gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

2-5.முயற்சிப் பூக்கள்!

Written by

முயற்சிப் பூக்கள்! 


மூன்று சீடர்கள் குருவிடம் உபதேசம் பெற்று காட்டு வழியாக ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். வழியில் புலி ஒன்று இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. நாம் குருவிடம் கற்றதெல்லாம் யாருக்கும் உபயோகப்படாமல் போய்விடும். அந்தபுலி நம்மை கொன்று தின்னப் போகிறது என்று திகைத்து நின்றான் ஒருவன். நாம் தரையில் படுத்துக் கண்ணை மூடியபடி கடவுளை நினைப்போம். அவர் காப்பாற்றுவார் என இரண்டாவது சீடன் படுத்துக் கொண்டான். மூன்றாவது சீடன் புலி நம்மிடம் வருவதற்குள் ஏதாவது முயற்சி செய்து நம்மை காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்போம், முடியாத பட்சத்தில் கடவுளிடம் வேண்டுவோம் என அருகில் இருந்த மரத்தில் எற எல்லோரையும் கூப்பிட அவர்கள் வராததால் தான் மட்டும் மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். தன்னம்பிகை யில்லாதவனையும், மூடநம்பிக்கை வைத்தவனையும் புலி அடித்துக் கொன்றது. தன் முயற்சியில் நம்பிக்கை வைத்த பக்தன் தப்பித்தான்.

முயற்சிக்காமல் முடியவே முடியாது. எள்ளின் உள்ளே எண்ணெய்யும், பசுவின் மடியில் பாலும் உண்டு எனச் சொல்வதால் எண்ணெய்யும், பாலும் கிடைத்துவிடாது. அதற்கான முயற்சி வேண்டும். வெறும் முயற்சி மட்டும் போதாது. மனம் உடல் இரண்டும் இனைந்து முயற்சிக்க வேண்டும். மனதில் எண்ணி உடல் ஒத்துழைக்காவிடில் அது உபயோகமில்லை. எனவே நம் உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். மனதின் எண்ண ஓட்டங்களுக்கு ஈடுகொடுத்து உடல் துவண்டு போகாமல் வேகத்துடன் செயல் படவேண்டும். அப்போதுதான் நீங்கள் வெற்றியை விரைவாக ருசித்துப் பார்க்கமுடியும். உங்கள் குறிக்கோள்களை அடைய முடியும். சந்தோஷம் காணமுடியும்.
பல மருந்துகளை நீரில் கலந்து வைத்தியர் குடிக்கச் சொல்வதால் மருந்தில் ஒன்றுமில்லை! தண்ணீரின் சக்திதான் என்று அர்த்தமில்லை. பார்த்தலில், கேட்டலில் ஒன்றுமில்லை. நம்பிக்கையுடன் முயற்சி செய்து செயல் படவேண்டும். ஒற்றுமையும் உழைக்கும் மனப்பான்மையும் வளரவேண்டும்.
வாழ்வில் கிடைப்பதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் பழக்கம் வேண்டும். உங்களுக்கு கிடைத்ததை நீங்கள் அதிருப்தியடைந்து ஒதுக்கிவிட்டு வேறுஒன்றை நாடினால், இதன் சுவை, இனிமை தெரியாமல் போய்விடும். ஒருவேளை அடுத்தமுறை இதுகூட உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். எனவே கிடைத்ததை நுகர்ந்து அனுபவியுங்கள். பின் வேண்டுவனவற்றிற்காக முயற்சியுங்கள். வாழ்க்கை வளம் பெறும்.
இந்த உலகை எட்டிப்பார்க்கும் எல்லா உயிர்களும், தங்கள் கருவிலிருந்து, கூட்டிலிருந்து முயற்சி செய்து உந்திதான் வெளிவருகின்றது. வெளிவரும்பாதை சிறியது என்றாலும் அங்கிருந்து வெளிஉலகைக்காண முயற்சி செய்து உந்தி வெளியே வருவதால்தான் அதனிடம் தன்னம்பிக்கை ஏற்படுகின்றது. முயற்சித்தால் தன்னால் எதுவும் முடியும் என நம்புகின்றது. அவ்வாறு முயற்சிக்காத உயிர்கள் அப்படியே இறந்து விடுகின்றது.
முழு வளர்ச்சி, முதிர்வு அடைந்த பூரண வளர்ச்சிக்குப்பின் எந்த உயிருடன் கூடிய உடலும் தான் வளர்ந்த கருவுக்குள் முடங்கி கிடப்பதில்லை. முட்டை ஓட்டை முட்டி குஞ்சுகளும், கூட்டை கிழித்து பட்டாம் பூச்சிகளும், ஏன் நாமும், கரு முழு உருவானதும் உந்தி முயற்சி செய்துதான் வெளிப்படுகிறோமோ அன்றி உள்ளேயே அடங்கி கிடப்பதில்லை. இந்த உந்துதல் முயற்சிதான் நமக்கு வாழ்நாள் பயணத்தில் அதிகம் தேவைப்படுகின்றது. பலர் அதை மறந்துவிடுகின்றனர். எனவே எதற்கும் முயற்சி தேவை. கஷ்டங்களை மறந்த முயற்சி தேவை.
எவ்வளவு சீக்கிரம் மலைசிகரம் ஏறுகிறாய் என்பது முக்கியமல்ல! அங்கே எவ்வளவு காலம் இருக்கின்றாய் என்பதுதான் அவசியமானது. எவ்வளவு பெரியமலை என்று மலைத்துவிடாதே! முயன்று ஏறினால் அம்மலைச்சிகரம் உன் காலடியில். கைகளில் தொடலாம். எவ்வளவு முயற்சி செய்து, எவ்வளவு உயரம் ஏறினாலும், சிகரத்தின் உச்சியில் நிலையாக இருக்கமுடியாது. ஏணியில் ஏறியவன் எப்படியும் மீண்டும் படியிறங்கித்தான் ஆகவேண்டும் என்பதுபோல, மலையிலிருந்து கீழிறங்கி விடவேண்டியிருக்கும். எந்த உயர்வும் நிலையானதில்லை. அதற்காக சிகரத்தை அடையும் எண்ணத்தை விட்டுவிடாதே!
சிரமங்கள்தான் நமக்கு பலத்தை, கஷ்டங்கள்தான் நம் வலிமையை நமக்கு உணர்த்தும். துயரங்கள் நம்மை பண்பட வைக்கின்றது. எதிர்பாராமல் வரும் இன்னல்களை எதிர்கொள்ள, தவிர்க்க, எதிர்பார்த்துவரும் துன்பங்களை ஏற்றுக்கொண்டால் வெற்றிப்பாதை புலப்படும். சந்தோஷம் அடையமுடியும்.
சில விஷயங்கள் நமக்கு அதிசயமாயிருக்கும். நமதுவாழ்வின் நோக்கம் என்ன! நாம் ஏன் இங்கு வந்தோம்! பிறந்தோம்! நமது வாழ்வின் லட்சியம், குறிக்கோள் என்ன! சிலரை மட்டும் ஏன் பெரிய மனிதர்களாக நினைக்கின்றார்கள். அவர்கள் அவ்வாறு முன்னேறுவதற்கு யார் வாழ்வின் நோக்கம் பற்றி புரியவைத்தார்கள்! என்பதை ஆரய்ந்தால் நாம் புவியில் இருப்பதன் காரணம் நோக்கம் புரியும். நாம் எவ்வாறு செயல்பட்டு, முயற்சி செய்து வெற்றி கொள்ளவேண்டும் என்பதும் புரியும்.
