ஊர்: திரிபுராந்தகம், குமரகிரி.
இறைவன்: திரிபுராந்தகேஸ்வரர்
இறைவி: திரிபுரசுந்தரி
பிறசன்னதிகள்:
தி.நே-0500-1200,1600-2000
ஸ்ரீசைல க்ஷேத்ர வாயில்களில் கிழக்கு வாயில் திரிபுராந்தகம். குன்றின் அடிவாரத்தில் திரிபுரசுந்தரி. மது ராட்சசனின் குமாரர்கள் சிம்ஹவக்ரதன், சிம்ஹசீர்சன் மற்றும் கைடபனின் மகன் சிம்ஹதத்து மூவரும் பிரமனிடம் வரம்பெற்று இரும்பு, வெள்ளி. தங்கம் ஆகிய மூன்று புரங்களை(ஊர்) நிர்மாணம் செய்து அகந்தையினால் மக்களை துன்புறுத்தி வர தேவர்கள் அனைவரும் பெருமானிடம் முறையிட சிவன்சூர்ய சந்திரர்களை சக்கரமாகவும் பூமாதேவியை தேராகவும் நாலு வேதங்களை குதிரைகளாகவும் மேரு பர்வதத்தை வில்லாகவும் ஆதிசேஷனை நாணாகவும் பாற்கடலை அம்பாரியாகவும், மன்மதனை பாணமாகவும் பிரம்மனை சாரதியாகவும் மற்ற தேவர்களை பரிவாரங்களாகவும் ஆக்கிக் கொண்டு புறப்பட்டு வந்து அசுரர்களை அழித்தார். திரிபுரசம்ஹாரம் நடந்த இடம்-திரிபுராந்தகம்.திரிபுராந்தகேஸ்வரர். திரிபுரந்தகத்தின் வடபுறம் பூலகுண்ட,பூங்குன்று- தாராகாசுரன் பூஜித்த லிங்கமும் தாமிர தீர்த்தமும் உள்ளது. இடதுபுற குன்றில் விஷ்ணு பூஜித்த லிங்கம் மற்றும் ஜான்னவி-நிலா தீர்த்தம் உள்ளது.
தாரகாசுரனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த இடம் இக்குன்றெ. என்வே இக்குன்று குமரகிரி எனப்படும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)