ஊர்: ஷரவு,மகாகணபதிகோவில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசரபேஸ்வரர்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவரசித்தி விநயகர்-பத்து கரங்களுடன், ஸ்ரீரக்தேஸ்வரி, ஸ்ரீநாகர்
மரம்:
தீர்: ஷரவு தீர்த்தம்
தி.நே-0700-1200,17-2000
கருவரையின் தென் சுவரில் உத்பல தசபுஜ வலம்புரி விநாயகர் தமது இடது தொடையில் சித்தியை தாங்கிய கோலத்தில்.
தலவரலாறு-கதலி சிவாலயம் வந்த துளு நாட்டு மன்னன் வீரபாகு மஞ்சுநாதரைத் தரிசித்துவிட்டு காட்டில் வேட்டையாடச் சென்றபோது ஒருபசுமீது பாயத் தயாராக புலி இருப்பதைக் கண்டவன் வில்லில் அம்பேற்றி புலிமீது விட அது பசுமீது பாய்ந்து பசு இறந்தது. வருந்திய மன்னன் அருகில் ஆசிரமம் அமைத்து இருந்த பரத்வாஜரிடம் நடந்ததைக்கூறி தன் பாவம் நீங்க உபாயம் கேட்டான், பசு இறந்த இடத்தில் சிவாலயம் கட்டி ஷரவு-அம்பு தீர்த்தம் ஒன்று ஏற்படுத்தச் சொன்னார் பரதவாஜர். அதன் படி கட்டப்பட்ட கோவில் இது. பரத்வஜர் லிங்க பிரதிஷ்டை செய்து சரபேஸ்வரர் என்று அழைத்தார்.
வீரபாகுவின் வளர்ப்பு புதல்வன் கனவில் கணபதி தோன்றி தான் சுயம்புவாக கருவரையின் தென்புறச் சுவரில் எழுந்தருவதாகச் சொன்னார். அதன் படி தோன்றியவர் வரசித்தி விநாயகர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)