ஊர்: ஹம்பி
மூலவர்:
இறைவன்: படவலிங்கேஸ்வரர்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்: துங்கபத்ரா சுனை
தி.நே-0700--1800
ஹம்பியில் அரசன் அமைப்பதுபோல் நாமும் ஓர் கோவில் கட்டவேண்டும் என்ற எண்ணம் ஓர் ஏழைப் பெண்ணுக்கு தோன்றியது. வேலை செய்து சம்பாதித்ததை உணவுக்குப்போக மீதியிருந்ததை சேமிக்கத் தொடங்கினாள். பணம் கொஞ்சமாக இருந்ததால் பிச்சை எடுக்கத் தொடங்கினாள். அறிந்தவர்கள் தேடி வந்து பொருள் கொடுத்தனர்.சேர்ந்ததை வைத்து கோவில் கட்டத் தொடங்கினாள். லிங்கத் திருமேனி பெரிதாக அமைந்தது. பெரிய திருமேனிக்கு எப்படி அபிஷேகம் செய்வது என குடமுழுக்கு நளில் அர்ச்சகர்கள் தினறினர். அப்போது ஆரம்பத்தில் கல்நட்ட இடத்திலிருந்து நீர் சுரக்க ஆரம்பித்து கருவறைக்குள் நிறைந்து லிங்கத் திருமேனியை முழுவதும் மூடியது. தனக்குத்தானே அபிஷேகம் செய்துகொண்ட இறைவனின் கருணையை அறிந்து உள்ளம் பூரித்தனர். ஏழை-அந்தவட்டாரமொழியில் படவா எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். கஞ்சிமகான் இந்த பகுதிக்கு யாத்திரை வந்தபோது கோவில் பொலிவிழந்து இருப்பதைக் கண்டு வருந்தி ஒரு விளக்காவது ஏத்தி வைக்கக்கூடாதா என ஆதங்கமாக கேட்க அதைகேட்ட பக்தர் ஒருவர் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக இடுப்பளவு நீரில் சென்று படவாலிங்கேஸ்வரருக்கு ஆத்மார்த்தமான பூஜை செய்து வருகின்றார். கருவறையின் மேல்பாகம் மூடப்படாமையால் பகலில் சூரியன் ஒளி கருவறையில். ஹம்பியில் யோக நரசிம்மர் சிலைக்கு அருகில் படவலிங்கேஸ்வரர் கோவில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)