குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
1-9.கர்ம-பயணம்!
Written by குருஸ்ரீ பகோராகர்ம-பயணம்!
எல்லாவகையிலும் உறுதியான ஓரு வீடு ஒர் காலத்திற்குப் பின் ஓர்நாள் இடிந்து விடும். கடந்த இரவு மீண்டும் திரும்புவதில்லை. வேறு இரவு வரும், ஆனால் அது கடந்த இரவாக இருக்காது, அமையாது. ஓடும் நதிகள் உற்பத்தியான இடத்தை சேர்வதேயில்லை. எங்கு புறப்பட்டாலும், எப்படிச் சென்றாலும் அது சேருமிடம் கடல்! நதியின்பயணம் வாழ்க்கை பயணத்திற்கு உதாரணமாகும்.
சூரியனின் வெப்பக் கதிர்கள் ஒருபுறம் பூமியின் ஜீவராசிகளின் இயக்கத்திற்கு உதவி புரிந்தாலும், இன்னொருபுறம் பூமியில் நீரை வற்றச் செய்வது போல, காலச்சக்கரம் புது ஆன்மாக்களை உருவாக்கினாலும், மனிதனின் ஆயுள் நாட்களை குறைத்துக் கொண்டிருக்கின்றது.
கடந்த காலத்தை பற்றியும், இறந்தவர்களைப் பற்றியும், இருப்பவர்கள் நினைத்தும், சிந்தித்தும் என்ன பயன்? எதிர் காலம் பற்றி நினை. உன் வாழ்வின் காலச்சக்கரம் பற்றி நினை. கடந்த இரவு, கடலில் சேர்ந்த நீர் இவை பற்றி சிந்தியாதே! எங்கு எதை நோக்கி பயணம் செய்கின்றாய்! அதன் பலனை அடைய முயற்சி செய். நீ முயற்சிக்காவிடினும் காலத்தின் முடிவு பதில் ஒன்றுதான்.
அதை அடைய உன் பயணம் சிறப்பாக இருக்க, பயணத்தில் உன் செயல் பாடுகளால் உன் கர்ம வினைகளின் கடினதன்மை குறைய என்ன வழி என்பதைப் பற்றி நினை. அந்த வழிகளைத் தெரிந்து கொண்டு அதன் படி நடக்க முயற்சி செய். முடிவு ஒன்றாகவே இருந்தாலும், தெரிந்திருந்தாலும் பயணம் சிரமமின்றி சிறப்பான பயணமாக வெற்றியடைய செயல்படு.!
சூரிய உதயம் கண்டால் இன்னொருநாள் குதூகலமாக இருக்கலாம் என்றும், சூரிய அஸ்தமனத்தில் இன்று ஒருநாள் போய்விட்டது, நாளைப் பார்க்கலாம் என்றும் கணக்குப் போட்டு நாட்களைத் தள்ளாதே! இருக்கும் நாட்கள் உனக்குடையது. காலம் பொன் போன்றது. உன் எதிர்கால செயல்களுக்கு உபயோகமாக மாற்ற நினைத்து செயல்படு. நீ இழந்த நாட்களும் நேரமும் திரும்பக் கிடைக்காது. இழந்தது இழந்ததுதான்.
ஒருவனின் கர்மம் முடிந்தபின் அவனைப்பற்றி நினைத்து வருத்தப்படாமல், நிகழ்காலத்தில் உன் கர்மவினையின் பாதிப்புகள் உன்னை அதிகமாக தாக்காமலிருக்க உன் எண்ணங்களைத் தீட்டு. அதற்காக செயல்படு. நீ இப்போது நின்று கொண்டிருக்கும் இடத்தை, சூழ்நிலைகளைத் தாண்டி உன் முன்னோர்கள், பாட்டனார், முப்பாட்டனார் என அனைவரும் சென்றவர்கள்தாம்.
