ஊர்:கயா#
மூலவர்:ஸ்ரீவிஷ்னுசுதாதரராக
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிஷ்னுபாதம். ஸ்ரீராமர்,சீதா
மரம்:
தீர்:
தி.நே-0600--2000
# 04-03-2010- குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
கயாசூரன் தன் உடல் தேவர்கள், ரிஷிகள், துறவிகள் இவர்களைக் காட்டிலும் புனிதமாகவேண்டும் அவ்உடலை தீண்டியவர்கள் புனிதமாகி சொர்க்கத்தில் இடம் பெற வேண்டும் என தவமிருந்து விஷ்னு அருள் புரிய, கயாசூரனின் ஸ்பரிசத்தால் சொர்க்கம் சென்று விடலாம் என்பதால் சிருஷ்டியின் நியதி குளருபடியாகி விடும் என்றும், மேலும் சொர்க்கத்தில் இடநெருக்கடி ஏற்பட பிரம்மா, எமனுடன் விஷ்னுவிடம் கூற, விஷ்னு நல்ல காரியத்திற்கு யாகம் செய்ய கயாசுரனிடம் உடலை தானமாக கேட்க கயாசூரன் மகிழ்ச்சி என்று தன் உடலை கிடத்தினான், பிரம்மா வேள்வி செய்ய உடல்மீது எமன், 3விஷ்னு+ 5பிரம்மா வடிவங்கள். கணபதி, சூரியன், லட்சுமி, கௌரி, காயத்திரி, சரஸ்வதி அனைவரும் அமர்ந்தும் உடல் ஆட, வஜ்ர உடல் கொண்ட கதுட அசுரனிடம் உன் உடலைத் தானம் செய் என்று பிரம்மா கேட்க, விஷ்ணுவின் கையில் நிலையாக இருப்பதே புண்ணியம் என்று தன் யோக சக்தியினால் உடலை விட்டுவிட அந்த உடலிலிருந்து பிரம்மா கதாயுதம் ஒன்றை உருவாக்கி விஷ்ணுவிற்கு அளித்தார். அந்த கதையால் விஷ்னு ஆட்டத்தை நிறுத்த, நானாகவே என் உடலை வேள்விக்குத் தந்துள்ளபோது ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் போதும் என் ஆட்டம் நின்றிருக்கும் என்றான். அதற்கு பெருமாள் - உயிர் அடங்குவதற்கு இறை ஆக்ஞை வேண்டும் என்றார். வேண்டும் வரம் கேள் என்றபோது கயாசூரன் உலகம் இருக்கும்வரை தெய்வங்கள் உட்பட உருவமாகவோ, அருவமாகவோ இங்கு என்னில் உறையவும்- பிண்டம் இடுபவர்களின் பித்துருக்கள் சொர்க்கம் செல்லவும்- கயை என்ற பெயரோடு விளங்க அருள். பித்துரு பரிகாரத்தலம்.
ராமர், சீதை பாத தரிசனம் செய்தபின், சிரார்தம் செய்ய ராமர் பொருட்கள் வாங்க செல்ல, அப்போது தசரதன் தான் செல்ல நேரம் ஆனதால் சீதையை சிரார்தம் செய்ய அனுமதி கொடுக்க, சீதை பசு, துளசி, அரசு, பவகலை ஆற்றுமணல், ஐயர் ஆகியோரை சாட்சி வைத்து செய்ய அதை ஏற்றுக்கொண்டு தசரதன் சென்றுவிட, அங்குவந்த ராமர் நம்பாதாதபோது, அரசு தவிர மற்றவர்கள் தங்களுக்கு ஆதாயம் ஏதும் இல்லையாதலால் தாங்கள் கண்டதை மறைக்க பாவம் சேர்த்தனர். ஐயர்-தட்சனை எவ்வளவு பெற்றாலும் திருப்தியில்லை. துளசி- அசுத்தமான இடங்களிலும் தோன்றுதல், பசு- முகத்திற்கு மரியாதையில்லை, பவகலை மணல்- ஆற்றின்மேல் நீரில்லை. அரசுக்கு கோவிலில் மரியாதை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)