gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

ஓம்நமசிவய!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!


#^#^#^#^#

 

3.பிறப்பு சம்பந்தமான தோஷங்கள் நீங்க!

கிரகங்களில் (வீடுகளில்) கிரகப்பிரவேசம், உபநயணம் (பூணூல் அணிவித்தல்) திருமணம், சீமந்தம், அன்னப்ராசனம் (குழந்தைகளுக்கு முதல் பிரசாதம் அளித்தல்) போன்ற கைக்காரியங்கள் நிகழும்போது மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த தந்தை, தாய் வழியினருக்கு “நாந்தீச்ராத்தம்” எனும் சிரார்த்தத்தை (ஆண்டுதோறும் செய்வதைப் போன்றே) வஸ்திரம் அளித்து போஜனம் செய்வித்து, தட்சணை கொடுத்து அவர்களை வணங்கி அனுக்கிரகத்தைப் பெறவேண்டும். அப்போது நம் கிரகங்களில் நடைபெறும் ஒவ்வொரு சுபகாரியத்திற்கும் நம் முன்னோர்கள் மனமுவந்து எழுந்தருளி சுபகாரியங்களை நடத்திக் கொடுத்து பரமானுக்ரகம் செய்கின்றனர் என்கிறது வேதங்கள்.

ஜாதகர்மா- தொப்புள்கொடி அறுபட்ட பிறகு முதன் முதலாக வேத மந்திரங்களைச் சொல்லி பிறந்த ஆத்மாவின் உடல்- குழந்தைக்கு பொன் நகையால் தேன் பால் கலவையை தொட்டு நாக்கில் தடவ வேண்டும்.

பெயர் சூட்டல்- பிறந்த 10 வது நாள் / 12 வது நாள் / 18 வது நாள் / ஒருமாதம் / மூன்றாவது மாதம் குழந்தையின் நட்சத்திரத்தன்று பெயர் சூட்ட வேண்டும். பெயர் மங்களகரமாக உச்சரிக்க இனிமையானதாய் இருக்க வேண்டும் கஷ்டமானதாக கண்டிப்பாய் இருக்கக்கூடாது. பெண்களின் பெயர்களின் முடிவில் ‘ஆ’ / ‘இ’ ஒலி வரும்படி ரம்யமாக வைக்க வேண்டும். பெண்களுக்கு நட்சத்திரம், மரம், நதி, பர்வதம், பட்சி, பாம்பு போன்றவற்றின் பெயர்களை சூட்டாமலிருப்பது நல்லது.

அன்னப்ராசனம்- ஆறாம் மாதம் முதன் முதல் அரிசி சாதம் ஊட்ட வேண்டும்.

முடி இறக்குதல்- மூன்றாம் வருடம் முடியிறக்கி காதணி செய்ய வேண்டும். தற்போது அவசரம் கருதி 11 வது மாதத்திலேயே எல்லாம் செய்து விடுகின்றனர்.

உபநயனம்- உபநயனம் செய்ய விரும்புவர் ஆறு (பிரம்ம தேஜஸ்) / எட்டு (தனத்தைப் பெற) வயதில் செய்யலாம்.

#^#^#^#^#

செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:23

வாழ்க்கை தர்மம்!

Written by

ஓம்நமசிவய!

#^#^#^#^#


வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!


#^#^#^#^#

 

2.வாழ்க்கை தர்மம்!


எல்லா ஜீவராசிகளுக்கும் பிறப்பு என ஒன்றிருந்தால் இறப்பு நிச்சயம் என்பதை உணர்ந்து இயமனுக்குப் பயந்து நல்ல தர்மங்களைச் செய்திடல் வேண்டும். நாளை நாளை என தள்ளிப் போடாமல் யோகமும் போகமும் பெற்று நலமுடன் வாழ்ந்து இறுதியில் சொர்க்க போகத்தைப் பெற்றுவாழ முயற்சிக்க வேண்டும்.

அனைத்து உற்பத்திகளுக்கும் பசி-உணவு, உறக்கம்-விழிப்பு, அச்சம்-பயம், புணர்ச்சி ஆகிய உணர்வுகள் இருந்தாலும் மனிதனுக்கு மட்டும்தான் ஞானம் உண்டு. அதனால் கல்வி வித்தை எல்லாம் கற்று ஞானம் அடைந்து தெளிய வேண்டும். உடல் தேகம் பெற்ற ஜீவர்கள் சுவர்க்கம், மோட்சம் அடைய உள்ளத் தூய்மை, பக்தியுடன் பிரார்த்தனை செய்தும் தானதர்மங்களைச் செய்தும் தர்ம மார்க்கத்தைப் பின்பற்றி முக்திக்கு முயலவேண்டும்.

பிராணிகளைக் கொல்லாமை, உண்மையே பேசுவது, எளியோரிடம் இரக்கப் படுதல், பிராணிகளிடம் அன்பு, இறைவனிடம் பக்தி, மறையோர், மூத்தோர் முதலியவர்களிடம் பணிவாக நடத்தல், பெற்றவர்களை ஆதரித்தல், அனைவரிடமும் நட்பு பூணுதல், மூதாதையர்களை வணங்குதல், ராஜபக்தி, கஷ்டங்களில் மனம் தளராமை, கற்க வேண்டிய விஷயங்களை தெளிவாக நுட்பமாகக் கற்றல், இறையிடம் தளராத நம்பிக்கை வைத்தல் ஆகிய விதி முறைகளைக் கடைப்பிடிப்பதுடன் புல், பூண்டு, செடி, கொடிகள் போன்றவைகளை தெரிந்தோ தெரியாமலோ பிடுங்கி அல்லது வெட்டி எறிதல் உயிர்க் கொலை பாவத்திற்கு ஒப்பானவை என்பதையும் அரிய வேண்டும்.

அடுத்தவரைப் பார்த்து பொறாமை படாதிருத்தல், மன்னித்தல், சிரமமில்லாமல் இருத்தல், மங்களமாக இருத்தல், தீயச்சொற்களை உபயோகிக்காதிருத்தல், நல்ல வார்த்தைகளை பேசுதல், இருப்பதைக் கொண்டு திருப்தியடைதல், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாமல் இருத்தல் ஆகியவற்றை அறிந்து தர்மம் தவறாமல் அற வழியில் வாழ்க்கை நடத்துபவன் எந்த இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுக்கு பிரம்மத்துவ பதவி கிட்டும்.

மாத்ரு தேவோ பவ! பித்ரு தேவோ பவ!
ஆசார்ய தேவோ பவ! அதிதி தேவோ பவ!

என்கிறது தைத்திரிய உபநிடதம். அதாவது தாய், தந்தை ஆசிரியர், விருந்தினர் ஆகியோரைத் தெய்வமாகப் போற்றி வாழ வேண்டும் என்கிறது உபநிடதம்.

#^#^#^#^#

 

செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:16

புண்ணிய பூமி!

Written by

ஓம்நமசிவய!

#^#^#^#^#


தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!


#^#^#^#^#


1.புண்ணிய பூமி!

தேவர்களில் தவறு செய்து சாபம் அடைந்தவர்கள், பிரமஹத்தி தோஷம் அடைந்தவர்கள், தெய்வங்களாக கருதப்பட்டவர்கள் அனைவரும் மண்ணில் பிறந்து இறை வழிபாட்டில் ஈடுபாடு கொண்டு, இறையின் அருள் பெற்றதாக புராணங்கள் மூலம் தெரிகின்றது. இதிலிருந்து இப்புவியில் தேவர்களும், தெய்வங்களும் தோன்றியுள்ளார்கள். அவர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக மண்ணில் மலர்ந்து வாசம் புரிந்துள்ளார்கள். அந்த முறையில் அவர்கள் பிறவி எடுத்த இப்பூமி சிறப்பை அடைகின்றது. உண்மை என்னவென்றால் தவறு செய்தவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் இடம் இந்த புவிதான் என உணர்த்துகின்றார்கள். அதுவே இந்த புவிக்கு இம்மண்ணுக்கு பெருமை. ஆன்மாக்களே “அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்பதன் முழுமையும் புரிந்து கொள்ளுங்கள். அரிதான மனிடப் பிறவியில் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைபிடித்து வாழ்கையை வளமாக்கி ஆனந்த சந்தோசத்தை உயிர்கள் அனுபவிக்க வேண்டும் என ஆசி கூறும் அடியேன் -குருஸ்ரீபகோரா

உயிர்களின் உடம்பின் சகவாசம் அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை தீர்மானிக்கும் சக்தி கொண்டது. உயிர்கள் தாங்கள் நீண்ட நாள் பழகிய நண்பர் / உறவினரின் பழக்க வழக்கங்கள் தங்களுக்கும் தொற்றியிருப்பதை அறியலாம். அது இயல்பான ஒன்று. இதற்கு முக்கிய காரணம் இரு உடம்பிற்கு இடையில் பிராணம் பரிமாறப்படுகின்றது. அது மனிதராகவோ அல்லது மற்ற உயிரினங்களாகவோ இருக்கலாம். ஒவ்வொரு உயிர் பரிமானத்தைச் சுற்றி இருக்கும் ‘ஆரா’ என்ற ஒளிவட்டமே இதற்குக் காரணம். கண்ணுக்கு புலப்படாத இது ஒவ்வொருவருக்கும் தனக்கென்று ஓர் நிறத்தோடு இருக்கும். இந்த ஆராவின் நிறம் அந்த உடலின் உயிரின் குணத்தைக் குறிக்கும். ஒரு ஆரா மற்றொரு ஆராவுடன் தொடர்பு கொள்ளும்போது அது மாற்றம் பெறும். இந்த மாற்றம் அந்த உயிர்கள் பழகும் உடம்பினால் உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை சொல்வதாகும். இதைக் காரணமாகக் கொண்டுதான் நம் முன்னோர்கள் ஒருவருடன் பழகும்முன் அவரைப் பற்றி நன்கு அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஒருவரைபற்றி அறிய அவரின் நண்பனை அறிந்தால் போதும் என்றும் கூறினர்.

#^#^#^#^#

 

செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:00

சாஸ்தி சம்பி!

Written by

ஓம் நமசிவய ஓம்


முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#^#^#^#^#^

சாஸ்திர சம்பிரதாயங்கள்!


அறியாமை என்னும் இருளை நீக்குவதற்காக சாஸ்திரங்கள் தோன்றியுள்ளன. அந்த சாஸ்திரங்கள் ஆத்மாக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த என்னென்ன சொல்கின்றது என்பதே இதன் கருத்து. படித்தபின் சந்தேகங்கள் தோன்றினால் சாஸ்திரங்கள் கற்ற பெரியோர், மிகவும் மூத்தோர் ஆகியோரை கேட்டு சந்தேகங்களை அழித்து கொள்ளுங்கள்.

#^#^#^#^#^

நன்மை தீமைகளை உணர்ந்து கொள்ளப் பழக வில்லையென்றால் அதை அனுபவம் காட்டிக் கொடுக்கும். அது துன்பம் தருவதாய் இருக்கக்கூடாது. முட்செடிகள் ஒட்டகத்திற்கு விருப்பமான உணவு. அதை உண்ணும்போது முட்கள் குத்தி வாயில் இரத்தம் வரும். இருந்தாலும் ஒட்டகம் முட்களையே விரும்பும்.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டபின் சில செயல்களால் ஏற்படும் துன்பங்களும் கஷ்டங்களும் நிறைய உள்ளன. சில நாட்களில் அவைகளை மறந்து விடும் மனித மனம். மீண்டும் அதே செயல்களை செய்ய விழைகின்றது. பாம்பு எலியை விழுங்க முயல்கின்றது. விழுங்க முடியவில்லை. ஆனால் துப்பவும் மனமில்லை. இந்நிலையே மனித வாழ்க்கையில் ஆத்மாக்களின் நிலையாகின்றது.

ஓர் ஆன்மா பிறப்பெடுத்ததிலிருந்து என்னென்ன செய்தால் அதன் வளமான வாழ்க்கைக்கு துணைபுரியும் என்ற ஆராய்வில் முன்னோர்கள் சொல்லி வைத்த சாஸ்திர சம்பிரதாயங்களைப் பின்பற்றி தர்ம நெறியில் வாழ்வை அமைத்து வாழ்க்கையை வெற்றிப் பயணமாக்குங்கள்.

வாழ்வில் உயிர்கள் பின்பற்றி செயலாக்கம் கொள்ள வேண்டியவைகள் பற்றி சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் என்ன சொல்கின்றது என்பதை அறிய முயற்சியே இந்த பகுதி. முடிந்தவரையில் உயிர்கள் பின்பற்றி வாழ்வில் மேன்மை அடைய ஆசிகளுடன்-குருஸ்ரீ.

சாஸ்திர சம்பிரதாயங்கள்!

பொதுவாக நல்ல சிந்தனையுடன் தர்ம நியாயங்கள், விரதங்கள், வேண்டுதல்கள், தலயாத்திரை, தவம், தானம், ஆகியன மேற்கொண்டால் அதற்குரிய பலன்கள் நிச்சயம் கிடைக்கும். ஆண், பெண் எல்லா ஆத்மாக்களுக்கும் ஒன்று சொல்வேன். நமது பாரத தேசத்தை நம்புங்கள். பாரத தர்மத்தை நம்புங்கள். நமது ஆத்ம பக்தியின் பலத்தையும் ஆன்மீக நம்பிக்கையையும் வைத்துக்கொண்டு நாம் மற்றவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது கொஞ்சம் என்பதையும் நாம் பிறருக்கு கற்பித்துக் கொடுக்க வேண்டியது அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சாஸ்திர சம்பிரதாயங்களின்மேல் நம்பிக்கையும் பக்தியுமே வழ்க்கையின் ஒப்பில்லா ஆதாரங்கள்! குருஸ்ரீ பகோரா.

