ஊர்:சரவனபெலகுலா,விந்யகிரி#
மூலவர்: ஜெயின்-ஸ்ரீகோமதீஸ்வரர்,ஸ்ரீகுள்ளேகைஆக்கி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீஆதிநாத், ஸ்ரீசாந்திநாதர்,ஸ்ரீநேமிநாதா
மரம்:
தீர்:
தி.நே-0600-1800
# 04-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
கோயில்விடுதி-08176-257258
470' உயர மலைமேல் -செதுக்கிய 641படிகள்-ஒரே கல்லில் செதுக்கிய 58'8"' உயர கருங்கல் சிலை ஆதிநாத்-பாகுபாலி-கோமதீஸ்வரெ சிறப்பு. காயோட்சாகா என்ற யோக முத்திரை நிலையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இருபக்கமும் யக்ஷா, யக்ஷியின் உருவங்கள். மலையேறும்போது முதலில் ஓடேகல் பஸ்தி- ஸ்ரீஆதிநாத்,சாந்திநாதர்,ஸ்ரீநேமிநாதா மூன்று கோவில்கள். அடுத்தது அகண்டபகிலு- லட்சுமியின் உருவம் கொண்ட நுழைவு-ஸ்ரீபாரதா மற்றும் கோமதீச்வர் கோவில்கள். மலையின்மேல் பிரம்மதேவரு, சவ்விசா தீர்த்தங்கா பசதியும் உள்ளது. மிக முக்யமான நிகழ்வு-மகாமஸ்ட அபிஷேகம்-12 வருடங்களுக்கு ஒருமுறை. கடந்த 2006 ஆண்டு பிப்ரவரி 8-19ம் தேதிவரை நடைபெற்றது.
தலவரலாறு: சமண நெறிகளைத் தோற்றுவித்து அகிம்சை அறத்தை போதித்த ஆதிபகவன் விருஷதேவரின் இளையமகன் பாகுபலி. மூத்தவர் பரதன். இருவருக்கும் நாட்டைப் பிரித்துக் கொடுத்து துறவறம் ஏற்றார். சக்ரவர்த்தி ஆக வேண்டும் என்ற எண்ணத்தால் பரதன் திக் விஜயம் செய்து பல நாடுகளை வென்றான். தம்பி பாகுபலி பணிய வில்லை. இருவரும் போருக்குத் தயாராகவே இருவரின் அமைச்சர்கள் போர் மூண்டால் பலத்த சேதம் ஏற்படும் என்பதால் இருவரையும் தனித்து மோத வைத்தார்கள். எல்லா போட்டிகளிலும் பாகுபலி வென்றார். பரதன் சக்ராயுதத்தை ஏவ அது பாகுபலியைச் சுற்றி வந்து அவர் முன் நின்று விட்டது. பாகுபலி தனது அண்ணன் தம்பி என்று பாராமல் தன்னைக் கொல்ல நினைத்தற்கு வருந்தி நாடாளும் பேராசை, சுயநலமே அதற்குக் காரணம் என்று மனம் வெறுத்து தன் நாட்டை தன் அண்ணனிடம் கொடுத்து விட்டு துறவு மேற்கொண்டார். இன்னொருவர் இடத்தில் தவம் இருப்பதான எண்ணம் அவரிடமிருந்ததால் அவர் முழுமையாக ஞானம் பெற காலதாமதம் ஆயிற்று. இதை உணர்ந்த பரதச் சக்கரவர்த்தி பாகுபலியைச் சரணடைந்து இந்நாடே உம்முடையது என்றார்.
கோமதீசுவரர் முற்றும் அறியும் அறிவும் முக்தியும் பெற்றார். அவருக்கு முடிபூஜை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமஸ்டகாபிஷேகம் 2018 பிப்ரவரி17ல் தொடங்கி 28வரை நடந்ததுள்ளது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)