gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

3-11.யாசித்தல்!

Written by

யாசித்தல்!                                                                                                          

முழுமையான ஞானிகள், துறவிகள் தமக்கு இன்னும் பொருள் வேண்டும் என இரைஞ்சுபவர்களிடம் எதையும் பெறமாட்டார்கள். இறைவனிடம் வியாபாரம் பேசும் அவர்கள் அன்பின்றி பிச்சை கேட்டுப் பெறுபவர்களே! ஞானிகள் அவர்களிடம் யாசிக்க மாட்டார்கள்.
நம்மிடம் இல்லாத ஒன்றை ஒருவரின் இரக்க குணத்தைப் பயன்படுத்தி பெறுவது யாசித்தல் ஆகும். அப்படி யாசிப்பது பெரிய இகழ்ச்சியாகும். குசேலர், கிருஷ்ணனின் ஆத்மார்த்த பால்ய சினேகிதன். குசேலர் மிகுந்த வறுமைக்குள்ளான போது யாரிடமும் யாசிக்காமல் வயல்களில் உதிர்ந்த நெல்லை சேகரித்து தன் குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்தார்.
நிலமை மோசமாக மனைவியின் வற்புறுத்தலுக்கு இணங்கி பால்ய சிநேகிதன் மன்னன் கண்ணனை சென்று கானும்போதுக்கூட தன் வறுமைபற்றி ஏதும் பேசவில்லை. ஒன்றும் யாசிக்கவும் இல்லை. ஒரு குறிப்பும் காட்டவில்லை. ஆனால் ஸ்ரீ கிருஷ்னன் குசேலரின் உணவு மூட்டையை கட்டியிருந்த துணியைப் பார்த்து அவரின் நிலைபுரிந்து உதவி செய்ததாக கூறப்பட்டுள்ளது.
ஒருவனிடத்தில் ஒருபொருளை யாசிப்பவன் யாராயிருந்தாலும் கூனிக்குன்றிவிடுவான். இதை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டு பரந்தாமன், தர்மத்தின் தலைவன் மகாபலியிடம் 3’ நிலம் கேட்டபோது குள்ள வாமண அவதாரம் எடுத்துள்ளார். யாசிப்பவர் தாழ்ந்துதான் செல்ல வேண்டியிருக்கும். இது உலக நியதி. பொருள் கொடுப்பவன் கை மேலேயும், அதைப் பெருபவன் கைகள் கீழே தாழ இருப்பதும் கண்கூடான மாற்ற முடியாத நியதிகள்.
பூஜை செய்து வந்திருந்த பக்தர்களை வணங்கி பிரசாதத்துடன் பணத்தை தன் கைகளில் கீழே இருக்கும்படியாக வைத்து கொடுத்துக் கொண்டிருந்தார் ஒருவர். இதைக் கண்ட பக்தர் ஒருவர் ஐயா தங்கள் இப்படிச் செய்வதன் அர்த்தம் என்னவோ? எனக் கேட்டார். அவர் "தருகிற கை மேலே இருக்க வேண்டும், பெறுகிறவன் கை கீழே இருக்க வேண்டும்,” என்றார்.
குழப்பமடைந்த அவர், "ஐயா. நீங்கள் தானே தருபவர். மற்றவர் பெற்றுக் கொள்பவர்தானே. நீங்கள் பொருட்களை உங்கள் கையில் வைத்து கீழே இருக்குமாறு செய்து மற்றவர் மேலே இருந்து எடுத்துக் கொள்ளுமாறு செய்கிறீகள். எப்படி? என மீண்டும் கேட்டார்.
 அந்த அன்பர் "நீங்கள் நான் சொன்னதை சரியாக புரிந்து கொள்ளவில்லை, நான் தரும் பொருள் அழியக்கூடியது. நான் தரும் பெருளை பெற்றுக் கொண்டு அவர்களின் கை எனக்கு ஆசியையும் அருளையும் தருகின்றது. ஆசியும் அருளும் தரும் கை மேலிருப்பது தானே முறை" என்றார். எவ்வளவு சிறப்பான விசயமிது-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26431178
All
26431178
Your IP: 35.175.107.142
2023-12-11 16:58

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg