ஊர்:தியோகர்,வைத்தியநாத்தாம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீரவினேஷ்வர்சிவா,வைத்தியநாத்
இறைவி:ஸ்ரீபார்வதி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: , ஸ்ரீவிஷ்ணு
மரம்:
தீர்: சித்ரகுபா குளம்,சிவகங்கா நீர்நிலை
தி.நே-ஜூலை-ஆகஸ்ட்
1500 ஆண்டுகள் பழமை. 72'உயர ஆலயத்தினுள் 22ஆலயங்கள். பல நதிகளிலிருந்து இராவணன் எடுத்துவந்த நிரப்பிய நீர்- சித்ரகுபா குளம். ஆலயத்திற்குள் இன்று வரை காற்றோட்ட வசதியில்லை. ஆத்மலிங்கத்தை தவமிருந்து இராவணன் பெற பார்வதி கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் தண்ணீர் கலந்த நீரை தாக சாந்தியாக கொடுக்க அது அவன் வயிற்றில் பெருகி அடக்க முடியாத உபாதை ஏற்பட விஷ்ணு சிறுவனாக வந்து இராவணணிட மிருந்து லிங்கத்தைப் பெற்று அவன் சிரமபரிகாரம் செய்து வருமுன் கீழே வைத்து விட இராவணன் வருத்த முற்று தனது 9தலைகளை அறுத்து காணிக்கை செலுத்த சிவன் தோன்றி இராவனனின் தலைகள் ஒட்ட வைத்தியம் புரிந்ததால்- வைத்தியநாத். ஐந்துமுனை சூலம்- பஞ்சசூலம். வழிபடின் மோட்சம் மன அமைதி கிட்டும்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் யாத்ரிகர்கள் சிவப்பு வண்ண ஆடையுடுத்தி தோளில் ஒருகுச்சி அதனிருபுறமும் கண்வர் எனப்படும் சொம்பு அதில் கங்கை நீரை சிந்தாமல் 80கி.மீ தூரம் காலணி அணியாமல் விரதத்துடன் கொண்டுவந்து சிவனுக்கு அபிஷேகித்து விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.- கண்வாரியர்-காவடி எடுப்பவர். ஐந்துமுனை சூலத்திற்கு பூஜை செய்வர். இந்த ஆலயத்தைக் கண்டுபிடித்த ஆதிவாசி பைஜிநாத் பெயரில் வழங்கி பின் வைத்தியநாத் என்றானது. குப்த மன்னர் காலத்தில் ஆலயம் சிறப்பாக பராமரிக்கப் பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)