ஊர்:பேளூர்,வேலபுரி,யாகாச்சிநதிக்கரை#
மூலவர்:ஸ்ரீசென்னகேசவப்பெருமாள்-4கரங்கள்-நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீரங்கநாயகி
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகேப்பிசென்னிகராயர், ஸ்ரீவீரநாராயணா, ஸ்ரீசௌமியநாயகி, ஸ்ரீஆண்டாள்
5நிலைராஜகோபுரம்.
தேர்திருவிழா.
மரம்:
தீர்:
தி.நே-0600-1200,1630-2030
# 05-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
கர்நாடகா சுற்றுலாத்துறை, மௌரியா, வேலபுரி. தொலைபேசிஎண் 0817 222209.
1000 ஆண்டுகள் பழமை. நட்சத்திர வடிவ பீடதின்மீது ஏக கூட அமைப்பில் கட்டப்பட்டது.
இந்த ஆலயம். 12-ம் நூற்றாண்டு- ஹொய்சாள சிற்பங்கள் சிறப்பு. 1116-ம் ஆண்டு ஆரம்பித்து 103வருடங்களாக கட்டியது. 650 யாணைகள் தாங்கியிருப்பது போல் வடிவமைக்கப்பட்ட நட்சத்திர கோவில். இந்தக் கோவில் சோப்புக் கற்களால் (சியோடைட்) கட்டப்பட்டது. இந்தக் கற்கள் உடைப்பதற்குச் சுலபாக இருந்தாலும் தட்ப வெட்ப நிலையின் காலமறுதலுக்குட்பட்டு இரும்புபோல் கெட்டியாகிவிடும் தன்மையானது.
மதானிகா என்ற சிலாபாலிகா-42 சிற்பங்கள் சிறப்பு. இந்தச் சிற்பங்களுக்கு மாடலாக இருந்தவர் ராணிசாந்தலா தேவி. நடன மங்கைகள், கண்ணாடியுடன் சொப்பன சுந்தரி, பாடும் கிளி, வெற்றிலையுடன் பெண், கடிதம் எழுதும் பெண், புடவையை இழுக்கும் குரங்கு, வேடுவப் பெண், சிகை அலங்காரம்,திரிபங்கி நிருத்தியா, பெண்சாமியார், முரசு நடனம், புல்லங்குழல் வாசிக்கும் பாவை, சங்கீத வித்வான், வியக்கும் அழகு - வெள்ளியன்று, வயலின் வித்துவான், சுருட்டை முடியுடன் பெண், பழம்பறிக்கும் பெண், ஆண்வேடமிட்ட பெண், சாமியார் வேடமிட்ட பெண், வளைய நடனக்காரி, தேவலோக நடனம், குறத்திமகள், இளைப்பாறும் பெண், மத்தள நடனம் என இனும் பல்வேறுவகை சிற்பங்கள் நிறைந்தது. சிவன், பிரம்மா, சாமுண்டி, சூரியன், அர்ஜுனன், ராவணன், மகாபலி, பூதானி ஆகியோரின் சிற்பங்களும் சிறப்பு. 16 கைகளுடன் நாராயணர், வராஹ, மோகினி அவதாரங்கள் பிக்ஷாடனர் சிறப்பு .
தலவரலாறு: எதிரிகளிடமிருந்து நாட்டைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஷ்ணுவர்த்தன் திருமணத்திற்உ இசைவு தெரிவிக்கவில்லை. அது சந்தாலாதேவியை சந்திக்குவரைதான். மன்னன் சம்மதம் தெரிவித்தபோது சாந்தலாதேவியின் விருப்பப்படி அவரது தோழியர் ஏழுவரையும் சேர்த்து திருமணம் செய்துகொண்டான். கணத அறிவு நிர்வாக்த் திறமை கொண்டு விளங்கிய சாந்தலாதேவி வைணவக் கோவில்கலை கட்டினாள். கணவனின் சிவ வைணவ பணிகளுக்கு உதவினாள். தனக்கு மகன் இல்லை என்பதால் தன் நெருங்கிய தோழி லக்ஷ்மியின் மகனுக்கு இளவரசு பட்டம் கட்டச் சொல்லிவிட்டு சிவகங்க மலை உச்சியிலிருந்து குதித்து மாண்டாள்.
பிட்டிதேவன் (விஷ்னுவர்த்தன்) மன்னனின் மகளை ராமானுஜர் குணப்படுத்தினார். தலக்காடு என்ற இடத்தில் சோழசிற்ரரசனை வெற்றி கொண்டதன் நினைவாக இராமானுஜர் மன்னனை கோயில் கட்டச் சொல்ல கட்டப்பட்டது
தும்கூர் சிற்பி ஜகனாச்சாரி மகன் கருவிலிருந்தபோது இங்குவந்து சிலை படைக்க ஆரம்பித்தார். பிறந்து வளர்ந்த மகன் அவரைக்காண வந்தபோது அவர் செதுக்கிய சிற்பத்தில் குறையிருப்பதாக சிறுவன் கூற சந்தனம் தடவி பார்த்தபோது ஒரு பகுதிமட்டும் காயாமல் இருக்க அதை தட்டிப்பார்க்க அங்கிருந்து சிறிது நீரும் ஒரு தவளையும் வர தன் கையை சொல்லிய வண்ணம் வெட்டிக்கொண்டார் சிற்பி. குறை கண்டவன் தன் மகனே என அறிந்தார். அசரீரி மூலம் சொந்த ஊரில் கோவில் நிர்மானிக்க உத்தரவு கிடைத்தது. அன்றிலிருந்து மூலவர் கப்பே(தவளை)சென்னிகராய என அழைக்கப் பட்டார். சொந்த ஊரில் கோவில் பணி முடிந்ததும் வெட்டுப்பட்ட கை வளர்ந்தது. அந்த ஊர் கைதாலா எனப்பட்டது.
ஒரே கல்லில் செதுக்கிய 42' உயர கல் கம்பம் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)