ஊர்:மகாநந்தி,நல்லமலை
இறைவன்:ஸ்ரீமகாநந்தீஸ்வரர்(சு)
இறைவி:ஸ்ரீகாமேஸ்வரி
பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகநந்தீஸ்வரர், ஸ்ரீலிங்கோத்பவர் இடத்தில் நடராஜர்.ஸ்ரீஅனுமன், ஸ்ரீகோதண்டராமர்,சீதை,லட்சுமணன்
ராஜகோபுரம்
தீர்-குளம்-ருத்ரகுண்டம்,பிரம்மகுண்டம்,விஷ்னுகுண்டம்.
தி.நே-0630-1230,1500-2100
01-07-2015- குருஸ்ரீ பகோரா பயணித்தது
1000 ஆண்டுகள் பழமை. நந்தா என்ற மன்னன் தான் ஆண்ட நந்தியால் பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு தினமும் பால்கொண்டுவரும் பொறுப்பை பால்காரனிடம் ஒப்படைக்க அவனிடமுள்ள பசு தினமும் வற்றிய மடியுடன் காணப்படுவதக் கண்டு அதைப் பின்தொடர அப்பசு ஓரிடத்தில் பால்சொரியக்கண்டு அதை மன்னனிடம் கூற அந்த இடத்தில் லிங்கம் இருக்கக் கண்டு தினமும் அச்சிவனையே வழிபட்டு கோவில் கட்டினான். லிங்கத்தின் அடியிலிருந்து ஊற்று நீர் வருகின்றது அது-ருத்திர தீர்த்தம். 65'சதுர ருத்ர குண்டத்தில் விழுகிறது. கோவிலின் வடது புறமும் உள்ளது பிரம்ம குண்டம், தெற்குபகுதியில் உள்ளது விஷ்ணு குண்டம். நந்தீஸ்வரசுவாமிக்கு நாமே அபிஷேகம் செய்யலாம். மூன்று குளங்கள் ஊற்று நீர் கருவரை வழியாக வருவதால் சிறப்பு. தொடர்ந்து வரும் நீர் வாய்க்கால் வழியாக பாசனத்திற்கு பயன்படுத்தப் படுகின்றது. குளத்து நீர் தெளிவு-மருத்துவ குணங்கள் கொண்டது. அருகில் கருடநந்தி, கிருஷ்ணநந்தி, பரமநந்தி, நாகநந்தி கோவில்கள்
வரை படம்: விரிவாக்கு(enlarge)