gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

3-6.நம்பிக்கை!

Written by

நம்பிக்கை!                                                                                                                  

உங்கள் மனம் உங்களுக்கு உதவும் என நம்பிக்கை கொள்ளுங்கள். மனம் வேறொருவரின் எண்ணங்களுக்கு செயல்படாது. சிந்திக்காது. எனவே உங்கள் எண்ணங்களின் செயல்பாட்டினை வடிக்க உங்கள் மனம் உதவும் என்று நம்புங்கள். இந்த விழிப்பு உணர்வுதான் உங்கள் திறமைதனை வெளிக்கொணரும் சக்திமிக்க ஆயுதம்.
சந்தோஷமாக இருப்பதாக நினைவு கொள்ளுங்கள். இதற்குத் தூண்டுதலாக உங்களின் நினைவிலிருந்து உங்களுக்கு சந்தோஷம் அளித்த நிகழ்வுகளின் ஒன்றை நினைத்து அதில் ஆழ்ந்து ஆனந்தப்படுங்கள்.
நீங்கள் ஓர் விஷயத்தை உங்கள் உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ சொல்ல தயங்கக் கூடிய செய்தியை நன்றாக தீர்மானமாக முடிவு செய்து, இப்படி நடந்தால் நன்மைமயம், இப்படி செய்தால் நல்லது என நினைத்து அவ்வாறே நடக்க வேண்டும் என மனதில் நினைவு கொள்ளுங்கள்.
இதையே திரும்ப திரும்ப நீங்கள் நினைத்தால் அந்த உறுதியான எண்ண அலைகளின் அதிர்வுகள் இயற்கையில் உள்ள கடந்த, நிகழ், எதிர்கால அதிர்வுகளில் கலந்துவிடும்.
ஓர் நிலையில் இந்த அதிர்வுகள் அவரைச் சென்று அடைந்திருக்கும். அந்த ஓர் குறிப்பிட்ட செயலில் அவரின் முடிவு உங்கள் எண்ணங்களை சார்ந்ததாக இருப்பதைக் காண்பீர்கள். சிலசமயங்களில் பலர், “நான்கூட நினைத்தேன் இப்படி செய்தால் நல்லது என்று! நீங்கள் கூறிவிட்டீர்கள்” என இயல்பான மனநிலையில் கூறுவதைக் காண்கின்றோம்.
இப்படி எண்ணங்களை சொல்லமுடியா நிலையிலும்கூட ஒருவருக்கொருவர் அதிர்வலைகள் மூலம் பரிமாறிக் கொள்கின்றோம். இதைத்தான் ஒரே எண்ண அதிர்வலையில் அடுத்த மனதை இயக்குவது கட்டுப்படுத்துவது என்ற செயல்பாடாகும். ஒருவரை ஒருவர் சந்திக்காமல்கூட ஒரே அதிர்வுகளின் தாக்கத்தில் இருவர் ஒரே சிந்தனையில் செயல்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.
காற்றின் அதிர்வலைகளாக அனுப்பப்படும் பேச்சு, பாடல் ஒலி, ஒளிக்காட்சிகள் அதை எதிர்பார்க்கும் நபர்களை சென்று அடைதலை விஞ்ஞான வளர்ச்சியில் காண்கிறோம். இந்த அரிய செயலை நம் உடம்பின் புலன்களும் செய்கின்றது. மனம் செயல்பட்டு சிந்தனையில் பதிய வைத்த விஷயங்கள் அனைத்தும் கனவுகளாய் மலர்கின்றது. பல கனவுகள் நனவாய் மலர்கின்றது. இந்த இடத்திற்கு இதற்கு முன் வந்தது போல ஓர் நினைவு, இவரை எங்கேயோ பார்த்தது போன்ற நினைவு,
இது எல்லாம் காற்றின் அதிர்வுகளை நம் உடல், மனம் வாங்கி செயல் படும்போது ஏற்படுவது. இதில் கடந்த கால அதிர்வுகளை நம் உடல், மனம் ஒன்றி கிரகிக்கும் போது நமக்கு அந்த இடம் பழக்கப் பட்டது போலவும், அதற்கு முன் அந்த இடத்திற்கு வந்தது போலவும் உணருகிறோம்.