28வது சதுர்யுக சுழற்சியில் கலியுகம்வரை அவர்கள் காட்டிய வழியில் எத்தனையோ உனக்கு பிடித்தமானது, உன் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாய் உள்ளது, அதைத் தேடு! கண்டுபிடி! வழிநட! அது உனக்கு நல்லது. உன் கர்ம வினைகளின் செயல் வேகத்தை தடுத்து ஓரளவாவது உனக்கு நன்மை கிடைக்க வழிவகுக்கும். வல்லவனாக ஆவாய்! சுதந்திர எண்ணங்களும், தேடுதல்களும் இல்லா மனிதனை அவன் வினைப்பயன் வழிநடத்தி அலைக்கழிக்கும்!
அதிலிருந்து தப்பிக்க உனக்கு ஓர் வழித்துணை, முன்னுதாரணம், வெளிச்சம், ஒளிவட்டம் வேண்டும். அதைக் கண்டுபிடி! தேடு! தேடிக்கொண்டேயிரு அதைக் கண்டுபிடிக்கும் வரை.. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், வெற்றிபெறுவர். இது என் செயல். இது என் கர்மம். எவ்வளவு துயரங்கள் நேரிடினும் பின்வாங்கமாட்டேன். வெற்றியை அடையப்போகிறேனா! தோல்வி காணப்போகிறேனா! எனக்குத் தெரியாது. எதைப் பற்றியும் கவலையில்லை. இதுதான் சரி, இதுதான் என் கர்மம், இது என் கடமை, இது என் செயல்பாடு, என்று நியதிகள் வகுத்துக் கொள்ளுங்கள்.
அந்தப் பாதையில், சீரிய வழி என நீங்கள் நினைத்த வழியில் செல்லுங்கள். செயல் உங்களுடையது. முடிவை கர்மத்திடம் விட்டுவிடுங்கள். இது தான் கீதையில் சொல்லப் படுகின்றது. செயலை செய், பலனை கர்மத்திடம் விட்டுவிடு. எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு. செய்வது என தீர்மானித்து விட்டால், அதை செய்துவிடு. யாருக்கு, எதற்கு, ஏன் என்றெல்லாம் சிந்திக்காதே! அதேசமயம் எப்படிப் பட்டவனுக்கு செய்கிறாய் என்று கவனிக்கவும். அதாவது உன் உதவி உண்மையாக வேண்டுபவனுக்கு, தேவைப் படுகிறவனுக்கு செய்யப்பட வேண்டும்.
அவன் நன்றியுள்ளவனா? இல்லையா! என்பது பற்றி எல்லாம் நீ கவலைபட வேண்டாம். உன் கர்மத்தின் பலனால் ஒருவனுக்கு நல்லது செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால் அதை யாருக்கு வேண்டுமானாலும் செய். அவன் நல்லவனா! கெட்டவனா! என யோசனை செய்யாதே!
நீ செய்யும் நன்மை ஓர் நிலையில் ஒரு காலத்தில் உனக்கு மிகுந்த பலனோடு உன்னை வந்தடையும். அல்லது அது உன் சந்ததிக்கு பயனாகும். அதேபோல் அவர்கள் செய்யும் தீமைகள் அவர்களுக்கு கர்மபலனாக சேர்ந்துவிடும். எப்போது எப்படி என்பதுதான் உனக்குப் புரியாது. தெரியாது. தெரியவேண்டிய அவசியமும் இல்லை.
அடுத்தவர் துன்பப்பட்டு, துயரப்படுவதால் உன் கர்மம் தீர்ந்து விடுமா? இல்லை குறைந்து விடுமா? உன் கர்மபலனால் நீ செய்த நன்மைகளின் கர்மம் உன்னை வந்து சேர்ந்தால் அதனால் ஏற்படும் நன்மைகள் போதும்.
உன் கர்ம யோகங்கள் உன்னோடு முடிந்தால் பரவாயில்லை. உன்னால் அனுபவிக்க முடியாத கர்ம பலன்கள் உன் சந்ததிகளை அடையும். குறைந்த பட்சமாக ஏழு தலைமுறை சந்ததிகள் இந்த சாதக பாதக பலன்களை அவரவர் கர்ம வினைளோடு சேர்ந்து அனுபவிப்பர். இதை உணர்ந்து உன் கர்மபலனின் செயல்பாடுகளை நீ வகுத்துக்கொள். உன் பாதக கர்மபலன்கள் உன் சந்ததிக்கு சென்று சேராமல் பார்த்து செயல்படு.
செய்ய முடிந்த ஒன்றை செய்ய விரும்பாதவன் சமூகத்துரோகி. செய்ய விரும்பியும் செய்ய முடியாதவர்கள் பரிதாபத்திற்கு உறியவர்கள். இப்படி முடியாதவனாகவும், விரும்பாதவனாகவும் இருந்து உனது கர்மத்தை மேலும் மேலும் அதிகப்படுத்திக் கொள்ளாதே! இவ்வாறு விரும்பாததாலும், முடியாததாலும் நடக்கும் நிகழ்வுகளின் கர்மங்கள் பலருக்கு பலவகையான பலன்களை ஏற்படுத்தும்.
எனவேதான் முன்னோர்கள் நீ எவ்வளவு பெரிய செயலை செய்ய நினைத்தேன் முடியவில்லை என வருத்தப்பட வேண்டாம். எவ்வளவு செய்ய முடியுமோ, அவ்வளவு செய். அதுவே உன் கர்மம் என்றனர். வள்ளுவர் “அறஞ்செய விரும்பு” என்றுதான் கூறியுள்ளார். விருப்பத்துடன் ஓர் செயலைச் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த கர்மத்தின் நல்ல பலன்களை நீ அடைய முடியும்.
விரும்புவது என்றால் நல்ல செயலை என்று அர்த்தம் கொள்ள வேண்டும். அடைவது என்றால் தான் அதில் ஆசை, மோகம் எல்லாம் நிரம்பிய கர்மமாகிவிடும். ஆகவே கர்மம் செய்ய விரும்பு! அதை அடைய நினைக்காதே! செயலின் விளைவு நன்மை மட்டும்தான் பயக்கும் என எதிர்பார்த்து செயல் படாதே! இல்லாத ஒன்றை செய்யவில்லை, முடியவில்லை என்றால் பரவாயில்லை. உங்கள் பயணத்தில் உங்களால் முடியக் கூடிய ஒன்றை செய்யாமல் விட்டு விடாதீர்கள். அது துயரமான மிகமிக துயரமான ஒன்று!
அடுக்கு மாடி வீட்டின் கீழ்த் தளத்தில் நீச்சல் குளம். மொட்டை மாடியிலிருந்து அந்த பகுதியின் வனப்பை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, கீழே இருந்து ஒருவர், அப்புசாமி உன் மகன் நீச்சல் குளத்தில் விழுந்து விட்டான் என்ற அலறும் சப்தம் கேட்ட உடன் ஏதும் சிந்தியாமல் கீழே குளத்தை நோக்கி குதித்தான்.
சில மாடிகள் கடந்தபின் கீழே விழுபவன், திடிரென்று சிந்தனை வயப்பட்டான். நமக்குத்தான் மகனே கிடையாதே, நாம் ஏன் கீழே குதித்தோம் என நினைத்தவனுக்கு, உதயமானது திருமணமே தனக்கு ஆகவில்லை என்ற நினைவு. அதன்பின் சப்தம் போட்டவன் அப்புசாமி என்றுதானே சப்தம் போட்டான். நம் பெயர் அப்புசாமி இல்லையே, பின் ஏன் நான் குதித்தேன் என நினைக்கும்போது திடிரென்று கண்விழித்துப் பார்த்தான்.
