ஓம்நமசிவய!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்டபாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
#####
அவையடக்கம்!
95. நந்தியம்பெருமானின் பெருமைதனை யார் அறிவார். நீளமும் அகலமும் கொண்ட அவரின் பரப்பை யார் அறிவார். தனக்கு என்று பெயரில்லாத பெருஞ்சுடரின் வேரையும் அறியாமல் அதைபற்றி பேசுகின்றேன்.
96. சிவனின் புகழைப் பாட வல்லவர் நெறியிலே சென்று பாட அறியேன், பக்தியால் ஆடவல்லார் நெறிகண்டு ஆடுவதற்கும் அறியேன். போகத்தை நாடவல்லார் நெறியினை நாட அறியேன், விசாரனை செய்து ஆராயவல்லார் நெறியில் போய் ஆராயவும் அறியேன்!
97. நிலையான வேதத்தின் மொழியால் ஓதுகின்றவர் சுவாசத்தினுள் நாத ரூபமாக எழும் ஈசனை நுண்மையாக பரு உலகைப் படைத்த பிரமனும் திருமாலும் உணர முடியுமோ!
98. தத்துவ ஞானத்தை குருவடிவில் உபதேசித்தது கயிலைமலை அடிவாரத்தில். வீடுபேற்றை விரும்பிய முனிவர்கள், தேவர்கள் இந்த ஞானத்தை வேறாக இருந்து துதிப்பதால் இதன் பயனை அறியமாட்டார்.
திருச்சிற்றம்பலம்
#####