ஊர்:ஹம்பி,துங்கபத்ரா தென்கரை
இறைவன்:ஸ்ரீவிருபாட்சீஸ்வரர்,பம்பாபதி
இறைவி:ஸ்ரீபுவனேஸ்வரி
பிறசன்னதிகள்:ஸ்ரீலட்சுமி,பம்பாதேவி,ஸ்ரீவிக்னவிநாயகர்.நாகராஜா.குலகங்கைமாதவசுவாமி, நவகிரகங்கள்,வித்யாரண்யா ஆச்சாரியார் சன்னதி
9நி.ராஜகோபுரம்-160'+3நி.உள்கோபுரம்+5நி.கண்கிரிகோபுரம்
2பிரகாரங்கள்
தீர்-மன்மதக்குளம்
தேர்த்திருவிழா
தி.நே-06-12,16-20
500 ஆண்டுகள் பழமை. ராஜகோபுரத்தின் முதல் இரண்டு நிலைகளில் தெய்வீக மற்றும் வாழ்வியல் சிற்பங்கள் கற்களால் கட்டப்பட்டுள்ளது. நூறுகால் மண்டபம், கல்யாணமண்டபம், அழிந்த நிலையில் சிற்ப கோவில்கள். கஜமுகேஸ்வர அரக்கனைக் கொன்ற விநாயகர்- மனித தலையுடன். பம்பா என்ற பிரம்மனின் மகள் தவமிருந்து சிவனை மணந்ததால் சிவனுக்கு- பம்பாபதி. சங்கமா எனும் குலத்தினரின் குலக்கடவுளாக பம்பா. வியாசராஜர், புரந்தரதாசர் கீர்த்தனைகள் இறைவன்மீது. புவனேஸ்வரி, லட்சுமி, பம்பா ஆகியோரின் தனிச்சன்னதிகளின் கீழ் சுரங்கப் பாதை. கவனமுடன் கீழிறங்கிச் சென்றால் குலகங்கைமாதவ சுவாமி சன்னதி மற்றும் நவகிரக சன்னதிகள். 38 தூண்களைக் கொண்ட அழகிய ரங்க மண்டபம். கருவறைக்குப் பின் படிகள்வழி சென்றால் கிழக்குச் சுவரில் உள்ள துவாரவம் வழியாக சூரிய ஒளி ஊடுருவி மேற்குச் சுவரில் ராஜகோபுர நிழல் தலைகீழாக தெரிவது சிறப்பு. நாகராஜ உருவம் ஐம்பொன்னால் ஆனது. யாளியின் உருவம் சிறப்பு. மன்மதக்குளம் அருகில் சிவன் அம்பாள் சன்னதிகள். சிவபெருமான், விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், திரௌபதியின் திருமண நிகழ்வு ஆகியவை வண்ண ஓவியங்களாக. டிசம்பர்-பம்பா-விரூபாட்சீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம். பிப்ரவரி தேர்த்திருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)