நம்மைச்சுற்றி எல்லா அதிர்வுகளும் நிறைந்திருக்கின்றன. நாம் நல்ல நினைவுடன், சந்தோஷமான நிலையில், ஆழ்ந்து தெளிந்த நிலையில் அதிர்வுகளின் உணர்வுகளை புரிந்து கொண்டால் நமக்கு பல விபரங்கள் தெளிவாகும். அதில் பல நம் வாழ்விற்கு மிகச் சிறந்த வழிகாட்டிடும். ஒருவர் இப்படிச்செய் எனச்சொல்லித்தர வேண்டியது இல்லை.
உங்களால் இது முடியும். உங்கள் மனத்தால் இதைச் செய்யமுடியும். சந்தோஷமடைந்து வாழ்வின் வெற்றிக் கனியை பறிக்க முடியும் என்ற நம்பிக்கையை நம்முள் வளர்த்துக் கொள்ளவேண்டும். ஓர் செயலுக்கு முன்பு நன்கு யோசிக்கவேண்டும். யோசனையின் முடிவில் தோன்றும் கருத்துக்களின்மேல் நம்பிக்கைகொண்டு செயல்படவேண்டும்.
ஒருவன் நல்லவன் என்றால் நம்பவேண்டும். தீயவன் என்றால் விலகிவிடவேண்டும். ஒருவனைவிட்டு விலகிவிட்டு அவன் கூறுவதை நம்பக்கூடாது. அதேபோன்று நம்பியவர்களை விட்டு விலகிச் செல்லக்கூடாது. ஒரு இனியகாலையில் இன்றைய பொழுது நன்றாயிருக்கும். நன்றாயிருக்க வேண்டும் என நம்பவேண்டும். செய்கின்ற செயல் நன்றாயிருக்கும் என்ற நம்பிக்கையை முதலில் அடையவேண்டும். முடியாது என்று நினைவு கொள்ளாமல், முடியும் என நினைப்பவனின் மனம் தான் நன்கு செயல் படும்.
உன்னால் செய்ய முடியும் என்பது தன்னம்பிக்கை! உன்னால் மட்டும்தான் செய்ய முடியும் என்பது கர்வம்! அதை வெளியில் சொல்வது திமிர்! ஒருவர் நம்பிக்கை கொள்ளலாம். கர்வமும், திமிரும் கொள்ளக்கூடாது! அது மற்றவர்களிடமிருந்து உங்களைத் தனித்து பிரித்து வேதனையில் ஆழ்த்தும். துன்பத்தில் உழலுவீர்கள்!
எந்தப் பாறையிலும் இடையே புகுந்து படரும் தன்மையுடையது சல்லிவேர்கள். அதைப் போன்றதுதான் மனத்தின் நம்பிக்கை. அமைதியாக சிந்தித்து நம்பிக்கையுடன் செயல்பட்டால் எந்த செயலிலும் வெற்றி உறுதி.
நம்பிக்கை, மகத்தான செயல். ஒவ்வெருவருக்கும் தேவையான ஒன்று. அது மனத்தின் உறுதியை, வலிமையைக் காட்டும். செயலின் வெற்றி நம்பிக்கையின் அடிப்படையில்தான். நம்பிக்கைக்கு ஊக்கம், உற்சாகம் வேண்டும். இவை எல்லாம் எங்கிருந்து பெறப்படுகின்றது? நம் உடலிருந்துதான். உடல், மன ஆரோக்கியம் தான் ஊக்கத்திற்கும், உற்சாகத்திற்கும் அடிப்படை.
மகாபாரதத்தின் சூத்திரதாரியாக ஸ்ரீகிருஷ்ணர் விளங்குகின்றார். அந்த ஸ்ரீகிருஷ்ணர் நினைத்திருந்தால் தர்மன் சூதாட்டத்தில் தோற்றிருக்க முடியாது. இந்தக்கதை சூதாட்டத்தின் பாதிப்புக் கதையாகவும் இருந்திருக்காது. கர்மபலன்படி தர்மன் தான் சூதாடுவது கண்ணனுக்கு தெரியக்கூடாது என நினைத்ததால் அவரிடம் சொல்லவில்லை. சூதாட்டத்தின் தாக்கம் ஏற்பட்டபோது அவரின் உதவியும் கிடைக்கவில்லை.
துரியோதனன் தனக்கு சூதாடவராது என்பதால் சகுனியை தனக்கு பதிலாக நியமித்த போதும், தருமன் கண்ணன்மேல் நம்பிக்கை வைக்கவில்லை. தன்மேல் தனக்குத் தெரியாத ஒன்றின்மேல் நம்பிக்கை கொண்டான். தவறு செய்தான். அவனோடு சேர்ந்த அனைவரும் தண்டனை அடைந்தனர்.
திரௌபதியை துச்சாதனன் துகிலுரிக்க முற்படும்போது அவள் தன் உடைகளைப் பற்றிக் கொண்டு கண்ணா! என்று அழைத்தாள். அப்போது அவள் தன் கரங்களை நம்பினாள்! நிலைமை மோசமானபோது தன் கரங்களை உயர்த்தி உள்ளார்ந்த நம்பிக்கையுடன் மனதின் அடித்தளத்திலிருந்து அழைக்க கண்ணன் வந்தான் உதவி கிடைத்தது.
எனவே எந்த செயலும் நம்பிக்கையுடன் செயல்படவேண்டும். ஆத்மார்த்தமான நம்பிக்கையே வெற்றி பெற உதவிடும்! உதவி கிடைக்கும். நம்பிக்கை விதையை மனதில் ஆழமாக ஊன்றி, எண்ணங்களை வார்த்தால் அதிசயங்களாக விளையும் அற்புதம்-நம்பிக்கை.
ராமர் இலங்கைக்குச் செல்ல வானர சேனையின் உதவியுடன் அணைகட்ட வேண்டியிருந்தது. ஆனால் அவரின் பக்தன் அனுமன் தன்னம்பிக்கையால் சமுத்திரத்தை தாண்டினான். நம்பிக்கை மிகவும் சக்தி வாய்ந்தது.
அதிர்ஷ்டத்தைத் தேடிக்கொண்டிருக்கும் ஒருவனிடம் துளையிட்ட ஓர்காசு கிடைக்க அதிர்ஷ்டம் மிகுந்தது என நம்பி அதை தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டான். அந்த நாணயத்தால் தன் வெற்றி நிச்சயம் என் நம்பினான். எல்லோரும் பாராட்டும்படி வேலை செய்தான். எல்லா பிரச்சனைகளுக்கும் சுலபமாகத் தீர்வு கண்டான்.
தினமும் பணிக்குப் போகும்போது அந்த நாணயம் தன் சட்டைபையில் மனைவி வைத்துவிட்டாளா, இருக்கின்றதா என தடவிப்பார்த்து உறுதி செய்து நம்பிக்கை மகிழ்வுடன் சென்றான். வாழ்வில் பலபடிகள் முன்னேறினான்.
ஒருநாள் தன் சட்டைப்பையில் உள்ள நாணயத்தை. தனக்கு வாழ்வில் முன்னேற உதவிய அதிர்ஷ்டத்தை எடுத்துப் பார்க்க விரும்பினான். அவன் மனைவி தடுத்தும் கேளாமல் எடுத்துப் பார்த்தான். அப்போது அந்த நாணயத்தில் துளையில்லை.
அதிர்ந்து போனான். அதைப்பற்றி மனைவியிடம் கேட்டபோது, பலநாட்களுக்கு முன்னால் அந்த சட்டையை எடுத்து உதறியபோது அந்த நாணயம் உருண்டோடி காணாமல் போனது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவன் வருத்தப்படுவான் என நினைத்து ஓர் துளையில்லா நாணயத்தை சட்டைப் பையில் மற்றி மாற்றி வைத்துள்ளாள் என தெரியவந்தது.
துளையிட்ட நணயம்- அதிர்ஷ்டமானது அது தன்னிடம் இருக்கின்றது என்ற நம்பிக்கை கொடுத்த பலம்தான் அவன் வெற்றிக்குக் காரணம். நாணயத்தில் ஏதுமில்லை! நம்பிக்கைதான் வேலை செய்திருக்கின்றது.
இந்த நிகழ்வு நம்பிக்கை என்பது நீங்கள் ஒன்று உங்கள் மேல் வைப்பது, மற்றொன்று மற்றவர்கள் மேல் வைப்பது. உங்கள்மேல் நம்பிக்கையிருந்தாலும், உங்கள் செயலில் உறுதியான நம்பிக்கை இருந்தாலும் சூழ்நிலை என்ற ஒன்று உங்களை சிக்கலில் சிக்கவைத்திட வாய்ப்புண்டு.
நீங்கள் எவ்வளவு திறமையும், உறுதியும், உற்சாகமும் உடைய நம்பிக்கையாளர் என்றாலும் உங்களைச் சுற்றியுள்ள சூழலைக் கணிக்கும் திறமை, நம்மிடமிருந்தோ அல்லது நமது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களிடமிருந்தோ பெற்றுக் கொண்டால்தான் நம் நம்பிக்கையில் முழுவதுமாக வென்றிட முடியும். நாம் கவனக் குறைவினால் விட்ட சின்ன விபரங்களால் தாக்கம் ஏற்படாமலிருக்க இந்த ஆலோசனை உதவி தேவை.
நமது நம்பிக்கைக்குப் பத்திரமானவர்கள் திறமைசாலிகளாக இருந்தாலும், அவர்கள் நாம் நம்பிக்கையுடன் செய்யும் செயலை ஊன்றிக் கவனித்து நமக்கு அன்புடன் கருத்துக்களைக்கூறி உதவி செய்யவேண்டும். அந்த அன்புக்கு நாமும் அவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும். அன்பு மட்டும் போதாது. நமது வேண்டுகோளும் வேண்டும். இன்னவிதமான உதவி, இன்ன நோக்கத்திற்கு வேனும் என்று தெளிவான வேண்டுகோளை வைக்க வேண்டும்.
காலம் கடந்த வேண்டுகோள், உதவி பலன் அளிக்காது. முன்பே சொல்லியிருக்கலாம் என்ற மன உலைச்சல் இருவருக்கும் தோன்றக்கூடாது. யார் தவறாக இருந்தாலும் காலம் கடந்த உதவி அன்பர்மேல் நாம் கொண்டிருந்த நம்பிக்கையை, அன்பை கெடுத்துவிடும்.
எனவே முறையான வேண்டுகோள், சரியான காலத்தில் கிடைத்தால் தான் நாம் கொண்டிருந்த நம்பிக்கை வெற்றி பெற நம்பிக்கையாளர் உதவிட முடியும். கர்மவினை செயல்பட ஆரம்பித்து நம்பிக்கையாளர் நம் மேல் அன்பு இல்லாதிருந்தாலும், குறைந்திருந்தாலும் அவரின் உதவி காலத்தே கிடைக்காமல் உங்கள் வெற்றி தடைபட வாய்ப்புகள் உண்டு.
