ஊர்: மல்கி(பப்பநாடு
மூலவர்: ஸ்ரீதுர்காபரமேஸ்வரி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி. ஸ்ரீநரசிம்மர்,ஸ்ரீக்ஷேத்ரபாலர்,ஸ்ரீநாகதேவர், மூலதுர்க்கை பின் பஞ்ச லிங்கங்கள்- மூல,அக்னி,,ஜல,வன,அக்ர என ஐந்து துர்க்கைகள்)
3நிலைராஜகோபுரம் மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
வரலாறு- பிரம்மாவிடம் தவமிருந்து வரம்பெற்ற தாரிகாசூரன் விஷ்ணுவுடன் போர்புரிந்து அவருடைய ஆயுதங்களைப் பறித்துவிட்டான். இதை அறிந்த பகவதி தன் சகோதரிகளான மற்ற துர்க்கைகளை அனுப்பினாள். அவர்களுள் பகவதி தாரிகாசூரன் நதிதீரத்திற்குச் சென்றபோது அவனிடம் உணவு கேட்க அவன் தன் மனைவியிடம் சென்று வாங்குமாறு சொன்னான், அவன் மனைவியிடம் ஆயுதங்களை தரக்கேட்க, அவள் தரமறுக்கவே மீண்டும் அரக்கனிடம் வந்து உங்கள் மனைவி உணவு தரமறுக்கின்றாள் என்றாள். உணவைத்தான் தன் மனைவி தரமறுக்கின்றாள் என நினைத்த தாரிகாசூரன் தன் ஆனைப்படி அவள் கேட்பதை கொடு என ஆணையிட்டான். பகவதி திருமாளிடமிருந்து அசுரன் கவர்ந்த ஆயுதங்களை நாடகமாடி கவர்ந்தாள். வீட்டிற்குத் திரும்பிய தாரிகாசூரன் உண்மை அரிந்து சினம் கொண்டு துர்கைகளுடன் போர் புரிந்தான். துர்க்கைகள் அவனை அழித்தனர். ஆயுதங்களை விஷ்ணுவிடம் அளித்தவர்கள் ஒரு சந்தனப் படகை பெற்று அதில் பயணிக்கையில் சசிஹிதலு என்ற இடத்திலொரு துர்க்கை தங்கிவிட்டாள். சித்ரபுரா என்ற இடத்தில் மற்றொரு துர்கை தங்கிவிட மீதமுள்ள ஐந்து துர்க்கைகள் சாம்பவி நதிக்கரையில் முல்கி என்ற இடத்தில் தங்கினர்.
பப்ப பியாரி என்ற வியாபாரி வெள்ளப்பெருக்கினால் சாம்பவி நதியைக் படகில் கடக்க முடியாமல் போகவே அவன் படகு அலைக்கழிக்கப்பட்டு எதன்மீதோ மோதி நின்றது. அப்போது படகின் அடியிலிருந்து ரத்தம்வர பயந்த வியாபாரி இறைவனை வேண்ட அவன் படகு பத்திரமாக கரை ஒதுங்கியது. வீடு திரும்பிய வியாபரி படகு தடைபட்ட இடத்தில் ரத்தம் வந்தது என மன்னனிடம் சொல்ல அவர் உதவியுடன் அங்கு துர்க்கைகள் கண்டு கோவில் கட்டினான். அந்த வியாபரி பெயரால் பப்ப நாடு என்றழைக்கப்படுகின்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)