gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
புதன்கிழமை, 13 May 2020 10:57

சத்தி நிபாதம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மழைபொழி இமயவல்லி சேய் தழைசெவி எண்தோள்
தலைவ திங்கட் சடையோன் செல்வ எங்கட்கு அருளும்
இறைவா ஆறுமுகச் செவ்வேட்கு அண்ணா
சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி! போற்றி!

#####


சத்தி நிபாதம்!

1514. சுவாதிட்டானத்திற்கு தொடர்புடைய மூலாதாரத்தில் இருந்த குண்டலினி சத்தி அஞ்ஞானத்தில் உள்ள ஆன்மாவுக்கு ஞானம் ஏற்பட அஞ்ஞானத்தை அகற்றிப் பசுவின் இயல்பையும் அறியும்படி செய்து ஆசை உண்டாக்கி உடன் இருந்தாள்.

1515. இனிமையை அளிக்கும் நிலையை நினைத்தால் சிவத்தை அறியும் இடமாய் அறிபவர்க்கு இன்பம் தருவதாய் அமையும். தேனைப்போன்ற பொருளான தெளிவை அனுபவிக்கின்றவர்க்குப் பசுக்கள் விரும்பிய புன்செய் நிலமாக மூலாதாரம் இருக்கும்.

1516. ஆணவமான இருளில் எடுத்த கணக்கிலடங்காத பிறவிகளை கடக்கும்படி செய்யும் திருவருள் எப்போதும் நீங்காதபடி திருஅருளம்மை அருள்வாள். மயக்கம் நீங்கப் பெறாத தேவர்கட்கு தலைவனான சிவத்துடன் பொருந்தி விந்து கெடாத இன்பத்தை அனுபவிக்கும் இடம் மூலாதாரம்.

1517. குண்டலினி இத்தகைய இருட்டறையில் இருந்த காரணத்தை ஆராய்ந்தால் இருளில் பொருளால் சூழப்பட்ட அறையில் விளக்கு புகுந்து எரிவது போன்ற ஆணவம் என்ற இருளில் குருமண்டலம் அருளால் சூழப்பெற்ற சிவசத்தி ஆவதற்கேயாகும்.

1518. குண்டலினி சத்தி மேலே போய் ஆன்மாவில் பரப்பி தன்னுள் அடக்கி ஆணவத்துடன் கூடிய மலத்தோடு மயங்கியிருந்த நிலையைப் போக்கிக் கன்மங்கள் யாவற்றையும் விலக்கி அறியாமையை அகற்றிச் சிவம் இருக்ககூடிய அருட்குணங்களைப் பதிந்து அருள் மயமான ஞான் சத்தி விளங்கும்படி செய்தாள்.

1519. பொண்ணுடன் பொருந்தி குண்டலியின் ஆற்றலில் இருந்த ஆடவர் அதை மாற்றி அமைக்கும் உபாயத்தை உணரவில்லை. அவ்வாறு மாற்றி அமைக்கின்ற வழியை அறிந்தால் அறிந்தவர் தொடர்ந்து உண்டாகும் பிறவித் துன்பம் இனி ஏற்படாது.

1520. மூலாதாரம் என்ற நிலமான சுவதிட்டானத்தில் இருக்கும் நான்முகனும் அதன் தொடர்பான மணிபூரகத்தில் இருக்கும் திருமாலும் உருத்திரரும், தொண்டையில் இருந்து மறைப்பைச் செய்யும் மகேசுவரனும் தக்கவாறு அறிந்தவர் இறைவனை அடைவர். இறைவன் ஆனவன் மையையும் தோற்கச் செய்யும் கரிய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட அக்கினி கலையில் இருப்பவன் என அறிந்து உறுதியாக காதல் செய்வீர்.

1521. இவ்வுலக் உயிர்கள் எத்தனை முறை அழிந்து தோன்றினாலும் சத்தியும் சிவமும் அழியாப் பெருமை கொண்டவர்கள். நாள்தோறும் விடியற்காலையில் சிவச்த்தியை வழிபடுவர்க்கு அவரது சுழுமுனையில் பொருந்தி உணர்த்துவாள்.