அது கனவானதால் அவன் நீச்சல் குளத்தில் இல்லை. தன் படுக்கையில் இருப்பதை உணர்ந்தான். இன்னும் சிறிது நேரம் கழித்து விழித்திருந்தால் குளத்தில் விழுந்திருப்பான். அதற்கு முன் அவனுக்கு விழிப்பு ஏற்பட்டது. தான் அப்புசாமி இல்லை என்பதும் தான் யார் என்பதும் புரிந்தது.
விடியல் காலையில் பலருக்கு விழிப்பு வருகின்றது. விழிப்பு இன்றி பலர் வாழ்வு பயணங்களை முடித்துக் கொள்கின்றனர். உலகில் விடியும் நேரமே விழிப்பு மிக்கதாகும். உண்மையைப் பொறுத்தவரையில் நீங்கள் விழித்துக் கொண்டு நீங்கள் யார் என புரிந்து கொள்ளும் நேரமே விடியல்.
சூரியன் பிரகாசித்தால் அது பகல். சந்திரன் குளிர்ந்தால் அது இரவு. சூரியன் கோலோச்சும் பகல் காலத்தில் சந்திரன் அமைதியாய் இருந்தும், சந்திரன் கோலோச்சும் காலத்தில் சூரியன் அமைதி காத்தும், ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுத்தும், உலகின் இயக்கத்திற்கு இரண்டும் தமது கடமைகளைச் சரிவர செய்கின்றது.
வாழ்க்கைப் பயணம் இதைப்போன்றதே. ஆண்கள் சூரியனாக ஒளிர்ந்து, பெண்கள் சந்திரன் போல குளிர்ந்து மனம் ஒன்றி பயணித்தால் இரவு, பகல் கழிவது போன்று வாழ்க்கையின் நாட்கள் இனிதாக கழியும். ஒரு கண் பார்வைவிட இருகண்களால் நோக்கின் அகன்ற பார்வை படலம் தோன்றும். அது இயற்கையின் நிறைந்த பார்வை. எல்லாம் அங்கு தெரியும், புரியும். கர்ம காரணமாய் இனைந்த ஆணும், பெண்ணும் இரு கண்களாக செயல்பட்டு ஒருவர்மீது ஒருவர் அன்பின் மேலீட்டால் ஆத்ம நண்பர்களாய் செயல் பட்டு வாழ்வில் வெற்றியுடன் முன்மாதிரியாய் திகழமுடியும்.
ஜீவாதாராம்: உலகில் படைக்கப்படும் உணவுப் பொருட்கள் பன்னோக்கில் படைக்கப்படுகின்றது. நீ விரும்பினால் அதை சுவைத்து உண்ணலாம். யாரும் விரும்பாவிடில்கூட அந்த பொருள் பல ஜீவராசிகளின் பசியைத் தீர்க்கும் உணவாகிறது.
உற்பத்தியாகி காய்க்கும்போது ஓர் சுவை, கனியாயிருக்கும் போது ஓர் சுவை. சுவை கண்டவர் சுவைக்காவிட்டாலும் காலத்தின் கனிவால் கனி கனிந்து பருவம் கடந்து அழுகியநிலை ஏற்பட்டாலும் அதுவும் பல உயிர்களுக்கு உணவாகி தான் தேன்றிய காரண கர்மத்தை பூர்த்தி செய்கின்றது. ஒரு உயிருக்கு அழுகிய ஒன்று மற்றொன்றுக்கு ஜீவாதாரம். இதுவும் இயற்கையின் நியதி.
இயற்கையின் சத்தையும் சாரத்தையும் நாம் இருக்கும்வரை உறிஞ்சியுள்ளோம். அதனால் நம் ஆன்மா உடலைவிட்டு அகன்றபின் அந்த உடல் இயற்கைக்கு இறையாகி கரைகின்ற நியதியும் சரியே.
கடமை: மனித ஆன்மாவே! உலகம் ஓர் சக்கரம். விருப்பு வெறுப்பு இல்லாதது. ஆனால் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. சமம் என்ற நிலையை எல்லோருக்கும் எப்போதும் வழங்கிக் கொண்டிருப்பது. வெய்யிலின் வெப்பமும், நிலவின் குளிர்ச்சியும் மழையின் ஈரத்தையும், தென்றலையும் எல்லோருக்கும் பொதுவாக வழங்க சுற்றிச் சுற்றி சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அது அதன் கடமை.
