ஊர்:அமர்நாத்
இறைவன்:பனிலிங்கம்,அமரேஸ்வரர்
இறைவி:மகாமாயா,அமரேஸ்வரி
பிறசன்னதிகள்:பைரவர்-த்ரிசந்தேஷ்வர்
தி.நே-வியாசபௌர்ணமி-சரவணபௌர்ணமி/ஜூலை-ஆகஸ்ட்
14000'உயரத்தில்- 4 டிகிரி குளிர். ஜம்மு, காஷ்மீர் வங்கியில் டூரிஸ்ட் பர்மிட் + காப்பீடு வாங்க வேண்டும். உமை, மகேச்வரன் உலாவரும்போது அழிவின்மை இரகசியம் பற்றி உமைக்கு விளக்கியதை கேட்ட ஜடப்பொருள்களெல்லாம் ஜீவத்துவம் பெற்றது. அவ்வண்ணமே அங்கிருந்த ஜோடிப் புறாக்கள் இன்றுவரை அழிவுறாமல் இவ்வளவு உயரத்தில் பனி மூடிய இடத்தில் பறவைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. சுக்கிலபட்ச பிரதமையில் உருவெடுக்கும் அமர்நாதர் பௌர்ணமியன்று முழுமையடைந்து கிருஷ்ணபட்ச பிரதமையில் உருக ஆரம்பித்து அமாவாசையன்று மறைந்துவிடுவார்.
பஹல்ஹாமிலிருந்து 46 கி,மீ மலைப்பாதை யாத்திரை தொடங்கும். பஹல்ஹாமிற்குப் பிறகு பேருந்து, தொலைபேசி, செல் எதுவும் கிடையாது. மீண்டும் பஹல்ஹாம் வந்தபிறகே எல்லாம். பஹல் ஹாமிலிருந்து சந்தன்வாடி 16 கி.மீ. அங்கிருந்து மீதமிருக்கும் 30 கி.மீ. தூரத்தை குதிரை, டோலி, நடந்து என கடக்கலாம். ஹெலிஹாப்டர் என்றால் ஸ்ரீநகரிலிருந்தும் வழியில் கூடராத்தில் தங்கும் செலவும் அடங்கும். வழியில் நெடுதுயர்ந்த பனிச் சிகரங்கள், பாலாய் வழிந்தோடும் அருவிகள், அடர்ந்த காடுகள், சிற்றோடைகள் என ரம்மியமான பயணம். வழியில் லங்கர் எனப்படும் இலவச சேவை மையங்கள். உணவு டீ, காபி, மருந்துகள் என கிடைக்கும். பஞ்ச தரணியிலிருந்து 3மணி நேரப் பயணம் அமர்நாத் குகைக்கு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)