ஒர் ஞானியிடம், தான் எத்தனை முயற்சிகள் செய்தாலும் வெற்றி கிடைப்பதில்லை என சொல்லி வருந்தினான் ஒருவன். அவன் வீட்டிற்கு ஒரு நாள் சென்று அவனை சிறிது நேரம் வெளியே இருக்கச் சொல்லி வீட்டினுள் சில பெருட்களை இடம் மற்றி வைத்தார் அந்த ஞானி. பின் அவனை வீட்டினுள் வரச் சொல்லி வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
நன்கு இருட்டவே அவனிடம் விளக்கு ஏற்றி வைக்கச் சொன்னார். வீட்டினுள் வழக்கமாக தான் வைத்த இடத்தில் பெருள்கள் இல்லாததால் தடவி தடவி கண்டு பிடித்து விளக்கை ஏற்றினான். அப்போது அந்த பெரியவர் நீ எப்போதும் வைக்குமிடத்தில் பெருள்கள் இல்லையெனினும் வீட்டில் கண்டிப்பாக இருக்கிறது என்ற உறுதியில் முயற்சி செய்து விளக்கை ஏற்றினாய். எதை நோக்கிப் போகிறோம் என்பதை உறுதியாக தீர்மானித்துக் கொண்டால், நீ எடுக்கும் சிறிய முயற்சி கூட, இருள் போன்ற தடைகளைமீறி பலன் கொடுக்கும். இதை புரிந்து செயல்படு. வெற்றி நிச்சயம் என்றார்.
எண்ணங்களில் உள்ள அறிவின் செயல்கள், செயலாக்க அறிவை, நடைமுறை சாத்தியத்திற்கு ஏற்ற உறுதியை அடையவேண்டும். அந்த திருதி எனப்படும் உறுதி இல்லை எனில் நீங்கள் கேட்டவைகளோ, நினைத்தவைகளே மனதில் பதியாமல் போய்விடும்.
மன உறுதிப்பாடு என்பதே விடாமுயற்சியாகும்! அதைதிருதி’ என மனுதர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு செயலை செய்து முடிக்க வேண்டுமென நினைத்து விட்டால் என்ன பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளித்து வெற்றியடையும்வரை முயன்று வெற்றிகாணும் செயலே திருதியாகும்.
ஓர் இளவரசி தன் அறிவுக் கூர்மையினால் அறிஞர்களையும் புலவர்களையும் வென்றுவிட, அவர்கள் இளவரசிக்கு பாடம் புகட்டும் வகையில் ‘நுனிக் கிளையிலிருந்து அடிமரத்தை வெட்டிய’ ஓர் சர்வமுட்டாளை, தங்களது திறமையால் மணம் முடித்தனர். உண்மை தெரிந்ததும் இளவரசி அவரை வெளியேற்றினாள்.
மனம் வெதும்பிய அவர் கிணற்றில் தற்கொலை செய்து கொள்ள சென்றபோது, தண்ணீர் இறைக்கும் போது மேலும் கீழும் சென்றதால் கயிற்றின் தாரைகள் சுவற்றில் பதிந்திருக்கக் கண்டு, நாமும் ஏன் தெடர்ந்து முயற்சி செய்து அறிஞனாகக் கூடாது என நினைத்தார். தொடர்ந்து முயற்சிகள் செய்தார். கல்விமான் ஆனார். காளிதேவியின் அருளும் கிடைத்தது. வாழ்வில் உலகம் புகழும் வெற்றி கண்டார் ‘கவிகாளிதாஸ்’ என்றழைக்கப்பட்டார்.
நாம் காலத்தை விரயம் செய்யக்கூடாது. மற்றவர்கள் எப்படி நடந்து கொள்கின்றார்கள் என ஒவ்வொன்றிற்கும் பார்த்து பார்த்து நம் செயல்பாடுகள் இருக்கக் கூடாது, நாமே முயற்சி செய்து பார்க்க வேண்டும். எந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்ததில்லை. வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றிகொண்டதே அவர்களை வாழ்வில் பெரிய மனிதனாக்கியதாகும். நாம் நம்மை வேறெருவர் தூக்கி முன்னேற உதவுவார் என நினைத்து நம் செயலோடு அடுத்தவர் செயல்திறனை ஒற்றுமைப் படுத்தக்கூடாது.
நாம் கேள்விப்படுவதையெல்லாம் ஒருகாதின் வழிவாங்கி மற்றொரு காதின்வழி விட்டு விடும் பழக்கத்தை மேற்கொள்ளும் மந்த புத்திக்காரராக இருக்கக்கூடாது. நாம் கேட்டவைகளைப் பற்றி தொடர்ந்து அளவில்லாமல் பேசும் மத்திம புத்திக்காரராகவும் இருக்கக்கூடாது. நாம் கண்டவை கேட்டவைகளை மனதில் இருத்தி தூய்மையுடன் ஜீரணித்து உங்களுக்கு பயன்கள் தருமாறு ஆக்கும் ஞானமுடன்கூடிய உத்தமபுத்திக்காரராக இருத்தல் வேண்டும்.
கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் வில் வித்தையை பயிற்றுவித்து வரும்போது, ஆசிரியர் துரோணர் பாண்டவர்களுக்கு நன்கு பயிற்றுவிக்கிறார் என துரியோதனன் சொன்னதைக்கேட்ட பீஷ்மர் நேரில் விசாரிக்க வந்தபோது, துரோணர் அர்சுனனை ஒரு வேலையாக அனுப்பிவிட்டு, நிலத்தில் ஓர் மந்திரத்தை எழுதி துரியோதனனை அழைத்து அந்த மந்திரத்தை படித்து அம்பு எய்தச் சொல்ல அந்த மரத்திலிருந்த இலைகளை எல்லாம் அது துளைத்தது. பின்னர் அனைவரையும் நீராட அழைத்துச் சென்றார்.
அனைவரும் நீரடி திரும்பவரும்போது அர்ஜுனனும் வந்து சேர்ந்தான். அந்த மரத்தடிக்கு வந்து பார்த்தபோது அந்த மரத்திலிருந்த இலைகளில் எல்லாம் இரண்டு துளைகள் தென்பட்டது. இது எப்படி என பீஷ்மர் கேட்டபோது, அர்ஜுனன் நான்தான் அம்பெய்தினேன் என்றான். துரோனர் அந்த மந்திரத்தை எழுதியபோது நீ இங்கு இல்லையே என்றார். குரு சொன்ன வேலையை செய்து திரும்பும்போது இந்த மரத்தில் இலைகளில் எல்லாம் துவாரம் இருக்க கண்டேன். அப்போது கீழே ஓர் மந்திரம் இருக்க கண்டு இரண்டுக்கும் ஓர் ஒற்றுமை இருக்க வேண்டும் எனக்கருதி மந்திரம் ஜபித்து அம்பெய்தினேன் என்றான்.
பீஷ்மர் அர்ஜுனனை மிகவும் பாராட்டியதை கண்ட துரியோதனன் கேலிசெய்ய, துரோனர் துரியோதனா மீண்டும் அம்பெய்தி இலைகளை துளையிடு என்றார். துரியோதனன் மந்திரம் எழுதிய இடத்திற்கு வந்தபோது அங்கு அது காணப்படவில்லை. யார் காலிலும் மிதிபடக்கூடாது என அர்ஜுனன் அதை அழித்துவிட்டன்.
அதைக் காணது துரியோதனன் மந்த புத்திகாரனாக மருங்கி நின்றான். துரோனர் அர்ஜுனனை அம்பெய்த அழைத்தபோது உத்தம புத்திகாரனான அவன் அந்த மந்திரத்தை நினைவு கொண்டு மூன்றாவது துளையை இலைகளில் பதிவு செய்தான்.
துரோணர் பயிர்ச்சியில் ஆர்வமும், முயற்சியில் நம்பிக்கையும் இருந்தால் வெற்றி பெறலாம் என்றார். பீஷ்மர் உண்மை உணர்ந்து அமைதிகாத்து திரும்பினார்.
வாழ்க்கையில் ஆனந்தமாக வாழத்தெரிந்து கொள்ளவேண்டும். வாழ எப்போதும் முயற்சி செய்யவேண்டும். அனுபவத்தால் எதுஎது ஆனந்தம் அளிக்கக்கூடியது, எது துயரம் அளிக்கக்கூடியது என கண்டு கொள்ளலாம். “முயற்சி திருவினையாக்கும்” முயற்சிக்காவிடில் ஏதும் நிகழாது.
முயற்சியின்றி வாழ்வது மனிதனின் மிகப்பெரிய குற்றமாகும். தானே நடக்கும், விதிப்படி நடக்கும் என்று சும்மா இருப்பது வீண். உனக்கு கிடைத்திருக்கும் வாழ்நாளை சுவைக்காமல், அனுபவிக்காமல் சோம்பேறியாய் இருந்து வாழ்நாளை வீணடிப்பதில் என்ன பயன்?
தீயின் சூடு, தண்ணிரின் குளிர்ச்சி, சூரியனின் வெம்மை கதிர்கள், சந்திரனின் நிலவொளி இவைகளை அறிந்து கொள்ள முடியாதவர்கள் வாழ்க்கையில் ஏனோதானோ என்று வாழ்பவர்கள். சூரியன் உதிக்கின்றது, வெய்யில் அடிக்கின்றது, மழை பெய்கின்றது, தீ சுடுகின்றது, இரவில் சந்திரன் தெரிகின்றது என ஒவ்வொன்றையும் சாதாரணமாக நினைப்பவர்கள், நீரின் குளிர்ச்சி, நிலவின் இதமான ஒளி இவைகளின் தன்மைகளை புரிந்து கொள்ளமுடியாதவர்கள், வாழ்க்கையில் ஏற்றதாழ்வுகளை அறியாதவர்களாகி விடுகின்றனர்.
ஒருவரை சில முயற்சிக்குப்பின் சந்திக்க செல்கின்றோம். அங்கே சந்திக்க முடியாவிடில் என்ன உபயோகம். நம் முயற்சிகள் எல்லாம் வீண். அதைப்போல உங்கள் உடம்பில் உள்ள உயிரின் ஆன்மாவை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதைத் தெரியாவிடில் “எழும்பு போர்த்திய கூடாகும்”.
உடலில் இருக்கும் ஆன்மாவை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் உங்களை உணர்ந்து கொள்ளல் அவசியமானது. தேடினேன் தெரியவில்லை எனக்கூறாதீர்கள், முயற்சி செய்து தேடுங்கள், “தேடினால் தெரியும்”.
பறவைகளைப் பார்த்த மனிதன் விமானம் படைத்து பறத்தலை கற்றுக்கொண்டான். பறவைகளின் மழை, வெயில் தாண்டிய இடைவிடாத பயணம், தடைகளினூடே செல்லும் லாவகம், சுறுசுறுப்பு, முயற்சி ஆகியனவற்றையையும் கற்றுக் கொள்ளவேண்டும்.
பறைவைகளில் கழுகு தன் வாழ்நாளில் எல்லா திறமைகளும் எப்போதும் தம்மிடம் இருக்க வேண்டும் என்பதற்காக தன் வயதின் பாதியில், வலிமை குன்றிய அலகை பாறையில் மோதி உடைத்துவிட்டு, மீண்டும் உறுதியாக புதிய அலகு வளரும் வரை காத்திருப்பதாக சொல்லப்படுகின்றது.
அதன்பிறகு அந்த புதிய வலிமை மிகுந்த அலகினால் தன் கால் நகங்கள் மற்றும் இறக்கையின் சிறகுகளை பிய்த்து விட்டு, புதியன வளர பொருத்திருந்து மீண்டும் புதிய பிறவிபோல் பலவருடங்கள் வலிமையுடன் வாழ்கிறது.
தானே தனது பிறவியை வலிமைப்படுத்தும் கழுகின் இந்த கடுமையான முயற்சி போற்றத்தக்கவையே. அந்த பிறவியில் அது எவ்வளவு கஷ்டங்களை தானே சந்தித்து வெற்றி அடைகிறது. எதிர்காலம் வலிமையுடையதாக இருக்க நாமும் அது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
முன்னேற வேண்டும் என்ற நினைவுடன் உழைப்பவனுக்கு, மிகவும் கடினமாக முயற்சிப்பவனுக்குத்தான் ஒய்வின் அவசியம் புரியும், முயற்சியின் உண்மையான அர்த்தம் புரியும். மீண்டும் உழைக்கும் ரகசியம் தெரியும். நம் வெற்றிக்கு முயற்சி, மேலும் முயற்சி, தவறுகள் தவிர்த்த முயற்சி என முயற்சிகளாகவே அமையவேண்டும். மேலும் பல முயற்சிகளுக்கு மற்றவர்களின் ஆதரவு வேண்டியதாயிருக்கின்றது. தெய்வ பலம் மிகுந்த ஆதரவானது சிறப்பு.
பாண்டவர்கள் வேட்டைக்கு சென்றபோது திரௌபதியை, ஜயத்ரதன் கடத்திசெல்ல, அறிந்த பாண்டவர்கள் அவனை வழிமறித்து படைகளை அழித்து அவளை மீட்டனர். ஜயத்ரதனை தலைமுடி அகற்றி அவமானப்படுத்தினான் பீமன். தவம் செய்து அர்ஜுனனைத்தவிர மற்றவர்களை கொல்ல வரம் பெற்ற ஜயத்ரதன், போரில் அபிமன்யு இறக்க காரணமானான். போரிலிருந்து வீடுதிரும்பிய அர்சுனன் செய்தி கேட்டு ஜயத்ரதனை அழிக்க சபதம் மேற்கொண்டான்.
இதை அறிந்த துரோணர் வியூகம் அமைக்கையில் அர்சுணன் பார்வைக்கு படாத நிலையில், ஜயத்ரதனை ஒளித்து வைக்க, கண்ணன் இருள் சூழ்ந்த நிலையை மாயமாக உருவாக்க, அந்தி சாய்ந்ததாக நினைத்து வெளிவந்த ஜயந்திரனை, கண்ணன் அடையாளம் காட்டி ஜயந்திரனின் தலையைக் கொய்து அர்சுணன் சபதத்தை நிறைவேற்றக் கூறினார். மேலும் அந்த தலை அவன் தந்தையின் மடியில் விழச்செய் என்றார். கன்னனின் வழி காட்டுதலின்படி அந்த தலை விருத்தக்ஷத்திரர் மடியில் திடிரென்று விழ, அவர் பதறி எழுந்ததால் அது மடியிலிருந்து மண்ணில் விழுந்தது. விருத்தக்ஷத்திரருக்கு மகன் பிறந்தபோது மகன் தலை அறுந்து பூமியில் விழும் அழிவுக்கு காரணமாணவனின் தலை சுக்கு நூறாகும் என்று சபித்தார். அதன்படி அறுந்து அவர்மடியில் விழுந்த தலையை அவர் கீழே போட்டதால் அவரின் தலையும் சுக்கு நூறாகியது.
அர்ச்சுணனின் சபதம், நிறைவேறவும், அதேசமயம் ஜயத்ரதனின் தந்தை சாபத்திலிருந்து அர்சுணனை காப்பற்றவும் கண்ணன் ஒருவரால் மட்டுமே முடிந்தது. அதுவே தெய்வ பலம். வெறும் சபதங்களினால் ஏற்படும் முயற்சிகளுடன் தெய்வபலமும் அர்சுனனுக்கு இருந்ததால் தான் அவனால் பலவெற்றிகளை அடையமுடிந்தது-குருஸ்ரீ பகோரா. 


புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879181
All
26879181
Your IP: 34.237.245.80
2024-03-19 08:17

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg

சந்தோஷப்பூக்கள்