ஊர்:நொடித்தான்மலை#தி.த-272+அ+மு.திருக்கயிலாயம்.கயிலாயம்,மேரு,ஹிமாசலா, ஹிமோத்கிரி,ஹிமபர்வத். திபத்தின்மேற்குபகுதி
இறைவன்:சிவன்பனிமூடிய லிங்கமாய்
இறைவி:பார்வதி
பிறசன்னதிகள்:ரக்தாதேவி,ரேசிகாதேவி,அர்த்தநாரீ-பச்சைநிறம்-5முகம்-8கரங்கள்.பைரவர்-பைரவர்.சுப்ரமண்யர்
தீர்-மானசரோவர்,உமா
தி.நே-ஜுன்-அக்டோபர்
#-02-05/07-2009-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தங்கும்விடுதி-காட்மாண்ட் ஸ்தாபனங்கள் உதவியுடன் நியாலம், சாகா, ப்ரயாங், மானசரோவர், தர்சன், தேரபுக், ஜிஹுல்புக் ஆகிய இடங்கள்
பரிக்ரமா- கயிலாயமலை வலம்- 52கி.மீ. கடல் மட்டம் -22028'. பனி மூடிய மலை 51 கி.மீ சுற்றளவு கொண்டது-பரிக்கிரமா. தத்தாத்ரேயர், வியாசர், பீமன் ஆகியோர் பரிக்கிரமா செய்துள்ளனர். 5பக்கங்கள்- இயற்கையான கோயிலமைப்பில் பனி மூடிய லிங்கமாய் காட்சி. கிழக்கு முகம்- தத்புருஷம்- மின்னொளி வீசும் படிகாமாகவும், தெற்கு முகம்- அகோரம்- கடல் வண்ணம் கொண்ட நீலக் கல்லாகவும், மேற்கு முகம்- சத்யோஜாதம்- செந்நிறம் கொண்ட மாணிக்கமாகவும், வடக்கு முகம்- வாமதேவம்- பளபளக்கும் தங்கமாகவும், வானை நோக்கிய- ஈசானம்- கண்ணை உருத்தும் வெள்ளியாகவும் மிளிர்கின்றன். 4புறமும் உலக உயிர்களுக்கு 4வேதங்களையும் அறம், பொருள், இன்பம், வீடு என 4புருஷார்த்தங்களையும் உணர்த்துகிறது. சக்திபீடங்கள்- 51/43வது- தேவியின் கொழுப்பு விழுந்த இடம். தாட்சாயிணியின் கொழுப்பு முழுவதும் மலைச்சிகரத்தில் வீழ்ந்து, அது நான்கு புறமும் வழிந்தோடி மலையை கவ்வினாற் போல் மேற்பரப்பு மூடப்பட்டு அதுவே உறைபணியாய் மாறியது. அம்மை அப்பனை தழுவி அர்தநாரீஸ்வர மேனியாக காட்சி. சலசலக்கும் ஓடைகள், சிலு சிலுக்கும் காற்று, பளபளக்கும் பனிதொப்பியணிந்த சிகரங்கள், கண்களை கவரும் நீலவாணம், அதைமுட்டும் சிகரங்கள், விதவிதமான அமைப்பில் மலைகள், பரிக்கிராம வாசிகளுக்கு உற்சாகத்தை ஊட்டுபவன. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்-திருப்புகழ்(79)- பெற்ற தலம்.