என்ன நடந்தாலும், இறந்தாலும், பிறந்தாலும், அழிந்தாலும் ஒரு மாற்றமும் இன்றி இயங்கிக் கொண்டிருக்கின்றது. இவைகளை கண்ட மனித மனம்தான் பேதலித்து தவிக்கின்றது. இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும் ஒன்றே! மனம்தான் ஏற்றதாழ்வுகளை சந்தித்து சஞ்சலம், சந்தோஷம் என மாறுபாட்டை காண்கின்றது.
வெள்ளநீரில் எப்படி எல்லாம் அடித்து செல்லப் படுகின்றதோ, அக்னியில் எரிந்து சாம்பலாகின்றதோ அதுபோல எல்லாமும் கால ஓட்டத்தில் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவையே. இடையில் அவரவர் கர்மவினைக்கேட்ப நல்லது கெட்டது நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
நமது பந்தம்- நமது குழந்தை, நம் செல்வம், நம் புகழ் இன்னபிற எல்லாம் இருந்து ஓர் நாள் என்ன ஆயிற்று! என்ன ஆகும்! என என்னிப்பார் மனமே! எதுவும் நிலையில்லாதது என்பது புரியும். இயற்கையின் சுழற்சியில் வேறு இடம் தேடும், நாடும். நம் புலன்களுக்கு எட்டாத நிலையில் இருக்கும், இதில் நாம் ஒன்றின் மீது பாசம், பந்தம் வைத்து, நமது நினைவுகளை அதிகமாக அதனுடன் சேர்த்து இருத்திக் கொண்டால் நமது உடல், மனம் அதனுடன் ஒன்றிவிடுகின்றது.
ஏதாவது ஓர் நிலையில் பந்தபாசம் குறையும்போதும், மாறுபடும்போதும் நம் மனம் நாம் செலுத்திய பந்தபாசத்தின் விளைவாக மாறுதலை ஏற்றுக்கொள்ள மறுத்து மயங்குகின்றது. அதன் காரணமாக தன்னையே வருத்திக் கொள்கின்றது. மாறுதல்களை புரிந்து கொள்ளல் வேண்டும்.
ஒருவர் கைபிடித்து நடந்த நீ, ஓர்நாள் தனியாய் நடக்கின்றாய்! தனியாய் நடக்கும் நீ வேறொருவர் கைபிடித்து அழைத்து செல்கின்றாய்! ஆனல் மீண்டும் உன்னை ஒருவர் கைத்தாங்கலாக அழைத்து செல்லும் நிலை உருவாகின்றது. இது காலத்தின் சூழ்ச்சி! கட்டாய மற்றங்கள்! இது இயற்கையின் நியதி! புரிந்து கொள்வீர்! அந்தந்த காலத்திற்கேற்ப உங்கள் கடமைதனை செய்யுங்கள்! பலனை எதிர்பாராதீர்கள்!
செடிகள், மரங்கள் நடுகின்றோம். இதில் எத்தனை நட்டவர்களுக்கு பயன் தருகின்றது. வாரிசுகளுக்கு, உறவினர்களுக்கு என்ன பயன் தருகின்றது. நாம் நட்டு வளர்த்த மரங்களைவிட தாமாக வளர்ந்த மரங்கள், வனங்கள் எண்ணிக்கையும் வனப்பும் அதிகம். இயற்கையே அமுதசுரபி. அள்ள அள்ள அருள்கின்றது. தோண்டதோண்ட துலங்குகின்றது. வாரவார வழங்குகின்றது. ஓர் சூழலில் முற்றிலும் சம்பந்தப்படாத வேறு நபர்கள் அதை ருசித்து பலன்களை அனுபவிக்கின்றனர். இது நியதி. சிந்தனை கொள்ளுங்கள்.
பறவைகளைப் பார். அவை தமக்கு வேண்டும் என விதைப்பதில்லை, அறுப்பதுமில்லை, சேர்த்துவைப்பதுமில்லை. நீ எதுவும் கொண்டுவரவில்லை. கொண்டு செல்வதும் இல்லை. இடைப்பட்ட காலத்தில் நீ செயல்படுவது உன் கர்மத்தின் பலன்படி. உனக்கோ, உன்னைச் சார்ந்தவர்களுக்கோ பயன் படலாம். வேறு ஒருவருக்கும் பயன் படலாம். இது உன் முடிவில் செயலில் இல்லை. உனக்கு விதிக்கப்பட்டிருக்கும் நியதியின் முடிவில் இருக்கின்றது.
ஆகவே இந்த நிகழ்காலத்தில் நீங்கள் சந்தோஷமாக இருக்க, உங்கள் செயல்களால், உங்கள் உறவினர், சொந்தங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள் மட்டுமின்றி, இது எனது கடமை, இதை நான் செய்தாக வேண்டும், பலன் யாருக்கு என்பது என் கவலையில்லை, ஆகவே இதை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுங்கள்.
உங்கள் கர்மவினைகள் உங்கள் செயல்பாட்டை நிர்ணயத்தாலும் உங்கள் அன்பும், நல்ல எண்ணங்களுடைய செயல்களும், உங்கள் வினைகளின் போக்கை, தீவிரத்தை சிறிதளவாவது குறைத்து மாற்றி செயல் படவைக்கும் தன்மை உடையவை. அது ஓர் சக்தியலை.
உங்களுக்குத் தோன்றும் நல்ல செயல் எண்ணங்களை பிரதியுபகாரம் கருதாமல், யாருக்கு என எண்ணாமல், கடமை உணர்வுடன் செயல்படுத்துங்கள். இவ்வுலகில் உள்ள எல்லாம், உனக்குத் தரப்பட்ட எல்லாம் உன்னுடையது அல்ல! வாழ்க்கைப் பயணத்தில் நீ சந்தோஷத்தைக்காண உன் உபயோகத்திற்கு கொடுக்கப்பட்ட ஒன்று. வாழ்வின் முடிவில் அதை உன்னுடன் சேர்த்து எடுத்து செல்ல முடியாது.
இத்தனை நாட்கள் பயன் படுத்திருந்தாலும், இனைபிரியாமல் இருந்திருந்தாலும் உயிர் உள்ள, உயிர் இல்லா எல்லாவற்றையும் விட்டுத்தான் சென்றாக வேண்டும். உன் பயணத்தின் இடையில் கிடைத்த அதை நீ முழுமையாக அன்பு காட்டி ஆனந்தப்பட்டு, சந்தோஷிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று.
ஆனும், பெண்ணும் இந்த நியதிக்கு உட்பட்டவர்கள். உலகில் மரம், செடி, கொடி, ஊர்வன, பறப்பன, விலங்குகள் என பல உயிரினங்கள் இருந்தாலும் அவற்றிலும் எல்லாவற்றையும் நீ பயன் படுத்த முடியாது. விலக்கிவைக்க வேண்டியதும் உண்டு. நாற்றமும், நறுமணமும், கலந்தது. விஷத்தன்மை கொண்டதும் உண்டு. படைப்பில் எல்லாம் உண்டு என்பதை நீ புரிந்துணர்தல் வேண்டும்.
மலர்கள் மலர்ந்து மணம் வீசும்போது ஆனந்திக்கும் நாம், துர்நாற்றத்தை சுவாசித்து முகம் சுழித்தல் இயல்பு. அதைப்போல் வாழ்வில் நல்லவைகளைப் பற்றிக்கொண்டு முட்கள், விஷம் போன்றவற்றை விலக்கிப் பழகிக் கொள்ளவேண்டும்.
உலகில் எல்லாம் நீக்கமற நிறைந்திருந்தாலும் அன்பே ஜீவன். ஜீவதாரம்! என்பதை புரிந்து கொள். மனிதன் தவிர்த்த புண்ணாக்கு, புல், கழுநீர் ஆகியன உண்டு பசு அவர்கள் உபயோகத்திற்கு பால் தருவதை போற்றுகிறோம். மாதா என வணங்குகின்றோம். யார் என்ன செய்தாலும், எந்த குற்றங்கள் புரிந்தாலும் சூழ்நிலையின் கைதி அவர்கள் என்ற பரிவுடன், பாசத்துடன் அனுகி அன்பு செலுத்த கற்றுக் கொள்ளுங்கள்.
முடிவுகளை நீங்கள் மன எண்ணங்களில் நிறுத்தி கைகளில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலைப்பட்டு அமைதியை அடையட்டும். வாழ்க்கையை சுவைத்து மகிழுங்கள். வாழ்க்கைப் பயணத்தில் நம்மீது குற்றங்கள், நம்மை அவமானப்படுத்த கடுஞ்சொற்கள் சேரலாம். அவை உங்கள்மேல் விழுந்து, உங்களைத் தாக்கி, உங்கள் மனத்தில் இருக்கும் வரை ஒர் சுமை.
அது உங்கள் பயணத்திற்கு இடையூறு விளைவிக்கும். அந்த சுமையை மனதில் இருந்து நீக்கி உங்கள் உடம்பில் அதன் பாதிப்புக்களை நீக்க கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக் கொள்ளும் இந்த செயல், உங்கள் மேல் வீசப்படும் குற்றக்கனைகள், கடுஞ்சொற்கள் உங்களை அவமானப்படுத்தாமல், ஏற்றப்படியாய் உந்தி, ஊக்கமளித்து உயர்வுக்கு வித்திடும்.
நாம் மனிதர்கள். அன்பை பொழிய கடமைப் பட்டவர்கள். கழுநீர் ஊற்றி வளர்த்தாலும் செடியின் பூக்கள் நிறம் மாறுவதில்லை. நாம் எப்படி வளர்ந்திருந்தாலும் எந்த சூழலிலும் அன்பின் நிலையிலிருந்து மாறாமல் இருக்க நாமே பழகிக் கொள்ளவேண்டும்.
எவ்வளவு கொடியவனாக இருந்தேன், என்ன என்ன பாதகங்கள் புரிந்தேன் என எவரும் வருத்தப்பட வேண்டியது இல்லை. உன் செயல்களை உணர்ந்து நீ நிலைமாறினால், அன்பின் வயப்பட்டால், உன்னை உலகம் அங்கீகரிக்கும். உலகம் அன்பு சங்கிலி கொண்டு இயங்குகின்றது. புராணங்களில் அசுரர்களையும், கொடியவர்களையும் (மகிஷன்-, சூரபத்மன்-) அழித்த அவதாரங்கள், பின் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி ஏற்றுக் கொண்டதாகத்தான் எழுதப்பட்டுள்ளது.
தன் கடமைகளை சரிவர செய்யாமல், நல்லபொழுதை எல்லாம் துங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன், தானும் கெட்டார் எனச் சொல்வர். தூக்கம் ஓர் லயம், சுகம், போகமானது. ஒவ்வொருவருக்கும் நல்ல தூக்கம் வேண்டும்.
கடமைகளை மறந்த தூக்கம் சேம்பேறிகளுக்குரியது. விழிப்புணர்வின் வழி வளர்ச்சி. அதன் மூலம் வளர்ந்து காக்க வேண்டியவைகளைக் காத்து, சேர்க்க வேண்டியவைகளைச் சேர்த்து பின் போகத்தில் இருக்கலாம். அதுவும் அளவுடன் இருத்தல் நலம். கடமைகள் தவறிய போகம் ஆனந்தத்தை தராது-குருஸ்ரீ பகோரா.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.