ஊர்: ஸ்ரீகாகுளம்
மூலவர்:
இறைவன்: ஆந்திரமகாவிஷ்ணு, ஆந்திர நாயகுடு, தெலுங்கு வல்லபடு, காகுளேஸ்வரநாதுலு, காகுளேஸ்வரஸ்வாமி-- ஸ்ரீதேவி, பூதேவி
இறைவி: பக்கியலட்சுமி, ராஜயலட்சுமி (ஸ்ரீதேவி,பூதேவி)
உ:
பிறசன்னதிகள்: ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், ராமர்-சீதை, ஆஞ்சநேயர், விநாயகர்,
ஐந்து நிலை ராஜகோபுரம்.
பத்ர கோடி விமானம். தேர்த்திருவிழா தி.நே-0600-1200,17-2000
மக்களிடையே மலிந்துவிட்டப் பாவச் செயல்களைக் கண்டு மனம் நொந்த பிரம்மா கிருஷ்ணா நதிக்கரையில் மகாவிஷ்ணுவை நோக்கித்தவம். கா என்றால் பிரம்மா. ஆகுளம் என்றால் மனசஞ்சலம். மனசஞ்சலம் அடைந்த பிரம்மா தவம் செய்த ஊர் என்பதால் ஸ்ரீகாகுளம் என்றானது. கலிங்கப் படையெடுப்பின் போது இவ்வழி சென்ற கிருஷ்ணதேவராயர் இங்கு தங்கிய இரவு அவர் கனவில் மகாவிஷ்ணு தோன்றி ஆண்டாள் கதையை தெலுங்கில் காவியமாக்க ஆணை- ஆமுக்த மால்யதா(சூடிக்கொடுத்த சுடர்க்கொடி). ஆமுக்தமாலயதா மண்டபம் தென் கிழக்கு மூலையில். இங்கு கிருஷ்ண தேவராயர் வெண்கலச் சிலை. பொதுவாக பெருமால் பின் வலக்கரத்தில் சக்கரமும், பின் இடக்கரத்தில் சங்கும் இருப்பது மாறி அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. கஜேந்திர மோட்சத்தின் போது முதலையை சம்ஹரிக்க சுதர்சன சக்கரத்தை பயன் படுத்தியபின் இங்கு எழுந்தருளியுள்ளதால் இவ்வாறு மாற்றி வைத்துக் கொண்டிருப்பதாக நம்பிக்கை. வைகாசி பௌர்ணமி- ரத உற்சவம்,
வரை படம்: விரிவாக்கு(enlarge)