ஏற்றத்தாழ்வு எதுவரினும், உண்மை, தர்மம், நியாயம் எது என அறிந்திருந்தாலும் நண்பனின் அன்புக்காக, நண்பன் தன்மீது கொண்ட நம்பிக்கைக்காக தன்னை, தன் உயிரை தியாகம் செய்தான் “கர்ணன்”. அது அவன் கர்மவினைப்படி நடந்தேறியது என்கிறது மகாபாரதம்.
கர்ணன் தன் நண்பனுக்கு உண்மை, தர்மத்தை எடுத்துக்கூறி அன்பின்வழியில் துரியோதனனை மாற்ற முயற்சிக்காமல், அவன் தன்மீது கொண்ட நட்பின் நம்பிக்கை காரணமாக செயல் பட்டது அவன் வினைப்பயன்.
எனவே நம்பிக்கையின் வெற்றி, நமக்குமட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் சூழ்நிலையைப் பொறுத்தது. அதே சமயம் வெறும் நம்பிக்கைகள் மட்டும் வெற்றி தராது. பல விஷயங்களில் கர்மவினைப்படிதான் நடக்கும் என்பதற்குச் சான்றுகள் ஏராளம். வாழ்வில் எவ்வளவு நம்பிக்கையுடன் செயல்பட்டாலும் முடிவுகள் வேறுவிதமாக இருக்கும்போதுதான் இதன் உண்மை நமக்குப் புரியவருகின்றது.
மனதின் சத்தத்தை கேளாதீர்! அது நம்மை ஏமாற்றிவிடும்! ஆன்மாவின் குரலை கேளுங்கள்! அது நம்மை கைதூக்கி லட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்லும். நம்பிக்கை குலைக்கும் பேச்சுக்களை கேட்காதீர். அவைகளை மீண்டும் நினையாதீர். உறுதியில்லா நம்பிக்கையில் எதையும் சாதிக்க முடியாது. அசைக்கமுடியா நம்பிக்கைதான் வெற்றியின் ரகசியம். சந்தோஷத்தின் அடிப்படை.
நீங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் நீங்கள் கூறுவது வேதவாக்காகிவிடும். முற்றிலும் அன்பின் வயப்பட்டு அன்பு உலகில் இருதோமானால் இந்த வினைகளின் செயல்பாடுகளின் பாதிப்பு நம்மை அவ்வளவாக பாதிக்காது. நமக்காக பல நல்ல அன்பு உள்ளங்கள் இருக்கின்றன. நம்மைச்சுற்றி அன்பு அலைகள் அதிகம் இருக்கும் போது கர்மவினை அலைகளின் தாக்கம் குறைந்து போகும்.
ஓர் படகு நிறைய பொருள்கள் ஏற்றி அக்கரை சொல்கின்றோம். அந்தப்படகு இத்தனை பாரங்களைச் சுமக்கின்றோமே என வருத்தப்படக்கூடாது. அது தன் கடமை என உணரவேண்டும். அதேசமயம் படகு ஓட்டையானால் அதில் சரக்கு ஏற்றமாட்டார்கள். ஓட்டை படகு என ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.
இதைப்போல்தான் மனித உடம்பும், உயிரும் குடும்ப பொறுப்புகளைச் சுமக்க வேண்டும். அதைவிடுத்து பொருப்புகளையும் கடமைகளையும் கண்டு வருந்தி உங்களுக்குள்ளே ஓட்டை போட்டுக் கொண்டால் படகுபோல் ஒதுக்கித் தள்ளி வைக்கப்படுவீர்கள்.
உன்னால் முடியும் என்ற நம்பிக்கையில்தான் சமூகத்தில் பொறுப்புகள் உன்னிடம் சேர்கின்றன. அதை திறம்பட உன் செயல்களால் செய்து வெற்றிபெறுவதற்கு முயலவேண்டும். அதுதான் நம்பிக்கையுடன் கூடிய வாழ்வு. அந்த நம்பிக்கை முழுவதும் அன்புடன் கூடியிருந்தால் வெற்றிச் செயல்கள் அதிகமாகி வாழ்வு ஆனந்தமாக நிறையும். சந்தோஷம் நிலைக்கும். அந்த நம்பிக்கையை வியாபாரமாக்காதீர்கள்.