1.புண்ணிய பூமி!
2.வாழ்க்கை தர்மம்!
3.பிறப்பு சம்பந்தமான தோஷங்கள் நீங்க!
4.அங்க லட்சணங்கள்!
5.பிரமச்சர்ய காலம்- நடந்து கொள்ள வேண்டிய முறை!
6.உத்தமப் பெண்கள்!
7.ஸ்திரி- புருஷ லட்சணங்கள் எவை!
8.பெண்களுக்கு நன்மை!
9.சாமுத்ரிகா ராஜலட்சணம்!
10.உத்தமர்கள் யார்! நற்குணங்கள்! ஒழுக்கம்!
11.பெண்களிடம் நிலைப்பாடு!
12.ஆசாரியர்,உபாத்தியாயர்,குரு/ரிஷி,மகாகுரு/மகரிஷி!
13.உயிரினங்கள்மீது!
14.திருமணம்-அறுபதாம் கல்யாணம்!
15.திருமண இணைப்பு!
16.அக்னி நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை!
17.ஆடிச்சீர் ஏன்!
18.முன்னோர்களின் பெயரும், மூன்று உருண்டை சாதம் வைப்பதும் ஏன்!
19.பித்ருக்கள் வழிபாடு!
20.உணவு: எவற்றை உண்ணக்கூடாது!
21.வாழை இலையில் சாப்பாடு ஏன்!
22.வெற்றிலை பாக்கு!
23.யாகத்தின் பலன்!
24.நீராடல் எப்படி!
25.குற்றங்கள்-தண்டனை-அரச தர்மங்கள்!
26.கோவில்- எப்படி நடந்து கொள்ள வேண்டும்!
27.கருவறை சிறியது ஏன்!
28.திருமுழுக்கு- அபிஷேகம்!
29.பூஜை எப்படி செய்ய வேண்டும்!
30.பூஜையில் வாழைப்பழம் தேங்காய் ஏன்!
31.அர்ச்சனைக்கு ஏற்றது எது!
32.தெய்வ படங்கள்!
33.விரதங்கள்!
34.கர்மங்கள்-பாவங்கள்!
35.பக்தி- (5வகை)-நம்முள் நிலைக்க பரிசுத்தமான மனத்துடன் பக்தியில் ஆழ்ந்திரு.
36.வழிபாடு எப்படி செய்ய வேண்டும்!
37.யாத்திரை எதற்கு!
38.அன்றாடக் கடமைகளாக செய்ய வேண்டியவை!
39.நோய்கள் வராமலிருக்க!
40.மூச்சுகள்!
41.தேக நலம் தரும் கோடைகால வழிபாடுகள்!
42.எந்த மாதத்தில் என்ன செய்யலாம்!
43.செவ்வாய்க்கு செவ்வாய் தோஷம்- ஏன்!
44.வணங்கும்முறை!
45.தானம் ஏன் செய்ய வேண்டும்!
46.கிரகங்கள் பாதிப்பிலிருந்து விடுபட!
47.தவறுக்கான தண்டனைகள்!
48.பிராயச்சித்தம்!
49. வர்ணாசிர தர்மம்!
50.நிமித்தக் குறி சாத்திரங்கள்(8) !
51.உற்பாதங்கள்-இடைஞ்சல்கள்!
52.கனவுகளின் நன்மை தீமை பலன்கள்!
53.சகுனங்கள்!
54.நிலத்தின் தன்மையை அறிவது எப்படி!
55.மரம் ஏன் வளர்க்க வேண்டும்!
56.ஓம்சாந்தி 3முறை ஏன்!
57.ஏழுகோடி மந்திரங்கள்!
58.ஒன்பதின் பகுப்பு- சிறப்பானது!
59.தோஷங்கள்!

#^#^#^#^#^

வியாழக்கிழமை, 29 December 2022 12:23

ஜ்,ஜ,ஜெ,ஜு,ஸ்,ஷ,ஹ,ஹே!

Written by

ஓம் நமசிவய!

 

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்

குழவி வெண்திங்கள் இற்றகோட்டதுகுறையென்றெண்ணி

புழைநெடுங்கரத்தாற் பற்றிப்பொற்புற இனைந்துநோக்கும்

மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

$#$#$#$#$#

 ஜ்,,ஜெ,ஜு,ஸ்,,,ஹே-                                                                      

முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள்

ஜ்வாலேஷ்வர்

ஜோஹிலாநதி-ம.பி

ஜகதீசவரர்

மணல்மேல்குடி காளிதெற்கு-கல்கத்தா

ஜட்னேஸ்வரர்

காளிவடக்கு,கல்கத்தா

ஜடாசங்கர்

பஞ்ச்மடி-மஹாதேவ்மலை (ம.பி)

ஜடாதீஸ்வரர்

தளியல் (திருவட்டாறு)

ஜடாயுபுரீஸ்வரீர்

திருமலைராயன்பட்டினம்

ஜடேசுவரர்

பரமத்தி

ஜமதக்னீஸ்வரர்

உடையவர்தீயனூர்

ஜம்புகேஸ்வரர்

நார்த்தாமலை,செம்பாக்கம்

ஜம்புநாதேசுவரர்

கழுகுமலை,கீழசேவூர்

ஜலகண்டேஸ்வரர்

காவேரிபுரம்

ஜலநாதேஸ்வரர்

திருமாற்பேறு#,

ஜலேஸ்வரர்

காளிதெற்குகல்கத்தா

ஜனகபுரீஸ்வரர்

தென்கரை

ஜெகதீஸ்வரர்

பர்கூர்

ஜெகந்நாதர்

திருவெற்றியூர்#

ஜெயங்கொண்டநாதஈசுவரர்

பாச்சல்

ஜெயந்தீசுவரன்

அழகியபாண்டியபுரம், தாழகுடி, வள்ளியூர்

ஜெயம்கொண்டசோழீஸ்வரர்

மன்னார்குடி/வியாசர்புரம்

ஜெயம்கொண்டநாதர்

மன்னார்குடி/வியாசர்புரம்

ஜெயம்கொண்டீஸ்வரர்

நத்தக்காடையூர்

ஜெய்மல்ஹர்

ஜெஜூரி-புனா

ஜுரஹரேஸ்வரர்

நத்தம்(திருபத்தூர்)

ஸ்தம்பேஸ்வரர்

வந்தவாசி-சீயமங்கலம்

ஸ்திரவாசபுரீஸ்வரர்

அச்சிறுபாக்கம்#

ஸ்வேதாரண்யேசுவரர்

மதுராந்தகம்

ஷம்புலிங்கேஸ்வரர்

குந்கோல்(ஹூப்ளி)

ஹரேஸ்வர்ஷிகா

தெஹூ-பூனா

ஹேமவிருத்தீசுவரர்

இலுப்பூர்

 

வியாழக்கிழமை, 29 December 2022 12:20

வ,வா,வி,வீ,வெ,வே,வை!

Written by

ஓம் நமசிவய!

 

முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்

மிக்கவெண்கோடொன்றுமேசிதையாநிற்கும்வெள்ளறிவை

உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்

புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.

$#$#$#$#$#

,வா,வி,வீ,வெ,வே,வை-                                                                      

முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள்

வடமூலேஸ்வரர்

திருப்பழுவூர்

வடவாரண்யேசுவரர்

திருவாலங்காடு.#

வடஜம்புநாதர்

சுனைக்கோவில்#

வடுகநாதர்

ஆண்டார்கோயில்#

வடுகீஸ்வரர்

ஆண்டார்கோயில்#

வடுகூர்நாதர்

ஆண்டார்கோயில்#

வந்தருளீசுவரர்

அமராவதிபுதூர்

வம்சோத் தாரகஈசுவரர்

பெருங்களுர்

வரகிரீசுவரர்

மொடக்குறிச்சி

வரகுணபாண்டீசுவரர்

ராதாபுரம்/ராஜராஜபுரம்

வர்த்தமானேஸ்வரர் .