1522. உடலில் பொருந்தியுள்ள சூரியன், சந்திரனைத் தொடர்ந்துபோய் ஒளியைக் கண்டு கொண்டோம். பழமையாய் தொடர்ந்து வரும் பரசிவமாகிய பேரொளிப் பிழம்பிடம் போய் முடியும். வண்டுகள் ஒலிக்கும் இயல்புடைய சகசிரதளத்தில் ஒளியுடன் ஒளிரும் அண்ணலை நிலைபெறக் கண்டவர்க்கு அவர் உள்ளத்தில் இருளை மாற்றியருள்வான்.

1523. எல்லா உயிர்க்கும் தந்தை சிவன். அவன் வாழும் தோட்டமான சகசிரதளத்தில் உலகியல் பெண்பிள்ளை சாதனமாக இன்பம் அளிக்கும். பயிற்சியாளருக்கு ஏழுவகைத் தோற்றத்தில் எழுந்த பிறப்புகளையும் அவற்றில் செய்த நல்வினை தீவினைகளையும் அறிந்து கொள்ளும் நல்ல பார்வை உண்டாகும். உள்ளத்தில் சிவம் ஒளிராது போன இடையூறு அனைத்தும் நீக்கி தலைவனைக் கண்டு பொரூந்தி சிவக்கனியின் சுவையாக மாறுங்கள்.

1524. அறியாமையான காட்டில் வழும் குவிந்த கொங்கையை உடைய குண்டலினியம்மை சிறப்பாக தம்மிடம் விளக்கம் அடையுமாறு பூசை செய்து காண்பவர்க்கு பிறப்பை நீக்கிய பயன் தருவாள். அறியாமை காரணமாய் உள்ள மறதியை போக்கித் தன்னை எப்போதும் வணங்கும்படி செய்வாள்.

1525. எட்டுத் திசைக்கும் தலைவன் சிவத்தை ஆதாரத் தாமரை மலர்களை மாலையாகக் கொண்டு சித்ரணி நாடியில் இருக்கும் குண்டலினி சத்தியுடன் பொருந்தித் துதியுங்கள். தியானம் செய்பவர்க்கு மயக்கம் தரும் நீல ஒளியைத் தொடர்ந்து அருள்பெற முடியும்.

1526. சத்தியின் அருள் பெற்றவனை அடைந்த பிறர்க்கு ஞானம் ஏற்படும். அவனை வணங்கினால் அவனும் மலர்தூவி வழிபடுவான். மேலான தன்னை வணங்குபவனைக் கண்டு செருக்குக் கொள்ளாமல் சமத்துவ நிலையில் நிற்பாள். உலகம் எங்கும் சென்று வரும் ஆற்றலை அவன் பெறுவான்.

1527. நல்வினை தீவினை இரண்டும் சமமாக இருக்கும் காலத்தில் இனிய அருட்சத்தி குருமண்டலத்தில் இருப்பாள். உயிர் ஒளி பெறுவதற்கு இடையூறாக இருக்கும் குணங்களைப் போக்கி அருள்வாள் என்ற அறிவால் தன் முனைப்பில் செயல் அற்று இருப்பின் மூன்று மலங்களும் கெட்டுச் சிவமாய் திகழ்வான்.

1528. விந்து நாதம் என்பன இல்லாத இடம் நாதாந்தத்தில் ஒலியை உண்டாக்கும் சத்தியை வணங்கிச் தியானித்து மந்திரம் அற்ற நாதாந்தத்தில் அவளுடன் ஒன்றினால் பராபரையான அவளும் அன்போடு பொருந்துவாள்.

1529. மாலைக் காலத்தில் இருக்கும் தீபமான சந்திரனும் சூரியனுமாகிய் ஒளிப் பொருளுக்கு மிகவும் ஒளியை அளிக்கும் ஒப்பிலாத பரஞ்சுடரான அண்ணலும் உண்மை ஞானத்தை விளக்கிய தலைவனும் ஆன சிவன் என் மனதுள் புகுந்து ஊன் உடம்மை ஒளிரச் செய்து உயிருடன் பொருந்தினான்.

#####

Read 1544 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27050743
All
27050743
Your IP: 18.118.1.232
2024-04-20 17:39

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg