ஊர்: முன்னேஸ்வரம்,மானாவரி
மூலவர்:
இறைவன்: முன்னேஸ்வரர்
இறைவி: வடிவாம்பிகை
உ:
பிறசன்னதிகள்: விநாயகர், சோமாஸ்கந்தர், பைரவர், மகாவிஷ்ணு, ஆஞ்சநேயர், நடராஜர், ஐயனார், காளி
மரம்: அரசு, வில்வம்.
தீர்: மாயவனாறு. 6காலபூஜைகள்
தி.நே-0700-1230, 1700-1930
இராவண சம்ஹாரம் முடிந்தபின் சிதா, லட்சுமணன், விபீஷணன் ஆகியோருடன் புஷ்பக விமானத்தில் அயோத்தி நோக்கி சென்ற இராமர். இலங்கையில் முன்னேஸ்வரத்திற்குமேல் பறக்கும் போது பிரம்மஹத்தி தன்னை விட்டு அகன்றதைக் கண்ட ஆச்சரியமடைந்து கீழே இறங்கி சிவ தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு அருள் பெற்றார். பின் சிவ ஆலோசனைப்படி முன்னேஸ்வரம், கேதீஸ்வரம், கோனேஸ்வரம் ஆகிய தலங்களில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டுப் பின் அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றார். குளகோட்டு இராஜா திருப்பணி. பராக்கிரம்பாகு தன் நோய் தீர வழிபட்டு நித்திய ஆராதனைக்கு ஏற்பாடு செய்தார். கீர்த்திசிங்கராஜா சோழநாட்டு சிற்பிகளைக் கொண்டு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்வித்தார். முன்னேஸ்வரர் முன்னால் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை. மூலவர் மணலால்- சொர்ணலிங்கம். சிவராத்திரி, நவராத்திரி திருவிழாக்கள். ஆடிப்பூரம்-108 சங்காபிஷேகம்