ஊர்:ஸ்ரீகூர்மம்.ஸ்வேதாபுரம்#
இறைவன்:ஸ்ரீகூர்மநாதன்
இறைவி:கூர்மநாயகித்தாயார்
பிறசன்னதிகள்: கருடாழ்வார்
தீர்: ஸ்வேத புஸ்கரணி,க்ஷீர சமுத்திரம் தி.நே-0600-2000
# 30-09-2018-குருஸ்ரீ பயணித்தது
அசுரர்களும் தேவர்களும் மந்தாரமலையை மத்தாக்கி வாசுகி மகா நாகத்தை கயிறாக உபயோகித்து பாற்கடலை கடையும்போது மந்தாரமலை கடலின் உள்ளே அழுந்திட தேவாசுரர்கள் வேண்டுகோளின்படி திருமால் ஆமை வடிவம் கொண்டு மலையை தாங்கினார். கூர்ம தரிசனம் மதுரா, காசி, அமராவதி, அயோத்யா யாத்திரை பலன் தரும். கூர்ம வழிபாடு சனி தோஷம் நீக்கும். ஸ்வேத மஹிபதி என்ற மன்னனுக்கு அருள் புரிய இறைவன் காட்சி கொடுத்த இடத்தில் தோன்றிய தீர்த்தம் ஸ்வேத புஸ்கரணி. இத்தீர்த்தத்தில் இடப்படும் இறந்தவர்களின் எழும்புகள் ஆமைகளாக மாறிவிடும் என்ற நம்பிக்கை. க்ஷீரசமுத்திரம் சுதர்சன சக்கரத்தால் உருவாக்கப் பட்டது அதில் மகாலட்சுமி வாசம் செய்கின்றாள். சுவேதா மஹிபதி என்ற மன்னன் கூர்மநாதரை சுதர்சன மந்திரத்தால் பிரதிஷ்டை. அவன் இறந்தபோது அவனது எலும்புகளை இங்கிருந்த சுவேத புஷ்கரணியில் போட்டதும் அவைகள் எல்லாம் ஆமைகளாக மாறின என்பதால் அந்த புஷ்கராணி மிகவும் புனிதமாக கருதப்படுகின்றது. இதை நினைவு கூறும் வகையில் இங்கு கோவில் பிரகாரத்தில் ஆமைகள் வளர்க்கப்படுகின்றன.
வரை படம்: விரிவாக்கு(enlarge)