ஊர்:கொக்கட்டிச்சோலை
இறைவன்: தாந்தோன்றீஈஸ்வரர்(சு)
இறைவி: பார்வதி
பிறசன்னதிகள்: விநாயகர், கந்தசாமிஒருமுகம்-2கரங்கள், வள்ளி,தெய்வானையுடன்-
5நிலைராஜகோபுரம்
3காலவழிபாடு
தீர்: குளம் தேர்விழா-2தேர்திருவிழா.
தி.நே-
திருப்படைக்கோவில்கள்- இப்பிரதேசத்து மக்கள் யாவருக்கும் பொதுவான விசேஷமான கோவில். கொக்கட்டி மரங்கள் நிறைந்த வனம். அங்கு திகடன் என்ற வேடன் தேன்கூடு கண்டு மரம் வெட்ட வெட்டிய இடத்தில் இரத்தம் நிறத்தில் பால் வர மற்ற மரங்களை ஒப்பிட்டுப் பார்க்க வித்தியாசமான இந்த மரத்தடியில் வெளிப்பட்ட லிங்கம். பந்தல் அமைத்து வழிபாடு. கோவிலை இடிக்க வந்த போர்த்துக்கீசியர் கேலியாக நந்தியை புல் தின்ன கேட்டு அர்ச்சகர் வேண்ட புல் தின்று நீர்குடித்து கோவிலை இடிக்க வந்த போர்த்துக்கீசியரை விரட்டியத் தலம். கலிங்க தேசத்து நாகார்ச்சுனபுரத்தின் வீரசைவர்களே சங்கமர்கள் என்ற பெயரில் பூஜை செய்கின்றனர். ஆவணி- அமாவாசை-சந்திரமுதற்பிறை-மகோற்சவம் ஆரம்பம்-தொடர் பௌர்ணமி அடுத்த ஞாயிறு திருவிழா, மறுநாள் தேரோட்டம். தாந்தோன்றீஸ்வரரும் பார்வதியும் பெரிய தேரில், விநாயகரும் முருகனும் சிறிய தேரில். அடுத்த நாள் வேட்டைத்திருவிழா, குடுக்கை(விழாவில் பணி புரிந்தவரை பாராட்டுதல்)கூறுதல். மட்டக்கிளப்பு கிராமிய தலைவர்கள்- வண்ணக்கர்மார் கோவில்களை பரிபாலிப்பவர்கள்.