ஊர்: அந்தர்வேதி
மூலவர்:
இறைவன்: லட்சுமி நரசிம்மர்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: குர்லகா/அசுவருத்தாம்பிகா, வசிட்டர் , கருடன், அனுமன், ராஜலட்சுமி, வெங்கடேஸ்வரர், பூதேவி, ரங்கநாதசுவாமி, சந்தான கோபாலர், விஷ்ணு, சிவன் ஐந்துநிலை ராஜ கோபுரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
வசிட்ட மகரிஷி கோதாவரியின் கிளைநதி கலக்குமிடத்தில் ஆசிரமம் அமைத்து ருத்ர யாகம் நடத்த நீலகண்டேஸ்வரியின் பிரதிமையை நிறுவினார். வேதிக்- யாகமேடை. இரண்டு நதி கலக்குமிடம்-அந்தர். இந்த இடம் அந்தர்வேதி ஆனது. இரண்யாட்சனின் மகன் ரக்தவிலோசனன் பதினாயிரம் ஆண்டுகள் இங்கு தவமிருந்து சிவபெருமானிடமிருந்து போரில் தன் உடலிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் எத்தனை மண் துகள்களை நனைக்கின்றதோ அத்தனை ரக்தலோசார்கள் தோன்றி அவனுடன் இனைந்து போர் புரிய வேண்டும் என்று வரம் பெற்றான். வசிட்டர் இல்லாத நேரத்தில் ஆசிரமம் வந்து அவர் புதல்வர்களைக் கொன்றான். மகன்களை இழந்த அருந்ததி வருந்துவதைக் கண்ட வசிட்டர் விஷ்ணுவை தொழ, கருடன்மேல் வந்த விஷ்ணு ரக்த லோசனுடன் போர் புரிந்தார். அவனின் ரத்த துளிகள் கீழே விழாமலிருக்க மாயாசக்தியை ஏவ அது தன் நாக்குகளைப் பரப்பி ரத்தம் கீழே நிலத்தில் விழாமல் பார்த்துக் கொள்ள சக்ராயுதத்தினால் அரக்கர்கள் எல்லோரையும் கொன்றார். அம்மாயாசக்தி பின் அந்த ரத்தத்தை கீழேவிட அது குருதி புனலாக ஓடியது- அதுவே ரக்த குலியா நதியானது. விஷ்ணு சக்ர குளத்தை ஏற்படுத்தினார். மயாசக்தி குதிரைமேல் வந்ததால் குர்லகா என்றும், அசுவருத்தாம்பிகா என்றும் அழைக்கப் படுகின்றாள். மேற்கு நோக்கிய நரசிம்மர் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)