gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
புதன்கிழமை, 11 December 2019 07:54

கல்லாமை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஆங்காரம்முளை அறுப்பாய் பாங்கார் இன்பப்
பராபர கற்றவர் விழுங்கும் கனியே ! மற்றவர்
காணாமலையே சொல்லொடு பொருளின் தொடர்பே
கல்லும் கரைக்க வல்லோய் போற்றி! போற்றி!

#####

கல்லாமை!

310. பண்டைய காலத்தில் குரு முறைப்படி கல்வி கற்காமல் கருத்தில் தெய்வக் காட்சியை உணர்ந்தவர் இறைவன் அருளால் அனுக்கிரகம் பெற்றவர் ஆவார். அவர்கள் உலகைப் பற்றாமல் சிவத்தைப் பற்றி நிற்பர். முறையாகக் கல்வி கற்றவராயினும் கல்லாதவர் பெற்ற சிவ அனுபத்தை அடைவதில்லை.

311. சிவ அருளைப் பெற்ற வல்லவர்கள் உண்மை வழியில் எப்போதும் இயந்து நடப்பர். சிவத்தின் அருளைப் பெறாதவர்கள் உலக வழக்கில் பல நெறிகள் உண்டு என்பர். எம்பெருமானே எல்லா நெறியாய் விளங்குகின்றார் என்பதை கல்லாதவர் இந்த தன்மையை அறியாதவர் ஆவர்.

312. நிலையில்லாப் பொருட்களையெல்லாம் நிலையுடையதாயும் நிலையில்லா உடலை நிலையுடையதாயும் நினைக்கும் உயிர்களே! எல்லா உயிர்களுக்கும் இறைவனே தாரகம் என்ற உண்மையை உணராத நெஞ்சில் அவன் உணரப்படாதவன் ஆக இருப்பான்.

313. இறை அருள் பெறாமல் இருந்ததால் வினைத் துயரங்களுக்கு ஆளானேன். அறநெறி தத்துவத்தை கறகவில்லை மயக்கம் தருவனவற்றைக் கற்கின்றேன். அருளை அளிக்கும் சிவபெருமானை உள்ளத்தில் தியானிக்க வில்லை. வெளி உலக அனுபத்தில் மூழ்கி உள்ளேன்.

314. உயிர் உடலில் நிலைத்து நிற்காது என்ற உண்மையை உணர்ந்து சிவத்தின் அருளைப் பெற்றவர் தருமம் செய்து துறவறத்தில் திளைப்பர். அருளைப் பெறாதவர்கள் கீழானோர் கொடிய வினைகளால் ஏற்படும் துன்பங்களை அனுபவிப்பர்.

315. ஆகாயப் பெருவெளியில் விளைந்த சிவம் என்ற விளங்கனி கண்ணின் உள்ளே கலந்து அங்கு இருந்தது. உலக இயலைப் பெரிதாய் நினைத்து அங்கு வாழ்ந்து கொண்டு அறிவுதிறத்தால் இறைநிலையை பல படியாய் எழுதி வீணாக்கினர்.

316. ஞானத்தை அடைந்திருந்தால் மட்டுமே சிவன் எனும் விளங்கனியைப் பெற இயலும். அதை அறிந்தவர்க்கே காட்சி கைகூடும். ஞான சாதனையை அறிந்து உண்மைப் பொருளை உணர்ந்து பொருந்தி நிற்ப்பவரே உண்மையான கல்வியை கற்றவர் ஆவார்.

317. கல்வி கற்காத மூடரை காணவும் கூடாது. அவர் சொற்களைக் கேட்க வேண்டும் என்று கட்டாயம் ஏதுமில்லை. அனுபவம் இல்லா மூடரைவிட எழுதப் படிக்காதவர்கள் நல்லவர்கள். அனுபவம் இல்லாதவர் தம் உள்ளத்தில் சிவ அனுபவம் உணாரமாட்டார்.

318. கல்வி கற்றும் அனுபவ ஞானம் இல்லாத தீயவர் தீமையை உடைய மலங்களின் உறவை விடமாட்டார்கள். குற்றங்களை அறிந்து போக்கிக் கொல்லாத மூடர்கள். எல்லா திக்குகளிலும் உள்ள அறிஞர்களிடன் கூடி உண்மையை உணராதவர்கள். சிவஞானத்தால் சிவபெருமானிடம் அன்பு கொண்டு நிற்பவரே உண்மையான கணக்கு அறிந்தவர் ஆவார்.

319. அனைவர்க்கும் தலைவன் எம்பெருமான் தேவர்க்கும் மங்காத பெருஞ்சுடர் ஒளியாய் திகழ்பவன். சிவஞானம் பெற்ற ஒளியுடைய அடிகளார் போற்றும் பெருந்தெய்வம், அப்பெருமானை கற்றறிந்து விடுவோம் என்று சொன்னவர்கள் உள்ளே இருக்கும் சோதி எப்படி ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது அன்பதை அறியாதவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

#####

Read 1545 times Last modified on செவ்வாய்க்கிழமை, 03 October 2023 11:59
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26934335
All
26934335
Your IP: 44.204.65.189
2024-03-29 05:28

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg