ஊர்:அமராவதி,தரணிகோட்டா,தன்யகட்கா.கிருஷ்ணாநதிக்கரையில்
இறைவன்:அமரலிங்கேஸ்வரர்-15'உயர வெள்ளைக்கல் லிங்கம்
இறைவி: பாலசாமுண்டேஸ்வரி
பிறசன்னதிகள்: முதல் பிரஹாரம்-பிராணேஸ்வரர், காசிவிஸ்வேஸ்வரர், உமா மகேஸ்வரர், அகத்தீஸ்வரர், பார்த்திவேஸ்வரர், சோமேஸ்வரர், நாகேஸ்வரர், கோசலேஸ்வரர் என 8லிங்கங்கள் +சங்கரர், தத்தாத்ரேயர், ஜூவாலாமுகி, வீரபத்திரர், ருத்ர பாதம். 2வது பிரஹாரம்- விக்னேஸ்வரர், குமாரசுவாமி, ஆஞ்சநேயர், காலபைரவர். 3வது பிரஹாரம்-ஸ்ரீசைலேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், சண்டீஸ்வரர்
4நிலை ராஜ கோபுரம் தீர்-கிருஷ்ணா மூன்றுபிரஹாரங்கள் தி.நே-0630-1300,1600-1830
தாராகாசுரன் என்ற அரக்கன் தேவர்களுடன் போர் புரிந்து அவர்களிடமிருந்து ஆத்ம லிங்கத்தை பறித்து அதை தன் கழுத்தில் கட்டிக் கொண்டான். அது இருக்கும் வரை மரணம் இல்லை என நம்பப்பட்டது. பின் சிவனை நோக்கித் தவமிருந்து சிவன் அல்லது அவரது சந்ததியுடன் போர் புரியாத வரையில் மரணமில்லை என வரம் பெற்றான். கர்வம் அதிகரித்து கொடுமைகள் புரிய ஆரம்பித்தான். சிவகுமரன் ஆறுமுகன் தோன்றி தாராகசுரனுடன் போர் புரிந்து அவன் கழுத்திலிருந்த ஆத்ம லிங்கத்தை அறுத்து உடைத்தார். அது ஐந்து இடங்களில் விழுந்தது. பெரிய பகுதி கிருஷ்ணா நதியின் கரையில் அமராவதியில் விழுந்தது. அப்படி ஆத்ம லிங்கம் விழுந்த இடத்திலெல்லாம் லிங்கம் உடனே பிரதிஷ்டை செய்யப்பட்டது-பஞ்சாராமங்கள். அமராவதி- அமரலிங்கேஸ்வரர், பீமவரம்- சோமேஸ்வரர், பாலகொல்லு-ராமலிங்கேஸ்வரர், சாமலர்லகோட- குமாரபீமேஸ்வரர், காகிநாடா அருகில் திராட்சாராமம்- பீமேஸ்வரர். இந்த லிங்கங்கள் தேவர்களால் பிரதிஷ்டை. பிப்ரவரி-மார்ச் மகாசிவராத்திரி சிறப்பு. ஆத்ம லிங்கத்தின் பிரதான பாகம் விழுந்த இடம் என்பதால் சிறப்பு. கசியபர், அத்திரி, கௌதமர், பரத்வாஜர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌசிகர் ஆகிய அப்த ரிஷிகள் வழிபட்டது. முதல் இரண்டு பிரஹாரங்களை சுற்றி வணங்கிவிட்டு மூன்றாவது பிரஹாரத்தில் உள்ள மூலவரை தரிசிக்கவும்.
அருகில் புத்தரின் அஸ்திமீது 100' உயரமும், 138'விட்டமும், 521' சுற்றளவும் கொண்ட பிரமாண்டமான ஸ்தூபி உள்ளது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)