ஊர்: ஜாராசங்கம்
மூலவர்:
இறைவன்: கேதகீசங்கமேஸ்வரர்
இறைவி: பார்வதி நின்ற கோலம்.
பிறசன்னதிகள்:
3நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்: அமிர்த குண்டம்- நாராயண, தர்ம, ரிஷி, வருண, சோம, ருத்ர, இந்திர, ததா தீர்த்தங்கள் சங்கமம்.
தி.நே-0700-1200,17-2000
சூர்ய வம்சத்தைச் சேர்ந்த மன்னன் குபேந்திரன் சரும் நோயால் அவதிபட்டான். வேட்டையாடச் சென்ற இடத்தில் தாழம்பூ நிறைந்த இந்த வனத்தில் ஒய்வெடுத்தான். பின்னர் நீரோடையில் நீராடி அந்த நீரை அருந்தி ஊர் திரும்பினான். மறுநாள் தனது சருமநோய் முற்றிலும் குணமானது கண்டான். அன்று இரவு அவன் கனவில் பெருமான் தோன்றி தாழம்பூ புதரில் தான் லிங்க வடிவாக இருப்பதாகத் தெரிவித்து ஆலயம் கட்டச் சொல்ல அவ்வாறே அவன் கட்டிய கோவில் இது. பிரம்மா தான் அமைதியாக தவம் செய்வதற்கு கேதகீவனம்(மொகலீவனம்)த்தை தேர்ந்தெடுத்து தவம். மகிழ்ந்த சிவன் அவருக்கும் தாழம்பூவிற்கும் சாப விமோசனம் அளித்த தலம். இத்தலத்தில் இறைவனுக்கு தாழம்பூ பயன் படுத்தப்படுகின்றது.-கேதகீ சங்கமேஸ்வரர். தீர்த்தக் குளத்தில் எட்டு தீர்த்தங்கள் சங்கமம். அமிர்த குண்டத்தில் காசி கங்கை வந்து சேருவதால் கருவறை பூஜை முடிந்ததும் அமிர்த குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள். கேதகீசங்கமேஸ்வரர் சிறிய சதுர பள்ளத்தில் ஆவுடையின்றி தாழம்பூ போன்ற பாண லிங்கத் திருமேனி-எதிரில் 2 வெண்கல நந்திகள். தினமும் பூஜையில் தாழம்பூ. சிவபக்தர் காசிபாபா ஆண்டுதோறும் காசி சென்று வழிபட்டுவர் கடைசிகாலத்தில் அவ்வாறு செல்ல முடியாமல் வருந்த ஈசன் தான் இத்தலத்தில் காசிவிஸ்வநாதராகவே இத்தலத்தில் காட்சி கொடுப்பதாக அருள்- காசிபாப அதிஷ்டானம் ஆலயத்திற்கு அருகில்
வரை படம்: விரிவாக்கு(enlarge)