ஊர்: நைனாதீவு
மூலவர்: நாகபூஷணி அம்மன்
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: விநாயகர், முருகன்-வள்ளி தெய்வானை, நால்வர், நாயன்மார்கள், வன்னிமரத்தடியில் ராகு,கேது, ஐயனார் 108'உயர ராஜகோபுரம்-வடக்கு தெற்கு என 2கோபுரவாயிலகள்
மரம்: வன்னி
தீர்: குளம். அமுதகங்கதரணி தேரோட்டம்-3தேர்கள்
தி.நே-0700-1530,1630-1830
தொலைபேசி- +94213213024
நைனா தீவில் இருந்த அம்பிகையை நாகம் ஒன்று தினமும் வழிபட்டு வந்தது. ஒருநாள் அதன் வழியில் கருடன் ஒன்று குறுக்கிட்டது. கருடனைக் கண்டு அஞ்சிய நாகம் கடற்கரையில் இருந்த பாறையின் அடியில் தங்கியது. நாகம் வெளிவரும் என கருடன் எதிரில் இருந்த பாறையில் காத்திருந்தது. அப்போது அவ்வழி சென்ற ஓடத்தில் இருந்த வணிகன் கருடனைத் துறத்த கருடன் உன் செல்வம் அனைத்தையும் நாகம்மனுக்கு கொடுப்பதாக இருந்தால் நான் இங்குருந்து போகின்றேன் என்றது. வணிகணும் சம்மதிக்க கருடன் அகன்றது. நாகம் நன்றி செல்லி தீவிற்குள் சென்று பூஜை செய்தது. அன்றிரவு வணிகன் வீட்டில் பேரொளியுடன் வீடு பூராவும் ரத்தினங்கள் நிறைந்தன. அடுத்தநாள் காலை வணிகன் தன் மனைவியிஉடன் நாகம்மனை வழிபட்டு பின்னர் கோவில் கட்டினான். நாகம் வழிபட்டதால் நாகபூஷணி.பின்னர் போர்த்துகீசியர்களின் காலத்தில் கோவில் தரைமட்டமாக்கப்பட்டது. மக்கள் மூல விக்ரகங்களை ஒளித்துவைத்தனர். ஆலமர பொந்தில் அம்மனை வைத்து வழிபட்டனர்.டச்சுகாரகள் ஆட்சிக்குப்பின் மீண்டும் ஆலயம் எழுப்பபட்டது. கலைநயத்துடன் மணிமண்டபம். பிரமாண்ட அதிகாரநந்தி. ஆனி மாதத்தில் 16நாள் பிரமோற்சவம். கருடக்கல், நாகக்கல்(பாம்பு சுற்றிய கல்)