சரணாகதி: சரணடைதல் பெரும்பாலும், தன் இயலாமையை ஒப்புக்கொள்வது, வலிமையின்மையை தெரிவிப்பது ஆகியவையாகும். ஆனால் சரணாகதி என்பது அன்பின் உயர்ந்தநிலை..ஆன்மா சக்தியுடன் சேரும் உச்சநிலை அது.
நீங்கள் சரணடைந்துவிட்டால் உங்கள் செயல்கள், மனநினைவுகள் அர்ப்பணமாகிவிடும். மனதில் சுதந்திரமான எழுச்சி ஏற்படும். அன்பு, அழகு, கருணை, மகிழ்வு இயல்பாக உங்களுக்குள் ஏற்படும்.
ஒருவரிடம் சரணாகதி என்பது நம்மை நமது மனதை ஒழுங்குபடுத்தி ஓர்நிலைப் படுத்தலுக்கு பெயர். ஓர் நிலைப்பட்ட மனமே எதையும் சீர்தூக்கி பார்க்கமுடியும். சிந்தித்து செயலாற்றமுடியும். தெளிவான சிந்தனையுடன் திட்டமிட்டு செயல்படும் போதுதான் நம்மிடம் தன்னம்பிக்கை பிறக்கின்றது.
தன்னம்பிக்கையுடன் கூடிய செயல்களில் குறைகள் தோன்றினாலும் நம் கவனம் சிதறாமல் குறைகளைந்து வெற்றி காணமுடியும். எனவே சரணாகதி என்பது நமக்கு நாமே தன்னம்பிக்கையை நமக்குள்ளே ஏற்படுத்திக்கொள்ள என நினைக்க வேண்டும். மாறுபாடற்ற பூரணத்துவமான முழு நம்பிகையே சரணாகதி.
ஆனால் பொதுவாக எல்லோருக்கும் சரணாகதி என்பதைவிட தன்னம்பிக்கை பிடித்தமானதாக இருக்கின்றது. நம்மால் முடியாத ஒன்றை நம் நம்பிக்கைக்கு உற்ற ஒருவரிடம், இயலாமையை வெளிப்படுத்தி, அவரால் அந்த நிகழ்வில் நமக்கு உதவமுடியும் என்ற நம்பிக்கையில், செயலில் வெற்றிகானும் வழியே சரணாகதி.
எனவே சரணாகதியும் ஒருவகை நம்பிக்கையே! நம்மில் பலருக்கு நம்மால் முடியாது, இன்னொருவரின் உதவிதேவை, என்ற சரணாகதி நினைப்பை ஏற்றுக் கொள்ளும் எண்ணம் இருப்பதில்லை. சரணாகதிக்கு சுயமுயற்சி தேவை.
மகாபாரத்தில், அர்ஜுனன் வீரனாயிருந்தபோதும் போர்க்களத்தில் தன்னால் செயல்பட இயலவில்லை என்ற நிலையில் கிருஷ்ணனிடம் சரணடைந்து, அவரின் கீதா உபதேசத்திற்குப்பின் திறம்பட அவர் ஆலோசனைப்படி செயல்பட்டு வெற்றிகண்டான். துச்சாதனன் துகில் உரியும்போது தன்னால், தன்கைகளால் அதை தடுக்க முடியா நிலையில் கண்ணனிடம் சரணடைந்து தன் மானத்தைக் காத்துக் கொண்டாள் பாஞ்சாலி. இயலாநிலையில் சுயமுயற்சியுடன் கூடிய சரணாகதியே வெற்றிதரும்-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879229
All
26879229
Your IP: 34.237.245.80
2024-03-19 08:32

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg

சந்தோஷப்பூக்கள்