திருப்புகலூர். வர்த்தமானீச்சரம்

வரமூர்த்தீஸ்வரர்

அரியதுறை

வராகமுக்தீசுவர்

திருப்பன்றிக்கோடு

வருணீஸ்வரர்

அரூர்

வல்லேஸ்வரர்

வேமாண்டம்பாளையம்(நம்பியூர்-7)

வழிகாட்டும்வள்ளல்

புன்னாகவனம், மூவலூர்#, வள்ளலார்கோயில்#

வளர்மதீசுவரர்

நீர்ப்பழனி

வன்னீசுவரர்

கடலாடி,வன்னியூர்

வன்னீஸ்வரர்

அரூர்

வஜ்ரபாணீசுவர்

ஒருவந்தூர்

வஸ்ததம்பபுரீஸ்வரர்

கோயில்கண்ணாப்பூர்

வாக்குவள்ளல்

பெருஞ்சேரி

வாகீசமகாதேவர்  

கொளப்பாக்கம்

வாகீசுவரமுடையார்

மலையடிப்பட்டி

வாகீசுவரர்

தாமல், பெருஞ்சேரி/தருகாவனம், பாடலூர்,

வாகீஸ்வரசுவாமி

பெருஞ்சேரி/தருகாவனம்

வாஞ்சிநாதேஸ்வரர் .

ஸ்ரீவாஞ்சியம்

வாஞ்சிலிங்கேஸ்வரர்

ஸ்ரீவாஞ்சியம்

வாதபுரீஸ்வரர்

திருவாதாவூர்

வாமனபுரீஸ்வரர்

திருமாணிக்குழி#

வாய்மூர்நாதர்

திருவாய்மூர்

வாரணபுரீஸ்வரர்

பனமங்கலம்- திருச்சி-10

வாராகீஸ்வரர்

தாமல்

வாலவனேஸ்வரர்

இளங்ககாடு

வாலீசுவரர்

ஏகனாம்பேட்டை, குரங்கனில்முட்டம்#, சேவூர், திருமாநிலையூர், மயிலாப்பூர்

வாழவந்தீசர்

பருத்திபட்டு

வான் மீகாசலேசர்

குடவாயில்#

வானதீஸ்வரர்

வாணகரம்#

வான்மீகநாதர்

திருப்பாச்சேத்தி

வான்மீகநாதர்

ஒத்தக்கால்மண்டபம், திருப்போரூர்#

விக்ரமசோழீசுவரர்

சுரைக்காயூர், பெருஞ்சேரி

விக்ரமபாண்டீசர்

சோழபுரம், வீரவநல்லூர்

விகிர்தநாதேஸ்வரர்

வெஞ்சமாக்கூடல்#

விசுவநாதர்

அகவயல், எழுவன்கோட்டை, சர்க்கார்சாமக்குளம், சோங்காலிபுரம், தட்டாத்திமூலை, திருப்பழுவூர், நாகப்பட்டிணம், மகாதேவபட்டிணம், வடுகசேரி, வைகல்மாடக்கோயில், பாலசமுத்திரம், பத்தமடை

விசுவாமித்ரமகாலிங்கசுவாமி

விஜயாபதி

விசுவேசர்

கும்பகோணம்#

விடங்கீசர்

குண்டடம்

வித்தகவாதீசுவரர்

விளக்கேத்தி

வித்யாபதீச்வரர்

சோமநாதன்மடம்(ஆரணி)

வியாக்ரபுரீஸ்வரர்

திருவேங்கைவாசல், புலியூர், புலிப்பாக்கம், வடசிற்றம்பலம், ராவத்தநல்லூர்,

விரிஞ்சீசுவரர்

எண்கண்#

விருத்தபுரீசுவரர்

அன்னவாசல், திருப்புனவாயில்#,

விருந்திட்டஈஸ்வரர்

திருக்கச்சூர்#

விருந்திட்டவரதர்

திருக்கச்சூர்#

விருந்தீஸ்வரர்

வடமதுரை

விருப்பாட்சிநாதர்

நரிக்குடி

விருப்பாட்சீவரர்

கீழமங்கலம்

விருபாஷர்

பாகலி(கர்நாடகா)

விருபாஷீஸ்வரர்

மயிலாப்பூர்,(கிருஷ்ணகிரி

வில்லீஸ்வரர்

இடிகரை

வில்வவனநாதர்

மஞ்சக்குடி

வில்வவனேஸ்வரர்

திருக்கடையூர்#

வில்வாரண்யேசுவரர்

கடயம், திருநீலக்குடி#, திருவியலூர்,

வில்வேஸ்வர்

பூரி

விழியழகீசர்

திருவீழிமழழை

விஜயவிடேங்கேசுவரர்

இளங்காடு

விஸ்வநாதர்

ஆவல்நத்தம்#, குன்றத்தூர்#, கோபிசெட்டிபாளையம், திருவிடைமருதூர், தேப்பெருமாநல்லூர், பார்த்திபனூர், பாண்டமங்கலம், புலிக்கால், வாகைகுளம்வாரணாசி

விஷ்ணுலிங்கேஸ்வரர்

பாகலி(கர்நாடகா)

விஷமங்களேஸ்வரர்

பெரம்பலூர்

விஷ்ணுவல்லபேசுவரர்

பச்சைபெருமாள் நல்லூர்(சீர்காழி அருகில்)

வீரகேசுவரர்

பட்டணம்

வீரசம்புகேசுவரர்

ஆத்துவம்பாடி

வீரசேகரசுவாமி

சாக்கோட்டை

வீரட்டநாதர்

திருவதிகை#

வீரட்டானேஸ்வரர்

திருவிற்குடி

வீரட்டேசர்

கீழ்படப்பை, திருப்பறியலூர், திருவதிகை#, வழுவூர்,

வீரபத்திரர்

நாமகிரிப்பேட்டை

வீரபாண்டீஸ்வரர்

மூக்கணாங்குறிச்சி

வீரமார்த்தாண்டேசுவரர்

அம்பாசமுத்திரம்

வெண்காட்டீசர்

மதுராந்தகம்

வெண்டுறைநாதர் .

திருவெண்டுறை

வெண்ணெய்நாதர்

சிக்கல்#

வெண்ணெய்ப்பிரான்

சிக்கல்#

வெள்ளந்தாங்கீசுவரர்

கண்டபாளயம்

வெள்ளிமலைநாதர்

திருத்தெங்கூர்

வெள்ளியங்கிரிஆண்டவர்

பூண்டி#

வெள்ளியங்கிரிநாதர்

வெள்ளியங்கிரி#

வெள்ளியம்பலநாதர்

பாறைக்குளம்

வெள்ளீஸ்வரர்

மயிலாப்பூர், மாங்காடு#

வேங்கீஸ்வரர்

வடபழனி#

வேங்கைநாதன்

திருவேங்கைவாசல்

வேடரூபர்

திருவேட்டக்குடி

வேணீஸ்வர் மகாதேவ்

சோம்நாத்

வேதகிரீஸ்வரர்

ஊரட்சிக்கோட்டை#, திருக்கழுக்குன்றம்

வேதபுரீசுவரர்

அகஸ்தீசுவரம், ஆரணி, சாட்டியக்குடி, திருவாண்மியூர்#, திருவேற்காடு#, தேரழுந்தூர்#, மடிப்பாக்கம், பாண்டிச்சேரி, புதுச்சேரி, விரிஞ்சையூர், வேதபுரி,

வேதேஸ்வரர்

திருநறையூர்#

வேழுபுரீச்சுவரர்

அம்பாசமுத்திரம்

வேள்வீஸ்வரர்

வளசரவாக்கம்#

வேற்காட்டீசர்

திருவேற்காடு#

வைகல்நாதர்

வைகல்மாடக்கோயில்

வைத்தியநாதர்

பரலி-ஜோ-5/12, வேலப்பநாயக்கன்வலசு

வைத்தீஸ்வரன்

பூந்தமல்லி#

வியாழக்கிழமை, 29 December 2022 12:18

ய,யா,யோ,ர,ரா,ரி,ரு,ல,லி,லோ!

Written by

ஓம் நமசிவய!

 

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்

பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட

வரமழை உதவி செவ்வந்து யானையின்

திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.

$#$#$#$#$#

,யா,யோ,,ரா,ரி,ரு,,லி,லோ-                                                                      

முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள்

யக்ஞோபவிதேசுவரர்

கும்பகோணம்

யக்னேஸ்வரர்

காளிதெற்கு-கல்கத்தா

யமேஸ்வர்

பூரி

யாழ்முரிநாதர்

தருமபுரம்

யோகவனேஸ்வரர்

திருப்பழுவூர்

யோகானந்தீஸ்வரர்

திருவியலூர்

யோகேஸ்வரர்

காளிவடக்குகல்கத்தா

ரத்னகிரீஸ்வரர்

திருமருகல், முத்தரசநல்லூர்

ரத்னகீரீசர்

ஐயர்மலை#

ரதீசுவரர்

திருஅன்னியூர்

ரவினேஷ்வர்சிவா

தியோகர்(ராஞ்சி)

ரவீசுவரர்

வாங்கல்

ரஜதகீரிஸ்வரர்

திருத்தெங்கூர்

ராகவேசுவரர்

தெரிசனம்கோப்பு

ராமநாதசுவாமி

திருநறையூர்#

ராமநாதர்

திருராமேஸ்வரம்

ராமநாதஸ்வாமி

பெரியகாஞ்சி,#

ராமலிங்கசுவாமி

ஜடாயுபுரம், பாபநாசம்#

ராமலிங்கர்

செண்பகராமநல்லூர், பணகுடி, பெரியநெகமம்

ராமலிங்கேஸ்வரர்

அம்பிகாபுரம், இடுகம்பாளையம், கீழாம்பி, கோவை-ராஜவீதி.#, திம்மராஜம்பேட்டை, தேனாம்பேட்டை,

ராஜராஜேசுவரர்

கருவாழக்கரை, சிவபுரம்(பேரம்பாக்கம்)

ராஜேந்திரசோழீசுவரர்

அறந்தாங்கி, ஒழுகினசேரி, பெரியகுளம்

ராஜேஸ்வர்மஹாதேவ்

பரலி-கந்திபூர், சரஸ்வதிநதி-ஒளரங்காபாத்

ரிண்முக்தேஸ்வர்

குக்கர்ராம்ட்-ம.பி

ரிஷ்யசிங்கீஸ்வரர்

திருவூர்,(திருவள்ளூர்)

ரிஷபுரீசுவரர்

மேலச்சேவூர்

ரிஷிபுரீஸ்வரர்

திருவிடைமருதூர்

ரிஷிபுரேசர்

ஆப்புடையார்கோவில்

ருத்ரகோடீஸ்வரர்

திருக்கழுக்குன்றம்

லட்சுமிவரதசுந்தரேஸ்வரர்

திருப்பாச்சேத்தி

லவபுரீஸ்வரர்

விளாங்காடுபாக்கம்

லஷ்மிபுரீஸ்வரர்

திருநின்றியூர்

லிகுசாரண்யேஸ்வரர்

திருஅன்னியூர்

லிங்கநாதபரமேஸ்வரர்

சூரிச்,சுவிட்சர்லாந்து

லிங்கராஜ்

புவனேஷ்வர்-ஒரிஸா

லிங்கேஸ்வரர்

உவரி(குலசேகரப்பட்டிணம்), மைலாரா(கர்நாடகா),

லோக்நாத்

புவனேஷ்வர்

லோகனாதர்

பூரி

வியாழக்கிழமை, 29 December 2022 12:13

ம,மா,மி,மு,மூ,மெ,மே,மொ!

Written by

ஓம் நமசிவய!

 

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர்தம் கை.

$#$#$#$#$#

,மா,மி,மு,மூ,மெ,மே,மொ-                                                                      

முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள்

மகம்வாழ்வித்தவர்

மாகறல்#

மகாகாளநாதர்

கீழ்மாங்குடி

மகாகாளேஸ்வரர்

உஜ்ஜெயின்-ம.பி.-ஜோ3/12, பழையனூர், பெரியகாஞ்சி,#

மகாதாண்டவேசுவரர்

திருவாவடுதுறை

மகாதேவர்

அகரபொம்மபாளையம் ஒழுகினசேரி/ உலகமுழுதுடையான்சேரி, கப்பலாங்கரை, கூத்தநல்லூர், சங்கம்பட்டி,,திக்குறிச்சி, திற்பரப்பு, திருவிதாங்கோடு, திருமலை, நெரிஞ்சிப்பேட்டை, பறக்கை, பேளுக்குறிச்சி, பொன்மனை, மேலாங்கோடு, வெம்பனூர்

மகாதேவன்

இறச்சகுளம்

மகாபலேஸ்வரர்

நாகம்பள்ளி

மகாலட்சுமீசர்

திருநின்றியூர்

மகாலிங்கேசுவரர்

தவசிமடை, திருப்புனவாயில்#, திருவிடைமருதூர்#, மேலச்செவல்

மகாளேஸ்வரர்

திருஇரும்பைமாகாளம்#

மகிமாலீஸ்வரர்

ஈரோடு#

மகிழவனநாதர்

பெருந்தலையூர்

மகிழவனேசுவரர்

கோகர்ணம்#

மகிழீசர்

பெருந்தலையூர்

மகுடேஸ்வரர்

திருபாண்டிக்கொடுமுடி#

மகேந்திரகிரிநாதர்

திருகுறுங்குடி

மகேஷ்மூர்த்தி

எலிபெண்டா-மும்பை

மங்கலங்காத்தவர்

மாகறல்#

மங்கலநக்கர்

திருவேள்விக்குடி

மங்களநாதர்

சிறுகுடி

மங்களபுரீஸ்வரர்

திருச்சோபுரம்

மங்களேசுவரர்

உத்திரகோசமங்கை#

மச்சேஸ்வரர்

காஞ்சி

மணக்கோலநாதர்

திருசுழியல்

மண்ணீசுவரர்

மணவாரனபள்ளி

மணத்துணைநாதர்

வலிவலம்

மணவாளநம்பி

திருவேள்விக்குடி

மண்வாளநாதர்

நெடுங்களம்

மணவாளேஸ்வரர்

திருவேள்விக்குடி

மணிகண்டேசுவரர்

காஞ்சிதிருகச்சிநம்பிதெரு#, கீழ்மாத்தூர், தாதாபுரம், திருமால்பூர்,

மத்யபுரீஸ்வரர்

மணவாசி, பரஞ்சேர்வழி, வெள்ளூர்

மத்யார்ஜுனர்

இலுப்பூர்

மத்யார்ஜுனேசுவரர்

பட்டவாய்த்தலை, பெருங்கடம்பனூர், ராஜேந்திரம்,

மதயானேஸ்வரர்

எதிர்கொள்பாடி

மதுவனேஸ்வரர்

திருவெண்டுறை

மந்தரவனேஸ்வரர்

திலைப்பதி

மந்திரநாதர்

திருப்பாலைக்குடி

மந்திரபுரீஸ்வரர் .

திருச்செங்காட்டாங்குடி

மந்தேஸ்வரர்

மண்டபள்ளி(ஆந்திரா)

மயூரநாதர்

பெத்தவநல்லூர், மயிலாடுதுறை#,

மரகதநாதர்

திருஈங்கோய்மலை#

மரகதாசலேசுவரர்

திருஈங்கோய்மலை#

மரகதீசுவரர்

பச்சைமலை# , புன்னம்

மருங்கீசர்

திருந்துதேவன்குடி

மருத்துவலிங்கம்

பவானி#

மருதவனேஸ்வரர்

திருவிடைமருதூர்#

மருதவாணர்

திருவிடைமருதூர்#, ராஜேந்திரம்

மருதாந்த நாதேஸ்வரர்

ஆங்கரை(லால்குடி)

மருந்தீசர்

திருவாண்மியூர்#, திருக்கச்சூர்#, பெரியமருதுபட்டி

மல்லாண்டேசுவரர்

நத்தம்

மல்லிகார்ஜுனசுவாமி

பர்வதமலை

மல்லிகார்ஜுனர்

கீரனூர், தர்மபுரி-தகடூர்#

மல்லிகார்ஜுனேசுவரர்  

வடியம்

மல்லிகேஸ்வரர்

வடசென்னை#

மல்லீசுவரர்

திருமழவாடி, மயிலாப்பூர், ரங்கமலை

மல்லேசுவரர்

நாரல்பள்ளி

மலைக்கொழுந்தீசுவரர்

செங்கிரை, திருபாண்டிக்கொடுமுடி#, மலைக்கோயில்/பழனி# ,

மலைமருந்தீஸர்

ஏரியூர்

மழவுடையார்

மடிப்பாக்கம்

மன்மதபரமேஸ்வரர்

வரதம்பட்டு

மன்மதீசுவரர்

குத்தாலம்#

மன்னீசுவரர்

அன்னூர்

மனோக்ஞநாதசுவாமி

திருநீலக்குடி#

மனோன்மணீசுவரர்

விஜயநாராயணம்

மஹாகாளேஸ்வரர்

டார்ஜிலிங்

மஹாருத்ராக்ஷவர்

பழையமஹாபலேஸ்வர்-புனா

மாகாளநாதர்

திருஇரும்பைமாகாளம்#

மாகாளமுடையார்

திருஇரும்பைமாகாளம்#

மாகாளேஸ்வரர்

அம்பர்மாகாளம்

மாசிலாமணிநாதர்

திருவாவடுதுறை

மாசிலாமணீசுவரர்

தரங்கம்பாடி, திருவாவடுதுறை

மாணிக்கஈசர்

ஐயர்மலை#, தாதாபுரம்

மாணிக்கவண்ணர்

திருமருகல்

மாணிக்கவரதர்

திருமாணிக்குழி#

மாத்ருபூதேசுவரர்

சித்தன்னவாசல்

மாதவிவனேஸ்வரர்

திருக்கருகாவூர்#

மாதீசுவரர்

நன்னகலமங்கலம்

மாதேசுவரர்

குந்தகம்

மாந்தீசுவரர்

மாம்பாடி, வள்ளிஇரைச்சல்

மாமுண்டி

மணப்பாறை

மாயபாண்டீசுவரர்

மேல்மங்கலம்

மார்க்கசகாயேசுவரர்

புன்னாகவனம், மூவலூர்#

மார்கண்டேஸ்வர்

பூரி

மாற்றறிவரதர்

திருப்பாச்சிலாச்சிராமம்#

மான்பூண்டிசுவாமி

மணப்பாறை

மானேந்தியப்பர்

கல்லிடைகுறிச்சி

மிருகண்டீசுவரர்

திருமாந்துறை#, திருமணல்மேடு, மார்கண்டேயர்கோவில்

மிழழையீசுவரர்

மொழையூர்

மிஷ்கலங்க மகாதேவர்

பாவ்நகர்-கோலியாக் கடற்கரை

முக்கீஸ்வரர்

உப்புவேலூர்

முக்தபுரீஸ்வரர் .

திருபயத்தங்குடி

முக்தியாசர்

திருவாவடுதுறை

முக்தீஸ்வர்

திலைப்பதி, புவனேஷ்வர்-ஒரிஸா, பேரையூர், மதுரை-ஐராவதநல்லூர், மேலப்பாதி,

முகம்மலர்ந்தநாதர்

பிடாரியூர்

முடித்தழும்பர்

ஐயர்மலை#

முத்தீச்சுவரர்

ஆத்தூர்நதிப்புறம், எடமிச்சி, மதுரை-ஐராவதநல்லூர்,

முத்துராமலிங்கசுவாமி

இராமநாதபுரம்

முப்புராரீஸ்வரர்

காஞ்சி,புத்தேரி#

மும்முடிநாதர்

அரண்மனை சிறுவயல்

முயற்சிநாதர்

திருமீயச்சூர்

முருகநாதசுவாமி

திருமுருகன்பூண்டி#

முருகநாதேஸ்வரர்

திருமுருகன்பூண்டி#

முல்லைக்கானமுடையார்

அச்சிறுபாக்கம்#

முல்லைவனநாதர்

திருக்கருகாவூர்#

முனிமுக்தீஸ்வரர்

சின்னதாராபுரம்

மூலதானத்துபரமேஸ்வரர்

பெரம்பலூர்

மூலநாதசுவாமி

பாகூர்

மூலிகைவனேஸ்வரர்

திருந்துதேவன்குடி

மூவேந்தரீசுவரர்

நசியனூர்

மெய்ப்பொருள்நாதசுவாமி

கோவிலூர்,

மெய்ப்பொருள்நாதர்

மொடக்கூர்

மேகநாதர்

திருமீயச்சூர்

மொக்கணீசுவரர்

கூளேகவுண்டன்புதூர்

வியாழக்கிழமை, 29 December 2022 12:09

ப,பா,பி,பீ,பு,பூ,பெ,பை,பொ,போ!

Written by

ஓம் நமசிவய!

 

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க

கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்

தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க

வளரொளி விநாயகனே வா!

$#$#$#$#$#

,பா,பி,பீ,பு,பூ,பெ,பை,பொ,போ-                                                                      

முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள்

பக்தபுரீசுவரர்

அகஸ்தீசுவரம், பாண்டிச்சேரி, புதுச்சேரி, வேதபுரி,

பக்தவத்சலர்

வாழைப்பந்தல்

பக்தவத்சலேஸ்வரர்

திருக்கழுக்குன்றம்

பசவேசுவரர்

ஆவல்நத்தம்# , பேரிகை, மேடுகம்பள்ளி, ஜங்கலகடைராம்பட்டி

பசுபதிநாதர்

கரூர்#

பசுபதீஸ்வரர்

ஆவூர்பசுபதீச்சுரம், கொங்கூர், திருத்துறையூர்#, திருநல்லாவூர், வரஞ்சரம்

பஞ்சலிங்கேசுவரர்

ஒசூர், கோவிந்தனஹள்ளி(மாண்டியா), வெள்ளலூர், வெள்ளியங்கிரி#

பஞ்சவடீஸ்வரர்

ஆனந்ததாண்டவபுரம்

பஞ்சவர்ணேஸ்வரர்

திருநல்லூர்

பஞ்சாட்சரநாதர்

கூகையூர்

பட்சீஸ்வரர்

மாமண்டூர், வந்தவாசி-எறும்பூர்

பட்டீச்சுவரர்

திருபட்டீச்சரம்#

படம்பக்கநாதர்

திருவெற்றியூர்#

படவலிங்கேஸ்வரர்

ஹம்பி

படிக்காசளிநாதர்

அரிசிக்கரைபுத்தூர்#

பண்ணிசைச் சொக்கன்

பரமக்குடி 

பதங்கீஸ்வரர்

பாலூர்

பதஞ்சலிநாதர்

திருக்கானாட்டுமுள்ளூர்

பத்திரிக்காபரமேஸ்வரர்

திருஏடகம்

பத்மகிரீஈஸ்வரர்

திண்டுக்கல்#

பத்ராஸ்வன்

அமர்கண்ட்.சோன்பத்ராநதி-ம.பி

பதரிநாதர்

அயனீஸ்வரம், பிரம்மதேசம்.

பரசுநாதர்

முழையூர்

பரசுராமேஸ்வரம்

பள்ளூர்

பரத்வாஜேஸ்வர்

கோடம்பாக்கம்

பரமேசுவரர்

அரசூர், குனியமுத்தூர், சங்கராண்டாம்பாளையம், பரமத்தி, பனங்குடி, பஞ்சமாதேவி, பாலக்கோடு,

பர்வதகிரீசுவரர்

குண்றாண்டார்கோவில்

பராய்துறைநாதர்

திருப்பாராய்துறை#

பரிதீஸ்வரர்

காஞ்சி-பஞ்சுபேட்டை#

பரிந்துகாத்தவர்

மாகறல்#

பலபத்திரராமேஸ்வரர்.

காஞ்சி.திருமேற்றளிதெரு#

பலாசவனநாதர்

நாலூர்#

பவநாசர்

பவநாசம்

பவானிநாதர்

முத்தலாபுரம்

பவானிஈஸ்வரர்

சத்யமங்கலம்

பவானிவல்லபன்

பேராளம்

பவிஷ்யேசுவரர்

திருப்புகலூர்.வர்த்தமானீச்சரம்

பழம்பதிநாதர்

அன்னவாசல், திருப்புனவாயில்#,

பழமறைநாயகர்

பவநாசம்

பளிங்கீஸ்வரர்

வெள்ளித்திருப்பூர்

பன்னாகவனநாதர் .

திருப்புகலூர்

பனேஸ்வரசுவாமி

பனேஸ்வர்-புனா

பாகண்டேஸ்வரர்

பாகமண்டல்(தலைக்காவேரி)

பாகம்பிரியாதான்

அவல்பூந்துறை#

பாகிருதீசுவரர்

பழங்கோயில்

பாசுபதநாதர்

திருவிக்குளம்

பாசுபதேஸ்வரர்

திருவிக்குளம்

பாடலேசவரர்

திருப்பாதிரிப்புலியூர்#

பாண்டவேசுவரர்

திருஅன்னியூர்

பாண்டீசுவரர் .

மதுராந்தகம்

பாண்டுவனேஸ்வரர்

தேவபாண்டலம்

பாணபுரீஸ்வரர்

கும்பகோணம்#

பாணேசுவரர்

பாணாவரம், பேளூர்-கல்கத்தா

பாதாளஈசுவரர்

வாகைக்குளம்,பூரி

பாபுல்நாத்

பபுல்நாத்-மும்பை

பாம்பீசர்

திருப்பாம்புரம்

பாம்புரநாதர்

திருப்பாம்புரம்

பாம்புரீஸ்வரர்

திருப்பாம்புரம்

பாம்புரேசர்

திருப்பாம்புரம்

பார்க்கபுரீஸ்வரர்

அச்சிறுபாக்கம்#

பார்க்கவேஸ்வரர்

மாங்காடு#

பாரத்தழும்பர்

மாகறல்#

பார்வதீசுவரர்

அம்பகரத்தூர், இஞ்சிக்குடி,

பாரிஜாதவனாதீசர்

திருப்பாச்சேத்தி

பால்வண்ணநாதர்

திருவாண்மியூர்#

பால்வண்ணநாதேஸ்வரர்

திருக்கழிப்பாலை

பால்வெண்ணீஸ்வரர்

பட்டாலியூர்

பாலுகந்தநாதர்

திருஆப்பாடி.தி.த-94. திருவாய்ப்பாடி

பாலேசுவரஸ்வாமி.

திருத்தழையூர்

பாலைவனநாதர்

திருப்பாலத்துறை

பாலைவனேஸ்வரர்

திருப்பாலத்துறை

பாஸ்கரபுரீஸ்வரர்

திருச்செங்காட்டாங்குடி

பிச்சாலீஸ்வரர்

ஆரணி

பிரகதீசுவரர்

கங்கைகொண்டசோழபுரம், பெருவளநல்லூர்

பிரகாசநாதர்

நன்னிலம்

பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர்

எடப்பாடி

பிரசன்னசூடநாதர்

பாகலூர்

பிரணவபுரீஸ்வரர்

ஒமாம்புலியூர்

பிரணவவியாக்ரபுரீஸ்வரர்

ஒமாம்புலியூர்

பிரணவேஸ்வரர்

பேனுபெருந்துறை

பிரமநாயகர்

திருநீலக்குடி#

பிரமபுரீசர்

திருவெண்டுறை

பிரம்மபுரீச்சுவரர்

திரிசூலம்

பிரம்மபுரீசுவரர்

அன்பில்#, அம்பர்பெருந்திருக்கோயில், இராமநாதபுரம், திருக்கடவூர்மாயாணம், திருக்கோளிலி, திருசாத்தமங்கை, திருச்செங்காட்டாங்குடி, திருப்பாச்சிலாச்சிராமம்#, சிவபுரம், போழக்குடி, மருதாந்தநல்லூர், வடபாதி, வைகல்மாடக்கோயில்

பிரமரேஸ்வரர்

திருவெண்டுறை

பிரமாண்டேஸ்வரர்

திருஇடைச்சுரம்#

பிரளயகாலேசுவரர்

உத்திரகோசமங்கை#, பெண்ணாடம்

பிரளயநாதர்

சோழவந்தான்

பிரளயவிடங்கர்

திருசுழியல்,, கானூர்

பிருகுநாதர்

குடவாயில்#

பீமேசர்

ஒசூர்-ராம்நகர்

பீமேசுவரர்

இலுப்பூர், ஓமந்தூர், நிலகுண்டா(கர்நாடகா), பூமாந்தஹள்ளி,

பீரமபுரீஸ்வரர்

ஏனாநல்லூர்

புத்திரதியாகர்

திருவாவடுதுறை

புத்ரகாமேஷ்டீசுவரர்

ஆரணி

புரந்தீசுவரர்

காக்காவேரி

புராதனேஸ்வரர்

திருவியலூர்

புரோவரிநாதர்

கீழ்க்கல்லூர்(கடயம்)

புலீஸ்வரர்

மேலச்செல்வனூர்

புலேஸ்வரஸ்வாமி

புலேஸ்வர்-புனா

புவனேசுவரர்

பொன்பேத்தி, திருசுழியல்

புற்றிடங்கொண்டார்

திருவெற்றியூர்#, மாகறல்#

புற்றிடங்கொண்டீசுவரர்

ஒத்தக்கால்மண்டபம்

புறவேலிநாதர்

கீழ்க்கல்லூர்(கடயம்)

புன்னாகபரமேஸ்வரர்

பன்னத்தெரு

புன்னாகேசுவரர்

புன்னாகவனம், மூவலூர்#

புன்னைவனநாதர்

திருவேட்டக்குடி

புனுகீசுவரர்

கூறைநாடு, மயிலாடுதுறை

புஷ்பகிரீஸ்வரர்

பம்மல்

புஷ்பரதஈஸ்வரர்

ஞாயிறு#

புஷ்பவனநாதர்

அவல்பூந்துறை#, புன்னம், பூவனூர்

புஷ்பவனேஸ்வரர்

அரிகேசவநல்லூர்

பூகைலேசுவரர்

திருவாவடுதுறை

பூதலிங்கசாமி

பூதபாண்டி

பூதேஸ்வரர்

திருப்புகலூர்-வர்த்தமானீச்சரம், திருவடமதுரை-மதுரா

பூமிநாதர்

திருநல்லம், செவலூர், பாப்பாகுடி, வீரவநல்லூர்

பூமீசுவரர்

திருசுழியல், திருநல்லம், மரக்காணம்,

பூமேசுவரர்

ஆளப்பிறந்தான்

பூலோககைலாசநாதர்

கழுக்காணிமுட்டம்

பூவனநாதர்

கோவில்பட்டி#

பூவேந்தியநாதர்

கோயில்மாரியூர்#

பெரியஉடையார்  

மானூர்#

பெரியண்ணன்

கொள்ளிமலைசிகரம்

பெரியாண்டவர்

திருநிலை(செங்கல்பட்டு)

பெரியாண்டேஸ்வரர்

திருநல்லூர்

பெருங்கேடிலியப்பர்

அவிநாசி#

பெருவயல்நாதர்

பெருவயல்

பெருவிலாசொக்கநாதர்

கீழ்ப்புத்தேரி

பெருவுடையார்

கங்கைகொண்டசோழபுரம்

பென்னம்பலநாதர்

சிலாத்தூர்

பைரவநாதர்

மேலப்புத்தூர்

பைரவேசுவரர்

வலங்காமுடி,யானா(சிர்சி அருகில்-கர்நாடகா)

பொன் வைத்தநாதர்

திருசிற்றேமம்

பொன்பரப்பியஈசுவரமுடையார்

கூகையூர்

பொன்மலைநாதர்

தேவிகாபுரம்

பொன்லிங்கேஸ்வரர்

பொன்நகர்

பொன்வசிநாதர்

இலுப்பூர்

பொன்வளர்ச்சிநாதர்

இலுப்பூர்

பொன்னீஸ்வரர்

அகரம்ஊர்: பொன்னேஸ்வரமடம்

போதியம்பலவாணர்

திருவாவடுதுறை

போற்றீசுவரர்

போத்தனூர்

போஜேஸ்வர்

போஜ்பூர்(ம.பி)

வியாழக்கிழமை, 29 December 2022 12:04

ந,நா,நி,நீ,நூ,நெ,நே!

Written by

ஓம் நமசிவய!

 

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்

நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து

என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க

பொன்வயிற்றுக்கணபதியே போற்றியென போற்றுகின்றேன் !

$#$#$#$#$#

,நா,நி,நீ,நூ,நெ,நே-                                                                      

முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள்

நக்கீரரேஸ்வரர்

வெள்ளிக்குறிச்சி-திருப்பாசேத்தி அருகில்

நகுலேஸ்வரர்

காளிவடக்கு,கல்கத்தா

நச்சாடைதவிர்த்தருளியநாதர்

தேவதானம்

நஞ்சுண்டேஸ்வரர்

அரும்புலியூர், காரமடை, சிவன்மலை#, தென்கரைக்கோட்டை, நல்லாத்திபாளயம்

நட்டாத்தீசுவரர்

கொமராபாளயம்

நட்டாற்றீஸ்வரர்

காங்கயம்பாளயம்#

நட்டூரமர்ந்தார்

பரஞ்சேர்வழி

நடராசர்

சிதம்பரம்#,ரவிபுதூர்

நடராஜசுவாமி

நடனசாலை#

நடனபுரீஸ்வரர்

தாண்டவந்தோட்டம்

நடுதறிநாதர்

கோயில்கண்ணாப்பூர்

நடுதறியப்பர்

கோயில்கண்ணாப்பூர்

நடேசுவரர்

புதுச்சேரி

நந்தீசுவரர்

காளிதெற்கு-கல்கத்தா, திருநந்திக்கரை,  

நரசிம்மஈசுவரர்

தாமல், தியாகமுகச்சேரி

நரம்புநாதர்

கருங்குளம்

நரேஸ்வரர்

திருநறையூர்#

நரேஸ்வரர்    

காளிதெற்கு,கல்கத்தா

நன்னேஸ்வரர்

லக்குண்டி(கர்நாடகா-கதக் அருகில்)

நல்லாண்டவர்

மணப்பாறை

நவநீதேஸ்வரர்

மேலப்பாதி, சிக்கல்#

நாகநாதசுவாமி

காரைக்குடி, மணப்பாறை

நாகநாதர்

அன்ந்த.ஜோ-8/12 , எழுவன்கோட்டை, கீழப்பெரும்பள்ளம்# ,குடந்தைக்கீழ்க்கோட்டம்#, திருக்காளச்சேரி, திருநாகேச்சுவரம்#, நயினார்கோயில்#, நாங்குனேரி, நாகப்பட்டிணம், நாகூர், பாதாளேச்சுரம், முகுந்தன்குடி,

நாகலிங்கேசுவரர்

முட்டம்

நாகேச்சுவரசுவாமி

குன்றத்தூர்#

நாகேசுவரர்

அணைக்கடவு, அலங்கியம், காவேரிப்பட்டிணம், காளிதெற்கு-கல்கத்தா, கீழம்பாடி, குடந்தைக்கீழ்க்கோட்டம்#, சிகரமகனபள்ளி, திருநாகேச்சுவரம்#, பூவரசங்குப்பம்#, விஜயமங்கலம்,

நாகேசுவரன்

நாகூர்/புன்னாகவனம்

நாமபுரீஸ்வரர்

ஆலங்குடி

நாமாஸ்திகேசன்

பேராளம்

நாரதீஸ்வரர்

காஞ்சி,புத்தேரித்தெரு#

நாராயனேஸ்வர்

நாராயணபுரம்-புனா

நாரிகேளேஸ்வரர்

கும்பகோணம்#

நாலுவேதப்பதீசுவரர்

பெருங்கடம்பனூர்

நித்யவினோதஈசுவரர்

எடுத்துக்காட்டிசாத்தனூர்

நிர்ஜரேஸ்வரர்

காளிவடக்கு,கல்கத்தா

நிருதீசுவரர்

சிங்கலாந்தபுரம்

நிலையிட்டநாதர்

மாகறல்#

நீதீசுவரர்

பெரியநெகமம்

நீலகண்டமகாதேவர்

பத்மநாபபுரம்

நீலகண்டேசுவரர்

இருகூர், தளவாய்பட்டிணம், திருபைஞ்சிலி# , திருநீலக்குடி#,பூரி, மன்னார்குடி, வெங்கரை,

நீலாசலநாதர்

இந்திரநீலபருப்பதம்-ருத்ரப்ரயாகை

நீவதான்யேசுவரர்

வள்ளலார்கோயில்#

நூற்றெட்டீசுவரர்

பொன்னேரி-சின்னகாவனம்,பெரும்பேடு#

நெய்வேலிநாதர்

நெய்வட்டலி

நெல்லி நாதேஸ்வரர்

திருநெல்லிக்கா

நெல்லி வனநாதர்

திருநெல்லிக்கா

நெல்லையப்பர்

பதுமனேரி

நேத்திரார்ப்பணேசுவரர்

திருவீழிமழழை#

நேத்ரபுரீசுவரர்

கிருஷ்ணராயபுரம்#, திருக்கண்ணார்கோவில்

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879220
All
26879220
Your IP: 44.206.248.122
2024-03-19 08:27

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg