிங்கம்!
1726. மக்கள் உடலின் வடிவமே சிவலிங்க, ஆகும். மனித உடலும் உடலைச் சூழ்ந்துள்ள பகுதியும் அறிவாலயம். மக்கள் உடல் சதாசிவத்தின் வடிவத் திருமேனி. மக்கள் உடலில் உள்ள அசைவு எல்லாம் கூத்தப் பிரானின் கூத்தே ஆகும்.
1727. ஒன்று கூடும் முறையில் நிலம், நீரிலும், நீர் தீயிலும், தீ காற்றிலும், காற்று வானத்திலும் ஒடுங்கித் தூயமை பெற அப்படியே பூதங்களுக்கு காரணமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து தன் மாத்திரைகளும் ஒடுங்கும்படி வன்மையை அருளும் ஐம்பூதத் தலைவன் சிவத்தை வணங்குங்கள். அவ்வாறு செய்யின் உடல் அழிந்தாலும் அழியாது மேலும் நுண்ணுடலில் நிலைபெற்று விளங்கும்.
1728. உடம்பு உண்டான போதே உடலுள் குடி புகுந்த ஐபூதத் தலைவர்களும் அவரவர் தொழிற்படும் நுழைவாயில் நின்று உயிருக்கு வேண்டிய அறிவை அளித்தருள்வர். அன்னை வீட்டில் புகுவது போல் விருப்பமுடன் தலைவன் என் உள்ளத்தில் புகவும் அந்த வாயில்களைத் தன்னுடையதாக்கிக் கொண்டு சிவம் ஆண்டருளினான்.
1729. பெருமையுடைய இறைவன் இவ்வுடலை அவன் விளங்குவதற்கு ஏற்ற கோயிலாகக் கொண்டான்,. நான்கு இதழ்களையுடைய மூலாதாரச் சக்கரத்தை இடமாய்க் கொண்டான். இவ்வுடலின் பத்து நாடிகளின் செயல்களையும் தான் ஏற்றுக் கொண்டான். புலன்கள் செயல் படாதவாறு வென்று வாயில் கொண்டான்.
#####
ஏழாம் தந்திரம்!
ஓம்நமசிவய!
ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!
####
ஆறு ஆதாரம்!
1704. நான்கு இதழ் தாமரை வடிவான மூலாதாரம், ஆறு இதழ் தாமரை வடிவான சுவதிட்டானம், பத்து இதழ் தாமரை வடிவமான மணிபூரகம், பன்னிரண்டு இதழ் தாமரை வடிவமான அநாதகம், இவற்றுக்குமேல் இருக்கும் பதினாறு இதழ்தாமரை வடிவான விசுத்தி என்ற இந்த ஐந்து ஆதாரங்களையும் தரிசித்தபின் இரண்டு இதழ் தாமரை வடிவான ஆஞ்ஞையில் பழம் பொருளாகிய சிவத்தின் திருவடியைக் காணலாம்.
1705. நாத தத்துவத்தில் பன்னிரு கலைகளுடன் கூடியது சூரிய மண்டலம். மேதை முதலிய பதினாறு கலைகளுடன் கூடியது சந்திரமண்டலம். மேதை முதலான கலைகளில் நாதாந்தத்திற்கு மேல் விளங்குபவள் பராசக்தி. அறிவான பிரசாத நெறியில் வேற்றுமை இல்லாத அறிவால் சென்றால் மேதை முதலான ஆதாரம் கடந்த நிலையில் சிவன் விளங்குவான்.
1706. பிரசாத நெறியில் நின்று மேல் கீழ் என்ற பாகுபாட்டைக் கடந்து ஒரே ஒளியாய் காணும்போது அவனே தான் ஆன இறைமைக் குணங்கள் ஆறும் எங்கும் பரவிய பரம்பொரூள் கார்மேகம் தங்கும் கற்பக மரத்தைப்போன்று அருள் பொழிவான்.
1707. ஆறு ஆதாரங்களைத் தூய்மை செய்வதால் நாடி தூய்மை அடையும். மேலும் மேதை முதலாக உள்ள பதினாறு கலைகளின் முடிவில் வானத்தின் ஒளி ஏற்படும். அறிவாலயமான சாதகனின் ஆன்மாவில் வெளி நோக்குடைய ஐம்பொறிகள் அந்தக்கரணங்கள், புத்தி என்பன அவற்றின் கீழே இழுக்கின்ற இயல்பை விட்டு நிற்கும். இவ்வாறு நிற்பது சகமார்க்கம்- தோழமை நெரீயாகும்.
1708. மேதை முதலிய பதினாறு கலைகளில் பிரணவ தியானத்தில் நின்று தூண்டினால் குண்டலினி சத்தி முறையே மூலாதாரம் முதலிய இடங்களிலிருந்து மேலே சென்று அத்துவாவை உண்டாக்கும்.. வீரியத்தை இடமாகக் கொண்ட கலையை மடை மாற்றி மேலே ஏறச் செய்யின் ஆறு ஆதாரங்களிலும் ஒளி பெருகும் உடலில் இன்பம் விளையும்.
1709. ஆறு ஆதாரங்களை உடைய உடம்பில் மேலே கூறிய வண்ணம் அந்த அறு ஆதாரங்களை அறிந்து தியானம் செய்து மேல் ஏறுங்கள். அந்த ஆதாரங்களில் அமைக்கப்பட்ட எழுத்துக்கள் ஐம்பதையும் கடந்தபோது பொருந்திய ஆதாரமாக உள்ள ஓர் எழுத்து நாதமயம்னான ஓம் என்ற பிரணவம்.
1710. பருமையான உடலும் பிரிகின்ற அவ்வுடலுடன் போகும் நுணுடலும் பொருந்துவது நுண்மையாய் நாதத்தில் ஒடுங்கி விரியும் ஐம்பது எழுத்துக்களாலும் தத்துவங்களாலும் ஆகும். பிறவிக்கு ஆகும் உடம்புக்கு ஆறு ஆதாரங்களும் அவற்றை எல்லாம் கடந்த பிரணவமும் பொருந்தி அமையும்.
1711. இதயத் தாமரை மேலாகப் பதினாறு இதழ்களுடன் கூடிய விசுக்தியான தாமரை கழுத்திடத்து உள்ளது. அங்குதான் தூய அறிவான ஆன்மா சிவானந்தமே தனது வடிவாகப் போய் எங்கும் பொருந்திய அறிவாய் நீக்கம் இல்லாது நிறையும்.
#####
ஏழாம் தந்திரம்
#####
ஆறு ஆதாரம்!
அண்டலிங்கம்! பிண்டலிங்கம்!
சதாசிவ லிங்கம்!
ஆத்துமலிங்கம்!
ஞானலிங்கம்!
சிவலிங்கம்!
சம்பிரதாயம்!
திருவருள் வைப்பு!
அருள் ஒளி!
சிவபூசை!
குருபூசை!
மகேசுவர பூசை!
அடியார் பெருமை!
போசன விதி! பிட்சாவிதி!
முத்திரை பேதம்!
பூரணக் குகைநெறிச் சமாதி!
சமாதிக் கிரியை!
விந்து உற்பணம்!
விந்து சயம்-போக சரவோட்டம்!
ஆதித்த நிலை –அண்டாதித்தன்!
பிண்டாதித்தன்! மனவாதித்தன்!
ஞானாதித்தன்! சிவாதித்தன்!
பசுவிலக்கணம்- பிராணன்! புருடன்!
சிவன்! பசு!
போதன்!
ஐந்திரியம் அடக்கும் அருமை!
ஐந்து இந்திரியம் அடங்கும் முறைமை!
அசற்குரு நெறி!
சற்குரு நெறி!
கூடாஒழுக்கம்!
கேடுகண்டிரங்கல்!
இதோப தேசம்!
திருச்சிற்றம்பலம்
More...
ஓம்நமசிவய!
தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
#####
தத்துவங்கள்!
ஒருவரின் உடல் அவரவர் கையினால் 8 சாண் அளவு நீளமும், 4 சாண் அளவு பருமனும், 96 விரற்கடைப் பிரமாணமும் உள்ளதாகும். இதில் 68 தத்துவங்கள் சேர்கின்றன. உடம்பின் 24 ஆன்ம தத்துவங்களும் (பூதங்கள்-5, ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5, தன் மாத்திரைகள்-5, அந்தக் கரணங்கள்-4) வித்யா தத்துவங்கள் ஏழும் (கலை, காலம், நியதி, வித்தை, அராகம், புருடன், மாயை) சிவதத்துவங்கள் ஐந்தும் (சுத்தவித்தை-தூய நினைவு, ஈசுரம்-தலைமை, சதாக்கியம்-அருள் நிலை, சத்தி-அன்னை, சிவம்-அத்தன்) ஆக 36 தத்துவங்கள். இந்த 36 தத்துவங்கள் விரிந்தால் தொன்னூற்று ஆறாகும். அவற்றில் தெய்வப்பகுதிகள், அண்டப்பகுதிகள் 28 நீக்கினால் எஞ்சிய 68 பகுதிகள்- தத்துவங்கள் நம் உடம்பு இங்கு புவியில் வாழ்வதற்கு தேவைப்படுகின்றன. மேலே சொல்லப்பட்ட 24 தத்துவங்களும் சேர்ந்து உடல் பிறந்தாலும் உடலின் இயக்கத்திற்கு மொத்த தத்துவங்கள் 96 ஆகும். அவையாவன:-
தத்துவங்கள் 96
அந்தக் கரணங்கள்-4
1.மணஸ்-மனம், 2.புத்தி-அறிவு, 3.சித்தம்-நினைவு, 4.அகங்காரம்-முனைப்பு
அவத்தைகள்-5
1.சாக்கிரம்-நனவு, 2.சொப்பனம்-கனவு, 3.சுழுத்தி(ஸுஷுப்தி)-உறக்கம், 4.துரியம்-பேருறக்கம்(நிட்டை), 5.துரியாதீதம்-உயிர்ப்படக்கம்,
ஆதாரங்கள்-6
1.மூலாதாரம்- மூலம், 2.சுவாதிஷ்டானம்- கொப்பூழ், 3.மணிபூரகம்- மேல்வயிறு, 4. அநாதகம்- நெஞ்சம், 5.விசுத்தம்- மிடறு, 6.ஆக்ஞேயம்- புருவ நடு
உடலின் வாசல்கள்-9
1&2.கண்கள்-2, 3&4.செவிகள்-2, 5&6.மூக்குத்துவாரங்கள்-2, 7.வாய்-1, 8.குய்யம் எனப்படும் ஆண்/பெண் குறி-1, 9.குதம் எனும் மலவாய்-1
கர்மேந்திரியங்கள்-5
1.பாயுரு-குதம்/மலவாய், 2.வாக்கு-நாக்கு/வாய், 3.பாணி-கை, 4.பாதம்-கால், 5.உபஸ்தம்-கருவாய்/குய்யம்
குணங்கள்-3
1.ராஜஸம்-எழுச்சி, 2.தாமஸம்-மயல்(மயக்கம்), 3.ஸாத்வீகம்-நன்மை(அமைதி)
கோசங்கள்-5
1.அன்னமயகோசம்- உணவுடம்பு/ பருவுடம்பு,(ஐவுடம்புகள்) 2.பிராணமயகோசம்- காற்றுடம்பு/ வளியுடம்பு, 3.மனோமயகோசம்- மனவுடம்பு, 4.விஞ்ஞானமயகோசம்- அறிவுடம்பு, 5.ஆனந்தமயகோசம்- இன்பவுடம்பு.
தன்மாத்திரைகள்-5
1.சுவை-ரசம், 2.ஒளி-ரூபம், 3.ஊறு-ஸ்பரிசம், 4.ஓசை-சப்தம், 5.நாற்றம்-கந்தம்
தாதுக்கள்-7
1.இரசம்/சாரம், 2.இரத்தம்/உதிரம்/செந்நீர், 3.மாமிசம்/ஊன், 4.மேதஸ்/கொழுப்பு, 5.அஸ்தி/எலும்பு, 6.மச்சை/மூளை, 7.ஆணின் சுக்கிலம் அல்லது பெண்ணின் சுரோணிதம் (ஆண், பெண் இன்பச் சுரப்பு) / வெண்ணீர்.
நாடிகள்-10
1.இடைகலை, 2.பிங்கலை, 3.சுழுமுனை, 4.சிகுவை, 5.புருடன், 6.காந்தாரி, 7.அத்தி, 8.அலம்புடை, 9.சங்கினி, 10.குகு
பஞ்சபூதங்கள்-5
1.நிலம்-பிருதிவி, 2.நீர்-அப்பு, 3.நெருப்பு-தேயு, 4.காற்று-வாயு, 5.விசும்பு-ஆகாயம்
பிணி/வியாதி-3
1.வாதம், 2.பித்தம், 3.சிலேத்துமம்(கபம்) (ரோகங்கள்)
ஞானேந்திரியங்கள்-5
1.மெய்-தொக்கு, 2.வாய்-சிங்குவை, 3.கண்-சட்சு, 4.மூக்கு-ஆக்கிராணம், 5.செவி-சோத்திரம்
மண்டலங்கள்-3
1.அக்னிமண்டலம், 2.ஆதித்த மண்டலம், 3.சந்திரமண்டலம்
மலங்கள்-3
1.ஆணவம், 2.மாயை, 3.கன்மம்-காமியம்-வினை
ராகம்/விகாரங்கள்-8
1.காமம், 2.குரோதம், 3.லோபம், 4.மோகம், 5.மதம், 6.மார்சரியம், 7.இடம்பம், 8.தர்ப்பம்
வாயுக்கள்-10
1.பிராணன், 2.அபானன், 3.வியானன், 4.உதானன், 5.சமானன், 6.நாகன், 7.கூர்மன், 8.கிருகரன், 9.தேவதத்தன், 10.தனஞ்சயன்.
ஆக மொத்தம்-96 தத்துவங்கள் எனப்படும். இந்த 96 தத்துவங்கள்தான் உடலின் முழுமையான செயல்பாட்டிற்கான சிறப்பான தத்துவங்கள்.
இந்த 96 தத்துவங்களால் 96 வகையான வேதியல் தொழில்கள் உடலில் நடைபெறுகின்றது என்பதை கண்டறிந்தவர்கள் சித்தர்கள். இந்த தத்துவங்களில் மாற்றம் ஏற்படும் போதுதான் உடலில் நோய் ஏற்படும். பொதுவாக ஐம்பூதங்களும் சரிவர இயங்க வேண்டும். இந்த 96 தத்துவங்களில் உள்ள 7வகைத் தாதுக்களும் 3வகை தோஷங்களையும் பிரதானப்படுத்தியதே சித்த மருத்துவம். தாதுக்களையும் தோஷங்களையும் யோக முறையில் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பதே சித்தர்களின் கண்டுபிடிப்பாகும்.
#####
ஓம்நமசிவய!
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
#####
நிஜானந்த போதம்!
நல்லார் பிறர் குற்றம் நாடார். நலந்தெளிந்து கல்லார் பிறர் குற்றம் காண்பர். ஆதலினாலே இந்நூல் கண்நோக்குறும் அன்பர்கள் இதிலடங்கிய தன்னிலையுண்மையினை அனுபவம் பெற்று அஷ்ட மூர்த்தமாயும் சத்து சித்தானந்தமாயும் விளங்கும் பெரும்பொருளின் திருவருள் விலாசமுற்று மார்க்கண்டர் மதியின் கலை சோடசமும் குறைவிலா நிலைபெற்று என்றும் 16 வயது பெற்றது போலச் சிரஞ்சீவிகளாய் இருப்பார்கள் எனக்கருதி அப்படி நடக்க கடவுளை நாம் பிரார்த்திக்கின்றோம். கற்றதனால் தொல்லைவினை கட்டறுமோ! நல்ல நேரம் பெற்றதனால் போகுமா பிறவி நோய்! போகாது! சாதி பேதம் சமய பேதம் பொருள் பேதமெனக் குதர்க்க மொழிகளைப் பாராட்டுவதை நீக்கி முன்னோர்கள் நின்ற நிலை ஈதென்றுணரும் சித்தசுத்தி பெற்ற மானிடப் பிறவிகளே பிறவிகள் என யாவராலும் புகழப்படுவரென்பதால் அப்புகழை உயிர்கள் அனைத்தும் பெற்று ஆனந்த வாழ்வு வாழ வாழ்த்தும் குருஸ்ரீ
பிரமன் விண்டு என்கிற விஷ்ணு ருத்திரர், மகேசர், சதாசிவமான பஞ்ச மூர்த்திகள் மூலாதார கணபதியோடு ஆறு ஆதாரங்களிருப்பதாக மறை கூறுகின்றது. மண், நீர், அக்கினி, காற்று, ஆகாயம் சர்வ நால்வகை யோனி வடிவச் சீவர்களும் ஆதாரமாயிருப்பன, அனைவருக்கும் நாசியில் உஸ்வாச நிஸ்வாசமாய் உலவிவரும் இடைகலை பிங்கலையாகச் சுழுமுனை ஆதாரத்தில் மாறி நடந்துவரும் சத்தி சிவ சந்திர சூரியனெனும் சுவாசமான வாசியானது நாளொன்றிற்கு 21600 சுவாசமாய் நடந்து வருகின்றது. அப்படி நடந்து வருவது மனமாகவும் வாசியாகவுமிருப்பதில் நாள் ஒன்றிற்கு 12 வட்டமாய் சந்திர பாகத்திலும் சூரிய பாகத்திலும் ஐம்பூதப் பிரிவாய்ப் பிரிந்து கட்டுகின்றது. இப்படிக் கலையில் நடக்கும் ஐம்பூதங்கள் அந்தக் காரண வியாபாரத்தால் அறிவைத் தோற்றுவிக்காமல் ஆயுளையும் க்ஷீணப்படுத்தி நரை திரை மூப்பை எளிதில் உற்பவம் செய்து விடுகின்றன.
பிராண வாயுவானது தச வாயுவாய் நாவிதத் தொழிலை நடத்தி முடிவில் பிராண வாயுவாய் நிற்கும். மன அசைவால் பிராணாதி வாயுகளுக்க் உதிப்பு, மன அசைவில்லாதிருந்தால் வாயுகளுக்கு தொழிலில்லை. மனமாகிய வாசியே மனம். மனமானது சலம், கனல், வாயு இம்மூன்றும் கூடியது. இதை குருவால் சுவானுபவம் பெற்று வாழ்வதே நற்பயனாகும்.
இரேசகம், வன்னி, பூரகம், அப்பு, பிராணவாயு அமிசம், வாசி, தச நாடிகள் இருதயத்தின் அசைவு, அறிவு, நேத்திரக் கருமணி, ஒளிவு, நாசி மூலமாக வெளிக் கழிவது, விடம் பொருந்திய சூரியகலை, ஆகாய சந்திர கிரகணங்கள் முன்னிலையில் அமுதம் உள் புகுவது சந்திரகலையென்றும், உள் செல்லும் சுவாசம் தோறும் அமுதம் உள் புகுவது சந்திர கலையென்றும் உள் செல்லும் சுவாசந்தோறும் அமுதம் உள் சென்று உதிரத்தில் கலந்து உதிர சுத்தியும் செய்து சீவனுக்கு ஆதாரமாயிருகின்றன
இவ்வமுத பலத்தால் தவசிகள் தேகத்தைப் போஷித்து நெடுங்காலம் இருப்பதற்காக மதியமுதம் உட்கொள்ளும்படி செப்பியிருக்கின்றன்ர். கைலாயமென்னும் சுழுமுனை வீட்டில் ஓங்காரித்துக் கொண்டு தலையெழுத்தாக இருப்பது உண்ர்வு. அவை அசைவற நிற்கில் சிவமாம். அசைவுறில் சீவனாம். மூச்சாகவும் பேச்சாகவும் சப்திப்பது சத்தி. இவையே பேசுமெழுத்து பேசாவெழுத்தெனப் புகல்வர்..
பேசுமெழுத்து மனம் பேசாவெழுத்து வாசி. சாகா வேகா தலைபோகப் புணர்ப்பென மறை கூறும் வாசியாகிய வாயுவையும் ஆகாய வெளியையும் ஆவியாகிய வன்னியையும் எச்சமய மகான்களும் அடைய வேண்டும்.
கால் என்பது பிருதிவி, தலையென்பது ஆகாயம், மத்தி- அப்பு, உடல்- வாயு,-உயிர், அக்கினி-அறிவு மயமாய் நின்றன.
ஆகாய ரவியினிடத்து உஷ்ணக் கிரணமும் மழைக் கிரணமும், பனிக் கிரணமும் உண்டாகியது போல் அறிவினிடத்தில் இடைகலை, பிங்கலை, சுழுமுனையென்று மூன்று கிரணமுண்டாயின.
மணி மந்திர ஒளஷத.
மணி மந்திர ஒளஷத பரிகார்மாகிய மூன்றில் சாரமாகிய வாசியின் லக்ஷியம் தெரிந்து அவ்வனுபவத்திலிருந்து பிணியாளன் வியாதியை நேத்திரத்தால் கண்டு வாசியினால் ஆகருஷணம் செய்வதே மணி மந்திர பரிகாரமாகும்.
ஒளஷத்தினால் வியாதியை நிவர்த்திப்பதாயிருந்தாலும் வைத்தியனுக்கும் மற்றவர்களுக்கும் சர அப்பியாசம் வேண்டியிருப்பதால் அதற்குரிய அனுபவிகளை அடைந்து இரேசக பூரக குப்பகம் இன்னவை என்றுணர்ந்து அடைதலே நன்மார்க்க நிலையாகும்.
சரியை கிரியை யோக ஞானமாவன.
மன்னுயிரும் தன்னுயிர்போல எண்ணுவது சரியை.
மனு நீதியும் குரு மொழியும் தப்பாதிருப்பது கிரியை.
ஒன்றாமே அலையும் மனமொடுங்குவது யோகம்.
எப்போதும் தற்பரமாய் நின்றதுவே ஞானம்.
நான்கு பதமாவன.
கடவுள் சிருஷ்டித்த உலகில் வசிப்பதே சாலோக பதம்.
கடவுளை எதிரிட்டுப் போற்றி வாழ்தலே சாமீப பதம்.
குரோதாதி குணங்களை நீக்கிச் சத்துவ குணமாயிருப்பதே சாரூப பதம்.
துவித பாவணை நீக்கி ஆத்தும விசாரணை செய்து கடவுளோடு இரண்டறக் கூடி அது தானாய், தானதுவாய் நிற்பதே சாயுச்சிய பதமாகும்.
அஷ்டகர்மமாவன.
பிராணாயாமத்தால் வாசியை வசப்படுத்திக் கடவுள் திருவருள் மீது மோகித்து நித்திரையை நீக்கிக் கண் பார்வையைப் பகிர்முகப்படுத்தாமல் ஐம்பொறிகளை வித்து வேஷித்து நானென்னும் அகங்காரத்தைப் பேதித்தும் பூரணத்தில் மனத்தை ஐக்கியஞ் செய்து சஞ்சித வினைகளை மாரணம் செய்வதாகும்.
அஷ்டாங்க யோகமாவன.
காமமாகிய இச்சையை தோன்றாது செய்து தக்க ஆசனத்திலிருந்து நாம ரூபத்தை நாடும் மனத்தை இருதயாம்பரத்திலிருத்தி புறவிடயங்களை நீக்கி விகற்பமில்லாமல் தத்சொரூபத்தை நாடி வெளி ஒலி தானே தானாய் ஒத்து நிருவி கற்பமாகுதலாம்.
அணிமா சித்தியின் விபரம்.
அணிமா- குஷ்மகாரண மகாகரண சரீரமென்பதில் மகாகரண சரீரமாக அனுவிலசைவாக நுழைவது.
மஹிமா- விஸ்வ ரூபமாவது தோன்றல்,
ஹரிமா- அதிக பளுவாயிருத்தல்.
லஹிமா- தக்கையைப் போல் இலேசாய் காட்டல்,
பிராப்தி- இரவி மதியோரை வசப்படுத்துதல்
பிராகாமியம்- பிறர் காயத்தில் நுழைந்து நினைத்தவரிடம் அக்கணமே தோன்றல்.
ஈசத்துவம்- பஞ்சகிர்த்தியத் தொழிலை நடத்துதல்,
வாசித்துவம்- அண்ட முதலிய அனைவரையும் தன் வசமாக இருக்கச் செய்தல்
தேகமைந்தின் விபரம்.
இருள் தேகம்- ஸ்தூல தேகத்தில் அபானத்தில் மலகுற்றம். நாவில் நாடிக்குற்றம், கண்டத்தில் கபக் குற்றம், மேல் மூக்கில் திரைக் குற்றம், மனத்தில் ஆணவ மலம் பொருந்தி நானெனும் அக்கியான குற்றம்,
மருள் தேகம்- மாயா சந்ம்பந்தமாய்த் தனக்கு வருவது தெரியாமல் அகங்காரங் கொள்வது.,
சுத்த தேகம்,-கருவி கரணாதிகளிறந்து அறிவு அருள் வடிவாய் பார்வைக்குத் தேகம் தோன்றுவது.
பிரணவ தேகம்* தேகம் தோன்றினும் கைக்குப் புலப்படாததும் நிழல் சாயை இல்லாததுமாம்.
ஞான தேகம்- கண்ணிற்குத் தோன்றாமல் அறிவிற்குத் தோன்றுவது.
திருக்கு திருசியமாவன்!
நாமரூபப் பிரபஞ்சம் இந்திரியங்களுக்கு விஷயம்
கரணங்களுக்கு விஷயம் கரணங்கள்
சீவனுக்கு விஷயம் சீவன்
சீவ சாட்சிக்கு விஷயம் சீவ சாட்சி
விவேக ஞானத்திற்கு விஷயம் விவேக ஞானம்.
பரிபூரண சைதன்னியமென்னும் அறிவொன்றுக்கும் விஷயமாகாது. இந்தச் சொரூப நிலையே தானென்றுணர்ந்து அதுவாய் விளங்குவர் ஞானியர்.
ஞானியர் தேக சித்திக்கு தச தீட்சை விபரம்!
முதல் தீட்சையில் ரோம துவாரங்கள் வழியாக கெட்ட நீர்கள் வியர்வையாகக் கசியும்.
இரண்டாவதில் முத்தோஷமாகிய வாத பித்த சிலேத்தும தோஷம் நீங்கும்.
மூன்றாவதில் பழைய கெட்ட உதிரங்கள் கசியும்.
நான்காவதில் சர்ப்பம் தோலுரிப்பது போலச் சரீரத்தில் தோலுரியும்
ஐந்தாவதில் சட்டை கழன்று தேகம் சிவந்த நிறமாகப் பஞ்ச மூர்த்திகள் கோரியதை தருவார்கள்
ஆறாவதில் சட்டை கழன்று சுழுமுனை வாசல் திறந்து துரதிருஷ்டி தெரியும்.
ஏழாவதில் சட்டை வெளுப்பாய் கழன்று தேகம் தீபம்போல் பிரகாசிக்கும்.
எட்டாவதில் சடத்தை உயரத்தூக்கும் இலாகிரியுமாகும். கூடுவிட்டு கூடு பாயும்
ஒன்பதாவதில் தேகம் சூரியப் பிரகாசமாய் அஷ்டமா சித்திகளும் கைவல்யமாய்த் தேவர் ஏவல் புரிவர்
பத்தாவதில் தேகம் தீபம்போல் பிரகாசித்து தேகத்தை வெட்டக் கத்தியோடும். சொரூப சித்தியாம். அண்டத்தில் மௌனம் நரை திரை மூப்புப் பிணி மரணம் ஏற்படா.
தவசிகளுக்கு ஆதாரம் வாசி. வாசி என்பது பிராண வாயு. இதைக் கொண்டு சகல சித்திகளையும் பெற்றனர்.
சுடரான சுழுமுனையில் சந்திரன் சேரில் பஞ்ச பூதமும் அறிவும் ஒடுங்கும்.
இரவி சேரில் ஐம்புலனும் அறிவும் பெருகும்.
இரவி மதி ஒன்றாய் கூடிச் சுழுமுனையிடம் ஒடுங்கில் அறிவும் தச வாயுவும் ஒடுங்கும்.
வாசி நடு நிலையிலும் மூலத்திலும் நாசியிலும், கண்டத்திலும் சுழியிடமும் சதா நிறகப் பெற்றவர்கள் தாம் மெய்ஞ் ஞானிகள்.
சாகா காலையும் வேகாத தலையையும் மணியாடும் கோணத்தையும் ஆசான் முன்னிலையில் தெரிந்து மும்மூலமாகிய உந்தி மார்பு நெற்றிக் கண்ணிடமிருப்பர்.
அமாவாசை அன்னந்தண்ணீர்றங்குமிடம்,
பருவம் அன்னரசம் பிரிக்குமிடம்.
நாதமென்பது தீ மனம்
வித்தென்பது வாசி
தீயானது வாசிமீதேறி விளையாடும்.
சாகாக்கால் வாசி வாயு வேகாத்தலை ஆகாசவெளி போகாப்புனர் ஆவியான வன்னி ஆக மூன்றும் கூடியது நாதமென்றும் பசந்த மண்ணும் தண்ணீருமான இரண்டும் விந்துவென்றும் விளங்கும்.
இரவி மதி சுடர் முன்றும் ஒன்றானால் நவ நீத கிருஷ்ணனென புகலும்
சந்திரனை நோக்க வெட்ட வெளிபோலக் காணும் அது சிவபதமாகும்
இரவியைப் பார்க்க இருதயத்தில் ரவிபிரகாசம் தோன்றும். அது சக்தி பாதமாகும்.
ஸ்தூல தேகத்தைப் போஷிக்க ஆகாரம் கொடுப்பது போல சூஷ்ம தேகமாகிய ஆவியாகிய வன்னிக்கு ஆகாரம் சந்திர கிரணங்களின் அமுதத்தைக் கொடாததால் மூல அனலுக்கு ஆவி குறைந்து ஆயுள் ஷீணப்படுகின்றது.
குலம் என்பதும் சாதி என்பதும் முடிவாகப் பார்க்கில் மானிடப் பிறவியில் ஆண் பென்ணாக விளங்குவதில் கொலை, களவு, கள், காமம், பொய்யாகிய ஐந்து பாதகத் தொழிலை நிக்கிரத்துச் சத்துவ குணத்தோடு பரமமெனும் பொருள் யாதோ காரணம் விவரமறிந்தது தானே சூசனையென ஆத்தும விசாரணை செய்து முடிவை நாடி நிற்பவரே மேலாம் குலமெனப்படுபவர்.
காமாதிகலைக் கைக்கொண்டு நன்று தீதென்று தெரிந்து நடவாமல் புலால் மதுபானங்களையுண்டு ஊன் உறக்க மைதுனமே பெரும் போகமென வாட்நாட்களை மிருகாதிகளின் பாவமாயிருந்து கழிப்பவரே கீழ்குலமெனப்படுவர்.
மனத்தை ஒருமை செய்யாமல் காவிகாம்பிரதண்டு கமண்டல விபூதி பூசினும் துவாதச நாமத் தேகத்தில் சார்த்தினும் சதா ஆலய்ம புகினும் ஐந்துகால சபதப சந்தியா வந்தனம் புரியினும் யாதொரு பயனுமிராது. தனக்குத்தானே வஞ்சகக் கள்வனாவான்.
மானிட சரீரத்தில் தசவித நாதங்களும் பகிர்முக நோக்கில்லாமல் அந்தர்முக நோக்குடையவர்க்கு விளங்கும். சத்தம் ஓசை எனப்படும். அதுவே நாதமாகும். நாதம் ஆகாயத்திலுற்பவம். சத்தம் பிறந்த இடத்தில் சகல கலையுமுதிக்கும். நாத விந்து கலை எனப் புகல்வது நாதமானது பெண் பாலினமென்றும், விந்தையென்பது புருடனிடமிருப்பதென்றும் கூறுவது சகச மாயிருந்தாலும் ஆணிடத்திலும் பெண்ணிடத்திலும் நாத விந்திருப்பது உண்மையாயிருக்கும். இதை அனுபவிக்காமல் நிச்சயிக்கக்கூடும்..
குளவியானது கிடமாகிய புழுவை எடுத்துக் கொண்டுபோய் மண்கூட்டிலடைத்துச் சிறிய வழி விட்டு அவ்விடம் குளவியானது தன் வால் முள்ளினால் பலதரமும் புழுவைக் குத்தி ரீங்கார்மான பிராணவ நாதத்தை ஒலிக்க குளவி குத்திய துன்பத்தைச் சகியாத மகா துன்பத்துடன் நாத ஒலியைக் கேட்டிருந்த புழுவானது அந்த வடிவம் நீங்கிக் குளவி வடிவம் பெற்றது. அதுபோல மானிட தேகமுடையவரும் தமக்கு எதிரிட்டிருக்கும் மரண பாதைக்கு மிகப் பயந்து சதா ஆகாய அமுசமான பிரணவ நாதமென்னதென்று ஆசிரியரிடம் கேட்டு மனத்தை அதில் இலயப்படுத்திருக்க சூக்ஷ்ம சரீரம் சித்தியாகும்.
ஆதாரமாகிய ஆகாய அமிசத்தில் ஒரு கோடியே ஒன்பது லட்சத்து அறுபதாயிரங் கணமான 50 நாள் 414 நாழிகை ஆயிரத்தறநூறு நொடிக் கணக்காய் புருடனிடம் சுக்கிலத்தில் அணுவுக்கணுவாய் முன் கண்ட நாளனவாகக் கீட வடிவாய் கர்ப்பமிருந்து மோகங்கொண்டு ஸ்திரீயை நினைத்துப் புணர்ந்து ஸ்திரீ சுரோணிதத்தில் சுக்கிலத்திலிருந்த கீடம் சம்பந்தமாகும் முறையான ஆண் பெண்ணும் மவுன முற்றால் மோசமில்லை. கருவங்கே தரிக்கும் பாரு. இரு மனமும் ஒருமையுடனிருக்க வேண்டும்.
அவ்வகை உத்தம புணர்ச்சியில் ஸ்திரீயின் மனமானது புருடன் வடிவமீது நோக்கமாயிருக்க வேண்டும். வேறு ரூபத்தின் மீது மனம் வைக்கலாகாது. ஒன்றான இருவரும் கூடியேயுற்று உள்ளம் கணவன்றன் மேலுறல் நன்றுதான் கணவன்றன் உருவமாம்.
நாடும் காதலிமேல் நாட்டமுறில் நின்ற தாயுருவே வடிவயுறும்.
நேசமாதுலன் போலிருந்தால் வழிவன்றியே அவள் முன்னவன் பின்னவனாகு மைந்தன் கூறாமெனு நீளமரை. இவ்வண்ணம் வடிவம் பெரும்.
புருடன் கலை சூரியனாயிருந்தால் கரு ஆண் வடிவமும் சந்திர கலையாயிருந்தால் கரு பெண் வடிவமும் பிருதிவி, அப்பு, தேயு, வாயு பூதியமாயிருந்தால் அவையவைகளுக்குரிய கணக்கின்படி ஆயுளமைவதாயும் இருக்கிறது. கருவானது 280 நாள் அல்லது 300 நாள் பெண் வயிற்றில் வளர்ந்து வெளிக் கண்டது. அவ்வகை சென்மித்த சிசு ஏழு விதப்பருவமடையும். அதை ஏழு பிறவி என்றும் புகல்வர். அவை
1.புருடன் ஸ்திரியை நினைத்து மோகங் கொண்டது
2.சம்பந்தமுற்றுச் சுரோணத்தில் சம்பந்தமானவை.
3.கருப்பையில் வளர்ந்தது.
4.வெளித்தோன்றிய குழந்தைப் பருவம்.
5.வாலைப் பருவம்
6.எவ்வன காமாதிகளாலலைவுறும் பருவம்.
7.நரை திரை மூப்புப் பிணி மரணப் பருவம்.
இந்த ஏழு பருவங்களிலும் வடிவமும் குணமும் நடக்கயும் பேதங்களாகவேயிருக்கும். புருடன் ஸ்திரி இருவருக்கும் மோகவுற்பவ விவரம்.
ஒன்றான விந்துவிலே விட்டகுறை வந்து கருத்தரிக்கும். அவ்வுருவே அவனும் அவளுமாவார் என்றும் தனது நலவினை தீவினையளவாகப் பெண் கர்ப்பத்தில் தானே பிறவி எடுத்து அனுபவிக்க வேண்டுமென்றும் அனுபவிகள் கூரியது மாகா வாக்கியம்.
பிராண வாயு பித்தம் அக்கினி சலத்தில், அபானவாயு வதம் மலத்தில் சமான வாயு அய்யம் சுழி விந்தில்
தீயும் காற்றும் மலத்தில் சார, வாத வாயுவும் அக்கினியும் காற்றும் ஆகாயத்தில் சாரப்பித்தமுறும் சகலமும் காற்றும் சுழியில் சார சிலேற்பனமுறும்.
வாசி மூலவிடம் ஐந்து
நாசிமுனை, சகஸ்திரம், பிடரி, நெஞ்சு, மூலம்.
முத்தீயின் விவரம்
குதஸ்தானத்திலொன்று, ருத்திரஸ்தானதிலொன்று, புருவ மையச் சதாசிவ ச்தானத்திலொன்”று
சந்திர சூரிய அக்கினி இடமாவன
மூலத்தில் அக்கினி, மார்பில் சூரியன், முடியில் சந்திரன்.
உலவுமிடம்
சூரியகலை நடக்கும்போது சுவாசம் பிடரி வழிச் சென்று வரும்
சந்திரகலை நடக்கும்போது 312 பாகமாகிய மூளையில் சென்று வரும்
மந்திரங்கால் மதி முக்கால் என்பது மந்திரம்- சூரியன் கால், மதி-சந்திரன் முக்கால்
அங்குஷ்டப் பிரமாணமென்னும் அகத்தீசர் ஓர் அங்குலமுள்ள நேத்திரஸ்தானமிருந்து ஆயிரத்தெட்டுக் கிரணங்கள் பொருந்திய பகிர்முக நோக்காக யாவும் பார்த்தும் தான் சர்வ சாக்ஷியாய் விளங்கும்.
ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலமும் நீங்கிய ஆத்துமா அருளோடு கூடிய ஞானமாகும்.
ஒரு பாதையுமின்றி தானாயிருப்பது பிரமம்.
பிரமம் பூரணமாகிய அவித்தையிற் பிரதிபலித்தபோது சீவன்
சீவன் அவித்தையிற் கூடியபோது சுழுத்தி
சுழுத்தி அந்தக் கரணத்தில் கூடில் சொப்பனம்
சொப்பனம் ஐந்து இந்திரியத்தில் கூடில் சாக்கிரம்
சாக்கிரம் 96 தத்துவங்களுடன் கூடில் விவகாரம்.
ஆகையால் அந்தக் கரண வியாபரங்களை நீக்கி அந்தர்முக நோக்காய் பேச்சுக்கும் மூச்சுக்கும் மத்தி. கண்ணுக்கும் காதிற்கும் மத்தி, கங்குல் பகலாமிடத்திற்கு மத்தி, இரவி மதிக்கு மத்தி ஆறிவிற்கும் மனத்திற்கும் நடுநிலையில் நின்றவர்க்கே மெய்ப்போதமுதயமாகும்.
க்ஷண சிருஷ்டி பிரளயம் தின சிருஷ்டி பிரளயமாகின்ற நினைத்தலும் மறத்தலும் நித்திரையிலே தன்னையே மறத்தலாகின்றபடியால் மரண காலம் எதிரிட்டிருப்பது இன்ன நாள் என்று தெரிந்து அதற்குள் அடைய வேண்டிடும். பயனை அடையாத நமது இகபோக சுகமும் நடக்கையும் மன விகாரமும் யாது பயன் தரும்!
ஐம்புலனை வென்றவன் வீரமே வீரம்.
கடவுள் ஒன்றெனத் தெளிந்த பேரறிவே அறிவு.
பிறர் ஏவாமல் உண்பதே வூண்.
தான் சாகாமல் கற்பதே கல்வி
ஆதலால் ஆதி சிருஷ்டி கால முதல் யோனியைக் கொண்டு யோனி மூலமாகவே இச்சை கொண்டபடி சென்மித்து வருகிறோம். அவ்வகை யோனி வழியாக அளவிறந்த சென்மங்கள் எடுத்தும் இப்போதாகிலும் பிறந்து விட்டேன். இனி பிறவாதிருக்க வரந் தர வேண்டும். எனப் பட்டினத்தார் சுவாமிகள் கேட்டது போல் இனிப் பிறவி பெறாவண்ணம் வேண்டுமல்லவா! தேகம் நரை திரை மூப்புச் சாக்காடு பெற்று நசிப்பது சித்தம். தேகத்திலிருந்த சத்து எக்காலமும் நசிப்பதில்லை என்றனைவரும் புகல்வது பழமொழியாய் இருந்தாலும் அது அனுபவத்தில் சித்தாந்தமாக வேண்டும்.
இப்புவி அத்திப்பழம் போலும் பேரண்டம். அதற்குளமைந்த வித்துக்கள் போன்றவை சிற்றண்டங்கள். பேரண்டம் ஆயிரதெட்டு கூடியது ஒரு புவனம். இவ்வகைக் கொண்ட புவனம் 2214 கொண்டது ஒரு சாகரம். சாகரம் ஏழு கூடியது ஒரு பதம் இப்படி 844 பதம் கூடியது பிரபஞ்சமென மேலோர் கூறியுள்ளனர்.
பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் உகார நாத ரவி, மகார விந்து சந்திரன், ஓங்கார மகாமேரு சுழுமுனை ஆக அஷ்ட மூர்த்தியாயும் விளங்குபவர் கடவுளென வேதம் கூறும்.
மேலோர் முன் குறித்த வாக்கியங்கள் உண்மையென விளங்குவனயேயாம். ஐயமின்றித் தெய்வவுருத் தியானித்தால் அதுவாம். அருவுருவைத் தியானித்தால் அட்டமூர்த்தியுமாம். பொய்யா இரண்டையும் தவிர்த்துத் தானாயிருந்திடில் பூரணமாம். சீவனெதிர்ப் பொருந்துமதுவாயின் மையலுறு மனம் விடயத்தாசையுற்றே அது வாய் மரண செனனமும் விளைத்தவாறே தென்றே உணர்ந்து மெய்யறிவே தானாகப் பாவித்தால் அதுவாய் விளங்குவர். யாவரும் செனியா வீட்டைமெய்துவாரே!
வார சரம்!
ஞாயிறு, செவ்வாய், சனி வலநாசியில் சூரிய கலையாகவும், திங்கள் புதன், வெள்ளி இடநாசியில் சந்திர கலையாகவும், பூர்வபக்ஷ குருவாரம் சந்திர கலையாகவும் அமரபக்ஷ குருவாரம் சூரிய கலையாகவும் காலை 4 மணிக்கு நடக்க வேண்டும். அவ்விதம் நடந்தால் தன் காரியங்களைத்தும் சித்தியாகும். அவ்வகை நாடாமல் பேதமாய்ச் சூரியன் நடக்க வேண்டிய தினம் சந்திரனும் சந்திரன் நடக்க வேண்டிய தினம் சூரியனும் நடந்தால் அடியிற் காணும் பலன் நடக்கும்
ஞாயிறு- சந்திரன் – சளி இருமல்
திங்கள்- சூரியன் – சலதோஷம் சுற்றத்தார்க்கு கேடு
செவ்வாய்- சந்திரன் – சுரம், சண்டை, சாவு
புதன் சூரியன் –நீரேற்றம், தலைக்குத்தல் தீங்கு
வளர்பிறை வியாழன் சந்திரன் –தேக நோய்
வெள்ளி –சூரியன் –கண், காது நோய்வெளியூர்ப் பயணம்
சனி- சந்திரன் சீதள சன்னி
சந்திர சூரியர் இரு கலைகளிலும் ஐம்பூதம் நடப்பதுண்டு.
பிருதுவி நிறம் பொன்மை – தித்திப்பு, அப்பு – வெண்மை –துவர்ப்பு, தேயு – செம்மை – உவர்ப்பு, வாயு – கருமை – புளிப்பு, ஆகாயம் – படிகம் –கசப்பு
பூர்வ பக்ஷத்தில் குரு – பிருதிவி, சுக்கிரன் – அப்பு, குரு – தேயு, புதன் வாயு, சனி- ஆகாய பூதியமாகக் கொள்க.
ஞாயிறு ஆந்தையாகிய அப்பும், திங்கள் செவ்வாய், வியாழன் காகமாகிய தேயுவும், புதன் வல்லூறாகிய பிருதுவியும், வெள்ளி கோழியாகிய வாயுவும், சனி மயிலாகிய ஆகாயமும் பூதியமாக நடக்க மிக உத்தமம்.
பூதியங்கள் பிருதுவி, அப்பு நடந்தால் சத்வகுணம், தேயு ராசதமாகிய தேயுவும் புதன் வல்லூறாகிய பிருதிவியும் வெள்ளி கோழியாகிய வாயுவும் சனி மயிலாகிய ஆகாயமும் பூதியமாக நட்க்க மிக உத்தமம்.
பூதியங்கள் பிருதிவி அப்பு நடந்தால் சத்வகுணம்
தேயு ராசதமாகிய கோபாங்காரம் பெண்னிச்சை
வாயு அலைவுறும்
ஆகாயம் பர இச்சையை நாடும்
காலை படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போதே சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டு எழுந்திருக்க வேண்டும். ஆகவேண்டிய காரியங்களுக்குப் போகும்போது இரவியில் பிருதிவி அப்பு நடக்கச் சென்றால் தாமதத்தில் பலன் சித்திக்கும்.
படுக்கும்போது இடக்கையை கீழ் வைத்து வலது கையை மேலாக வைத்துக் கால் நீட்டிப் படுக்க வேண்டும். அவ்வகையில் படுக்கும் போது மனத்தைப் பலவாறு சிந்தனையில் செல்லவிடாமல் சுவாசமீது செலுத்தியிருக்க வேண்டும்.. அவ்வகை அப்பியாசங்கள் செய்து வருகையில் சொப்பனாதி அவஸ்தைகள் நீங்கி அந்தர்முக விவகாரங்கள் விளங்கும். இவ்வகை நடப்பதுமின்றி வயிற்றில் ஆகாரமில்லாமலிருக்கும்போது பசி அதிகமாயிருப்பதென்று சொல்வது அப்போது மேற்கூறியபடி படுத்திருந்து பார்க்கப் பசி எழும்பிய பரமிடம் நன்றாகத் தோன்றும்.
அமாவாசைத் தினக் காலை இரவியை இராகுவும் பருவத்தின் சந்திரனைக் கேதுவும் மறைப்பது போல் நமது இரவி மதியை இராகு கேது சாயை மறைப்பதால் மனத்தை இருளாகிய மாயை மூடியது. சந்திரன் மனத் திடமும் சூரியன் நேத்திரத்திலுமிருப்பதால் இரவியிடம் மதியை செலுத்த மதிக்குக் கிரணங்கள் குறைவுபடாமல் அறிவு உதயமாகும்.
ஆகாயமும் வாயுவும் கலந்திருக்கின்றன. மண்ணும் சலமும் கலந்திருக்கின்றன. அக்கினி மத்தியமாக நின்றது. மாமிச உதிர சலம் ஒன்றாயிருக்கின்றது. சரமாகிய வாயு ஆகாய வெளியில் சம்பந்தமாய் இருக்கின்றது. அக்கினி பொது நிலையாய் நின்றது.
ஸ்துல தேகம் சத்தி சந்திரராம். இதில் உயிர்ப்பாகிய உயிர் சூரியர் சிவமாகும். பிறவிகுரு நாசியிடமாக வாசனையறிதலும் அப்புச் சுக்கிரர் நாவிடம் சுவையறிதலும் தேயு அங்காரகர் நேத்திரமிடம் ரூபமறிதலும் வாயு பதன் சரீரத்தில் பரிசமறிதலும் ஆகாயம் சனி செவியினிடம் ஆகாய சத்தமறிதலும் இராகு கேது சாயையென்றும் அவை குதம் குய்யம் இத்தானனமிட மிருப்பானவென்றும் வேதம் புகலும்.
சாக்கிர பகிர்முக விவகாரங்களிலிருந்து நித்திரை சொப்பனத்தில் அநேக விஷயங்களைக் கண்டதாயும் செய்ததாயும், சென்றதாயும், நடத்தியதாயும் அனேகமாய்க் காண்கிறோம். நித்திரை நீங்கிய பிறகு யாதொரு பயனையும் அடையாதவர்களாகின்றோம். அவைகளின்றி ஒரு பெண்ணைக் கூடிச் சம்போகம் செய்ததாகக் காண்கிறோம். அப்படிக் கண்டு நித்திரை நீங்கிய பிறகு ஸ்கலிதமான விந்தைப் பிரத்தியக்ஷமாய்க் காண்கிறோம்.
இதை புத்திமான்கள் அறிவு முன்னிலையில் யூகமாய் யோசிக்க விந்தின் செயலும் பெருமையும் அறிந்து அதில் தேறும் அனுபவ சித்தாந்த நிலையில் சதா ஆனந்த பரவசராய் விளங்குவர். இது வேத சம்பந்தமாயிருக்கும்.
மூலாக்கினி பசித் தீபாக்கினி, கோபாக்கினி, ஸ்திரீ தாபாக்கினி, யோக ஞானாக்கினி, என்னும் இவற்றுள் ஆதியந்தமும் தவிர மற்ற மூன்று அக்கினியும் உற்பவமாய்த் தோன்றலை யாவரும் சரீரத்தில் கண்டிருக்கின்றோம்.
மேலாம் பதத்தை அளிக்கும் பூரண அக்கினியை நாம் கேவலப் விடயங்களிற் செலவிட்டு வாழ் நாட்களைக் கேவலப்படுத்துகின்றோம். அவ்வகை செய்யினும் அதனால் அனேக வியாதி அனுபவிக்க நேரிடுகின்றது.
உண்ணும்போது உயிரெழுத்தால் உயிரை வாங்கி உறங்குகின்ற போதெல்லாம் அதுபோலாகும். பெண்ணின்பாலிந்திரியம் விடும்போதப்பா! பேணியுயிர் மேல்வாங்கு என்று மேலோர் செப்பியதை நான் ஏன் அனுபவத்தில் கொண்டுவரக் கூடாது!
விந்து அதிகமாகச் எலவழிப்பதில் பிணி மூப்புச் சாக்காடு எளிதிலடையக்கூடும். ஆகாரத்திற் பிரிந்த அன்னரசமானது உதிரமாய் 7-ம்நாள் சுக்கிலமாகின்றதை விரயம் செய்யாமல் மாதத்தில் இரண்டு தரம் ஸ்திரீ பூர்வ காலத்தில் பயன்படுத்தும் தினம் உபயோகிப்பதில் அவ்விதம் தரிக்கும் கருச்சிசுவானது ஆயுள் விர்த்தியும் தேக திடமும் பெற்றுப் பிணியில்லாமல் இருக்கும்.
உந்தியிலிருக்கும் உதான வாயுவால் காமம் கண்டஸ்தானக் குழியிடமிருந்து சமான வாயுவானகி கமலப் பிறை கொலிக்கும் ஸ்தானமடையுமாகில் கபால சூலையிடி, அசதி, வயிற்றிரைச்சல், பேதி, நாவுலரல் முதலிய வியாதி புருடருக்கும் ஸ்திரிக்கு வயிற்றுநோய் தேக வெளுப்பு, சூதக வாயு முதலியவும் நேரும்.
மகான்கள் வாக்கிய அனுபவத்தை பெறாமல் வாய் மதமாயப் பேசினவர்கள் பெருங்குடலும் சிறு குடலும் புரண்டு மகா துன்பமடைவார்கள். மகான்களைத் தரிசிக்க வேண்டிய அந்தர்முகமாய் அடியிற் கண்டபடி தியானிக்க அவர்கள் பிரத்தியக்ஷமாய்த் திருவருள் பாலிப்பார்கள்.
செம்மையுடன் ஓம் சிங் ரங் அங் சிங் என்று ஓது.
புரியட்டவாமன!
சடம் பிரமன் கூறு. உதிரம் மாலின் கூறு. இதில் சூட்சுமமாவன; சிகரம் தீ, சீவன்; வகரம் காற்று மகேசன்; யகரம், ஆகாயம் சதாசிவம்; விந்துநாதம், சத்தி சிவன்; விராட்டு, பரை, ஆக 8 இதன் மீது வெளி பாழ், ஒளி பாழ், வெளியொளி பாழ் இவைகள் கடந்து உள் மனையாளிடமென்றும் அவ்விடமிருப்பவர் சிவயோகிகளென்றும் மறை கூறும்.
இவ்வனுபவம் பெறுவது தக்க ஆசான் கிடைத்ததும் அவரது சாயைப்போல அவருடனிருந்து சதா அவரால் பெற்ற திருவருள் நோக்கத்தில் நெடுங்காலம்மிருப்பவர்களுகு அமையும் பதமாகும் ஆகிலும் அனைத்திற்கும் மனமே முன்னிலைக் கரணமாயிருக்கின்றது. மனம் அலையாதிருக்க வேண்டும். மனமானது எப்போதும் ஒன்றை நாடியே நிற்கும். அசைவற்று நிற்கும் சுபாவம் அதற்கில்லை. நன்மார்க்கத்திலேனும் துன்மார்க்கத்திலேனும் செல்லுவது மனமாயிருக்கின்றது. மனத்தசைவை நிறுத்துவதே நல்லோர் கடமை.
ஓசையில் சத்தம், முட்டையில் உயிர்ப்பு, வித்தில் சத்தாகிய முளை, பூவில் வாசம், பழத்தில் சுவை, இரும்புண்ட நீரைப் பிரித்துக் காட்ட இயலாமை போல் நிறைந்த எள்ளில்லெண்னெய், பாலில் நெய், கரும்பிற் சக்கரை, தெயுவில் அக்கினி, சொல் முடிவில் பொருள் தோன்றுதல் போல் அகநோக்குடையவர் காண்பர்.
நால்வகைத் தோற்றத்தில் மானிடமெனும் வடிவங்கொண்டும் மேற்கண்ட அனுபவங்களை அடையாமல் உலகம் மெச்சச் சரீரமீது பல வேடங்களைத் தரித்து நான் யோகி, சோகி, பரதேசி, தம்பிரான், சாமி, தவசி, தாசன், பக்தன் என்று வீண் காலங்களைப் போக்குவதனால் அருமையான பிறவி வீணாய் பிருதிவியில் இலயமாகும். தான்தான் என்பது யாது! அதைச் சூழ்ந்த கருவி க்ரணாதிகள் எவ்வாறுதித்து எவ்வாறொடுங்கும்! எனச் சித்தாந்தமுற்று நிற்பதே எம்மதச் சார்பினரும் பெறும் நிலையாகும்.
திருவருள் போகத்தை அளித்து செனன மரண துயரத்தை நீக்கி துரியாதித நிலையிலிருந்தும் குருவிற்கு உடல் பொருளாவியெனும் மூன்றையும் (சரீரத்தையும், உயிரையும், அறிவையும்) சுத்தம் செய்த மாணாக்கருள் மந்த மந்தாதர தீவிர அதிதீவிர பக்குவத்திரயங்கள் நான்கு விதமாயிருக்கின்றன.. அவருள்ளும் பிரமசரியம் கிருகஸ்தம், சந்நியாசம், வானப்பிரஸ்தம் அதிவர்ணாசிரமம் பெற்றவர்களாயுமிருக்கின்றனர்.
இருக்கு, எசுர், சாம அதர்வணமாகிய நான்கு வேதத்திலிருக்கும் ஞானகண்டத்துள் தைத்திரிய உபநிஷத்தில் பிரக்கியான பிரமமெனும் குரு வாக்கியம். அறிவே பிரமம் என்பது எசுர் வேத அயித்திரிய உபநிஷத்தில் ‘அகம் பிரம்மா அஸ்மி’ என்பது சீடன் வாக்கியம். நானே பிரமம் என்பது சாம வேதஞான கண்டத்துள் சாந்தோக்கிய உபநிஷத்தில் ‘தத்துவம் அசி’ எனும் வாக்கியம் நீயானாய் அதாவது வேத ஞான கண்டத்து மாண்டோக்கிய உபநிஷத்தில் என்னுடைய ஆத்துமாவே பிரமமாய் விளங்குகின்றது. இவ்வனுபவம் ஒரு கடாக்ஷத்தால் சுவானுபவமாக வேண்டும்.
பஞ்சாக்ஷரம்:
நகரம், அருட்சக்தி, தேகத்தை தரும் பிராரத்துவத்தை அனுபவிப்பது, மகரம்- ஆணவமலம், அசுத்த மாயை. சிகரம்- சிவம், வகரம்: அருள்: சகரம் சீவன் ஆதலால் மகா அசுத்த மாயை நீங்கில் அருட்சத்தி செய்கையான நகரச் செய்கையொடுங்கும். பிறகு யகர, சீவன் வகர அருளால் சிவத்தையடையுமெனவும் நகரமாகிய சேரியை நஞ்சென வெறுத்து மகரமாகிய மயலெல்லாம் வேரறக்களைந்து வகரமாகிய வனத்தினிலிருந்திளைப்பாறி சிகரமாகிய சிவசக்தியடைந்தனன் சீவனென்பது அனுபவிகள் வாக்கியம். ஆதலால் நகரமகாரத்தை நீக்கி மற்ற மூன்று அட்சரங்களை இருதலை மாணிக்கமாகத் தியானிக்கின்றனர். இவை ஆகமவிதிப்படி கூறியவாறிருக்கின்றன.
பிரணவ பஞ்சாசர விவரம்:
கணபதி நாசி சுவாச முன்னிலையில் 4 வித பேதங்களையறியும். அப்போதங்களாவது இடைகலை பிங்கலையும் சுழுமுனையில் கூடில் நீங்கும் ஓங்கார சித்தி பிரமன் நாவு பிருதிவியில் 6 விதச் சுவைகளறியும் அறிவது நீங்கில் நகாரம் சித்தி நேந்திரம் சலம் அப்பு 10 வித பேதங்களாகிய பஞ்சவர்ணம் உயரம் குள்ளம் சிறுத்தல் பெருத்தலாமென அறிவது நீங்கில் மகார சித்தியாகும்.
சர்மம்!
தீ தேயு இவை முன்னிலையில் சூடு குளிர்ச்சி மிருது கடினமென அறியும் பரிச பேதம் 12ம் அறிவது நீங்கில் சிகர சித்தியாகும்.
செவி வாயு ஆகாய அமிசம்:
16 வித அக்ஷர பேதங்களை அறிவதி நீங்கில் வகரம் சித்தியாகும்.
புருவமத்தி ஆகாயம்:
அவ்விடம் விருப்பம் வெறுப்புமறியும் இரண்டு தன்மை நீங்கில் யகார மனம் சித்தியாகும். இவ்வகை சத்த பரிச ரூப ரச கந்தங்களறியும் மனம் அசைவற அம்பலமாகிய உச்சிக் குழியில் சங்கல்ப மிலாததாகிய அறிவு சுயம்பிரகாசமாய் விளங்குமெனத் தவத்தினர் செப்பியிருக்கின்றனர். இதை 51 அட்சரமென்று சொல்வர்.
ஆகர்ஷ்ணம்,தம்பனம்-நகரம் மோகனம்-மகரம் மாரணம்-சிகரம் வித்வேஷ்ணம்,உச்சாடனம்-வகரம்- வசியம்-யகரம்
நகரம் ஆண் என்றும் அதற்கு மூன்றாவது சிகரம் பெண்ணென்றும் ஆண் எழுத்தைச் சுற்றிப் பெண்ணெழுத்து இருக்க அவ்வகையாக ஒவ்வோர் எழுத்திற்கும் மூன்றாவது எழுத்துப் பெண்ணெழுதாகச் சக்கரங்களிலடைகின்றன.
பிரணவமென்னும் ஓங்காரத்தில் அகார சோதி பிந்து உதித்து, இதில் நகரமகரமுதித்து உகாரவொலியால் நாதமுதித்து இதில் சிகர வகரமுதித்து மகரத்தில் யகர ஆன்மா தோன்றியதெனவும், நகரம் திரை: மகரம் மால், சிகரம் பதி, வகரம் திரை யகரம் சீவாக்ஷரமாய் விளங்கும். ஏகாக்ஷரம் திரியாக்ஷரம் பஞ்சாக்ஷரம், சடாக்ஷரம், அஷ்டக்ஷரமாகச் சிந்திப்பதெல்லாம் பகிர்முக நோக்குடையதாயிருக்கின்றது. அக்ஷரமானது அச்சரமாம் எனக் கூறுவ்தில் சரம் பார்ப்போன் பரம் பார்க்கக்க் கூடும்.
அகாரமான நேரத்தில் மனோன்மணியென்னும் மனமானது அறிவு சதாசிவமாயிருக்கும். அறிவு என்பதில் அகாரம் சூரிய கலையாகவும் உகாரம் சந்திர கலையாகவும் றிகாரம் சுழுமுனையாகவுமிருக்கின்றன. இம்மூன்றுங் கூடியது அறிவு.. இவ்வகையுடையவர் அறிவுடையவர். சிங்கார இடைபிங்கலை சங்காரவழி போகாமல் பொங்க நிறுத்தி எங்கள் குருராயன் பாதம் போற்றும்படி முத்துத் தாண்டவ சுவாமிகள் செப்பினர்.
இச்சாப் பிரார்த்துவமாக அனுபவித்து வருவதில் இவனது செயலால் யாதொரு விவகாரத்தையும் நடத்தாமல் யாவும் கடவுள் செயலாக முடிய வேண்டுமென இச்சயமுடையவரானால் அவர் அடிமை திரமாக ஆட்கொள்ளக்கூடும்.
எதிரிட்டிற்கும் மரணத்திற்குள் கொடுமையான காலனுக்கு ஏவலாளிகளாகிய 4448 வியாதிக்கும் மரணத்திற்கும் மிகப் பயந்தவர்கள் உள்ளம் அதி தீவிரமாய் நன் முயற்சியில் இருப்பார்கள்.
சந்திர கலையில்
பிருதிவி பூதம் நடக்கும்போது சிவாலயம், வீடு கட்டல், குடிபுகுதல், மரம் வைத்தல், சாந்தி கழித்தல், அப்புக்கு குழிஎடுத்தல், சோலை வைத்தல், விவாகம் செய்தல், உழவு விதை விதைத்தல்
தேயு பிணி தீர்த்தல்
வாயுகுதிரை, தேர், கப்பல் ஏறுதல்
ஆகாயம் மந்திரம் சாதித்தல்
பூரிய பிரிவு தெரியாவிட்டால் இடநாசிப்பக்கம் கலை சந்திரனாகையால் அப்படி நடக்கும்போது வஸ்திர ஆபரணம், பூணல் தூதனுப்பல், அடிமை கொள்ளல் விவாகம் செய்தல் கிணறு வெட்டல் குடிபுகுதல், அரசைக் காணல், சாந்தி தெய்வப் பிரதிஷ்டை செய்தல், சுரம் தீர்த்தல் சமாதானம் செய்தல், தனம் வைத்தல்
சூரிய கலையில்
வலநாசியில் சூரியகலையில் உபதேசம் பெறல் வணங்கல், யுத்தம், வியாபாரம், சூது வழக்குரைத்தல், சவாரி செய்தல், சங்கீதம் பாடல், நித்திரை செய்தல் பிசாசு ஓட்டல், போஜனம் செய்தல் ஒளடதம் புசித்தல் ஸ்நானம் செய்தல் உத்தமம்.
சத்தியாய் சிவமாய் தண்டவமாடும் சரீரத்தின் துடி பயன்!
அடர்ந்து கை துடிக்கின் ஒரு வருடம், கால் 6 மாதம், நெற்றி 3 மாதம், கன்னம் 10 நாள், காது கேளாவிடில் 7 நாள், பார்வை தெரியாவிடில் 5 நாள், வாசனை தெரியாவிடில் 3 நாள், நாக்குழ்றில் 2 நாள், மரணமெனக் கொளக.
வாயில் சலம் வைத்து நிழலில் இருந்து இரவியில் உமிழ அதில் இந்திர தனுசு பஞ்சவர்ணமாகத் தோன்றினால் ஒரு வருடம் வரை மராணமில்லை.. முறிந்திருக்கில் அந்த ஆண்டில் மரணம். நிறம் மாறிய பொண்ணுருவம் தோன்றில் 6 மாதத்தில் மரணமாவார்.
அமாவாசை இரவியிலாகிலும் பருவ சந்திரனிலாகிலும் உருக்கிய நெய்யைக் கிண்ணத்திலிட்டுப் பூமியில் வைத்து முன் கண்ட இரவி மதியில் ஒன்றைப் பார்க்க வெண்மை நிறமாகக் காணில் பிராண பயமில்லை.. செம்மை- வாழ்வு. பொன்மை-கேடு, பசுமை-–நோய், கருமை-சாவு, தென்புறம் வட்டம் குறைந்து காணில் ஒரு வருடம், மேற்புறம் குறைந்தால் 6 மாதம், வடபுறம் குறைந்தால்- 3 மாதம், நடுவே தொள்ளையாயிருக்கில் 10 நாளில் மரணமாம்.
இரவி நிழல் அல்லது மதி பிரகாசத்தில் தனது நிழல் பூமியில் தனது உருவ அளவாயிருக்கும்போது அந்த நிழலை தனது நேத்திரம் இமையாமல் பார்த்துக் களங்கமில்லா ஆகாயத்தைப் பார்க்கில் தனது உருவம் பெரியதாய் தோன்றும். அது பொன்னிறமாகில் செல்வம், வெண்மை நிறமாகில் ஆயுள் வளரும், செம்மை ஆயுள் குறையாம், கருமை நலி. அவ்வுருவில் கைகால் தோன்றாவாகில் 6 மாதத்தில் மரணம். தலை தோன்றாமலிருந்தால் 3 மாதத்தில் மரணம். இந்தச் சாயை வடிவமானது தனது மனமும் நேத்திரமும் ஒற்றுமையாய் தோற்றமாயிற்று சாயை மறையாதோ! தன்னுடம்பு தன் வெளிக்குள் ஓய அகத்தினிடை ஓடாதோ! என்று கூறும்படி எண்ணும் கருத்தும் ஒற்றுமை செய்த அகநோக்குடையவர்கள் இருந்தபடி சராசரங்களின் இயல்பையும் மூன்று கால வர்த்தமானங்களையும் தெரிந்து கொள்ளக் கூடும். சாயை தீப பிரகாசமிருப்பது தெரிந்த விசயம். அஃது யாரென்று கவனிப்பதில்லை. அஃது எங்கும் நிறைந்தது என்பது தெரியாமையால் சிலருக்கு சங்கை தரும்.
ஒரு வீட்டில் நால்வராகக்கூடி அந்த வீட்டில் ஒரு பொருளையானாலும் ஒரு கட்டடத்தையானாலும் நால்வரும் நினைத்துக் கொண்டு தாம் நினைத்த சங்கதியறியாத ஒருவன் நேத்திரத்தைத் துணியால் மூடி அவன் தோள்மீது நினைத்த நால்வர் கையையும் வைத்து அவன் இஷ்டப்படி போகும்படி செய்தால் அவ்விடம் விட்டு நால்வர் குறித்த இடமே போய் நிற்பான். குறித்ததைத் தன் கையால் தொடுவான்.
இதன்றியும் ஒருவனை நமது சுவாசம் உள் சொல்லும்போது நினைத்தால் அதே சமயம் அவன் நம்மை நினைக்கின்றான்.
எதிரிலிருக்கும் ஒருவனுக்கு நடக்கும் கலையையும் அதிற் பூதியமும் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நமது கலையைப் பார்த்தால் அப்போது கலையும் பூதியமும் நின்று எதிரிக்கு நடக்கும் கலையும் பூதியமும் நடந்து தெரிவித்து உடனே முன் நமக்கு நடந்ததுபோல் நடக்கும்.
கடவுள் எங்கும் வியாபகாராயிருப்பதற்கு இன்னுமனேக திருஷ்டாந்தங்கள் இருக்கின்றன். அனேக சமய வதிகள் பேதா பேதங்களாய் எங்கள் சாமி உயர்ந்தவர் உங்கள் சாமி தாழ்ந்தவர் என்று தர்கிப்பது சரியன்று. பார்க்கும்போது பூமி, ஆகாயம், சந்திரர், சூரியர், இடி, மின்னல், மேகமிவைகளும் மத்தியில் உலவும் வாயுவும் யாவருக்கும் பொதுவாயிருக்க நூல் விசாரனையும் நல்லோர் பழக்கமும் அவர்களால் பெற்று அடைய வேண்டிய பயனனுமடையச் சக்தியில்லாதவர் கூறும் வீண் வாதமாய் இருக்கின்றன. எம்மதச் சார்பிலுதித்தவராயிருந்தாலும் எதிரிட்டிருக்கும் மரண பயத்திற்கு அஞ்சி திகிலடைந்து உலகில் சித்து இன்னதென்றுணர்ந்து சதா எதை நாடி நிற்க வேண்டுமோ அதில் நின்று முடிவு பெறுவதே மானிடமாகும்.
சிவம், விஷ்ணு, அல்லா, பராபரன் என்பன அவரவர்கள் சார்பின்படி கடவுள் நாமம். அனேகமாய் புகன்றாலும் அப்படிப் புகலும் வஸ்து யாது! அதை இன்னதென்றுணர்ந்தால் எம்மதச் சார்பிருந்தாலும் கடவுள் ஒன்று எனத்தெளிந்த பேரறிவாளரென யாவராலும் புகழப்படுவர்.
மாயையின் கூறாகிய அசத்து, சடம், துக்கம், அனித்தியம் கண்டமிவைகளை நீக்கி சிவத்தின் கூறாகிய சத்து சித்து ஆனந்தம் நித்தியம் பூரணமாகிய இவ்வைந்தின் தாத்பரியங்களையுணர்ந்தவர் இந்த நூலை படித்த அறிஞாவார்.
சரியை கிரியை யோக ஞானமாகிய நான்கு பக்குவர்களும் மோக்ஷமகிய முத்தியடைய வேண்டும் என்பதே கருத்து. அதிலும் சரியை கிரியையுடையவர் இப்பிறவியாகிலும் அல்லது மறு பிறவி மானிடமாகத் தோன்றியாகிலும் அதிக இகபோக சுகங்களையடைய வேணுமென்கிற ஆவல் பூண்டவர்களாகவும் இருக்கின்றனர். எவரெவர் உண்மையாக எந்தவித பாவனையும் கோரிக்கையுமாயிருந்து வருகின்றார்களோ அவற்றிலே ஆத்துமா தேகத்தை விட்டு நீங்கும்போது எண்ணம் உதிக்குமென்று கோரிக்கையின்படி செனனமும் இச்சகம் பெற்று அனுபவிக்க வேண்டுமென்று ஆகமநூல் கூறுகின்றன.
ஞானி இவர்கள் முடிவு பெறும்போது 96 தத்துவங்களும் ஒன்றிலொன்று ஐக்கியமாய் அவைகளுக்கு ஆதாரமாயும் அணுவுக்கணுவாயுமிருந்ந்த ஆன்மா தேகத்தை விட்டு மகாகாயத்தில் இலயமாவதும் அல்லது அத்தேகத்தில் தானே ஐக்கியமாவதும் நமது சிற்றறிவிற்கு விளங்காது அல்லது வினைகீடாய் வேறு பிறவி எடுப்பதற்கு எவ்வகையாக ஒரு புருடன் சுக்கிலத்திலணுகினவன் ஆத்மா சீவனென்பது போய்ச் சம்பந்தமுற்றதும். உண்மை இவ்வாறென அறிந்தால் மாத்திரம் நரக மோக்ஷம் உண்மை என்பதும் அனேக பிறவிகளெடுத்து அவற்றின் புண்ணிய பலத்தால் மானிடம் பெறுவதும் கைலாய வைகுந்த பரமபதமிடமும் எமலோக நரகமிடமும் கால தூதரும் நன்றாக விளங்கும். ஆகையால் கால தாமதம் செய்து உலக் வியாபாரப் பெருந்திரை இலாழாமல் மனத்தை ஒருவாறாக நிறுத்தி நூல் விசாரணையும் சாதுக்கள் சங்கமும் பெற்று நீரதிசயானந்தப் பேரானந்த சுகம்பெற நன்னிலை பெறுங்கால் மேற்கொண்ட சங்கைகள் நிவர்த்தியாகும்.
சுக்கில சுரோணித சம்பந்த காலம் அமைந்தபடி செனனமெடுத்தும் மரணமாகும் வரையில் அனுபவிக்க வேண்டியதிருக்க நாம் மத்தியில் என்ன முயற்சி செய்தாலும் யாதும் பயன்படாது என்று சிலர் புகல்வர். அவ்வகை கருதுவது நமது அக்கியானம் அனுபவிக்க வேண்டுவதை அனுபவிக்க வேண்டுவதானாலும் கடவுள் சிந்தை சதா உடையவர்களாகில் பர இச்சா பிராரத்துவமாகச் சகல கபங்களையும் கடவுளளித்து ரக்ஷிப்பர்.
வலக்கையை முகத்து நாசிக்கு நேராக நிறுத்திக் கொண்டு கண்ணினாலும் கைந்நாடி துடிக்குமிடத்தில் இமை ஆடாமல் பார்க்க கைச் சிறு துரும்பு கனமாய்த் தோன்றும். அப்படித் தோன்றுமாகில் 6 மாதம் வரை மரணமில்லை. அல்லது கை பிரமாணகவே தோன்றுமாகில் சீக்கிரம் மரணாமென்க..
முன் கண்ட பார்வையாகப் பார்த்துக் கை சிறியதாகத் தோன்றிப் பின்பு இருளாகத் தோன்றும். அவையும் நீங்கித் தீபபிரகாசமாக வெளிச்சமுண்டாகும். அப்படி தோன்றிய பிறகு அப்படிச் செய்யும் அப்பியாசிகள் அந்தப் பிரகாசத்தில் அனேக அற்புதங்களைக் காணுவதுண்டு. பிந்தச் சாதகமாகச் சிலகாலஞ் செய்தவர்களுக்கு விளங்கும்
நிழலுள்ள தாழ்வாரத்தில் வெளியாயிருக்குமிடத்தில் உடகார்ந்து கொண்டு முகம் பார்க்கும் கண்ணாடியை வலக்கையெலெடுத்து தனது முகத்தின் வல் நேத்திரக் கருமணியில் விளங்கும் வடிவைக் கண்னிமையாடாமலும் மனம் வேறு வழி செல்லாமலும் பார்த்திருந்த கண்ணில் இருந்து சலம் வடியும். அதற்கும் இமையாமல் பார்க்க இருளாகத் தோன்றும். அந்த இருளை அசைவறப் பார்த்திருக்க வெளி தோன்றும். அந்த வெளியினிடத்திலும் அனேக அற்புதங்களை அனுபவிகள் காண்பார்கள்.
உலகில் அஞ்ஞானமென்னும் கறுப்பு நிறமுள்ள மையைக் கையில் பொட்டுப்போல வைத்து தீப முன்னிலையில் கண்ணிமையாடாமல் மையைப் பார்த்து அதில் அனேக தேவதைகளைக் கண்டதாயும் தாங்கள் கோரிய இடம் பொருள் இவைகள் தெரிந்ததாயும் சொல்ல நாம் கேட்டிருகின்றோம். சத்த பரிச ரூப ரச கந்தமாகிய ஐந்தும் கூடியது அஞ்ஞனம். இதைப் பார்க்குமிடத்துக் கண்ணாரமுதமாய் விளக்கொளியாய் நின்றானை என்று கூறிய வாக்கியம் உண்மையாக இருக்கின்றது. மகான்கள் உரைத்த லக்ஷியங்களைப் பரிபாக பக்குவப்படிக்குச் சாதித்து அவைகளினால் முடிவு பெறும் பயனைத் தேகம் பிணமென்று புகலாமுன் அனுபவமுதிர்ந்து நிரதிசயானந்த நிர்விகல்பமாய் ஜீவன் முக்தனாக மனம் வாக்குக் காயத்தால் மகான்களைப் போற்றுவதே நமது கருத்தாகும்.
#####
ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#####
சிவயோக சாரம்!
சிவயோக சாரம் என்ற ராஜ யோக மார்க்கத்தை உணர்ந்து பல நூலகளில் உள்ள கருத்துக்களோடு சேர்த்து பூரணானந்தர் எழுதிய இந்நூலைப் படித்து உயிர்கள் பயன் பெற வேண்டும் குருஸ்ரீ பகோரா.
ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்!
இந்த ராஜயோகத்தை அப்பியசிக்கும் ஆசிரியன் தெளிந்த ஆத்ம ஞானியாய் அடுத்தவர்களை ஆதரித்துப் போதிக்கத் தக்கவனாய் இருக்க வேண்டும்.. சின்முத்திரையாகிய மௌன நிலை ஈதென்றும், அதைக் கைவல்யப் படுத்துவதற்குரிய ஆசனம் முதலிய விதிகள் இவையென்றும், சாம்பவி முதலிய மகா முத்திரை இவையென்றும், குண்டலி சக்தி ஈதென்றும், அதை விழிப்பிக்கும் மார்க்கம் ஈதென்றும், இதுவே சிவராஜ யோகம் என்றும் இந்த யோகம் செய்யத் தக்கவர் பெறத்தக்க நாதாந்தம் இதுவென்றும், இது வசமுற்றால் ஒரு மயக்கந் தோன்றுமென்றும் அது நீங்கும் வரையில் நின்றால் அருள் தரிசனம் உதயமாகு மென்றும் அவ்வனுபவம் அவ்வனுபவம் கிடைக்க காண்பானாதிகள் இறக்கு மென்றும் அங்ஙனம் இறக்கின் மனம் அசையாதிருக்குமென்றும் அப்போது அந்நாதாந்தத்தில் பஞ்சாக்ஷர முதலியவைகள் தோன்றாதொடுங்குமென்றும் இத்தன்மைப்பட்ட சுவானுபவ சாக்ஷாத்காரத்தை உணர்ந்த ஆத்ம ஞானாசாரியனாய் இருக்க வேண்டும்.
மாணாக்கன் எப்படி இருக்க வேண்டும்!
உத்தம ஜென்மமாயும், வித்தைக்கு உடையவனாயும், சாந்த சற்குண முடையவனாயும், பற்றில்லாதவனாயும், காம சங்கற்பம் இல்லாதவனாயும், கோபத்தை வென்றவானாயும், சத்திய தருமத்தை விரும்பியவனாயும், குரு பணிவிடையில் பிரியமுள்ளவனாயும், மாதா பிதாக்களை உபசரிப்பவான்யும், தனது கிருகத்தில் இருப்பவனாயும், நல்லொழுக்கமுடையவனாயும், சற்சீடனெனும் பக்குவமுடையவனாயுமுள்ள மாணாக்கனே இவ் இராஜயோகத்திற்கு உகந்தவனாவான்.
இத்தன்மைப்பட்ட நற்சீடன் சாக்ஷாத்காரத்தை உணர்ந்த ஞானாசிரியனைக் கண்டெடுத்து அவன் திருவடிகளில் பணிந்து அவன் மனங்களிகூறும்படி நடந்து உடல் பொருள் ஆவி மூன்றும் அச்சற்குருவின் திருவடியில் தத்தஞ் செய்து அநுக்கிரகிக்கும் திருவடித் தீக்ஷையையும் பிராணாயாமத்துக்குரிய் மூல மந்திரத்தில் முதல் வாக்கியத்தையும் இந்த யோகத்தின் விதிகளையும் உபதேசிக்கப்பெற்று குருவின் சன்னதியிலிருந்து சற்குரு சொல்லாமற் சொல்லும் முதல்வாக்கியத்தை உண்ணாமல் உன்னி யோக சாதனை செய்து வருங்காலையில் சுவானுபவத்தின் கண் அடையா நின்ற சம்சயங்களனைத்தும் தீரும்படி அவ்வாசிரியரிடத்தில் விண்ணப்பம் அடிக்கடி செய்து கொண்டு அந்தச் சங்கற்பம் நசிக்கும்படி கேட்டுக்கொள்ளல் வேண்டும்.
பிராண வாயுவின் நிலை!
மாணாக்கன் ஆரம்பத்தில் கவனிக்க வேண்டிய விதிகள் யாதெனில் அவை சூரியன், சந்திரன், அக்கினி என்னும் மூன்று நாடிகளை நடைகளின் நடைகளெனப்படும் மூன்று நாடிகளின் சுவாத்தினாலுண்டாகும் சத்தத்தைக் கண்டறிய வேண்டும். அச்சத்திற்கு அஜபா என்று பெயர்.
அந்தச் சத்தத்தைக் கண்டுபிடிக்கச் சில விதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
வாயுக்கள் மூன்று அவை இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்பவவாகும். இடைகலை என்பது இடநாசியிலும், பிங்கலை என்பது வலநாசியிலும் சுழுமுனை என்பது இரண்டு நாசியிலும் வரவும் போகவும் இருக்கிற சுவாசம். இதற்கு அஜபா ந்ன்பது பெயராம் இடைகலை என்பது சந்திரனும் பிங்கலை என்பது சூரியனும் சுழுமுனை என்பது அக்கினியுமாம்.
அன்றியும் இடைகலையானது சுக்கிலபட்சமாகிற அமாவாசையின் பிரதமை, முதல் மூன்று நாளைக்கு காலையில் தொடர்ச்சியாய் வர வேண்டும். சதுர்த்தி முதல் மூன்று நாளைக்கு பிங்கலை நடக்க வேண்டும். இதே மாதிரியாக சுக்கில பட்சம் முழுமையும் மூன்று நாளக்கு இடைகலையும் மூன்று நாளைக்கு பிங்கலையுமாய் நடக்க வேண்டு
இவ்வண்ணம் சுக்கில பட்சத்தில் சந்திரக்கலை வராவிடில் அவனுக்குத் தேக அசவுக்கியப்பட்டு கவலை மேலிடும்மென்றறிக. அதைச் சரிப்படுத்த வேண்டிய விசயத்தை பற்றி பின் வரும் வாக்கியத்தில் காண்க.
கிருஷ்ணபக்ஷம் அதாவது பௌர்ணமி பிரதமை முதல் மூன்று நாட்களும் பிங்கலை நடக்க வேண்டும். பின் மூன்று நாளைக்கும் இடைகலை நடக்க வேண்டும்
இத்தன்மையாக இரண்டு கலைகளும் மும்மூன்று நாளைக்கொரு முறை மாறிமாறி நடக்க வேண்டும். இதை மாணாக்கன் குறிப்பாக தினம் தினம் கவனிக்க வேண்டும்.
சுழுமுனை கூடுவது கஷ்டமாதலால் அதைச் சாக்கிரதையாய் அப்பியசித்துப் பழக வேண்டும்.
மாணாக்கனுக்கு முக்கியச் வேலை இடைகலையும் பிங்கலையும் திதிக்குத் தவறி நடந்தால் அத மாற்ற வேண்டிய விசயத்தைபற்றிக் குருமூலமாகக் கேட்டுத் கொள்ளுதலே.
இடைகலையின் பலன்!
இடைகலை நடக்கும் காலம் தாகம், ஜலவிருத்தி, தீர்மானம் செய்ய, வேலை செய்ய, நகை செய்ய, நகை அணிந்து கொள்ள், அன்னிய தேசத்திலிருந்து யாத்திரை போக, வீடு, சத்திரம், கோவில் கட்ட, திருமணஞ் செய்ய, வஸ்திரம் கட்ட,, தருமஞ் செய்ய, சாமான் சேகரம் செய்ய, கிணறு குளம் வெட்ட, கலியாணம் செய்ய, வஸ்திரம் கட்ட, வைத்திய சாஸ்திர அப்பியாசம், மருந்து கற்பங்கள் முதலியன செய்ய, சினேகிதனைக் காண, வியாபாரஞ் செய்ய, தானியம் இருப்புச் செய்ய, வீட்டிற்கு குடிபோக, விதை விதைக்க, சமாதானஞ் செய்ய, அன்னிய பாஷை அப்பியாசஞ் செய்ய, உபதேசஞ் செய்ய, பலனைப் பற்றி யாத்திரைபோக, எஜமானன் ஆக, ஆடல் பாடல் கற்க, ஒரு புதிய ஊருக்குப் போக, பந்துக்களைக் காண ஆகிய நடவடிக்கைகளுக்குப் பயன்படும்.
இடைகலை சரிவர நடந்தால் தேகம் சௌக்கியமாக இருக்கும்.. இதில் ஆகாசத்தில் அம்சமிருக்குமானால் முன் சொன்ன நடவடிக்கைகள் ஒன்றும் செய்யக் கூடாது. இரவாய் இருந்தாலும் பகலாய் இருந்தாலும் மேற்சொன்ன வேலைகலை இடைகலையிலேயே நடத்த்ல் வேண்டும்.
பிங்கலையின் பலன்!
வலநாசியில் உண்டாகிற பிங்கலையில் அதாவது சூரிய நாடிக் காலத்தில் கஷ்டமான வேலை எதுவும் அப்பியசிக்க , எவ்விதக் கொடூரமான செய்கையும் செய்ய, மலம் கழிக்க, போகம் செய்ய, கடல்யாத்திரை போக, சண்டை செய்ய, படை எடுக்க, கஷ்டமான சாஸ்திரம் கற்க, குதிரை முதலிய நாற்கால் ஜீவன்களை வாங்க, விற்க, மட்டமான மலை ஏற, குதிரை மல்யுத்தம் முதலியன பழக்கம் செய்ய, ஆறு, குளம், க்டல் முதலிய இடங்களில் நீந்த, உலோகங்கள் குறித்த சாஸ்திரம் கற்க, பாடம் எழுத, பணம் வாங்க கொடுக்க, எஜமானத்துவமான வேலை பார்க்க, அரசைக் காண, இரண வைத்தியத்திற்கு மருந்து செய்ய கடினமான் ஆகாரம் ஜீரணிக்க ஆகியவற்றை முயற்சி செய்யலாம்.
சுழுமுனையின் பலன்!
சுழுமுனை இரண்டு நாசியிலும் வரும் சுவாசம். அதை அதன் நடவடிக்கை காலத்திலேதான் அறியலாம். ஒரு கணத்தில் இடநாசியிலும் ஒரு கணத்தில் வலநாசியிலும் வரும் வாயுவானது இரண்டு நாசியில் வரும்போது சுழுமுனையாம்.
இந்தச் சுழுமுனை நடக்கும்போது உலக நடவடிக்கைகளை நிறுத்தி விட வேண்டும் தவறி நடந்தால் அபஜயமாம்.
எண்ணத்திற்கு விரோதமாய் நடக்கும் இந்தவாயுவின் காலத்தில் ஆத்துமத் தியானமும் பூஜையும் செய்யலாம். இந்த வாயு நடக்குங் காலத்தில் சுவாச பந்தனம் செய்யக்கூடும். இந்தச் சுவாசம் கட்டுவதனால் மனத்திற்கும் தேகத்திற்கும் இன்பம் உண்டாகின்றது.
நாடிகளின் நிலை!
மனிதர்களுக்கு எழுபத்தீராயிரம் நாடி நரம்புகள் இருக்கின்றன். அவற்றுள் முக்கியமானவை இருபத்து நான்கு இவை எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கின்றது. இவைகளைக் குண்டலினி சக்தி என ஆதிநாதர் அருளியுள்ளார்.
குண்டலி சக்தி மத்திய ஸ்தானத்தில் இருக்கின்றது. பத்து நாடிகள் மேலாகவும் பத்து நாடிகள் கீழாகவும் இரண்டு நாடிகள் ஒரு பக்கத்திலும் மற்ற இரண்டு நாடிகள் மற்றொரு பக்கத்திலும் இருக்கின்றன.
இந்தக் குண்டலினி சக்தி பாமபைப் போலச் சுற்றிக் கொண்டு சுவாதிஷ்டானத்திற்கு மேலாகவும் மணி பூரகத்திற்குக் கீழாகவுமிருக்கின்றது.
இந்த இருபத்து நாடிகளுல் பத்து நாடிகளை முக்கியமாக எடுத்துள்ளனர், இந்த பத்து நாடிகளின் முன் சொல்லிய மூன்று நாடிகளை முக்கியமாக எடுத்திருகின்றபடியால் அவற்றுள் இடைகலையானது தேகத்தின் இடப்பக்கத்திலும், பிங்கலையானது தேகத்தின் வலப்பக்கத்திலும் சுழுமுனையானது தேகத்தின் மத்தியிலுமிருக்கின்றன.
ஆசன விதிகள்!
பத்திரம், வீரம், பதுமம், கோமுகம், குக்குடம், ஆகிய ஐந்தும் ஞான சாதனத்திற்குரிய ஆசனங்கள் ஆகும்.
இவற்றுல் பதுமாசனமாவது இரண்டு தொடைகளில் இரண்டு பாதங்களையும் செவ்வையாய் வைத்து உட்காருதல். இது சகல பாவங்களையும் நாசம் செய்வதாகும். இதை மான்தோல், புலித்தோல், வெண்துகில், சித்திராசனம், தர்ப்பை இவைகளின் மேலிருந்து அனுபவிக்கலாம். இதில் இடை, வயிறு, கண்டம், தலை சமனாய் ஸ்தம்பத்தைப் போல் நிமிர்ந்திருக்க வேண்டும். அன்றியும் வடமுகம் நோக்கி த்க்ஷிணாமூர்த்தமாய் எழுந்தருளியிருக்கவேண்டும். ஆத்தும ஞான குருவின் சன்னிதிக்கு நேராக உட்காரவேண்டும்,.
கிருகஸ்தனுக்கு பதுமாசனமும், சந்நியாசிக்கு சித்தாசனமும் ஹடயோக தீபிகையில் சொல்லப்ட்டிருக்கின்றன.
இரேசக் பூசக் லக்ஷணம்!
பிராண வாயுவின் அசைவு எதுவோ அதுவே சித்தத்தின் அசைவென்று மேலான புத்திமான்கள் பிராணனது சலனத்தை ஜெயித்தலில் முயல்கின்றனர். ஆகையால் ராஜஸ, தாமஸ குணங்களை நீக்கி சாத்துவிக குணத்தோடு பிராணாயாமம் செய்ய வேண்டும். பிராணாயாமத்தில் வெளிவாயுவை உட்கொள்ளுவது பூரகமாம். அவ்வாயுவை நிறுத்துவது கும்பகமாம். கும்பித்த வாயுவை வெளிப்படுத்துவது இரேசகம் எனப்படும். இதுவே பிராணாயாம அங்கமாகிய இரேசக பூரக லக்ஷணம்.
சூரிய நாடியாகிய பிங்கலையால் பிராணனை இழுத்து மெள்ளமெள்ள வயிற்றை நிரப்பவிதிப்படி பந்த பூர்வமாகிய கும்பகம் செய்து மறுபடியும் சந்திர நாடியாகிய இடைகலையால் இரேசிக்க வேண்டும்.
சந்திர நாடி, சூரிய நாடிகளுல் எந்த நாடியால் பூரிக்கிறானோ அதனாலேயே இரேசித்து நிரோதித்தலால் வேர்வை நடுக்கம் முதலியவை உண்டாகும்.
அதுவரையில் கும்பித்து எதனால் பூரகஞ் செய்யப்பட்டதோ அதற்கன்னியமான நாடியால் மெள்ள மெள்ள ரேசிக்க வேண்டும். வேகமாய் ரேசித்தால் பலக்குறைவு உண்டாகும்.
எதனால் ரேசகம் செய்யப்பட்டதோ அதனலேயே பூரகம் செய்யலாம். இடைகலையால் பிராணனைப் பூரித்து கும்பிக்கப்பட்ட பிராணனை மற்றப் பிங்கலையால் இரேசிக்க வேண்டும். பிங்கலையால் வாயுவைப் பூரித்து கும்பித்த வாயுவை இடைகலையால் இரேசிக்க வேண்டும்.
இவ்வண்ணம் சந்திரனால் பூரித்துக் கும்பித்து சூரியனால் இரேசிக்க வேண்டும். சூரியனால் பூரித்துக் கும்பித்து சந்திரனால் ரேசிக்க வேண்டும்.’
இவ்விதம் சூரிய சந்திர நாடிகளின் அப்பியாசத்தை தினமும் விஸ்தரிக்க வேண்டும். அதனால் நாடிகள் மூன்று மாதத்திற்கு மேல் சுத்தமாகின்றன.
அஜபாவின் நிலை!
இந்த யோகத்திற்குரிய ஏகாந்த ஸ்தானத்தில் பதுமாசனமிட்டு உட்கார்ந்து உடனே அஷ்டகந்த தூபமிட் வேண்டும். இந்த யோகத்திற்காக ஏற்படுத்திய அறையானது மிக நலமாய் இருக்க வேண்டும். தான் வெளியே இருக்க வேண்டும். இதில் சொல்லிய நான்கு காலங்களில் எந்தக்காலமாவது வைத்துக்கொண்டு அப்பியாசப்படுத்த வேண்டும்.
இடைகலையானது எப்போதும் வலநாசியிலும் ஹம்ஸம் என்றேயிருக்கும். ஹம்ஸம் என்பது ஆத்மாவின் பெயராகும். முதலில் வெளியே வருகிற சுவாசத்தின் சத்தமாகிய ஹம் என்பதையும் உள்ளே போகிற சுவாசத்தின் சத்தமாகிய ஸம் என்பதையும் கண்டறிய வேண்டும். இந்த ஹம்ஸம் என்கிற சத்தத்தைக் கண்டறிந்தவன் இந்த அப்பியாசத்தில் முதற்படி தெரிந்தவன்.. இம்மாணாக்கன் எப்போதும் உலக ஆசையையும் குடும்பமாகிய கட்டையும் நிவர்த்திக்க வேண்டும். ஒரே காலத்தில் நீக்கக்கூடாது. ஏனெனில் ஒரு வருஷ காலம் வரையில் மனக்கலக்கமும் பலவிதக் கவலையும் நேரிடுமாகையால் நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக நீக்க வேண்டும்.
மாணக்கன் கூடிய ஆளவு மனத்தை ஸ்திரப்படுத்த வேண்டும்.
இதே மாதிரியாகத் தன் சுவாசத்தைக் குறித்து அதனால் உண்டாகும் ஹம்ஸம் என்ற சத்தத்தை கண்டறிய வேண்டும்.. இப்படி அப்பியசித்து மூன்று நாடிகளின் குணத்தையும் ஹம்ஸம் என்ற சத்தத்தையும் கண்டறிந்தவுடன் தத்துவத்தை அறியவேண்டும்.
உணவு முறை!
மூன்று நாடிகளைக் கண்டறியாமல் பஞ்ச தத்துவத்தை ஆரம்பிக்கக்கூடாது. இந்த யோக அப்பியாசி ஜீரண சக்தியை உணர்ந்து தேகத்தை பலப்படுத்த வேண்டும்.. அதாவது அரிசி, கோதுமை, பச்சைப் பயிறு, துவரை, உளுந்து, கம்பு, கேழ்வரகு, நெய், பால், தயிர், மோர் முதலியவற்றை உபயோகிக்க வேண்டும். இந்த யோகி அரைவயிறு அன்னமும் கால் வயிறு ஜலமும் சாப்பிட வேண்டும். எனெனில் உள்வாயு மற்ற ஒரு பாகத்தில் சஞ்சரிக்க வேண்டும் என்பதை அறிக.
புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு, கார்ப்பு முதலியவை அதிகமாகச் சேர்க்கக் கூடாது, இத்தன்மைப் பட்ட யோகி சன்னியாசியாக வேண்டியதில்லை. எல்லாக் கிருகஸ்தரும், செல்வர்களும், ஏழைகளும் ஜாதிபேத நிற வித்தியாசம் பார்க்க வேண்டுவதில்லை.
பலித நிலை!
எவர்கள் திரிகரண சுத்தமாக இந்த யோகத்தை செய்வார்களோ அவர்களுக்கு இது சித்தியாகும் என்பது நிச்சயம். ஒருவன் பதினெட்டு வயதில் இந்த யோகத்தை அப்பியசித்தானானால் ஐம்பதாவது வயதில் அந்தக் கேசரி முத்திரையை அடைவான். இத்தன்மையான யோகி மது மாமிசங்களைக் கண்டிப்பாய் நீக்கியிருப்பதன்றி ராஜஸ தாமஸ குணங்களற்று தத்துவத்தைக் கொண்டு சுறுசுறுப்பாக அப்பியசித்து அதி தீவிர பக்குவியாய் வாழ்வன்.
பஞ்ச தத்துவ நிலை!
இனி சூக்ஷ்ம பஞ்சாக்ஷரத் தியானத்தின் ஆதாரமாகிய பஞ்ச தத்துவங்களை குரு சம்பிரதாயத்தால் அறிய வேண்டுவதும் அந்த பஞ்ச தத்துவங்களின் குறிப்புகளின் விவரமுங் கூறப்படும் அதாவது முன் சொன்ன மூன்று நாடிகளின் குணங்களையும் சுத்தமாக அறிந்து கொள்ள வேண்டும். ஒன்றை ஒன்றில் மாற்றிக் குண்டலியை அடையாமல் தத்துவங்களை அப்பியசிக்கலாகாது.
முதலில் சொல்லியிருக்கின்ற நாடிகளைத் தன் வசப்படுத்திக் கொள்ளாமல் யோகி தத்துவங்களை ஆரம்பிக்கக் கூடாது. போஜனம், மலம் கழித்தல் போகஞ்செய்தல் இவை மூன்றும் சூரிய நாடியில் செய்பவை. தாகம் ஜலவிருத்தி இவைகளை இடைகலையில் செய்ய வேண்டும்.
பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் ஐந்து தத்துவங்களும் மூன்று நாடிகளில் நிமிஷத்திற்கு ஒரு முறை மாறிக் கொண்டே வருகின்றன. இந்தத்தத்துவங்களை கண்டறிவதற்குரிய வகையைக் கூறுவோம்.
எவர்கள் இந்த மூன்று நாடிகளை அப்பியசித்திருக்கின்றார்களோ அவர்களே இந்த யோகத்திற்குரியவர்கள். இந்த உலகம் பஞ்ச பூதங்களால் சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றது. இது கண்டு கொள்பவர்களுக்கு ஆயுள் விருத்தியாகும். அப்படிப்பட்டவர்கள் பூஜை முதலாகிய உபசாரங்கள் செய்யப்பெற்று மேலாவார்கள்.
இந்த ஐந்து தத்துவங்களும் சத்திய லோகம், பூலோகம், மிருத்திய லோகம் முதலாகிய இடங்களில் வியாபித்திருக்கின்றது. இவைகட்கு அன்னியமாக ஒரு வஸ்துவும் ஏற்படாது. இப்பஞ்ச தத்துவத்தை கண்டறிவதற்கு விவரம் சொல்லுவோம்!
1.தத்துவத்தின் நடை,
2.சுவாசத்தினால் தத்துவங்களை அறிதல்,
3.சுவாசத்தில் தத்துவங்களின் அடையாளம்,
4.தத்துவங்களின் நிறம்
5.தத்துவங்களின் சுவை,
6.சுவாசத்தின் அளவு,
7.தத்துவங்களின் அசைவு,
8.தத்துவங்களின் பலன்.
இந்த எட்டு விதங்களினால் பஞ்ச தத்துவத்தை கண்டறிய வேண்டும்..
மாணாக்கன் எந்த வாயுவில் எந்தத் தத்துவம் நடக்கிறதோ அதைக் கண்டறிதல் வேண்டும். மேலும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ப்ஞ்சேந்திரியங்களைச் சண்முகி முத்திரையால் மூடிக்கொண்டு தினம் தினம் கொஞ்சங்கொஞ்சமாய் அப்பியசிக்க வேண்டும். அதிகமாக அப்பியசித்தால் அசௌக்கியம் நேரிடும். குரு எவ்வளாவு பிரமாணஞ் சொல்லுவாரோ அவ்வளவுதான் நடக்க வேண்டும்.
1.தத்துவத்தின் நடை,
இந்த சண்முகி முத்திரையால் மூடிக்கொண்டு அப்பியசிக்குங் காலத்தில் மஞ்சள் நிறம் தோன்றினால் பிருதிவி என்றும்
வெண்ணிறம் தோன்றினால் அப்பு என்றும்,
சிவப்பு நிறம் தோன்றினால் தேயு என்றும்,
பச்சை நிறம் தோன்றினால் வாயு என்றும்
கருப்பு நிறம் தோன்றினால் ஆகாயம் என்றும் சொல்லப்படும்.
2.சுவாசத்தினால் தத்துவங்களை அறிதல்,
மாணாக்கன் தன் முன் கண்ணாடி வைத்துக் கொண்டு அதன்மேல் சுவாசத்தை விட்டால் அது
நாற்சதுரமாயிருந்தால் பிருதிவி என்றும்
அரையுருண்டையாயிருந்தால் அப்பு என்றும்
முக்கோணமாயிருந்தால் தேயு என்றும்,
அறு கோண உருண்டை வடிவில் இருந்தால் வாயு என்றும்
சிறு புள்ளிகள் மாதிரியிருந்தால் ஆகாயமென்றும் அறிய வேண்டும்.
3.சுவாசத்தில் தத்துவங்களின் அடையாளம்
மாணாக்கன் சுவாசம் விடும்போது
நேராகப் போனால் பிருதிவி,
கீழாகப் போனால் அப்பு,
மேலாகப்போனால் தேயு,
ஒழுங்கீனமாய்ப் போனால் வாயு,
அடங்கிப் போனால் ஆகாசமென்று அறிய வேண்டும்.
4.தத்துவங்களின் நிறம்
பிருதிவி -மஞ்சள்
அப்பு -வெண்மை,
அக்கினி -சிவப்பு,
வாயு -பச்சை
ஆகாயம் –கறுப்பு என இவைகளைக் கண்டறிய வேண்டும்.
உணரும் விதம்: ஒவ்வொரு வண்ணமுள்ள குண்டுகள் ஐந்தை தன்க்குப் பின்னால் வைத்துக் கொண்டு பதுமாசனத்தில் உட்கார்ந்து தனது எண்ணத்தைக் கூட்டி நிஷ்டையிலிருந்து கொண்டு பஞ்ச தத்துவத்தில் எதையாகிலும் ஒன்றை நினைத்துப் பின்னால் இருக்கின்ற குண்டுகளில் ஒன்றை எடுப்பானானால் அது தான் எண்னிய நிறம் போல் இருந்தால் இதை அறிந்தவன் ஆகின்றான். இவ்வண்ணம் ஒவ்வொரு குண்டையும் எடுபானானால் முற்றுமுணர்ந்தவன் ஆவான்.
5.தத்துவங்களின் சுவை,
தித்திப்பு –பிருதிவி
துவர்ப்பு –அப்பு
புளிப்பு –தேயு
உவர்ப்பு –வாயு
கார்ப்பு –ஆகாயம்
6.சுவாசத்தின் அளவு,
சுவாசம் 12 அங்குலம் நீண்டால் பிருதிவி
16 அங்குலம் நீண்டால் அப்பு,
4 அங்குலம் நீண்டால் தேயு,
8 அங்குலம் நீண்டால் வாயு,
மூக்கினுள்ளே இருந்தால் ஆகாயம்
7.தத்துவங்களின் அசைவு,
அசையாத வேளை –பிருதிவி,
அசையும் வேளை –அப்பு,
கஷ்டமான வேளை –தாயு,
துஷ்ட வேளை –வாயு,
பூசை வேளை –ஆகாயம்.
8.தத்துவங்களின் பலன்.
பிருதிவி தத்துவத்தில் ஆரம்பிக்கும் வேளை கண்டிப்பாய் இலாபத்தில் முடியும்.
ஜல தத்துவத்தில் அசையும்படியான வேலைகள் செய்யத் தக்கவை ஏனென்றல் எதாவது ஒரு முடிவான வேலையை ஆரம்பித்தால் சீக்கிரத்தில் முடியும்.
அக்கினி, வாயு, ஆகாயம் ஆகிய மூன்று தத்துவத்தில் எந்த வேலையை ஆரம்பித்த போதிலும் அது அபஜெயமாகவே முடியும்.
ஆகையால் மாணாக்கன் இவைகளை எந்தக் காலத்தில் உபயோகப்படுத்த வேண்டுமோ அந்தக் காலத்தில் தத்துவத்தை அறிந்து உபயோகப்படுத்த வேண்டும்.
இந்தத் தத்துவத்தில் புத்தியைச் சரியாகச் செலுத்த வேண்டும். ஏனெனில் வியாதி முதலாகிய ஹிம்சைகள் வரவொட்டாமலும் பலவிதக் குண்மில்லாமலும் நிரோதத்தை ஒரே குண்மாக இருந்து பார்க்க வேண்டும்.
பிராணாயம நிர்ணயம்!
அதாவது முன் சொன்ன பிராணாயாமத்தின் பிரமாணாத்தை உணர்த்துதல். அதாவது அருணோதய முதல் மூன்று நாழிகை வரையிலும் மத்தியானத்திலும் அஸ்தமிக்கிறதற்கு முன்னும் பின்னுமாக இரு முகூர்த்தம், -அர்த்த ராத்திரியிலும் பிரதி தினம் நான்கு முறை செய்ய வேண்டும். காலம் ஒன்றுக்கு 80 பிராணாயாமம் வரையிலும் நன்றாக அப்பியசிக்க வேண்டும். நான்கு முறை செய்தால் தினந்தோறும் 320 பிராணாயாமமாகின்றன.
முகூர்த்தமென்பது இரண்டு நாழிகையளவுள்ளது.
ஒரு புருஷன் அப்பியசிக்க வேண்டுமானால் காலையில் 80ம் மத்தியானத்தில் 40ம் சாயங்காலத்தில் அர்த்த ராத்திரியில் 20ம் ஆக மெள்ள மெள்ளப் பிராணாயாமம் செய்ய வேண்டும்.
அது கைவல்யப் படும்போது முதலில் வேர்வையும் இரண்டாவது நடுக்கமும் மூன்றாவது தவளைக் கத்தும், அப்பியாசத்தால் பதுமாசனத்தில் இருக்கையில் பூமியினின்று ஆகாயத்தில் தெழும்புதலும் உண்டாகுமென்பது குருநாதரால் சொல்லப்பட்டிருக்கின்றது.
கிருகஸ்தாசிரமிகளுக்கு உபயோகம்!.
இந்தப் பிராணாயாமம் கிருகஸ்தனுக்குப் பாப சுத்தியின் பொருட்டும் யோகிகளுக்கு யோக சித்தியின் பொருட்டுமாம். கிருகஸ்தன் சங்கத்தை விட்டு ஏகாந்தத்திலிருந்து அ[ப்பியாசம் செய்ய வேண்டும் அதன் பின் ஆகாரத்தின் பொருட்டு வெளியே சங்கத்தில் பிரியமுடையவன்போல் வியவகரிக்க வேண்டும். கருமத்தால் உண்டான யாவும் கருமத்தின் படியிருக்கின்றன. நிமித்த காரணமாக இவற்றைச் செய்வதில் ஒருகாலும் தோஷமில்லை.
நல்ல விவேகி இந்த யோகத்தை அனுசரிப்பானானால் அவன் அவசியம் சித்திய்டைவான். இதிற் சம்சயமில்லை, அவன் புண்ணிய பாவங்களீனின்றும் விடுபட்டு தேகாபிமானத்தை நீக்கி கிருகத்திலிருந்தே முத்தியை அடைவான். அந்த யோகியானவன் லோக சங்கிரகம் லோக பரிபாலனமுமாகிய தனது காரியத்தில் புண்ணீய பாவங்களைச் செய்யுனும் அப்புண்ணிய பாவங்களீனால் பற்றப்படமாட்டான். கிடைத்ததில் சந்தோஷமுடையவனாயும் உள்ளே கொஞ்சமும் பற்றில்லாதவனாயும் கால வரம்புகளும் உள்ளவனாவும் யோக சாதனத்தில் பொருந்தியிருப்பான். யோகக் கிரியைகளோடு கூடிய கிருகஸ்தனுக்கு ஈஸ்வர வாக்கியமாகிய பிராணவத்தின் சத்தத்தால் சித்தியுண்டாகும். ஆனால் அவனதை செம்மையாக அப்பியசிக்க வேண்டும்.
கிருகஸ்தன் புத்திர தாராதிகளால் நிரம்பியவனாய் வீட்டில் இருந்து கொண்டு அகப்பற்றில்லாமல் யோக மார்க்கத்தில் தன்னிடத்தில் சித்தியின் அடையாளங்களைக் கண்ட பிறகு எனது ஆஞ்ஞையைச் சாதித்துக் கிரீடிப்பன் என்று சிவசங்கிதையும் கிருகஸ்தனுக்கு சித்தி உண்டாகுமென்று சாதிக்கின்றது.
மாத்திரை!
ஆரம்பத்தில் ஒரு மனிதன் ஜாக்கிரத்தில் விடும் சுவாசம் வெளிப்பட்டு உள்ளே போகிறதெவ்வளவோ அவ்வளவு பிராணாயாமத்தின் மாத்திரையாகும்.. அனுபவத்தின் பின் ஒரு புருஷன் நித்திரை செய்யும் போது சுவாசம் எவ்வளவு காலம் போய்த் திரும்புகிறதோ அவ்வளவு காலம் பிராணாயாமத்தின் மாத்திரை எனப்படும்.
அப்பியாசம்!
மாணாக்கன் அப்பியாச காலத்தில் பால், நெய் முதலியவற்றோடு கூடிய உண்வை உண்பது சிலாக்கியம். அப்பியாசம் திடமான காலத்தில் அப்படிப்பட்ட நியமம் வேண்டுவதில்லை என்றும் பிராணன் பிராணாயாமம் ரேசக பூரக கும்பக மாத்திரைகளென்றும் பிறாணன் என்பது தன் தேகத்தில் ஜீவித்திருக்கும் வாயுவென்றும் ஆயாமம் என்பது அந்த வாயுவைத் தடுப்பதென்றும் நாரதீயத்திலும் சௌரவ புராணத்திலும் சொல்லப்பட்டிருக்கின்றன.
இரேசக பூரக கும்பக பேதத்தால் மூன்று விதமாயும் மூன்று வர்ணமாயும் இருப்பதால் பிரணவமே பிராணாயாமமெனப்படும். பதுமாசனத்திலிருக்கும் புருஷன் நாசி நுனியில் சந்திரபிம்பப் பிரகாசங்களால் விரிந்த அகார மூர்த்தியானது இரத்தாங்கமுடையது. அன்னவாகினி தண்டங்கரத்தில் உடைய வாலையுமாகி காயத்திரியாகின்றது. கருடவாகினி எள் வர்ணமுடையது. சக்கரத்தை கரத்தினிலுடையது. சாவித்திரியாகின்றது. மகாமுர்த்தியானது கருமையான அங்க,முடையது, இடபவாணி வயது சென்றதும் குலந்தரித்ததுமாகிய சரஸ்வதியாகின்றது. அகராதி மூன்றிற்கும் காரணம் பரஞ்சோதியாகிய ஏகாக்ஷ்ர பிரணவமாகிறதென்று தியானிக்க வேண்டும்.
இடையினால் வெளிவாயுவை மாத்திரை அளவு பூரித்து அகாரத்தைச் சிந்தித்து பூரித்த வாயுவை 64 மாத்திரை அளவு கும்பித்து உகாரத்தை தியானித்து கும்பித்ததை பிங்கலையில் 32 மாத்திரை அளவு இரேசித்து மாகாமூர்த்தியை தியானிக்க வேண்டும்.
அன்றியும் பூரகம் 12 ஓங்கார்மாகவும் கும்பகம் 16 ஓங்கார்மாகவும் இரேசகம் 10 ஓங்காரமாகவும் செய்ய வேண்டும். இது பிராணாயாமம் அப்பியாசம் எனப்படும். பிரமன், விஷ்ணு, உருத்திரன், மூவரும் பூரக கும்பக இரேசகங்களுக்கு அதி தேவதைகளென்று சொல்லப்படுவர்.
குண்டலினி சத்தி!
நித்திரை செய்யுங் குண்டலியானது குருபிரசாத மூன்றாம் வாக்கியத்தால் எப்போது விழிக்கின்றதோ அப்போது சகல பதுமங்களும் ஆறு சக்கரங்களும் பிரம கிரந்தி விஷ்ணு கிரந்தி உருத்திர கிரந்தி என்னும் மூன்று கிரந்திகளும் பேதத்தை அடைகின்றன.
அப்போது சூன்ய பதவி என்னுஞ் சுழுமுனையில் பிரணவாயு இராச மார்க்கமாக அனுசரிக்கப்படுகின்றது.
சுகமாகப் போக்குச் சம்பவித்தால் சித்தம் நிராலம்ப நிர்விஷயமாகின்றது. சித்தம் நிராலம்பமாகுங்கால் காலனை வஞ்சிக்கக் கூடும்.
சுழுமுனையென்றும் சூன்ய பதவி என்றும் பிரமாந்திரமென்றும் மகாமேருவென்றும் பெருவழி என்றும் மாயான மென்றும் சாம்பவி மத்திய பாகமென்றும் சொல்வதால் இந்த குண்டலி பேதத்தினாலேயே ஷட்சக்கர பேத முதலியவை உண்டாகின்றமையால் முழு முயற்சியோடு பிரமரந்திரத்தின் சச்சிதானந்த லக்ஷணப் பிரமத்தை அடைவதற்கு உபாயமாகிய சுழுமுனையின் வாயிலை முகத்தால் மூடிக்கொண்டு நித்திரை செய்யும் ஈஸ்வரியாகிய குண்டலியை விழிப்பிக்க மகாமுத்திரை முதலியவற்றைச் செவ்வனே அனுசரிக்க வேண்டும்.
இந்தக் குண்டலி சத்தியானது கந்தத்தின் மேல் பாகத்தில் யோகிகளுக்கு மோக்ஷத்தின் பொருட்டும் மூடர்களுக்குப் பந்தத்தின் பொருட்டுமாகத் தூங்குகின்றது. சகல யோக தந்திரங்களுக்கும் குண்டலி சத்தி ஆதிக்கியமாய் இருப்பதால் அக்குண்டலி சத்தியை எவன் அறிகிறானோ அவன் யோக வித்தாவான் என்றும் யோகிகள் தூங்கும் குண்டலியை விழிக்கச் செய்கிறவர்களென்றும் அடயோக தீபிகையில் சொல்லப்பட்டிருக்கின்றது.
குண்டலி ஸ்தான நிலை!
மூலாதாரத்தில் பொருந்தும் உட்பாகமாகிய குண்டலியை சூரியனால் பூரிக்க வேண்டும். குதத்திற்கு இரண்டங்குலம் மேலும் இலிங்கத்திற்கு இரண்டங்குங் கீழுமாக தேகத்தின் மத்தியானது சரீர நடுவாகச் சொல்லப் பட்டிருக்கின்றது.
கந்தஸ்தானம் மனிதர்களுக்குத் தேக மத்திய மூலாதாரத்தினின்றும் ஒன்பதங்குலத்தின் மேல் நான்கு அங்குல அகலமும் நீளமும் உள்ளதாய் முட்டை போன்று வடிவுள்ளதாய் துவக்குத் தோல் முதலிய வற்றால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. குதத்திற்கு இரண்டங்குலமேல் தேக மத்திய பாகம் ஓர் அங்குலத்திலிருந்து ஒன்பதங்குலம் வரை கந்த ஸ்தானமாம்.
ஆகப் பன்னிரண்டு அங்குலப் பிரமாணம் அதாவது ஒரு ஜான், எழுபத்தீராயிரம் நாடிகளின் பலத்தைச் சோதிக்க வேண்டுமாயின் அதற்குச் சத்தி சலனமாகிய குண்டலி அப்பியாசமின்றி வேறு சத்தி செய்யும் உபாயமில்லை.
இந்த மத்திய நாடியாகிய சுழுமுனையானது யோகிகளுக்கு திடப்பியாசம் சுவஸ்திகா, பங்கயாசனங்களாலும் பிராணாயாமத்தாலும் மகா முத்திரை முதலிய முத்திரைகளாலும் சௌக்கியமுண்டாக்குகின்றது, ஆகிலும் சமாதியினால் அன்னிய விர்த்தி நிரோதிக்கலாகாது. ஏகாக்கிர தன்மையால் மனத்தை தாரணை செய்து அப்பியசித்து நிலைப் பெறச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
ஏனென்றால் ராஜயோகமின்றிப் பரம புருஷார்த்த பலன் சித்தியாமையால் வாயுவின் கும்பக முத்திரை விதானமாகிய சகல விதிகளையும் மனத்தோடு அப்பியசிக்க வேண்டும். புத்திமான்கள் வாயுவின் விதிக்கு அன்னியமாகிய விஷயத்தில் மனோ விர்த்தியைச் செலுத்தலாகாது. எவர் யோகிகளில் குருபாரம்பரையாகிய சம்பிரதாயத்தால் வந்த சம்பிரதாக்கியமாகிய மகா முத்திரை முதலியவற்றின் உபதேசத்தை தருகின்றாரோ அவரே ஸ்ரீகுரு. அவரே சகல குருக்களுக்கும் சிரேஷ்டரானவர். அவரே பிரபு. அவரே சாக்ஷாத் பிரத்தியக்ஷ ஈஸ்வரர் என்றும் சொல்லப்படுவார்.
அன்றியும் அக்னி மண்டலம் நாபியின் கீழ்ப்பாகத்தில் இருக்கிறது. அது மனிதர்களுக்குத் தேகத்தின் மத்தியில் பொன்னிறமுள்ளதாய் முக்கோண்மாய் இருக்கின்றது.. அக்குண்டலியை எழுப்பும் விதமாவது சூரிய உதய காலத்திலும் அஸ்தமன காலத்திலும் தினந்தோறும் இரண்டு முகூர்த்தம் பேதிக்க வேண்டும். சூரியனால் பூரித்து சந்திரனால் இரேசிப்பதால் அபானனும் அக்கினியை அடைந்து உஷ்ண சொருபத்தால் பிராணனை அடைகிறது.
அக்னியின் உஷ்ணத்தால் செவ்வையாகத் தகிக்கப்படுகின்றதால் தண்டத்தால் அடிபட்ட சர்ப்பத்தைப் போல் நிஸ்வாசத்தைச் செய்து நிமிர்ச்சி அடைகிறது. அதன்பின் பிலத்திற் பிரவேசித்த பாம்பைப் போலச் சுழுமுனையினுள் பிரவேசிக்கின்றது.
ஒரு புருஷன் சலனம் செய்து மூல ஸ்தானத்திலிருந்து குண்டலியை மேலே கொண்டு வருவாயின் அவன் மேற்சென்று அமிர்தத்தை அடைவான். இந்தக் குண்டலினி சத்தியை வாலைப் பிடித்து எழுப்பினால் நித்திரையை விட்டு மேலே எழும்புகின்றது. இதை குரு முகமாய் அறிய வேண்டும்.
அமிர்த நிலை!
சிகையின் மத்தியில் பரமாத்துமா பொருந்தியிருப்பதால் மேருவைப்போல உய்ர்ந்திருக்கும் சுழுமுனையானது மேல் பாகத்தின் மத்தியில் சோம ஜலம் ஒழிகிக் கொண்டிருக்கின்றது. அந்தத் துவாரமான சந்திர மண்டலத்தினின்று சரீரத்திற்குச் சாரம் ஒழுகுகின்றது.
ஒழுகும் சந்திர அமிர்தத்தின் சுவை கார்ப்பு, உவர்ப்பு. இவற்றிற்குச் சமானமாய் உள்ளதாயும் தேன், நெய், பால்களைப்போல் இரசமுடையதாயுமானால் அப்போது அவனுக்கு காயசித்து ஆகின்றது. அந்த சந்திராமிர்தம் எனும் சத்தை எவன் பானம் பண்ணுகிறானோ அந்த யோகி வியாதியில்லாதவனாய்த் தாமரைத் தண்டு போல் மிருதுவான சரீர முடையவனாய் வெகுகாலம் ஜீவிப்பான்.
சுவாசங்குலப் பிரமாண நிலை!
இந்த மனித ஜன்மத்திற்கு சாதாரணமாய் சுவாசம்
உள்ளே பத்தங்குலமும் வெளியில் பன்னிரண்டு அங்குலமும் போகும்.
இதுவல்லாமல் நடக்கும்போது 24 அங்குலமும்,
ஓடும்போது 42 அங்குலமும்,
போகஞ் செய்யும்போது 50
தூங்கும்போது 60 அங்குலமும்
சாப்பிடும்போதும் வாந்தியாகும்போதும் 18 அங்குலம் ஓடும்
சாதாரணமாக 12 அங்குலம் ஓடும் இந்த சுவாசத்தை யோக அப்பியாசிகள் கவனிக்க வேண்டும். இவ்வளவு நீளமாகப் போகிற சுவாசத்தைத் தன்னால் கூடிய அளவு சிறிதாக குறைக்க வேண்டும்.
அது ஏனென்றால் இந்த மனித ஜன்மத்திற்குக் கலைகளாகிய சுவாசம் 12 அங்குலம் ஓடி 4 அங்குலம் கழித்து 8 அங்குலந்தான் நின்ற இடத்தில் நோக்கும். இப்படிச் சாதாரணமாக 4 அங்குலம் கழிந்ததனால் 120 வயதாகின்றது. மக்கள் படிப்படியாக சுவாசத்தைப் பந்தனம் பண்ணுவதல் நீண்ட ஆயுளை உடையவர்களாக இருப்பார்கள்.
சாதாரணமாய் மனிதர்களுக்கு உண்டாகிய சுய புத்தி போதாது. ஆகையால் அனுபவமுடைய யோகிகளின் புத்தியைக் கேட்டு நடக்க வேண்டும். அல்லாவிட்டால் துன்பம் நேரிடும். இந்த மூன்று வாயுக்களையும் பஞ்ச தத்துவங்களையும் சுவாசத்தையும் குணிக்க அறிந்து கொண்டால் வரப் போவதைச் சொல்லலாம். தைரியத்தினால் சுறு சுறுப்பாய் மாணாக்கன் இந்த ராஜ யோகத்தை அப்பியசிப்பானாகில் இரண்டு மூன்று வருஷத்தில் அறியப்படுகின்றான்.
மரண நிலை அறிதல்!
இடைகலை அல்லது பிங்கலையில் ஓர் இராத்திரி சுவாசம் முழுவதும் இடைவிடாமல் நடந்தால் அம்மனிதன் மூன்று வருஷத்தில் மரணமடைவான்.
இதே மாதிரி பிங்கலையில் மாறுதலில்லாமல் இரண்டு இராத்திரி இரண்டு பகல் இடைவிடாமல் நடக்கும் மனிதனுக்கு ம்ரணம் இரண்டு வருஷத்தில் நேரிடும்.
இடைவிடாமல் ஒரு நாசியில் சுவாசம் மூன்று நாளைக்கு நடக்கும் மனிதனுக்கு ஒரு வருஷத்தில் மரணம் நேரிடும்.
இராத்திரி முழுவதும் இடைகலையும் பகல் முழுவதும் பிங்கலையும் இடைவிடாமல் நடக்கும் மனிதனுக்கு ஆறு மாதத்தில் மரணம் நேரிடும்.
பிங்கலை தொடர்ச்சியாக இடைவிடாமல் ஒரு பாகம் நடக்கும் மனிதனுக்கு பதினைந்து நாளில் மரணம் நேரிடும்.
இடைகலையானது இதே மாதிரியாக ஒரு மாதம் நடந்தால் இந்த விதிப் பிரகாரம் முடியும்.
புருவத்தைப் பார்த்தால் தெரியாதவர்களுக்கு ஒன்பது நாளிலும்
காது கேளாதவர்களுக்கு ஏழு நாளிலும்,
நக்ஷத்திரம் தெரியாதவர்களுக்கு மூன்று நாளிலும்
மூக்கு நுனி தெரியாதவர்களுக்கு ஐந்து நாளிலும்
இரண்டு கண்களையும் கைகளால் அமுக்கினால் கண்ணீர் வராதவர்களுக்குப் பத்து நாளிலும் மரணம் நேரிடும் என்பது குரு வாக்கியம்.
யோகிகள்!
யோகிகளுக்கு மேலே கூறிய அடையாளங்கள் நேரிட்டால் உடனே வாயுவைச் சோதித்து அதைச் சரிப்படுத்திக் கொள்ளுந்தனமை உண்டு.
யோகிகளுக்கு மரணம் நேரிடுவது கஷ்டம். யோகிகள் அப்பியாசத்தால் வாயுக்களையும் தத்துவங்களையும் உணர்ந்து முத்திரையைப் பின் தொடர்வார்கள்.
பிறகு கேசரி முத்திரை எவ்வளவு காலம் ஜீவித்திருக்க வேண்டுமோ அவ்வளாவு கலம் ஜீவித்திருப்பார்கள். இந்த யோகிகள் மூன்று வாயுக்களையும் அதிகமாகக் கவனித்து ஸ்திரப்படுத்தவேண்டும்.
சாதரண மனிதர்கள்!
சாதாரணமாய் மனிதர்களுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு சுவாசம் நடக்கும் பக்ஷத்தில் 120 வருஷம் ஜீவித்திருக்கலாம். இப்போது மனிதர்கள் அறுபத்தோராயிரத்து அறுநூறு சுவாத்திற்கு மேல் விடுகின்றார்கள். எப்படியெனில் ஓடுவதினாலும், நடப்பதினாலும், தூங்குவதினாலும், போகம் செய்வதனாலும், சுவாசம் அதிகரிப்பதனால் இந்த நூற்றிருபது வயதுக்கு குறைவு நேரிடுகின்றது.
சாதாரணமாய் மனிதர் விடும் சுவாசம் எவ்வளவு குறையுமோ அவ்வளவு வயது ஏறி வரும். திடீரென்று கட்டக் கூடாது.
மக்கள் அதிக விரைவாக ஓடக்கூடது. அதிகம் சாப்பிடக்கூடாது. வேகமாய் நடக்கக் கூடாது. அதிக போகம் செய்யக் கூடாது.
இந்த விதிகள் ஒன்றும் தவறக்கூடாது.. தவறி நடப்பார்களானால் அதிக கஷ்ட நஷ்டங்களை அடைவார்கள்.
சாம்பவியின் முத்திரை!
உள்ளாதார முதல் பிரம்மரந்திரம்வரை உள்ள சக்கரங்களுள் தன்னாற் கொள்ளப்பட்ட சக்கரத்தில் லக்ஷியமும் தேகத்திற்கு வெளிப்பிரதேசத்தில் மூடுதலும் திறத்தலும் இல்லாத திருஷ்டி பார்வையுமாக இருத்தல் எதுவோ அதுவே சாம்பவி முத்திரையாம்.
அது இருக்கு முதலிய வேதங்களிலும் சாங்கிய பதஞ்சலி முதலிய யோக சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.
சாம்பவிக்கு வெளித்திருஷ்டியும் கேசரிக்கு உள் திருஷ்டியும் சாமபவிக்கு இருதய்ப் பார்வையும், கேசரிக்கு புருவநடுப் பர்வையுமாம். ஸ்ரீசாம்பவிக்கும் கேசரிக்கும் ஸ்தான பேதமுண்டு. சித்தம் லயானந்தமானால் பேதமில்லை என்பது கருத்து.
ஸ்ரீசாம்பவி முத்திரையினால் ஸ்திரமனமுடையவனாய் நிஷ்பந்தத் தன்மையாலும் தேகேந்திரிய மனங்களின் நிற்சலனத் தன்மையாலும் சந்திர சூரியர்களை லயமாக்குகிறவனாய் பிராண சஞ்சாரத்தை ஸ்தம்பிக்கிறவன் எவனோ அவனே அதுவிதுவென்று சொல்லக்கூடாத பதமாகிய ஆத்தும சொரூபத்தில் நிலைத்தவனாகிறான்.
கேசரி முத்திரை!
இட வல நாடிகளிலுள்ள வாயு எந்த மத்திய தேசத்தில் செல்கின்றதோ அத்தேசத்தில் கேசரி முத்திரை ஸ்திரமடைகிறது. இதில் ஐயமில்லை. சூனியத்தில் பிராணன் ஸ்திரமாகாகவே வாயுவை விழுங்குதலெனெப்படும்.
சந்திர சூர்யர்கலென்னும் இடைகலை பிங்கலைகளின் மத்தியில் நிராலம்பமாகிய உள் ஆகாயத்திலிருக்கும் ஆகாயங்களின் சமுதாயத்தில் செவ்வையாய் பொருந்தி இருப்பது எதுவோ அம்முத்திரையே கேசரி முத்திரை எனப்படும்.
இதன் அப்பியாசம்!
முன்னமே சுழுமுனையில் பிராணனால் பூரிக்க வேண்டும். அப்போது நிச்சயிக்கப்பட்ட கேசரி முத்திரை உண்டாகிறது.
புருவமத்தி சிவமெனும் சுக வடிவமாகிய பரமாத்துமாவின் ஸ்தானமாம்.
சிவத்தில் ஒடுங்க வேண்டும். எவன் மனத்தை நிராலம்பமாக்கி ஒன்றையும் சிந்தியாதிருக்கின்றானோ அவனே கேசரி முத்திரையை உ?ணருவான். எவன் பிரமகாய விரக்தியைப் பரவைராக்கியத்தால் விடுகின்றானோ அவன் உள்ளும் வெளியும் இருக்கும் ஆகாயத்தில் கடத்தைப்போல் நிற்பான். இது நிச்சயம்.
ஒருவன் தேகத்தினுள்ளும் வெளியுமுள்ள வாயுவைத் தனக்குள் கேசரியில் எப்படி இலயமாக்குகிறானோ அப்படியே தேகத்திலிருக்கும் வாயுவையும் இலயமாக்குவான். இதில் ஐயமில்லை. அன்றியும் பிராணனது ஸ்தானத்தில் ஸ்திரத்தன்மையும் அடைவான். வேறு ஒன்றையும் சிந்தியான். அப்போது சொரூபத்தில் நிலைத்தலாகிய ஜீவன் முத்தனாவது திண்ணம்.
அஜபா காயத்திரியின் நிலை!
பூரக ரேசகம் செய்யுங்கால் ஹம்ஸம் ஸோஹம் என்று நேராகவும் தலைகீழாகவும் பிராகாசிக்கின்றன.
அஜபா மந்திரத்தினால் தத்துவமசி என்னும் மகா வாக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற ஜீவப் பிரம ஐக்கியம் அடிக்கடி சிந்திக்கப்படுகிறது.
இந்த ஸோ என்னும் அஜபா காயத்திரியை ஈஸ்வர நாமத்தைப்போல் ஜெபிப்பது. சித்த சுத்திக்கு ஹேதுவாகும். வெகுகாலம் வரையில் ஜெபம் செய்யின் விருத்தி அந்தர் முகப்படும்.
அப்போது சுவாசம் வெளிப்படுங்கால் சகாரமாகிறதை (ஸோ எனும் சுவாசத்தை) உட்கொள்ளுங்கால் அகாரத்தை ஹம் என்றே தியானைக்க வேண்டும்.. இந்த அகாரம் மறுபடியும் உட்செல்லுகின்றபடியால் ஹம்ஸம் ஹம்ஸம் என்றே மஹா மந்திரத்தை ஜீவன் எப்போதும் ஜெபிக்கின்ரான். குரு வாக்கியத்தினால் இந்த மந்திரத்தில் ஜெபம் சுழுமுனையில் விபரீதமாய் உண்டாகிறது.
அது ஸோஹம் ஸோஹம் என்றடையப்படுகின்றது. சகாரம் கேசரி எனப்படுகின்றது. த்வம் பதமென்று நிச்சயிக்கப்படிகின்றது. அகாரம் பரமேசுவரானிகிறான். தற்பதமென்று நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது.
சகாரத்தை தியானிக்கும் ஆன்மா நிச்சயமாய் அகாரமே ஆகிறான் என்பதை யோக பீஜம், யோக சூடாமணி, உபநிஷத்து, யோக தத்துவ உபநிஷத்து முதலியவற்றால் காணக.
இது அஜபா காயத்திரியாம். இதை முக்கியமான பிரவர்த்தியுடையவன் எவனோ அவன் அதிகாரியாவான். அது சோபாதி சதியானமாம்.
இவற்றினின்றும் சகாரம் அகாரமென்னும் மெய்யெழுத்துக்களை அடக்கி எஞ்சி நிற்கும் ஓம் என்னும் அக்ஷரத்தை தியானைத்தால் நிருபாதிகமாம். ஓம் ஸோஹம் எனும் இரண்டு சத்தங்களும் பிரத்தியேகாத்துமாவோடு பின்னமாகிய பிரமமென்னும் ஒரே அர்த்தமுடையன. சுத்தமாய் இருத்தலால் நிருபாதிகமாயினும் ஓம் எனும் அக்ஷரத்தின் சகார அகாரமென்னும் உபாதிகளைச் சேர்ந்தால் ஸோஹம் என்னும் சத்தமுண்டாகிறது.
ஆகையால் சோபாதிகமெனப்படுவது விசார சகாரம் பதார்த்த மஞ்சூஷரம் முதலிய நூல்களிலும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
நாதானு சந்தானம்!
இந்த நாதானுசந்தானத்தை முதலில் அப்பியசிக்கும் மாணாக்கன் சுரராஜ குமார வைரி ரந்தரத்தில் தனது கைவிரல்களிரண்டினால் நிரோதித்து உள்ளே பரவும் சமுத்திரம் போன்ற திரமான நாதத்தை சீக்கிரமாகக் கோருகின்றான். அதனால் எவனுக்குச் செவ்வையாயெழும்பிய நாதமும் வாயுவும் சுத்தமாய் ஜெயிக்கப்பட்டவைகளாகின்றனவோ அந்த மகா குணோதயமுள்ளவனுக்கு அணிமாதி குணங்களும் அளவிறந்த புண்னியமும் உண்டாகின்றன் என்பது சொல்லப்பட்டிருக்கின்றது.
சுரராஜன் இந்திரன் அவன் குமாரன் அர்ச்சுனன், அவன் வைரி கர்ணன் அந்தக்கரண ரந்தரத்தில் என்பது பொரூளாம். அனாகதம் என்னும் நாத வெளியிலுண்டாகும் சுரோத்திர துவக்காதி இந்திரியங்களுக்கு விஷயமாகிய தொனி சூழ்கின்றது. இந்த நாத அப்பியாசி ஒரு பட்சத்தில் சகல சித்த சஞ்சலங்களையும் ஜயித்து நிஜானந்த முடைய்வனாகிறான்.
முதலில் அபியசிங்குங்கால் சமுத்திரம் போலும், பேரி முதலிய வாத்தியம் போலும், நாநாவிதமாகிய நாதம் கேட்கப்படும். பின் நாதானுசந்தானம் நிவர்த்தியாகுங்கால் சூட்சம சூட்சுமமாகக் கேட்கப்படும்.. ஆதியில் வாயு பிரமரந்திரத்திற் செல்லுங் காலத்து சமுத்திரம், சச்சரம், மேகம், பேரிகை, கனக தப்பட்டை என்பனவற்றால் உண்டாகும் சத்தத்தைப் போன்ற நாதமும் அப்படியே பிரமரந்திரத்தில் வாயு ஸ்திரப்பட்டபின் மத்தளம், சங்கு, கண்டாமணி, காகளம் என்பனவற்றால் உண்டாகும் சத்தத்தைப்போன்ற நாதமும், அந்தத்தில் பிராணன் பிரமரந்திரத்தில் மிகவும் ஸ்திரமானபின் கிண்கிணி, வேணு, வீணை, தந்திரி, வண்டு என்பனவற்றின் சத்தங்களைப்போன்ற நாதங்களும் இன்னும் நாநாவிதமான நாதங்களும் தேகத்தின் மத்தியில் உள்ளனவாகக் கேட்கப்படும். மேகம், பேரி முதலியவற்றாலுண்டாகிய பெருஞ் சத்தங்கள் கேட்கப்படினும் அவற்றுள் சூட்சுமமாகிய நாதம் நெடுநேரமிருப்பதால் சித்தம் நெடு நேரம் ஸ்திரமுடையதாக நிலைக்கும்.
கன நாதத்தை விட்டுச் சூட்சுமத்திலும் அல்லது சூட்சுமத்தை விட்டு கனநாதத்திலுமாக இரம்மிப்பதாயிருக்கினும், கன சூட்சுமமென்னும் இரண்டிலொரு நாதத்தைக் கொள்ளுதல் தள்ளுதல் கூடாது. ஏனெனில் அப்படிக் கொள்ளலும் ராஜச குண இயல்பாதலல் அவ்வித ராஜச குணத்தை வரவெட்டாமல் சுத்த சாத்துவிக குணச் செய்கையான சூட்சும நாதத்தில் மனத்தை செலுத்த வேண்டும்.
அஃதேனெனில் நாதங்களில் இரம்மிக்கும் மனமே சமாதியடையும் என்பது கருத்து, அதாவது மலர்ந்த புஷ்ப ரசத்தை குடிக்கும் வண்டு கந்தத்தை விரு,ம்பாதது போல சூட்சும நாதத்தில் சித்தம் நிலைக்க வேண்டும்.. சப்தாதி விஷயமாகிய உத்தியானத்தில் சஞ்சரிக்கும் மனமென்னும் மதயானையை அடக்குவதில் இந்த அனாகதத் தொனியானது கூரிய அங்குசம் போன்ற வலிவுடையதென்பது சொல்லப்பட்டிருக்கின்”றது.
வாசியை அடக்கி அடையும் பலன்!
இந்த யோக அப்பியாசிகள் சூரிய சந்திர கலைகளின் பிராண வாயு செல்லுங்கால் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, என்னும் நான்கு தத்துவங்கள் வந்து விலகும். அப்போது அப்பிராண வாயு ஆகாய தத்துவத்தில் அடையும். அச்சமயத்தில் சுவாசம் குறைந்து வரும். அக்காலத்து சுவாச பந்தனம் செய்யக்கூடும். அப்போது
ஓர் அங்குலம் குறைந்தால் இவ்வுலகத்து இச்சையினின்று சுவாதினப்படுவான்.
இரண்டங்குலம் குறைந்தால் மனம் ஆனந்திக்கப்பட்டு ஞானச் செல்வமுண்டாகும்.
மூன்றங்குலம் குறைந்தால் விவேகியாவான்,
நான்கு அங்குலம் குறைந்தால் தூர தேசத்தில் நடக்கும் நடவடிக்கைகளைச் சொல்லப்படுவான்.
ஆறங்குலம் குறைந்தால் ஆகாசத்திலுள்ள சகலமும் கண்டுணர்வான்.
ஏழங்குலம் குறைந்தால் சரீரம் காயசித்தி பெறுவான்
எட்டங்குலம் குறைந்தால் அணிமா சித்திகளை அடைவான்
ஒன்பங்குலம் குறைந்தால் நவகண்டங்களில் சஞ்சரிப்பான்.
பத்தங்குலம் குறைந்தால் ஒரு தேசத்தை விட்டு மற்றொரு தேசத்தில் பிரவேசிப்பான்.
பதினொரு அங்குலம் குறைந்தால் தனது ஆன்மாவைக் கண்டு வசனிப்பான்,
பன்னிரண்டு அங்குலம் அடங்கும் சுவாசமானது உதித்த இடத்திலேயே சுழன்று கொண்டிருப்பதால் அந்தப் பரமயோகி நெடுங்காலம் அன்னபானாதிகளை நீக்கி அவாவற்றிருப்பான்.
சமாதியிலுட்கார்ந்து மாணாக்கன் இடைகலையைப் பிங்கலையிலும் பிங்கலையை இடைகலையிலும் மாற்றக் கற்றுக் கொண்டபின் பகல் முழுவதும் இடைகலையிலும் இரவில் அதை அடைத்துவிட்டு பிங்கலையிலும் நடத்தப்படுவான்.
இதற்காக பழம்பருத்தியிற் கொஞ்சம் சுத்தம் பண்ணி வைத்துக் கொண்டு இடைகலையை நடத்த வேண்டியிருந்தால் வலநாசியிலும் பிங்கலை நடத்த வேண்டியிருந்தால் இட நாசியிலும் அடைத்துவிட வேண்டும். இப்படிச் சரிவர நடந்தால் மனிதர்கள் நூற்றிருபது வயது ஜீவித்திருக்கலாம்.
மற்றச் சங்கதிகளை சிந்திக்கும் பக்ஷத்தில் யோகிகளுக்கு வயதே இல்லை.
எந்த விதிகள் எப்படியிருந்தாலும் இந்த விதிகள் யாவும் கிருகஸ்தர்களுக்காகவே ஏற்பட்டிருக்கின்றன.
இதை அப்பியாசிகள் எப்போதுமிவ்விதப் பிரகாரம் நடத்துவார்கள். அப்போது தேக சௌக்கியமும் நீண்ட ஆயுளும் மன ஒடுக்கமும் சித்த சாந்தியும் உடையவர்களாய் இருப்பார்கள்.
மனோ நிலை!
பிராணவாயு சுழுமுனையாகிய மத்திய நாடியிற் செல்லுங்கால் அந்தக் கரணம் சூனிய தேச கால வஸ்து பரிச்சேதமில்லாத பிரமத்தில் பிரவேசிக்கின்றது. அப்போது சித்த நிரோதமுள்ள யோகவித்தானவன் பிராரத்தத்தோடு சகல கருமங்களையும் நிர்மூலமாக்குகிறான். எது வரையிலும் பிராணனும் இந்திரியங்களும் ஜீவித்திருக்கின்றனவோ அது வரையில் மனத்தில் ஞானம் எப்படி உண்டாகும்! பிராணன் மனம் என்னும் இவ்விரண்டையும் எவன் லயமாக்குகின்றானோ அவன்மோக்ஷத்தை அடைகின்றான்.
பிராண மனோலயங்களில்லாதவன் எவ்விதத்திலும் மோக்ஷம் அடையமாட்டான். நல்ல ஸ்தானத்தில் இருந்து கொண்டு சுழுமுனை என்னும் மத்திய நாடியை நன்றாய் போதிக்கும் தன்மையை குரு மூகமாய் அறிந்து பிராண வாயுவை மத்தியிற் சொலுத்துவதாகிய பிரமரந்திரத்தில் நிரோதித்தல் வேண்டும். இப்படி அப்பியசித்தால் பிராணனது அசைவிற்கு க்ஷயம் வரும். அப்போது மனம் மிகவும் சாந்தியடைகின்றது அக்காலம் நிர்வாணம் மிஞ்சுகிறது.
சூரியனும் சந்திரனும் இராப் பகல் வடிவமாகிய காலத்தைப் புசிப்பவர்களாயிருக்கிறார்கள். இது இரகசியமாய் சொல்லப்பட்டது.
இரண்டரைக் கடிகை சூரியனோடுங்கால் பகலென்றும் சந்திரனோடுங்கால் இரவென்றும் சொல்லப்பட்டிருக்கின்ற்ன. அப்போது சுழுமுனை மார்க்கத்தால் வாயு பிரமரந்திரத்தில் ஒடுங்குகின்றதோ அப்போது இராப்பகல் வடிவாகிய காலமில்லாமையால் அச்சுழுமுனை காலத்தைப் புசிப்பதாய் உள்ளது.
எந்த யோகியால் பிரண வாயு கட்டப்படுகின்றதோ அந்த யோகியால் மனமும் கட்டப்படுகின்றது.
எவனால் மனம் கட்டப்படுகின்றதோ அவனால் பிராணனும் கட்டப்படும்.
மனம் பிராணன் என்னும் இரண்டுள் ஒன்றைக் கட்டினால் மற்றொன்றும் கட்டப்படும். அதலால்
மனம் ஒடுங்காத வரையில் வாசனை நசியாது.
வாசனை நசியாத வரையில் சித்தம் நசியாது.
சித்தம் நசியாத வரையில் தத்துவ ஞானம் உண்டாகாது.
இவற்றுள் மனம் பிராணன் என்னும் இரண்டினுள் ஒன்று நசித்தால் மற்றொன்றும் நாசமாம். ஒன்றின் பிரவிர்த்தியால் மற்றொன்றும் பிரவிர்த்தியாகின்றது. இவ்விரண்டும் லயமானால் மோட்ச சித்தி உண்டாகும்.
மனம் ஸ்திரப்பட்டால் பிராணன் ஸ்திரமாகும்.
சுரோத்திரம் முதலிய இந்திரியங்களுக்கு மனம் நாதனாகிறாது.
மனதிற்குப் பிராணன் நாதனாகிறது.
பிராணனுக்கு மனோலயம் நாதனாகிறது.
அம்மனோலயம் நாதத்தை ஆசரித்திருக்கின்றது.
அதாவது மனம் நாதத்தில் ஒடுங்குகின்றது. சுவாச நிசுவாசங்கள் நஷ்டமாகிறது. சத்தாதி விஷயக் கிரகணம் நஷ்டமாகிறதும் சேட்டைகள் நீங்குகிறதும், விவகாரங்கள் இல்லாததும் மனோலயமேயாகும்.
மனோலயம் எதுவரையில் ஆகவில்லையோ அது வரையில் இந்திரிய விஷயங்கள் ஜயமாகா.
இந்திரிய விஷயங்கள் ஜயமாகாவரையில் எனதென்பது எப்படி நீங்கும்!
எனதென்பது நீங்காத வரையில் யாரென்னும் அகந்தை எப்படி நீங்கும்!
யானென்னும் அகந்தை நீங்காத வரையில் மனச் சுத்தம் எப்படி ஆகும்!
மனம் சுத்தமாகத வரையில் அபரோக்ஷ ஞானம் எப்படி வரும்!
அபரோக்ஷ ஞானம் உதயமாகத வரையில் பிரம் சைதன்யம் சமாதியின் கண் எப்படி புலப்படும்!
பிரம் சைதன்யம் சமாதியின் கண் புலப்படாத வரையில் திடஞானம் எப்படி உதயமாகும்!
திடஞானம் பெற்ற மகான்களுக்கு துவிதமேது! பேதமேது! மாய்கையேது! பந்தமேது! ஜன்மமேது! அப்போது அந்த யோகி ஜன்மாகிதனாகின்றான்.
ஆகையால் இந்த யோகத்தை அனுஷ்டிக்கும் பக்குவமுடைய மூஷுகன் முக்கியமாக கவனிக்க வேண்டியது. யாதெனில் வாசி யோகத்தைய்ன்றி மற்ற ஹடயோகம், கௌடயோகம், அம்பிகா யோகம் முதலிய யோகங்களால் சாட்சாத்காரத்தை அடைய இயலாதென்பதை உணரவேண்டும். அஃது எப்படியெனில் ஒருவன் கௌசனையால் விசாலமான விண்ணை மூடுவது போலாகும். இந்த வாசி யோகம் அப்படியன்று.. கண் மூட விண் மறையுமென்பதாம். ஆகையால் இந்த யோகத்தை அனுஷ்டித்தவர்கள் இந்த நூலை வாசித்தவர்கள், வாசிக்க கேட்டவர்கள், மனம் இவ்வாசியை நாடுவதால் சித்தம் நிலைத்து ஞானம் உதயமாய் அணிமாதி சகல ஐஸ்வரியங்களும் அடைந்து ஜீவன் முத்தர்களாய் நிரதி சயானந்தத்தில் சதா காலமும் நிலைத்து வாழ்வான் என்பது குரு வாக்கியம்.
வாழ்க நாரண தேசிகர் வான்ருள்!
வாழ்க அன்னவர் மாணவர் யாவரும்!
வாழ்க இந்நூல் படிப்பவர் கேட்பவர்!
வாழ்க இந்தச் சிவயோக சாரமே!
#############################################################################################
ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#####
ஞான சரம்!
சந்திரன், சூரியன் கோள், நாள், பக்ஷம், கரணம், யோகம், வாரம் இவைகளைப் பற்றிச் சொல்லப்பட்ட சோதிட இலக்கணத்தை அறியாதவர்கள் தம் தம் மன நினைவினால் அறிந்து கொள்ளும் மார்க்கம் என்ன என்/று உமை சிவபெருமானிடம் கேட்க அவர் அருளிச் செய்த அரும் பெரும் நூல் ஞான சரம் என்ற சாஸ்திரம் இதுவாகும். இதை உயிர்கள அனைவரும் படித்து பயன் பெற வேண்டும் என்ற அவாவில் குருஸ்ரீ பகோரா.
பரம்பரியமாக தொடர்ந்து விருத்தியாகி வரும் நான்கு வருணாச்சிரமம் எனப்படும் பிரம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர மானிட தேகத்தில் இந்தச் சரம் நாசிகையின் வழி நின்று எருதின் ஒரு மூக்கணாங்கயிறால் ஆட்டுவிப்பதுபோல் நன்மை தீமை என்ற நஞ்சினை ஊட்டுவிக்க அப்படி ஊட்டுவிக்கப்பட்ட கொடிய காலனென்ற பாம்பு உண்ணவும் உமிழவும் உட்பட்டு இருவினைக்கிசைந்தவராய் பிறந்து இறந்து போவர். எனினும் இந்நூலை இகழாமல் குரு வழி அறிந்து அனுபவித்து அறநெறியில் நிற்பவர் யாராக இருந்தாலும் தேவர் ஆவார்கள். அவ்வாறு அறியமாட்டாதவர்கள் ஊமைக்கு சமமாவார்கள்.
சரம் என்பன காற்று, மனம், சீவன், சுவாசம், மூச்சு, பிராணன், ஆவி, உயிர், உயிர்ப்பு இவைகள் முதலாகச் சொல்லப்பட்டவை.
சரம் பார்க்க விரும்பும் சீவர்கள் நல்லவர்களாய் உத்தமராய் குருவிடம் ஆசியும் தீட்சையும் பெற்றவர்களாய் இருந்தால்தான் பலிதலாகும். அஃதன்றி படித்து தாமே கற்று பலன் சொல்ல முறப்ட்டால் சமூகத்தில் அவப்பெயர் ஏற்பட்டு துன்பத்திற்கு உள்ளாவர்கள். தன் சுய வல்லமையால் தெரிந்து கொள்ள வல்லமையற்றவர்களாய் பின் சங்கரன் அருளினால் தெரிந்து கொள்ளத்தக்க சிறப்புடைய இந்நூலை குருவருளினாற் தெரிந்து கொள்வீராக.
சரம் பார்க்கிறவனை ஒருவன் வந்தழைத்தால் அவன் சூரியகலை நடக்கும்போதே போக வேண்டும். போவதானாலும் சூரியன் இயங்கும்போதே பேச வேண்டும். மற்றபடி கூடாது. மிஞ்சி நடந்தால் மத்திம பலன்.
சரம் பார்த்துச் சொல்கிறவனுக்கு தாம்பூலம் முதலானவைகள் கொடுத்து உபசாராதிகள் செய்து பின்பு கேட்கவும்.
திதி வார நட்சத்திர காலசர பலன்!
.சரம் விடிவதற்கு ஐந்து நாழிகை (ஒருநாழிகை=24நிமிடங்கள்) இருக்கும்போது எழுந்து பார்க்க வேண்டும். சரம் பார்க்கும்போது
வளர்பிறை பிரதமை, துவிதை, திரிதியை மூன்றிற்கும் சந்திர கலை உதித்து நடக்க வேண்டும். அடுத்த மும்மூன்று திதிகளுக்கும் சூரியகலை, சந்திரகலை என மாறி மாறி நடக்க வேண்டும்.
வளர்பிறைக் காலத்தில்
பிரதமை தப்பினால் யாதேனும் ஒரு இடர் வரும்
துவிதை தப்பினால் கலகம்
திரிதை தப்பினால் பொருட்சேதம்
சதுர்த்தி சகல வித நஷ்டமுண்டாகும்.
பஞ்சமி பந்துக்களுக்கு வியாதி
சஷ்டி அத்தேசத்தாருக்கும் அரசுக்கும் வருத்தம்
சப்தமி அரசுக்கும் தேசத்தாருக்கும் நலிவு. தனக்கில்லை என்று ஏமறியிருக்கக் கூடாது.. தன்னாலே அவர்களுக்கு வருத்தம் வந்ததென்று அவதூறான பொய் பிரச்சாரத்தால் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
அஷ்டமி பிழைக்கில் நோவும் சாவும் வரும்.
தேய்பிறைக்கும் இம்முறையே கொள்ளவேண்டும்.
தேய்பிறை பிரதமை, துவிதை, திரிதியை மூன்றிற்கும் சூரிய கலை உதித்து நடக்க வேண்டும். அடுத்த மும்மூன்று திதிகளுக்கும் சந்திரகலை, சூரியகலை என மாறி மாறி நடக்க வேண்டும்.
பொழுது விடிய ஐந்து நாழிகை இருக்க உதித்த சரம் மற்ற ஐந்து நாழிகையும் கலங்காது ஓட வேண்டும்.
காலசரம் சரிப்பட்டு வருமோ வராதோ. ஊழ்வினைப்படியல்லவோ நடக்கும் அதை நம் வசமாக்கல் இலகுவானதா என்று தளர்வுற்றிருக்க வேண்டியதில்லை. சரம் பார்க்கிறவன் பிராதக் காலத்தில் அருணோதயத்திற்கு முன் எழுந்து ஞாயிறு செவ்வாய் கிழமைகளுக்கு தென்புறமாய் மூன்றடி மண் (முன் சொன்னபடி) முன்னிட்டு வைத்து சாரத்தை பூரணமாக்கி அக்காலையே முன்னிட்டு போகலாம். திங்கள் வெள்ளிக்கு நாலடி வடக்கே போகலாம். புதனுக்கு இரண்டடி கிழக்கே போகவும் இப்படி போய்வந்து ஒரு திவ்விய ஆசனத்தில் அமர்ந்து சிவனை நினைத்து துதி செய்து பின்னெழுந்து எங்கே சென்றாலும் அல்லது எங்கேயிருந்தாலும் துன்பங்கள் வராது.
திதிகள் வாரங்களில் ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி கிழமைகளுக்கு சூரியகலையும் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளுக்கு சந்திரகலையும் உதித்தோட வேண்டும்.. இப்படி உதிக்கும் சரம் எந்தப் பூதியத்தில் உதிக்க வேண்டும் என்பதை பூதிய பலன்களில் பார்க்க வேண்டும்.
வாரங்களுக்குரிய காலசரங்களின்படி
ஞாயிறு தப்பினால் வியாதி,
செவ்வாய் தப்பினால் சண்டை, சாவு
வியாழன் தப்பினால் தன் அரசுக்கு கேடாம், தனக்கு பொருள் வராது.
சனி தப்பினால் வறுமையுடன் தன் கையிலிருப்பதும் போகும்.
திங்கள் தப்பினால் சுற்றத்தாருக்கு கேடு
புதன் தப்பினால் அவ்வூர் அதிகாரிக்கு கேடு
வெள்ளி தப்பினால் தான் வசிக்கும் பதியை விட்டுப் போக வேண்டும். அந்த எல்லையை விட்டு மற்றோர் எல்லையை மிதிக்க வேண்டும். தேக கேடு வரும்,, தன் மனைவிக்கு சண்டை பிணக்கு நோய் முதலிய வருத்தமாதல், சதிபதிகளுக்கு பொருத்தம் போதாமை ஆகும்,. புணர்ந்தோர் காதலென்றும் சாமுடி வரைக்கும் வருத்தம் வரும்.
நட்சத்திரங்களுக்கு நடக்கவேண்டிய காலசரத்தின்படி பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், உரோகிணி, சதயம், உத்திரட்டாதி, ஆகிய பன்னிரண்டிலும் சூரியன் நடக்க வேண்டும்.
மற்ற பதினைந்திலும் சந்திரன் நடக்க வேண்டும்..
சரம் பார்க்க ஆசனங்களின் விதி.-
நன்மை தரும் ஆசனங்களின் மீதிருந்து சரம் பார்க்க வெண்டும்.
மூங்கில் தடுக்கின் மேல் அமர்ந்து பார்க்கின்- வறுமை
கல்லின் மேல் அமர்ந்து பார்க்கின்- வியாதி
மணலின் மீது அமர்ந்து பார்க்கின்- துக்கம்
உடைந்த/அறுபட்ட பலகைமீது- நன்மையில்லை.
கோரை/புறபாய்கள் மீது கீர்த்தி நாசம்.
பச்சிலைத் தலைகள் மணநடுக்கம்
மான் தோல் ஞானம்
புலித் தோல் செல்வம்
தர்ப்பாஷனம் மோக்ஷம்
வெள்ளை வஸ்திரம் தீமையில்லை
சித்திராசனம்/இரத்தின கமபளம் நன்மை
பதுமாசனத்தில் இருந்து பார்க்கும்போது மனதிற்கு மிகவும் நினைவுகளினால் அல்லல் வரும். அப்படி வரும் அல்லல்களை நீக்கி வேறு நினைவில்லாமல் ஒரே மனமாகி ஒட்டியாண பந்தமெனச் சொல்லும் பிரணாயாமம் செய்து அதன் மேற்பார்க்கில் எல்லையில்லாத திருவருளுக்கு இடமாகிய உந்தியில் கீழிருக்கும் எழுத்தில் தொடங்கி எழுபத்தீராயிரம் நாடிகள் இந்தத் தேகத்திலுள் உள்ளவை தெரியும். அதனுள் பத்து நாடிகள் நல்லனவாகும். அப்பத்து நாடிகளுள் மூன்று நாடிகள் மிக நல்லன. அம்மூன்றின் வழியாய் சரம் எளிதிற் காண ஓடும். எனவே இதை அறிய பெரிதாகிய நன்மையினை அளிக்கும் அவ்வெழுத்தை பார்க்கவும்.
இதய கமலத்தின் வழி ஊடுருவிக் கொண்டு யாதொரு தீங்குமின்றி அசுவை உயிரெனப்பட்ட சரம் நாசிகை வழி நான்கு அங்குலம் போக மற்றவை போகும்போது செம்மையாய் திரும்பி வரும்போது கணகிட்டுப் பார்க்கின் இருபத்தோறாயிரத்து அறநூறு தரம் நடக்கும். இதற்கு 60 நாழிகை சேர்ந்த ஒரு நாள் காலம் ஆகும். மூலாதாரம், சுவதிட்டானம், மணிப்பூரகம், அனாதகம், விசுத்தி, ஆஞ்ஞை என்ற பர நிலைகளின் பரிசாக வரும் இதனைக் காணும் வழி இந்நூலை மயக்கமறப் பார்ப்பது. அப்படிப் பார்ப்பவர் பரமாகவும் அபரமாகவும் இருக்கும் ஒரு பொருளினால் உண்டாகும் நன்மைதனை அறிவர்.
இடைகலை என்பது இடப்பக்க நாசியில் வரும் சுவாசம் சந்திரகலை எனப்படும் பிங்கலை என்பதுவே வலப்பக்க நாசியில் வருஞ்சுவாசம் சூரியகலை எனப்படும். யாவருக்கும் ஒக்கக் சொல்லுங்காலத்தில் சுழுமுனை என்பது நடுவாகும் அக்கினி எனப்படும். சந்திரனைச் சொல்லுமிடத்தில் அமுதம் தீர்க்கமாக எப்பொருள்களையும் உண்டாக்குபவன். அச்சுழுமுனை இரண்டு நாசிகளிலும் பரவியோடும் அதற்கு பூரணம் என்பது பெயர்.
சூரியனுடைய குணங்குறிகளைச் சொன்னால் அந்தச் சூரியன் உலகம் முழுவதும் சஞ்சரிப்பவன். பரிசுத்தமான வெண்மை நிறத்தையுடையவன். ராசியில் சர ராசி. சுழுமுனை என்ற அக்கினி சகல கருமங்களையும் அழிக்கும் பொல்லாதது. அக்கினி சிவப்பு நிறம். ராசி என்று கேட்டால் இரண்டு ராசிகளையும் உடையது. அதாவது இடைகலை என்று சொல்லப்பட்ட சந்திரன் பெண்பால். பிங்களை என்று சொல்லப்பட்ட சூரியன் ஆண்பால். சுழுமுனை எனப்பட்டது அஃறினைப் பால் அதாவது அலியாகும்,
சந்திர இலக்கணம்.
இடைகலையில் சரம் நடக்கும்போது
ஒருவரைத் தூது அனுப்புதல்,
தானே தூது போதல்,
புதிய வஸ்திரம் தரித்தல்,
ஆபரணாக்கள் அணிந்து கொள்தல்,
விவாகம்-தாலிகட்டல்
ஒருவரை அடிமையாகப் பெற்றுக் கொள்ளல்,
குணறு, குளம், ஏரி வெட்டுதல்.
வாழும் வீடு, மனை வாங்குதல்.
ஒரு வீட்டிற்கு குடி போதல்,
இரு வஸ்துவை விற்றல்,
அரசைக் காணல்,
சாந்தி கழித்தல்,
இஷ்ட தெய்வம் பிரதிஷ்டை செய்தல்,
ஒருவனைச் ச்மாதான்ம் செய்தல்,
கல்வி கேட்டு கொள்ளுதல்,
யாராயிருந்தாலும் உண்மைபக்கம் நிற்றல்,
தன்ம் தான்ய ஆஸ்தி சேர்த்து வைத்தல்,
தியாகம் செய்தல்,
பாப விமோசனஞ் செய்தல்
ஆகிய இவைகள் நன்மைகளாக முடியும் மற்றவை தீமையாய் முடிவாகும்.
சூரிய இலக்கணம்.
பிங்கலையில் வல நாசியில் சரம் நடக்கும்போது
குரு உபதேசம் பெறல்
தான் ஒருவருக்கு உபதேசம் பண்ண வித்தை பாராயணஞ் செய்தல்
வித்தை ஒருவருக்குச் சொல்லுதல்
ஒருவணை வணங்குதல்
எதிரியைத் துரத்தல்
பயிர் விளைத்தல்
வியாபரம் செய்தல்
திருடல், சூதாடல்
யாராலும் தீர்ப்பதற்கரிய வழக்கை பேசுதல்
யானை, குதிரை தேர்களில் சவாரி செய்தல்
விளங்கும்படியாக எழுத்தெழுதல்
சங்கீதம் பாடல் பேசத் தொடங்கல்
பகையை உண்டாக்குதல்
ஒருவனை பங்கம் பண்ணல்
கோள் சொல்லுதல்
பிசாசு ஓட்டுதல்
மந்திர தீட்சை சாதித்தல்
மருந்து சாப்பிடுதல்
உணவு உண்ணுதல்
நித்திரை செய்தல்
ஸ்நானஞ் செய்தல்
கொல்லுவதர்கேதுவாகிய விஷயங்களை நிவர்த்தி செய்தல்
தம்பன யோக சாதனஞ் செய்தல்
ஆகிய இவைகள் நன்மைகளாக முடியும்
சுழுமுனையில் இரண்டு சரமும் ஒத்து ஒடுகையில் சமாதி யோகஞ் செய்யலாம் அதாவது கருவி காரணங்களோடு சும்மாயிருத்தல் நன்மை ஆகும். நினைத்த காரியம் ஏதும் ஆகாது. சுழுமுனை நடக்கும்போது நன்மையே இல்லை.. கெட்ட காரியங்கள் எல்லாம் பலிக்கும். சுழுமுனை நட்க்கும்போது ஒருவன் வந்து இப்பொருள் அகப்படுமா என்றால் அகப்படாது.
சரம் எந்தப் புழையில் ஓடுகின்றதோ அந்தப்பக்கம் பூரணம் என்றும் சரம் ஓடாத பக்கம் சூன்யம் என்றாகும். குறைவிலாத பூரண பக்கம் நின்று வழக்கு பேசுகிறவர்களை தர்க்கம் பண்ணுகிறவர்களை சண்டை பண்ணுகிறவர்களை ஒருவன் சென்று காணும்போது அவ்வாறு கூறப்பட்டவர்களை இதனால் காணலாமென்று சரமோடாத சூன்ய பக்கத்தில் நிறுத்தினால் பூரண பக்கத்தில் இருப்பவன் வெல்வான்.. இப்படிபட்டவர்களை தனக்குச் சரமோடாத சூன்ய பக்கத்தில் நிறுத்தினால் அவன் பேச்சே வெல்லும்.
யாத்திரை பிரயாணம் போகும்போது சரம்!
சந்திர திசை- மேற்றிசையும் தென்றிசையும்
சூரியதிசை- வடக்கும் கிழக்கும் சூரிய திசை
யாத்திரை போக நாடியவன் சந்திரனில் சந்திர திசையில் போகவேண்டும் சூரியனில் சூரிய திசையில் போக வேண்டும். அல்லது இருபத்துநான்கு காத தூரம் போக வேண்டியிருப்பவர்கள் சந்திரனில் தொடங்கி சூரிய திசையில் பிரயணத்தை முடிக்க வேண்டும்.
அல்லாது சரம் இசகு பிசகாய் மாறி ஓடினால் அதற்கு உபாசாந்தம் அதாவது சாந்தி என்னவென்றால் சூரிய கலையில் போகவேண்டிய திக்கில் யாத்திரைக்குச் சந்திர கலையாயிருந்தால் அந்த சந்திர சுவாசத்தை ஏற உள்ளே இழுத்து பூரணமாக்கி இந்தக் காலையே இரண்டு தரம் முன்னிட்டு வைத்துப் பின்பு சுதாவாய் நடந்து வழியில் சிறிது தூரம் நிற்காமல் போக வேண்டும். அப்போது சந்திரன் பலன் கெட்டுப்போகும். தீமையில்லை. போகிற காரியம் ஜெயமாகும்.
சந்திர கலையில் போக வேண்டிய திசையில் யாத்திரைக்குச் சூரிய கலையாயிருந்தால் சூரியன் சுவாசத்தை உள்ளே இழுத்து அக்காலையே மூன்றடி முன்னால் வத்து பின் சுதாவாய் நடந்து வழியில் சிறிது தூரம் நிற்காமல் போக வேண்டும்.. சூரிய பலன் கெட்டுப்போகும். தீமையில்லை. போகிற காரியம் ஜெயமாகும்.
இப்படியன்றி வடக்குத் திசையும் கிழக்குத் திசையும் சந்திரன் நடக்கும்போது யாத்திரை போனால் போகிற இடத்தில் ஒருவருக்கொருவர் விரோதப்பட்டுப் போவார்கள். திரும்பமாட்டார்.
மேற்குத் திசையும் தெற்குத் திசையும் சூரிய கலை பாயும்போது யாத்திரை போனால் சலனத்தினால் அல்லது மழையினால் இறந்து போவார்.
இரு பதினான்கு காத வழிக்கு மேற்பட்ட தூரமான இடத்திற்கு போகும்போது சந்திரகலை ஓடும்போது புறப்பட்டுச் சூரியகலை நடக்கும்போது அந்த இடத்திற்குப் போய்ச் சேரவேண்டும்.
நன்மை தீமை சொல்லும் வழி-
நாம் செய்யுங்காரியம் நன்றோ தீதோ கண்டறிவோம். என வந்தவன் சூர்ய கலை நடக்கும்போது பூரணப் பக்கம் இருந்தால் அவன் சொன்ன காரியங்கள் அவனுக்குச் சித்திக்கும். அப்படியன்றி வலப்பக்கத்தில் நின்றாலும் சரம் பார்க்கிறவன் மேலிருக்க வந்தவன் கீழிருந்து கேட்டாலும் நேர்நேரே பின்னிருந்து கேட்டாலும் அச்சூரிய கலைக்குரிய பலிதமே நடக்கும்.
சந்திர கலை நடக்கும்போது அவன் அப்பூரண பக்கமாயிருந்து கேட்டால் அவன் சொன்ன கரியங்கள் எல்லாம் அவனுக்குப் பலிக்கும். அப்படியில்லாமல் இடப்பக்கத்தில் நின்றாலும் நேர்நேரே முன்னே நின்றாலும், மேலிடத்தில் இருந்தாலும் அச்சந்திரக்கலைக்குரிய ஞானமே பலிதமாக வரும்.
இதைத் தவிர சரம் ஓடாத சூன்ய பக்கத்தில் நின்று கேட்பானானால் அவன் கேட்ட காரியம் பொல்லாதது ஆகும். பலிக்காது. அல்லாது அவன் வாய்திறந்து சொல்லிய முதல் வார்த்தையின் எழுத்துக்களை எண்ணினால் ஒற்றைப் படை வந்தால் சூரியன் குணம். இரட்டைப்படை வந்தால் சந்திரன் குணம்.
`இதில் மேல் கீழ் என்பது மெத்தை வீட்டையும், கிணறு முதலிய பள்ளக் குழிகளையும் குறிக்கும்.
சந்திரனுடைய திசையும் பக்கமும் பூரணமாயிருந்தாலும் பலாபலன் மத்திமமாகத்தான் இருக்கும். அதே சமயம் சூரியனுடைய திசையும் பக்கமும் சூன்யமாயிருந்தாலும் பூரணமாயிருந்தாலும் சொன்னபடி நடக்கும்.
குறி கேட்க வந்தவன் தன் காரியத்தைச் சொல்லிக்கொண்டே முன்னர் பூரணத்தில் வந்தாலும் பின்னர் சூன்யத்தில் வந்துவிடுவானாகில் அக்காரியம் தீதாம். முன்பு சூன்யத்தில் நின்று பின்பு பூரணத்தில் வருவானெனில் மத்திமம். இவ்விரண்டும் மாறுபாடில்லாமல் வந்தவன் கலங்காமல் பூரண பக்கத்திலிருந்து தான் வந்த காரியத்தைச் சொல்லி முடித்துவிடுவானெனில் அக்கருமம் நன்கினிதாகும்.
ஒருவன் வந்து நான் இதனால் கெட்டுப் போனேன் என்றாலும் நான் இதைப் பறிகொடுத்தேன் என்றாலும் பாம்பு கடித்தது என்றாலும் விஷம் குடித்தேன் என்றாலும் படுத்த படுக்கையில் இருக்கின்றான் பிராணன் போய்விடும் போலிருக்கின்றது என்று அபாய குறிகள் எவையாயிருந்தாலும் சரம் ஓடாத சூன்ய பக்கமாய் வந்து நின்றால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவன் சொல்லுவது குறை நீங்கி நிவர்த்தியாகும்.
அப்படியில்லாமல் சரம் ஓடுகின்ற பூரண பக்கத்தில் நின்று சொல்வானானால் வந்தவன் எப்படி எப்படிச் சொன்னானோ அப்படி அப்படியே நடக்கும். பறிபோன பொருள் வராது. நஞ்சு மீளாது. படுக்கையில் இருக்கும் நோயாளி தேறமாட்டான்.
சூன்யத்தில் எவனாவது வந்து எதையாவது சொன்னானாகில் அது ஒரு காலத்தில் அபத்தமான வார்த்தையானாலும் ஆகும். பூரணத்தில் சொன்ன சொல் எப்போதும் உண்மையாயிருக்கும்.
வந்தவனுடைய திசையையும் அவன் சொல்லிய முதல் வார்த்தையின் எழுத்தை எண்ணிப் பார்க்கில் அவன் திசை சந்திர கூறாகவும் முன் சொன்ன சொல் சூரியன் கூறாகவும் இருந்தால் மேற்சொன்ன காரியங்கள் மத்திமமாக இருப்பினும் மோசமாகாது,
சந்திரன் திசையானாலும் அல்லது சந்திரனேயானாலும் சூரியனேயானாலும் வந்தவன் பூரண பக்கத்தில் நின்றால் அவன் வந்த காரியம் நன்றாம்.
சண்டை வழக்கு குறி!
முன்பு சூன்யத்திலிருந்து கேட்டால் பிறக்கும் குழந்தை மரிக்கும் என்றாலும் போர், சண்டை, வழக்கு குறித்து ஒருவன் வந்து இன்னவன் இன்னவன் எவன் வெல்வான் என்றால் வந்தவன் சூன்ய பக்கத்திலிருந்து சொன்னால் முன் சொல்லப்பட்ட பெயரையுடையவன் தோற்பன். பூரணமாகில் பின் சொல்லப்பட்ட பெயரைய்டையவன் தோற்பன். சரம் பார்க்கிறவனுக்குச் சுழுமுனை நடந்தால் அந்த இருவரும் ஒருமித்து போவர்.
சண்டையின்போது வழக்கு நேர்கிறவனுக்கு சூரியகலையாய் இருந்தால் வெல்வான். சந்திர கலையாய் இருந்தால் தோற்பன். சுழுமுனையாகில் ஒருமித்து போவர். சந்திரகலை நடக்கப் பெற்றவர் சரத்தை உள்ளிழுத்து பூரணமாக்கி அச்சரம் நடக்கிற காலையே முன்வைத்து ஐந்தடிபோய் பின்பு நேர் நடந்தால் வெல்வான்.
சந்திரகலை இயங்கும்போது சென்று சூரியகலை இயங்கும்போது களத்தினேரில் எதிரி எப்படிப்பட்டவானாய் இருந்தாலும் தோற்பன். சந்திரன் இயங்கும்போது புறப்பட்டு சந்தின் இயங்கும்போது போரில் தோற்பன். சூரியன் இயங்கும்போது புறப்பட்டு அச்சூரியன் இயங்கும்போது போரில் வெல்வதனாலும் தன்மேல் ஓரு காயம் படாமல் வென்று வருவான்.
போர் வெல்லும் மார்க்கம்- அ, ஆ- பாலன் கூறு, இ, ஈ-குமரன் கூறு, உ, ஊ அரசன் கூறு எ, ஏ, ஒ, ஓ விருத்தன் கூறு எனக் கொள்க. சண்டைக்காரனுடைய முதலெழுத்து ஆவொலியாக இருந்தால் பாலன்கூறு என்வும். ஈ வொலியாக இருந்தால் குமரன் கூறாகவும், ஊ ஒலியாக இருந்தால் அரசன் கூறாகவும். மற்ற எ, ஏ, ஒ, ஓ ஒலியாக இருந்தால் விருத்தன் கூறாகவும் கொண்டு பாலன் குமரனையும் அரசனையும் வெல்வான் என்க. விருத்தன் மற்றவர்களால் படுவானெச் சொல்க. அதிலும் எ, ஏ, ஒ, ஓ விருத்தன் கூறு இவ்விரண்டு எழுத்துக் கொண்டவன் அவர்களால் படுவான்.
பஞ்ச பூதியங்கள்!
சரத்தின் ஸ்பரிசம்! இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று கலைகளையும் அவற்றின் பயன்கள் அனுபவத்தையும் பரிசார்த்த முறையில் பார்த்தால் ஒத்துவரும் அந்த நாடிகளுக்குள் பஞ்ச பூதியங்கள் நடப்பதுண்டு. அவற்றைத் தேர்ந்தறிந்து அனுபவிப்பது சிறப்பாகும்.
`
நாசியிலிருந்து வரும் சரம் வலத்திற்கும் இடத்திற்கும் ஒன்றுதான்,
மூக்குத் தண்டைச் சார்ந்து வந்தால் பிருதிவியின் கூறு
கீழ் நோக்கியோடில் அப்புவின் கூறு
மேலாகச் சென்றால் தேயுவின் கூறு
தண்டிற்கு நேராகி மற்றொரு புறத்தைச் சார்ந்து வீசினால் வாயுவின் கூறு
இப்படி நான்கு பக்கமும் கலைந்து நடந்தால் அது ஆகாயத்தின் கூறு
பஞ்ச பூதிய சரம் நடப்பதை கீழ்கண்ட முறையில் கண்டு தெளியலாம். ஒர் பூதியத்திற்கு நான்கு குறி சொல்லியிருப்பது ஒன்று இல்லாவிட்டாலும் ஒன்றைக் கொண்டு கண்டு பிடிக்கலாம் என்பதற்காகவே.
பிருதிவி சரம் பொன்மை
அப்புச் சரம் வெண்மை
தேயுச் சரம் செம்மை
வாயுச் சரம் கருமை
ஆகாய பூதியம் நிறம் படிகம்
அப்போது கண்டத்தில்
பிருதிவிக்குத் தித்திக்கும் உணர்ச்சி
அப்புக்குத் துவர்க்கும்
தேயுவுக்கு உவர்க்கும்
வாயுவிற்கு புளிக்கும்
ஆகாயத்திற்கு கண்டங்கசக்கும்
பிருதிவி எண்கோண வடிவம்
அப்பு எட்டு நாள் பிறைபோன்று வடிவம்
தேயு முக்கோண வடிவம்
வாயு அறுகோண வடிவம்.
ஆகாயத்திற்கு வட்ட வடிவம்
பிருதிவி 12 அங்குலம்
அப்பு 16 அங்குலம்
தேயு 8 அங்குலம்
வாயு 4 அங்குலம்
ஆகாயம் 1 அங்குலம்
இப்படி பூதியங்களின் குணா குணங்களைச் சொல்லின் பிருதிவிக்கும் அப்புவிற்கும் உத்தமம். தேயு மத்திமம். வாயுவும் ஆகாயமும் தீது.
சுட்டிக் காட்டாமல் சூன்ய பக்கத்திலிராமலும் பூரண பக்கத்திலிருந்து சண்டைக்குப் போகிறவன் ஆயுதங்களினால் காயம்பட்டு வருவான் என்க. மேலும் பூதியப்படி
பிருதிவி நடந்தால் முதுகில் படுகாயம் அடைவான்
அப்புவாகில் காலில் காயம் படுவான்
தேயுவாகில் மார்பில் காயம் படுவான்
வாயுவாகில் கையில் காயம் படுவான்
ஆகாயமாகில் தலையிலும் காயம் படுவான். விஷ்ணு தேவன் வந்து விலக்கினாலும் தப்பித்து வரமாட்டான்.
சமர் செய்கின்ற வாயு மூலை தொடங்கி அக்கினி மூலையளவாக ஒரு கயிறு பிடித்தாற்போல் சரியாகப் பாவனை செய்து அதன் மேற்கையும் தெற்கையும் சந்திரன் கூறாகவும் வடக்கையும் கிழக்கையும் சூரியன் கூறாகவும் கொண்டு போர் செய்தால், போர் செய்கிறவனுக்கு சூரியகலை இயங்கில் தான் அச்சூரியன் திசையிற் நின்று எதிரியை சந்திரன் திசையில் நிறுத்தி சமர் செய்ய வேண்டும். அப்படி செய்கையில் சந்திரனானாலும் சரி சூரியனானாலும் சரி உபயோகிக்கும் ஆயுதங்கள்
பிருத்தியாயிருந்தால் கத்தி
அப்புவாகில் வாள்
தேயுவாகில் வில்
வாயுவாகில் தண்டு
ஆகாயமாகில் கல்
கொண்டு அந்தந்த நிலத்தில் இருந்து சண்டை செய்தால் வெற்றி பெறுவர்.
ஒருபக்கத்தில் ஓடும் சரத்தில் ஐந்துவகைப்பட்ட பூதியங்களுண்டு அப்பூதியம் ஒன்றிற்குள் ஐந்து பிரிந்து நடப்பதுண்டு. அவை
பிருதிவிற் பிருதிவி
பிருதிவியில் அப்பு
பிருதிவியில் தேயு
பிருதிவியில்வாயு
பிருதிவியில் ஆகாயம்
தேயு பூதியம் நடக்கும்போது போர் அரங்கம் புரிகையில் வெல்லும். இப்போரில் வாளெடுத்து புரிவது மத்திமம்.
வாயு பூதியம் நடக்கையில் மற்போர் தொல்வியடையும்
ஆகாய பூதியம் நடந்தால் விற் போர் ஜெயிக்கும்.
சாந்தி பண்ணுதல், போக்கு கழித்தல் செய்ய் வேண்டும் என்று கேட்டால் பிருதிவி, அப்பு பூதியங்களில் ஏதாவது ஒன்று நடக்கும்போது செய்தால் பலிக்கும்.
ஒருவன் வந்து மற்றொருவன் எங்கேயிருக்கின்றான் என்று கேட்கின்
பிருதிவியாயிருந்தால் வீட்டிற்குள்ளிருக்கின்றான்.
அப்புவாகில் முற்றத்திலிருக்கின்றான்
தேயுவாகில் அந்த கிரமத்தில் எல்லைக்குள்ளேயிருக்கின்றான்
வாயிவாகில் எல்லைக்குப் புறப்பட்டான்
ஆகாயமாகில் மலையேறுகிறான் என்க.
இதவிடுத்து அடுத்த தேசம் சென்றவன் பற்றிக் கேட்டால்
முதல்பூதியமாகில் அவ்வூரிலே நிலையாயிருக்கின்றான்.
இரண்டாவது பூதியமாகில் திரும்பி வருகின்றான்.
மூன்றகில் திரும்பியவ நில்லாது வந்து கொண்டிருக்கின்றான்.
நான்காகில் அவனிருக்கும் ஊருக்குள் வந்தான்
ஐந்தாகில் ஒரு நாழிகையில் வீடு வந்து சேர்வான். என்க.
இப்படி பூதியம் இவ்வைந்துக்குள் ஐந்தோடும் இது அன்றியும் நூல்பயன் யாவையும் குரு முகாந்திரமாயிருந்து அறிந்து கொள்ளவேண்டும். அல்லாமல் தேவர்களாய் இருந்தாலும் தனியே எண்ணங்கொண்டு குருவைத் தள்ளி சுயானுபவதால் இந்நூலைக் கொண்டே அறிவது கூடாது.
சந்திரக்கலையில்
பிருதிவி நடந்தால் சிவாலயம், வீடுகட்டல், குடி புகுதல், போக்கு சாந்தி கழித்தல், மரம் வைத்தல் இவை நன்றாம்.
அப்பு நடந்தால் குளம் முதலியவை எடுத்தல், சோலை வைத்தல், நிலத்தை உழுதல், விதைத்தல், விவாகம் செய்தல் நன்றாம்.
தேயுவாகில் பிணி தீர்த்தலாம்
வாயுவாகில் குதிரை தேர், கப்பல் ஓட்டலாம்.
சூரிய கலையில் ஆகாயத்தில் மந்திரஞ் ஜெபிக்க விற்போர் செய்ய நன்று.
கருப்பக்குறி!
ஒருவன் கர்பத்தைக் குறித்துக் கேட்கும்போது வந்தவன் ஒரு சீவன்மேல் ஏறிக்கொண்டிருந்தாலும் உயிருள்ள ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாலும், ஒரு சீவனைத் தொட்டுக் கொண்டிருந்தாலும் அவன் நின்ற பக்கம் வலமாகவும் புரணமாகவும் இருந்தால் ஆண்பிள்ளை பிறக்கும். அல்லது இடப்பக்கமாகவும் பூரணமாகவும் இருந்தால் பெண் பிள்ளை பிறக்கும் என்க.
பூரண பக்கம் இல்லாமல் சூன்ய பக்கமிருந்து எதனை தொட்டு இருந்தாலும் வலமாகில் ஆண். இடமாகில் பெண். ஆனால் பிறக்கின்ற பிள்ளை இறக்கும்.
சரம் பார்க்கின்றவர்க்கு சுழுமுனையாயிருந்தால் பிள்ளை ஆணுருவிலும் அல்லாமல் பெண்ணுருவிலும் அல்லாமல் அலியாகும்.
வந்தவன் முதலில் வலத்தில் நின்று அவன் வந்த காரியத்தைச் சொல்லிக் கொண்டபின் இடத்தில் வந்து நின்றால் வயிற்றில் உள்ள குழந்தை வருத்தப்பட்டு பின்புதான் பிறக்கும்.
பூதிய சரங்களின்படி பிருதிவியும் அப்புவும் நன்மை தருவன. ஐந்து நாழிகைக்குமேல் நடக்கையில் இவ்விரண்டு பூதியங்கள் அதிகமாக நடந்தால் இலாபமுண்டு. ஒரு பிராணியைக் கைப்பற்றாமலும் அதன் மேல் ஊர்ந்து நில்லாமலும் தனியே வந்து சூனியத்தில் நில்லாமலும் பூரணத்தில் நின்று கர்ப்பக்குறி கேட்டால் அப்போது சரம் பிருதிவி அல்லது அப்பு நடந்தால் ஆண்பிள்ளை பிறக்கும் என்க.
தேயு பூதியம் நடக்கும்போது கர்ப்பம் பற்றிக் கேட்டால் அஃது அழிந்து போகுமாம்.
வாயு பூதியம் நடக்கையில் கர்ப்பம் பற்றிக் கேட்டால் அது பெண்ணாகும்.
ஆகாய பூதியம் நடக்கையில் கர்ப்பம் பற்றிக் கேட்டல் அலியாய் பிறக்கும். பிறந்து இறக்கும் என்க.
உபய சரங்கள் நடக்கும்போது கேட்கப்பெற்ற பிள்ளை இரட்டைப் பேறாகும்.. எப்பக்கமாயிருந்தாலும் பூரணபக்கம் ஆண். சூன்ய பக்கம் பெண்.
வைகறைப் பொழுதில் மனைவிக்குச் சரம் இடப்பக்கத்தில் நடந்து ஆணுக்கு வலத்தில் நடந்தால் உட்கொள்ளும் அப்பியாசம் செய்துகொண்டு வந்தால் மனைவி அவன் வயமாவாள். அப்படி வாங்குவது பன்னிரண்டு தரம் வாங்கியுட்கொள்க. வாரசாராங்கள் எந்தெந்த பூதியங்களில் உதிக்க வேண்டுமெனில் புதன் பிருதிவியில், ஞாயிறு அப்புவில், சனியும் திங்களும் தேயுவில், வியாழனும் செவ்வாயும் வாயுவில், வெள்ளி ஆகாயத்தில் உதிக்க வேண்டும்.
நோய்க்குறி!
புருடன் கொண்ட நோய்க்காக புருடனே வந்து இந்நோய் குணமாகுமா என்றால் அந்நோய் இலகுவாகும். சரம் பார்க்கிறவனுக்கு வலப்பக்கம் நின்று கேட்கிலும் நிவர்த்தியாகும்.
ஸ்திரீ கொண்ட நலிவிற்கு ஸ்திரீயே வந்து வினவினாலும் குணமாகும். வந்தவள் அவனுக்கு இடப்பக்கத்தில் நின்று கேட்கில் சரியாகும்
அப்படியின்று ஆணுக்குப் பெண் வந்தாலும் பெண்ணுக்கு ஆண் வந்தாலும் அவ்வியாதி தீர்வது துர்பலம்.
வலப் பக்கத்திலிருந்து குறி கேட்டுக்கொண்டு இடப் பக்கம் நின்றாலும் இடப் பக்கம் குறிகேட்டுக் கொண்டு வலப் பக்கம் வந்து நின்றாலும் நோய் போக்கு கடினமாகும். ஆனாலும் நாட்பட குணமாகும்
எப்போது தீரும் என கேட்கின் பூதியம்
பிருத்திவியாயிருந்தால் சில நாட்களில்
அப்புவாகில் விரைவில்
அக்கினியாகில் மூன்று நாட்களில் அதிகமானால் கொல்லும்
வாயுவானால் இரண்டு நாளில் அதிகமானால் கொல்லும்
வானமாகில் அன்றைக்கே நோய் பிரிந்து காணும் மிஞ்சிப் போனால் மறுநாள் மரிக்கும்.
நோயைக்குறித்து ஒருவன் கேட்கும்போது சுழுமுனை நடந்தால் அந்நோயாளி ஐந்து தினங்களுக்குள் மரிப்பான். அப்படி மரிக்காமல் தப்பினால் அவனுக்கினி ஒரு விபத்து வருமளவுஞ் சாகான்.
குறி சொல்லும் மார்க்கம்!
சரம் பார்க்கிறவன் ரேசகஞ் செய்கின்ற போது வந்து கேட்கின் கெட்ட காரியஞ் சித்தியாகாது.
பூரகத்திலெனில் நன்மை. அவன் சொல்கிறது உண்மையாயிருக்கும்.
கும்பகஞ் செய்காலத்திலாகில் நற்காரியம் சித்திக்கும்.
மலம், சலம், வாயு கழியும் போதானால் பகைவர் கெட்டுப் போவர்.
சரம் மனத்துடன் லயப்பட்டால்!
இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் மாறி மாறி நடக்கும் இச்சரம் தேகத்தினூடே லயப்பட்டு போகுமானால் பிராணணுக்கு அழிவில்லை. அப்படி வயப்பட்டு நிற்கில் மனம் முதலிய அந்த காரணங்களுக்கும் வேலையில்லை. அவை அசைவற்றிருப்பனவாகும். அதனால் யாராலும் பயமில்லை. இயமனாலும் பயமில்லை. இடப்பக்கமும் வலப்பக்கமும் மாறியோடும் சரம் ஒவ்வொரு பக்கத்தில் எந்நேரந்தரித்து நடக்குமெனில் ஐந்து நாழிகையாம். அதிலும் பூதியங்களின் கூறுக்கேற்றவாறு பகுப்பது எனில்
மண்ணில் ஒன்றரை நாழிகை
நீரில் ஒன்றேகால்
நெருப்பில் ஒன்றும்
காற்றில் முக்காலும்
வெளியில் அரையும் ஆக நிறைந்தோடும்.
இப்படியாகிய பூதியங்கள் கூறுகொண்ட ஐந்து கடிகைகளும் ஒவ்வொரு பக்கத்திற்கும் சிதையாதோட வேண்டும். இதைவிடக் குறைந்தாலும் வளர்ந்தாலும் தேகநலியாம். சரம் வயப்பட வழிதேட வேண்டும். தேடினால் முன் சொன்ன பயன் உண்டு. நாடியொன்றிற்கு ஐந்து நாழிகை பூதியங்களின் அளவே சிதறாமல் நடப்பிக்க வேண்டும். அவ்வாறில்லையெனில் தேக நலியே வரும்.
மூன்று நாடிகளின் முறைமை!- சூரியன் சந்திரன் சுழுமுனை என்னுமிம் மூன்று நாடிகளுள்ளும் வாழ்வு, கேடு, நிலைமையென்கிற மூன்று கரும நிதானப் பலன்களைச் கேட்குமிடத்தில் சூரியனாகில் நன்மையும் மிகுந்த செல்வத்தையும் அடைவார்கள். சந்திரனாகில் கேடு முதலிய கண்ணியக் குறைவாகும். சுழுமுனையாகில் முன் உள்ளபடி ஏறாமல் குறையாமல் நிறைவாகும்.
அன்றியும் தேவாதி தேவர்களாலே வசீகரிக்கப்பட்டவனாகிலும் ஜெயாபஜெயத்தில் முன்னிலையில் வருவோமென்ற உறுதியாக சொல்லினுஞ் சந்திரனே அதிகமாக இயங்கிடின் வரார். சூரியனே அதிகப்படில் வருவர் எனக் காண்க.
சந்திரன் அதிகமாக நடந்தால் நமக்குக் கேடு வருவதோடல்லாமல் பந்துக்களுக்குமதுவே வரும். சத்துருக்கள் தோன்றி வருவது தப்பாது. சந்திரனில் போக வேண்டிய காரியமல்ல்லாத காரியார்த்தமாய்ப் போகும்போது சந்திரன் நடந்தால் சரத்தை நீள வெளிவிட்டு அப்பக்க காலையே இரண்டு மூன்றடி முந்தி வைத்துகொண்டு போக வேண்டும். சூரியனில் போக வேண்டிய காரியமல்ல்லாத காரியார்த்தமாய்ப் போகும்போது சூரியன் நடந்தால் அச்சரத்தை ஏற உள்ளே வாங்கி அவ்வலக்காலை முன்னிட்டுக் கொண்டு போக வேண்டும். அப்படிப்போனால் போங்காரியம் நன்று.
சர ராசியெனப்பட்ட சூரியனையும், திர ராசியெனப்பட்ட சந்திரனையும், உப ராசியெனப்பட்ட சுழுமுனையும் மற்றவற்றின் பயன் முதலிய கூறுபாட்டையும் பங்கயாசனத்திலிருந்து பிரிவற்றுச் சிவயோகஞ் செய்தாலல்லது நன்குணர்தலரிது. உயிர்பாழ் போகாது. சீவன் முத்தனுக்கு அது மார்க்கம். இல்லையேல் அவம் போகுமென்றறிக.
பிராணனுக்கு அழிவில்லை!
கிழமை ஏழும் தவறாமல் மேற் சொன்ன நாழிகையும் கோணாமல் திக்கு நோக்கிச் செல்வதுடன் பிராணாயாமமும் மாறாமல் நிகழ்ந்து வருமானால் இயமன் வரான். பிராணனுக்கு அழிவில்லை. சீவன் முத்தனாய் வாழ்வான். அஷ்டமாசித்தியும் அவனுக்கு சித்திக்கும்.
சனி வியாழன் பலன்!
வளர்பிறை வியாழனுக்கு சந்திரனும், தேய்பிறை வியாழனுக்கு சூரியனும் தப்பாமல் நடந்து கொண்டே வந்தால் நிறைந்த பேறுண்டாகும். சீவன் முத்தனாவான். தளர்வின்றி வாழ்வான்.
சனிக்கிழமை இரவிலும் பகலிலும் சந்திர சூரிய சரங்கள் மாறுபாடில்லாமல் நடந்தால் இவ்வுலகமெங்கும் மெச்சத்தக்க கீர்த்தி வந்துறும்.
அயன சரம்!
சரம் பார்க்கிறவனுக்கு சென்ற நாட்கள் போக மற்றும் நின்ற நாட்கள் எவ்வளவு என்னும் கருத்துக் கொண்டு பார்ப்பது எவ்வாறெனில் அது அயன சரமாகும்.
தைமாத முதல்தேதியில் உத்தரயணகாலம்
ஆடிமாத முதற்தேதியில் தக்ஷிணாயன காலம்
இவ்வயன காலத்திற்கு முன்னாள் பகலில் ஒரு பொழுதன்னமுண்டு தத்துவங்களைப் பரிசுத்தமாக்கி தேகம் மெலிவதனால் மனதிற்கும் மற்ற வாயுவாதி காரணங்களுக்கும் வரும்மிடையூற்றினை ஒருவி தைமாத முதற்தேதியில் பொழுதுவிடிய ஐந்து நாழிகையிருக்கையில் பார்க்கும்போது சரம் வாரம் திதி நட்சத்திரங்களைத் தள்ளி இடப்பக்கத்திலுதித்த சரம் ஐந்து நாழிகைக்கு சிதறாமல் ஓடுவதைப் பார்க்க வெண்டும்
இதேபோல் ஆடிமாத முதல் தேதியில் பார்க்க வேண்டும் அப்போது சரம் வலப்பக்கத்திலோடும். அப்படியோடிய சரம் முன் சொன்ன வண்ணம் ஐந்து நாழிகைகளுக்குச் சிதறாமலோடினால் சரம் பார்க்கிறவன் தான் செய்யும் பிராணாயாம உதவியினால் அன்று தொட்டு நூறுவருஷ காலம் வாழ்ந்திருப்பான்.
இதுவன்றிக் குறைந்தால் அவ்வைந்து நாழிகையை நூற்றொருமா ஐந்தாக நூறாக்கி குறைந்த நாழிகை ஒருமாவோ இரண்டு மாவோ அல்லது அதன் மேற்றோகைப் பட்டவையோ அதற்கு ஒவ்வொரு வருஷத்தை கூட்டிப் பார்த்து குறைந்த ஒவ்வொரு மா நாழிகையின்மேல் கணக்காக்கிக் கொள்ளவும்.
சரம் முழுவதும் தப்பி இடத்திற்கு வலமானால் வலத்திற்கு இடமானாலும் அவனுக்கு க்ஷீண காலம் என்க.
போசன விதி!
சரம் பார்க்கிறவன் சூரியகலையியங்கி வருகிற மட்டும் போஜனம் இல்லாமல் எதற்காகவும் காக்க வேண்டியதில்லை. சந்திரன் நடக்கும்போதும் சாப்பிடலாம். உப்பு, கசப்பு, காரமாகிய பண்டங்களை வைத்துக் கொண்டு தாக பாணத்தை நிறுத்தியுண்ண வேண்டும். சொல்லியபடி சூரியன் நடந்தால் நெய், பால், புளித்தல், தித்தித்தல், துவர்த்தலான பண்டங்களை சாப்பிடலாம். தாகப்பாணம் அப்போதே செய்யலாம். சந்திரனுக்கு அப்போது கூடாதாகிலும் பின்பு சூரியன் நடக்கையில் சாப்பிட வேண்டும்.. இது மாறினாலும், ஆத்திரத்தாலும், ஆசையினாலும் சூரியனுக்காகக் காத்திராமல் அடுத்தடுத்துச் சந்திரன்தானே என தின்று வந்தாலும் நலியாம். இப்படிச் சாப்பிடுகிற உணவு அவ்வயிற்றிற்கு பாதிதானாகும். மிஞ்சலாகாது. மற்றப் பாதிக்குச் சலம் காலாகக் கொண்டு தச நாடிகளையும் பிராணாயம முன்னிலையில் சுத்தி செய்து ஏகாக்கிர சித்தனாய் சரம் பார்க்க வேண்டும்..
சரத்தை வயப்படுத்தும் மார்க்கம்!
சரம் பார்க்கிறவனுக்கு அனுபவம் இந்நூல் சொல்லியபடி வருமா! மற்ற விதிப்படி பிறழாது போஜனமுறை ஒத்துக்கொள்ளுமா! அதிகமானலும் குறைவானும் நோய் வருமா! எளிதாக சரியாய் வருமா! வராதெனில் அவனெப்படி நன்மை அடைவான்! எனக் கேள்வி எழுப்பினால் நன்றெனவும் தீதெனவும் ஊழின்படி தெறிந்தோதுவன் என ஐயமுற வேண்டியதில்லை.
சரம் பார்ப்பான் பரம்பார்ப்பான் என்பதுபோலச் சரத்தை கணக்கின்படி அறிந்து பார்க்கிறவனுக்கு எந்தக் காரியமானாலும் தப்பிப்போகாது. அவனைக் கண்ட பேர்களுக்கு நினைத்த காரியமெல்லாம் முடியும்.
பிருத்துவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதியங்களின் கூறு கூடிய வாயுவினைப் பாழ்போகாமல் மனவறிவுடனேகட்டி ஆறாதாரத்திலுள்ள பரிசினையறிந்து தசநாடிகளுக்கும் முதல் நாடியாகிய பிராண நாடியினின்று மற்றங்கிருந்து உதித்தோடும் சந்திரன் சூரியன் அக்கினி எனும் மூன்றினுடைய குணங்களையும் பார்த்தால் கைக்கனி போல் இலேசில் தெரியவரும்.
சாயா புருஷ தரிசனம்!
பூமியிலே மேடுபள்ளமில்லாத இடத்தில் ஆகாயத்தில் மேகமறைவு இல்லாமல் வெயில் காயும்போது தன்னிழல் ஐந்து முதல் பத்தடிக்குட்பட்ட தருணத்தில் தான் அந்நிழல் முகமாய் நின்று கைகளிரண்டையும் தொங்கவிட்டுக் கண்களிமையாமல் அந்நிழலைக் கழுத்து, கைகள், கால்கள் இவ்வுருப்புகளுள் ஒன்றைப் பார்த்து அப்படியே கண்கள் இமையாமல் ஆகாயத்தைப் பார்த்தால் அங்கே அவனுருவம் தோன்றும்.
அவனுருவம் பொன்னிறமாயிருந்தால் அவனுக்குச் செல்வம் வரும்.
வெண்மையாயிருந்தால் பிராண பயமில்லை.ஆயுள் வளரும்
செம்மையாகில் ஆயுள் தேயும். அதர்கொரு குறைவு வரும்
கருமையாயிருந்தால் நலி.
அவ்வுருவில் கைகளாவது கால்களாவது தோன்றாமலிருந்தால் ஆறு மாதங்களுக்குள் மரணம்.
தலையே தோன்றாது முண்டமாய் இருந்தால் மூன்று மாதத்தில் மரணம்.
இந்த சாயா புருஷ தரிசனத்தை இப்படி பன்னிரண்டு ஆண்டுகள் பார்த்துக் கொண்டு வந்தால் தன் முன்னிற்கும் அந்நிழல் தன்னுடன் பேசும். பேசினால் அதன் முகாந்திரமாய் அஷ்டமா சித்திகளைப் பெறலாம். பின்னும் சில நாட்களில் அந்நிழல் ஓர் ஆளுருவம் ஆகி தன்னுடனே திரியும். படுத்தால் படுக்கும் எழுந்தால் தானும் எழும்.. இவனுக்கு வரும் நன்மை தீமைகளை முன்னதாகவே இவனுக்கு உணர்த்தும்.
மரண இலக்கணம்!
வானிற் கலங்கமில்லாமல் சூரியன் எரிகையில் மரநிழல் வீட்டுத் தாழ்வார நிழல் இப்படிப்பட்டதொரு நிழல் தனக்கு முன்னிருக்க சரம் பார்க்கிறவன் பின்னின்று வாய் நிறைய நீர் கொண்டு அந்த நிழலருகில் துகள்கள் பறந்து அணுபோலப் பறக்க ஒரே சரமாய் உமிழ்ந்து அத்துகள்களைப் பார்த்தால் அதில் இந்திர தனுசு அமைந்து வர்ணங்களுடனே தோன்றினால் பார்க்கிறவனுக்கு அன்று முதல் ஒருவருஷம் வரை சாவில்லை. அதுவரும் வருவதில் அவ்வில் நிறம்மாறி அங்கு ஒரு பொண்ணுரு தோன்றினால் ஆறு மாதங்களில் இறப்பான்.
சந்திர் சூரியன் பார்க்கும் இலக்கணம்!
ஒரு செம்பு அகலில் பசுவின் நெய்யை உருக்குவிட்டு அதில் பூரண சந்திரனை அலலது அமாவாசையின்போது சூரியனைப் பார்த்தால் அதில் தோன்றுகின்ற சந்திரன் அல்லது சூரியன்
வெண்மை செம்மையெணில் வாழ்வுண்டாம்.
பொன்மையாகில் கேடு
பசுமையானால் நோய்
கருமையோ சாவு வரும்
அப்படிச் சாவு வருவது எப்போது என்றால் தென்புற வட்டங்குன்றந்தால் ஆறு மாதம், வடப்புறம் மூன்று மாதம், கீழ்புறம் ஒருமாதம், நடுவே கொள்ளையாயிருந்தால் பத்து நாள்.
நிறைமதியம்,குறைமதியம் சரீர பழுது - மரண இலக்கணம்!
கை கால் நெற்றி கன்னம் இவை அடர்ந்து துடித்தால் மரணகாலம் வந்ததென்று அறிக.
கை துடிக்கில் ஒருவருஷம்
கால் ஆறு மாதம்
நெற்றி மூன்று மாதம்
கன்னம் பத்துநாள்
இதைத்தவிர காது கேளாவிட்டால் ஏழுநாளில் மரணம்
கண் பார்வை மங்கினால் மூன்றுநாள்
வாய் குழறிப் பேச்சழிந்தால் இரண்டுநாள்
இதையறிந்து கடவுளுடைய பாதங்களை நினைந்து போற்றினால் இவ்வினைகள் இராது.
சூரியன் நடக்க வேண்டிய நாளிற் சந்திரன் நடந்து, சந்திரன் நடக்க வேண்டிய நாளில் சூரியன் நடந்து இப்படியே மாறுபட்டு ஒருவாரம் முழுவதும் நடந்தால் அவன் மரித்து போவான்.
உசுவாச நிசுவாச பலன்!
உசுவாசம்- ரேசகம் உடலைவிட்டுப் போகிற வாயுவே சிவம். நிசுவாசம்-பூரகம்- உடபுகுவது சத்தி. சரம் வெளிப்பட்டு போவதெல்லாம் விடமுண்பதற்குச் சரி. சரம் உட்பட்டு போவதெல்லாம் அமுதமுண்பதற்குச் சரி.. சரம் உள்ளே போகும்போது ஒருவன் சொன்னது அல்லது நினைத்த காரியம் ஆகும். வெளிச் செல்லுகையில் ஆகாது. அந்த வாயு கும்பகத்தடங்கினால் உண்டவிடம் கெடுமெனச் சரி. நடு நாடிவழிப் போமாகில் பாவமென்பதில்லை.
ஒருவன் வந்து குறி கேட்கின் அவன் முன் சொல்லிய எழுத்தை எண்ணிப் பார்க்கையில் ஒற்றையாகில் சிவன் கூறென்றும், இரட்டையாகில் சத்தி கூறென்றும் கொள்ளவேண்டும்.
சரம் வெளியே போகும்போது ஒருவன் வந்து இன்னான் போவானோ எனில் போவான். வாரான். உட்புகையில் வருவான். சரம் போகும்போது வருவானோ என்றும் புகும்போது போவானோ என்றும் மாறுபட்டு வினவில் சரிப்படாது. போகும்போது போவானேயல்லது வாரான். புகும்போது வருவனேயல்லாமல் போகான். சரம் போகும்போது நோய் தீருமோ எனில் தீராது. புகும்போது தீரும் என்க,
இதுவுமது!
திசை, ஆண், பெண், சூன்யம், பூரணம், எழுத்து இவை முதலாய்ச் சொல்லப்பட்ட இச்சர நூலில் நுட்பப் பொருள்களைக் கண்டு இஃது இன்னதென்றும் அஃது இன்னதென்றும் நிரூபிக்க வல்லவனே சரம் பார்க்க வல்லவன்.
நல்ல பிரமண குலத்தவராய் பிறந்தாலும் அல்லது இழிந்த குலத்தவாய்ப் பிறந்தாலும் இச்சர நூலை நன்கு உண்ர்ந்து இதன் நடை தப்பாமல் பார்ப்பவரே பிராமணர். சராசரங்களினுடைய நன்மைகளை அறிந்தவராக இப்பூமியின் கண் அவரே தேவரென யாவராலும் பூசிக்கப்பட்டு வாழ்ந்து பரம் பொருளிற் சாயுச்சியடைவர். பார்க்கமாட்டாதவர் இழிந்த குலத்தினராய் புன்பிறப்பு பிறந்து கொண்டிருப்பார்கள்.
இழிந்த குலத்தில் பிறந்தவனானாலும் ஒரு முகாந்திரமாய் இச்சர நூலைச் சொல்லக் கேட்டு இதனை உணர்ந்து இவ்வழி நடப்பவன் யாவனானாலுமவன் யாமேயாவான். வேற்றுமையில்லை. நெருப்பு தன்னை அடைந்தவற்றையுந் தன்னுருவக்கிக் கொள்ளும் இயல்பைப் போல அவன் யாமே. அவமாய் பிறந்திறவான். இன்னும் விசேஷமாய் சொல்லப்போனால் சடாபாரத்தில் நாமணிந்திரானின்ற சந்திரன் போன்று ந்ம்முடி மேல் வீற்றிருப்பான்.
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.